< மீகா 4 >
1 ௧ ஆனாலும், வரும் நாட்களில் யெகோவாவுடைய ஆலயமாகிய மலை, மலைகளின் உச்சியில் நிறுவப்பட்டு, மலைகளுக்கு மேலாக உயர்த்தப்பட்டிருக்கும், எல்லா மக்களும் அதினிடத்திற்கு ஓடிவருவார்கள்.
И будет в последния дни явлена гора Господня, уготована над верхи гор, и вознесется выше холмов, и потщатся к ней людие,
2 ௨ திரளான மக்கள் புறப்பட்டு வந்து: நாம் யெகோவாவின் மலைக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்திற்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவருடைய பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து யெகோவாவின் வசனமும் வெளிப்படும்.
и приидут языцы мнози и рекут: приидите, взыдем на гору Господню и в дом Бога Иаковля: и покажут нам путь Его, и пойдем по стезям Его: яко от Сиона изыдет закон, и слово Господне из Иерусалима,
3 ௩ அவர் திரளான மக்களுக்குள் நியாயம் தீர்த்து, தூரத்திலுள்ள பலம்மிகுந்த தேசங்களைக் கடிந்துகொள்ளுவார்; அப்பொழுது அவர்கள் தங்களுடைய பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஒரு தேசத்திற்கு விரோதமாக இன்னொரு தேசம் பட்டயம் எடுப்பதில்லை; இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.
и разсудит среде людий многих и изобличит языки крепки даже до земли дальния: и раскуют мечы своя на рала и сулицы своя на серпы, и не ктому возмет язык на язык меча, и не научатся ксему воевати.
4 ௪ அவனவன் தன்தன் திராட்சைச்செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துபவர்கள் இல்லாமல் உட்காருவான்; சேனைகளுடைய யெகோவாவின் வாய் இதைச் சொல்லிற்று.
И почиет кийждо под лозою своею и кийждо под смоковницею своею, и не будет устрашающаго, зане уста Господа Вседержителя глаголаша сия.
5 ௫ சகல மக்களும் தங்கள் தங்கள் தேவனுடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு நடப்பார்கள்; நாங்களும் எங்கள் தேவனாகிய யெகோவாவுடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நடப்போம்.
Яко вси людие пойдут кийждо в путь свой, а мы пойдем во имя Господа Бога нашего в век и далечае.
6 ௬ யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: அந்நாளிலே நான் நொண்டியானவளைச் சேர்த்து, தள்ளப்பட்டவளையும் தீங்கு அனுபவித்தவளையும் கூட்டிக்கொண்டு,
В той день, глаголет Господь, соберу сокрушенную, и отриновенную прииму, и ихже отринух:
7 ௭ நொண்டியானவளை மீதியான மக்களாகவும், தூரமாகத் தள்ளப்பட்டுப்போனவளைப் பலத்த மக்களாகவும் வைப்பேன்; அவர்கள்பேரில் யெகோவா சீயோன் மலையிலே இதுமுதல் என்றென்றைக்கும் ராஜாவாக இருப்பார்.
и положу сокрушенную во останок и отриновенную в язык крепок, и воцарится Господь над ними в горе Сионе отныне и до века.
8 ௮ மந்தையின் காவற்கோபுரமே, மகளாகிய சீயோனின் பாதுகாப்பே, முந்தின ஆளுகை உன்னிடத்தில் வரும்; ராஜரிகம் மகளாகிய எருசலேமிடம் வரும்.
И ты, столпе паствы мгляный, дщи Сионя, к тебе приидет и внидет власть первая, царство из Вавилона дщери Иерусалимли.
9 ௯ இப்போதும் நீ ஏன் சத்தமிட்டு கதறவேண்டும்? ராஜாவானவர் உன்னிடத்தில் இல்லையோ? உன் ஆலோசனைக்காரர்கள் அழிந்துபோனார்களோ? பிரசவிக்கிற பெண்ணுக்கு உண்டாகிற வேதனை உனக்கு உண்டாகும்.
И ныне вскую познала еси зло? Не бе ли тебе царя? Или совет твой погибе, яко обыдоша тя болезни, аки раждающия?
10 ௧0 மகளாகிய சீயோனே, பிரசவிக்கிற பெண்ணைப்போல பிரசவ வேதனைப்படு; நீ இப்போது நகரத்திலிருந்து புறப்பட்டு, வெளிகளில் தங்கி, பாபிலோன் வரைக்கும் போவாய், அங்கே விடுவிக்கப்படுவாய்; அங்கே யெகோவா உன்னை உன் எதிரிகளின் கைக்கு நீங்கலாக்கி மீட்பார்.
Болезнуй и мужайся и приближайся, дщи Сионя, яко раждающая: зане ныне изыдеши из града и вселишися на поли и дойдеши Вавилона: оттуду изимет тя и оттуду избавит тя Господь Бог твой от руки враг твоих.
11 ௧௧ சீயோன் தீட்டுப்படுவாளாக, எங்கள் கண் அவளைக் காண்பதாக என்று சொல்லி, அநேக தேசத்தார் உனக்கு விரோதமாகக் கூடியிருக்கிறார்கள்.
И ныне собрашася на тя языцы мнози глаголющии: порадуемся: и воззрят на Сион очи наши.
12 ௧௨ ஆனாலும் அவர்கள் யெகோவாவுடைய நினைவுகளை அறியாமலும், அவருடைய யோசனையை உணராமலும் இருக்கிறார்கள்; அவர் அரிக்கட்டுகளைப்போல அவர்களைக் களத்திலே சேர்ப்பார்.
Сии же не разумеша помышления Господня и не домыслишася совета Его, яко собра их аки снопы гуменныя.
13 ௧௩ மகளாகிய சீயோனே, நீ எழுந்து போரடி; நான் உன் கொம்புகளை இரும்பும், உன் குளம்புகளை வெண்கலமுமாக்குவேன்; நீ அநேக மக்களை நொறுக்கிப்போடுவாய்; அவர்கள் தேடிச் சேர்த்ததை நீ கர்த்தருக்கென்றும், அவர்களுடைய சொத்துக்களை முழு பூமிக்கும் ஆண்டவராக இருக்கிறவருக்கென்றும் நியமிப்பாய்.
Востани и измлати их, дщи Сионя, яко роги твоя положу железны и пазнокти твоя положу медяны, и истончиши люди многи, и возложиши Господеви множество их и крепость их Господеви всея земли.