< மத்தேயு 23 >

1 பின்பு இயேசு மக்களையும் தம்முடைய சீடர்களையும் பார்த்து:
ישוע פנה אל הקהל ואל תלמידיו ואמר:
2 வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் மோசேயினுடைய இருக்கையில் உட்கார்ந்திருக்கிறார்கள்;
”הסופרים והפרושים יושבים על כסא משה.
3 ஆகவே, நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற எல்லாவற்றையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்களுடைய செய்கையின்படி செய்யாமலிருங்கள்; ஏனென்றால், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள்.
לכן טוב שתשמעו בקולם ותעשו את מה שהם אומרים, אבל בשום אופן אל תעשו את מה שהם עושים! כי הם עצמם אינם עושים את מה שהם דורשים מכם לעשות.
4 சுமக்கமுடியாத பாரமான சுமைகளைக் கட்டி மனிதர்களுடைய தோள்களின்மேல் சுமத்துகிறார்கள்; தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமாட்டார்கள்.
הם מכבידים עליכם בדרישות שונות, בעוד שבעצמם לא מוכנים להרים אצבע.
5 தங்களுடைய செயல்களையெல்லாம் மனிதர்கள் காணவேண்டுமென்று செய்கிறார்கள்; தங்களுடைய காப்புநாடாக்களை அகலமாக்கி, தங்களுடைய ஆடைகளின் தொங்கல்களைப் பெரிதாக்கி,
”הם עושים את כל מעשיהם בשביל שיראו אותם. הם מעמידים פני צדיקים, מניחים תפילין בציבור ומאריכים את הציציות שלהם.
6 விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெப ஆலயங்களில் முதன்மையான இருக்கைகளையும்,
במסיבות הם אוהבים לשבת בראש השולחן, ובבית הכנסת – במקומות השמורים.
7 சந்தைவெளிகளில் வணக்கங்களையும், மனிதர்களால் ரபீ, ரபீ, என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள்.
הם אוהבים שנותנים להם כבוד ברחובות ושקוראים להם’רבי‘.
8 நீங்களோ ரபீ என்று அழைக்கப்படாமலிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராக இருக்கிறார், நீங்கள் எல்லோரும் சகோதரர்களாக இருக்கிறீர்கள்.
אל תרשו לאיש לקרוא לכם כך, כי ה׳ לבדו הוא רבכם, וכולכם שווים כאחים.
9 பூமியிலே ஒருவனையும் உங்களுடைய பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாக இருக்கிறார்.
כמו כן אל תפנו לאיש בתואר’אבי‘, כי רק לאלוהים שבשמים עליכם לקרוא’אבי‘.
10 ௧0 நீங்கள் போதகர் என்றும் அழைக்கப்படாமலிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராக இருக்கிறார்.
אל תרשו שיקראו לכם’מורי ורבי‘, כי יש לכם מורה ורב אחד בלבד, והוא המשיח.
11 ௧௧ உங்களில் பெரியவனாக இருக்கிறவன் உங்களுக்கு வேலைக்காரனாக இருக்கவேண்டும்.
”ככל שתרבו לשרת את הזולת בענווה, כך תגדלו בעצמכם. כדי להיות גדולים ביותר – היו עבדים!
12 ௧௨ தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.
מי שמכבד את עצמו יושפל ומי שמשפיל את עצמו יכובד.
13 ௧௩ மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, மனிதர்கள் பிரவேசிக்கமுடியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்கப்போகிறவர்களை பிரவேசிக்கவிடுகிறதுமில்லை.
”אוי לכם, הפרושים והסופרים, צבועים אתם! לא די שאינכם נכנסים בעצמכם למלכות השמים, אתם גם מונעים מאחרים להיכנס! אתם מעמידים פני צדיקים ומתפללים באריכות באמצע הרחוב, וכל זאת בזמן שאתם מגרשים אלמנות מבתיהן. צבועים שכמוכם!
14 ௧௪ மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, பார்வைக்காக நீண்ட ஜெபம்செய்து, விதவைகளின் வீடுகளை அழித்துப்போடுகிறீர்கள்; இதினிமித்தம் அதிக தண்டனையை அடைவீர்கள்.
15 ௧௫ மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்களுடைய மதத்தானாக்கும்படி கடலையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்களுடைய மதத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாக நரகத்தின் மகனாக்குகிறீர்கள். (Geenna g1067)
כן, אוי לכם, צבועים! אתם נוסעים למרחקים כדי לגייר אדם אחד, ולאחר שהתגייר אתם הופכים אותו לבן־גיהינום עוד יותר מכם! (Geenna g1067)
16 ௧௬ குருடர்களான வழிகாட்டிகளே! உங்களுக்கு ஐயோ, எவனாவது தேவாலயத்தின்பேரில் சத்தியம்செய்தால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாவது தேவாலயத்தின் பொன்னின்பேரில் சத்தியம்செய்தால் அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள்.
”אוי לכם, מנהיגים עיוורים! הכלל שלכם הוא:’אם נשבעת במקדש ה׳ מותר לך להפר את שבועתך, אולם אם נשבעת בזהב של בית־המקדש אסור לך להפר את שבועתך‘.
17 ௧௭ மதிகேடர்களே, குருடர்களே! எது முக்கியம்? பொன்னோ, பொன்னைப் பரிசுத்தமாக்குகிற தேவாலயமோ?
עיוורים טיפשים! מה חשוב יותר, הזהב או המקדש שמקדש את הזהב?
18 ௧௮ மேலும், எவனாவது பலிபீடத்தின்பேரில் சத்தியம்செய்தால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாவது அதின்மேல் இருக்கிற காணிக்கையின்பேரில் சத்தியம்செய்தால், அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள்.
”כמו כן אתם אומרים:’שבועה במזבח אינה מחייבת ומותר להפר אותה, אך שבועה בקורבן שעל המזבח – מחייבת‘.
19 ௧௯ மதிகேடர்களே, குருடர்களே! எது முக்கியம்? காணிக்கையோ, காணிக்கையைப் பரிசுத்தமாக்குகிற பலிபீடமோ?
עיוורים! מה גדול וחשוב יותר, הקורבן שעל המזבח או המזבח עצמו המקדש את הקורבן?
20 ௨0 ஆகவே, பலிபீடத்தின்பேரில் சத்தியம்செய்கிறவன் அதின்பேரிலும் அதின்மேலுள்ள எல்லாவற்றின்பேரிலும் சத்தியம்செய்கிறான்.
הרי אם אתם נשבעים’במזבח‘, אתם נשבעים למעשה בו ובכל אשר עליו.
21 ௨௧ தேவாலயத்தின்பேரில் சத்தியம்செய்கிறவன் அதின்பேரிலும் அதில் வாசமாயிருக்கிறவர்பேரிலும் சத்தியம்செய்கிறான்.
כאשר אתם נשבעים’במקדש‘, אתם נשבעים למעשה בו ובאלוהים השוכן בו.
22 ௨௨ பரலோகத்தின்பேரில் சத்தியம்செய்கிறவன் தேவனுடைய சிங்காசனத்தின்பேரிலும் அதில் வீற்றிருக்கிறவர்பேரிலும் சத்தியம்செய்கிறான்.
ואם אתם נשבעים’בשמים‘, אתם נשבעים בכסא אלוהים ובאלוהים עצמו.
23 ௨௩ மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் புதினாவிலும் வெந்தயத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள், இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாமலிருக்கவேண்டுமே.
”כן, אוי לכם פרושים וסופרים צבועים! אתם מקפידים על הלכות דקדקניות כמו לתת מעשר על עלי נענע בגינה, אולם אתם מתעלמים מהדברים החשובים באמת כמו צדק, רחמים ואמונה! אתם אמנם חייבים לתת מעשר, אולם אסור לכם להזניח את הדברים החשובים יותר.
24 ௨௪ குருடர்களான வழிகாட்டிகளே, கொசு இல்லாதபடி வடிகட்டி, ஒட்டகத்தை விழுங்குகிறவர்களாக இருக்கிறீர்கள்.
מנהיגים עיוורים! אתם מסננים את היתוש ובולעים את הגמל!
25 ௨௫ மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, உணவு மற்றும் தண்ணீர் பாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள்; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது.
”אוי לכם, סופרים ופרושים צבועים שכמוכם! אתם מקפידים כל־כך על צחצוח הכוס מבחוץ, אולם תוכה מצחין מריקבון!
26 ௨௬ குருடனான பரிசேயனே! உணவு மற்றும் தண்ணீர் பாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு.
פרושים עיוורים, טהרו תחילה את פנים הכלי ואז כולו יהיה נקי!
27 ௨௭ மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாக இருக்கிறீர்கள், அவைகள் வெளியே அலங்காரமாகக் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் எல்லா அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும்.
”אוי לכם, סופרים ופרושים! אתם דומים לקברים הנראים יפים ומפוארים מבחוץ, אך בתוכם הם מלאים עצמות מתים, ריקבון וטומאה.
28 ௨௮ அப்படியே நீங்களும் வெளியே மனிதர்களுக்கு நீதிமான்களாகக் காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்.
אתם משתדלים להיראות קדושים, אולם בפנים לבכם מלא צביעות וטומאה.
29 ௨௯ மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் தீர்க்கதரிசிகளின் கல்லறைகளைக் கட்டி, நீதிமான்களின் சமாதிகளை அலங்கரித்து:
כן, אוי לכם פרושים, ואוי לכם סופרים – צבועים שכמוכם! אתם בונים מצבות לנביאים שאבותיכם הרגו, ומניחים פרחים על קברי אנשי־האלוהים שאבותיכם רצחו, ואתם אומרים:’אנחנו, כמובן, לא היינו מעזים לנהוג כפי שנהגו אבותינו!‘
30 ௩0 எங்களுடைய பிதாக்களின் நாட்களில் இருந்திருந்தோமானால், அவர்களோடு நாங்கள் தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழிக்கு உடன்பட்டிருக்கமாட்டோம் என்கிறீர்கள்.
31 ௩௧ ஆகவே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்தவர்களுக்குப் பிள்ளைகளாக இருக்கிறீர்கள் என்று உங்களைக்குறித்து நீங்களே சாட்சிகளாக இருக்கிறீர்கள்.
”בדבריכם אלה אתם מעידים על עצמכם שהנכם בני רשעים.
32 ௩௨ நீங்களும் உங்களுடைய பிதாக்களின் அக்கிரமத்தின் அளவை நிறைவாக்குங்கள்.
אתם הולכים בעקבות אבותיכם וממלאים את מכסת עוונותיהם.
33 ௩௩ சர்ப்பங்களே, விரியன்பாம்பு குட்டிகளே! நரக ஆக்கினைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவீர்கள்? (Geenna g1067)
נחשים בני נחשים! כיצד תימלטו מעונש הגיהינום? (Geenna g1067)
34 ௩௪ ஆகவே, இதோ, தீர்க்கதரிசிகளையும் ஞானிகளையும் வேதபண்டிதர்களையும் உங்களிடம் அனுப்புகிறேன்; அவர்களில் சிலரைக் கொன்று சிலுவைகளில் அறைவீர்கள், சிலரை உங்களுடைய ஜெப ஆலயங்களில் சாட்டையினால் அடித்து, ஊருக்கு ஊர் துன்பப்படுத்துவீர்கள்;
”אני שולח אליכם נביאים, חכמים וסופרים; אחדים מהם תהרגו בצליבה, ואחרים תלקו בשוטים בבתי הכנסת שלכם, ותרדפו אחריהם מעיר לעיר!
35 ௩௫ நீதிமானாகிய ஆபேலின் இரத்தம் முதல் தேவாலயத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே நீங்கள் கொலைசெய்த பரகியாவின் குமாரனாகிய சகரியாவின் இரத்தம்வரைக்கும், பூமியின்மேல் சிந்தப்பட்ட நீதிமான்களின் இரத்தப்பழியெல்லாம் உங்கள்மேல் வரும்படியாக இப்படிச் செய்வீர்கள்.
וכך תישאו באשמת הריגתם של כל אנשי האלוהים – החל בהבל הצדיק וכלה בזכריה בן־ברכיה, שאותו רצחתם בבית־המקדש בין ההיכל למזבח.
36 ௩௬ இவைகளெல்லாம் இந்தச் சந்ததியின்மேல் வருமென்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ובכן, כל זה יבוא על הדור הזה.
37 ௩௭ எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச்சேர்த்துக்கொள்ளுவதுபோல நான் எத்தனைமுறையோ உன் பிள்ளைகளைக் கூட்டிச்சேர்த்துக்கொள்ள விருப்பமாக இருந்தேன்; உங்களுக்கோ விருப்பமில்லாமல்போனது.
”ירושלים, ירושלים, ההורגת את הנביאים ורוגמת באבנים את שליחי אלוהים! פעמים רבות חפצתי לאסוף את בנייך, כתרנגולת האוספת את אפרוחיה תחת כנפיה, אולם לא רציתם.
38 ௩௮ இதோ, உங்களுடைய வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்.
ועתה אלוהים נוטש את ביתכם,
39 ௩௯ கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் போற்றப்பட்டவர் என்று நீங்கள் சொல்லும்வரை, இதுமுதல் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
ואני אומר לכם שמעתה ואילך לא תראו אותי יותר, עד אשר תאמרו:’ברוך הבא בשם ה׳!‘“

< மத்தேயு 23 >