< மத்தேயு 3 >

1 அந்த நாட்களிலே யோவான்ஸ்நானன் யூதேயாவின் வனாந்திரத்தில் வந்து:
त्या दिनमा बाप्तिस्मा करनारा योहान हाऊ, यहूदीयाना जंगलमा ईसन अशी घोषणा देवाले लागना की,
2 “மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபமாக இருக்கிறது” என்று பிரசங்கம் செய்தான்.
“पापसपाईन फिरा कारण स्वर्गनं राज्य जोडे येल शे!”
3 கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள்” என்று வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டென்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டவன் இவனே.
त्यानाबद्दल यशया संदेष्टानी सांगेल व्हतं की, “जंगलमा घोषणा करनारानी वाणी व्हयनी की, परमेश्वरनी येवानी वाट तयार करा, अनी परमेश्वर जी वाट वरतीन जावाव शे, ती वाट नीट करा.”
4 இந்த யோவான் ஒட்டகமயிர் ஆடையை அணிந்து, தன் இடுப்பிலே வார்க்கச்சையைக் கட்டிக்கொண்டிருந்தான்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் அவனுக்கு ஆகாரமாக இருந்தது.
योहानना कपडा ह्या उंटसना केससपाईन बनाडेल व्हतात. त्याना कंबरले कातडाना पट्टा व्हता, त्यानं जेवण रानमध अनं टोळ व्हतं.
5 அப்பொழுது, எருசலேம் நகரத்தாரும், யூதேயாவில் உள்ள அனைவரும், யோர்தானுக்கு அடுத்த சுற்றுப்புறத்தார் அனைவரும் அவனிடத்திற்குப்போய்,
तवय त्याना संदेश ऐकाकरता यरूशलेम, सर्वा यहूदीयाना प्रदेश अनी यार्देन नदी, त्याना जवळपासना सर्व प्रदेशना सर्वा लोके त्यानाजोडे वनात.
6 தங்களுடைய பாவங்களை அறிக்கைசெய்து, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.
त्या लोकसनी पाप कबुल करं, म्हणजे तो त्यासले यार्देन नदीमा बाप्तिस्मा दे.
7 பரிசேயர்களிலும் சதுசேயர்களிலும் அநேகர் தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படி வருகிறதை அவன் கண்டு: “விரியன்பாம்புக் குட்டிகளே! வருங்கோபத்திற்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வழிகாட்டினவன் யார்?
पण परूशी अनी सदुकी पंथना लोकसपैकी बराच जणसले आपलाकडे बाप्तिस्मा लेवाकरता येतांना दखीन, त्यानी त्यासले सांगं, “अरे सापसना पिल्लासवन!” देवना येनारा क्रोधपाईन पळी जावाले तुमले कोणी सावध करं.
8 மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்.
बाप्तिस्मा लेवाना पहिले पापसपाईन फिरा शोभी असा सत्कर्म करा,
9 ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ள நினைக்காதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராக இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
अनं अब्राहाम आमना बाप शे, अस मनमा आणु नका; कारण मी तुमले सांगस की, देव अब्राहाम करता दगडसपाईन संतती उत्पन्न कराले समर्थ शे!
10 ௧0 இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைக்கப்பட்டிருக்கிறது; எனவே, நல்ல கனிகொடுக்காத மரங்களெல்லாம் வெட்டப்பட்டு நெருப்பிலே போடப்படும்.
आत्तेच झाडना मुळजोडे कुऱ्हाड ठेयेल शे, जे जे झाड चांगलं फळ देस नही, ते ते झाड तोडीसन अग्नीमा टाकामा येस.
11 ௧௧ மனந்திரும்புதலுக்கென்று நான் தண்ணீரினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; எனக்குப்பின்பு வருகிறவரோ என்னைவிட வல்லவராக இருக்கிறார், அவருடைய காலணிகளைச் சுமக்கிறதற்குக்கூட நான் தகுதியானவன் இல்லை; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.
मी पाणीघाई तुमना बाप्तिस्मा पापसपाईन फिराकरता करस हाई खरं शे; पण जो मना मांगतीन ई ऱ्हायना तो मनापेक्षा इतला समर्थ शे की, मी त्याना जोडा उचलीन चालानी पण मनी लायकी नही शे, तो पवित्र आत्माघाई अनी अग्नीघाई तुमना बाप्तिस्मा कराव शे.
12 ௧௨ தூற்றுக்கூடை அவருடைய கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாக சுத்தம்செய்து, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணையாத அக்கினியினால் சுட்டெரிப்பார்” என்றான்.
त्याना हातमा त्यानं सुपडं शे, तो त्यानं खळं पुर्ण स्वच्छ करी, अनी आपला कोठारमा गहु गोया करीसन ठेई. पण जो भुस्सा राही त्याले नही वलावनारी अग्नीमा जाळी टाकी.
13 ௧௩ அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவைவிட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார்.
तवय येशु योहान कडतीन बाप्तिस्मा करी लेवाकरता गालील प्रदेशमा यार्देन नदीवर त्यानाकडे वना;
14 ௧௪ யோவான் அவருக்குத் தடைசெய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான்.
पण योहान त्याले मना करीसन बोलना, मी तुमना हाततीन बाप्तिस्मा लेवाले पाहिजे, पण तुम्हीन मनाकडे कशा काय ई राहीनात?
15 ௧௫ இயேசு அவனுக்கு மறுமொழியாக: இப்பொழுது இதற்கு சம்மதி, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாக இருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு சம்மதித்தான்.
तवय येशु त्याले बोलना, आते हाई व्हऊ दे; कारण सर्व रिती प्रमाणे धार्मीक काम पुर्ण करनं हाई आपलाकरता चांगलं शे, तवय योहाननी तस व्हवु दिधं.
16 ௧௬ இயேசு ஞானஸ்நானம் பெற்று, தண்ணீரிலிருந்து கரையேறின உடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவியானவர் புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார்.
मंग बाप्तिस्मा लेवावर येशु पाणीमाईन वर वना. अनी दखा, स्वर्ग उघडनं तवय परमेश्वरना आत्मा कबुतरना रूपमा उतरीन स्वतःवर ई राहिना अस त्याले दखायनं.
17 ௧௭ அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாக இருக்கிறேன் என்று உரைத்தது.
अनी लगेच स्वर्गमाईन अशी वाणी व्हयनी की, हाऊ मना पोऱ्या माले परमप्रिय शे. मी त्यानावर संतुष्ट शे.

< மத்தேயு 3 >