< மத்தேயு 26 >

1 இயேசு இந்த வசனங்களையெல்லாம் சொல்லிமுடித்தபின்பு, அவர் தம்முடைய சீடர்களைப் பார்த்து:
యీశురేతాన్ ప్రస్తావాన్ సమాప్య శిష్యానూచే,
2 இரண்டு நாட்களுக்குப்பின்பு பஸ்காபண்டிகை வருமென்று அறிவீர்கள்; அப்பொழுது, மனிதகுமாரன் சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றார்.
యుష్మాభి ర్జ్ఞాతం దినద్వయాత్ పరం నిస్తారమహ ఉపస్థాస్యతి, తత్ర మనుజసుతః క్రుశేన హన్తుం పరకరేషు సమర్పిష్యతే|
3 அப்பொழுது, பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் மக்களின் மூப்பர்களும், காய்பா என்னப்பட்ட தலைமை ஆசாரியனுடைய அரண்மனையிலே கூடிவந்து,
తతః పరం ప్రధానయాజకాధ్యాపకప్రాఞ్చః కియఫానామ్నో మహాయాజకస్యాట్టాలికాయాం మిలిత్వా
4 இயேசுவைத் தந்திரமாகப் பிடித்துக் கொலைசெய்யும்படி ஆலோசனை செய்தார்கள்.
కేనోపాయేన యీశుం ధృత్వా హన్తుం శక్నుయురితి మన్త్రయాఞ్చక్రుః|
5 ஆனாலும் மக்களுக்குள்ளே கலகமுண்டாகாதபடிக்குப் பண்டிகையிலே அப்படிச் செய்யக்கூடாது என்றார்கள்.
కిన్తు తైరుక్తం మహకాలే న ధర్త్తవ్యః, ధృతే ప్రజానాం కలహేన భవితుం శక్యతే|
6 இயேசு பெத்தானியாவில் குஷ்டரோகியாக இருந்த சீமோன் வீட்டில் இருக்கும்போது,
తతో బైథనియాపురే శిమోనాఖ్యస్య కుష్ఠినో వేశ్మని యీశౌ తిష్ఠతి
7 ஒரு பெண் விலையேறப்பெற்ற பரிமள தைலமுள்ள வெள்ளைக்கல் ஜாடியைக் கொண்டுவந்து, அவர் உணவு பந்தியிலிருக்கும்போது, அந்தத் தைலத்தை அவர் தலையின்மேல் ஊற்றினாள்.
కాచన యోషా శ్వేతోపలభాజనేన మహార్ఘ్యం సుగన్ధి తైలమానీయ భోజనాయోపవిశతస్తస్య శిరోభ్యషేచత్|
8 அவருடைய சீடர்கள் அதைக் கண்டு கோபமடைந்து: இந்த வீண் செலவு என்னத்திற்கு?
కిన్తు తదాలోక్య తచ్ఛిష్యైః కుపితైరుక్తం, కుత ఇత్థమపవ్యయతే?
9 இந்தத் தைலத்தை அதிக விலைக்கு விற்று, தரித்திரர்களுக்குக் கொடுக்கலாமே என்றார்கள்.
చేదిదం వ్యక్రేష్యత, తర్హి భూరిమూల్యం ప్రాప్య దరిద్రేభ్యో వ్యతారిష్యత|
10 ௧0 இயேசு அதை அறிந்து, அவர்களைப் பார்த்து: நீங்கள் இந்தப் பெண்ணை ஏன் தொந்தரவு படுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்செயலைச் செய்திருக்கிறாள்.
యీశునా తదవగత్య తే సముదితాః, యోషామేనాం కుతో దుఃఖినీం కురుథ, సా మాం ప్రతి సాధు కర్మ్మాకార్షీత్|
11 ௧௧ தரித்திரர்கள் எப்போதும் உங்களிடம் இருக்கிறார்கள்; நானோ எப்போதும் உங்களிடம் இருக்கமாட்டேன்.
యుష్మాకమం సమీపే దరిద్రాః సతతమేవాసతే, కిన్తు యుష్మాకమన్తికేహం నాసే సతతం|
12 ௧௨ இவள் இந்தத் தைலத்தை என் சரீரத்தின்மேல் ஊற்றினது என்னை அடக்கம் செய்வதற்கு சமமான செய்கையாக இருக்கிறது.
సా మమ కాయోపరి సుగన్ధితైలం సిక్త్వా మమ శ్మశానదానకర్మ్మాకార్షీత్|
13 ௧௩ இந்த நற்செய்தி உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
అతోహం యుష్మాన్ తథ్యం వదామి సర్వ్వస్మిన్ జగతి యత్ర యత్రైష సుసమాచారః ప్రచారిష్యతే, తత్ర తత్రైతస్యా నార్య్యాః స్మరణార్థమ్ కర్మ్మేదం ప్రచారిష్యతే|
14 ௧௪ அப்பொழுது, பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் பிரதான ஆசாரியர்களிடத்திற்குப்போய்:
తతో ద్వాదశశిష్యాణామ్ ఈష్కరియోతీయయిహూదానామక ఏకః శిష్యః ప్రధానయాజకానామన్తికం గత్వా కథితవాన్,
15 ௧௫ நான் அவரை உங்களுக்குக் காட்டிக்கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க ஒத்துக்கொண்டார்கள்.
యది యుష్మాకం కరేషు యీశుం సమర్పయామి, తర్హి కిం దాస్యథ? తదానీం తే తస్మై త్రింశన్ముద్రా దాతుం స్థిరీకృతవన్తః|
16 ௧௬ அதுமுதல் அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்கு நேரம் பார்த்துக்கொண்டிருந்தான்.
స తదారభ్య తం పరకరేషు సమర్పయితుం సుయోగం చేష్టితవాన్|
17 ௧௭ புளிப்பில்லாத அப்பப்பண்டிகையின் முதல்நாளிலே, சீடர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்கே உமக்கு ஆயத்தம்செய்ய விருப்பமாக இருக்கிறீர் என்று கேட்டார்கள்.
అనన్తరం కిణ్వశూన్యపూపపర్వ్వణః ప్రథమేహ్ని శిష్యా యీశుమ్ ఉపగత్య పప్రచ్ఛుః భవత్కృతే కుత్ర వయం నిస్తారమహభోజ్యమ్ ఆయోజయిష్యామః? భవతః కేచ్ఛా?
18 ௧௮ அதற்கு அவர்: நீங்கள் நகரத்திலே இன்னானிடத்திற்குப்போய்: என் வேளை சமீபமாக இருக்கிறது, உன் வீட்டிலே என் சீடர்களோடுகூட பஸ்காவை ஆசரிப்பேன் என்று போதகர் சொல்லுகிறார் என்று அவனுக்குச் சொல்லுங்கள் என்றார்.
తదా స గదితవాన్, మధ్యేనగరమముకపుంసః సమీపం వ్రజిత్వా వదత, గురు ర్గదితవాన్, మత్కాలః సవిధః, సహ శిష్యైస్త్వదాలయే నిస్తారమహభోజ్యం భోక్ష్యే|
19 ௧௯ இயேசு கற்பித்தபடி சீடர்கள்போய், பஸ்காவை ஆயத்தம் செய்தார்கள்.
తదా శిష్యా యీశోస్తాదృశనిదేశానురూపకర్మ్మ విధాయ తత్ర నిస్తారమహభోజ్యమాసాదయామాసుః|
20 ௨0 மாலைநேரமானபோது, பன்னிரண்டுபேரோடும் அவர் பந்தியிருந்தார்.
తతః సన్ధ్యాయాం సత్యాం ద్వాదశభిః శిష్యైః సాకం స న్యవిశత్|
21 ௨௧ அவர்கள் உணவு உண்ணும்போது, அவர்: உங்களிலொருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
అపరం భుఞ్జాన ఉక్తవాన్ యుష్మాన్ తథ్యం వదామి, యుష్మాకమేకో మాం పరకరేషు సమర్పయిష్యతి|
22 ௨௨ அப்பொழுது, அவர்கள் மிகவும் துக்கமடைந்து, அவரைப் பார்த்து: ஆண்டவரே, நானோ, நானோ? என்று ஒவ்வொருவராகக் கேட்கத்தொடங்கினார்கள்.
తదా తేఽతీవ దుఃఖితా ఏకైకశో వక్తుమారేభిరే, హే ప్రభో, స కిమహం?
23 ௨௩ அவர் மறுமொழியாக: என்னோடுகூடத் தட்டில் கையிடுகிறவனே என்னைக் காட்டிக்கொடுப்பான்.
తతః స జగాద, మయా సాకం యో జనో భోజనపాత్రే కరం సంక్షిపతి, స ఏవ మాం పరకరేషు సమర్పయిష్యతి|
24 ௨௪ மனிதகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆனாலும், எந்த மனிதனால் மனிதகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனிதனுக்கு ஐயோ; அந்த மனிதன் பிறக்காதிருந்தானானால் அவனுக்கு நலமாக இருக்கும் என்றார்.
మనుజసుతమధి యాదృశం లిఖితమాస్తే, తదనురూపా తద్గతి ర్భవిష్యతి; కిన్తు యేన పుంసా స పరకరేషు సమర్పయిష్యతే, హా హా చేత్ స నాజనిష్యత, తదా తస్య క్షేమమభవిష్యత్|
25 ௨௫ அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவரைப் பார்த்து: ரபீ, நானோ? என்றான்; அதற்கு அவர்: நீ சொன்னபடிதான் என்றார்.
తదా యిహూదానామా యో జనస్తం పరకరేషు సమర్పయిష్యతి, స ఉక్తవాన్, హే గురో, స కిమహం? తతః స ప్రత్యుక్తవాన్, త్వయా సత్యం గదితమ్|
26 ௨௬ அவர்கள் உணவு உண்ணும்போது, இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீடர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிச்சாப்பிடுங்கள், இது என்னுடைய சரீரமாக இருக்கிறது என்றார்.
అనన్తరం తేషామశనకాలే యీశుః పూపమాదాయేశ్వరీయగుణాననూద్య భంక్త్వా శిష్యేభ్యః ప్రదాయ జగాద, మద్వపుఃస్వరూపమిమం గృహీత్వా ఖాదత|
27 ௨௭ பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, நன்றிசெலுத்தி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லோரும் இதிலே பானம்பண்ணுங்கள்;
పశ్చాత్ స కంసం గృహ్లన్ ఈశ్వరీయగుణాననూద్య తేభ్యః ప్రదాయ కథితవాన్, సర్వ్వై ర్యుష్మాభిరనేన పాతవ్యం,
28 ௨௮ இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புதிய ஒப்பந்தத்திற்குரிய என்னுடைய இரத்தமாக இருக்கிறது.
యస్మాదనేకేషాం పాపమర్షణాయ పాతితం యన్మన్నూత్ననియమరూపశోణితం తదేతత్|
29 ௨௯ இதுமுதல் இந்தத் திராட்சைப்பழரசத்தை புதிதானதாக உங்களோடுகூட என் பிதாவின் ராஜ்யத்திலே நான் பானம்பண்ணும் நாள்வரை இதைப் பானம்பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
అపరమహం నూత్నగోస్తనీరసం న పాస్యామి, తావత్ గోస్తనీఫలరసం పునః కదాపి న పాస్యామి|
30 ௩0 அவர்கள் துதிப்பாட்டைப் பாடினபின்பு, ஒலிவமலைக்குப் புறப்பட்டுப்போனார்கள்.
పశ్చాత్ తే గీతమేకం సంగీయ జైతునాఖ్యగిరిం గతవన్తః|
31 ௩௧ அப்பொழுது, இயேசு அவர்களைப் பார்த்து: மேய்ப்பனை வெட்டுவேன்; மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இரவிலே நீங்கள் எல்லோரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள்.
తదానీం యీశుస్తానవోచత్, అస్యాం రజన్యామహం యుష్మాకం సర్వ్వేషాం విఘ్నరూపో భవిష్యామి, యతో లిఖితమాస్తే, "మేషాణాం రక్షకో యస్తం ప్రహరిష్యామ్యహం తతః| మేషాణాం నివహో నూనం ప్రవికీర్ణో భవిష్యతి"||
32 ௩௨ ஆனாலும் நான் உயிர்த்தெழுந்தபின்பு, உங்களுக்கு முன்னே கலிலேயாவிற்குப் போவேன் என்றார்.
కిన్తు శ్మశానాత్ సముత్థాయ యుష్మాకమగ్రేఽహం గాలీలం గమిష్యామి|
33 ௩௩ பேதுரு அவருக்கு மறுமொழியாக: உமதுநிமித்தம் எல்லோரும் இடறலடைந்தாலும், நான் ஒருபோதும் இடறலடையமாட்டேன் என்றான்.
పితరస్తం ప్రోవాచ, భవాంశ్చేత్ సర్వ్వేషాం విఘ్నరూపో భవతి, తథాపి మమ న భవిష్యతి|
34 ௩௪ இயேசு அவனைப் பார்த்து: இந்த இரவிலே சேவல் கூவுகிறதற்கு முன்னே, நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று, உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
తతో యీశునా స ఉక్తః, తుభ్యమహం తథ్యం కథయామి, యామిన్యామస్యాం చరణాయుధస్య రవాత్ పూర్వ్వం త్వం మాం త్రి ర్నాఙ్గీకరిష్యసి|
35 ௩௫ அதற்குப் பேதுரு: நான் உம்மோடே மரிக்கவேண்டியதாயிருந்தாலும் உம்மை மறுதலிக்கமாட்டேன் என்றான்; சீடர்கள் எல்லோரும் அப்படியே சொன்னார்கள்.
తతః పితర ఉదితవాన్, యద్యపి త్వయా సమం మర్త్తవ్యం, తథాపి కదాపి త్వాం న నాఙ్గీకరిష్యామి; తథైవ సర్వ్వే శిష్యాశ్చోచుః|
36 ௩௬ அப்பொழுது, இயேசு அவர்களோடு கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்து, சீடர்களைப் பார்த்து: நான் அங்கே போய் ஜெபம்செய்யும்வரை நீங்கள் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி;
అనన్తరం యీశుః శిష్యైః సాకం గేత్శిమానీనామకం స్థానం ప్రస్థాయ తేభ్యః కథితవాన్, అదః స్థానం గత్వా యావదహం ప్రార్థయిష్యే తావద్ యూయమత్రోపవిశత|
37 ௩௭ பேதுருவையும் செபெதேயுவின் குமாரர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டுபோய், துக்கமடையவும் வியாகுலப்படவும் தொடங்கினார்.
పశ్చాత్ స పితరం సివదియసుతౌ చ సఙ్గినః కృత్వా గతవాన్, శోకాకులోఽతీవ వ్యథితశ్చ బభూవ|
38 ௩௮ அப்பொழுது, அவர்: என் ஆத்துமா மரணத்திற்குரிய துக்கங்கொண்டிருக்கிறது; நீங்கள் இங்கே தங்கி, என்னோடுகூட விழித்திருங்கள் என்று சொல்லி,
తానవాదీచ్చ మృతియాతనేవ మత్ప్రాణానాం యాతనా జాయతే, యూయమత్ర మయా సార్ద్ధం జాగృత|
39 ௩௯ சிறிது விலகிப்போய், முகங்குப்புறவிழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிச் செய்யும்; ஆனாலும் என் விருப்பத்தின்படியல்ல, உம்முடைய விருப்பத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்செய்தார்.
తతః స కిఞ్చిద్దూరం గత్వాధోముఖః పతన్ ప్రార్థయాఞ్చక్రే, హే మత్పితర్యది భవితుం శక్నోతి, తర్హి కంసోఽయం మత్తో దూరం యాతు; కిన్తు మదిచ్ఛావత్ న భవతు, త్వదిచ్ఛావద్ భవతు|
40 ௪0 பின்பு, அவர் சீடர்களிடத்தில் வந்து, அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக் கண்டு, பேதுருவைப் பார்த்து: நீங்கள் ஒருமணி நேரமாவது என்னோடுகூட விழித்திருக்கக்கூடாதா?
తతః స శిష్యానుపేత్య తాన్ నిద్రతో నిరీక్ష్య పితరాయ కథయామాస, యూయం మయా సాకం దణ్డమేకమపి జాగరితుం నాశన్కుత?
41 ௪௧ நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்செய்யுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்.
పరీక్షాయాం న పతితుం జాగృత ప్రార్థయధ్వఞ్చ; ఆత్మా సముద్యతోస్తి, కిన్తు వపు ర్దుర్బ్బలం|
42 ௪௨ அவர் மறுபடியும் இரண்டாம்முறை போய்: என் பிதாவே, இந்தப் பாத்திரத்தில் நான் பானம்பண்ணினாலொழிய இது என்னைவிட்டு நீங்கக்கூடாதாகில், உம்முடைய விருப்பத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபம்செய்தார்.
స ద్వితీయవారం ప్రార్థయాఞ్చక్రే, హే మత్తాత, న పీతే యది కంసమిదం మత్తో దూరం యాతుం న శక్నోతి, తర్హి త్వదిచ్ఛావద్ భవతు|
43 ௪௩ அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மறுபடியும் நித்திரைபண்ணுகிறதைக் கண்டார்; அவர்களுடைய கண்கள் மிகுந்த நித்திரைமயக்கம் அடைந்திருந்தது.
స పునరేత్య తాన్ నిద్రతో దదర్శ, యతస్తేషాం నేత్రాణి నిద్రయా పూర్ణాన్యాసన్|
44 ௪௪ அவர் மறுபடியும் அவர்களைவிட்டுப்போய், மூன்றாம்முறையும் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்செய்தார்.
పశ్చాత్ స తాన్ విహాయ వ్రజిత్వా తృతీయవారం పూర్వ్వవత్ కథయన్ ప్రార్థితవాన్|
45 ௪௫ பின்பு அவர் தம்முடைய சீடர்களிடத்தில் வந்து: இன்னும் நித்திரைபண்ணி இளைப்பாறுகிறீர்களா? இதோ, மனிதகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிற நேரம்வந்தது.
తతః శిష్యానుపాగత్య గదితవాన్, సామ్ప్రతం శయానాః కిం విశ్రామ్యథ? పశ్యత, సమయ ఉపాస్థాత్, మనుజసుతః పాపినాం కరేషు సమర్ప్యతే|
46 ௪௬ என்னைக் காட்டிக்கொடுக்கிறவன், இதோ, வந்துவிட்டான், எழுந்திருங்கள், போவோம் என்றார்.
ఉత్తిష్ఠత, వయం యామః, యో మాం పరకరేషు మసర్పయిష్యతి, పశ్యత, స సమీపమాయాతి|
47 ௪௭ அவர் இப்படிப் பேசும்போது, பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான்; அவனோடுகூட பிரதான ஆசாரியர்களும் மக்களின் மூப்பர்களும் அனுப்பின திரளான மக்கள் பட்டயங்களையும் தடிகளையும் பிடித்துக்கொண்டுவந்தார்கள்.
ఏతత్కథాకథనకాలే ద్వాదశశిష్యాణామేకో యిహూదానామకో ముఖ్యయాజకలోకప్రాచీనైః ప్రహితాన్ అసిధారియష్టిధారిణో మనుజాన్ గృహీత్వా తత్సమీపముపతస్థౌ|
48 ௪௮ அவரைக் காட்டிக்கொடுக்கிறவன்: நான் எவனை முத்தம்செய்வேனோ அவன்தான், அவனைப் பிடித்துக்கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான்.
అసౌ పరకరేష్వర్పయితా పూర్వ్వం తాన్ ఇత్థం సఙ్కేతయామాస, యమహం చుమ్బిష్యే, సోఽసౌ మనుజః, సఏవ యుష్మాభి ర్ధార్య్యతాం|
49 ௪௯ உடனே, அவன் இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, வாழ்க என்று சொல்லி, அவரை முத்தம்செய்தான்.
తదా స సపది యీశుముపాగత్య హే గురో, ప్రణమామీత్యుక్త్వా తం చుచుమ్బే|
50 ௫0 இயேசு அவனைப் பார்த்து; நண்பனே, எதற்காக வந்திருக்கிறாய் என்றார். அப்பொழுது, அவர்கள் கிட்டவந்து, இயேசுவைப் பிடித்தார்கள்.
తదా యీశుస్తమువాచ, హే మిత్రం కిమర్థమాగతోసి? తదా తైరాగత్య యీశురాక్రమ్య దఘ్రే|
51 ௫௧ அப்பொழுது இயேசுவோடிருந்தவர்களில் ஒருவன் கையை நீட்டித் தன் பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனின் காது அறுந்துபோக வெட்டினான்.
తతో యీశోః సఙ్గినామేకః కరం ప్రసార్య్య కోషాదసిం బహిష్కృత్య మహాయాజకస్య దాసమేకమాహత్య తస్య కర్ణం చిచ్ఛేద|
52 ௫௨ அப்பொழுது, இயேசு அவனைப் பார்த்து: உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற அனைவரும் பட்டயத்தால் அழிந்துபோவார்கள்.
తతో యీశుస్తం జగాద, ఖడ్గం స్వస్థానే నిధేహి యతో యే యే జనా అసిం ధారయన్తి, తఏవాసినా వినశ్యన్తి|
53 ௫௩ நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதர்களை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா?
అపరం పితా యథా మదన్తికం స్వర్గీయదూతానాం ద్వాదశవాహినీతోఽధికం ప్రహిణుయాత్ మయా తముద్దిశ్యేదానీమేవ తథా ప్రార్థయితుం న శక్యతే, త్వయా కిమిత్థం జ్ఞాయతే?
54 ௫௪ அப்படிச் செய்வேனானால், இவ்விதமாக நடைபெறவேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும் என்றார்.
తథా సతీత్థం ఘటిష్యతే ధర్మ్మపుస్తకస్య యదిదం వాక్యం తత్ కథం సిధ్యేత్?
55 ௫௫ அந்த நேரத்திலே இயேசு மக்களைப் பார்த்து: திருடனைப்பிடிக்கப் புறப்படுகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்; நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே உட்கார்ந்து தேவாலயத்தில் உபதேசம் செய்துகொண்டிருந்தேன்; அப்பொழுது, நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே.
తదానీం యీశు ర్జననివహం జగాద, యూయం ఖడ్గయష్టీన్ ఆదాయ మాం కిం చౌరం ధర్త్తుమాయాతాః? అహం ప్రత్యహం యుష్మాభిః సాకముపవిశ్య సముపాదిశం, తదా మాం నాధరత;
56 ௫௬ ஆனாலும் தீர்க்கதரிசிகள் எழுதியிருக்கிற வசனங்கள் நிறைவேறும்படி இவைகளெல்லாம் நடைபெறுகிறது என்றார். அப்பொழுது, சீடர்களெல்லோரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள்.
కిన్తు భవిష్యద్వాదినాం వాక్యానాం సంసిద్ధయే సర్వ్వమేతదభూత్| తదా సర్వ్వే శిష్యాస్తం విహాయ పలాయన్త|
57 ௫௭ இயேசுவைப் பிடித்தவர்கள் அவரைப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அங்கே வேதபண்டிதர்களும் மூப்பர்களும் கூடிவந்திருந்தார்கள்.
అనన్తరం తే మనుజా యీశుం ధృత్వా యత్రాధ్యాపకప్రాఞ్చః పరిషదం కుర్వ్వన్త ఉపావిశన్ తత్ర కియఫానామకమహాయాజకస్యాన్తికం నిన్యుః|
58 ௫௮ பேதுரு, தூரத்திலே அவருக்குப் பின்னேசென்று, பிரதான ஆசாரியனுடைய அரண்மனை வரைக்கும் வந்து, உள்ளே நுழைந்து, முடிவைப் பார்க்கும்படி காவலாளிகளோடு உட்கார்ந்தான்.
కిన్తు శేషే కిం భవిష్యతీతి వేత్తుం పితరో దూరే తత్పశ్చాద్ వ్రజిత్వా మహాయాజకస్యాట్టాలికాం ప్రవిశ్య దాసైః సహిత ఉపావిశత్|
59 ௫௯ பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் சங்கத்தினர்கள் அனைவரும் இயேசுவைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி தேடினார்கள்;
తదానీం ప్రధానయాజకప్రాచీనమన్త్రిణః సర్వ్వే యీశుం హన్తుం మృషాసాక్ష్యమ్ అలిప్సన్త,
60 ௬0 ஒருவரும் கிடைக்கவில்லை; அநேகர் வந்து பொய்ச்சாட்சி சொல்லியும் அவர்கள் சாட்சி ஏற்புடையதாயில்லை; கடைசியிலே இரண்டு பொய்ச்சாட்சிகள் வந்து:
కిన్తు న లేభిరే| అనేకేషు మృషాసాక్షిష్వాగతేష్వపి తన్న ప్రాపుః|
61 ௬௧ தேவனுடைய ஆலயத்தை இடித்துப்போடவும், மூன்று நாட்களுக்குள்ளே அதைக் கட்டவும் என்னாலே ஆகும் என்று இவன் சொன்னான் என்றார்கள்.
శేషే ద్వౌ మృషాసాక్షిణావాగత్య జగదతుః, పుమానయమకథయత్, అహమీశ్వరమన్దిరం భంక్త్వా దినత్రయమధ్యే తన్నిర్మ్మాతుం శక్నోమి|
62 ௬௨ அப்பொழுது, பிரதான ஆசாரியன் எழுந்திருந்து, அவரைப் பார்த்து: இவர்கள் உனக்கு விரோதமாக சாட்சி சொல்லுகிறதைக்குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்றான்.
తదా మహాయాజక ఉత్థాయ యీశుమ్ అవాదీత్| త్వం కిమపి న ప్రతివదసి? త్వామధి కిమేతే సాక్ష్యం వదన్తి?
63 ௬௩ இயேசுவோ பேசாமலிருந்தார். அப்பொழுது, பிரதான ஆசாரியன் அவரைப் பார்த்து: நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன் என்றான்.
కిన్తు యీశు ర్మౌనీభూయ తస్యౌ| తతో మహాయాజక ఉక్తవాన్, త్వామ్ అమరేశ్వరనామ్నా శపయామి, త్వమీశ్వరస్య పుత్రోఽభిషిక్తో భవసి నవేతి వద|
64 ௬௪ அதற்கு இயேசு: நீர் சொன்னபடிதான்; அன்றியும், மனிதகுமாரன் சர்வவல்லவருடைய வலதுபக்கத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
యీశుః ప్రత్యవదత్, త్వం సత్యముక్తవాన్; అహం యుష్మాన్ తథ్యం వదామి, ఇతఃపరం మనుజసుతం సర్వ్వశక్తిమతో దక్షిణపార్శ్వే స్థాతుం గగణస్థం జలధరానారుహ్యాయాన్తం వీక్షధ్వే|
65 ௬௫ அப்பொழுது பிரதான ஆசாரியன் தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு: இவன் தேவனை நிந்தித்தான்; இனி சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன? இதோ, இவன் நிந்தித்ததை இப்பொழுது கேட்டீர்களே.
తదా మహాయాజకో నిజవసనం ఛిత్త్వా జగాద, ఏష ఈశ్వరం నిన్దితవాన్, అస్మాకమపరసాక్ష్యేణ కిం ప్రయోజనం? పశ్యత, యూయమేవాస్యాస్యాద్ ఈశ్వరనిన్దాం శ్రుతవన్తః,
66 ௬௬ உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது என்று கேட்டான். அதற்கு அவர்கள்: மரணத்திற்குப் பாத்திரனாக இருக்கிறான் என்றார்கள்.
యుష్మాభిః కిం వివిచ్యతే? తే ప్రత్యూచుః, వధార్హోఽయం|
67 ௬௭ அப்பொழுது, அவருடைய முகத்தில் துப்பி, அவரைக் குட்டினார்கள்; சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து:
తతో లోకైస్తదాస్యే నిష్ఠీవితం కేచిత్ ప్రతలమాహత్య కేచిచ్చ చపేటమాహత్య బభాషిరే,
68 ௬௮ கிறிஸ்துவே, உம்மை அடித்தவன் யார்? அதை ஞான தரிசனத்தினால் எங்களுக்குச் சொல்லும் என்றார்கள்.
హే ఖ్రీష్ట త్వాం కశ్చపేటమాహతవాన్? ఇతి గణయిత్వా వదాస్మాన్|
69 ௬௯ அந்தநேரத்தில் பேதுரு வெளியே வந்து அரண்மனை முற்றத்தில் உட்கார்ந்திருந்தான். அப்பொழுது, வேலைக்காரி ஒருத்தி அவனிடத்தில் வந்து: நீயும் கலிலேயனாகிய இயேசுவோடுகூட இருந்தாய் என்றாள்.
పితరో బహిరఙ్గన ఉపవిశతి, తదానీమేకా దాసీ తముపాగత్య బభాషే, త్వం గాలీలీయయీశోః సహచరఏకః|
70 ௭0 அதற்கு அவன்: நீ சொல்லுகிறது எனக்குத் தெரியாது என்று எல்லோருக்கும் முன்பாக மறுதலித்தான்.
కిన్తు స సర్వ్వేషాం సమక్షమ్ అనఙ్గీకృత్యావాదీత్, త్వయా యదుచ్యతే, తదర్థమహం న వేద్మి|
71 ௭௧ அவன், வாசல் மண்டபத்திற்குப்போனபொழுது வேறொருத்தி அவனைக் கண்டு: இவனும் நசரேயனாகிய இயேசுவோடுகூட இருந்தான் என்று அங்கே இருந்தவர்களுக்குச் சொன்னாள்.
తదా తస్మిన్ బహిర్ద్వారం గతే ఽన్యా దాసీ తం నిరీక్ష్య తత్రత్యజనానవదత్, అయమపి నాసరతీయయీశునా సార్ద్ధమ్ ఆసీత్|
72 ௭௨ அவனோ: அந்த மனிதனை நான் அறியேன் என்று சத்தியம் செய்து, மறுபடியும் மறுதலித்தான்.
తతః స శపథేన పునరనఙ్గీకృత్య కథితవాన్, తం నరం న పరిచినోమి|
73 ௭௩ சிறிதுநேரத்திற்குப்பின்பு அங்கே நின்றவர்கள் பேதுருவினிடத்தில் வந்து: உண்மையாகவே நீயும் அவர்களில் ஒருவன்; உன் பேச்சு உன்னை காட்டிக்கொடுக்கிறது என்றார்கள்.
క్షణాత్ పరం తిష్ఠన్తో జనా ఏత్య పితరమ్ అవదన్, త్వమవశ్యం తేషామేక ఇతి త్వదుచ్చారణమేవ ద్యోతయతి|
74 ௭௪ அப்பொழுது அவன்: அந்த மனிதனைத் தெரியாது என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம் செய்யவும் தொடங்கினான். உடனே சேவல் கூவியது.
కిన్తు సోఽభిశప్య కథితవాన్, తం జనం నాహం పరిచినోమి, తదా సపది కుక్కుటో రురావ|
75 ௭௫ அப்பொழுது பேதுரு: சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று இயேசு தன்னிடத்தில் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொண்டு, வெளியேபோய், மனங்கசந்து அழுதான்.
కుక్కుటరవాత్ ప్రాక్ త్వం మాం త్రిరపాహ్నోష్యసే, యైషా వాగ్ యీశునావాది తాం పితరః సంస్మృత్య బహిరిత్వా ఖేదాద్ భృశం చక్రన్ద|

< மத்தேயு 26 >