< மத்தேயு 5 >
1 ௧ இயேசு திரளான மக்களைக் கண்டு மலையின்மேல் ஏறினார்; அவர் உட்கார்ந்தபொழுது, அவருடைய சீடர்கள் அவரிடத்தில் வந்தார்கள்.
ⲁ̅ⲈⲦⲀϤⲚⲀⲨ ⲆⲈ ⲈⲚⲒⲘⲎϢ ⲀϤϢⲈ ⲚⲀϤ ⲈⲠϢⲰⲒ ⲈϪⲈⲚ ⲠⲒⲦⲰⲞⲨ ⲞⲨⲞϨ ⲈⲦⲀϤϨⲈⲘⲤⲒ ⲀⲨⲒ ϨⲀⲢⲞϤ ⲚϪⲈⲚⲈϤⲘⲀⲐⲎⲦⲎⲤ.
2 ௨ அப்பொழுது அவர் அவர்களுக்கு உபதேசித்துச் சொன்னது என்னவென்றால்:
ⲃ̅ⲞⲨⲞϨ ⲈⲦⲀϤⲞⲨⲰⲚ ⲚⲢⲰϤ ⲚⲀϤϮⲤⲂⲰ ⲚⲰⲞⲨ ⲈϤϪⲰ ⲘⲘⲞⲤ
3 ௩ “ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.
ⲅ̅ⲰⲞⲨⲚⲒⲀⲦⲞⲨ ⲚⲚⲒϨⲎⲔⲒ ⲘⲠⲒⲠⲚⲈⲨⲘⲀϪⲈ ⲐⲰⲞⲨ ⲦⲈ ϮⲘⲈⲦⲞⲨⲢⲞ ⲚⲦⲈⲚⲒⲪⲎⲞⲨⲒ.
4 ௪ துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்.
ⲇ̅ⲰⲞⲨⲚⲒⲀⲦⲞⲨ ⲚⲚⲎ ⲈⲦⲈⲢϨⲎⲂⲒ ϮⲚⲞⲨ ϪⲈ ⲚⲐⲰⲞⲨ ⲠⲈⲦⲞⲨⲚⲀϮϨⲞ ⲈⲢⲰⲞⲨ.
5 ௫ சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.
ⲉ̅ⲰⲞⲨⲚⲒⲀⲦⲞⲨ ⲚⲚⲒⲢⲈⲘⲢⲀⲨϢ ϪⲈ ⲚⲐⲰⲞⲨ ⲠⲈⲐⲚⲀⲈⲢⲔⲖⲎⲢⲞⲚⲞⲘⲒⲚ ⲘⲠⲒⲔⲀϨⲒ.
6 ௬ நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்.
ⲋ̅ⲰⲞⲨⲚⲒⲀⲦⲞⲨ ⲚⲚⲎ ⲈⲦϨⲞⲔⲈⲢ ⲚⲈⲘ ⲚⲎ ⲈⲦⲞⲂⲒ ⲚϮⲘⲈⲐⲘⲎⲒ ϪⲈ ⲚⲐⲰⲞⲨ ⲠⲈⲐⲚⲀⲤⲒ.
7 ௭ இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம்பெறுவார்கள்.
ⲍ̅ⲰⲞⲨⲚⲒⲀⲦⲞⲨ ⲚⲚⲒⲚⲀⲎⲦ ϪⲈ ⲚⲐⲰⲞⲨ ⲠⲈⲦⲞⲨⲚⲀⲚⲀⲒ ⲚⲰⲞⲨ.
8 ௮ இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.
ⲏ̅ⲰⲞⲨⲚⲒⲀⲦⲞⲨ ⲚⲚⲎ ⲈⲐⲞⲨⲀⲂ ϦⲈⲚⲠⲞⲨϨⲎⲦ ϪⲈ ⲚⲐⲰⲞⲨ ⲠⲈⲐⲚⲀⲚⲀⲨ ⲈⲪⲚⲞⲨϮ.
9 ௯ சமாதானம் செய்கிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய பிள்ளைகள் எனப்படுவார்கள்.
ⲑ̅ⲰⲞⲨⲚⲒⲀⲦⲞⲨ ⲚⲚⲒⲢⲈϤⲈⲢϨⲒⲢⲎⲚⲎ ϪⲈ ⲚⲐⲰⲞⲨ ⲠⲈⲦⲞⲨⲚⲀⲘⲞⲨϮ ⲈⲢⲰⲞⲨ ϪⲈ ⲚⲒϢⲎⲢⲒ ⲚⲦⲈⲪⲚⲞⲨϮ.
10 ௧0 நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.
ⲓ̅ⲰⲞⲨⲚⲒⲀⲦⲞⲨ ⲚⲚⲎ ⲈⲦⲀⲨϬⲞϪⲒ ⲚⲤⲰⲞⲨ ⲈⲐⲂⲈ ϮⲘⲈⲐⲘⲎⲒ ϪⲈ ⲐⲰⲞⲨ ⲦⲈ ϮⲘⲈⲦⲞⲨⲢⲞ ⲚⲦⲈⲚⲒⲪⲎⲞⲨⲒ.
11 ௧௧ “என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவிதமான தீமையான சொற்களையும் உங்கள்மேல் பொய்யாகச் சொல்வார்களானால் பாக்கியவான்களாக இருப்பீர்கள்;
ⲓ̅ⲁ̅ⲰⲞⲨⲚⲒⲀⲦⲈⲚ ⲐⲎⲚⲞⲨ ⲈϢⲰⲠ ⲀⲨϢⲀⲚϬⲞϪⲒ ⲚⲤⲀⲐⲎⲚⲞⲨ ⲞⲨⲞϨ ⲚⲤⲈϢⲈϢ ⲐⲎⲚⲞⲨ ⲞⲨⲞϨ ⲚⲤⲈϪⲈ ⲠⲈⲦϨⲰⲞⲨ ⲚⲒⲂⲈⲚ ⲚⲤⲀⲐⲎⲚⲞⲨ ⲈⲨϪⲈ ⲘⲈⲐⲚⲞⲨϪ ⲈⲢⲰⲦⲈⲚ ⲈⲐⲂⲎⲦ.
12 ௧௨ சந்தோஷப்பட்டு மகிழ்ந்திருங்கள்; பரலோகத்தில் உங்களுடைய பலன் அதிகமாக இருக்கும்; உங்களுக்குமுன்பே வாழ்ந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே.
ⲓ̅ⲃ̅ⲢⲀϢⲒ ⲞⲨⲞϨ ⲐⲈⲖⲎⲖ ϪⲈ ⲠⲈⲦⲈⲚⲂⲈⲬⲈ ⲞⲨⲚⲒϢϮ ⲠⲈ ϦⲈⲚⲚⲒⲪⲎⲞⲨⲒ ⲠⲀⲒⲢⲎϮ ⲄⲀⲢ ⲀⲨϬⲞϪⲒ ⲚⲤⲀⲚⲒⲠⲢⲞⲪⲎⲦⲎⲤ ⲈⲚⲀⲨϦⲀϪⲰⲦⲈⲚ.
13 ௧௩ நீங்கள் பூமிக்கு உப்பாக இருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனிதர்களால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது.
ⲓ̅ⲅ̅ⲚⲐⲰⲦⲈⲚ ⲆⲈ ⲠϨⲘⲞⲨ ⲘⲠⲒⲔⲀϨⲒ ⲈϢⲰⲠ ⲆⲈ ⲚⲦⲈⲠⲒϨⲘⲞⲨ ⲖⲰϤ ⲀⲨⲚⲀⲘⲞⲖϨϤ ⲚⲞⲨ ⲘⲠⲀϤϢϪⲈⲘϪⲞⲘ ϪⲈ ⲈϨⲖⲒ ⲈⲂⲎⲖ ⲚⲤⲈϨⲒⲦϤ ⲈⲂⲞⲖ ⲚⲤⲈϨⲰⲘⲒ ⲈϪⲰϤ ⲚϪⲈⲚⲒⲢⲰⲘⲒ.
14 ௧௪ நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமாக இருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது.
ⲓ̅ⲇ̅ⲚⲐⲰⲦⲈⲚ ⲠⲈ ⲪⲞⲨⲰⲒⲚⲒ ⲘⲠⲒⲔⲞⲤⲘⲞⲤ ⲘⲘⲞⲚ ϢϪⲞⲘ ⲚⲦⲈⲞⲨⲂⲀⲔⲒ ⲬⲰⲠ ⲈⲤⲬⲎ ϨⲒϪⲈⲚ ⲞⲨⲦⲰⲞⲨ.
15 ௧௫ விளக்கைக் கொளுத்தி பாத்திரத்தினாலே மூடிவைக்காமல், விளக்குத்தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள அனைவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்.
ⲓ̅ⲉ̅ⲞⲨⲆⲈ ⲘⲠⲀⲨϬⲈⲢⲈ ⲞⲨϦⲎⲂⲤ ⲚⲤⲈⲬⲀϤ ϦⲀ ⲞⲨⲘⲈⲚⲦ ⲀⲖⲖⲀ ⲈϢⲀⲨⲬⲀϤ ϨⲒϪⲈⲚ ϮⲖⲨⲬⲚⲒⲀ ⲞⲨⲞϨ ϢⲀϤⲈⲢⲞⲨⲰⲒⲚⲒ ⲈⲞⲨⲞⲚ ⲚⲒⲂⲈⲚ ⲈⲦϢⲞⲠ ϦⲈⲚⲠⲒⲎⲒ.
16 ௧௬ இவ்விதமாக, மனிதர்கள் உங்களுடைய நற்செயல்களைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்களுடைய வெளிச்சம் அவர்களுக்கு முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.
ⲓ̅ⲋ̅ⲠⲀⲒⲢⲎϮ ⲘⲀⲢⲈ ⲠⲈⲦⲈⲚⲞⲨⲰⲒⲚⲒ ⲈⲢⲞⲨⲰⲒⲚⲒ ⲘⲠⲈⲘⲐⲞ ⲚⲚⲒⲢⲰⲘⲒ ϨⲞⲠⲰⲤ ⲚⲤⲈⲚⲀⲨ ⲈⲚⲈⲦⲈⲚϨⲂⲎ ⲞⲨⲒ ⲈⲐⲚⲀⲚⲈⲨ ⲚⲤⲈϮⲰⲞⲨ ⲘⲠⲈⲦⲈⲚⲒⲰⲦ ⲈⲦϦⲈⲚ ⲚⲒⲪⲎⲞⲨⲒ.
17 ௧௭ நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று நினைத்துக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு இல்லை, நிறைவேற்றுவதற்கே வந்தேன்.
ⲓ̅ⲍ̅ⲘⲠⲈⲢⲘⲈⲨⲒ ϪⲈ ⲈⲦⲀⲒⲒ ⲈⲂⲈⲖ ⲠⲒⲚⲞⲘⲞⲤ ⲈⲂⲞⲖ ⲒⲈ ⲚⲒⲠⲢⲞⲪⲎⲦⲎⲤ ⲚⲈⲦⲀⲒⲒ ⲈⲂⲞⲖⲞⲨ ⲀⲚ ⲀⲖⲖⲀ ⲈϪⲞⲔⲞⲨ.
18 ௧௮ வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்தில் உள்ளதெல்லாம் நிறைவேறும்வரை, அதில் ஒரு சிறு எழுத்தாவது, ஒரு எழுத்தின் உறுப்பாவது ஒழிந்துபோகாது என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ⲓ̅ⲏ̅ⲀⲘⲎⲚ ⲄⲀⲢ ϮϪⲰ ⲘⲘⲞⲤ ⲚⲰⲦⲈⲚ ϪⲈ ϢⲀⲦⲈ ⲦⲪⲈ ⲚⲈⲘ ⲠⲔⲀϨⲒ ⲤⲒⲚⲒ ⲞⲨⲒⲰⲦⲀ ⲒⲈ ⲞⲨϢⲰⲖϨ ⲚⲚⲈϤⲤⲒⲚⲒ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲠⲒⲚⲞⲘⲞⲤ ϢⲀⲦⲈ ⲚⲀⲒ ⲦⲎⲢⲞⲨ ϢⲰⲠⲒ.
19 ௧௯ ஆகவே, இந்தக் கட்டளைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாவது மீறி, அவ்விதமாக மனிதர்களுக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லோரையும்விட சிறியவன் எனப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்யத்தில் பெரியவன் எனப்படுவான்.
ⲓ̅ⲑ̅ⲪⲎ ⲞⲨⲚ ⲈⲐⲚⲀⲂⲈⲖ ⲞⲨⲒ ⲚⲚⲀⲒⲔⲞⲨϪⲒ ⲚⲈⲚⲦⲞⲖⲎ ⲈⲂⲞⲖ ⲞⲨⲞϨ ⲚⲦⲈϤϮⲤⲂⲰ ⲚⲚⲒⲢⲰⲘⲒ ⲘⲠⲀⲒⲢⲎϮ ⲈⲨⲈⲘⲞⲨϮ ⲈⲢⲞϤ ϪⲈ ⲠⲒⲔⲞⲨϪⲒ ϦⲈⲚϮⲘⲈⲦⲞⲨⲢⲞ ⲚⲦⲈⲚⲒⲪⲎⲞⲨⲒ ⲪⲎ ⲆⲈ ⲈⲐⲚⲀⲒⲢⲒ ⲞⲨⲞϨ ⲚⲦⲈϤϮⲤⲂⲰ ⲪⲀⲒ ⲈⲨⲈⲘⲞⲨϮ ⲈⲢⲞϤ ϪⲈ ⲞⲨⲚⲒϢϮ ϦⲈⲚϮⲘⲈⲦⲞⲨⲢⲞ ⲚⲦⲈⲚⲒⲪⲎⲞⲨⲒ.
20 ௨0 வேதபண்டிதர்கள் பரிசேயர்கள் என்பவர்களுடைய நீதியைவிட உங்களுடைய நீதி அதிகமாக இல்லாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ⲕ̅ϮϪⲰ ⲄⲀⲢ ⲘⲘⲞⲤ ⲚⲰⲦⲈⲚ ϪⲈ ⲀⲢⲈϢⲦⲈⲘ ⲦⲈⲦⲈⲚⲘⲈⲐⲘⲎⲒ ⲈⲢϨⲞⲨⲞ ⲈⲐⲀ ⲚⲒⲤⲀϦ ⲚⲈⲘ ⲚⲒⲪⲀⲢⲒⲤⲈⲞⲤ ⲚⲚⲈⲦⲈⲚⲒ ⲈϦⲞⲨⲚ ⲈϮⲘⲈⲦⲞⲨⲢⲞ ⲚⲦⲈⲚⲒⲪⲎⲞⲨⲒ.
21 ௨௧ கொலை செய்யாதிருப்பாயாக என்பதும், கொலைசெய்கிறவன் நியாயத்தீர்ப்பிற்கு உரியவனாக இருப்பான் என்பதும், முன்னோர்களுக்குச் சொல்லப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
ⲕ̅ⲁ̅ⲀⲢⲈⲦⲈⲚⲤⲰⲦⲈⲘ ϪⲈ ⲀⲨϪⲞⲤ ⲚⲚⲒⲀⲢⲬⲈⲞⲤ ϪⲈ ⲚⲚⲈⲔϦⲰⲦⲈⲂ ⲪⲎ ⲆⲈ ⲈⲐⲚⲀϦⲰⲦⲈⲂ ⲈϤⲈϢⲰⲠⲒ ⲈϤⲞⲒ ⲚⲈⲚⲞⲬⲞⲤ ⲈϮⲔⲢⲒⲤⲒⲤ.
22 ௨௨ நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்பிற்கு உரியவனாக இருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்பிற்கு உரியவனாக இருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு உரியவனாக இருப்பான். (Geenna )
ⲕ̅ⲃ̅ⲀⲚⲞⲔ ⲆⲈ ϮϪⲰ ⲘⲘⲞⲤ ⲚⲰⲦⲈⲚ ϪⲈ ⲞⲨⲞⲚ ⲚⲒⲂⲈⲚ ⲈⲐⲚⲀϪⲰⲚⲦ ⲈⲠⲈϤⲤⲞⲚ ϨⲒⲔⲎ ⲈϤⲈϢⲰⲠⲒ ⲈϤⲞⲒ ⲚⲈⲚⲞⲬⲞⲤ ⲈϮⲔⲢⲒⲤⲒⲤ ⲪⲎ ⲈⲐⲚⲀϪⲞⲤ ⲘⲠⲈϤⲤⲞⲚ ϪⲈ ⲢⲀⲔⲀ ⲈϤⲈϢⲰⲠⲒ ⲈϤⲞⲒ ⲚⲈⲚⲞⲬⲞⲤ ⲈⲠⲒⲘⲀⲚϮϨⲀⲠ ⲪⲎ ⲆⲈ ⲈⲐⲚⲀϪⲞⲤ ⲘⲠⲈϤⲤⲞⲚ ϪⲈ ⲠⲒⲤⲞϪ ⲈϤⲈϢⲰⲠⲒ ⲈϤⲞⲒ ⲚⲈⲚⲞⲬⲞⲤ ⲈϮⲄⲈⲈⲚⲚⲀ ⲚⲦⲈⲠⲒⲬⲢⲰⲘ. (Geenna )
23 ௨௩ ஆகவே, நீ பலிபீடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவுகூருவாயானால்,
ⲕ̅ⲅ̅ⲈϢⲰⲠ ⲞⲨⲚ ⲈⲔⲚⲀⲒⲚⲒ ⲘⲠⲈⲔⲆⲰⲢⲞⲚ ⲈϨⲢⲎⲒ ⲈϪⲈⲚ ⲠⲒⲘⲀⲚⲈⲢϢⲰⲞⲨϢⲒ ⲞⲨⲞϨ ⲚⲦⲈⲔⲈⲢⲪⲘⲈⲨⲒ ⲘⲘⲀⲨ ϪⲈ ⲞⲨⲞⲚ ⲞⲨⲀⲢⲒⲔⲒ ⲞⲨⲦⲰⲔ ⲚⲈⲘ ⲠⲈⲔⲤⲞⲚ.
24 ௨௪ அங்கே பலிபீடத்தின்முன்பு உன் காணிக்கையை வைத்துவிட்டுப்போய், முதலில் உன் சகோதரனோடு ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து.
ⲕ̅ⲇ̅ⲬⲰ ⲘⲠⲈⲔⲆⲰⲢⲞⲚ ⲘⲘⲀⲨ ⲘⲠⲈⲘⲐⲞ ⲘⲠⲒⲘⲀⲚⲈⲢϢⲰⲞⲨϢⲒ ⲞⲨⲞϨ ⲘⲀϢⲈ ⲚⲀⲔ ⲚϢⲞⲢⲠ ϨⲰⲦⲠ ⲈⲠⲈⲔⲤⲞⲚ ⲞⲨⲞϨ ⲦⲞⲦⲈ ⲀⲘⲞⲨ ⲀⲚⲒⲞⲨⲒ ⲘⲠⲈⲔⲆⲰⲢⲞⲚ ⲈϦⲞⲨⲚ.
25 ௨௫ எதிராளி உன்னை நியாயாதிபதியினிடத்தில் ஒப்புக்கொடுக்காமலும், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடுக்காமலும், நீ சிறைச்சாலையில் வைக்கப்படாமலும் இருக்கும்படியாக, நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாக அவனோடு சமாதானமாகு.
ⲕ̅ⲉ̅ϢⲰⲠⲒ ⲈⲔⲔⲀϮ ⲈⲠⲈⲔⲀⲚⲦⲒⲆⲒⲔⲞⲤ ⲚⲬⲰⲖⲈⲘ ϨⲰⲤ ⲈϤⲬⲎ ⲚⲈⲘⲀⲔ ϨⲒ ⲠⲒⲘⲰⲒⲦ ⲘⲎⲠⲞⲦⲈ ⲚⲦⲈⲠⲒⲀⲚⲦⲒⲆⲒⲔⲞⲤ ⲦⲎⲒⲔ ⲈⲠⲒⲔⲢⲒⲦⲎⲤ ⲞⲨⲞϨ ⲚⲦⲈⲠⲒⲔⲢⲒⲦⲎⲤ ⲦⲎⲒⲔ ⲈⲠⲒϨⲨⲠⲎⲢⲈⲦⲎⲤ ⲞⲨⲞϨ ⲚⲤⲈϨⲒⲦⲔ ⲈⲠⲒϢⲦⲈⲔⲞ
26 ௨௬ இல்லாவிட்டால், நீ ஒரு காசும் குறைவில்லாமல் செலுத்தித்தீர்க்கும்வரைக்கும் சிறைச்சாலையிலிருந்து வெளியே வரமாட்டாய் என்று உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன்.
ⲕ̅ⲋ̅ⲀⲘⲎⲚ ϮϪⲰ ⲘⲘⲞⲤ ⲚⲀⲔ ϪⲈ ⲚⲚⲈⲔⲒ ⲈⲂⲞⲖ ⲘⲘⲀⲨ ϢⲀⲦⲈⲔϮ ⲚⲦϦⲀⲎ ⲚⲦⲈⲂⲒ.
27 ௨௭ விபசாரம் செய்யாதிருப்பாயாக என்பது முன்னோர்களுக்குச் சொல்லப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
ⲕ̅ⲍ̅ⲀⲦⲈⲦⲈⲚⲤⲰⲦⲈⲘ ϪⲈ ⲀⲨϪⲞⲤ ϪⲈ ⲚⲚⲈⲔⲈⲢⲚⲰⲒⲔ.
28 ௨௮ நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு பெண்ணை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடு விபசாரம் செய்துவிட்டான்.
ⲕ̅ⲏ̅ⲀⲚⲞⲔ ⲆⲈ ϮϪⲰ ⲘⲘⲞⲤ ⲚⲰⲦⲈⲚ ϪⲈ ⲞⲨⲞⲚ ⲚⲒⲂⲈⲚ ⲈⲐⲚⲀϪⲞⲨϢⲦ ⲚⲤⲀⲞⲨⲤϨⲒⲘⲒ ⲈⲠϪⲒⲚⲈⲢⲈⲠⲒⲐⲨⲘⲒⲚ ⲈⲢⲞⲤ ⲀϤⲔⲎⲚ ⲈϤⲞⲒ ⲚⲚⲰⲒⲔ ⲈⲢⲞⲤ ϦⲈⲚⲠⲈϤϨⲎⲦ.
29 ௨௯ உன் வலது கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைவிட, உன் உறுப்புகளில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாக இருக்கும். (Geenna )
ⲕ̅ⲑ̅ⲒⲤϪⲈ ⲠⲈⲔⲂⲀⲖ ⲚⲞⲨⲒⲚⲀⲘ ⲈⲢⲤⲔⲀⲚⲆⲀⲖⲒⲌⲈⲤⲐⲈ ⲘⲘⲞⲔ ⲪⲞⲢⲔϤ ϨⲒⲦϤ ⲈⲂⲞⲖ ϨⲀⲢⲞⲔ ⲤⲈⲢⲚⲞϤⲢⲒ ⲄⲀⲢ ⲚⲀⲔ ⲚⲦⲈⲞⲨⲀⲒ ⲚⲚⲈⲔⲘⲈⲖⲞⲤ ⲦⲀⲔⲞ ⲞⲨⲞϨ ⲚⲦⲈϢⲦⲈⲘ ⲠⲈⲔⲤⲰⲘⲀ ⲦⲎⲢϤ ϢⲈ ⲚⲀϤ ⲈϮⲄⲈⲈⲚⲚⲀ. (Geenna )
30 ௩0 உன் வலது கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைவிட. உன் உறுப்புகளில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாக இருக்கும். (Geenna )
ⲗ̅ⲞⲨⲞϨ ⲒⲤϪⲈ ⲦⲈⲔϪⲒϪ ⲚⲞⲨⲒⲚⲀⲘ ⲈⲢⲤⲔⲀⲚⲆⲀⲖⲒⲌⲈⲤⲐⲈ ⲘⲘⲞⲔ ϪⲞϪⲤ ϨⲒⲦⲤ ⲈⲂⲞⲖ ϨⲀⲢⲞⲔ ⲤⲈⲢⲚⲞϤⲢⲒ ⲄⲀⲢ ⲚⲀⲔ ⲚⲦⲈⲞⲨⲀⲒ ⲚⲚⲈⲔⲘⲈⲖⲞⲤ ⲦⲀⲔⲞ ⲞⲨⲞϨ ⲚⲦⲈϢⲦⲈⲘ ⲠⲈⲔⲤⲰⲘⲀ ⲦⲎⲢϤ ϢⲈ ⲚⲀϤ ⲈϮⲄⲈⲈⲚⲚⲀ. (Geenna )
31 ௩௧ தன் மனைவியை விவாகரத்து செய்கிற எவனும், அவளுக்கு விடுதலைப்பத்திரம் கொடுக்கவேண்டும் என்று சொல்லப்பட்டது.
ⲗ̅ⲁ̅ⲀⲨϪⲞⲤ ϪⲈ ⲪⲎ ⲈⲐⲚⲀϨⲒ ⲦⲈϤⲤϨⲒⲘⲒ ⲈⲂⲞⲖ ⲘⲀⲢⲈϤϮ ⲚⲞⲨⲤϦⲒ ⲚⲞⲨⲈⲒ ⲚⲀⲤ.
32 ௩௨ நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; வேசித்தனக் காரணத்தினாலொழிய தன் மனைவியை விவாகரத்து செய்கிறவன், அவளை விபசாரம்செய்யத் தூண்டுகிறவனாக இருப்பான்; அப்படி விவாகரத்து செய்யப்பட்டவளைத் திருமணம் செய்கிறவனும் விபசாரம் செய்கிறவனாக இருப்பான்.
ⲗ̅ⲃ̅ⲀⲚⲞⲔ ⲆⲈ ϮϪⲰ ⲘⲘⲞⲤ ⲚⲰⲦⲈⲚ ϪⲈ ⲪⲎ ⲈⲐⲚⲀϨⲒ ⲦⲈϤⲤϨⲒⲘⲒ ⲈⲂⲞⲖ ⲚⲞⲨⲈϢⲈ ⲚⲤⲀϪⲒ ⲘⲠⲞⲢⲚⲒⲀ ⲀϤⲐⲢⲞ ⲘⲘⲞⲤ ⲈϪⲪⲈ ⲚⲰⲒⲔ ⲞⲨⲞϨ ⲪⲎ ⲈⲐⲚⲀϬⲒ ⲚⲐⲎ ⲈⲦϨⲰⲞⲨⲒ ⲈⲂⲞⲖ ϤⲞⲒ ⲚⲚⲰⲒⲔ.
33 ௩௩ அன்றியும், பொய்யாணையிடாமல், உன் ஆணைகளைக் கர்த்தர் முன்னிலையில் செலுத்துவாயாக என்று முன்னோர்களுக்குச் சொல்லப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
ⲗ̅ⲅ̅ⲠⲀⲖⲒⲚ ⲀⲢⲈⲦⲈⲚⲤⲰⲦⲈⲘ ϪⲈ ⲀⲨϪⲞⲤ ⲚⲚⲒⲀⲢⲬⲈⲞⲤ ϪⲈ ⲚⲚⲈⲔⲰⲢⲔ ⲚⲚⲞⲨϪ ⲈⲔⲈϮ ⲆⲈ ⲚⲚⲈⲔⲀⲚⲀⲨϢ ⲘⲠϬⲞⲒⲤ.
34 ௩௪ நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; எதையும் செய்வேன் என்று சத்தியம் செய்யவேண்டாம்; பரலோகத்தின்பேரில் சத்தியம் செய்யவேண்டாம், அது தேவனுடைய சிங்காசனம்.
ⲗ̅ⲇ̅ⲀⲚⲞⲔ ⲆⲈ ϮϪⲰ ⲘⲘⲞⲤ ⲚⲰⲦⲈⲚ ϪⲈ ⲘⲠⲈⲢⲰⲢⲔ ϨⲞⲖⲰⲤ ⲘⲠⲈⲢⲰⲢⲔ ⲚⲦⲪⲈ ϪⲈ ⲠⲐⲢⲞⲚⲞⲤ ⲘⲪⲚⲞⲨϮ ⲠⲈ.
35 ௩௫ பூமியின்பேரிலும் சத்தியம் செய்யவேண்டாம், அது அவருடைய பாதபடி; எருசலேமின்பேரிலும் சத்தியம் செய்யவேண்டாம், அது மகாராஜாவினுடைய நகரம்.
ⲗ̅ⲉ̅ⲞⲨⲆⲈ ⲠⲔⲀϨⲒ ϪⲈ ⲪⲘⲀⲚⲤⲈⲘⲚⲒ ⲚⲦⲈⲚⲈϤϬⲀⲖⲀⲨϪ ⲠⲈ ⲞⲨⲆⲈ ⲒⲈⲢⲞⲤⲀⲖⲎⲘ ϪⲈ ⲐⲂⲀⲔⲒ ⲘⲠⲒⲚⲒϢϮ ⲚⲞⲨⲢⲞ ⲦⲈ.
36 ௩௬ உன் தலையின்பேரிலும் சத்தியம் செய்யவேண்டாம், அதின் ஒரு முடியையாவது வெண்மையாக்கவும் கருமையாக்கவும் உன்னால் முடியாதே.
ⲗ̅ⲋ̅ⲞⲨⲆⲈ ⲘⲠⲈⲢⲰⲢⲔ ⲚⲦⲈⲔⲀⲪⲈ ϪⲈ ⲘⲘⲞⲚ ϢϪⲞⲘ ⲘⲘⲞⲔ ⲈⲈⲢ ⲞⲨⲔⲀⲠ ⲘϤⲰⲒ ⲚⲞⲨⲰⲂϢ ⲒⲈ ⲞⲨⲀⲒ ⲚⲬⲀⲘⲈ.
37 ௩௭ உள்ளதை உள்ளதென்றும், இல்லாததை இல்லையென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.
ⲗ̅ⲍ̅ⲘⲀⲢⲈ ⲠⲈⲦⲈⲚⲤⲀϪⲒ ⲆⲈ ⲈⲢ ⲞⲨⲀϨⲀ ⲀϨⲀ ⲘⲘⲞⲚ ⲘⲘⲞⲚ ⲠϨⲞⲨⲞ ⲆⲈ ⲚⲚⲀⲒ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲠⲒⲠⲈⲦϨⲰⲞⲨ ⲚⲈ.
38 ௩௮ கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று, சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
ⲗ̅ⲏ̅ⲀⲢⲈⲦⲈⲚⲤⲰⲦⲈⲘ ϪⲈ ⲀⲨϪⲞⲤ ϪⲈ ⲞⲨⲂⲀⲖ ϦⲀ ⲞⲨⲂⲀⲖ ⲞⲨⲞϨ ⲞⲨⲚⲀϪϨⲒ ϦⲀ ⲞⲨⲚⲀϪϨⲒ.
39 ௩௯ நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் காட்டு.
ⲗ̅ⲑ̅ⲀⲚⲞⲔ ⲆⲈ ϮϪⲰ ⲘⲘⲞⲤ ⲚⲰⲦⲈⲚ ϪⲈ ⲘⲠⲈⲢϮ ⲈϦⲞⲨⲚ ⲈϨⲢⲈⲚ ⲠⲒⲠⲈⲦϨⲰⲞⲨ ⲀⲖⲖⲀ ⲪⲎ ⲈⲐⲚⲀϮ ⲚⲞⲨⲔⲞⲨⲢ ⲚⲀⲔ ϦⲈⲚⲦⲈⲔⲞⲨⲞϪⲒ ⲚⲞⲨⲒⲚⲀⲘ ⲪⲈⲚϨ ϮⲬⲈϮ ⲈⲢⲞϤ.
40 ௪0 உன்னோடு வழக்காடி உன் ஆடையை எடுத்துக்கொள்ளவேண்டுமென்று விரும்புகிறவனுக்கு உன் மேலாடையையும் கொடுத்துவிடு.
ⲙ̅ⲞⲨⲞϨ ⲪⲎ ⲈⲐⲚⲀⲞⲨⲰϢ ⲈϬⲒϨⲀⲠ ⲚⲈⲘⲀⲔ ⲈⲈⲖ ⲦⲈⲔϢⲐⲎⲚ ⲬⲀ ⲠⲈⲔⲈⲢϢⲰⲚ ⲈⲂⲞⲖ ⲘⲪⲀⲒ.
41 ௪௧ ஒருவன் உன்னை ஒரு மைல்தூரம் வரக் கட்டாயப்படுத்தினால், அவனோடுகூட இரண்டு மைல்தூரம் போ.
ⲙ̅ⲁ̅ⲞⲨⲞϨ ⲪⲎ ⲈⲐⲚⲀϬⲒⲦⲔ ⲚⲬⲂⲀ ⲚⲞⲨⲘⲒⲖⲒⲞⲚ ⲘⲞϢⲒ ⲚⲈⲘⲀϤ ⲚⲂ.
42 ௪௨ உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே.
ⲙ̅ⲃ̅ⲪⲎ ⲈⲦⲈⲢⲈⲦⲒⲚ ⲘⲘⲞⲔ ⲘⲞⲒ ⲚⲀϤ ⲞⲨⲞϨ ⲪⲎ ⲈⲐⲞⲨⲰϢ ⲈϬⲒ ⲚⲦⲞⲦⲔ ⲘⲠⲈⲢⲦⲀⲤⲐⲞϤ ⲈⲂⲞⲖ.
43 ௪௩ உனக்கடுத்தவனைச் நேசித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
ⲙ̅ⲅ̅ⲀⲢⲈⲦⲈⲚⲤⲰⲦⲈⲘ ϪⲈ ⲀⲨϪⲞⲤ ϪⲈ ⲈⲔⲈⲘⲈⲚⲢⲈ ⲠⲈⲔϢⲪⲎⲢ ⲞⲨⲞϨ ⲈⲔⲈⲘⲈⲤⲦⲈ ⲠⲈⲔϪⲀϪⲒ.
44 ௪௪ நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்களுடைய சத்துருக்களை நேசியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்.
ⲙ̅ⲇ̅ⲀⲚⲞⲔ ϮϪⲰ ⲘⲘⲞⲤ ⲚⲰⲦⲈⲚ ϪⲈ ⲘⲈⲚⲢⲈ ⲚⲈⲦⲈⲚϪⲀϪⲒ ⲞⲨⲞϨ ⲦⲰⲂϨ ⲈϪⲈⲚ ⲚⲎ ⲈⲦϬⲞϪⲒ ⲚⲤⲀⲐⲎⲚⲞⲨ.
45 ௪௫ இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதாவிற்குப் பிள்ளைகளாக இருப்பீர்கள்; அவர் தீயவர்கள்மேலும் நல்லவர்கள்மேலும் தமது சூரியனை உதிக்கச்செய்து, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.
ⲙ̅ⲉ̅ϨⲒⲚⲀ ⲚⲦⲈⲦⲈⲚⲈⲢϢⲎⲢⲒ ⲘⲠⲈⲦⲈⲚⲒⲰⲦ ⲈⲦϦⲈⲚ ⲚⲒⲪⲎⲞⲨⲒ ϪⲈ ⲈϤⲐⲢⲞ ⲘⲠⲈϤⲢⲎ ϢⲀⲒ ⲈϪⲈⲚ ⲚⲒⲤⲀⲘⲠⲈⲦϨⲰⲞⲨ ⲚⲈⲘ ⲚⲒⲤⲀⲘⲠⲈⲐⲚⲀⲚⲈⲨ ⲞⲨⲞϨ ⲈϤϨⲰⲞⲨ ⲈϪⲈⲚ ⲚⲒⲐⲘⲎⲒ ⲚⲈⲘ ⲚⲒⲞϪⲒ.
46 ௪௬ உங்களை நேசிக்கிறவர்களையே நீங்கள் நேசிப்பீர்களானால், உங்களுக்குப் பலன் என்ன? வரி வசூலிப்பவர்களும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா?
ⲙ̅ⲋ̅ⲈϢⲰⲠ ⲄⲀⲢ ⲚⲦⲈⲦⲈⲚⲘⲈⲚⲢⲈ ⲚⲎ ⲈⲐⲘⲈⲒ ⲘⲘⲰⲦⲈⲚ ⲀϢ ⲠⲈ ⲠⲈⲦⲈⲚⲂⲈⲬⲈ ⲚⲒⲔⲈⲦⲈⲖⲰⲚⲎⲤ ϨⲰⲞⲨ ϢⲀⲨⲒⲢⲒ ⲘⲠⲀⲒⲢⲎϮ.
47 ௪௭ உங்களுடைய சகோதரர்களைமட்டும் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன? வரி வசூலிப்பவர்களும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா?
ⲙ̅ⲍ̅ⲞⲨⲞϨ ⲈϢⲰⲠ ⲚⲦⲈⲦⲈⲚϢⲈⲠ ⲦⲞⲦⲞⲨ ⲚⲚⲈⲦⲈⲚⲤⲚⲎ ⲞⲨ ⲘⲘⲀⲨⲀⲦⲞⲨ ⲞⲨ ⲘⲘⲈⲦϨⲞⲨⲞ ⲈⲦⲈⲦⲈⲚⲒⲢⲒ ⲘⲘⲞϤ ⲚⲒⲔⲈⲈⲐⲚⲒⲔⲞⲤ ϨⲰⲞⲨ ϢⲀⲨⲒⲢⲒ ⲘⲠⲀⲒⲢⲎϮ.
48 ௪௮ ஆகவே, பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதா பூரண சற்குணராக இருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராக இருக்கக்கடவீர்கள்.
ⲙ̅ⲏ̅ϢⲰⲠⲒ ⲞⲨⲚ ⲚⲐⲰⲦⲈⲚ ⲈⲢⲈⲦⲈⲚϪⲎⲔ ⲈⲂⲞⲖ ⲘⲪⲢⲎϮ ⲘⲠⲈⲦⲈⲚⲒⲰⲦ ⲈⲦϦⲈⲚ ⲚⲒⲪⲎⲞⲨⲒ ⲈⲦϪⲎⲔ ⲈⲂⲞⲖ.