< மத்தேயு 7 >

1 நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காமலிருங்கள்.
“दोष मत लगाओ, ताकि तुसा पाँदे बी दोष नि लगाया जाओ।
2 ஏனென்றால், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.
कऊँकि जिंयाँ तुसे दोष लगाओए, तिंयाँ ई परमेशरो तुसा पाँदे बी दोष लगाणा और जेड़ा बर्ताव तुसे लोका साथे करोए परमेशरो बी तेड़ा ई बर्ताव तुसा साथे करना।
3 நீ உன் கண்ணிலிருக்கிற பெரிய மரத்துண்டை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற சிறிய துரும்பைப் பார்க்கிறதென்ன?
“तूँ कऊँ आपणे पाईए री छोटी-छोटी गल़तिया टोल़ेया तांदे आपणिया बड़ी-बड़ी गल़तिया नजर कऊँ नि आँऊदिया?
4 இதோ, உன் கண்ணில் பெரிய மரத்துண்டு இருக்கும்போது உன் சகோதரனைப் பார்த்து: நான் உன் கண்ணிலிருக்கும் சிறிய துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி?
जेबे तांदे आपू दे बड़ी-बड़ी गल़तिया ए, तो तूँ आपणे पाईए खे किंयाँ बोली सकेया, ‘तूँ गल़त ए?’
5 மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற பெரிய மரத்துண்டை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரனுடைய கண்ணிலிருக்கிற சிறிய துரும்பை எடுத்துப்போடுவதற்கு உனக்கு தெளிவாகத் தெரியும்.
ओ कपटी! पईले आपणी बड़ी-बड़ी गल़तिया देख, तेबेई तो तूँ आपणे पाईए री गल़तिया ठीक-टंगो रे देखी की निकयाल़ी सकेया।
6 பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடுக்காதீர்கள்; உங்களுடைய முத்துக்களைப் பன்றிகள்முன் போடாதீர்கள்; போட்டால் தங்களுடைய கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும்.
“पवित्र चीज कुत्तेया खे नि देओ और आपणे मोती सूंअरो रे आगे नि सेटो, एड़ा नि ओ कि सेयो तिना खे आपणे पैरा निठे केसी देयो और ताखे खाणे पड़ो।
7 கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்;
“तुसा री जो बी जरूरत ए से परमेशरो ते माँगो और परमेशरो ते पाणे री उम्मीद बी राखो।
8 ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.
कऊँकि जो कोई माँगोआ तेसखे मिलोआ। जो टोल़ोआ, से पाओआ। जो खटखटाओआ तेसखे खोलेया जाओआ।
9 உங்களில் எந்த மனிதனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா?
तुसा बीचा ते कुण एड़ा मांणू ए कि तेसरा पाऊ तेसते रोटी मांगोगा और से तेसखे पात्थर देओ?
10 ௧0 மீனைக்கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா?
या मछली माँगो और तेसखे साप देओ?
11 ௧௧ ஆகவே, பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்களுடைய பிள்ளைகளுக்கு நல்ல பரிசுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?
तो तेबे तुसे बुरे ऊई की आपणे बच्चेया खे खरी चीजा देणा जाणोए, तो तुसा रे स्वर्गिय पिते आपणे मांगणे वाल़ेया खे अच्छी चीजा कऊँ नि देणियां?
12 ௧௨ ஆதலால், மனிதர்கள் உங்களுக்கு எவைகளைச் செய்யவிரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம்.
इजी बजअ ते जो कुछ तुसे चाओए कि मांणू तुसा साथे करो, तुसे बी तिना साथे तेड़ा ई करो, कऊँकि मूसे रा बिधान और भविष्यबक्तेया री येई शिक्षा ए।
13 ௧௩ குறுகின வாசல்வழியாக உள்ளே பிரவேசியுங்கள்; அழிவிற்குப்போகிற வாசல் அகலமும், வழி விசாலமுமாக இருக்கிறது; அதின்வழியாக பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.
“स्वर्गो रे परमेशरो तक पऊँछणे री बाट बऊत कठण ए। पर एते बाटा रिये तुसा चलणा ईए। एक और चौड़ी बाट ए जिदे जादातर लोक चलणा पसंद करोए, से बाट नरको खे जाओई और लोक तिदे मरी जाणे। (questioned)
14 ௧௪ ஜீவனுக்குப்போகிற வாசல் குறுகினதும், வழி நெருக்கமுமாக இருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.
कऊँकि संगड़ा ए से फाटक और कठण ए से बाट, जो अनन्त जिन्दगिया खे पऊँछाओई और सेयो थोड़े ईए, जिना खे से मिलोई।
15 ௧௫ கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாக இருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடம் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பேராசையுள்ள ஓநாய்கள்.
“चूठे भविष्यबक्तेया ते सावधान रओ, जो पेडा रे पेषो रे तुसा गे आओए, पर पीतरो ते सेयो फाड़ने वाल़े भेड़िए ओए।
16 ௧௬ அவர்களுடைய செயல்களினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சைப் பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா?
तिना रे बुरे कामो ते तुसा सेयो पछयाणी लणे, क्या जाड़ो रे अँगूर और कांडेया ते दाऊगल़े तोड़े जाओए?
17 ௧௭ அப்படியே நல்லமரமெல்லாம் நல்லகனிகளைக் கொடுக்கும்; கெட்டமரமோ கெட்டகனிகளைக் கொடுக்கும்.
तिंयाँ ई हर एक अच्छा डाल़ अच्छा फल ल्याओआ और नकम्मा डाल़ बुरा फल।
18 ௧௮ நல்லமரம் கெட்டகனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்டமரம் நல்லகனிகளைக் கொடுக்கமாட்டாது.
अच्छा डाल़ बुरा फल नि ल्याई सकदा और ना नकम्मा डाल़ अच्छा फल ल्याई सकदा।
19 ௧௯ நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, நெருப்பிலே போடப்படும்.
जिंयाँ जो-जो डाल़ अच्छा फल नि ल्याऊँदे, सेयो बाडे जाओए और आगी बीचे सेटे जाओए। तिंयाँ ई चूठे भविष्यवक्ता बी नरको री आगी रे सेटे जाणे। (questioned)
20 ௨0 ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.
ईंयां तिना रे कामो ते तुसा सेयो पछयाणी लणे।
21 ௨௧ பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் விருப்பத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னைப் பார்த்து: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
“जो माखे, ‘ओ प्रभु, ओ प्रभु’ बोलोआ, तिना बीचा ते हर एक स्वर्गो रे राज्य रे नि जाणा, पर सेई, जो-जो मेरे स्वर्गिय पिते री इच्छा पाँदे चलोआ।
22 ௨௨ அந்த நாளில் அநேகர் என்னைப் பார்த்து: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் சொன்னோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.
न्याय रे तेस दिने बऊत मांणूआ माखे बोलणा, ‘ओ प्रभु, ओ प्रभु, क्या आसे तेरे नाओं ते भविष्यबाणी नि कित्ती, और तेरे नाओं ते दुष्टात्मा नि निकयाल़िया, और तेरे नाओं ते बऊत सामर्था रे काम नि कित्ते?’
23 ௨௩ அப்பொழுது, நான் ஒருபோதும் உங்களை அறியவில்லை; அக்கிரமச்செய்கைக்காரர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
तेबे मां तिना खे खुली की बोली देणा, ‘आऊँ तो तुसा खे कदी नि जाणदा। ओ कुकर्म करने वाल़ेयो, मांगा गे ते चली जाओ।’
24 ௨௪ ஆகவே, நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனிதனுக்கு ஒப்பிடுவேன்.
“इजी री खातर जो कोई मेरिया गल्ला सुणी की तिना खे मानोआ, से तेस अक्लमंद मांणूए जेड़ा ऊणा, जिने आपणा कअर चट्टानी पाँदे बणाया।
25 ௨௫ பெருமழை பெய்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.
तेबे बरखा उईया, बाढ़ा आईया और तूफान चले, और तेस कअरो रे टकराए, पर से कअर नि टल़ेया, कऊँकि तिजी री निऊँ चट्टानी पाँदे थी बणाई री।
26 ௨௬ நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனிதனுக்கு ஒப்பிடப்படுவான்.
पर जो कोई मेरी इना गल्ला तो सुणोआ, पर मानदा नि, से तेस मूर्ख मांणूए जेड़ा ऊणा, जिने आपणा कअर बालूए पाँदे बणाया।
27 ௨௭ பெருமழை பெய்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்.
जेबे बरखा ऊईया, बाढ़ा आईया, तूफान चले और तेस कअरो साथे टकराए और से कअर तेबुई टल़ीगा और सत्यानाश ऊईगा।”
28 ௨௮ இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லிமுடித்தபோது, அவர் வேதபண்டிதர்களைப்போல போதிக்காமல், அதிகாரமுடையவராக அவர்களுக்குப் போதித்ததினால்,
जेबे यीशु इना गल्ला करी चुके, तो एड़ा ऊआ कि जो तेती पीड़ थी, से हैरान उईगी।
29 ௨௯ மக்கள் அவருடைய போதனையைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
कऊँकि सेयो तिना शास्त्रिया जेड़े नि, पर अक्को साथे उपदेश देयो थे।

< மத்தேயு 7 >