< மத்தேயு 7 >

1 நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காமலிருங்கள்.
ಯಥಾ ಯೂಯಂ ದೋಷೀಕೃತಾ ನ ಭವಥ, ತತ್ಕೃತೇಽನ್ಯಂ ದೋಷಿಣಂ ಮಾ ಕುರುತ|
2 ஏனென்றால், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.
ಯತೋ ಯಾದೃಶೇನ ದೋಷೇಣ ಯೂಯಂ ಪರಾನ್ ದೋಷಿಣಃ ಕುರುಥ, ತಾದೃಶೇನ ದೋಷೇಣ ಯೂಯಮಪಿ ದೋಷೀಕೃತಾ ಭವಿಷ್ಯಥ, ಅನ್ಯಞ್ಚ ಯೇನ ಪರಿಮಾಣೇನ ಯುಷ್ಮಾಭಿಃ ಪರಿಮೀಯತೇ, ತೇನೈವ ಪರಿಮಾಣೇನ ಯುಷ್ಮತ್ಕೃತೇ ಪರಿಮಾಯಿಷ್ಯತೇ|
3 நீ உன் கண்ணிலிருக்கிற பெரிய மரத்துண்டை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற சிறிய துரும்பைப் பார்க்கிறதென்ன?
ಅಪರಞ್ಚ ನಿಜನಯನೇ ಯಾ ನಾಸಾ ವಿದ್ಯತೇ, ತಾಮ್ ಅನಾಲೋಚ್ಯ ತವ ಸಹಜಸ್ಯ ಲೋಚನೇ ಯತ್ ತೃಣಮ್ ಆಸ್ತೇ, ತದೇವ ಕುತೋ ವೀಕ್ಷಸೇ?
4 இதோ, உன் கண்ணில் பெரிய மரத்துண்டு இருக்கும்போது உன் சகோதரனைப் பார்த்து: நான் உன் கண்ணிலிருக்கும் சிறிய துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி?
ತವ ನಿಜಲೋಚನೇ ನಾಸಾಯಾಂ ವಿದ್ಯಮಾನಾಯಾಂ, ಹೇ ಭ್ರಾತಃ, ತವ ನಯನಾತ್ ತೃಣಂ ಬಹಿಷ್ಯರ್ತುಂ ಅನುಜಾನೀಹಿ, ಕಥಾಮೇತಾಂ ನಿಜಸಹಜಾಯ ಕಥಂ ಕಥಯಿತುಂ ಶಕ್ನೋಷಿ?
5 மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற பெரிய மரத்துண்டை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரனுடைய கண்ணிலிருக்கிற சிறிய துரும்பை எடுத்துப்போடுவதற்கு உனக்கு தெளிவாகத் தெரியும்.
ಹೇ ಕಪಟಿನ್, ಆದೌ ನಿಜನಯನಾತ್ ನಾಸಾಂ ಬಹಿಷ್ಕುರು ತತೋ ನಿಜದೃಷ್ಟೌ ಸುಪ್ರಸನ್ನಾಯಾಂ ತವ ಭ್ರಾತೃ ರ್ಲೋಚನಾತ್ ತೃಣಂ ಬಹಿಷ್ಕರ್ತುಂ ಶಕ್ಷ್ಯಸಿ|
6 பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடுக்காதீர்கள்; உங்களுடைய முத்துக்களைப் பன்றிகள்முன் போடாதீர்கள்; போட்டால் தங்களுடைய கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும்.
ಅನ್ಯಞ್ಚ ಸಾರಮೇಯೇಭ್ಯಃ ಪವಿತ್ರವಸ್ತೂನಿ ಮಾ ವಿತರತ, ವರಾಹಾಣಾಂ ಸಮಕ್ಷಞ್ಚ ಮುಕ್ತಾ ಮಾ ನಿಕ್ಷಿಪತ; ನಿಕ್ಷೇಪಣಾತ್ ತೇ ತಾಃ ಸರ್ವ್ವಾಃ ಪದೈ ರ್ದಲಯಿಷ್ಯನ್ತಿ, ಪರಾವೃತ್ಯ ಯುಷ್ಮಾನಪಿ ವಿದಾರಯಿಷ್ಯನ್ತಿ|
7 கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்;
ಯಾಚಧ್ವಂ ತತೋ ಯುಷ್ಮಭ್ಯಂ ದಾಯಿಷ್ಯತೇ; ಮೃಗಯಧ್ವಂ ತತ ಉದ್ದೇಶಂ ಲಪ್ಸ್ಯಧ್ವೇ; ದ್ವಾರಮ್ ಆಹತ, ತತೋ ಯುಷ್ಮತ್ಕೃತೇ ಮುಕ್ತಂ ಭವಿಷ್ಯತಿ|
8 ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.
ಯಸ್ಮಾದ್ ಯೇನ ಯಾಚ್ಯತೇ, ತೇನ ಲಭ್ಯತೇ; ಯೇನ ಮೃಗ್ಯತೇ ತೇನೋದ್ದೇಶಃ ಪ್ರಾಪ್ಯತೇ; ಯೇನ ಚ ದ್ವಾರಮ್ ಆಹನ್ಯತೇ, ತತ್ಕೃತೇ ದ್ವಾರಂ ಮೋಚ್ಯತೇ|
9 உங்களில் எந்த மனிதனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா?
ಆತ್ಮಜೇನ ಪೂಪೇ ಪ್ರಾರ್ಥಿತೇ ತಸ್ಮೈ ಪಾಷಾಣಂ ವಿಶ್ರಾಣಯತಿ,
10 ௧0 மீனைக்கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா?
ಮೀನೇ ಯಾಚಿತೇ ಚ ತಸ್ಮೈ ಭುಜಗಂ ವಿತರತಿ, ಏತಾದೃಶಃ ಪಿತಾ ಯುಷ್ಮಾಕಂ ಮಧ್ಯೇ ಕ ಆಸ್ತೇ?
11 ௧௧ ஆகவே, பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்களுடைய பிள்ளைகளுக்கு நல்ல பரிசுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?
ತಸ್ಮಾದ್ ಯೂಯಮ್ ಅಭದ್ರಾಃ ಸನ್ತೋಽಪಿ ಯದಿ ನಿಜಬಾಲಕೇಭ್ಯ ಉತ್ತಮಂ ದ್ರವ್ಯಂ ದಾತುಂ ಜಾನೀಥ, ತರ್ಹಿ ಯುಷ್ಮಾಕಂ ಸ್ವರ್ಗಸ್ಥಃ ಪಿತಾ ಸ್ವೀಯಯಾಚಕೇಭ್ಯಃ ಕಿಮುತ್ತಮಾನಿ ವಸ್ತೂನಿ ನ ದಾಸ್ಯತಿ?
12 ௧௨ ஆதலால், மனிதர்கள் உங்களுக்கு எவைகளைச் செய்யவிரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம்.
ಯೂಷ್ಮಾನ್ ಪ್ರತೀತರೇಷಾಂ ಯಾದೃಶೋ ವ್ಯವಹಾರೋ ಯುಷ್ಮಾಕಂ ಪ್ರಿಯಃ, ಯೂಯಂ ತಾನ್ ಪ್ರತಿ ತಾದೃಶಾನೇವ ವ್ಯವಹಾರಾನ್ ವಿಧತ್ತ; ಯಸ್ಮಾದ್ ವ್ಯವಸ್ಥಾಭವಿಷ್ಯದ್ವಾದಿನಾಂ ವಚನಾನಾಮ್ ಇತಿ ಸಾರಮ್|
13 ௧௩ குறுகின வாசல்வழியாக உள்ளே பிரவேசியுங்கள்; அழிவிற்குப்போகிற வாசல் அகலமும், வழி விசாலமுமாக இருக்கிறது; அதின்வழியாக பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.
ಸಙ್ಕೀರ್ಣದ್ವಾರೇಣ ಪ್ರವಿಶತ; ಯತೋ ನರಕಗಮನಾಯ ಯದ್ ದ್ವಾರಂ ತದ್ ವಿಸ್ತೀರ್ಣಂ ಯಚ್ಚ ವರ್ತ್ಮ ತದ್ ಬೃಹತ್ ತೇನ ಬಹವಃ ಪ್ರವಿಶನ್ತಿ|
14 ௧௪ ஜீவனுக்குப்போகிற வாசல் குறுகினதும், வழி நெருக்கமுமாக இருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.
ಅಪರಂ ಸ್ವರ್ಗಗಮನಾಯ ಯದ್ ದ್ವಾರಂ ತತ್ ಕೀದೃಕ್ ಸಂಕೀರ್ಣಂ| ಯಚ್ಚ ವರ್ತ್ಮ ತತ್ ಕೀದೃಗ್ ದುರ್ಗಮಮ್| ತದುದ್ದೇಷ್ಟಾರಃ ಕಿಯನ್ತೋಽಲ್ಪಾಃ|
15 ௧௫ கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாக இருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடம் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பேராசையுள்ள ஓநாய்கள்.
ಅಪರಞ್ಚ ಯೇ ಜನಾ ಮೇಷವೇಶೇನ ಯುಷ್ಮಾಕಂ ಸಮೀಪಮ್ ಆಗಚ್ಛನ್ತಿ, ಕಿನ್ತ್ವನ್ತರ್ದುರನ್ತಾ ವೃಕಾ ಏತಾದೃಶೇಭ್ಯೋ ಭವಿಷ್ಯದ್ವಾದಿಭ್ಯಃ ಸಾವಧಾನಾ ಭವತ, ಯೂಯಂ ಫಲೇನ ತಾನ್ ಪರಿಚೇತುಂ ಶಕ್ನುಥ|
16 ௧௬ அவர்களுடைய செயல்களினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சைப் பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா?
ಮನುಜಾಃ ಕಿಂ ಕಣ್ಟಕಿನೋ ವೃಕ್ಷಾದ್ ದ್ರಾಕ್ಷಾಫಲಾನಿ ಶೃಗಾಲಕೋಲಿತಶ್ಚ ಉಡುಮ್ಬರಫಲಾನಿ ಶಾತಯನ್ತಿ?
17 ௧௭ அப்படியே நல்லமரமெல்லாம் நல்லகனிகளைக் கொடுக்கும்; கெட்டமரமோ கெட்டகனிகளைக் கொடுக்கும்.
ತದ್ವದ್ ಉತ್ತಮ ಏವ ಪಾದಪ ಉತ್ತಮಫಲಾನಿ ಜನಯತಿ, ಅಧಮಪಾದಪಏವಾಧಮಫಲಾನಿ ಜನಯತಿ|
18 ௧௮ நல்லமரம் கெட்டகனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்டமரம் நல்லகனிகளைக் கொடுக்கமாட்டாது.
ಕಿನ್ತೂತ್ತಮಪಾದಪಃ ಕದಾಪ್ಯಧಮಫಲಾನಿ ಜನಯಿತುಂ ನ ಶಕ್ನೋತಿ, ತಥಾಧಮೋಪಿ ಪಾದಪ ಉತ್ತಮಫಲಾನಿ ಜನಯಿತುಂ ನ ಶಕ್ನೋತಿ|
19 ௧௯ நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, நெருப்பிலே போடப்படும்.
ಅಪರಂ ಯೇ ಯೇ ಪಾದಪಾ ಅಧಮಫಲಾನಿ ಜನಯನ್ತಿ, ತೇ ಕೃತ್ತಾ ವಹ್ನೌ ಕ್ಷಿಪ್ಯನ್ತೇ|
20 ௨0 ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.
ಅತಏವ ಯೂಯಂ ಫಲೇನ ತಾನ್ ಪರಿಚೇಷ್ಯಥ|
21 ௨௧ பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் விருப்பத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னைப் பார்த்து: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
ಯೇ ಜನಾ ಮಾಂ ಪ್ರಭುಂ ವದನ್ತಿ, ತೇ ಸರ್ವ್ವೇ ಸ್ವರ್ಗರಾಜ್ಯಂ ಪ್ರವೇಕ್ಷ್ಯನ್ತಿ ತನ್ನ, ಕಿನ್ತು ಯೋ ಮಾನವೋ ಮಮ ಸ್ವರ್ಗಸ್ಥಸ್ಯ ಪಿತುರಿಷ್ಟಂ ಕರ್ಮ್ಮ ಕರೋತಿ ಸ ಏವ ಪ್ರವೇಕ್ಷ್ಯತಿ|
22 ௨௨ அந்த நாளில் அநேகர் என்னைப் பார்த்து: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் சொன்னோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.
ತದ್ ದಿನೇ ಬಹವೋ ಮಾಂ ವದಿಷ್ಯನ್ತಿ, ಹೇ ಪ್ರಭೋ ಹೇ ಪ್ರಭೋ, ತವ ನಾಮ್ನಾ ಕಿಮಸ್ಮಾಮಿ ರ್ಭವಿಷ್ಯದ್ವಾಕ್ಯಂ ನ ವ್ಯಾಹೃತಂ? ತವ ನಾಮ್ನಾ ಭೂತಾಃ ಕಿಂ ನ ತ್ಯಾಜಿತಾಃ? ತವ ನಾಮ್ನಾ ಕಿಂ ನಾನಾದ್ಭುತಾನಿ ಕರ್ಮ್ಮಾಣಿ ನ ಕೃತಾನಿ?
23 ௨௩ அப்பொழுது, நான் ஒருபோதும் உங்களை அறியவில்லை; அக்கிரமச்செய்கைக்காரர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
ತದಾಹಂ ವದಿಷ್ಯಾಮಿ, ಹೇ ಕುಕರ್ಮ್ಮಕಾರಿಣೋ ಯುಷ್ಮಾನ್ ಅಹಂ ನ ವೇದ್ಮಿ, ಯೂಯಂ ಮತ್ಸಮೀಪಾದ್ ದೂರೀಭವತ|
24 ௨௪ ஆகவே, நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனிதனுக்கு ஒப்பிடுவேன்.
ಯಃ ಕಶ್ಚಿತ್ ಮಮೈತಾಃ ಕಥಾಃ ಶ್ರುತ್ವಾ ಪಾಲಯತಿ, ಸ ಪಾಷಾಣೋಪರಿ ಗೃಹನಿರ್ಮ್ಮಾತ್ರಾ ಜ್ಞಾನಿನಾ ಸಹ ಮಯೋಪಮೀಯತೇ|
25 ௨௫ பெருமழை பெய்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.
ಯತೋ ವೃಷ್ಟೌ ಸತ್ಯಾಮ್ ಆಪ್ಲಾವ ಆಗತೇ ವಾಯೌ ವಾತೇ ಚ ತೇಷು ತದ್ಗೇಹಂ ಲಗ್ನೇಷು ಪಾಷಾಣೋಪರಿ ತಸ್ಯ ಭಿತ್ತೇಸ್ತನ್ನ ಪತತಿ
26 ௨௬ நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனிதனுக்கு ஒப்பிடப்படுவான்.
ಕಿನ್ತು ಯಃ ಕಶ್ಚಿತ್ ಮಮೈತಾಃ ಕಥಾಃ ಶ್ರುತ್ವಾ ನ ಪಾಲಯತಿ ಸ ಸೈಕತೇ ಗೇಹನಿರ್ಮ್ಮಾತ್ರಾ ಽಜ್ಞಾನಿನಾ ಉಪಮೀಯತೇ|
27 ௨௭ பெருமழை பெய்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்.
ಯತೋ ಜಲವೃಷ್ಟೌ ಸತ್ಯಾಮ್ ಆಪ್ಲಾವ ಆಗತೇ ಪವನೇ ವಾತೇ ಚ ತೈ ರ್ಗೃಹೇ ಸಮಾಘಾತೇ ತತ್ ಪತತಿ ತತ್ಪತನಂ ಮಹದ್ ಭವತಿ|
28 ௨௮ இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லிமுடித்தபோது, அவர் வேதபண்டிதர்களைப்போல போதிக்காமல், அதிகாரமுடையவராக அவர்களுக்குப் போதித்ததினால்,
ಯೀಶುನೈತೇಷು ವಾಕ್ಯೇಷು ಸಮಾಪಿತೇಷು ಮಾನವಾಸ್ತದೀಯೋಪದೇಶಮ್ ಆಶ್ಚರ್ಯ್ಯಂ ಮೇನಿರೇ|
29 ௨௯ மக்கள் அவருடைய போதனையைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
ಯಸ್ಮಾತ್ ಸ ಉಪಾಧ್ಯಾಯಾ ಇವ ತಾನ್ ನೋಪದಿದೇಶ ಕಿನ್ತು ಸಮರ್ಥಪುರುಷಇವ ಸಮುಪದಿದೇಶ|

< மத்தேயு 7 >