< பிலிப்பியர் 3 >

1 மேலும், என் சகோதரர்களே, கர்த்தருக்குள் சந்தோஷப்படுங்கள். எழுதினவைகளையே மீண்டும் எழுதுவது எனக்கு வருத்தம் இல்லை, அது உங்களுக்கு நலமாக இருக்கும்.
హే భ్రాతరః, శేషే వదామి యూయం ప్రభావానన్దత| పునః పునరేకస్య వచో లేఖనం మమ క్లేశదం నహి యుష్మదర్థఞ్చ భ్రమనాశకం భవతి|
2 நாய்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள், பொல்லாத வேலையாட்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள். விருத்தசேதனக்காரர்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள்.
యూయం కుక్కురేభ్యః సావధానా భవత దుష్కర్మ్మకారిభ్యః సావధానా భవత ఛిన్నమూలేభ్యో లోకేభ్యశ్చ సావధానా భవత|
3 ஏனென்றால், சரீரத்தின்மேல் நம்பிக்கையாக இல்லாமல், ஆவியினாலே தேவனுக்கு ஆராதனைசெய்து, கிறிஸ்து இயேசுவிற்குள் மேன்மைபாராட்டுகிற நாமே விருத்தசேதனமுள்ளவர்கள்.
వయమేవ ఛిన్నత్వచో లోకా యతో వయమ్ ఆత్మనేశ్వరం సేవామహే ఖ్రీష్టేన యీశునా శ్లాఘామహే శరీరేణ చ ప్రగల్భతాం న కుర్వ్వామహే|
4 சரீரத்தின்மேல் நம்பிக்கை வைக்கவேண்டுமானால் நானும் வைக்கலாம்; வேறொருவன் சரீரத்தின்மேல் நம்பிக்கையாக இருக்க நினைத்தால் நான் அதைவிட அதிகமாக அப்படிச் செய்யலாம்.
కిన్తు శరీరే మమ ప్రగల్భతాయాః కారణం విద్యతే, కశ్చిద్ యది శరీరేణ ప్రగల్భతాం చికీర్షతి తర్హి తస్మాద్ అపి మమ ప్రగల్భతాయా గురుతరం కారణం విద్యతే|
5 நான் எட்டாம்நாளில் விருத்தசேதனம்பண்ணப்பட்டவன், இஸ்ரவேல் வம்சத்தைச் சேர்ந்தவன், பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவன், எபிரெயரில் பிறந்த எபிரெயன், நியாயப்பிரமாணத்தின்படி பரிசேயன்;
యతోఽహమ్ అష్టమదివసే త్వక్ఛేదప్రాప్త ఇస్రాయేల్వంశీయో బిన్యామీనగోష్ఠీయ ఇబ్రికులజాత ఇబ్రియో వ్యవస్థాచరణే ఫిరూశీ
6 பக்திவைராக்கியத்தின்படி சபையைத் துன்பப்படுத்தினவன், நியாயப்பிரமாணத்தின் நீதியின்படி குற்றஞ்சாட்டப்படாதவன்.
ధర్మ్మోత్సాహకారణాత్ సమితేరుపద్రవకారీ వ్యవస్థాతో లభ్యే పుణ్యే చానిన్దనీయః|
7 ஆனாலும், எனக்கு இலாபமாக இருந்தவைகள் எவைகளோ, அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டம் என்று நினைத்தேன்.
కిన్తు మమ యద్యత్ లభ్యమ్ ఆసీత్ తత్ సర్వ్వమ్ అహం ఖ్రీష్టస్యానురోధాత్ క్షతిమ్ అమన్యే|
8 அதுமட்டும் இல்லை, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன்.
కిఞ్చాధునాప్యహం మత్ప్రభోః ఖ్రీష్టస్య యీశో ర్జ్ఞానస్యోత్కృష్టతాం బుద్ధ్వా తత్ సర్వ్వం క్షతిం మన్యే|
9 நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்வதற்காக, நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாக இல்லாமல், கிறிஸ்துவின்மேல் உள்ள விசுவாசத்தினால் வருகிறதும், விசுவாசம் மூலமாக தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாக இருந்து, கிறிஸ்துவிற்குள் இருக்கிறவன் என்று தெரியும்படிக்கும்,
యతో హేతోరహం యత్ ఖ్రీష్టం లభేయ వ్యవస్థాతో జాతం స్వకీయపుణ్యఞ్చ న ధారయన్ కిన్తు ఖ్రీష్టే విశ్వసనాత్ లభ్యం యత్ పుణ్యమ్ ఈశ్వరేణ విశ్వాసం దృష్ట్వా దీయతే తదేవ ధారయన్ యత్ ఖ్రీష్టే విద్యేయ తదర్థం తస్యానురోధాత్ సర్వ్వేషాం క్షతిం స్వీకృత్య తాని సర్వ్వాణ్యవకరానివ మన్యే|
10 ௧0 இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் தெரிந்துகொள்வதற்கும், அவருடைய மரணத்திற்கு இணையான மரணத்திற்குள்ளாகி, எப்படியாவது நான் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருப்பதற்குத் தகுதியாவதற்கும்,
యతో హేతోరహం ఖ్రీష్టం తస్య పునరుత్థితే ర్గుణం తస్య దుఃఖానాం భాగిత్వఞ్చ జ్ఞాత్వా తస్య మృత్యోరాకృతిఞ్చ గృహీత్వా
11 ௧௧ அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்றும் குப்பையென்றும் நினைக்கிறேன்.
యేన కేనచిత్ ప్రకారేణ మృతానాం పునరుత్థితిం ప్రాప్తుం యతే|
12 ௧௨ நான் பெற்றுக்கொண்டேன் அல்லது முழுவதும் தேறினவனானேன் என்று நினைக்காமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்வதற்காக ஆசையாகத் தொடருகிறேன்.
మయా తత్ సర్వ్వమ్ అధునా ప్రాపి సిద్ధతా వాలమ్భి తన్నహి కిన్తు యదర్థమ్ అహం ఖ్రీష్టేన ధారితస్తద్ ధారయితుం ధావామి|
13 ௧௩ சகோதரர்களே, அதைப் பிடித்துக்கொண்டேன் என்று நான் நினைக்கிறதில்லை; ஒன்று செய்கிறேன், கடந்தவைகளை மறந்து, வருகிறவைகளைத் தேடி,
హే భ్రాతరః, మయా తద్ ధారితమ్ ఇతి న మన్యతే కిన్త్వేతదైకమాత్రం వదామి యాని పశ్చాత్ స్థితాని తాని విస్మృత్యాహమ్ అగ్రస్థితాన్యుద్దిశ్య
14 ௧௪ கிறிஸ்து இயேசுவிற்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.
పూర్ణయత్నేన లక్ష్యం ప్రతి ధావన్ ఖ్రీష్టయీశునోర్ద్ధ్వాత్ మామ్ ఆహ్వయత ఈశ్వరాత్ జేతృపణం ప్రాప్తుం చేష్టే|
15 ௧௫ ஆகவே, நம்மில் தேறினவர்கள் எல்லோரும் இந்தச் சிந்தையாகவே இருக்கவேண்டும்; எந்தக் காரியத்திலாவது நீங்கள் வேறு சிந்தையாக இருந்தால், அதையும் தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துவார்.
అస్మాకం మధ్యే యే సిద్ధాస్తైః సర్వ్వైస్తదేవ భావ్యతాం, యది చ కఞ్చన విషయమ్ అధి యుష్మాకమ్ అపరో భావో భవతి తర్హీశ్వరస్తమపి యుష్మాకం ప్రతి ప్రకాశయిష్యతి|
16 ௧௬ ஆனாலும் நாம் எதுவரைக்கும் தேறியிருக்கிறோமோ, அதுமுதல் ஒரே ஒழுங்காக நடந்துகொண்டு, ஒரே சிந்தையாக இருப்போமாக.
కిన్తు వయం యద్యద్ అవగతా ఆస్మస్తత్రాస్మాభిరేకో విధిరాచరితవ్య ఏకభావై ర్భవితవ్యఞ్చ|
17 ௧௭ சகோதரர்களே, நீங்கள் என்னோடு பின்பற்றுகிறவர்களாகி, நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுகிறபடி நடக்கிறவர்களை மாதிரியாக நோக்கிப் பாருங்கள்.
హే భ్రాతరః, యూయం మమానుగామినో భవత వయఞ్చ యాదృగాచరణస్య నిదర్శనస్వరూపా భవామస్తాదృగాచారిణో లోకాన్ ఆలోకయధ్వం|
18 ௧௮ ஏனென்றால், அநேகர் வேறுவிதமாக நடக்கிறார்கள்; அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைவர்களென்று உங்களுக்கு அநேகமுறைச் சொன்னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன்.
యతోఽనేకే విపథే చరన్తి తే చ ఖ్రీష్టస్య క్రుశస్య శత్రవ ఇతి పురా మయా పునః పునః కథితమ్ అధునాపి రుదతా మయా కథ్యతే|
19 ௧௯ அவர்களுடைய முடிவு அழிவு, அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய வெட்கமே, அவர்கள் பூமிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்.
తేషాం శేషదశా సర్వ్వనాశ ఉదరశ్చేశ్వరో లజ్జా చ శ్లాఘా పృథివ్యాఞ్చ లగ్నం మనః|
20 ௨0 நம்முடைய குடியிருப்போ பரலோகத்தில் இருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வருவதற்காக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
కిన్త్వస్మాకం జనపదః స్వర్గే విద్యతే తస్మాచ్చాగమిష్యన్తం త్రాతారం ప్రభుం యీశుఖ్రీష్టం వయం ప్రతీక్షామహే|
21 ௨௧ அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்வதற்கு தம்முடைய வல்லமையான செயலின்படி, நம்முடைய அற்பமான சரீரத்தை அவருடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்.
స చ యయా శక్త్యా సర్వ్వాణ్యేవ స్వస్య వశీకర్త్తుం పారయతి తయాస్మాకమ్ అధమం శరీరం రూపాన్తరీకృత్య స్వకీయతేజోమయశరీరస్య సమాకారం కరిష్యతి|

< பிலிப்பியர் 3 >