< மத்தேயு 9 >

1 அப்பொழுது, அவர் படகில் ஏறி, இக்கரையில் உள்ள தம்முடைய பட்டணத்திற்கு வந்தார்.
អនន្តរំ យីឝុ រ្នៅកាមារុហ្យ បុនះ បារមាគត្យ និជគ្រាមម៑ អាយយៅ។
2 அங்கே படுக்கையிலே கிடந்த ஒரு பக்கவாதக்காரனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, பக்கவாதக்காரனைப் பார்த்து: மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
តតះ កតិបយា ជនា ឯកំ បក្ឞាឃាតិនំ ស្វដ្ដោបរិ ឝាយយិត្វា តត្សមីបម៑ អានយន៑; តតោ យីឝុស្តេឞាំ ប្រតីតិំ វិជ្ញាយ តំ បក្ឞាឃាតិនំ ជគាទ, ហេ បុត្រ, សុស្ថិរោ ភវ, តវ កលុឞស្យ មឞ៌ណំ ជាតម៑។
3 அப்பொழுது, வேதபண்டிதர்களில் சிலர்: இவன் தேவனை அவமதித்துப் பேசுகிறான் என்று தங்களுடைய உள்ளத்தில் சொல்லிக்கொண்டார்கள்.
តាំ កថាំ និឝម្យ កិយន្ត ឧបាធ្យាយា មនះសុ ចិន្តិតវន្ត ឯឞ មនុជ ឦឝ្វរំ និន្ទតិ។
4 இயேசு அவர்கள் நினைவுகளை அறிந்து: நீங்கள் உங்களுடைய இருதயங்களில் பொல்லாதவைகளைச் சிந்திக்கிறதென்ன?
តតះ ស តេឞាម៑ ឯតាទ្ឫឝីំ ចិន្តាំ វិជ្ញាយ កថិតវាន៑, យូយំ មនះសុ ក្ឫត ឯតាទ្ឫឝីំ កុចិន្តាំ កុរុថ?
5 உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நட என்று சொல்வதோ, எது எளிது?
តវ បាបមឞ៌ណំ ជាតំ, យទ្វា ត្វមុត្ថាយ គច្ឆ, ទ្វយោរនយោ រ្វាក្យយោះ កិំ វាក្យំ វក្តុំ សុគមំ?
6 பூமியிலே பாவங்களை மன்னிக்க மனிதகுமாரனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, பக்கவாதக்காரனைப் பார்த்து: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டிற்குப் போ என்றார்.
កិន្តុ មេទិន្យាំ កលុឞំ ក្ឞមិតុំ មនុជសុតស្យ សាមត៌្ហ្យមស្តីតិ យូយំ យថា ជានីថ, តទត៌្ហំ ស តំ បក្ឞាឃាតិនំ គទិតវាន៑, ឧត្តិឞ្ឋ, និជឝយនីយំ អាទាយ គេហំ គច្ឆ។
7 உடனே அவன் எழுந்து, தன் வீட்டிற்குப்போனான்.
តតះ ស តត្ក្ឞណាទ៑ ឧត្ថាយ និជគេហំ ប្រស្ថិតវាន៑។
8 மக்கள் அதைக் கண்டு ஆச்சரியப்பட்டு, மனிதர்களுக்கு இப்படிப்பட்ட அதிகாரத்தைக் கொடுத்தவராகிய தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
មានវា ឥត្ថំ វិលោក្យ វិស្មយំ មេនិរេ, ឦឝ្វរេណ មានវាយ សាមត៌្ហ្យម៑ ឦទ្ឫឝំ ទត្តំ ឥតិ ការណាត៑ តំ ធន្យំ ពភាឞិរេ ច។
9 இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகும்போது, வரிவசூல் மையத்தில் உட்கார்ந்திருந்த மத்தேயு என்னும் ஒரு மனிதனைக் கண்டு: எனக்குப் பின்னே வா என்றார்; அவன் எழுந்து, அவருக்குப் பின்னேசென்றான்.
អនន្តរំ យីឝុស្តត្ស្ថានាទ៑ គច្ឆន៑ គច្ឆន៑ ករសំគ្រហស្ថានេ សមុបវិឞ្ដំ មថិនាមានម៑ ឯកំ មនុជំ វិលោក្យ តំ ពភាឞេ, មម បឝ្ចាទ៑ អាគច្ឆ, តតះ ស ឧត្ថាយ តស្យ បឝ្ចាទ៑ វវ្រាជ។
10 ௧0 பின்பு அவர் வீட்டிலே உணவுப் பந்தியிருக்கும்போது, அநேக வரி வசூலிப்பவர்களும் பாவிகளும் வந்து, இயேசுவோடும் அவருடைய சீடர்களோடும் பந்தியில் இருந்தார்கள்.
តតះ បរំ យីឝៅ គ្ឫហេ ភោក្តុម៑ ឧបវិឞ្ដេ ពហវះ ករសំគ្រាហិណះ កលុឞិណឝ្ច មានវា អាគត្យ តេន សាកំ តស្យ ឝិឞ្យៃឝ្ច សាកម៑ ឧបវិវិឝុះ។
11 ௧௧ பரிசேயர்கள் அதைக் கண்டு, அவருடைய சீடர்களைப் பார்த்து: உங்களுடைய போதகர் வரி வசூலிப்பவர்களோடும் பாவிகளோடும் உணவு சாப்பிடுகிறது ஏன் என்று கேட்டார்கள்.
ផិរូឝិនស្តទ៑ ទ្ឫឞ្ដ្វា តស្យ ឝិឞ្យាន៑ ពភាឞិរេ, យុឞ្មាកំ គុរុះ កិំ និមិត្តំ ករសំគ្រាហិភិះ កលុឞិភិឝ្ច សាកំ ភុំក្តេ?
12 ௧௨ இயேசு அதைக்கேட்டு: நோயாளிகளுக்குத்தான் வைத்தியன் தேவையேதவிர சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை.
យីឝុស្តត៑ ឝ្រុត្វា តាន៑ ប្រត្យវទត៑, និរាមយលោកានាំ ចិកិត្សកេន ប្រយោជនំ នាស្តិ, កិន្តុ សាមយលោកានាំ ប្រយោជនមាស្តេ។
13 ௧௩ பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.
អតោ យូយំ យាត្វា វចនស្យាស្យាត៌្ហំ ឝិក្ឞធ្វម៑, ទយាយាំ មេ យថា ប្រីតិ រ្ន តថា យជ្ញកម៌្មណិ។ យតោៜហំ ធាម៌្មិកាន៑ អាហ្វាតុំ នាគតោៜស្មិ កិន្តុ មនះ បរិវត៌្តយិតុំ បាបិន អាហ្វាតុម៑ អាគតោៜស្មិ។
14 ௧௪ அப்பொழுது, யோவானுடைய சீடர்கள் அவரிடம் வந்து: நாங்களும் பரிசேயர்களும் அநேகமுறை உபவாசிக்கிறோமே; உம்முடைய சீடர்கள் உபவாசிக்காமல் இருக்கிறது ஏன் என்று கேட்டார்கள்.
អនន្តរំ យោហនះ ឝិឞ្យាស្តស្យ សមីបម៑ អាគត្យ កថយាមាសុះ, ផិរូឝិនោ វយញ្ច បុនះ បុនរុបវសាមះ, កិន្តុ តវ ឝិឞ្យា នោបវសន្តិ, កុតះ?
15 ௧௫ அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடு இருக்கும்போது மணவாளனுடைய தோழர்கள் துயரப்படுவார்களா? மணவாளன் அவர்களைவிட்டுப் போகும் நாட்கள் வரும், அப்பொழுது உபவாசிப்பார்கள்.
តទា យីឝុស្តាន៑ អវោចត៑ យាវត៑ សខីនាំ សំង្គេ កន្យាយា វរស្តិឞ្ឋតិ, តាវត៑ កិំ តេ វិលាបំ កត៌្តុំ ឝក្លុវន្តិ? កិន្តុ យទា តេឞាំ សំង្គាទ៑ វរំ នយន្តិ, តាទ្ឫឝះ សមយ អាគមិឞ្យតិ, តទា តេ ឧបវត្ស្យន្តិ។
16 ௧௬ ஒருவனும் புதிய துணியை பழைய ஆடையோடு இணைக்கமாட்டான்; இணைத்தால், அதினோடு இணைத்த பழைய ஆடையை அது அதிகமாகக் கிழிக்கும், கீறலும் அதிகமாகும்.
បុរាតនវសនេ កោបិ នវីនវស្ត្រំ ន យោជយតិ, យស្មាត៑ តេន យោជិតេន បុរាតនវសនំ ឆិនត្តិ តច្ឆិទ្រញ្ច ពហុកុត្សិតំ ទ្ឫឝ្យតេ។
17 ௧௭ புதிய திராட்சைரசத்தைப் பழைய தோல் பைகளில் ஊற்றிவைக்கிறதும் இல்லை; ஊற்றிவைத்தால், தோல் பைகள் கிழிந்துபோகும், இரசமும் சிந்திப்போகும், தோல் பைகளும் கெட்டுப்போகும்; புதிய இரசத்தைப் புதிய தோல் பைகளில் ஊற்றிவைப்பார்கள், அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும் என்றார்.
អន្យញ្ច បុរាតនកុត្វាំ កោបិ នវានគោស្តនីរសំ ន និទធាតិ, យស្មាត៑ តថា ក្ឫតេ កុតូ រ្វិទីយ៌្យតេ តេន គោស្តនីរសះ បតតិ កុតូឝ្ច នឝ្យតិ; តស្មាត៑ នវីនាយាំ កុត្វាំ នវីនោ គោស្តនីរសះ ស្ថាប្យតេ, តេន ទ្វយោរវនំ ភវតិ។
18 ௧௮ அவர் இவைகளை அவர்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கும்போது, தலைவன் ஒருவன் வந்து அவரை வணங்கி: என் மகள் இப்பொழுதுதான் இறந்துபோனாள்; ஆனாலும், நீர் வந்து அவள்மேல் உமது கையை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்றான்.
អបរំ តេនៃតត្កថាកថនកាលេ ឯកោៜធិបតិស្តំ ប្រណម្យ ពភាឞេ, មម ទុហិតា ប្រាយេណៃតាវត្កាលេ ម្ឫតា, តស្មាទ៑ ភវានាគត្យ តស្យា គាត្រេ ហស្តមប៌យតុ, តេន សា ជីវិឞ្យតិ។
19 ௧௯ இயேசு எழுந்து, தம்முடைய சீடர்களோடுகூட அவன் பின்னே போனார்.
តទានីំ យីឝុះ ឝិឞ្យៃះ សាកម៑ ឧត្ថាយ តស្យ បឝ្ចាទ៑ វវ្រាជ។
20 ௨0 அப்பொழுது, பன்னிரண்டு வருடங்களாக இரத்தப்போக்கினாலே கஷ்டப்படும் ஒரு பெண்:
ឥត្យនន្តរេ ទ្វាទឝវត្សរាន៑ យាវត៑ ប្រទរាមយេន ឝីណ៌ៃកា នារី តស្យ បឝ្ចាទ៑ អាគត្យ តស្យ វសនស្យ គ្រន្ថិំ បស្បឝ៌;
21 ௨௧ நான் அவருடைய ஆடையையாவது தொட்டால் சுகமாவேன் என்று தன் உள்ளத்தில் எண்ணிக்கொண்டு, அவர் பின்னாலே வந்து, அவருடைய ஆடையின் ஓரத்தைத் தொட்டாள்.
យស្មាត៑ មយា កេវលំ តស្យ វសនំ ស្ប្ឫឞ្ដ្វា ស្វាស្ថ្យំ ប្រាប្ស្យតេ, សា នារីតិ មនសិ និឝ្ចិតវតី។
22 ௨௨ இயேசு திரும்பி, அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். அந்தநேரத்திலேயே அந்தப் பெண் சுகமானாள்.
តតោ យីឝុវ៌ទនំ បរាវត៌្ត្យ តាំ ជគាទ, ហេ កន្យេ, ត្វំ សុស្ថិរា ភវ, តវ វិឝ្វាសស្ត្វាំ ស្វស្ថាមកាឞ៌ីត៑។ ឯតទ្វាក្យេ គទិតឯវ សា យោឞិត៑ ស្វស្ថាភូត៑។
23 ௨௩ இயேசுவானவர் அந்தத் தலைவனுடைய வீட்டிற்கு வந்து, சங்கு ஊதுகிறவர்களையும், ஒப்பாரி வைக்கிற மக்களையும் கண்டு:
អបរំ យីឝុស្តស្យាធ្យក្ឞស្យ គេហំ គត្វា វាទកប្រភ្ឫតីន៑ ពហូន៑ លោកាន៑ ឝព្ទាយមានាន៑ វិលោក្យ តាន៑ អវទត៑,
24 ௨௪ விலகுங்கள், இந்த சிறுபெண் இறக்கவில்லை, தூங்கிக்கொண்டிருக்கிறாள் என்றார். அதற்காக அவரைப் பார்த்து ஏளனம் செய்தார்கள்.
បន្ថានំ ត្យជ, កន្យេយំ នាម្រិយត និទ្រិតាស្តេ; កថាមេតាំ ឝ្រុត្វា តេ តមុបជហសុះ។
25 ௨௫ மக்கள் வெளியே அனுப்பப்பட்டப்பின்பு, அவர் உள்ளே பிரவேசித்து, அந்தச் சிறுபெண்ணின் கையைப் பிடித்தார்; உடனே அவள் எழுந்திருந்தாள்.
កិន្តុ សវ៌្វេឞុ ពហិឞ្ក្ឫតេឞុ សោៜភ្យន្តរំ គត្វា កន្យាយាះ ករំ ធ្ឫតវាន៑, តេន សោទតិឞ្ឋត៑;
26 ௨௬ இந்தச் செய்தி அந்த நாடெங்கும் பிரசித்தமானது.
តតស្តត្កម៌្មណោ យឝះ ក្ឫត្ស្នំ តំ ទេឝំ វ្យាប្តវត៑។
27 ௨௭ இயேசு அந்த இடத்தைவிட்டுப் போகும்போது, இரண்டு குருடர்கள் அவருக்குப் பின்னேசென்று: தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள்.
តតះ បរំ យីឝុស្តស្មាត៑ ស្ថានាទ៑ យាត្រាំ ចការ; តទា ហេ ទាយូទះ សន្តាន, អស្មាន៑ ទយស្វ, ឥតិ វទន្តៅ ទ្វៅ ជនាវន្ធៅ ប្រោចៃរាហូយន្តៅ តត្បឝ្ចាទ៑ វវ្រជតុះ។
28 ௨௮ அவர் வீட்டிற்கு வந்தபின்பு, அந்தக் குருடர்கள் அவரிடத்தில் வந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: இதைச்செய்ய எனக்கு வல்லமை உண்டு என்று விசுவாசிக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம் விசுவாசிக்கிறோம் ஆண்டவரே! என்றார்கள்.
តតោ យីឝៅ គេហមធ្យំ ប្រវិឞ្ដំ តាវបិ តស្យ សមីបម៑ ឧបស្ថិតវន្តៅ, តទានីំ ស តៅ ប្ឫឞ្ដវាន៑ កម៌្មៃតត៑ កត៌្តុំ មម សាមត៌្ហ្យម៑ អាស្តេ, យុវាំ កិមិតិ ប្រតីថះ? តទា តៅ ប្រត្យូចតុះ, សត្យំ ប្រភោ។
29 ௨௯ அப்பொழுது, அவர்களுடைய கண்களை அவர் தொட்டு: உங்களுடைய விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது என்றார்.
តទានីំ ស តយោ រ្លោចនានិ ស្ប្ឫឝន៑ ពភាឞេ, យុវយោះ ប្រតីត្យនុសារាទ៑ យុវយោ រ្មង្គលំ ភូយាត៑។ តេន តត្ក្ឞណាត៑ តយោ រ្នេត្រាណិ ប្រសន្នាន្យភវន៑,
30 ௩0 உடனே அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டது. இதை ஒருவரும் அறியாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள் என்று இயேசு அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்.
បឝ្ចាទ៑ យីឝុស្តៅ ទ្ឫឍមាជ្ញាប្យ ជគាទ, អវធត្តម៑ ឯតាំ កថាំ កោបិ មនុជោ ម ជានីយាត៑។
31 ௩௧ அவர்களோ புறப்பட்டு, அந்த நாடெங்கும் அவருடைய புகழைப் பிரசித்தப்படுத்தினார்கள்.
កិន្តុ តៅ ប្រស្ថាយ តស្មិន៑ ក្ឫត្ស្នេ ទេឝេ តស្យ កីត៌្តិំ ប្រកាឝយាមាសតុះ។
32 ௩௨ அவர்கள் புறப்பட்டுப்போகும்போது, பிசாசு பிடித்த ஊமையான ஒரு மனிதனை அவரிடம் கொண்டுவந்தார்கள்.
អបរំ តៅ ពហិយ៌ាត ឯតស្មិន្នន្តរេ មនុជា ឯកំ ភូតគ្រស្តមូកំ តស្យ សមីបម៑ អានីតវន្តះ។
33 ௩௩ பிசாசு துரத்தப்பட்டப்பின்பு ஊமையன் பேசினான். மக்கள் ஆச்சரியப்பட்டு: இஸ்ரவேலில் இப்படி ஒருபோதும் காணப்படவில்லை என்றார்கள்.
តេន ភូតេ ត្យាជិតេ ស មូកះ កថាំ កថយិតុំ ប្រារភត, តេន ជនា វិស្មយំ វិជ្ញាយ កថយាមាសុះ, ឥស្រាយេលោ វំឝេ កទាបិ នេទ្ឫគទ្ឫឝ្យត;
34 ௩௪ பரிசேயர்களோ: இவன் பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள்.
កិន្តុ ផិរូឝិនះ កថយាញ្ចក្រុះ ភូតាធិបតិនា ស ភូតាន៑ ត្យាជយតិ។
35 ௩௫ பின்பு, இயேசு எல்லாப் பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கித்து, மக்களுக்கு உண்டாயிருந்த எல்லா வியாதிகளையும் எல்லா நோய்களையும் நீக்கி, அவர்களைச் சுகமாக்கினார்.
តតះ បរំ យីឝុស្តេឞាំ ភជនភវន ឧបទិឝន៑ រាជ្យស្យ សុសំវាទំ ប្រចារយន៑ លោកានាំ យស្យ យ អាមយោ យា ច បីឌាសីត៑, តាន៑ ឝមយន៑ ឝមយំឝ្ច សវ៌្វាណិ នគរាណិ គ្រាមាំឝ្ច ពភ្រាម។
36 ௩௬ அவர் திரளான மக்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போல சோர்ந்துபோனவர்களும் திக்கற்றவர்களுமாக இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி,
អន្យញ្ច មនុជាន៑ វ្យាកុលាន៑ អរក្ឞកមេឞានិវ ច ត្យក្តាន៑ និរីក្ឞ្យ តេឞុ ការុណិកះ សន៑ ឝិឞ្យាន៑ អវទត៑,
37 ௩௭ தம்முடைய சீடர்களைப் பார்த்து: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்;
ឝស្យានិ ប្រចុរាណិ សន្តិ, កិន្តុ ឆេត្តារះ ស្តោកាះ។
38 ௩௮ ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றார்.
ក្ឞេត្រំ ប្រត្យបរាន៑ ឆេទកាន៑ ប្រហេតុំ ឝស្យស្វាមិនំ ប្រាត៌្ហយធ្វម៑។

< மத்தேயு 9 >