< மத்தேயு 7 >
1 ௧ நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காமலிருங்கள்.
“Mũtigaciirithanagie nĩgeetha na inyuĩ mũtikanaciirithio.
2 ௨ ஏனென்றால், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.
Nĩgũkorwo o ta ũrĩa mũtuagĩra andũ arĩa angĩ ciira, noguo na inyuĩ mũgaatuĩrwo ciira, na gĩthimi kĩrĩa mũthimanagĩra nakĩo, no kĩo mũrĩthimagĩrwo nakĩo.
3 ௩ நீ உன் கண்ணிலிருக்கிற பெரிய மரத்துண்டை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற சிறிய துரும்பைப் பார்க்கிறதென்ன?
“Nĩ kĩĩ gĩtũmaga wone kĩhuti kĩrĩa kĩrĩ riitho rĩa mũrũ wa thoguo, no ũkaaga kuona mũgogo ũrĩa ũrĩ riitho rĩaku wee mwene?
4 ௪ இதோ, உன் கண்ணில் பெரிய மரத்துண்டு இருக்கும்போது உன் சகோதரனைப் பார்த்து: நான் உன் கண்ணிலிருக்கும் சிறிய துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி?
Wahota atĩa kwĩra mũrũ wa thoguo atĩrĩ, ‘Reke ngũrute kĩhuti kĩu kĩrĩ riitho rĩaku,’ o rĩrĩa wee mwene ũrĩ na mũgogo riitho rĩaku?
5 ௫ மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற பெரிய மரத்துண்டை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரனுடைய கண்ணிலிருக்கிற சிறிய துரும்பை எடுத்துப்போடுவதற்கு உனக்கு தெளிவாகத் தெரியும்.
Wee hinga ĩno, amba ũrute mũgogo ũcio ũrĩ riitho rĩaku, nĩguo wone wega na ũhote kũruta kĩhuti kĩrĩa kĩrĩ riitho rĩa mũrũ wa thoguo.
6 ௬ பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடுக்காதீர்கள்; உங்களுடைய முத்துக்களைப் பன்றிகள்முன் போடாதீர்கள்; போட்டால் தங்களுடைய கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும்.
“Mũtikanahe magui kĩndũ kĩrĩa kĩamũre, na mũtikanaikĩrie ngũrwe ruru cianyu. Mũngĩĩka ũguo-rĩ, ingĩrangĩrĩria ruru na magũrũ ma cio, icooke imũgarũrũke, imũtiihangie.
7 ௭ கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்;
“Hooyai na nĩmũkũheo; mathaai na nĩmũkuona; ringaringai mũrango na nĩmũkũhingũrĩrwo.
8 ௮ ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.
Nĩgũkorwo ũrĩa wothe ũhooyaga nĩaheagwo, na ũrĩa ũmaathaga nĩonaga, na ũrĩa ũringaringaga mũrango, nĩahingũragĩrwo.
9 ௯ உங்களில் எந்த மனிதனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா?
“Na rĩrĩ, nũũ wanyu ũngĩĩtio mũgate nĩ mwana wake amũhe ihiga?
10 ௧0 மீனைக்கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா?
Kana amwĩtie thamaki nake amũhe nyoka?
11 ௧௧ ஆகவே, பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்களுடைய பிள்ளைகளுக்கு நல்ல பரிசுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?
Angĩkorwo inyuĩ, o na mũrĩ ooru, nĩmũũĩ kũhe ciana cianyu iheo njega-rĩ, githĩ Ithe wanyu ũrĩa ũrĩ igũrũ ndagakĩrĩrĩria kũhe iheo njega kũrĩ arĩa mamũhooyaga!
12 ௧௨ ஆதலால், மனிதர்கள் உங்களுக்கு எவைகளைச் செய்யவிரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம்.
Nĩ ũndũ ũcio, maũndũ-inĩ mothe, ĩkagai andũ arĩa angĩ ũrĩa mũngĩenda mamwĩkage, nĩgũkorwo ũcio nĩguo Watho wa Musa na Ũrutani wa Anabii.
13 ௧௩ குறுகின வாசல்வழியாக உள்ளே பிரவேசியுங்கள்; அழிவிற்குப்போகிற வாசல் அகலமும், வழி விசாலமுமாக இருக்கிறது; அதின்வழியாக பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.
“Toonyerai mũromo ũrĩa mũceke. Nĩgũkorwo mũromo nĩ mwariĩ na njĩra nĩ njariĩ ĩrĩa yerekeire rĩũrĩro, na andũ arĩa matoonyagĩra ho nĩ aingĩ.
14 ௧௪ ஜீவனுக்குப்போகிற வாசல் குறுகினதும், வழி நெருக்கமுமாக இருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.
No mũromo nĩ mũkunderu na njĩra nĩ njeke ĩrĩa ĩkinyaga muoyo-inĩ, na andũ arĩa mamĩonaga nĩ anini.
15 ௧௫ கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாக இருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடம் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பேராசையுள்ள ஓநாய்கள்.
“Mwĩhũgagei anabii a maheeni. Mokaga kũrĩ inyuĩ mehumbĩte njũa cia ngʼondu, no thĩinĩ wao nĩ njũũi ndĩani.
16 ௧௬ அவர்களுடைய செயல்களினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சைப் பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா?
Nĩmũrĩmamenyaga na maciaro mao. Kaĩ thabibũ igĩtuuagwo mĩtĩ-inĩ ya mĩigua, kana ngũyũ igatuuo kuuma mahiũ-inĩ ma nyeki?
17 ௧௭ அப்படியே நல்லமரமெல்லாம் நல்லகனிகளைக் கொடுக்கும்; கெட்டமரமோ கெட்டகனிகளைக் கொடுக்கும்.
Ũguo noguo, mũtĩ wothe mwega ũciaraga maciaro mega, no mũtĩ mũũru ũciaraga maciaro mooru.
18 ௧௮ நல்லமரம் கெட்டகனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்டமரம் நல்லகனிகளைக் கொடுக்கமாட்டாது.
Mũtĩ mwega ndũngĩciara maciaro mooru, naguo mũtĩ mũũru ndũngĩciara maciaro mega.
19 ௧௯ நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, நெருப்பிலே போடப்படும்.
Mũtĩ o wothe ũtaciaraga maciaro mega nĩgũtemwo ũtemagwo ũgaikio mwaki-inĩ.
20 ௨0 ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.
Ũguo nĩguo mũrĩmamenyaga nĩ ũndũ wa maciaro mao.
21 ௨௧ பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் விருப்பத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னைப் பார்த்து: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
“To mũndũ ũrĩa ũnjĩtaga, ‘Mwathani, Mwathani,’ ũgaatoonya ũthamaki wa igũrũ, no nĩ ũrĩa wĩkaga ũrĩa Baba ũrĩa ũrĩ igũrũ endaga.
22 ௨௨ அந்த நாளில் அநேகர் என்னைப் பார்த்து: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் சொன்னோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.
Mũthenya ũcio aingĩ makanjĩĩra atĩrĩ, ‘Mwathani, Mwathani, githĩ tũtiarathaga maũndũ na rĩĩtwa rĩaku, na thĩinĩ wa rĩĩtwa rĩaku tũkaingata ndaimono na tũkaringa ciama nyingĩ?’
23 ௨௩ அப்பொழுது, நான் ஒருபோதும் உங்களை அறியவில்லை; அக்கிரமச்செய்கைக்காரர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
Hĩndĩ ĩyo nĩngameera wega atĩrĩ, ‘Niĩ ndirĩ hĩndĩ ndaamũũĩ o na rĩ. Eherai harĩ niĩ, inyuĩ mwĩkaga ũũru!’
24 ௨௪ ஆகவே, நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனிதனுக்கு ஒப்பிடுவேன்.
“Nĩ ũndũ ũcio-rĩ, mũndũ o wothe ũiguaga ciugo ici ciakwa na ageeka ũrĩa ciugĩte, ahaana ta mũndũ mũũgĩ ũrĩa wakire nyũmba yake igũrũ rĩa rwaro rwa ihiga.
25 ௨௫ பெருமழை பெய்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.
Nayo mbura ĩkiura, na njũũĩ ikĩiyũra, naruo rũhuho rũkĩhurutana nacio ikĩhũũra nyũmba ĩyo na nditi, no nyũmba ĩyo ndĩagũire, tondũ mũthingi wayo wakĩtwo igũrũ rĩa rwaro rwa ihiga.
26 ௨௬ நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனிதனுக்கு ஒப்பிடப்படுவான்.
No mũndũ o wothe ũiguaga ciugo ici ciakwa na ndekaga ũrĩa ciugĩte ahaana ta mũndũ mũkĩĩgu ũrĩa wakire nyũmba yake mũthanga igũrũ.
27 ௨௭ பெருமழை பெய்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்.
Nayo mbura ĩkiura, njũũĩ ikĩiyũra, naruo rũhuho rũkĩhurutana nacio ikĩhũũra nyũmba ĩyo na nditi, nayo nyũmba ĩyo ĩkĩmomoka na kũgũa kũnene.”
28 ௨௮ இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லிமுடித்தபோது, அவர் வேதபண்டிதர்களைப்போல போதிக்காமல், அதிகாரமுடையவராக அவர்களுக்குப் போதித்ததினால்,
Rĩrĩa Jesũ aarĩkirie kuuga maũndũ macio, kĩrĩndĩ kĩu gĩkĩgega nĩ ũndũ wa ũrutani wake,
29 ௨௯ மக்கள் அவருடைய போதனையைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
tondũ aarutanaga ta mũndũ warĩ na ũhoti, na ti ta ũrĩa arutani ao a watho maarutanaga.