< மத்தேயு 22 >
1 ௧ இயேசு மறுபடியும் அவர்களோடு உவமைகளாகப் பேசிச் சொன்னது என்னவென்றால்:
୧ଜିସୁ ଆରିତରେକ୍ ଉଦାଅରଣ୍ ଦେଇ ଲକ୍ମନ୍କେ ସିକିଆ ଦେଲା ।
2 ௨ பரலோகராஜ்யம் தன் குமாரனுக்கு திருமணம் செய்த ஒரு ராஜாவிற்கு ஒப்பாக இருக்கிறது.
୨ପର୍ମେସରର୍ ସରଗ୍ ରାଇଜ୍ ଏନ୍ତାରି । ତରେକ୍ ଗଟେକ୍ ରାଜା ତାର୍ ପିଲାର୍ପାଇ ବଜି କରାଇଲା ।
3 ௩ அழைக்கப்பட்டவர்களைத் திருமணத்திற்கு வரச்சொல்லும்படி அவன் தன் வேலைக்காரர்களை அனுப்பினான்; அவர்களோ வர விருப்பமில்லாதிருந்தார்கள்.
୩ଜନ୍ ଲକ୍ମନ୍କେ ବିବା ବଜିଟାନେ କବର୍ ଦେଇରଇଲା, ସେମନ୍କେ ଡାକିଆନ୍ବାକେ ଦାଙ୍ଗ୍ଡାମନ୍କେ ପାଟାଇଲା । ମାତର୍ ସେମନ୍ ନିଚ୍ଲାଇ ।
4 ௪ அப்பொழுது அவன் வேறு வேலைக்காரர்களை அழைத்து: நீங்கள் போய், இதோ, என் விருந்தை ஆயத்தம் செய்தேன், என் எருதுகளும், கொழுத்த கன்றுக்குட்டிகளும் அடிக்கப்பட்டது, எல்லாம் ஆயத்தமாக இருக்கிறது; திருமணத்திற்கு வாருங்கள் என்று அழைக்கப்பட்டவர்களுக்குச் சொல்லுங்களென்று அனுப்பினான்.
୪ବିବାଟାନେ ଗାଗଡ୍ ଚେଲିମନ୍କେ ମାରି ବଜି ଅଇଲା ଆଚେ । ଦାପ୍ରେ ଆସା ବଲି ରାଜା ଆରି ତରେକ୍ ବିନ୍ ଦାଙ୍ଗ୍ଡାମନ୍କେ କଇପାଟାଇଲା ।
5 ௫ அழைக்கப்பட்டவர்களோ அதை அசட்டைசெய்து, ஒருவன் தன் வயலுக்கும், ஒருவன் தன் வியாபாரத்திற்கும் போய்விட்டார்கள்.
୫ମାତର୍ କବର୍ ପାଇରଇଲା ଲକ୍ମନ୍ ଏ କାତା ନ ମାନିକରି ନିଜର୍ ନିଜର୍ ପାଇଟି କର୍ବାର୍ ଦାର୍ଲାଇ । କେତେ ଲକ୍ ବାରଇକରି ପଦାଇ ଉଟିଗାଲାଇ । ଆରି କେତେକ୍ ଲକ୍ ତାକର୍ ଦୁକାନେ ଉଟିଗାଲାଇ ।
6 ௬ மற்றவர்கள் அவனுடைய வேலைக்காரர்களைப்பிடித்து, அவமானப்படுத்தி, கொலைசெய்தார்கள்.
୬ଆରି କେତେ ଲକ୍ ରାଜାର୍ ଦାଙ୍ଗ୍ଡାମନ୍କେ ଦାରି ମାରି ମରାଇଲାଇ ।
7 ௭ ராஜா அதைக் கேள்விப்பட்டு, கோபமடைந்து, தன் படைகளை அனுப்பி, அந்தக் கொலைபாதகர்களை அழித்து, அவர்கள் பட்டணத்தையும் சுட்டெரித்தான்.
୭ରାଜା ରିସାଅଇଜାଇ କରି ସଇନମନ୍କେ ପାଟାଇଲା । ସଇନମନ୍ ଜାଇକରି ସେ ମାରୁମନ୍କେ ମରାଇ ପାକାଇଲାଇ ଆରି ସେମନ୍ ରଇଲା ସଅର୍ ପଡାଇ ପାକାଇଲାଇ ।
8 ௮ அப்பொழுது, அவன் தன் வேலைக்காரர்களைப் பார்த்து: திருமணவிருந்து ஆயத்தமாக இருக்கிறது, அழைக்கப்பட்டவர்களோ அதற்கு தகுதியற்றவர்களாக போனார்கள்.
୮ତାର୍ ପଚେ ରାଜା ଗତିଦାଙ୍ଗ୍ଡାମନ୍କେ ଡାକି କଇଲା, ବିବା ବଜିର୍ ରାନ୍ଦାବାଡା ସାର୍ଲାବେ ମାତର୍ ମୁଇ କବର୍ ଦେଇରଇଲା ଲକ୍ମନ୍ ଏ ବଜି କାଇବାକେ ବାଗ୍ ନାଇ ।
9 ௯ ஆகவே, நீங்கள் வீதிகளிலேபோய், காணப்படுகிற அனைவரையும் திருமணத்திற்கு அழைத்துக்கொண்டு வாருங்கள் என்றான்.
୯ଏବେ ତମେ ଜାଇକରି ଗାଉଁପାଲିର୍ ଗୁଡା ଆରି ପୁଟ୍ମନ୍କେ, ଜେତ୍କି ଲକ୍କେ ବେଟ୍ ଅଇସା ସେ ସବୁ ଲକ୍ମନ୍କେ ଆମର୍ ବଜିଟାନେ ଡାକିଆନା ।
10 ௧0 அந்த வேலைக்காரர்கள் புறப்பட்டு, வழிகளிலேபோய், தாங்கள் கண்ட நல்லவர்கள் பொல்லாதவர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டுவந்தார்கள்; திருமண மண்டபம் விருந்தாளிகளால் நிறைந்திருந்தது.
୧୦ତେବେ ଦାଙ୍ଗ୍ଡାମନ୍ ଲଗର୍ ପାକର୍ ଗାଉଁମନ୍କେ ବୁଲି ନିକ ଲକ୍ ଅଅତ୍ କି ବାନିଆ ଲକ୍ ଅଅତ୍ ଜେତ୍କି ଲକ୍କେ ବେଟ୍ ଅଇଲାଇ, ସବୁକେ ଡାକି ଆନ୍ଲାଇ । ଆରି ବିବା ଗରେ ଲକ୍ମନ୍ ମାଣ୍ଡାଚୁଣ୍ଡା ଅଇଗାଲାଇ ।
11 ௧௧ விருந்தாளிகளைப் பார்க்கும்படி ராஜா உள்ளே நுழைந்தபோது, திருமணஆடை அணிந்திராத ஒரு மனிதனை அங்கே பார்த்து:
୧୧ପଚେ ରାଜା ଡାକାଇଲା ଲକ୍ମନ୍କେ ଦେକ୍ବାର୍ ଆଇଲା । ସେ ଲକ୍ମନର୍ ବିତ୍ରେ ଅନି ଗଟେକ୍ ଲକ୍ ତିଆର୍ପିଆର୍ ନ ଅଇକରି ନିକଟା ପିନ୍ଦି ନ ଆସିରଇଲାଟା ରାଜା ଦେକ୍ଲା ।
12 ௧௨ நண்பனே, நீ திருமணஆடை இல்லாதவனாக இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டான்; அதற்கு அவன் பேசாமலிருந்தான்.
୧୨ରାଜା ତାର୍ ଲଗେ ଜାଇ ପାଚାର୍ଲା, “ମଇତର୍, ତୁଇ ତିଆର୍ ପିଆର୍ ନ ଅଇତେ କେନ୍ତି ଏ ବଜିଟାନେ ଆଇଲୁସ୍” ସେ ଲକ୍ ଚିମ୍ରା ଅଇଦେଲା ।
13 ௧௩ அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரர்களைப் பார்த்து: இவனுடைய கையையும் காலையும் கட்டிக் கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றான்.
୧୩ରାଜା ଦାଙ୍ଗ୍ଡାମନ୍କେ କଇଲା, “ତାର୍ ଆତ୍ ଗଡ୍ ବାନ୍ଦି ବାଇରେ ନେଇ ଆନ୍ଦାରେ ପିଙ୍ଗିଦିଆସ୍ । ତେଇ ସେ ଦାଁତ୍ମୁଣ୍ଡ୍ କାତ୍ରିଅଇ କାନ୍ଦି କାନ୍ଦି ରଅ ।”
14 ௧௪ அந்தப்படியே, அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.
୧୪ଜିସୁ କାତାନି କଇସାରାଇ କଇଲା, ବେସି ଲକ୍କେ ଡାକ୍ବାଇ, ମାତର୍ ଉନାଲକ୍କେ ବାଚ୍ବାଇ ।
15 ௧௫ அப்பொழுது, பரிசேயர்கள்போய், பேச்சிலே அவரை அகப்படுத்தும்படி யோசனைசெய்து,
୧୫କେତେଟା ପାରୁସିମନ୍ ଜାଇକରି ଜିସୁକେ ପର୍ସନ୍ ପାଚାରି ପାନ୍ଦେ ପାକାଉଁ ବଲି ବାବ୍ଲାଇ ।
16 ௧௬ தங்களுடைய சீடர்களையும் ஏரோதியர்களையும் அவரிடத்தில் அனுப்பினார்கள். அவர்கள் வந்து: போதகரே, நீர் உண்மையுள்ளவரென்றும், தேவனுடைய வழியை உண்மையாக போதிக்கிறவரென்றும், நீர் பட்சபாதமில்லாதவராக இருப்பதால் எவனைக்குறித்தும் உமக்குக் கவலை இல்லையென்றும் அறிந்திருக்கிறோம்.
୧୬ସେମନ୍ ତାକର୍ କେତେଟା ସିସ୍ମନ୍କେ ଆରି ଏରଦର୍ ଦଲେଅନି କେତେଟା ଲକ୍ମନ୍କେ ଜିସୁର୍ ଲଗେ ପାଟାଇଲାଇ । ଏମନ୍ ଆସି ଜିସୁକେ ପାଚାର୍ଲାଇ, “ଗୁରୁ, ତମେ ସତ୍ କଇସା ଆରି ପର୍ମେସରର୍ ସତ୍ ବିସଇ ସିକିଆ ଦେବାଟା ଆମେ ଜାନୁ । ତମେ ମୁନୁସ୍ମନର୍ ମର୍ଜିତାକେ କାତୁର୍ କରାସ୍ ନାଇ । ଲକ୍ମନ୍ କାଇ ବଲି ବାବ୍ବାଇ ବଲି ଚିନ୍ତା କରାସ୍ ନାଇ ।
17 ௧௭ ஆதலால், உமக்கு எப்படித் தோன்றுகிறது? இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ, அல்லவோ? அதை எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள்.
୧୭ତେବେ କଇଦେକା ପନି, ଏ ବିସଇ ତମେ କାଇବଲି କଇଲାସ୍ନି? ରମିୟ ସର୍କାର୍କେ ସିସ୍ତୁ ଦେବାଟା ଆମର୍ ଦରମ୍ ସାସ୍ତରର୍ ଇସାବେ ଟିକ୍ କି ନାଇ?”
18 ௧௮ இயேசு, அவர்களுடைய தீயகுணத்தை அறிந்து: மாயக்காரர்களே, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்?
୧୮ମାତର୍ ଜିସୁ ସେମନର୍ କୁଟ୍କାତା ଜାନି କରି କଇଲା, “ଏ କୁଟିଆଲ୍ମନ୍, କାଇକେ ମକେ ପାନ୍ଦେ ପାକାଇବାକେ ଚେସ୍ଟା କଲାସ୍ନି?
19 ௧௯ வரிப்பணத்தை எனக்குக் காண்பியுங்கள் என்றார்; அவர்கள் ஒரு பணத்தை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்.
୧୯ଜନ୍ ଅଦ୍ଲି ଡାବୁ ସିସ୍ତୁ ଦେଲାସ୍ନି, ତେଇଅନି ଗଟେକ୍ ଆନିକରି ମକେ ଦେକାଆ ।” ସେମନ୍ ଗଟେକ୍ ଅଦ୍ଲି ଆନି ତାକେ ଦେଲାଇ ।
20 ௨0 அப்பொழுது அவர்: இந்த உருவமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார்.
୨୦ଜିସୁ ସେମନ୍କେ ପାଚାର୍ଲା “ଏ ଅଦ୍ଲି ଡାବୁଟାନେ କାର୍ ମୁଉ ଆରି ନାଉଁ ଆଚେ?”
21 ௨௧ இராயனுடையது என்றார்கள். அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார்.
୨୧ସେମନ୍ କଇଲାଇ, “ରମିୟ ରାଜାର୍ ମୁଉ ଆରି ନାଉଁ ଆଚେ ।” ଜିସୁ ସେମନ୍କେ କଇଲା, “ତେବେ ଜନ୍ଟା ରମିୟ ରାଜାର୍ଟା, ସେଟା ତାକେ ଦିଆସ୍ ଆରି ଜନ୍ଟା ପରମେସରର୍ଟା, ସେଟା ପରମେସର୍କେ ଦିଆସ୍ ।”
22 ௨௨ அவர்கள் அதைக்கேட்டு ஆச்சரியப்பட்டு அவரைவிட்டுப் போய்விட்டார்கள்.
୨୨ଏ କାତା ସୁନି ସେମନ୍ କାବାଅଇଗାଲାଇ ଆରି ତେଇଅନି ଉଟିଗାଲାଇ ।
23 ௨௩ உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிற சதுசேயர்கள் அன்றையதினம் அவரிடம் வந்து:
୨୩ସେ ଦିନେ ସାଦୁକି ଦଲର୍ କେତେ ଲକ୍ ଜିସୁର୍ ଲଗେ ଆଇଲାଇ । ସାଦୁକିମନ୍ ମରିଗାଲେ ଆରି ତରେକ୍ ଉଟି ନଏଁ ବଲି ବିସ୍ବାସ୍ କର୍ତେ ରଇଲାଇ ।
24 ௨௪ போதகரே, ஒருவன் வாரிசு இல்லாமல் மரித்துப்போனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை திருமணம்செய்து, தன் சகோதரனுக்கு வாரிசு உண்டாக்கவேண்டும் என்று மோசே சொன்னாரே.
୨୪ସେମନ୍ ଜିସୁକେ ପାଚାର୍ଲାଇ, “ଏ ଗୁରୁ, ଜଦି ଗଟେକ୍ ଲକ୍ ପିଲାଟକି ନ ଅଇତେ ମରିଜାଇସି, ତେବେ ମରିଜାଉର୍ ବାଇ ସେ ରାଣ୍ଡି ମାଇଜିକେ ସଙ୍ଗଇସି । ଆରି ତାକର୍ ଟାନେଅନି ଅଇଲା ପିଲାଜିଲା ସେ ମଲା ଲକର୍ପାଇ ଅଇସି ବଲି ମସା ନିୟମ୍ କଲା ଆଚେ ।
25 ௨௫ எங்களுக்குள்ளே சகோதரர்கள் ஏழுபேர் இருந்தார்கள்; மூத்தவன் திருமணம்செய்து, மரித்து, வாரிசு இல்லாததினால் தன் மனைவியைத் தன் சகோதரனுக்கு விட்டுப்போனான்.
୨୫ଗଟେକ୍ କାତା ସୁନା । ଇତି ଆମର୍ ବିତ୍ରେ ସାତ୍ବାଇ ରଇଲାଇ । ବଡ୍ ବାଇ ପିଲାଜିଲା ନ ଅଇତେ ମରିଗାଲାଜେ ତାର୍ ପିଟିର୍ ବାଇ ତାର୍ ବଉକେ ସଙ୍ଗଇଲା ।
26 ௨௬ அப்படியே இரண்டாம் மூன்றாம் சகோதரன்முதல் ஏழாம் சகோதரன்வரைக்கும் செய்தார்கள்.
୨୬ମାତର୍ ବଡ୍ମଜିଆ, ମଜିଆ, ସାନ୍ମଜିଆ ଏନ୍ତି ଅଇକରି ସାରାସାରି ସାନର୍ ଦସା ମିସା ଏନ୍ତି ଅଇଲା ।
27 ௨௭ எல்லோருக்கும்பின்பு அந்த பெண்ணும் மரித்துப்போனாள்.
୨୭ସାରାସାରି ପଚେ ସେ ମାଇଜି ମିସା ମରିଗାଲା ।
28 ௨௮ ஆகவே, உயிர்த்தெழுதலில் அந்த ஏழுபேரில் எவனுக்கு அவள் மனைவியாக இருப்பாள்? அவர்கள் எல்லோரும் அவளைத் திருமணம் செய்திருந்தார்களே என்று கேட்டார்கள்.
୨୮ଜେବେ ମଲା ଲକ୍ମନର୍ ଉଟ୍ବା ଦିନ୍ ଆଇସି, ତେବେ ଏ ମାଇଜି କାର୍ ମାଇଜି ଅଇସି? ସବୁ ଲକ୍ସେ ତାକେ ସଙ୍ଗଇ ରଇଲାଇ ।”
29 ௨௯ இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தவறாகப் புரிந்துகொள்ளுகிறீர்கள்.
୨୯ଜିସୁ ସେମନ୍କେ କଇଲା, “ତମେ କେତେକ୍ ବୁଲ୍ ବିସଇ ବାବ୍ବା ଲକ୍ମନ୍! ଦରମ୍ ସାସ୍ତରେ ପର୍ମେସରର୍ ବପୁ ବିସଇ ସମାନ୍ ଇସାବେ ଚିନ୍ତା କରାସ୍ ନାଇଜେ, ତମେ ଏ କାତା ପାଚାର୍ଲାସ୍ନି ।”
30 ௩0 உயிர்த்தெழுதலில் பெண் எடுப்பதும் இல்லை, கொடுப்பதும் இல்லை; அவர்கள் பரலோகத்திலே தேவதூதர்களைப்போல இருப்பார்கள்;
୩୦ମରିକରି ଉଟ୍ଲା ପଚେ, ମଲା ଲକ୍ମନ୍ ସରଗର୍ ଦୁତ୍ମନର୍ ପାରା ଅଇଜିବାଇ । ସେମନ୍ ଆରି ବିବା ନ ଅଅତ୍ କି ନ କରତ୍ ।
31 ௩௧ மேலும் மரித்தோர் உயிர்த்தெழுதலைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாக இருக்கிறேன் என்று தேவனால் உங்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறதை நீங்கள் வாசிக்கவில்லையா?
୩୧ମଲା ଲକ୍ମନ୍ ଆରି ତରେକ୍ ଉଟ୍ବା ବିସଇ, ପରମେସର୍ ଜନ୍ଟା କଇଲା ଆଚେ, ତମେ କାଇ ସାସ୍ତରେ କେବେ ପଡାସ୍ ନାଇ କି?
32 ௩௨ தேவன் மரித்தோருக்கு தேவனாக இல்லாமல், ஜீவனுள்ளோருக்கு தேவனாக இருக்கிறார் என்றார்.
୩୨ପର୍ମେସର୍ କଇଲା ଆଚେ “ଆମେ ଅବ୍ରାଆମର୍, ଇସାକର୍ ଆରି ଜାକୁବର୍ ମାପ୍ରୁ ।” “ପର୍ମେସର୍ ତା ଜିବନ୍ ରଇଲା ଲକ୍ମନର୍ ମାପ୍ରୁ, ମଲା ଲକ୍ମନର୍ ଅଇନାପାରେ ।”
33 ௩௩ மக்கள் இதைக்கேட்டு, அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
୩୩ଲକ୍ମନ୍ ଜିସୁର୍ ସିକାଇବାଟା ସୁନିକରି କାବାଅଇଗାଲାଇ ।
34 ௩௪ அவர் சதுசேயர்களைப் பேசவிடாமல் வாயடைத்தார் என்று பரிசேயர்கள் கேள்விப்பட்டு, அவரிடத்தில் கூடிவந்தார்கள்.
୩୪ଜିସୁ ସାଦୁକିମନ୍କେ ଚୁପ୍କରାଇ ରଇବାଟା ଜାନିକରି ପାରୁସିମନ୍ ସବୁଲକ୍ ଗଟେକ୍ ଅଇ ତାର୍ ଲଗେ ଆଇଲାଇ ।
35 ௩௫ அவர்களில் நியாயப்பண்டிதன் ஒருவன் அவரைச் சோதிக்கும்படி:
୩୫ଆରି ସେମନର୍ ବିତ୍ରେଅନି ଗଟେକ୍ ନିୟମ୍ ସିକାଇବା ଦରମ୍ ଗୁରୁ ଜିସୁକେ ପାନ୍ଦେ ପାକାଇବାକେ ଗଟେକ୍ ପର୍ସନ୍ ପାଚାର୍ଲା ।
36 ௩௬ போதகரே, நியாயப்பிரமாணத்திலே எந்தக் கட்டளை முதன்மையானது என்று கேட்டான்.
୩୬“ଏ ଗୁରୁ ମସାର୍ ଦରମ୍ ସାସ୍ତରର୍ ନିୟମ୍ ଇସାବେ ସବୁଟାନେଅନି କନ୍ ଆଦେସ୍ ମୁକିଅ?”
37 ௩௭ இயேசு அவனைப் பார்த்து: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புசெலுத்துவாயாக;
୩୭ଜିସୁ ତାକେ କଇଲା, “ତମର୍ ମାପ୍ରୁ, ପରମେସର୍କେ ପୁରାପୁରୁନ୍ ମନ୍ଦେଇ, ପୁରାପୁରୁନ୍ ଜିବନ୍ ଦେଇ, ପୁରାପୁରୁନ୍ ଚିନ୍ତା ସଙ୍ଗ୍ ତାକେ ମାନା ଆରି ଆଲାଦ୍ କରା ।
38 ௩௮ இது முதலாம் பெரிய கட்டளை.
୩୮ଏଟା ଅଇଲାନି ସବୁର୍ଟାନେଅନି ଆଗତୁ ଆରି ମୁକିଅ ଆଦେସ୍ ।”
39 ௩௯ இதற்கு இணையாக இருக்கிற இரண்டாம் கட்டளை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புசெலுத்துவதுபோல மற்றவனிடத்திலும் அன்புசெலுத்துவாயாக என்பதே.
୩୯ତାର୍ ପଚର୍ ମୁକିଅ ଆଦେସ୍ ଅଇଲାନି, ତମର୍ ଲଗର୍ ପାକର୍ ଗରର୍ ଲକ୍ମନ୍କେ ନିଜ୍କେ ଆଲାଦ୍ କଲା ପାରା ଆଲାଦ୍ କରା ।
40 ௪0 இவ்விரண்டு கட்டளைகளிலும் நியாயப்பிரமாணம் முழுவதும், தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.
୪୦ଏ ଦୁଇଟା ଆଦେସ୍ ଆକା ମସା କରିରଇବା ସବୁ ରିତିନିତି ଆରି ବବିସତ୍ବକ୍ତାମନର୍ ସିକିଆ ଜାନାଇଲାନି ।
41 ௪௧ பரிசேயர்கள் கூடியிருக்கும்போது, இயேசு அவர்களைப் பார்த்து:
୪୧କେତେଟା ପାରୁସିମନ୍ ଜିସୁର୍ ଲଗେ ରଇଲା ବେଲେ, ଜିସୁ ସେମନ୍କେ ପାଚାର୍ଲା ।
42 ௪௨ கிறிஸ்துவைக்குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அவர் யாருடைய குமாரன்? என்று கேட்டார். அவர் தாவீதின் குமாரன் என்றார்கள்.
୪୨“କିରିସ୍ଟ ମସିଅର୍ ବିସଇ, ତମେ କାଇଟା ବାବ୍ଲାସ୍ନି? ସେ କାର୍ ପଅ?” ସେମନ୍ କଇଲାଇ, “ସେ ଦାଉଦର୍ ପଅ ।”
43 ௪௩ அதற்கு அவர்: அப்படியானால், தாவீது பரிசுத்த ஆவியானவராலே அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்கிறது எப்படி?
୪୩ଜିସୁ ପାଚାର୍ଲା, “ସେନ୍ତାର୍ ଆଲେ ଦାଉଦ୍ ମସିଅକେ ‘ମର୍ ମାପ୍ରୁ!’ ବଲି କାଇକେ ଜାନାଇ ଆଚେ?” କାଇକେବଇଲେ ଆତ୍ମା ଚାଲ୍ନା ଦେଲାକେ, ସେ ଲେକିଆଚେ,
44 ௪௪ நான் உம்முடைய விரோதிகளை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரிடம் சொன்னார் என்று சொல்லியிருக்கிறானே.
୪୪ପର୍ମେସର୍ ମର୍ ମାପ୍ରୁକେ କଇଲା, “ଆମେ ତର୍ ସତ୍ରୁମନ୍କେ ତମର୍ ପାଦ୍ ତଲେ ନ ଆନ୍ବା ଜାକ ‘ତୁଇ ମର୍ ଉଜା ବାଟେ ବସି ରଅ ।’
45 ௪௫ தாவீது அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாக இருப்பது எப்படி என்றார்.
୪୫“ଜଦି ଦାଉଦ୍ ମସିଅକେ ‘ମର୍ ମାପ୍ରୁ’ ବଲି ନାମି ଆଚେ, ତେବେ ମସିଅ କେନ୍ତି ତାର୍ ପଅ ଅଇପାର୍ସି?”
46 ௪௬ அதற்கு மறுமொழியாக ஒருவனும் அவருக்கு ஒரு வார்த்தையும் சொல்லமுடியாதிருந்தது. அன்றுமுதல் ஒருவனும் அவரிடத்தில் கேள்விகேட்கத் துணியவில்லை.
୪୬ଜିସୁକେ ଇତିର୍ ଉତର୍ କେ ମିସା ଦେଇ ନାପାର୍ଲାଇ । ସେ ଦିନେଅନି, ଆରି ତାକେ କେ ମିସା କାଇ ପର୍ସନ୍ ପାଚାର୍ବାକେ ସାଆସ୍ କରତ୍ ନାଇ ।