< மத்தேயு 9 >
1 ௧ அப்பொழுது, அவர் படகில் ஏறி, இக்கரையில் உள்ள தம்முடைய பட்டணத்திற்கு வந்தார்.
అనన్తరం యీశు ర్నౌకామారుహ్య పునః పారమాగత్య నిజగ్రామమ్ ఆయయౌ|
2 ௨ அங்கே படுக்கையிலே கிடந்த ஒரு பக்கவாதக்காரனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, பக்கவாதக்காரனைப் பார்த்து: மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
తతః కతిపయా జనా ఏకం పక్షాఘాతినం స్వట్టోపరి శాయయిత్వా తత్సమీపమ్ ఆనయన్; తతో యీశుస్తేషాం ప్రతీతిం విజ్ఞాయ తం పక్షాఘాతినం జగాద, హే పుత్ర, సుస్థిరో భవ, తవ కలుషస్య మర్షణం జాతమ్|
3 ௩ அப்பொழுது, வேதபண்டிதர்களில் சிலர்: இவன் தேவனை அவமதித்துப் பேசுகிறான் என்று தங்களுடைய உள்ளத்தில் சொல்லிக்கொண்டார்கள்.
తాం కథాం నిశమ్య కియన్త ఉపాధ్యాయా మనఃసు చిన్తితవన్త ఏష మనుజ ఈశ్వరం నిన్దతి|
4 ௪ இயேசு அவர்கள் நினைவுகளை அறிந்து: நீங்கள் உங்களுடைய இருதயங்களில் பொல்லாதவைகளைச் சிந்திக்கிறதென்ன?
తతః స తేషామ్ ఏతాదృశీం చిన్తాం విజ్ఞాయ కథితవాన్, యూయం మనఃసు కృత ఏతాదృశీం కుచిన్తాం కురుథ?
5 ௫ உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நட என்று சொல்வதோ, எது எளிது?
తవ పాపమర్షణం జాతం, యద్వా త్వముత్థాయ గచ్ఛ, ద్వయోరనయో ర్వాక్యయోః కిం వాక్యం వక్తుం సుగమం?
6 ௬ பூமியிலே பாவங்களை மன்னிக்க மனிதகுமாரனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, பக்கவாதக்காரனைப் பார்த்து: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டிற்குப் போ என்றார்.
కిన్తు మేదిన్యాం కలుషం క్షమితుం మనుజసుతస్య సామర్థ్యమస్తీతి యూయం యథా జానీథ, తదర్థం స తం పక్షాఘాతినం గదితవాన్, ఉత్తిష్ఠ, నిజశయనీయం ఆదాయ గేహం గచ్ఛ|
7 ௭ உடனே அவன் எழுந்து, தன் வீட்டிற்குப்போனான்.
తతః స తత్క్షణాద్ ఉత్థాయ నిజగేహం ప్రస్థితవాన్|
8 ௮ மக்கள் அதைக் கண்டு ஆச்சரியப்பட்டு, மனிதர்களுக்கு இப்படிப்பட்ட அதிகாரத்தைக் கொடுத்தவராகிய தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
మానవా ఇత్థం విలోక్య విస్మయం మేనిరే, ఈశ్వరేణ మానవాయ సామర్థ్యమ్ ఈదృశం దత్తం ఇతి కారణాత్ తం ధన్యం బభాషిరే చ|
9 ௯ இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகும்போது, வரிவசூல் மையத்தில் உட்கார்ந்திருந்த மத்தேயு என்னும் ஒரு மனிதனைக் கண்டு: எனக்குப் பின்னே வா என்றார்; அவன் எழுந்து, அவருக்குப் பின்னேசென்றான்.
అనన్తరం యీశుస్తత్స్థానాద్ గచ్ఛన్ గచ్ఛన్ కరసంగ్రహస్థానే సముపవిష్టం మథినామానమ్ ఏకం మనుజం విలోక్య తం బభాషే, మమ పశ్చాద్ ఆగచ్ఛ, తతః స ఉత్థాయ తస్య పశ్చాద్ వవ్రాజ|
10 ௧0 பின்பு அவர் வீட்டிலே உணவுப் பந்தியிருக்கும்போது, அநேக வரி வசூலிப்பவர்களும் பாவிகளும் வந்து, இயேசுவோடும் அவருடைய சீடர்களோடும் பந்தியில் இருந்தார்கள்.
తతః పరం యీశౌ గృహే భోక్తుమ్ ఉపవిష్టే బహవః కరసంగ్రాహిణః కలుషిణశ్చ మానవా ఆగత్య తేన సాకం తస్య శిష్యైశ్చ సాకమ్ ఉపవివిశుః|
11 ௧௧ பரிசேயர்கள் அதைக் கண்டு, அவருடைய சீடர்களைப் பார்த்து: உங்களுடைய போதகர் வரி வசூலிப்பவர்களோடும் பாவிகளோடும் உணவு சாப்பிடுகிறது ஏன் என்று கேட்டார்கள்.
ఫిరూశినస్తద్ దృష్ట్వా తస్య శిష్యాన్ బభాషిరే, యుష్మాకం గురుః కిం నిమిత్తం కరసంగ్రాహిభిః కలుషిభిశ్చ సాకం భుంక్తే?
12 ௧௨ இயேசு அதைக்கேட்டு: நோயாளிகளுக்குத்தான் வைத்தியன் தேவையேதவிர சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை.
యీశుస్తత్ శ్రుత్వా తాన్ ప్రత్యవదత్, నిరామయలోకానాం చికిత్సకేన ప్రయోజనం నాస్తి, కిన్తు సామయలోకానాం ప్రయోజనమాస్తే|
13 ௧௩ பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.
అతో యూయం యాత్వా వచనస్యాస్యార్థం శిక్షధ్వమ్, దయాయాం మే యథా ప్రీతి ర్న తథా యజ్ఞకర్మ్మణి| యతోఽహం ధార్మ్మికాన్ ఆహ్వాతుం నాగతోఽస్మి కిన్తు మనః పరివర్త్తయితుం పాపిన ఆహ్వాతుమ్ ఆగతోఽస్మి|
14 ௧௪ அப்பொழுது, யோவானுடைய சீடர்கள் அவரிடம் வந்து: நாங்களும் பரிசேயர்களும் அநேகமுறை உபவாசிக்கிறோமே; உம்முடைய சீடர்கள் உபவாசிக்காமல் இருக்கிறது ஏன் என்று கேட்டார்கள்.
అనన్తరం యోహనః శిష్యాస్తస్య సమీపమ్ ఆగత్య కథయామాసుః, ఫిరూశినో వయఞ్చ పునః పునరుపవసామః, కిన్తు తవ శిష్యా నోపవసన్తి, కుతః?
15 ௧௫ அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடு இருக்கும்போது மணவாளனுடைய தோழர்கள் துயரப்படுவார்களா? மணவாளன் அவர்களைவிட்டுப் போகும் நாட்கள் வரும், அப்பொழுது உபவாசிப்பார்கள்.
తదా యీశుస్తాన్ అవోచత్ యావత్ సఖీనాం సంఙ్గే కన్యాయా వరస్తిష్ఠతి, తావత్ కిం తే విలాపం కర్త్తుం శక్లువన్తి? కిన్తు యదా తేషాం సంఙ్గాద్ వరం నయన్తి, తాదృశః సమయ ఆగమిష్యతి, తదా తే ఉపవత్స్యన్తి|
16 ௧௬ ஒருவனும் புதிய துணியை பழைய ஆடையோடு இணைக்கமாட்டான்; இணைத்தால், அதினோடு இணைத்த பழைய ஆடையை அது அதிகமாகக் கிழிக்கும், கீறலும் அதிகமாகும்.
పురాతనవసనే కోపి నవీనవస్త్రం న యోజయతి, యస్మాత్ తేన యోజితేన పురాతనవసనం ఛినత్తి తచ్ఛిద్రఞ్చ బహుకుత్సితం దృశ్యతే|
17 ௧௭ புதிய திராட்சைரசத்தைப் பழைய தோல் பைகளில் ஊற்றிவைக்கிறதும் இல்லை; ஊற்றிவைத்தால், தோல் பைகள் கிழிந்துபோகும், இரசமும் சிந்திப்போகும், தோல் பைகளும் கெட்டுப்போகும்; புதிய இரசத்தைப் புதிய தோல் பைகளில் ஊற்றிவைப்பார்கள், அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும் என்றார்.
అన్యఞ్చ పురాతనకుత్వాం కోపి నవానగోస్తనీరసం న నిదధాతి, యస్మాత్ తథా కృతే కుతూ ర్విదీర్య్యతే తేన గోస్తనీరసః పతతి కుతూశ్చ నశ్యతి; తస్మాత్ నవీనాయాం కుత్వాం నవీనో గోస్తనీరసః స్థాప్యతే, తేన ద్వయోరవనం భవతి|
18 ௧௮ அவர் இவைகளை அவர்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கும்போது, தலைவன் ஒருவன் வந்து அவரை வணங்கி: என் மகள் இப்பொழுதுதான் இறந்துபோனாள்; ஆனாலும், நீர் வந்து அவள்மேல் உமது கையை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்றான்.
అపరం తేనైతత్కథాకథనకాలే ఏకోఽధిపతిస్తం ప్రణమ్య బభాషే, మమ దుహితా ప్రాయేణైతావత్కాలే మృతా, తస్మాద్ భవానాగత్య తస్యా గాత్రే హస్తమర్పయతు, తేన సా జీవిష్యతి|
19 ௧௯ இயேசு எழுந்து, தம்முடைய சீடர்களோடுகூட அவன் பின்னே போனார்.
తదానీం యీశుః శిష్యైః సాకమ్ ఉత్థాయ తస్య పశ్చాద్ వవ్రాజ|
20 ௨0 அப்பொழுது, பன்னிரண்டு வருடங்களாக இரத்தப்போக்கினாலே கஷ்டப்படும் ஒரு பெண்:
ఇత్యనన్తరే ద్వాదశవత్సరాన్ యావత్ ప్రదరామయేన శీర్ణైకా నారీ తస్య పశ్చాద్ ఆగత్య తస్య వసనస్య గ్రన్థిం పస్పర్శ;
21 ௨௧ நான் அவருடைய ஆடையையாவது தொட்டால் சுகமாவேன் என்று தன் உள்ளத்தில் எண்ணிக்கொண்டு, அவர் பின்னாலே வந்து, அவருடைய ஆடையின் ஓரத்தைத் தொட்டாள்.
యస్మాత్ మయా కేవలం తస్య వసనం స్పృష్ట్వా స్వాస్థ్యం ప్రాప్స్యతే, సా నారీతి మనసి నిశ్చితవతీ|
22 ௨௨ இயேசு திரும்பி, அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். அந்தநேரத்திலேயே அந்தப் பெண் சுகமானாள்.
తతో యీశుర్వదనం పరావర్త్త్య తాం జగాద, హే కన్యే, త్వం సుస్థిరా భవ, తవ విశ్వాసస్త్వాం స్వస్థామకార్షీత్| ఏతద్వాక్యే గదితఏవ సా యోషిత్ స్వస్థాభూత్|
23 ௨௩ இயேசுவானவர் அந்தத் தலைவனுடைய வீட்டிற்கு வந்து, சங்கு ஊதுகிறவர்களையும், ஒப்பாரி வைக்கிற மக்களையும் கண்டு:
అపరం యీశుస్తస్యాధ్యక్షస్య గేహం గత్వా వాదకప్రభృతీన్ బహూన్ లోకాన్ శబ్దాయమానాన్ విలోక్య తాన్ అవదత్,
24 ௨௪ விலகுங்கள், இந்த சிறுபெண் இறக்கவில்லை, தூங்கிக்கொண்டிருக்கிறாள் என்றார். அதற்காக அவரைப் பார்த்து ஏளனம் செய்தார்கள்.
పన్థానం త్యజ, కన్యేయం నామ్రియత నిద్రితాస్తే; కథామేతాం శ్రుత్వా తే తముపజహసుః|
25 ௨௫ மக்கள் வெளியே அனுப்பப்பட்டப்பின்பு, அவர் உள்ளே பிரவேசித்து, அந்தச் சிறுபெண்ணின் கையைப் பிடித்தார்; உடனே அவள் எழுந்திருந்தாள்.
కిన్తు సర్వ్వేషు బహిష్కృతేషు సోఽభ్యన్తరం గత్వా కన్యాయాః కరం ధృతవాన్, తేన సోదతిష్ఠత్;
26 ௨௬ இந்தச் செய்தி அந்த நாடெங்கும் பிரசித்தமானது.
తతస్తత్కర్మ్మణో యశః కృత్స్నం తం దేశం వ్యాప్తవత్|
27 ௨௭ இயேசு அந்த இடத்தைவிட்டுப் போகும்போது, இரண்டு குருடர்கள் அவருக்குப் பின்னேசென்று: தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள்.
తతః పరం యీశుస్తస్మాత్ స్థానాద్ యాత్రాం చకార; తదా హే దాయూదః సన్తాన, అస్మాన్ దయస్వ, ఇతి వదన్తౌ ద్వౌ జనావన్ధౌ ప్రోచైరాహూయన్తౌ తత్పశ్చాద్ వవ్రజతుః|
28 ௨௮ அவர் வீட்டிற்கு வந்தபின்பு, அந்தக் குருடர்கள் அவரிடத்தில் வந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: இதைச்செய்ய எனக்கு வல்லமை உண்டு என்று விசுவாசிக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம் விசுவாசிக்கிறோம் ஆண்டவரே! என்றார்கள்.
తతో యీశౌ గేహమధ్యం ప్రవిష్టం తావపి తస్య సమీపమ్ ఉపస్థితవన్తౌ, తదానీం స తౌ పృష్టవాన్ కర్మ్మైతత్ కర్త్తుం మమ సామర్థ్యమ్ ఆస్తే, యువాం కిమితి ప్రతీథః? తదా తౌ ప్రత్యూచతుః, సత్యం ప్రభో|
29 ௨௯ அப்பொழுது, அவர்களுடைய கண்களை அவர் தொட்டு: உங்களுடைய விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது என்றார்.
తదానీం స తయో ర్లోచనాని స్పృశన్ బభాషే, యువయోః ప్రతీత్యనుసారాద్ యువయో ర్మఙ్గలం భూయాత్| తేన తత్క్షణాత్ తయో ర్నేత్రాణి ప్రసన్నాన్యభవన్,
30 ௩0 உடனே அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டது. இதை ஒருவரும் அறியாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள் என்று இயேசு அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்.
పశ్చాద్ యీశుస్తౌ దృఢమాజ్ఞాప్య జగాద, అవధత్తమ్ ఏతాం కథాం కోపి మనుజో మ జానీయాత్|
31 ௩௧ அவர்களோ புறப்பட்டு, அந்த நாடெங்கும் அவருடைய புகழைப் பிரசித்தப்படுத்தினார்கள்.
కిన్తు తౌ ప్రస్థాయ తస్మిన్ కృత్స్నే దేశే తస్య కీర్త్తిం ప్రకాశయామాసతుః|
32 ௩௨ அவர்கள் புறப்பட்டுப்போகும்போது, பிசாசு பிடித்த ஊமையான ஒரு மனிதனை அவரிடம் கொண்டுவந்தார்கள்.
అపరం తౌ బహిర్యాత ఏతస్మిన్నన్తరే మనుజా ఏకం భూతగ్రస్తమూకం తస్య సమీపమ్ ఆనీతవన్తః|
33 ௩௩ பிசாசு துரத்தப்பட்டப்பின்பு ஊமையன் பேசினான். மக்கள் ஆச்சரியப்பட்டு: இஸ்ரவேலில் இப்படி ஒருபோதும் காணப்படவில்லை என்றார்கள்.
తేన భూతే త్యాజితే స మూకః కథాం కథయితుం ప్రారభత, తేన జనా విస్మయం విజ్ఞాయ కథయామాసుః, ఇస్రాయేలో వంశే కదాపి నేదృగదృశ్యత;
34 ௩௪ பரிசேயர்களோ: இவன் பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள்.
కిన్తు ఫిరూశినః కథయాఞ్చక్రుః భూతాధిపతినా స భూతాన్ త్యాజయతి|
35 ௩௫ பின்பு, இயேசு எல்லாப் பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கித்து, மக்களுக்கு உண்டாயிருந்த எல்லா வியாதிகளையும் எல்லா நோய்களையும் நீக்கி, அவர்களைச் சுகமாக்கினார்.
తతః పరం యీశుస్తేషాం భజనభవన ఉపదిశన్ రాజ్యస్య సుసంవాదం ప్రచారయన్ లోకానాం యస్య య ఆమయో యా చ పీడాసీత్, తాన్ శమయన్ శమయంశ్చ సర్వ్వాణి నగరాణి గ్రామాంశ్చ బభ్రామ|
36 ௩௬ அவர் திரளான மக்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போல சோர்ந்துபோனவர்களும் திக்கற்றவர்களுமாக இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி,
అన్యఞ్చ మనుజాన్ వ్యాకులాన్ అరక్షకమేషానివ చ త్యక్తాన్ నిరీక్ష్య తేషు కారుణికః సన్ శిష్యాన్ అవదత్,
37 ௩௭ தம்முடைய சீடர்களைப் பார்த்து: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்;
శస్యాని ప్రచురాణి సన్తి, కిన్తు ఛేత్తారః స్తోకాః|
38 ௩௮ ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றார்.
క్షేత్రం ప్రత్యపరాన్ ఛేదకాన్ ప్రహేతుం శస్యస్వామినం ప్రార్థయధ్వమ్|