< பிலிப்பியர் 4 >

1 ஆகவே, எனக்குப் பிரியமும் வாஞ்சையுமான சகோதரர்களே, எனக்குச் சந்தோஷமும் கிரீடமுமானவர்களே, பிரியமானவர்களே, இப்படியே கர்த்தருக்குள் நிலைத்து நில்லுங்கள்.
ਹੇ ਮਦੀਯਾਨਨ੍ਦਮੁਕੁਟਸ੍ਵਰੂਪਾਃ ਪ੍ਰਿਯਤਮਾ ਅਭੀਸ਼਼੍ਟਤਮਾ ਭ੍ਰਾਤਰਃ, ਹੇ ਮਮ ਸ੍ਨੇਹਪਾਤ੍ਰਾਃ, ਯੂਯਮ੍ ਇੱਥੰ ਪਭੌ ਸ੍ਥਿਰਾਸ੍ਤਿਸ਼਼੍ਠਤ|
2 கர்த்தருக்குள் ஒரே சிந்தையாக இருக்க எயோதியாளுக்கும் சிந்திகேயாளுக்கும் புத்திசொல்லுகிறேன்.
ਹੇ ਇਵਦਿਯੇ ਹੇ ਸੁਨ੍ਤੁਖਿ ਯੁਵਾਂ ਪ੍ਰਭੌ ਏਕਭਾਵੇ ਭਵਤਮ੍ ਏਤਦ੍ ਅਹੰ ਪ੍ਰਾਰ੍ਥਯੇ|
3 அன்றியும், என் உத்தம கூட்டாளியே, அவர்களுக்கு உதவியாக இருக்கும்படி உன்னையும் வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் கிலேமெந்தோடும் மற்ற என் உடன்வேலையாட்களோடும் நற்செய்தியை அறிவிப்பதில் என்னோடு அதிகமாக உழைத்தார்கள், அவர்களுடைய பெயர்கள் ஜீவபுத்தகத்தில் இருக்கிறது.
ਹੇ ਮਮ ਸਤ੍ਯ ਸਹਕਾਰਿਨ੍ ਤ੍ਵਾਮਪਿ ਵਿਨੀਯ ਵਦਾਮਿ ਏਤਯੋਰੁਪਕਾਰਸ੍ਤ੍ਵਯਾ ਕ੍ਰਿਯਤਾਂ ਯਤਸ੍ਤੇ ਕ੍ਲੀਮਿਨਾਦਿਭਿਃ ਸਹਕਾਰਿਭਿਃ ਸਾਰ੍ੱਧੰ ਸੁਸੰਵਾਦਪ੍ਰਚਾਰਣਾਯ ਮਮ ਸਾਹਾੱਯਾਰ੍ਥੰ ਪਰਿਸ਼੍ਰਮਮ੍ ਅਕੁਰ੍ੱਵਤਾਂ ਤੇਸ਼਼ਾਂ ਸਰ੍ੱਵੇਸ਼਼ਾਂ ਨਾਮਾਨਿ ਚ ਜੀਵਨਪੁਸ੍ਤਕੇ ਲਿਖਿਤਾਨਿ ਵਿਦ੍ਯਨ੍ਤੇ|
4 கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாக இருங்கள்; சந்தோஷமாக இருங்கள் என்று மீண்டும் சொல்லுகிறேன்.
ਯੂਯੰ ਪ੍ਰਭੌ ਸਰ੍ੱਵਦਾਨਨ੍ਦਤ| ਪੁਨ ਰ੍ਵਦਾਮਿ ਯੂਯਮ੍ ਆਨਨ੍ਦਤ|
5 உங்களுடைய சாந்தகுணம் எல்லா மனிதர்களுக்கும் தெரிந்திருப்பதாக. கர்த்தர் அருகில் இருக்கிறார்.
ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਵਿਨੀਤਤ੍ਵੰ ਸਰ੍ੱਵਮਾਨਵੈ ਰ੍ਜ੍ਞਾਯਤਾਂ, ਪ੍ਰਭੁਃ ਸੰਨਿਧੌ ਵਿਦ੍ਯਤੇ|
6 நீங்கள் எதைக்குறித்தும் கவலைப்படாமல், எல்லாவற்றையும்குறித்து உங்களுடைய விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.
ਯੂਯੰ ਕਿਮਪਿ ਨ ਚਿਨ੍ਤਯਤ ਕਿਨ੍ਤੁ ਧਨ੍ਯਵਾਦਯੁਕ੍ਤਾਭ੍ਯਾਂ ਪ੍ਰਾਰ੍ਥਨਾਯਾਞ੍ਚਾਭ੍ਯਾਂ ਸਰ੍ੱਵਵਿਸ਼਼ਯੇ ਸ੍ਵਪ੍ਰਾਰ੍ਥਨੀਯਮ੍ ਈਸ਼੍ਵਰਾਯ ਨਿਵੇਦਯਤ|
7 அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்களுடைய இருதயங்களையும் உங்களுடைய சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவிற்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.
ਤਥਾ ਕ੍ਰੁʼਤ ਈਸ਼੍ਵਰੀਯਾ ਯਾ ਸ਼ਾਨ੍ਤਿਃ ਸਰ੍ੱਵਾਂ ਬੁੱਧਿਮ੍ ਅਤਿਸ਼ੇਤੇ ਸਾ ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਚਿੱਤਾਨਿ ਮਨਾਂਸਿ ਚ ਖ੍ਰੀਸ਼਼੍ਟੇ ਯੀਸ਼ੌ ਰਕ੍ਸ਼਼ਿਸ਼਼੍ਯਤਿ|
8 கடைசியாக, சகோதரர்களே, உண்மையுள்ளவைகள் எவைகளோ, ஒழுக்கமுள்ளவைகள் எவைகளோ, நீதியுள்ளவைகள் எவைகளோ, கற்புள்ளவைகள் எவைகளோ, அன்புள்ளவைகள் எவைகளோ, நற்பெயர் உள்ளவைகள் எவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்.
ਹੇ ਭ੍ਰਾਤਰਃ, ਸ਼ੇਸ਼਼ੇ ਵਦਾਮਿ ਯਦ੍ਯਤ੍ ਸਤ੍ਯਮ੍ ਆਦਰਣੀਯੰ ਨ੍ਯਾੱਯੰ ਸਾਧੁ ਪ੍ਰਿਯੰ ਸੁਖ੍ਯਾਤਮ੍ ਅਨ੍ਯੇਣ ਯੇਨ ਕੇਨਚਿਤ੍ ਪ੍ਰਕਾਰੇਣ ਵਾ ਗੁਣਯੁਕ੍ਤੰ ਪ੍ਰਸ਼ੰਸਨੀਯੰ ਵਾ ਭਵਤਿ ਤਤ੍ਰੈਵ ਮਨਾਂਸਿ ਨਿਧਧ੍ਵੰ|
9 நீங்கள் என்னிடம் கற்றுக்கொண்டவைகளும், பெற்றுக்கொண்டவைகளும், கேட்டவைகளும், பார்த்தவைகளும் எவைகளோ, அவைகளையே செய்யுங்கள்; அப்பொழுது சமாதானத்தின் தேவன் உங்களோடு இருப்பார்.
ਯੂਯੰ ਮਾਂ ਦ੍ਰੁʼਸ਼਼੍ਟ੍ਵਾ ਸ਼੍ਰੁਤ੍ਵਾ ਚ ਯਦ੍ਯਤ੍ ਸ਼ਿਕ੍ਸ਼਼ਿਤਵਨ੍ਤੋ ਗ੍ਰੁʼਹੀਤਵਨ੍ਤਸ਼੍ਚ ਤਦੇਵਾਚਰਤ ਤਸ੍ਮਾਤ੍ ਸ਼ਾਨ੍ਤਿਦਾਯਕ ਈਸ਼੍ਵਰੋ ਯੁਸ਼਼੍ਮਾਭਿਃ ਸਾਰ੍ੱਧੰ ਸ੍ਥਾਸ੍ਯਤਿ|
10 ௧0 என்னை விசாரிப்பதற்கு நீங்கள் இப்பொழுது மீண்டும் அக்கறை கொண்டதினாலே கர்த்தருக்குள் மிகவும் சந்தோஷப்பட்டேன்; முன்னமே இப்படிச் செய்ய நினைத்தீர்கள், ஆனால் உதவிசெய்ய உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
ਮਮੋਪਕਾਰਾਯ ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਯਾ ਚਿਨ੍ਤਾ ਪੂਰ੍ੱਵਮ੍ ਆਸੀਤ੍ ਕਿਨ੍ਤੁ ਕਰ੍ੰਮਦ੍ਵਾਰੰ ਨ ਪ੍ਰਾਪ੍ਨੋਤ੍ ਇਦਾਨੀਂ ਸਾ ਪੁਨਰਫਲਤ੍ ਇਤ੍ਯਸ੍ਮਿਨ੍ ਪ੍ਰਭੌ ਮਮ ਪਰਮਾਹ੍ਲਾਦੋ(ਅ)ਜਾਯਤ|
11 ௧௧ என் குறைகளினால் நான் இப்படிச் சொல்லவில்லை; ஏனென்றால், நான் எந்த நிலைமையில் இருந்தாலும் மனதிருப்தியாக இருக்கக் கற்றுக்கொண்டேன்.
ਅਹੰ ਯਦ੍ ਦੈਨ੍ਯਕਾਰਣਾਦ੍ ਇਦੰ ਵਦਾਮਿ ਤੰਨਹਿ ਯਤੋ ਮਮ ਯਾ ਕਾਚਿਦ੍ ਅਵਸ੍ਥਾ ਭਵੇਤ੍ ਤਸ੍ਯਾਂ ਸਨ੍ਤੋਸ਼਼੍ਟੁਮ੍ ਅਸ਼ਿਕ੍ਸ਼਼ਯੰ|
12 ௧௨ தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எந்த இடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாக இருக்கவும், பட்டினியாக இருக்கவும், பரிபூரணமடையவும், குறைவுபடவும் கற்றுக்கொண்டேன்.
ਦਰਿਦ੍ਰਤਾਂ ਭੋਕ੍ਤੁੰ ਸ਼ਕ੍ਨੋਮਿ ਧਨਾਢ੍ਯਤਾਮ੍ ਅਪਿ ਭੋਕ੍ਤੁੰ ਸ਼ਕ੍ਨੋਮਿ ਸਰ੍ੱਵਥਾ ਸਰ੍ੱਵਵਿਸ਼਼ਯੇਸ਼਼ੁ ਵਿਨੀਤੋ(ਅ)ਹੰ ਪ੍ਰਚੁਰਤਾਂ ਕ੍ਸ਼਼ੁਧਾਞ੍ਚ ਧਨੰ ਦੈਨ੍ਯਞ੍ਚਾਵਗਤੋ(ਅ)ਸ੍ਮਿ|
13 ௧௩ என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலன் உண்டு.
ਮਮ ਸ਼ਕ੍ਤਿਦਾਯਕੇਨ ਖ੍ਰੀਸ਼਼੍ਟੇਨ ਸਰ੍ੱਵਮੇਵ ਮਯਾ ਸ਼ਕ੍ਯੰ ਭਵਤਿ|
14 ௧௪ ஆனாலும் நீங்கள் என் உபத்திரவத்தில் என்னோடு பங்குகொண்டது நலமாக இருக்கிறது.
ਕਿਨ੍ਤੁ ਯੁਸ਼਼੍ਮਾਭਿ ਰ੍ਦੈਨ੍ਯਨਿਵਾਰਣਾਯ ਮਾਮ੍ ਉਪਕ੍ਰੁʼਤ੍ਯ ਸਤ੍ਕਰ੍ੰਮਾਕਾਰਿ|
15 ௧௫ மேலும், பிலிப்பியரே, நற்செய்தி ஊழியத்தின் ஆரம்பத்திலே நான் மக்கெதோனியாவிலிருந்து புறப்பட்டபோது, உங்களைத்தவிர வேறு எந்த சபையும் எனக்குப் பணம் கொடுத்து உதவிசெய்யவில்லை என்று உங்களுக்குத் தெரியும்.
ਹੇ ਫਿਲਿਪੀਯਲੋਕਾਃ, ਸੁਸੰਵਾਦਸ੍ਯੋਦਯਕਾਲੇ ਯਦਾਹੰ ਮਾਕਿਦਨਿਯਾਦੇਸ਼ਾਤ੍ ਪ੍ਰਤਿਸ਼਼੍ਠੇ ਤਦਾ ਕੇਵਲਾਨ੍ ਯੁਸ਼਼੍ਮਾਨ੍ ਵਿਨਾਪਰਯਾ ਕਯਾਪਿ ਸਮਿਤ੍ਯਾ ਸਹ ਦਾਨਾਦਾਨਯੋ ਰ੍ਮਮ ਕੋ(ਅ)ਪਿ ਸਮ੍ਬਨ੍ਧੋ ਨਾਸੀਦ੍ ਇਤਿ ਯੂਯਮਪਿ ਜਾਨੀਥ|
16 ௧௬ நான் தெசலோனிக்கேயில் இருந்தபோதும், என் குறைவுகளில் உதவிசெய்ய நீங்கள் பலமுறை பணம் அனுப்பி உதவி செய்தீர்கள்.
ਯਤੋ ਯੁਸ਼਼੍ਮਾਭਿ ਰ੍ਮਮ ਪ੍ਰਯੋਜਨਾਯ ਥਿਸ਼਼ਲਨੀਕੀਨਗਰਮਪਿ ਮਾਂ ਪ੍ਰਤਿ ਪੁਨਃ ਪੁਨਰ੍ਦਾਨੰ ਪ੍ਰੇਸ਼਼ਿਤੰ|
17 ௧௭ உங்களுடைய உதவிகளை நான் தேடாமல், உங்களுடைய உதவிகளால் உங்களுக்கு வரும் பலன் பெருகுவதையே பார்க்க விரும்புகிறேன்.
ਅਹੰ ਯਦ੍ ਦਾਨੰ ਮ੍ਰੁʼਗਯੇ ਤੰਨਹਿ ਕਿਨ੍ਤੁ ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਲਾਭਵਰ੍ੱਧਕੰ ਫਲੰ ਮ੍ਰੁʼਗਯੇ|
18 ௧௮ எல்லாம் எனக்குக் கிடைத்தது, பரிபூரணமும் உண்டாயிருக்கிறது; உங்களால் அனுப்பப்பட்டவைகளை தேவனுக்குச் சுகந்த வாசனையாகவும், பிரியமான பலியாகவும் எப்பாப்பிரோதீத்துவின் கைகளினால் பெற்றுக்கொண்டதினால் நான் திருப்தியடைந்திருக்கிறேன்.
ਕਿਨ੍ਤੁ ਮਮ ਕਸ੍ਯਾਪ੍ਯਭਾਵੋ ਨਾਸ੍ਤਿ ਸਰ੍ੱਵੰ ਪ੍ਰਚੁਰਮ੍ ਆਸ੍ਤੇ ਯਤ ਈਸ਼੍ਵਰਸ੍ਯ ਗ੍ਰਾਹ੍ਯੰ ਤੁਸ਼਼੍ਟਿਜਨਕੰ ਸੁਗਨ੍ਧਿਨੈਵੇਦ੍ਯਸ੍ਵਰੂਪੰ ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਦਾਨੰ ਇਪਾਫ੍ਰਦਿਤਾਦ੍ ਗ੍ਰੁʼਹੀਤ੍ਵਾਹੰ ਪਰਿਤ੍ਰੁʼਪ੍ਤੋ(ਅ)ਸ੍ਮਿ|
19 ௧௯ என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்களுடைய குறைகளையெல்லாம் கிறிஸ்து இயேசுவிற்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.
ਮਮੇਸ਼੍ਵਰੋ(ਅ)ਪਿ ਖ੍ਰੀਸ਼਼੍ਟੇਨ ਯੀਸ਼ੁਨਾ ਸ੍ਵਕੀਯਵਿਭਵਨਿਧਿਤਃ ਪ੍ਰਯੋਜਨੀਯੰ ਸਰ੍ੱਵਵਿਸ਼਼ਯੰ ਪੂਰ੍ਣਰੂਪੰ ਯੁਸ਼਼੍ਮਭ੍ਯੰ ਦੇਯਾਤ੍|
20 ௨0 நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
ਅਸ੍ਮਾਕੰ ਪਿਤੁਰੀਸ਼੍ਵਰਸ੍ਯ ਧਨ੍ਯਵਾਦੋ(ਅ)ਨਨ੍ਤਕਾਲੰ ਯਾਵਦ੍ ਭਵਤੁ| ਆਮੇਨ੍| (aiōn g165)
21 ௨௧ கிறிஸ்து இயேசுவிற்குள்ளான பரிசுத்தவான்கள் எல்லோருக்கும் வாழ்த்துதல் சொல்லுங்கள். என்னோடு இருக்கிற சகோதரர்கள் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
ਯੂਯੰ ਯੀਸ਼ੁਖ੍ਰੀਸ਼਼੍ਟਸ੍ਯੈਕੈਕੰ ਪਵਿਤ੍ਰਜਨੰ ਨਮਸ੍ਕੁਰੁਤ| ਮਮ ਸਙ੍ਗਿਭ੍ਰਾਤਰੋ ਯੂਸ਼਼੍ਮਾਨ੍ ਨਮਸ੍ਕੁਰ੍ੱਵਤੇ|
22 ௨௨ பரிசுத்தவான்கள் அனைவரும், விசேஷமாக இராயனுடைய அரண்மனையில் உள்ளவர்களும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
ਸਰ੍ੱਵੇ ਪਵਿਤ੍ਰਲੋਕਾ ਵਿਸ਼ੇਸ਼਼ਤਃ ਕੈਸਰਸ੍ਯ ਪਰਿਜਨਾ ਯੁਸ਼਼੍ਮਾਨ੍ ਨਮਸ੍ਕੁਰ੍ੱਵਤੇ|
23 ௨௩ நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக. ஆமென்.
ਅਸ੍ਮਾਕੰ ਪ੍ਰਭੋ ਰ੍ਯੀਸ਼ੁਖ੍ਰੀਸ਼਼੍ਟਸ੍ਯ ਪ੍ਰਸਾਦਃ ਸਰ੍ੱਵਾਨ੍ ਯੁਸ਼਼੍ਮਾਨ੍ ਪ੍ਰਤਿ ਭੂਯਾਤ੍| ਆਮੇਨ੍|

< பிலிப்பியர் 4 >