< மத்தேயு 20 >

1 பரலோகராஜ்யம் வீட்டெஜமானாகிய ஒரு மனிதனுக்கு ஒப்பாக இருக்கிறது; அவன் தன் திராட்சைத்தோட்டத்திற்கு வேலையாட்களை அமர்த்த அதிகாலையிலே புறப்பட்டான்.
స్వర్గరాజ్యమ్ ఏతాదృశా కేనచిద్ గృహస్యేన సమం, యోఽతిప్రభాతే నిజద్రాక్షాక్షేత్రే కృషకాన్ నియోక్తుం గతవాన్|
2 வேலையாட்களுடன் நாளொன்றுக்கு ஒரு வெள்ளிக்காசு கூலிபேசி, அவர்களைத் தன் திராட்சைத்தோட்டத்திற்கு அனுப்பினான்.
పశ్చాత్ తైః సాకం దినైకభృతిం ముద్రాచతుర్థాంశం నిరూప్య తాన్ ద్రాక్షాక్షేత్రం ప్రేరయామాస|
3 காலை ஒன்பதுமணியளவில் அவன் புறப்பட்டுப்போய், கடைத்தெருவிலே சும்மா நிற்கிற வேறு சிலரைப் பார்த்து:
అనన్తరం ప్రహరైకవేలాయాం గత్వా హట్టే కతిపయాన్ నిష్కర్మ్మకాన్ విలోక్య తానవదత్,
4 நீங்களும் திராட்சைத்தோட்டத்திற்குப் போங்கள், நியாயமானபடி உங்களுக்குக் கூலி கொடுப்பேன் என்றான்; அவர்களும் போனார்கள்.
యూయమపి మమ ద్రాక్షాక్షేత్రం యాత, యుష్మభ్యమహం యోగ్యభృతిం దాస్యామి, తతస్తే వవ్రజుః|
5 மறுபடியும், நண்பகல் பன்னிரண்டுமணிக்கும், மூன்றுமணிக்கும் அவன்போய் அப்படியே செய்தான்.
పునశ్చ స ద్వితీయతృతీయయోః ప్రహరయో ర్బహి ర్గత్వా తథైవ కృతవాన్|
6 ஐந்துமணியளவிலும் அவன்போய், சும்மா நிற்கிற வேறு சிலரைப் பார்த்து: நீங்கள் பகல் முழுவதும் இங்கே சும்மா நிற்கிறதென்ன என்று கேட்டான்.
తతో దణ్డద్వయావశిష్టాయాం వేలాయాం బహి ర్గత్వాపరాన్ కతిపయజనాన్ నిష్కర్మ్మకాన్ విలోక్య పృష్టవాన్, యూయం కిమర్థమ్ అత్ర సర్వ్వం దినం నిష్కర్మ్మాణస్తిష్ఠథ?
7 அதற்கு அவர்கள்: ஒருவரும் எங்களுக்கு வேலை கொடுக்கவில்லை என்றார்கள். அவன் அவர்களைப் பார்த்து: நீங்களும் திராட்சைத்தோட்டத்திற்குப் போங்கள், நியாயமானபடி கூலி பெற்றுக்கொள்வீர்கள் என்றான்.
తే ప్రత్యవదన్, అస్మాన్ న కోపి కర్మమణి నియుంక్తే| తదానీం స కథితవాన్, యూయమపి మమ ద్రాక్షాక్షేత్రం యాత, తేన యోగ్యాం భృతిం లప్స్యథ|
8 மாலைநேரத்தில், திராட்சைத்தோட்டத்தின் எஜமான் தன் நிர்வாகியைப் பார்த்து: நீ வேலையாட்களை அழைத்து, பிந்தி வந்தவர்கள் தொடங்கி முதலில் வந்தவர்கள்வரைக்கும் அவர்களுக்குக் கூலிகொடு என்றான்.
తదనన్తరం సన్ధ్యాయాం సత్యాం సఏవ ద్రాక్షాక్షేత్రపతిరధ్యక్షం గదివాన్, కృషకాన్ ఆహూయ శేషజనమారభ్య ప్రథమం యావత్ తేభ్యో భృతిం దేహి|
9 அப்பொழுது ஐந்துமணியளவில் சேர்க்கப்பட்டவர்கள் வந்து ஆளுக்கு ஒவ்வொரு வெள்ளிக்காசு வாங்கினார்கள்.
తేన యే దణ్డద్వయావస్థితే సమాయాతాస్తేషామ్ ఏకైకో జనో ముద్రాచతుర్థాంశం ప్రాప్నోత్|
10 ௧0 முந்தி சேர்க்கப்பட்டவர்கள் வந்து, தங்களுக்கு அதிக கூலி கிடைக்கும் என்று நினைத்தார்கள், அவர்களும் ஆளுக்கு ஒவ்வொரு வெள்ளிக்காசு வாங்கினார்கள்.
తదానీం ప్రథమనియుక్తా జనా ఆగత్యానుమితవన్తో వయమధికం ప్రప్స్యామః, కిన్తు తైరపి ముద్రాచతుర్థాంశోఽలాభి|
11 ௧௧ வாங்கிக்கொண்டு, வீட்டெஜமானைப் பார்த்து:
తతస్తే తం గృహీత్వా తేన క్షేత్రపతినా సాకం వాగ్యుద్ధం కుర్వ్వన్తః కథయామాసుః,
12 ௧௨ பிந்திவந்தவர்களாகிய இவர்கள் ஒருமணிநேரம்மட்டும் வேலைசெய்தார்கள்; பகலின் பாடுகளையும் வெயிலின் வெப்பத்தையும் சகித்த எங்களுக்கு இவர்களைச் சமமாக்கினீரே என்று முறுமுறுத்தார்கள்.
వయం కృత్స్నం దినం తాపక్లేశౌ సోఢవన్తః, కిన్తు పశ్చాతాయా సే జనా దణ్డద్వయమాత్రం పరిశ్రాన్తవన్తస్తేఽస్మాభిః సమానాంశాః కృతాః|
13 ௧௩ அவர்களில் ஒருவனுக்கு அவன் மறுமொழியாக: நண்பனே, நான் உனக்கு அநியாயம் செய்யவில்லை; நீ என்னிடத்தில் ஒரு வெள்ளிக்காசுக்குச் சம்மதிக்கவில்லையா?
తతః స తేషామేకం ప్రత్యువాచ, హే వత్స, మయా త్వాం ప్రతి కోప్యన్యాయో న కృతః కిం త్వయా మత్సమక్షం ముద్రాచతుర్థాంశో నాఙ్గీకృతః?
14 ௧௪ உன்னுடையதை நீ வாங்கிக்கொண்டு போ, உனக்குக் கொடுத்ததுபோல பிந்திவந்தவனாகிய இவனுக்கும் கொடுப்பது என்னுடைய விருப்பம்.
తస్మాత్ తవ యత్ ప్రాప్యం తదాదాయ యాహి, తుభ్యం యతి, పశ్చాతీయనియుక్తలోకాయాపి తతి దాతుమిచ్ఛామి|
15 ௧௫ என்னுடையதை என் விருப்பப்படிச்செய்ய எனக்கு அதிகாரமில்லையா? நான் தாராளமனமுடையனாக இருக்கிறபடியால், நீ பொறாமைகொள்ளலாமா என்றான்.
స్వేచ్ఛయా నిజద్రవ్యవ్యవహరణం కిం మయా న కర్త్తవ్యం? మమ దాతృత్వాత్ త్వయా కిమ్ ఈర్ష్యాదృష్టిః క్రియతే?
16 ௧௬ இவ்விதமாக, பிந்தினோர் முந்தினோராகவும், முந்தினோர் பிந்தினோராகவும் இருப்பார்கள்; அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.
ఇత్థమ్ అగ్రీయలోకాః పశ్చతీయా భవిష్యన్తి, పశ్చాతీయజనాశ్చగ్రీయా భవిష్యన్తి, అహూతా బహవః కిన్త్వల్పే మనోభిలషితాః|
17 ௧௭ இயேசு எருசலேமுக்குப் போகும்போது, வழியிலே பன்னிரண்டு சீடர்களையும் தனியே அழைத்து:
తదనన్తరం యీశు ర్యిరూశాలమ్నగరం గచ్ఛన్ మార్గమధ్యే శిష్యాన్ ఏకాన్తే వభాషే,
18 ௧௮ இதோ, எருசலேமுக்குப் போகிறோம்; மனிதகுமாரன் பிரதான ஆசாரியர்களிடத்திலும் வேதபண்டிதரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரணதண்டனைக்குள்ளாகத் தீர்த்து,
పశ్య వయం యిరూశాలమ్నగరం యామః, తత్ర ప్రధానయాజకాధ్యాపకానాం కరేషు మనుష్యపుత్రః సమర్పిష్యతే;
19 ௧௯ அவரைப் பரிகாசம்பண்ணவும், சாட்டையினால் அடிக்கவும், சிலுவையில் அறையவும் யூதரல்லாதவரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள்; ஆனாலும் மூன்றாம்நாளிலே அவர் உயிரோடு எழுந்திருப்பார் என்றார்.
తే చ తం హన్తుమాజ్ఞాప్య తిరస్కృత్య వేత్రేణ ప్రహర్త్తుం క్రుశే ధాతయితుఞ్చాన్యదేశీయానాం కరేషు సమర్పయిష్యన్తి, కిన్తు స తృతీయదివసే శ్మశానాద్ ఉత్థాపిష్యతే|
20 ௨0 அப்பொழுது, செபெதேயுவின் குமாரர்களுடைய தாய் தன் குமாரர்களோடுகூட அவரிடத்தில் வந்து, அவரைப் பணிந்துகொண்டு: உம்மிடத்தில் ஒரு விண்ணப்பம் செய்யவேண்டும் என்றாள்.
తదానీం సివదీయస్య నారీ స్వపుత్రావాదాయ యీశోః సమీపమ్ ఏత్య ప్రణమ్య కఞ్చనానుగ్రహం తం యయాచే|
21 ௨௧ அவர் அவளைப் பார்த்து: உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவள்: உம்முடைய ராஜ்யத்திலே என் குமாரர்களாகிய இவ்விரண்டுபேரில் ஒருவன் உமது வலதுபக்கத்திலும், ஒருவன் உமது இடதுபக்கத்திலும் உட்காரும்படி அருள்செய்யவேண்டும் என்றாள்.
తదా యీశుస్తాం ప్రోక్తవాన్, త్వం కిం యాచసే? తతః సా బభాషే, భవతో రాజత్వే మమానయోః సుతయోరేకం భవద్దక్షిణపార్శ్వే ద్వితీయం వామపార్శ్వ ఉపవేష్టుమ్ ఆజ్ఞాపయతు|
22 ௨௨ இயேசு மறுமொழியாக: நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் இடத்தை நீங்கள் பெறவும் உங்களால் கூடுமா என்றார். அதற்கு அவர்கள்: கூடும் என்றார்கள்.
యీశుః ప్రత్యువాచ, యువాభ్యాం యద్ యాచ్యతే, తన్న బుధ్యతే, అహం యేన కంసేన పాస్యామి యువాభ్యాం కిం తేన పాతుం శక్యతే? అహఞ్చ యేన మజ్జేనేన మజ్జిష్యే, యువాభ్యాం కిం తేన మజ్జయితుం శక్యతే? తే జగదుః శక్యతే|
23 ௨௩ அவர் அவர்களைப் பார்த்து: என் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் பெறும் இடத்தையும் நீங்கள் பெறுவீர்கள்; ஆனாலும், என் வலதுபக்கத்திலும் என் இடதுபக்கத்திலும் உட்காரும்படி என் பிதாவினால் எவர்களுக்கு ஆயத்தம்செய்யப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார்.
తదా స ఉక్తవాన్, యువాం మమ కంసేనావశ్యం పాస్యథః, మమ మజ్జనేన చ యువామపి మజ్జిష్యేథే, కిన్తు యేషాం కృతే మత్తాతేన నిరూపితమ్ ఇదం తాన్ విహాయాన్యం కమపి మద్దక్షిణపార్శ్వే వామపార్శ్వే చ సముపవేశయితుం మమాధికారో నాస్తి|
24 ௨௪ மற்றப் பத்துப்பேரும் அதைக்கேட்டு, அந்த இரண்டு சகோதரர்கள்மேல் கோபமடைந்தார்கள்.
ఏతాం కథాం శ్రుత్వాన్యే దశశిష్యాస్తౌ భ్రాతరౌ ప్రతి చుకుపుః|
25 ௨௫ அப்பொழுது, இயேசு அவர்களைக் கிட்டவரச்செய்து: யூதரல்லாதவர்களுடைய தலைவர்கள் அவர்களை இறுமாப்பாக ஆளுகிறார்கள் என்றும், அதிகாரமுடைய மனிதர்கள் அவர்கள்மேல் கடினமாக அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றும், நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
కిన్తు యీశుః స్వసమీపం తానాహూయ జగాద, అన్యదేశీయలోకానాం నరపతయస్తాన్ అధికుర్వ్వన్తి, యే తు మహాన్తస్తే తాన్ శాసతి, ఇతి యూయం జానీథ|
26 ௨௬ உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாவது பெரியவனாக இருக்கவிரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைசெய்கிறவனாக இருக்கவேண்டும்.
కిన్తు యుష్మాకం మధ్యే న తథా భవేత్, యుష్మాకం యః కశ్చిత్ మహాన్ బుభూషతి, స యుష్మాన్ సేవేత;
27 ௨௭ உங்களில் எவனாவது முதன்மையானவனாக இருக்கவிரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைசெய்கிறவனாக இருக்கவேண்டும்.
యశ్చ యుష్మాకం మధ్యే ముఖ్యో బుభూషతి, స యుష్మాకం దాసో భవేత్|
28 ௨௮ அப்படியே, மனிதகுமாரனும் பணிவிடை பெரும்படி வராமல், பணிவிடைசெய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்.
ఇత్థం మనుజపుత్రః సేవ్యో భవితుం నహి, కిన్తు సేవితుం బహూనాం పరిత్రాణమూల్యార్థం స్వప్రాణాన్ దాతుఞ్చాగతః|
29 ௨௯ அவர்கள் எரிகோவிலிருந்து புறப்பட்டுப்போகும்போது, திரளான மக்கள் அவருக்குப் பின் சென்றார்கள்.
అనన్తరం యిరీహోనగరాత్ తేషాం బహిర్గమనసమయే తస్య పశ్చాద్ బహవో లోకా వవ్రజుః|
30 ௩0 அப்பொழுது வழியருகே உட்கார்ந்திருந்த இரண்டு குருடர்கள், இயேசு அவ்வழியே வருகிறார் என்று கேள்விப்பட்டு: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள்.
అపరం వర్త్మపార్శ్వ ఉపవిశన్తౌ ద్వావన్ధౌ తేన మార్గేణ యీశో ర్గమనం నిశమ్య ప్రోచ్చైః కథయామాసతుః, హే ప్రభో దాయూదః సన్తాన, ఆవయో ర్దయాం విధేహి|
31 ௩௧ அவர்கள் பேசாதிருக்கும்படி மக்கள் அவர்களை அதட்டினார்கள். அவர்களோ: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று அதிகமாகக் கூப்பிட்டார்கள்.
తతో లోకాః సర్వ్వే తుష్ణీమ్భవతమిత్యుక్త్వా తౌ తర్జయామాసుః; తథాపి తౌ పునరుచ్చైః కథయామాసతుః హే ప్రభో దాయూదః సన్తాన, ఆవాం దయస్వ|
32 ௩௨ இயேசு நின்று, அவர்களைத் தம்மிடத்தில் அழைத்து: நான் உங்களுக்கு என்னசெய்யவேண்டும் என்றிருக்கிறீர்கள் என்றார்.
తదానీం యీశుః స్థగితః సన్ తావాహూయ భాషితవాన్, యువయోః కృతే మయా కిం కర్త్తర్వ్యం? యువాం కిం కామయేథే?
33 ௩௩ அதற்கு அவர்கள்: ஆண்டவரே, எங்களுடைய கண்களைத் திறக்கவேண்டும் என்றார்கள்.
తదా తావుక్తవన్తౌ, ప్రభో నేత్రాణి నౌ ప్రసన్నాని భవేయుః|
34 ௩௪ இயேசு மனதுருகி, அவர்கள் கண்களைத் தொட்டார்; உடனே அவர்கள் பார்வையடைந்து, அவருக்குப் பின்னே சென்றார்கள்.
తదానీం యీశుస్తౌ ప్రతి ప్రమన్నః సన్ తయో ర్నేత్రాణి పస్పర్శ, తేనైవ తౌ సువీక్షాఞ్చక్రాతే తత్పశ్చాత్ జగ్ముతుశ్చ|

< மத்தேயு 20 >