< பிலிப்பியர் 1 >
1 ௧ இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரர்களாகிய பவுலும், தீமோத்தேயும், பிலிப்பி பட்டணத்தில் கிறிஸ்து இயேசுவிற்குள்ளான பரிசுத்தவான்கள் அனைவருக்கும், கண்காணிகளுக்கும், உதவிக்காரர்களுக்கும் எழுதுகிறதாவது:
ਪੌਲਤੀਮਥਿਨਾਮਾਨੌ ਯੀਸ਼ੁਖ੍ਰੀਸ਼਼੍ਟਸ੍ਯ ਦਾਸੌ ਫਿਲਿਪਿਨਗਰਸ੍ਥਾਨ੍ ਖ੍ਰੀਸ਼਼੍ਟਯੀਸ਼ੋਃ ਸਰ੍ੱਵਾਨ੍ ਪਵਿਤ੍ਰਲੋਕਾਨ੍ ਸਮਿਤੇਰਧ੍ਯਕ੍ਸ਼਼ਾਨ੍ ਪਰਿਚਾਰਕਾਂਸ਼੍ਚ ਪ੍ਰਤਿ ਪਤ੍ਰੰ ਲਿਖਤਃ|
2 ௨ நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
ਅਸ੍ਮਾਕੰ ਤਾਤ ਈਸ਼੍ਵਰਃ ਪ੍ਰਭੁ ਰ੍ਯੀਸ਼ੁਖ੍ਰੀਸ਼਼੍ਟਸ਼੍ਚ ਯੁਸ਼਼੍ਮਭ੍ਯੰ ਪ੍ਰਸਾਦਸ੍ਯ ਸ਼ਾਨ੍ਤੇਸ਼੍ਚ ਭੋਗੰ ਦੇਯਾਸ੍ਤਾਂ|
3 ௩ நற்செய்தி உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நாள்முதல் இதுவரைக்கும் நீங்கள் எங்களோடு ஊழியத்தில் ஐக்கியப்பட்டிருப்பதால்,
ਅਹੰ ਨਿਰਨ੍ਤਰੰ ਨਿਜਸਰ੍ੱਵਪ੍ਰਾਰ੍ਥਨਾਸੁ ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਸਰ੍ੱਵੇਸ਼਼ਾਂ ਕ੍ਰੁʼਤੇ ਸਾਨਨ੍ਦੰ ਪ੍ਰਾਰ੍ਥਨਾਂ ਕੁਰ੍ੱਵਨ੍
4 ௪ நான் பண்ணுகிற ஒவ்வொரு விண்ணப்பத்திலும் உங்கள் அனைவருக்காகவும் எப்பொழுதும் சந்தோஷத்தோடு ஜெபம்பண்ணி,
ਯਤਿ ਵਾਰਾਨ੍ ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਸ੍ਮਰਾਮਿ ਤਤਿ ਵਾਰਾਨ੍ ਆ ਪ੍ਰਥਮਾਦ੍ ਅਦ੍ਯ ਯਾਵਦ੍
5 ௫ உங்களில் நல்லசெயல்களைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்வரை நடத்திவருவார் என்று நம்பி,
ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਸੁਸੰਵਾਦਭਾਗਿਤ੍ਵਕਾਰਣਾਦ੍ ਈਸ਼੍ਵਰੰ ਧਨ੍ਯੰ ਵਦਾਮਿ|
6 ௬ நான் உங்களை நினைக்கும்போதெல்லாம் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.
ਯੁਸ਼਼੍ਮਨ੍ਮਧ੍ਯੇ ਯੇਨੋੱਤਮੰ ਕਰ੍ੰਮ ਕਰ੍ੱਤੁਮ੍ ਆਰਮ੍ਭਿ ਤੇਨੈਵ ਯੀਸ਼ੁਖ੍ਰੀਸ਼਼੍ਟਸ੍ਯ ਦਿਨੰ ਯਾਵਤ੍ ਤਤ੍ ਸਾਧਯਿਸ਼਼੍ਯਤ ਇਤ੍ਯਸ੍ਮਿਨ੍ ਦ੍ਰੁʼਢਵਿਸ਼੍ਵਾਸੋ ਮਮਾਸ੍ਤੇ|
7 ௭ என் சிறைச்சாலையின் கட்டுகளிலும், நான் நற்செய்தியைப் போதித்து அதைத் உறுதிப்படுத்திவருகிறதிலும், நீங்கள் அனைவரும் எனக்கு அளிக்கப்பட்ட கிருபையில் பங்குள்ளவர்களானதால், உங்களை என் இருதயத்தில் வைத்துக்கொண்டிருக்கிறபடியினாலே, உங்கள் எல்லோரையும்குறித்து நான் இப்படி நினைக்கிறது எனக்குத் தகுதியாக இருக்கிறது.
ਯੁਸ਼਼੍ਮਾਨ੍ ਸਰ੍ੱਵਾਨ੍ ਅਧਿ ਮਮ ਤਾਦ੍ਰੁʼਸ਼ੋ ਭਾਵੋ ਯਥਾਰ੍ਥੋ ਯਤੋ(ਅ)ਹੰ ਕਾਰਾਵਸ੍ਥਾਯਾਂ ਪ੍ਰਤ੍ਯੁੱਤਰਕਰਣੇ ਸੁਸੰਵਾਦਸ੍ਯ ਪ੍ਰਾਮਾਣ੍ਯਕਰਣੇ ਚ ਯੁਸ਼਼੍ਮਾਨ੍ ਸਰ੍ੱਵਾਨ੍ ਮਯਾ ਸਾਰ੍ੱਧਮ੍ ਏਕਾਨੁਗ੍ਰਹਸ੍ਯ ਭਾਗਿਨੋ ਮਤ੍ਵਾ ਸ੍ਵਹ੍ਰੁʼਦਯੇ ਧਾਰਯਾਮਿ|
8 ௮ இயேசுகிறிஸ்துவின் உருக்கமான அன்பினாலே உங்களெல்லோரையும் காண எவ்வளவோ ஆவலாக இருக்கிறேன் என்பதற்கு தேவனே எனக்குச் சாட்சி.
ਅਪਰਮ੍ ਅਹੰ ਖ੍ਰੀਸ਼਼੍ਟਯੀਸ਼ੋਃ ਸ੍ਨੇਹਵਤ੍ ਸ੍ਨੇਹੇਨ ਯੁਸ਼਼੍ਮਾਨ੍ ਕੀਦ੍ਰੁʼਸ਼ੰ ਕਾਙ੍ਕ੍ਸ਼਼ਾਮਿ ਤਦਧੀਸ਼੍ਵਰੋ ਮਮ ਸਾਕ੍ਸ਼਼ੀ ਵਿਦ੍ਯਤੇ|
9 ௯ மேலும், உத்தமமானவைகளை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தக்கதாக உங்களுடைய அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாகப் பெருகவும்,
ਮਯਾ ਯਤ੍ ਪ੍ਰਾਰ੍ਥ੍ਯਤੇ ਤਦ੍ ਇਦੰ ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਪ੍ਰੇਮ ਨਿਤ੍ਯੰ ਵ੍ਰੁʼੱਧਿੰ ਗਤ੍ਵਾ
10 ௧0 தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி,
ਜ੍ਞਾਨਸ੍ਯ ਵਿਸ਼ਿਸ਼਼੍ਟਾਨਾਂ ਪਰੀਕ੍ਸ਼਼ਿਕਾਯਾਸ਼੍ਚ ਸਰ੍ੱਵਵਿਧਬੁੱਧੇ ਰ੍ਬਾਹੁਲ੍ਯੰ ਫਲਤੁ,
11 ௧௧ நீங்கள் கிறிஸ்துவின் நாளுக்கென்று நேர்மையானவர்களும், குற்றம் இல்லாதவர்களுமாக இருக்கவும் வேண்டுதல் செய்கிறேன்.
ਖ੍ਰੀਸ਼਼੍ਟਸ੍ਯ ਦਿਨੰ ਯਾਵਦ੍ ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਸਾਰਲ੍ਯੰ ਨਿਰ੍ਵਿਘ੍ਨਤ੍ਵਞ੍ਚ ਭਵਤੁ, ਈਸ਼੍ਵਰਸ੍ਯ ਗੌਰਵਾਯ ਪ੍ਰਸ਼ੰਸਾਯੈ ਚ ਯੀਸ਼ੁਨਾ ਖ੍ਰੀਸ਼਼੍ਟੇਨ ਪੁਣ੍ਯਫਲਾਨਾਂ ਪੂਰ੍ਣਤਾ ਯੁਸ਼਼੍ਮਭ੍ਯੰ ਦੀਯਤਾਮ੍ ਇਤਿ|
12 ௧௨ சகோதரர்களே, எனக்கு சம்பவித்தவைகள் நற்செய்தி பரவுவதற்கு ஏதுவானது என்று நீங்கள் அறிய மனதாயிருக்கிறேன்.
ਹੇ ਭ੍ਰਾਤਰਃ, ਮਾਂ ਪ੍ਰਤਿ ਯਦ੍ ਯਦ੍ ਘਟਿਤੰ ਤੇਨ ਸੁਸੰਵਾਦਪ੍ਰਚਾਰਸ੍ਯ ਬਾਧਾ ਨਹਿ ਕਿਨ੍ਤੁ ਵ੍ਰੁʼੱਧਿਰੇਵ ਜਾਤਾ ਤਦ੍ ਯੁਸ਼਼੍ਮਾਨ੍ ਜ੍ਞਾਪਯਿਤੁੰ ਕਾਮਯੇ(ਅ)ਹੰ|
13 ௧௩ அரண்மனையில் உள்ளவர்களுக்கும் மற்ற எல்லோருக்கும் என் கட்டுகள் கிறிஸ்துவிற்குள்ளான கட்டுகள் என்று தெரிந்து,
ਅਪਰਮ੍ ਅਹੰ ਖ੍ਰੀਸ਼਼੍ਟਸ੍ਯ ਕ੍ਰੁʼਤੇ ਬੱਧੋ(ਅ)ਸ੍ਮੀਤਿ ਰਾਜਪੁਰ੍ੱਯਾਮ੍ ਅਨ੍ਯਸ੍ਥਾਨੇਸ਼਼ੁ ਚ ਸਰ੍ੱਵੇਸ਼਼ਾਂ ਨਿਕਟੇ ਸੁਸ੍ਪਸ਼਼੍ਟਮ੍ ਅਭਵਤ੍,
14 ௧௪ சகோதரர்களில் அநேகர் என் கட்டுகளாலே கர்த்தருக்குள் தைரியம்கொண்டு பயம் இல்லாமல் திருவசனத்தைச் சொல்லும்படி அதிகமாகத் துணிந்திருக்கிறார்கள்.
ਪ੍ਰਭੁਸਮ੍ਬਨ੍ਧੀਯਾ ਅਨੇਕੇ ਭ੍ਰਾਤਰਸ਼੍ਚ ਮਮ ਬਨ੍ਧਨਾਦ੍ ਆਸ਼੍ਵਾਸੰ ਪ੍ਰਾਪ੍ਯ ਵਰ੍ੱਧਮਾਨੇਨੋਤ੍ਸਾਹੇਨ ਨਿਃਕ੍ਸ਼਼ੋਭੰ ਕਥਾਂ ਪ੍ਰਚਾਰਯਨ੍ਤਿ|
15 ௧௫ சிலர் பொறாமையினாலும் விரோதத்தினாலும், சிலர் நல்ல மனதினாலும் கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறார்கள்.
ਕੇਚਿਦ੍ ਦ੍ਵੇਸ਼਼ਾਦ੍ ਵਿਰੋਧਾੱਚਾਪਰੇ ਕੇਚਿੱਚ ਸਦ੍ਭਾਵਾਤ੍ ਖ੍ਰੀਸ਼਼੍ਟੰ ਘੋਸ਼਼ਯਨ੍ਤਿ;
16 ௧௬ சிலர் என் கட்டுகளோடு உபத்திரவத்தையும் சேர்க்க நினைத்து, சுத்த மனதோடு கிறிஸ்துவை அறிவிக்காமல், விரோதத்தினாலே அறிவிக்கிறார்கள்.
ਯੇ ਵਿਰੋਧਾਤ੍ ਖ੍ਰੀਸ਼਼੍ਟੰ ਘੋਸ਼਼ਯਨ੍ਤਿ ਤੇ ਪਵਿਤ੍ਰਭਾਵਾਤ੍ ਤੰਨ ਕੁਰ੍ੱਵਨ੍ਤੋ ਮਮ ਬਨ੍ਧਨਾਨਿ ਬਹੁਤਰਕ੍ਲੋਸ਼ਦਾਯੀਨਿ ਕਰ੍ੱਤੁਮ੍ ਇੱਛਨ੍ਤਿ|
17 ௧௭ நற்செய்திக்காக நான் உத்தரவுசொல்ல நியமிக்கப்பட்டவன் என்று அறிந்து, சிலர் அன்பினாலே அறிவிக்கிறார்கள்.
ਯੇ ਚ ਪ੍ਰੇਮ੍ਨਾ ਘੋਸ਼਼ਯਨ੍ਤਿ ਤੇ ਸੁਸੰਵਾਦਸ੍ਯ ਪ੍ਰਾਮਾਣ੍ਯਕਰਣੇ(ਅ)ਹੰ ਨਿਯੁਕ੍ਤੋ(ਅ)ਸ੍ਮੀਤਿ ਜ੍ਞਾਤ੍ਵਾ ਤਤ੍ ਕੁਰ੍ੱਵਨ੍ਤਿ|
18 ௧௮ இதனால் என்ன? ஏமாற்றுவதினாலோ, உண்மையினாலோ, எப்படியாவது, கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார்; அதனால் சந்தோஷப்படுகிறேன், இனிமேலும் சந்தோஷப்படுவேன்.
ਕਿੰ ਬਹੁਨਾ? ਕਾਪਟ੍ਯਾਤ੍ ਸਰਲਭਾਵਾਦ੍ ਵਾ ਭਵੇਤ੍, ਯੇਨ ਕੇਨਚਿਤ੍ ਪ੍ਰਕਾਰੇਣ ਖ੍ਰੀਸ਼਼੍ਟਸ੍ਯ ਘੋਸ਼਼ਣਾ ਭਵਤੀਤ੍ਯਸ੍ਮਿਨ੍ ਅਹਮ੍ ਆਨਨ੍ਦਾਮ੍ਯਾਨਨ੍ਦਿਸ਼਼੍ਯਾਮਿ ਚ|
19 ௧௯ அது உங்களுடைய வேண்டுதலினாலும் இயேசுகிறிஸ்துவினுடைய ஆவியின் உதவியினாலும் எனக்கு இரட்சிப்பாக முடியும் என்று அறிவேன்.
ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਪ੍ਰਾਰ੍ਥਨਯਾ ਯੀਸ਼ੁਖ੍ਰੀਸ਼਼੍ਟਸ੍ਯਾਤ੍ਮਨਸ਼੍ਚੋਪਕਾਰੇਣ ਤਤ੍ ਮੰਨਿਸ੍ਤਾਰਜਨਕੰ ਭਵਿਸ਼਼੍ਯਤੀਤਿ ਜਾਨਾਮਿ|
20 ௨0 நான் ஒன்றிலும் வெட்கப்பட்டுப்போகாமல், எப்பொழுதும்போல இப்பொழுதும், மிகுந்த தைரியத்தோடு ஜீவனாலாவது, மரணத்தினாலாவது, கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப்படுவார் என்று எனக்கு உண்டாயிருக்கிற வாஞ்சைக்கும் நம்பிக்கைக்கும் தகுந்ததாக அப்படி முடியும்.
ਤਤ੍ਰ ਚ ਮਮਾਕਾਙ੍ਕ੍ਸ਼਼ਾ ਪ੍ਰਤ੍ਯਾਸ਼ਾ ਚ ਸਿੱਧਿੰ ਗਮਿਸ਼਼੍ਯਤਿ ਫਲਤੋ(ਅ)ਹੰ ਕੇਨਾਪਿ ਪ੍ਰਕਾਰੇਣ ਨ ਲੱਜਿਸ਼਼੍ਯੇ ਕਿਨ੍ਤੁ ਗਤੇ ਸਰ੍ੱਵਸ੍ਮਿਨ੍ ਕਾਲੇ ਯਦ੍ਵਤ੍ ਤਦ੍ਵਦ੍ ਇਦਾਨੀਮਪਿ ਸਮ੍ਪੂਰ੍ਣੋਤ੍ਸਾਹਦ੍ਵਾਰਾ ਮਮ ਸ਼ਰੀਰੇਣ ਖ੍ਰੀਸ਼਼੍ਟਸ੍ਯ ਮਹਿਮਾ ਜੀਵਨੇ ਮਰਣੇ ਵਾ ਪ੍ਰਕਾਸ਼ਿਸ਼਼੍ਯਤੇ|
21 ௨௧ கிறிஸ்து எனக்கு ஜீவன், மரணம் எனக்கு ஆதாயம்.
ਯਤੋ ਮਮ ਜੀਵਨੰ ਖ੍ਰੀਸ਼਼੍ਟਾਯ ਮਰਣਞ੍ਚ ਲਾਭਾਯ|
22 ௨௨ ஆனாலும் சரீரத்தில் பிழைத்திருக்கிறதினாலே என் செய்கைக்குப் பலன் கிடைத்திருப்பதால், நான் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்று தெரியாது.
ਕਿਨ੍ਤੁ ਯਦਿ ਸ਼ਰੀਰੇ ਮਯਾ ਜੀਵਿਤਵ੍ਯੰ ਤਰ੍ਹਿ ਤਤ੍ ਕਰ੍ੰਮਫਲੰ ਫਲਿਸ਼਼੍ਯਤਿ ਤਸ੍ਮਾਤ੍ ਕਿੰ ਵਰਿਤਵ੍ਯੰ ਤਨ੍ਮਯਾ ਨ ਜ੍ਞਾਯਤੇ|
23 ௨௩ ஏனென்றால், இந்த இரண்டிற்கும் இடையே நான் நெருக்கப்படுகிறேன்; சரீரத்தைவிட்டுப் பிரிந்து, கிறிஸ்துவோடு இருக்க எனக்கு ஆசை உண்டு, அது அதிக நன்மையாக இருக்கும்;
ਦ੍ਵਾਭ੍ਯਾਮ੍ ਅਹੰ ਸਮ੍ਪੀਡ੍ਯੇ, ਦੇਹਵਾਸਤ੍ਯਜਨਾਯ ਖ੍ਰੀਸ਼਼੍ਟੇਨ ਸਹਵਾਸਾਯ ਚ ਮਮਾਭਿਲਾਸ਼਼ੋ ਭਵਤਿ ਯਤਸ੍ਤਤ੍ ਸਰ੍ੱਵੋੱਤਮੰ|
24 ௨௪ அப்படியிருந்தும், நான் சரீரத்தில் வாழ்ந்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம்.
ਕਿਨ੍ਤੁ ਦੇਹੇ ਮਮਾਵਸ੍ਥਿਤ੍ਯਾ ਯੁਸ਼਼੍ਮਾਕਮ੍ ਅਧਿਕਪ੍ਰਯੋਜਨੰ|
25 ௨௫ இந்த நிச்சயத்தைக்கொண்டிருந்து, நான் மீண்டும் உங்களிடம் வருகிறதினால் என்னைக்குறித்து உங்களுடைய மகிழ்ச்சி கிறிஸ்து இயேசுவிற்குள் பெருகுவதற்காக,
ਅਹਮ੍ ਅਵਸ੍ਥਾਸ੍ਯੇ ਯੁਸ਼਼੍ਮਾਭਿਃ ਸਰ੍ੱਵੈਃ ਸਾਰ੍ੱਧਮ੍ ਅਵਸ੍ਥਿਤਿੰ ਕਰਿਸ਼਼੍ਯੇ ਚ ਤਯਾ ਚ ਵਿਸ਼੍ਵਾਸੇ ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਵ੍ਰੁʼੱਧ੍ਯਾਨਨ੍ਦੌ ਜਨਿਸ਼਼੍ਯੇਤੇ ਤਦਹੰ ਨਿਸ਼੍ਚਿਤੰ ਜਾਨਾਮਿ|
26 ௨௬ உங்களுடைய விசுவாசத்தின் வளர்ச்சிக்காகவும் சந்தோஷத்திற்காகவும் நான் பிழைத்து, உங்கள் அனைவரோடும் இருப்பேன் என்று அறிந்திருக்கிறேன்.
ਤੇਨ ਚ ਮੱਤੋ(ਅ)ਰ੍ਥਤੋ ਯੁਸ਼਼੍ਮਤ੍ਸਮੀਪੇ ਮਮ ਪੁਨਰੁਪਸ੍ਥਿਤਤ੍ਵਾਤ੍ ਯੂਯੰ ਖ੍ਰੀਸ਼਼੍ਟੇਨ ਯੀਸ਼ੁਨਾ ਬਹੁਤਰਮ੍ ਆਹ੍ਲਾਦੰ ਲਪ੍ਸ੍ਯਧ੍ਵੇ|
27 ௨௭ நான் வந்து உங்களைப் பார்த்தாலும், நான் வராமலிருந்தாலும், நீங்கள் ஒரே ஆவியிலே உறுதியாக நின்று, ஒரே ஆத்துமாவினாலே நற்செய்தியின் விசுவாசத்திற்காகப் போராடி, எதிர்க்கிறவர்களால் ஒன்றுக்கும் பயப்படாமல் இருக்கிறீர்கள் என்று உங்களைக்குறித்து நான் கேள்விப்படும்படி, எந்தவிதத்திலும் நீங்கள் கிறிஸ்துவின் நற்செய்திற்குத் தகுதியானவர்களாக நடந்துகொள்ளுங்கள்.
ਯੂਯੰ ਸਾਵਧਾਨਾ ਭੂਤ੍ਵਾ ਖ੍ਰੀਸ਼਼੍ਟਸ੍ਯ ਸੁਸੰਵਾਦਸ੍ਯੋਪਯੁਕ੍ਤਮ੍ ਆਚਾਰੰ ਕੁਰੁਧ੍ਵੰ ਯਤੋ(ਅ)ਹੰ ਯੁਸ਼਼੍ਮਾਨ੍ ਉਪਾਗਤ੍ਯ ਸਾਕ੍ਸ਼਼ਾਤ੍ ਕੁਰ੍ੱਵਨ੍ ਕਿੰ ਵਾ ਦੂਰੇ ਤਿਸ਼਼੍ਠਨ੍ ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਯਾਂ ਵਾਰ੍ੱਤਾਂ ਸ਼੍ਰੋਤੁਮ੍ ਇੱਛਾਮਿ ਸੇਯੰ ਯੂਯਮ੍ ਏਕਾਤ੍ਮਾਨਸ੍ਤਿਸ਼਼੍ਠਥ, ਏਕਮਨਸਾ ਸੁਸੰਵਾਦਸਮ੍ਬਨ੍ਧੀਯਵਿਸ਼੍ਵਾਸਸ੍ਯ ਪਕ੍ਸ਼਼ੇ ਯਤਧ੍ਵੇ, ਵਿਪਕ੍ਸ਼਼ੈਸ਼੍ਚ ਕੇਨਾਪਿ ਪ੍ਰਕਾਰੇਣ ਨ ਵ੍ਯਾਕੁਲੀਕ੍ਰਿਯਧ੍ਵ ਇਤਿ|
28 ௨௮ நீங்கள் பயப்படாமலிருக்கிறது அவர்கள் கெட்டுப்போகிறதற்கும், நீங்கள் இரட்சிக்கப்படுகிறதற்கும் அடையாளமாக இருக்கிறது; இதுவும் தேவனுடைய செயலே.
ਤਤ੍ ਤੇਸ਼਼ਾਂ ਵਿਨਾਸ਼ਸ੍ਯ ਲਕ੍ਸ਼਼ਣੰ ਯੁਸ਼਼੍ਮਾਕਞ੍ਚੇਸ਼੍ਵਰਦੱਤੰ ਪਰਿਤ੍ਰਾਣਸ੍ਯ ਲਕ੍ਸ਼਼ਣੰ ਭਵਿਸ਼਼੍ਯਤਿ|
29 ௨௯ ஏனென்றால், கிறிஸ்துவை விசுவாசிக்கிறதற்குமட்டும் இல்லை, அவருக்காகப் பாடுகள்படுகிறதற்கும் உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
ਯਤੋ ਯੇਨ ਯੁਸ਼਼੍ਮਾਭਿਃ ਖ੍ਰੀਸ਼਼੍ਟੇ ਕੇਵਲਵਿਸ਼੍ਵਾਸਃ ਕ੍ਰਿਯਤੇ ਤੰਨਹਿ ਕਿਨ੍ਤੁ ਤਸ੍ਯ ਕ੍ਰੁʼਤੇ ਕ੍ਲੇਸ਼ੋ(ਅ)ਪਿ ਸਹ੍ਯਤੇ ਤਾਦ੍ਰੁʼਸ਼ੋ ਵਰਃ ਖ੍ਰੀਸ਼਼੍ਟਸ੍ਯਾਨੁਰੋਧਾਦ੍ ਯੁਸ਼਼੍ਮਾਭਿਃ ਪ੍ਰਾਪਿ,
30 ௩0 நீங்கள் என்னிடம் பார்த்ததும் எனக்கு உண்டென்று இப்பொழுது கேள்விப்படுகிறதுமான போராட்டமே உங்களுக்கும் உண்டு.
ਤਸ੍ਮਾਤ੍ ਮਮ ਯਾਦ੍ਰੁʼਸ਼ੰ ਯੁੱਧੰ ਯੁਸ਼਼੍ਮਾਭਿਰਦਰ੍ਸ਼ਿ ਸਾਮ੍ਪ੍ਰਤੰ ਸ਼੍ਰੂਯਤੇ ਚ ਤਾਦ੍ਰੁʼਸ਼ੰ ਯੁੱਧੰ ਯੁਸ਼਼੍ਮਾਕਮ੍ ਅਪਿ ਭਵਤਿ|