< மத்தேயு 20 >

1 பரலோகராஜ்யம் வீட்டெஜமானாகிய ஒரு மனிதனுக்கு ஒப்பாக இருக்கிறது; அவன் தன் திராட்சைத்தோட்டத்திற்கு வேலையாட்களை அமர்த்த அதிகாலையிலே புறப்பட்டான்.
ⲁ̅ⲉⲥⲧⲛⲧⲱⲛ ⲅⲁⲣ ⲛϭⲓⲧⲙⲛⲧⲣⲣⲟ ⲛⲙⲡⲏⲩⲉ ⲉⲩⲣⲱⲙⲉ ⲛⲣⲙⲙⲁⲟ. ⲡⲁⲓ ⲛⲧⲁϥⲉⲓ ⲉⲃⲟⲗ ⲉϩⲧⲟⲟⲩⲉ ⲉⲑⲛⲉⲉⲣⲅⲁⲧⲏⲥ ⲉⲡⲉϥⲙⲁ ⲛⲉⲗⲟⲟⲗⲉ.
2 வேலையாட்களுடன் நாளொன்றுக்கு ஒரு வெள்ளிக்காசு கூலிபேசி, அவர்களைத் தன் திராட்சைத்தோட்டத்திற்கு அனுப்பினான்.
ⲃ̅ⲁϥⲥⲙⲛⲧⲥ ⲇⲉ ⲙⲛⲛⲉⲣⲅⲁⲧⲏⲥ ⲉⲩⲥⲁⲧⲉⲉⲣⲉ ⲙⲡⲉϩⲟⲟⲩ ⲁϥϫⲟⲟⲩⲥⲉ ⲉⲡⲉϥⲙⲁ ⲛⲉⲗⲟⲟⲗⲉ.
3 காலை ஒன்பதுமணியளவில் அவன் புறப்பட்டுப்போய், கடைத்தெருவிலே சும்மா நிற்கிற வேறு சிலரைப் பார்த்து:
ⲅ̅ⲁϥⲉⲓ ⲇⲉ ⲉⲃⲟⲗ ⲙⲡⲛⲁⲩ ⲛϫⲡϣⲟⲙⲧⲉ ⲁϥⲛⲁⲩ ⲉϩⲉⲛⲕⲟⲟⲩⲉ ⲉⲩⲁϩⲉⲣⲁⲧⲟⲩ ϩⲛⲧⲁⲅⲟⲣⲁ ⲉⲩⲟⲩⲟⲥϥ.
4 நீங்களும் திராட்சைத்தோட்டத்திற்குப் போங்கள், நியாயமானபடி உங்களுக்குக் கூலி கொடுப்பேன் என்றான்; அவர்களும் போனார்கள்.
ⲇ̅ⲡⲉϫⲁϥ ⲛⲛⲕⲟⲟⲩⲉ. ϫⲉ ⲃⲱⲕ ϩⲱⲧⲧⲏⲩⲧⲛ ⲉⲡⲁⲙⲁ ⲛⲉⲗⲟⲟⲗⲉ ⲁⲩⲱ ⲡⲉⲧⲙⲡϣⲁ ϯⲛⲁⲧⲁⲁϥ ⲛⲏⲧⲛ.
5 மறுபடியும், நண்பகல் பன்னிரண்டுமணிக்கும், மூன்றுமணிக்கும் அவன்போய் அப்படியே செய்தான்.
ⲉ̅ⲛⲧⲟⲟⲩ ⲇⲉ ⲁⲩⲃⲱⲕ. ⲁϥⲉⲓ ⲇⲉ ⲟⲛ ⲉⲃⲟⲗ ⲙⲡⲛⲁⲩ ⲛϫⲡⲥⲟ ⲙⲛϫⲡⲯⲓⲧⲉ ⲁϥⲉⲓⲣⲉ ϩⲓⲛⲁⲓ.
6 ஐந்துமணியளவிலும் அவன்போய், சும்மா நிற்கிற வேறு சிலரைப் பார்த்து: நீங்கள் பகல் முழுவதும் இங்கே சும்மா நிற்கிறதென்ன என்று கேட்டான்.
ⲋ̅ⲛⲧⲉⲣⲉϥⲉⲓ ⲇⲉ ⲟⲛ ⲉⲃⲟⲗ ⲙⲡⲛⲁⲩ ⲛϫⲡⲙⲛⲧⲟⲩⲉ. ⲁϥⲛⲁⲩ ⲉϩⲉⲛⲕⲟⲟⲩⲉ ⲉⲩⲁϩⲉⲣⲁⲧⲟⲩ ⲡⲉϫⲁϥ ⲛⲁⲩ ϫⲉ ⲁϩⲣⲱⲧⲛ ⲧⲉⲧⲛⲁϩⲉⲣⲁⲧⲧⲏⲩⲧⲛ ⲙⲡⲉⲓⲙⲁ ⲙⲡⲉϩⲟⲟⲩ ⲧⲏⲣϥ ⲉⲧⲉⲧⲛⲟⲩⲟⲥϥ.
7 அதற்கு அவர்கள்: ஒருவரும் எங்களுக்கு வேலை கொடுக்கவில்லை என்றார்கள். அவன் அவர்களைப் பார்த்து: நீங்களும் திராட்சைத்தோட்டத்திற்குப் போங்கள், நியாயமானபடி கூலி பெற்றுக்கொள்வீர்கள் என்றான்.
ⲍ̅ⲡⲉϫⲁⲩ ⲛⲁϥ ϫⲉ ⲉⲃⲟⲗ ϫⲉ ⲙⲡⲉⲗⲁⲁⲩ ⲑⲛⲟⲛ. ⲡⲉϫⲁϥ ⲛⲁⲩ ϫⲉ ⲃⲱⲕ ϩⲱⲧⲧⲏⲩⲧⲛ ⲉⲡⲁⲙⲁ ⲛⲉⲗⲟⲟⲗⲉ.
8 மாலைநேரத்தில், திராட்சைத்தோட்டத்தின் எஜமான் தன் நிர்வாகியைப் பார்த்து: நீ வேலையாட்களை அழைத்து, பிந்தி வந்தவர்கள் தொடங்கி முதலில் வந்தவர்கள்வரைக்கும் அவர்களுக்குக் கூலிகொடு என்றான்.
ⲏ̅ⲣⲟⲩϩⲉ ⲇⲉ ⲛⲧⲉⲣⲉϥϣⲱⲡⲉ. ⲡⲉϫⲁϥ ⲛϭⲓⲡϫⲟⲉⲓⲥ ⲙⲡⲙⲁ ⲛⲉⲗⲟⲟⲗⲉ ⲙⲡⲉϥⲉⲡⲓⲧⲣⲟⲡⲟⲥ. ϫⲉ ⲙⲟⲩⲧⲉ ⲉⲛⲉⲣⲅⲁⲧⲏⲥ ⲛⲅϯ ⲛⲁⲩ ⲙⲡⲉⲩⲃⲉⲕⲉ ⲉⲁⲕⲁⲣⲭⲉⲓ ϫⲓⲛⲛϩⲁⲉⲉⲩ ϣⲁⲛⲧⲉⲕⲡⲱϩ ⲉⲛϣⲟⲣⲡ.
9 அப்பொழுது ஐந்துமணியளவில் சேர்க்கப்பட்டவர்கள் வந்து ஆளுக்கு ஒவ்வொரு வெள்ளிக்காசு வாங்கினார்கள்.
ⲑ̅ⲁⲩⲉⲓ ⲇⲉ ⲛϭⲓⲛⲁϫⲡⲙⲛⲧⲟⲩⲉ ⲁⲩϫⲓ ⲛⲟⲩⲥⲁⲧⲉⲉⲣⲉ ⲉⲡⲟⲩⲁ.
10 ௧0 முந்தி சேர்க்கப்பட்டவர்கள் வந்து, தங்களுக்கு அதிக கூலி கிடைக்கும் என்று நினைத்தார்கள், அவர்களும் ஆளுக்கு ஒவ்வொரு வெள்ளிக்காசு வாங்கினார்கள்.
ⲓ̅ⲁⲩⲉⲓ ϩⲱⲟⲩ ⲛϭⲓⲛϣⲟⲣⲡ ⲉⲩⲙⲉⲉⲩⲉ ϫⲉ ⲉⲩⲛⲁϫⲓ ⲛⲟⲩϩⲟⲩⲟ. ⲁⲩϫⲓ ϩⲱⲟⲩ ⲛⲟⲩⲥⲁⲧⲉⲉⲣⲉ ⲉⲡⲟⲩⲁ.
11 ௧௧ வாங்கிக்கொண்டு, வீட்டெஜமானைப் பார்த்து:
ⲓ̅ⲁ̅ⲛⲧⲉⲣⲟⲩϫⲓⲧⲥ ⲇⲉ ⲁⲩⲕⲣⲙⲣⲙ ⲉϩⲟⲩⲛ ⲉⲡϫⲟⲉⲓⲥ.
12 ௧௨ பிந்திவந்தவர்களாகிய இவர்கள் ஒருமணிநேரம்மட்டும் வேலைசெய்தார்கள்; பகலின் பாடுகளையும் வெயிலின் வெப்பத்தையும் சகித்த எங்களுக்கு இவர்களைச் சமமாக்கினீரே என்று முறுமுறுத்தார்கள்.
ⲓ̅ⲃ̅ⲉⲩϫⲱ ⲙⲙⲟⲥ. ϫⲉ ⲛⲉⲓϩⲁⲉⲉⲩ ⲟⲩⲟⲩⲛⲟⲩ ⲛⲟⲩⲱⲧ ⲧⲉⲛⲧⲁⲩⲁⲁⲥ ⲁⲩⲱ ⲁⲕϣⲁϣⲟⲩ ⲛⲙⲙⲁⲛ ⲛⲁⲓ ⲛⲧⲁⲩϥⲓ ⲙⲡⲃⲁⲣⲟⲥ ⲙⲡⲉϩⲟⲟⲩ ⲙⲛⲡⲕⲁⲩⲥⲱⲛ.
13 ௧௩ அவர்களில் ஒருவனுக்கு அவன் மறுமொழியாக: நண்பனே, நான் உனக்கு அநியாயம் செய்யவில்லை; நீ என்னிடத்தில் ஒரு வெள்ளிக்காசுக்குச் சம்மதிக்கவில்லையா?
ⲓ̅ⲅ̅ⲛⲧⲟϥ ⲇⲉ ⲁϥⲟⲩⲱϣⲃ ⲛⲟⲩⲁ ⲙⲙⲟⲟⲩ ⲉϥϫⲱ ⲙⲙⲟⲥ. ϫⲉ ⲡⲉϣⲃⲏⲣ ⲛϯϫⲓ ⲙⲙⲟⲕ ⲁⲛ ⲛϭⲟⲛⲥ. ⲙⲏ ⲛⲧⲁⲓⲥⲙⲛⲧⲥ ⲛⲙⲙⲁⲕ ⲁⲛ ⲉⲩⲥⲁⲧⲉⲉⲣⲉ.
14 ௧௪ உன்னுடையதை நீ வாங்கிக்கொண்டு போ, உனக்குக் கொடுத்ததுபோல பிந்திவந்தவனாகிய இவனுக்கும் கொடுப்பது என்னுடைய விருப்பம்.
ⲓ̅ⲇ̅ϥⲓ ⲙⲡⲉⲧⲉⲡⲱⲕ ⲡⲉ ⲛⲅⲃⲱⲕ. ϯⲟⲩⲱϣ ⲇⲉ ⲁⲛⲟⲕ ⲉϯ ⲙⲡⲉⲓϩⲁⲉ ⲛⲧⲉⲕϩⲉ.
15 ௧௫ என்னுடையதை என் விருப்பப்படிச்செய்ய எனக்கு அதிகாரமில்லையா? நான் தாராளமனமுடையனாக இருக்கிறபடியால், நீ பொறாமைகொள்ளலாமா என்றான்.
ⲓ̅ⲉ̅ⲏ ⲟⲩⲕ ⲉⲝⲉⲥⲧⲉⲓ ⲛⲁⲓ ⲉⲣⲡⲉϯⲟⲩⲁϣϥ ϩⲛⲛⲉⲧⲉⲛⲟⲩⲓ ⲛⲉ. ⲏ ⲉⲣⲉ ⲡⲉⲕⲃⲁⲗ ⲟ ⲙⲡⲟⲛⲏⲣⲟⲥ ϫⲉ ⲁⲛⲅⲟⲩⲁⲅⲁⲑⲟⲥ ⲁⲛⲟⲕ.
16 ௧௬ இவ்விதமாக, பிந்தினோர் முந்தினோராகவும், முந்தினோர் பிந்தினோராகவும் இருப்பார்கள்; அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.
ⲓ̅ⲋ̅ⲧⲁⲓ ⲧⲉ ⲑⲉ ⲉⲧⲉⲣⲉⲛϣⲟⲣⲡ ⲛⲁⲣϩⲁⲉ ⲛⲧⲉⲛϩⲁⲉ ⲣϣⲟⲣⲡ.
17 ௧௭ இயேசு எருசலேமுக்குப் போகும்போது, வழியிலே பன்னிரண்டு சீடர்களையும் தனியே அழைத்து:
ⲓ̅ⲍ̅ⲉⲣⲉⲓ̅ⲥ̅ ⲇⲉ ⲛⲁⲃⲱⲕ ⲉϩⲣⲁⲓ ⲉⲑⲓⲉⲣⲟⲥⲟⲗⲩⲙⲁ. ⲁϥϫⲓ ⲙⲡⲉϥⲙⲛⲧⲥⲛⲟⲟⲩⲥ ⲙⲙⲁⲑⲏⲧⲏⲥ ⲙⲁⲩⲁⲁⲩ. ⲁⲩⲱ ϩⲣⲁⲓ ϩⲛⲧⲉϩⲓⲏ ⲡⲉϫⲁϥ ⲛⲁⲩ.
18 ௧௮ இதோ, எருசலேமுக்குப் போகிறோம்; மனிதகுமாரன் பிரதான ஆசாரியர்களிடத்திலும் வேதபண்டிதரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரணதண்டனைக்குள்ளாகத் தீர்த்து,
ⲓ̅ⲏ̅ϫⲉ ⲉⲓⲥϩⲏⲏⲧⲉ ⲧⲛⲛⲁⲃⲱⲕ ⲉϩⲣⲁⲓ ⲉⲑⲓⲉⲣⲟⲥⲟⲗⲩⲙⲁ. ⲁⲩⲱ ⲡϣⲏⲣⲉ ⲙⲡⲣⲱⲙⲉ ⲥⲉⲛⲁⲡⲁⲣⲁⲇⲓⲇⲟⲩ ⲙⲙⲟϥ ⲉⲧⲟⲟⲧⲟⲩ ⲛⲛⲁⲣⲭⲓⲉⲣⲉⲩⲥ ⲙⲛⲛⲉⲅⲣⲁⲙⲙⲁⲧⲉⲩⲥ ⲛⲥⲉⲧϭⲁⲓⲟϥ ⲉⲡⲙⲟⲩ.
19 ௧௯ அவரைப் பரிகாசம்பண்ணவும், சாட்டையினால் அடிக்கவும், சிலுவையில் அறையவும் யூதரல்லாதவரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள்; ஆனாலும் மூன்றாம்நாளிலே அவர் உயிரோடு எழுந்திருப்பார் என்றார்.
ⲓ̅ⲑ̅ⲛⲥⲉⲡⲁⲣⲁⲇⲓⲇⲟⲩ ⲙⲙⲟϥ ⲉⲧⲟⲟⲧⲟⲩ ⲛⲛϩⲉⲑⲛⲟⲥ ⲉⲥⲱⲃⲉ ⲙⲙⲟϥ. ⲁⲩⲱ ⲛⲥⲉⲙⲁⲥⲧⲓⲅⲟⲩ ⲙⲙⲟϥ. ⲁⲩⲱ ⲛⲥⲉⲥxⲟ̅ⲩ̅ ⲙⲙⲟϥ. ⲛϥⲧⲱⲟⲩⲛ ϩⲙⲡⲙⲉϩϣⲟⲙⲛⲧ ⲛϩⲟⲟⲩ.
20 ௨0 அப்பொழுது, செபெதேயுவின் குமாரர்களுடைய தாய் தன் குமாரர்களோடுகூட அவரிடத்தில் வந்து, அவரைப் பணிந்துகொண்டு: உம்மிடத்தில் ஒரு விண்ணப்பம் செய்யவேண்டும் என்றாள்.
ⲕ̅ⲧⲟⲧⲉ ⲁⲥϯⲡⲉⲥⲟⲩⲟⲓ ⲉⲣⲟϥ ⲛϭⲓⲧⲙⲁⲁⲩ ⲛⲛϣⲏⲣⲉ ⲛⲍⲉⲃⲉⲇⲁⲓⲟⲥ ⲙⲛⲛⲉⲥϣⲏⲣⲉ ⲉⲥⲟⲩⲱϣⲧ ⲛⲁϥ ⲁⲩⲱ ⲉⲥⲁⲓⲧⲉⲓ ⲛⲟⲩϩⲱⲃ ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲟⲟⲧϥ.
21 ௨௧ அவர் அவளைப் பார்த்து: உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவள்: உம்முடைய ராஜ்யத்திலே என் குமாரர்களாகிய இவ்விரண்டுபேரில் ஒருவன் உமது வலதுபக்கத்திலும், ஒருவன் உமது இடதுபக்கத்திலும் உட்காரும்படி அருள்செய்யவேண்டும் என்றாள்.
ⲕ̅ⲁ̅ⲛⲧⲟϥ ⲇⲉ ⲡⲉϫⲁϥ ⲛⲁⲥ ϫⲉ ⲉⲣⲟⲩⲉϣⲟⲩ. ⲛⲧⲟⲥ ⲇⲉ ⲡⲉϫⲁⲥ. ϫⲉ ⲁϫⲓⲥ ϫⲉⲕⲁⲥ ⲉⲣⲉⲡⲁϣⲏⲣⲉ ⲥⲛⲁⲩ ⲛⲁϩⲙⲟⲟⲥ. ⲟⲩⲁ ϩⲓⲟⲩⲛⲁⲙ ⲙⲙⲟⲕ ⲁⲩⲱ ⲟⲩⲁ ϩⲓϩⲃⲟⲩⲣ ⲙⲙⲟⲕ ϩⲣⲁⲓ ϩⲛⲧⲉⲕⲙⲛⲧⲣⲣⲟ.
22 ௨௨ இயேசு மறுமொழியாக: நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் இடத்தை நீங்கள் பெறவும் உங்களால் கூடுமா என்றார். அதற்கு அவர்கள்: கூடும் என்றார்கள்.
ⲕ̅ⲃ̅ⲁϥⲟⲩⲱϣⲃ ⲛϭⲓⲓ̅ⲥ̅ ⲉϥϫⲱ ⲙⲙⲟⲥ. ϫⲉ ⲛⲧⲉⲧⲛⲥⲟⲟⲩⲛ ⲁⲛ ϫⲉ ⲟⲩ ⲡⲉⲧⲉⲧⲛⲁⲓⲧⲉⲓ ⲙⲙⲟϥ. ⲟⲩⲛϣϭⲟⲙ ⲙⲙⲱⲧⲛ ⲉⲥⲉⲡϫⲱ ⲉϯⲛⲁⲥⲟⲟϥ. ⲡⲉϫⲁⲩ ⲛⲁϥ ϫⲉ ⲥⲉ.
23 ௨௩ அவர் அவர்களைப் பார்த்து: என் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் பெறும் இடத்தையும் நீங்கள் பெறுவீர்கள்; ஆனாலும், என் வலதுபக்கத்திலும் என் இடதுபக்கத்திலும் உட்காரும்படி என் பிதாவினால் எவர்களுக்கு ஆயத்தம்செய்யப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார்.
ⲕ̅ⲅ̅ⲡⲉϫⲁϥ ⲛⲁⲩ ϫⲉ ⲡⲁϫⲱ ⲙⲉⲛ ⲧⲉⲧⲛⲁⲥⲟⲟϥ. ⲡⲉϩⲙⲟⲟⲥ ⲇⲉ ϩⲓⲟⲩⲛⲁⲙ ⲙⲙⲟⲓ ⲏ ϩⲓϩⲃⲟⲩⲣ ⲙⲙⲟⲓ ⲙⲡⲱⲓ ⲁⲛ ⲡⲉ ⲉⲧⲁⲁϥ ⲁⲗⲗⲁ ⲡⲁⲛⲉⲛⲧⲁⲩⲥⲃⲧⲱⲧϥ ⲛⲁⲩ ⲛⲉ ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲟⲟⲧϥ ⲙⲡⲁⲉⲓⲱⲧ.
24 ௨௪ மற்றப் பத்துப்பேரும் அதைக்கேட்டு, அந்த இரண்டு சகோதரர்கள்மேல் கோபமடைந்தார்கள்.
ⲕ̅ⲇ̅ⲁⲩⲥⲱⲧⲙ ⲇⲉ ⲛϭⲓⲡⲙⲏⲧ ⲁⲩⲁⲅⲁⲛⲁⲕⲧⲉⲓ ⲉⲧⲃⲉⲡⲥⲟⲛ ⲥⲛⲁⲩ.
25 ௨௫ அப்பொழுது, இயேசு அவர்களைக் கிட்டவரச்செய்து: யூதரல்லாதவர்களுடைய தலைவர்கள் அவர்களை இறுமாப்பாக ஆளுகிறார்கள் என்றும், அதிகாரமுடைய மனிதர்கள் அவர்கள்மேல் கடினமாக அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றும், நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
ⲕ̅ⲉ̅ⲓ̅ⲥ̅ ⲇⲉ ⲁϥⲙⲟⲩⲧⲉ ⲉⲣⲟⲟⲩ ⲡⲉϫⲁϥ ⲛⲁⲩ ϫⲉ ⲧⲉⲧⲛⲥⲟⲟⲩⲛ ϫⲉ ⲛⲁⲣⲭⲱⲛ ⲛⲛϩⲉⲑⲛⲟⲥ ⲥⲉⲟ ⲛϫⲟⲉⲓⲥ ⲉⲣⲟⲟⲩ. ⲁⲩⲱ ⲛⲛⲟϭ ⲥⲉⲟ ⲛⲧⲉⲩⲉⲝⲟⲩⲥⲓⲁ.
26 ௨௬ உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாவது பெரியவனாக இருக்கவிரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைசெய்கிறவனாக இருக்கவேண்டும்.
ⲕ̅ⲋ̅ⲛⲧⲉⲓϩⲉ ⲛⲧⲱⲧⲛ ⲁⲛ ⲧⲉⲧϣⲟⲟⲡ ⲛϩⲏⲧⲧⲏⲩⲧⲛ. ⲁⲗⲗⲁ ⲡⲉⲧⲛⲁⲟⲩⲱϣ ⲉϣⲱⲡⲉ ⲛⲛⲟϭ ⲛϩⲏⲧⲧⲏⲩⲧⲛ ⲉϥⲛⲁϣⲱⲡⲉ ⲛⲏⲧⲛ ⲛⲇⲓⲁⲕⲟⲛⲟⲥ.
27 ௨௭ உங்களில் எவனாவது முதன்மையானவனாக இருக்கவிரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைசெய்கிறவனாக இருக்கவேண்டும்.
ⲕ̅ⲍ̅ⲁⲩⲱ ⲡⲉⲧⲛⲁⲟⲩⲱϣ ⲉϣⲱⲡⲉ ⲛϣⲟⲣⲡ ⲛϩⲏⲧⲧⲏⲩⲧⲛ ⲉϥⲛⲁϣⲱⲡⲉ ⲛⲏⲧⲛ ⲛϩⲙϩⲁⲗ.
28 ௨௮ அப்படியே, மனிதகுமாரனும் பணிவிடை பெரும்படி வராமல், பணிவிடைசெய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்.
ⲕ̅ⲏ̅ⲛⲑⲉ ⲙⲡϣⲏⲣⲉ ⲙⲡⲣⲱⲙⲉ ⲛⲧⲁϥⲉⲓ ⲁⲛ ⲉⲧⲣⲉⲩⲇⲓⲁⲕⲟⲛⲉⲓ ⲛⲁϥ. ⲁⲗⲗⲁ ⲉⲇⲓⲁⲕⲟⲛⲉⲓ. ⲁⲩⲱ ⲉϯ ⲛⲧⲉϥⲯⲩⲭⲏ ⲛⲥⲱⲧⲉ ϩⲁϩⲁϩ.
29 ௨௯ அவர்கள் எரிகோவிலிருந்து புறப்பட்டுப்போகும்போது, திரளான மக்கள் அவருக்குப் பின் சென்றார்கள்.
ⲕ̅ⲑ̅ⲉϥⲛⲏⲩ ⲇⲉ ⲉⲃⲟⲗ ϩⲛϩⲓⲉⲣⲓⲭⲱ ⲁⲩⲟⲩⲁϩⲟⲩ ⲛⲥⲱϥ ⲛϭⲓϩⲉⲛⲙⲏⲏϣⲉ ⲉⲛⲁϣⲱⲟⲩ.
30 ௩0 அப்பொழுது வழியருகே உட்கார்ந்திருந்த இரண்டு குருடர்கள், இயேசு அவ்வழியே வருகிறார் என்று கேள்விப்பட்டு: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள்.
ⲗ̅ⲁⲩⲱ ⲉⲓⲥϩⲏⲏⲧⲉ ⲉⲓⲥⲃⲗⲗⲉ ⲥⲛⲁⲩ ⲉⲩϩⲙⲟⲟⲥ ϩⲁⲧⲛⲧⲉϩⲓⲏ. ⲁⲩⲥⲱⲧⲙ ϫⲉ ⲓ̅ⲥ̅ ⲛⲁⲡⲁⲣⲁⲅⲉ. ⲁⲩϫⲓϣⲕⲁⲕ ⲉⲃⲟⲗ ⲉⲩϫⲱ ⲙⲙⲟⲥ ϫⲉ ⲛⲁ ⲛⲁⲛ ⲡϣⲏⲣⲉ ⲛⲇ̅ⲁ̅ⲇ̅.
31 ௩௧ அவர்கள் பேசாதிருக்கும்படி மக்கள் அவர்களை அதட்டினார்கள். அவர்களோ: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று அதிகமாகக் கூப்பிட்டார்கள்.
ⲗ̅ⲁ̅ⲙⲙⲏⲏϣⲉ ⲇⲉ ⲁⲩⲉⲡⲓⲧⲓⲙⲁ ⲛⲁⲩ ϫⲉⲕⲁⲥ ⲉⲩⲉⲕⲁⲣⲱⲟⲩ. ⲛⲧⲟⲟⲩ ⲇⲉ ⲛϩⲟⲩⲟ ⲁⲩϫⲓϣⲕⲁⲕ ⲉⲃⲟⲗ ⲉⲩϫⲱ ⲙⲙⲟⲥ. ϫⲉ ⲡϫⲟⲉⲓⲥ ⲛⲁ ⲛⲁⲛ ⲡϣⲏⲣⲉ ⲛⲇⲁⲩⲉⲓⲇ.
32 ௩௨ இயேசு நின்று, அவர்களைத் தம்மிடத்தில் அழைத்து: நான் உங்களுக்கு என்னசெய்யவேண்டும் என்றிருக்கிறீர்கள் என்றார்.
ⲗ̅ⲃ̅ⲁϥⲁϩⲉⲣⲁⲧϥ ⲛϭⲓⲓ̅ⲥ̅ ⲁϥⲙⲟⲩⲧⲉ ⲉⲣⲟⲟⲩ ⲉϥϫⲱ ⲙⲙⲟⲥ. ϫⲉ ⲟⲩ ⲡⲉⲧⲉⲧⲛⲟⲩⲉϣⲧⲣⲁⲁϥ ⲛⲏⲧⲛ.
33 ௩௩ அதற்கு அவர்கள்: ஆண்டவரே, எங்களுடைய கண்களைத் திறக்கவேண்டும் என்றார்கள்.
ⲗ̅ⲅ̅ⲡⲉϫⲁⲩ ⲛⲁϥ ϫⲉ ⲡϫⲟⲉⲓⲥ ϫⲉⲕⲁⲥ ⲉⲩⲉⲟⲩⲱⲛ ⲛϭⲓⲛⲉⲛⲃⲁⲗ.
34 ௩௪ இயேசு மனதுருகி, அவர்கள் கண்களைத் தொட்டார்; உடனே அவர்கள் பார்வையடைந்து, அவருக்குப் பின்னே சென்றார்கள்.
ⲗ̅ⲇ̅ⲁϥϣⲛϩⲧⲏϥ ⲇⲉ ⲛϭⲓⲓ̅ⲥ̅ ⲁϥϫⲱϩ ⲉⲛⲉⲩⲃⲁⲗ. ⲁⲩⲱ ⲛⲧⲉⲩⲛⲟⲩ ⲁⲩⲛⲁⲩ ⲉⲃⲟⲗ ⲁⲩⲟⲩⲁϩⲟⲩ ⲛⲥⲱϥ.

< மத்தேயு 20 >