< மத்தேயு 22 >

1 இயேசு மறுபடியும் அவர்களோடு உவமைகளாகப் பேசிச் சொன்னது என்னவென்றால்:
येशु परत त्यासले दृष्टांत दिसन बोलना;
2 பரலோகராஜ்யம் தன் குமாரனுக்கு திருமணம் செய்த ஒரு ராஜாவிற்கு ஒப்பாக இருக்கிறது.
स्वर्गनं राज्य एक राजाना मायक शे, त्यानी त्याना पोऱ्याना लगीननं जेवण दिधं;
3 அழைக்கப்பட்டவர்களைத் திருமணத்திற்கு வரச்சொல்லும்படி அவன் தன் வேலைக்காரர்களை அனுப்பினான்; அவர்களோ வர விருப்பமில்லாதிருந்தார்கள்.
अनी लगीनना जेवणकरता ज्यासले निवतं देयल व्हतं त्यासले बलावाकरता त्यानी त्याना सेवकसले धाडं, पण त्या ई नही राहींतात.
4 அப்பொழுது அவன் வேறு வேலைக்காரர்களை அழைத்து: நீங்கள் போய், இதோ, என் விருந்தை ஆயத்தம் செய்தேன், என் எருதுகளும், கொழுத்த கன்றுக்குட்டிகளும் அடிக்கப்பட்டது, எல்லாம் ஆயத்தமாக இருக்கிறது; திருமணத்திற்கு வாருங்கள் என்று அழைக்கப்பட்டவர்களுக்குச் சொல்லுங்களென்று அனுப்பினான்.
परत त्यानी दुसरा सेवकसले धाडीन सांगं, की, निमंत्रीत लोकसले सांगा, दखा, मी जेवण तयार करेल शे, मना बोकड्या अनं कोंबड्या कापाई जायेल शेतस, सर्व तयार शे, लगीनना जेवणले चला.
5 அழைக்கப்பட்டவர்களோ அதை அசட்டைசெய்து, ஒருவன் தன் வயலுக்கும், ஒருவன் தன் வியாபாரத்திற்கும் போய்விட்டார்கள்.
तरी हाई त्यासनी मनवर नही लिधं अनी त्या काहीजण वावरमा, काहीजण व्यापारले निंघी गयात.
6 மற்றவர்கள் அவனுடைய வேலைக்காரர்களைப்பிடித்து, அவமானப்படுத்தி, கொலைசெய்தார்கள்.
बाकीना निवतं मिळेल लोकसनी राजाना दाससले धरीन, त्यासना छळ करीसन मारी टाकात.
7 ராஜா அதைக் கேள்விப்பட்டு, கோபமடைந்து, தன் படைகளை அனுப்பி, அந்தக் கொலைபாதகர்களை அழித்து, அவர்கள் பட்டணத்தையும் சுட்டெரித்தான்.
तवय राजाले राग वना; अनी त्यानी आपला सैन्यले धाडीसन त्या घातकीसना नाश करा अनी त्यासना शहर जाळी टाकं.
8 அப்பொழுது, அவன் தன் வேலைக்காரர்களைப் பார்த்து: திருமணவிருந்து ஆயத்தமாக இருக்கிறது, அழைக்கப்பட்டவர்களோ அதற்கு தகுதியற்றவர்களாக போனார்கள்.
मंग तो आपला दाससले बोलना, लगीननी तयारी व्हई जायेल शे, हाई खरं, पण आमंत्रित योग्य नव्हतात.
9 ஆகவே, நீங்கள் வீதிகளிலேபோய், காணப்படுகிற அனைவரையும் திருமணத்திற்கு அழைத்துக்கொண்டு வாருங்கள் என்றான்.
म्हणीन तुम्हीन बाहेर रस्तासवर जा अनी जितला तुमले दखायतीन तितलासले लगीनना जेवणकरता बलाई आणा.
10 ௧0 அந்த வேலைக்காரர்கள் புறப்பட்டு, வழிகளிலேபோய், தாங்கள் கண்ட நல்லவர்கள் பொல்லாதவர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டுவந்தார்கள்; திருமண மண்டபம் விருந்தாளிகளால் நிறைந்திருந்தது.
मंग त्या दाससनी रस्तावर जाईन ज्या बी त्यासले बरा वाईट भेटणात, त्या सर्वासले एकत्र करा अनी जेवाकरता येल आमंत्रितसघाई लगीनघर भरी गयं.
11 ௧௧ விருந்தாளிகளைப் பார்க்கும்படி ராஜா உள்ளே நுழைந்தபோது, திருமணஆடை அணிந்திராத ஒரு மனிதனை அங்கே பார்த்து:
राजा जेवणारासले दखाले वना, तवय तठे लगीनना कपडा घालीन येल नही असा एक माणुस त्याले दखायना.
12 ௧௨ நண்பனே, நீ திருமணஆடை இல்லாதவனாக இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டான்; அதற்கு அவன் பேசாமலிருந்தான்.
तवय तो त्याले बोलना, दोस्त, तु लगीनना कपडा न घालता आठे कशा काय वना? त्यानी काहीच उत्तर दिधं नही.
13 ௧௩ அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரர்களைப் பார்த்து: இவனுடைய கையையும் காலையும் கட்டிக் கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றான்.
मंग राजानी सेवकसले सांगं, याना हात पाय बांधीन याले अंधारमा टाका, तठे रडणं अनी दातखाणं चालस.
14 ௧௪ அந்தப்படியே, அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.
बलायेल बराच शेतस, पण निवडेल थोडाच शेतस.
15 ௧௫ அப்பொழுது, பரிசேயர்கள்போய், பேச்சிலே அவரை அகப்படுத்தும்படி யோசனைசெய்து,
मंग परूशीसनी जाईन आपसमा चर्चा करी की, येशुले त्यानाच बोलानामा कश फसाडानं
16 ௧௬ தங்களுடைய சீடர்களையும் ஏரோதியர்களையும் அவரிடத்தில் அனுப்பினார்கள். அவர்கள் வந்து: போதகரே, நீர் உண்மையுள்ளவரென்றும், தேவனுடைய வழியை உண்மையாக போதிக்கிறவரென்றும், நீர் பட்சபாதமில்லாதவராக இருப்பதால் எவனைக்குறித்தும் உமக்குக் கவலை இல்லையென்றும் அறிந்திருக்கிறோம்.
याकरता त्यासनी आपला शिष्यसले हेरोदी पक्षना लोकससंगे त्यानाकडे धाडीन सांगं, गुरजी, आमले माहित शे की, तुम्हीन खरा शेतस, देवना मार्ग खरापणतीन सांगतस, तुम्हीन मनुष्यसनं मत अनी ईच्छासघाई प्रभावित होतस नही, कारण तुम्हीन लोकसनं तोंड दखीन बोलतस नही.
17 ௧௭ ஆதலால், உமக்கு எப்படித் தோன்றுகிறது? இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ, அல்லவோ? அதை எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள்.
तुमले काय वाटस हाई आमले सांगा, कैसरले कर देवाणा हाई योग्य शे की नही?
18 ௧௮ இயேசு, அவர்களுடைய தீயகுணத்தை அறிந்து: மாயக்காரர்களே, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்?
येशु त्यासना मनमाधलं कपट वळखीन बोलना, अरे ढोंगीसवन का बर मनी परिक्षा दखतस?
19 ௧௯ வரிப்பணத்தை எனக்குக் காண்பியுங்கள் என்றார்; அவர்கள் ஒரு பணத்தை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்.
कर देतस ते नाणं दखाडा; तवय त्यासनी त्यानाजोडे एक नाणं अनी दिधं.
20 ௨0 அப்பொழுது அவர்: இந்த உருவமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார்.
त्यानी त्यासले ईचारं, यावर कोणं चित्र अनं लेख शे?
21 ௨௧ இராயனுடையது என்றார்கள். அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார்.
त्या बोलनात, रोमना राजानं; येशुनी त्यासले सांगं, तर मंग राजानं शे, ते राजाले अनी देवना शे, ते देवले भरी द्या.
22 ௨௨ அவர்கள் அதைக்கேட்டு ஆச்சரியப்பட்டு அவரைவிட்டுப் போய்விட்டார்கள்.
हाई ऐकीन त्यासले आश्चर्य वाटणं अनी त्या त्याले सोडीन गयात.
23 ௨௩ உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிற சதுசேயர்கள் அன்றையதினம் அவரிடம் வந்து:
त्याच दिनले, पुनरूत्थान व्हस नही, असा म्हणनारा सदुकी पंथना लोकसनी त्यानाकडे ईसन ईचारं,
24 ௨௪ போதகரே, ஒருவன் வாரிசு இல்லாமல் மரித்துப்போனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை திருமணம்செய்து, தன் சகோதரனுக்கு வாரிசு உண்டாக்கவேண்டும் என்று மோசே சொன்னாரே.
गुरजी, मोशेनी सांगेल शे की, जर एखादा माणुस लेकरं-बाळ न व्हताच मरी गया तर त्याना भाऊनी त्याना बायकोसंगे लगीन करीसन आपला भाऊना वंश चालावाना;
25 ௨௫ எங்களுக்குள்ளே சகோதரர்கள் ஏழுபேர் இருந்தார்கள்; மூத்தவன் திருமணம்செய்து, மரித்து, வாரிசு இல்லாததினால் தன் மனைவியைத் தன் சகோதரனுக்கு விட்டுப்போனான்.
आमनामा सात भाऊ व्हतात; त्यामधला पहिला लगीन करीसन मरी गया अनी त्याले लेकरं नव्हतात म्हणीन त्यानी बायकोसंगे त्याना भाऊनी लगीन करं
26 ௨௬ அப்படியே இரண்டாம் மூன்றாம் சகோதரன்முதல் ஏழாம் சகோதரன்வரைக்கும் செய்தார்கள்.
तसाच दुसरा, तिसरा, असा सातही जण तिनासंगे लगीन करीसन मरी गयात;
27 ௨௭ எல்லோருக்கும்பின்பு அந்த பெண்ணும் மரித்துப்போனாள்.
अनी सर्वासनंतर ती बाई पण मरी गयी.
28 ௨௮ ஆகவே, உயிர்த்தெழுதலில் அந்த ஏழுபேரில் எவனுக்கு அவள் மனைவியாக இருப்பாள்? அவர்கள் எல்லோரும் அவளைத் திருமணம் செய்திருந்தார்களே என்று கேட்டார்கள்.
मंग जवय पुनरूत्थान व्हई तवय ती त्या सात जणसपैकी कोणी बायको व्हई? कारण ती त्या सर्वासनी बायको व्हयेल व्हती.
29 ௨௯ இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தவறாகப் புரிந்துகொள்ளுகிறீர்கள்.
येशुनी त्यासले उत्तर दिधं; तुम्हीन शास्त्र अनी देवना सामर्थ्यले समजनात नही म्हणीन तुम्हीन भ्रममा पडेल शेतस.
30 ௩0 உயிர்த்தெழுதலில் பெண் எடுப்பதும் இல்லை, கொடுப்பதும் இல்லை; அவர்கள் பரலோகத்திலே தேவதூதர்களைப்போல இருப்பார்கள்;
कारण पुनरूत्थान व्हवानंतर त्या लोके लगीन करतस नही अनं करी बी देतस नही, तर त्या स्वर्गमधला देवदूतसना मायक राहतस.
31 ௩௧ மேலும் மரித்தோர் உயிர்த்தெழுதலைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாக இருக்கிறேன் என்று தேவனால் உங்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறதை நீங்கள் வாசிக்கவில்லையா?
मरेलसना पुनरूत्थानबद्दल देवनी तुमले सांगं, ते तुमना वाचामा वना नही का?
32 ௩௨ தேவன் மரித்தோருக்கு தேவனாக இல்லாமல், ஜீவனுள்ளோருக்கு தேவனாக இருக்கிறார் என்றார்.
ते अस की, “मी अब्राहामना देव, इसहाकना देव अनं याकोबना देव शे.” देव मरेलसना नही तर जिवतसना देव शे.
33 ௩௩ மக்கள் இதைக்கேட்டு, அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
हाई ऐकीन लोकसनी गर्दीले त्याना शिक्षणनं आश्चर्य वाटणं.
34 ௩௪ அவர் சதுசேயர்களைப் பேசவிடாமல் வாயடைத்தார் என்று பரிசேயர்கள் கேள்விப்பட்டு, அவரிடத்தில் கூடிவந்தார்கள்.
त्यानी सदुकी लोकसनं तोंड बंद करी टाकं हाई ऐकीन परूशी लोके जमनात;
35 ௩௫ அவர்களில் நியாயப்பண்டிதன் ஒருவன் அவரைச் சோதிக்கும்படி:
अनी त्यामातीन शास्त्रीसनी त्यानी परिक्षा दखाकरता एक प्रश्न ईचारा;
36 ௩௬ போதகரே, நியாயப்பிரமாணத்திலே எந்தக் கட்டளை முதன்மையானது என்று கேட்டான்.
गुरजी, नियमशास्त्रमा सर्वसमा मोठी आज्ञा कोणती शे?
37 ௩௭ இயேசு அவனைப் பார்த்து: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புசெலுத்துவாயாக;
येशु त्याले बोलना, तु आपला देव परमेश्वर यानावर पुर्ण हृदयतीन, पुर्ण जिवतीन अनं पुर्ण मनतीन प्रिती कर.
38 ௩௮ இது முதலாம் பெரிய கட்டளை.
हाईच पहिली अनं मोठी आज्ञा शे.
39 ௩௯ இதற்கு இணையாக இருக்கிற இரண்டாம் கட்டளை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புசெலுத்துவதுபோல மற்றவனிடத்திலும் அன்புசெலுத்துவாயாக என்பதே.
ईनामायकच आखो एक दुसरी आज्ञा अशी शे की, तु स्वतःवर करस तशी आपला शेजारीसवर प्रिती कर.
40 ௪0 இவ்விரண்டு கட்டளைகளிலும் நியாயப்பிரமாணம் முழுவதும், தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.
ह्या दोन आज्ञासवरच सर्व नियमशास्त्र अनी संदेष्टासनं शास्त्र ह्या अवलंबीन शेतस.
41 ௪௧ பரிசேயர்கள் கூடியிருக்கும்போது, இயேசு அவர்களைப் பார்த்து:
परूशी लोके एकत्र जमनात तवय येशुनी त्यासले ईचारं;
42 ௪௨ கிறிஸ்துவைக்குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அவர் யாருடைய குமாரன்? என்று கேட்டார். அவர் தாவீதின் குமாரன் என்றார்கள்.
ख्रिस्तबद्दल तुमले काय वाटस? तो कोणा पोऱ्या शे? त्यासनी त्याले उत्तर दिधं, दावीदना पोऱ्या शे.
43 ௪௩ அதற்கு அவர்: அப்படியானால், தாவீது பரிசுத்த ஆவியானவராலே அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்கிறது எப்படி?
येशुनी त्यासले सांगं, तर मंग दावीदनी पवित्र आत्माना प्रेरणातीन त्याले “प्रभु” अस कसं म्हणं? तो म्हणस,
44 ௪௪ நான் உம்முடைய விரோதிகளை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரிடம் சொன்னார் என்று சொல்லியிருக்கிறானே.
परमेश्वरनी मना प्रभुले सांगं, मी तुना शत्रुले तुना पायसनं आसन करस तोपावत तु मना उजवीकडे बस.
45 ௪௫ தாவீது அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாக இருப்பது எப்படி என்றார்.
दावीद जर त्याले प्रभु म्हणस तर तो दावीदना पोऱ्या कशा काय व्हई?
46 ௪௬ அதற்கு மறுமொழியாக ஒருவனும் அவருக்கு ஒரு வார்த்தையும் சொல்லமுடியாதிருந்தது. அன்றுமுதல் ஒருவனும் அவரிடத்தில் கேள்விகேட்கத் துணியவில்லை.
तवय कोणलेच त्याले उत्तर देता वनं नही; अनी त्या दिनपाईन त्याले आखो काही ईचारानी कोणीच हिम्मत व्हईनी नही.

< மத்தேயு 22 >