< மத்தேயு 22 >
1 ௧ இயேசு மறுபடியும் அவர்களோடு உவமைகளாகப் பேசிச் சொன்னது என்னவென்றால்:
यीशुऐ फिरी उना जो कहाणी सुणाई,
2 ௨ பரலோகராஜ்யம் தன் குமாரனுக்கு திருமணம் செய்த ஒரு ராஜாவிற்கு ஒப்பாக இருக்கிறது.
“स्वर्गे दा राज्य इक कहाणिया सांई है, इक राजा था जिनी अपणे पुत्रे दा बियाह किता।”
3 ௩ அழைக்கப்பட்டவர்களைத் திருமணத்திற்கு வரச்சொல்லும்படி அவன் தன் வேலைக்காரர்களை அனுப்பினான்; அவர்களோ வர விருப்பமில்லாதிருந்தார்கள்.
उनी अपणे नोकरां जो भेजया कि जिना जो नियुंद्र दितियो उना लोकां जो बियाह दिया धामा च सदा; पर सै कोई ओणा नी चांदे थे।
4 ௪ அப்பொழுது அவன் வேறு வேலைக்காரர்களை அழைத்து: நீங்கள் போய், இதோ, என் விருந்தை ஆயத்தம் செய்தேன், என் எருதுகளும், கொழுத்த கன்றுக்குட்டிகளும் அடிக்கப்பட்டது, எல்லாம் ஆயத்தமாக இருக்கிறது; திருமணத்திற்கு வாருங்கள் என்று அழைக்கப்பட்டவர்களுக்குச் சொல்லுங்களென்று அனுப்பினான்.
“फिरी उनी होर नोकरां जो ऐ बोली करी भेजया, कि नियुंद्र दितियो लोकां ने बोला: दिखा मैं धाम तैयार करी दितियो है, कने सारा कुछ तैयार है; कने तुसां बियाये दिया धामा च ओआ।
5 ௫ அழைக்கப்பட்டவர்களோ அதை அசட்டைசெய்து, ஒருவன் தன் வயலுக்கும், ஒருவன் தன் வியாபாரத்திற்கும் போய்விட்டார்கள்.
पर सै बहाना लाइ करी चली गे: कोई अपणे खेतरां जो, कोई अपणे कम्म धंधे जो।
6 ௬ மற்றவர்கள் அவனுடைய வேலைக்காரர்களைப்பிடித்து, அவமானப்படுத்தி, கொலைசெய்தார்கள்.
बाकी लोक जड़े बचा थे उना नोकरां जो पकड़ी करी उना दा अनादर किता कने मारी दिता।
7 ௭ ராஜா அதைக் கேள்விப்பட்டு, கோபமடைந்து, தன் படைகளை அனுப்பி, அந்தக் கொலைபாதகர்களை அழித்து, அவர்கள் பட்டணத்தையும் சுட்டெரித்தான்.
जालू राजे ऐ सुणया तालू राजे जो गुस्सा आया, कने उनी अपणी सेना भेजी करी उना हत्यारां जो मरवाया, कने उना दे शेहरे जो फुकी दिता।
8 ௮ அப்பொழுது, அவன் தன் வேலைக்காரர்களைப் பார்த்து: திருமணவிருந்து ஆயத்தமாக இருக்கிறது, அழைக்கப்பட்டவர்களோ அதற்கு தகுதியற்றவர்களாக போனார்கள்.
तालू उनी अपणे नोकरां ने बोलया, बियाये दी धाम तां तैयार है, पर सदयो लोक खांणे जोगे नी न।
9 ௯ ஆகவே, நீங்கள் வீதிகளிலேபோய், காணப்படுகிற அனைவரையும் திருமணத்திற்கு அழைத்துக்கொண்டு வாருங்கள் என்றான்.
इस तांई तुसां हर जगा जा, कने जितणे भी लोक तुसां जो मिलन, सबना जो बियाये दिया धामा तांई सदी लोआ।
10 ௧0 அந்த வேலைக்காரர்கள் புறப்பட்டு, வழிகளிலேபோய், தாங்கள் கண்ட நல்லவர்கள் பொல்லாதவர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டுவந்தார்கள்; திருமண மண்டபம் விருந்தாளிகளால் நிறைந்திருந்தது.
उना नोकरां हर जगा पर जाई करी क्या बुरे, क्या भले, जितणे भी मिल्ले, सब गठेरे; कने बियाये बाला घर परोंणया ने भरुई गिया।
11 ௧௧ விருந்தாளிகளைப் பார்க்கும்படி ராஜா உள்ளே நுழைந்தபோது, திருமணஆடை அணிந்திராத ஒரு மனிதனை அங்கே பார்த்து:
जालू राजा परोंणया जो दिखणे तांई अंदर आया, तां उनी ओथु इक माणुऐ जो दिखया, जिनी बियाये तांई खरे कपड़े नी पायो थे।
12 ௧௨ நண்பனே, நீ திருமணஆடை இல்லாதவனாக இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டான்; அதற்கு அவன் பேசாமலிருந்தான்.
राजे उसला पुछया, है मित्र, तू बिना बियाये दे नोऐ कपड़े पाई करी ऐथू कजो आया? कने सै चुप होई गिया।
13 ௧௩ அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரர்களைப் பார்த்து: இவனுடைய கையையும் காலையும் கட்டிக் கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றான்.
तालू राजे नोकरां ने बोलया, इदे हथ-पैर बन्नी करी इसयो काल कोठढी च पाई दिया, ओथु उनी रोणा कने, दंद पीणे।
14 ௧௪ அந்தப்படியே, அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.
क्योंकि परमेश्वरे मते लोकां जो अपणे बाल सदया है पर थोड़े ही न जड़े चुंणयो न।”
15 ௧௫ அப்பொழுது, பரிசேயர்கள்போய், பேச்சிலே அவரை அகப்படுத்தும்படி யோசனைசெய்து,
तालू फरीसियां जाई करी अपु चे बिचार किता, कि उसयो कुस तरीके ने गल्लां च फसान।
16 ௧௬ தங்களுடைய சீடர்களையும் ஏரோதியர்களையும் அவரிடத்தில் அனுப்பினார்கள். அவர்கள் வந்து: போதகரே, நீர் உண்மையுள்ளவரென்றும், தேவனுடைய வழியை உண்மையாக போதிக்கிறவரென்றும், நீர் பட்சபாதமில்லாதவராக இருப்பதால் எவனைக்குறித்தும் உமக்குக் கவலை இல்லையென்றும் அறிந்திருக்கிறோம்.
उना अपणे चेलयां जो हेरोदियां सोगी उदे बाल ऐ बोलणे जो भेजया, “गुरू जी, असां जो पता है कि तुसां हमेशा सच्च बोलदे न, कने परमेश्वरे दा रस्ता सच्चाईया ने दसदा है, कने कुदी भी परवाह नी करदे न, क्योंकि तू माणुऐ दा मुऐ दिखीकरी गल्ल नी करदा है।
17 ௧௭ ஆதலால், உமக்கு எப்படித் தோன்றுகிறது? இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ, அல்லவோ? அதை எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள்.
इस तांई सांझो दस कि तू क्या सोचदा है? महाराजा जो कर देणा ठीक है, कि गलत है।”
18 ௧௮ இயேசு, அவர்களுடைய தீயகுணத்தை அறிந்து: மாயக்காரர்களே, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்?
यीशुऐ उना दी बुराई जाणी करी बोलया, “है कपटियों, मिंजो कजो परखदे न?”
19 ௧௯ வரிப்பணத்தை எனக்குக் காண்பியுங்கள் என்றார்; அவர்கள் ஒரு பணத்தை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்.
करे दा सिक्का मिंजो दसा। “तालू सै उदे बाल इक दीनार लेई आये।”
20 ௨0 அப்பொழுது அவர்: இந்த உருவமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார்.
उनी, उना ला पुछया, “ऐ आकृति कने ना कुसदा है?”
21 ௨௧ இராயனுடையது என்றார்கள். அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார்.
उना उसने बोलया, महाराजा दा। तालू उनी उना जो बोलया, “जड़ा महाराजा दा है, सै महाराजा जो, कने जड़ा परमेश्वरे दा है, सै परमेश्वरे जो दिया।”
22 ௨௨ அவர்கள் அதைக்கேட்டு ஆச்சரியப்பட்டு அவரைவிட்டுப் போய்விட்டார்கள்.
ऐ सुणीकरी सै हेरान होये, कने उसयो छडी करी चली गे।
23 ௨௩ உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிற சதுசேயர்கள் அன்றையதினம் அவரிடம் வந்து:
उसी रोजे सदूकी जड़े बोलदे थे कि मरयां दा जिन्दा होणा है ही नी सै यीशुऐ बाल आऐ, कने उसला पुछया,
24 ௨௪ போதகரே, ஒருவன் வாரிசு இல்லாமல் மரித்துப்போனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை திருமணம்செய்து, தன் சகோதரனுக்கு வாரிசு உண்டாக்கவேண்டும் என்று மோசே சொன்னாரே.
“गुरू जी, मूसा बोलया था, कि अगर कोई बिना ओलादी मरी जा, तां उदा भाई उदिया घरे बालिया ने बियाह करी के अपणे भाई तांई बंश पैदा करे।
25 ௨௫ எங்களுக்குள்ளே சகோதரர்கள் ஏழுபேர் இருந்தார்கள்; மூத்தவன் திருமணம்செய்து, மரித்து, வாரிசு இல்லாததினால் தன் மனைவியைத் தன் சகோதரனுக்கு விட்டுப்போனான்.
हुण साड़े ऐथू सत भाई थे; पेहला भाई बियाह करिके मरी गिया; कने ओलाद नी होणे दिया बजा ने अपणिया घरे बालिया जो अपणे भाईऐ तांई छडी गिया।
26 ௨௬ அப்படியே இரண்டாம் மூன்றாம் சகோதரன்முதல் ஏழாம் சகோதரன்வரைக்கும் செய்தார்கள்.
तां दुऐ भाईऐ उसा ने ही बियाह करी लिया कने से भी बिना ओलादी मरी गिया, कने इयां ही तिजे भाई ने होया कने सतां भाईयां उसा ने बियाह किता कने सतो भाई बिना ओलादी मरी गे।
27 ௨௭ எல்லோருக்கும்பின்பு அந்த பெண்ணும் மரித்துப்போனாள்.
सबना दे बाद सै जनानी भी मरी गेई।
28 ௨௮ ஆகவே, உயிர்த்தெழுதலில் அந்த ஏழுபேரில் எவனுக்கு அவள் மனைவியாக இருப்பாள்? அவர்கள் எல்லோரும் அவளைத் திருமணம் செய்திருந்தார்களே என்று கேட்டார்கள்.
हुण, सांझो दस सतां भाईयां उसा जनानिया ने बियाह कितया था, जालू सै मरणे दे बाद फिरी जिन्दे होंगे, तां सै जनानी कुदी घरे बाली होणी?”
29 ௨௯ இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தவறாகப் புரிந்துகொள்ளுகிறீர்கள்.
यीशुऐ उना जो बोलया, “तुसां दो बजा ने गलत न, तुसां पबित्र शास्त्र जो नी जाणदे ने जड़ा मरणे दे बाद लोकां जो जिन्दा रेणे दे बारे च दसदा है। तुसां ऐ नी जाणदे कि परमेश्वर बाल मरे होये लोकां जो जिन्दा करणे दी शक्ति है।”
30 ௩0 உயிர்த்தெழுதலில் பெண் எடுப்பதும் இல்லை, கொடுப்பதும் இல்லை; அவர்கள் பரலோகத்திலே தேவதூதர்களைப்போல இருப்பார்கள்;
क्योंकि जालू उना मरयां चे जिन्दा होणा, तां उना लोका दे बियाह नी होणे; जियां स्वर्गे च रेणेबाले स्वर्गदूत बियाह नी करदे।
31 ௩௧ மேலும் மரித்தோர் உயிர்த்தெழுதலைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாக இருக்கிறேன் என்று தேவனால் உங்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறதை நீங்கள் வாசிக்கவில்லையா?
“मरयां चे जिन्दा होणे दे बारे तुसां क्या मूसा दिया कताबां च नी पढ़या जड़ा परमेश्वरे तुसां जो बोलया:
32 ௩௨ தேவன் மரித்தோருக்கு தேவனாக இல்லாமல், ஜீவனுள்ளோருக்கு தேவனாக இருக்கிறார் என்றார்.
मैं अब्राहम दा परमेश्वर, कने इसहाक दा परमेश्वर, कने याकूब दा परमेश्वर है? सै मरयां दा नी, पर जिन्दया दा परमेश्वर है।”
33 ௩௩ மக்கள் இதைக்கேட்டு, அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
ऐ सुणीकरी लोक उदे उपदेशे ला हेरान होए।
34 ௩௪ அவர் சதுசேயர்களைப் பேசவிடாமல் வாயடைத்தார் என்று பரிசேயர்கள் கேள்விப்பட்டு, அவரிடத்தில் கூடிவந்தார்கள்.
जालू फरीसियां सुंणया कि यीशुऐ सदूकियां दा मु बंद करी दितया है, तां सै गिठे होए।
35 ௩௫ அவர்களில் நியாயப்பண்டிதன் ஒருவன் அவரைச் சோதிக்கும்படி:
उना चे इकी यहूदी मूसा दी व्यवस्था जो सिखाणे बाले परखणे तांई, यीशुऐ ला पुछया,
36 ௩௬ போதகரே, நியாயப்பிரமாணத்திலே எந்தக் கட்டளை முதன்மையானது என்று கேட்டான்.
“गुरू जी, परमेश्वरे जड़े भी हुकम दितयो न, उना सारयां चे सारयां ला बडा हुकम कुण दिया है?”
37 ௩௭ இயேசு அவனைப் பார்த்து: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புசெலுத்துவாயாக;
उनी उना जो बोलया, “तू अपणे प्रभु परमेश्वर ने अपणे सारे तन मन कने सारे प्राण कने अपणिया सारिया अकला सोगी प्यार कर।”
38 ௩௮ இது முதலாம் பெரிய கட்டளை.
सारयां ला बडा कने मुख्य हुकम तां ऐ ही है।
39 ௩௯ இதற்கு இணையாக இருக்கிற இரண்டாம் கட்டளை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புசெலுத்துவதுபோல மற்றவனிடத்திலும் அன்புசெலுத்துவாயாக என்பதே.
कने उस सांई ऐ दूजा हुकम भी है, कि तू अपणे पड़ोसियां सोगी अपणे सांई प्यार रख।
40 ௪0 இவ்விரண்டு கட்டளைகளிலும் நியாயப்பிரமாணம் முழுவதும், தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.
“इना दो हुकमा पर ही सारी व्यवस्था कने भविष्यवाणियां अधारित न।”
41 ௪௧ பரிசேயர்கள் கூடியிருக்கும்போது, இயேசு அவர்களைப் பார்த்து:
जालू फरीसी गिठे थे, तां यीशुऐ उना ला पुछया,
42 ௪௨ கிறிஸ்துவைக்குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அவர் யாருடைய குமாரன்? என்று கேட்டார். அவர் தாவீதின் குமாரன் என்றார்கள்.
“मसीह दे बारे च तुसां क्या सोचदे न? सै कुदा पुत्र है?” उना यीशुऐ ने बोलया, “दाऊदे दा बंशज।”
43 ௪௩ அதற்கு அவர்: அப்படியானால், தாவீது பரிசுத்த ஆவியானவராலே அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்கிறது எப்படி?
यीशुऐ उना ला पुछया, “तां दाऊद आत्मा च होईकरी उसयो प्रभु कजो बोलदा है?”
44 ௪௪ நான் உம்முடைய விரோதிகளை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரிடம் சொன்னார் என்று சொல்லியிருக்கிறானே.
“प्रभुऐ, मेरे प्रभु ने बोलया, मेर सजे पासे बो, जालू दीकर मैं तेरे दुशमणा जो तेरे पैरां हेठ नी करी दें।”
45 ௪௫ தாவீது அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாக இருப்பது எப்படி என்றார்.
“भला, जालू दाऊद ही उसयो प्रभु बोलदा है, तां सै उदा पुत्र कियां होया?”
46 ௪௬ அதற்கு மறுமொழியாக ஒருவனும் அவருக்கு ஒரு வார்த்தையும் சொல்லமுடியாதிருந்தது. அன்றுமுதல் ஒருவனும் அவரிடத்தில் கேள்விகேட்கத் துணியவில்லை.
उदे जबाबे च कोई भी कुछ नी बोली सकया। पर उस रोजे ला कुसयो भी फिरी उसला पूछणे दी हिम्मत नी होई।