< மத்தேயு 20 >
1 ௧ பரலோகராஜ்யம் வீட்டெஜமானாகிய ஒரு மனிதனுக்கு ஒப்பாக இருக்கிறது; அவன் தன் திராட்சைத்தோட்டத்திற்கு வேலையாட்களை அமர்த்த அதிகாலையிலே புறப்பட்டான்.
Фииндкэ Ымпэрэция черурилор се асямэнэ ку ун господар каре а ешит дис-де-диминяцэ сэ-шь токмяскэ лукрэторь ла вие.
2 ௨ வேலையாட்களுடன் நாளொன்றுக்கு ஒரு வெள்ளிக்காசு கூலிபேசி, அவர்களைத் தன் திராட்சைத்தோட்டத்திற்கு அனுப்பினான்.
С-а ынвоит ку лукрэторий ку кыте ун леупе зи ши й-а тримис ла вие.
3 ௩ காலை ஒன்பதுமணியளவில் அவன் புறப்பட்டுப்போய், கடைத்தெருவிலே சும்மா நிற்கிற வேறு சிலரைப் பார்த்து:
А ешит пе ла часул ал трейля ши а вэзут пе алций стынд ын пяцэ фэрэ лукру.
4 ௪ நீங்களும் திராட்சைத்தோட்டத்திற்குப் போங்கள், நியாயமானபடி உங்களுக்குக் கூலி கொடுப்பேன் என்றான்; அவர்களும் போனார்கள்.
‘Дучеци-вэ ши вой ын вия мя’, ле-а зис ел, ‘ши вэ вой да че ва фи ку дрептул.’ Ши с-ау дус.
5 ௫ மறுபடியும், நண்பகல் பன்னிரண்டுமணிக்கும், மூன்றுமணிக்கும் அவன்போய் அப்படியே செய்தான்.
А ешит ярэшь пе ла часул ал шаселя ши ал ноуэля ши а фэкут ла фел.
6 ௬ ஐந்துமணியளவிலும் அவன்போய், சும்மா நிற்கிற வேறு சிலரைப் பார்த்து: நீங்கள் பகல் முழுவதும் இங்கே சும்மா நிற்கிறதென்ன என்று கேட்டான்.
Кынд а ешит пе ла часул ал унспрезечеля, а гэсит пе алций стынд ын пяцэ ши ле-а зис: ‘Де че стаць аич тоатэ зиуа фэрэ лукру?’
7 ௭ அதற்கு அவர்கள்: ஒருவரும் எங்களுக்கு வேலை கொடுக்கவில்லை என்றார்கள். அவன் அவர்களைப் பார்த்து: நீங்களும் திராட்சைத்தோட்டத்திற்குப் போங்கள், நியாயமானபடி கூலி பெற்றுக்கொள்வீர்கள் என்றான்.
Ей й-ау рэспунс: ‘Пентру кэ ну не-а токмит нимень.’ ‘Дучеци-вэ ши вой ын вия мя’, ле-а зис ел, ‘ши вець прими че ва фи ку дрептул.’
8 ௮ மாலைநேரத்தில், திராட்சைத்தோட்டத்தின் எஜமான் தன் நிர்வாகியைப் பார்த்து: நீ வேலையாட்களை அழைத்து, பிந்தி வந்தவர்கள் தொடங்கி முதலில் வந்தவர்கள்வரைக்கும் அவர்களுக்குக் கூலிகொடு என்றான்.
Сяра, стэпынул вией а зис исправникулуй сэу: ‘Кямэ пе лукрэторь ши дэ-ле плата, ынчепынд де ла чей де пе урмэ пынэ ла чей динтый.’
9 ௯ அப்பொழுது ஐந்துமணியளவில் சேர்க்கப்பட்டவர்கள் வந்து ஆளுக்கு ஒவ்வொரு வெள்ளிக்காசு வாங்கினார்கள்.
Чей дин часул ал унспрезечеля ау венит ши ау луат фиекаре кыте ун леу.
10 ௧0 முந்தி சேர்க்கப்பட்டவர்கள் வந்து, தங்களுக்கு அதிக கூலி கிடைக்கும் என்று நினைத்தார்கள், அவர்களும் ஆளுக்கு ஒவ்வொரு வெள்ளிக்காசு வாங்கினார்கள்.
Кынд ау венит чей динтый, сокотяу кэ вор прими май мулт, дар ау примит ши ей тот кыте ун леу де фиекаре.
11 ௧௧ வாங்கிக்கொண்டு, வீட்டெஜமானைப் பார்த்து:
Дупэ че ау примит баний, кыртяу ымпотрива господарулуй
12 ௧௨ பிந்திவந்தவர்களாகிய இவர்கள் ஒருமணிநேரம்மட்டும் வேலைசெய்தார்கள்; பகலின் பாடுகளையும் வெயிலின் வெப்பத்தையும் சகித்த எங்களுக்கு இவர்களைச் சமமாக்கினீரே என்று முறுமுறுத்தார்கள்.
ши зичяу: ‘Ачештя де пе урмэ н-ау лукрат декыт ун час, ши ла платэ й-ай фэкут деопотривэ ку ной, каре ам суферит греул ши зэдуфул зилей.’
13 ௧௩ அவர்களில் ஒருவனுக்கு அவன் மறுமொழியாக: நண்பனே, நான் உனக்கு அநியாயம் செய்யவில்லை; நீ என்னிடத்தில் ஒரு வெள்ளிக்காசுக்குச் சம்மதிக்கவில்லையா?
Дрепт рэспунс, ел а зис унуя динтре ей: ‘Приетене, цие ну-ць фак ничо недрептате. Ну те-ай токмит ку мине ку ун леу?
14 ௧௪ உன்னுடையதை நீ வாங்கிக்கொண்டு போ, உனக்குக் கொடுத்ததுபோல பிந்திவந்தவனாகிய இவனுக்கும் கொடுப்பது என்னுடைய விருப்பம்.
Я-ць че ци се кувине ши плякэ. Еу вряу сэ плэтеск ши ачестуя дин урмэ ка ши цие.
15 ௧௫ என்னுடையதை என் விருப்பப்படிச்செய்ய எனக்கு அதிகாரமில்லையா? நான் தாராளமனமுடையனாக இருக்கிறபடியால், நீ பொறாமைகொள்ளலாமா என்றான்.
Ну потсэ фак че вряу ку че-й ал меу? Орьесте окюл тэу рэу, фииндкэ еу сунт бун?’
16 ௧௬ இவ்விதமாக, பிந்தினோர் முந்தினோராகவும், முந்தினோர் பிந்தினோராகவும் இருப்பார்கள்; அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.
Тот аша, чей дин урмэ вор фи чей динтый, ши чей динтый вор фи чей дин урмэ; пентру кэмулць сунт кемаць, дар пуцинь сунт алешь.”
17 ௧௭ இயேசு எருசலேமுக்குப் போகும்போது, வழியிலே பன்னிரண்டு சீடர்களையும் தனியே அழைத்து:
Пе кынд Се суя Исус ла Иерусалим, пе друм, а луат деопарте пе чей дойспрезече ученичь ши ле-а зис:
18 ௧௮ இதோ, எருசலேமுக்குப் போகிறோம்; மனிதகுமாரன் பிரதான ஆசாரியர்களிடத்திலும் வேதபண்டிதரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரணதண்டனைக்குள்ளாகத் தீர்த்து,
„Ятэкэ не суим ла Иерусалим, ши Фиул омулуй ва фи дат ын мыниле преоцилор челор май де сямэ ши кэртурарилор. Ей Ыл вор осынди ла моарте
19 ௧௯ அவரைப் பரிகாசம்பண்ணவும், சாட்டையினால் அடிக்கவும், சிலுவையில் அறையவும் யூதரல்லாதவரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள்; ஆனாலும் மூன்றாம்நாளிலே அவர் உயிரோடு எழுந்திருப்பார் என்றார்.
ши-Лвор да ын мыниле нямурилор, ка сэ-Л батжокоряскэ, сэ-Л батэ ши сэ-Л рэстигняскэ, дар а трея зи ва ынвия.”
20 ௨0 அப்பொழுது, செபெதேயுவின் குமாரர்களுடைய தாய் தன் குமாரர்களோடுகூட அவரிடத்தில் வந்து, அவரைப் பணிந்துகொண்டு: உம்மிடத்தில் ஒரு விண்ணப்பம் செய்யவேண்டும் என்றாள்.
Атунч, мама фиилор луй Зебедей с-а апропият де Исус, ымпреунэ ку фиий ей, ши И с-а ынкинат, врынд сэ-Й факэ о черере.
21 ௨௧ அவர் அவளைப் பார்த்து: உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவள்: உம்முடைய ராஜ்யத்திலே என் குமாரர்களாகிய இவ்விரண்டுபேரில் ஒருவன் உமது வலதுபக்கத்திலும், ஒருவன் உமது இடதுபக்கத்திலும் உட்காரும்படி அருள்செய்யவேண்டும் என்றாள்.
Ел а ынтребат-о: „Че врей?” „Порунчеште”, Й-а зис еа, „ка, ын Ымпэрэция Та, ачешть дой фий ай мей сэ шадэ унул ла дряпта ши алтул ла стынга Та.”
22 ௨௨ இயேசு மறுமொழியாக: நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் இடத்தை நீங்கள் பெறவும் உங்களால் கூடுமா என்றார். அதற்கு அவர்கள்: கூடும் என்றார்கள்.
Дрепт рэспунс, Исус а зис: „Ну штиць че черець. Путець вой сэ бець пахарулпе каре ам сэ-л бяу Еу ши сэ фиць ботезаць ку ботезулку каре ам сэ фиу ботезат Еу?” „Путем”, Й-ау зис ей.
23 ௨௩ அவர் அவர்களைப் பார்த்து: என் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் பெறும் இடத்தையும் நீங்கள் பெறுவீர்கள்; ஆனாலும், என் வலதுபக்கத்திலும் என் இடதுபக்கத்திலும் உட்காரும்படி என் பிதாவினால் எவர்களுக்கு ஆயத்தம்செய்யப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார்.
Ши Ел ле-а рэспунс: „Есте адевэраткэ вець бя пахарул Меу ши вець фи ботезаць ку ботезул ку каре ам сэ фиу ботезат Еу, дар а шедя ла дряпта ши ла стынга Мя ну атырнэ де Мине с-одау, чи есте пэстратэ пентру ачея пентру каре а фост прегэтитэ де Татэл Меу.”
24 ௨௪ மற்றப் பத்துப்பேரும் அதைக்கேட்டு, அந்த இரண்டு சகோதரர்கள்மேல் கோபமடைந்தார்கள்.
Чей зече, кынд ау аузит, с-ау мыният пе чей дой фраць.
25 ௨௫ அப்பொழுது, இயேசு அவர்களைக் கிட்டவரச்செய்து: யூதரல்லாதவர்களுடைய தலைவர்கள் அவர்களை இறுமாப்பாக ஆளுகிறார்கள் என்றும், அதிகாரமுடைய மனிதர்கள் அவர்கள்மேல் கடினமாக அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றும், நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
Исус й-а кемат ши ле-а зис: „Штиць кэ домниторий нямурилор домнеск песте еле, ши май-марий лор ле порунческ ку стэпынире.
26 ௨௬ உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாவது பெரியவனாக இருக்கவிரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைசெய்கிறவனாக இருக்கவேண்டும்.
Ынтревой сэ ну фие аша. Чи орькарева вря сэ фие маре ынтре вой сэ фие служиторул востру;
27 ௨௭ உங்களில் எவனாவது முதன்மையானவனாக இருக்கவிரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைசெய்கிறவனாக இருக்கவேண்டும்.
ши орькаре ва вря сэ фие чел динтый ынтре вой сэ вэ фие роб.
28 ௨௮ அப்படியே, மனிதகுமாரனும் பணிவிடை பெரும்படி வராமல், பணிவிடைசெய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்.
Пентрукэ нич Фиуломулуй н-а венит сэ И се служяскэ, чиЕл сэ служяскэ ши сэ-Шьдя вяца ка рэскумпэраре пентрумулць.”
29 ௨௯ அவர்கள் எரிகோவிலிருந்து புறப்பட்டுப்போகும்போது, திரளான மக்கள் அவருக்குப் பின் சென்றார்கள்.
Кынд ау ешит дин Иерихон, о маре глоатэ а мерс дупэ Исус.
30 ௩0 அப்பொழுது வழியருகே உட்கார்ந்திருந்த இரண்டு குருடர்கள், இயேசு அவ்வழியே வருகிறார் என்று கேள்விப்பட்டு: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள்.
Ши дой орбь шедяу лынгэ друм. Ей ау аузит кэ трече Исус ши ау ынчепут сэ стриӂе: „Ай милэ де ной, Доамне, Фиул луй Давид!”
31 ௩௧ அவர்கள் பேசாதிருக்கும்படி மக்கள் அவர்களை அதட்டினார்கள். அவர்களோ: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று அதிகமாகக் கூப்பிட்டார்கள்.
Глоата ый черта сэ такэ. Дар ей май таре стригау: „Ай милэ де ной, Доамне, Фиул луй Давид!”
32 ௩௨ இயேசு நின்று, அவர்களைத் தம்மிடத்தில் அழைத்து: நான் உங்களுக்கு என்னசெய்யவேண்டும் என்றிருக்கிறீர்கள் என்றார்.
Исус С-а оприт, й-а кемат ши ле-а зис: „Че врець сэ вэ фак?”
33 ௩௩ அதற்கு அவர்கள்: ஆண்டவரே, எங்களுடைய கண்களைத் திறக்கவேண்டும் என்றார்கள்.
„Доамне”, Й-ау зис ей, „сэ ни се дескидэ окий!”
34 ௩௪ இயேசு மனதுருகி, அவர்கள் கண்களைத் தொட்டார்; உடனே அவர்கள் பார்வையடைந்து, அவருக்குப் பின்னே சென்றார்கள்.
Луй Исус И с-а фэкут милэ де ей, С-а атинс де окий лор ши ындатэ орбий шь-ау кэпэтат ведеря ши ау мерс дупэ Ел.