< மத்தேயு 2 >

1 ஏரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து,
ಅನನ್ತರಂ ಹೇರೋದ್ ಸಂಜ್ಞಕೇ ರಾಜ್ಞಿ ರಾಜ್ಯಂ ಶಾಸತಿ ಯಿಹೂದೀಯದೇಶಸ್ಯ ಬೈತ್ಲೇಹಮಿ ನಗರೇ ಯೀಶೌ ಜಾತವತಿ ಚ, ಕತಿಪಯಾ ಜ್ಯೋತಿರ್ವ್ವುದಃ ಪೂರ್ವ್ವಸ್ಯಾ ದಿಶೋ ಯಿರೂಶಾಲಮ್ನಗರಂ ಸಮೇತ್ಯ ಕಥಯಮಾಸುಃ,
2 “யூதர்களுக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைத் தொழுதுகொள்ள வந்தோம்” என்றார்கள்.
ಯೋ ಯಿಹೂದೀಯಾನಾಂ ರಾಜಾ ಜಾತವಾನ್, ಸ ಕುತ್ರಾಸ್ತೇ? ವಯಂ ಪೂರ್ವ್ವಸ್ಯಾಂ ದಿಶಿ ತಿಷ್ಠನ್ತಸ್ತದೀಯಾಂ ತಾರಕಾಮ್ ಅಪಶ್ಯಾಮ ತಸ್ಮಾತ್ ತಂ ಪ್ರಣನ್ತುಮ್ ಅಗಮಾಮ|
3 ஏரோதுராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடுகூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள்.
ತದಾ ಹೇರೋದ್ ರಾಜಾ ಕಥಾಮೇತಾಂ ನಿಶಮ್ಯ ಯಿರೂಶಾಲಮ್ನಗರಸ್ಥಿತೈಃ ಸರ್ವ್ವಮಾನವೈಃ ಸಾರ್ದ್ಧಮ್ ಉದ್ವಿಜ್ಯ
4 அவன் பிரதான ஆசாரியர்கள், மக்களின் வேதபண்டிதர்கள் எல்லோரையும் கூடிவரச்செய்து: “கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பாரென்று” அவர்களிடத்தில் விசாரித்தான்.
ಸರ್ವ್ವಾನ್ ಪ್ರಧಾನಯಾಜಕಾನ್ ಅಧ್ಯಾಪಕಾಂಶ್ಚ ಸಮಾಹೂಯಾನೀಯ ಪಪ್ರಚ್ಛ, ಖ್ರೀಷ್ಟಃ ಕುತ್ರ ಜನಿಷ್ಯತೇ?
5 அதற்கு அவர்கள்: “யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார்; அது ஏனென்றால்:
ತದಾ ತೇ ಕಥಯಾಮಾಸುಃ, ಯಿಹೂದೀಯದೇಶಸ್ಯ ಬೈತ್ಲೇಹಮಿ ನಗರೇ, ಯತೋ ಭವಿಷ್ಯದ್ವಾದಿನಾ ಇತ್ಥಂ ಲಿಖಿತಮಾಸ್ತೇ,
6 யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல; என் மக்களாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார் என்று, தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது” என்றார்கள்.
ಸರ್ವ್ವಾಭ್ಯೋ ರಾಜಧಾನೀಭ್ಯೋ ಯಿಹೂದೀಯಸ್ಯ ನೀವೃತಃ| ಹೇ ಯೀಹೂದೀಯದೇಶಸ್ಯೇ ಬೈತ್ಲೇಹಮ್ ತ್ವಂ ನ ಚಾವರಾ| ಇಸ್ರಾಯೇಲೀಯಲೋಕಾನ್ ಮೇ ಯತೋ ಯಃ ಪಾಲಯಿಷ್ಯತಿ| ತಾದೃಗೇಕೋ ಮಹಾರಾಜಸ್ತ್ವನ್ಮಧ್ಯ ಉದ್ಭವಿಷ್ಯತೀ||
7 அப்பொழுது ஏரோது, சாஸ்திரிகளை இரகசியமாக அழைத்து, நட்சத்திரம் காணப்பட்ட காலத்தைக்குறித்து அவர்களிடத்தில் திட்டமாக விசாரித்து:
ತದಾನೀಂ ಹೇರೋದ್ ರಾಜಾ ತಾನ್ ಜ್ಯೋತಿರ್ವ್ವಿದೋ ಗೋಪನಮ್ ಆಹೂಯ ಸಾ ತಾರಕಾ ಕದಾ ದೃಷ್ಟಾಭವತ್, ತದ್ ವಿನಿಶ್ಚಯಾಮಾಸ|
8 நீங்கள் போய், பிள்ளையைக்குறித்துத் திட்டமாக விசாரியுங்கள்; நீங்கள் பிள்ளையைக் கண்டபின்பு, நானும் வந்து பிள்ளையைப் பணிந்துகொள்ளும்படி எனக்கு அறிவியுங்கள் என்று சொல்லி, அவர்களை பெத்லகேமுக்கு அனுப்பினான்.
ಅಪರಂ ತಾನ್ ಬೈತ್ಲೇಹಮಂ ಪ್ರಹೀತ್ಯ ಗದಿತವಾನ್, ಯೂಯಂ ಯಾತ, ಯತ್ನಾತ್ ತಂ ಶಿಶುಮ್ ಅನ್ವಿಷ್ಯ ತದುದ್ದೇಶೇ ಪ್ರಾಪ್ತೇ ಮಹ್ಯಂ ವಾರ್ತ್ತಾಂ ದಾಸ್ಯಥ, ತತೋ ಮಯಾಪಿ ಗತ್ವಾ ಸ ಪ್ರಣಂಸ್ಯತೇ|
9 ராஜா சொன்னதை அவர்கள் கேட்டுப் போகும்போது, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த இடத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது.
ತದಾನೀಂ ರಾಜ್ಞ ಏತಾದೃಶೀಮ್ ಆಜ್ಞಾಂ ಪ್ರಾಪ್ಯ ತೇ ಪ್ರತಸ್ಥಿರೇ, ತತಃ ಪೂರ್ವ್ವರ್ಸ್ಯಾಂ ದಿಶಿ ಸ್ಥಿತೈಸ್ತೈ ರ್ಯಾ ತಾರಕಾ ದೃಷ್ಟಾ ಸಾ ತಾರಕಾ ತೇಷಾಮಗ್ರೇ ಗತ್ವಾ ಯತ್ರ ಸ್ಥಾನೇ ಶಿಶೂರಾಸ್ತೇ, ತಸ್ಯ ಸ್ಥಾನಸ್ಯೋಪರಿ ಸ್ಥಗಿತಾ ತಸ್ಯೌ|
10 ௧0 அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்.
ತದ್ ದೃಷ್ಟ್ವಾ ತೇ ಮಹಾನನ್ದಿತಾ ಬಭೂವುಃ,
11 ௧௧ அவர்கள் அந்த வீட்டிற்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாக விழுந்து பிள்ளையைப் பணிந்துகொண்டு, தங்களுடைய பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் காணிக்கையாக வைத்தார்கள்.
ತತೋ ಗೇಹಮಧ್ಯ ಪ್ರವಿಶ್ಯ ತಸ್ಯ ಮಾತ್ರಾ ಮರಿಯಮಾ ಸಾದ್ಧಂ ತಂ ಶಿಶುಂ ನಿರೀಕ್ಷಯ ದಣ್ಡವದ್ ಭೂತ್ವಾ ಪ್ರಣೇಮುಃ, ಅಪರಂ ಸ್ವೇಷಾಂ ಘನಸಮ್ಪತ್ತಿಂ ಮೋಚಯಿತ್ವಾ ಸುವರ್ಣಂ ಕುನ್ದುರುಂ ಗನ್ಧರಮಞ್ಚ ತಸ್ಮೈ ದರ್ಶನೀಯಂ ದತ್ತವನ್ತಃ|
12 ௧௨ பின்பு, அவர்கள் ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாம் என்று கனவில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, வேறுவழியாகத் தங்களுடைய நாட்டிற்குத் திரும்பிப்போனார்கள்.
ಪಶ್ಚಾದ್ ಹೇರೋದ್ ರಾಜಸ್ಯ ಸಮೀಪಂ ಪುನರಪಿ ಗನ್ತುಂ ಸ್ವಪ್ನ ಈಶ್ವರೇಣ ನಿಷಿದ್ಧಾಃ ಸನ್ತೋ ಽನ್ಯೇನ ಪಥಾ ತೇ ನಿಜದೇಶಂ ಪ್ರತಿ ಪ್ರತಸ್ಥಿರೇ|
13 ௧௩ அவர்கள் போனபின்பு, கர்த்தருடைய தூதன் கனவில் யோசேப்புக்குத் தோன்றி: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான்; ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும், தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும்வரைக்கும் அங்கே இரு என்றான்.
ಅನನ್ತರಂ ತೇಷು ಗತವತ್ಮು ಪರಮೇಶ್ವರಸ್ಯ ದೂತೋ ಯೂಷಫೇ ಸ್ವಪ್ನೇ ದರ್ಶನಂ ದತ್ವಾ ಜಗಾದ, ತ್ವಮ್ ಉತ್ಥಾಯ ಶಿಶುಂ ತನ್ಮಾತರಞ್ಚ ಗೃಹೀತ್ವಾ ಮಿಸರ್ದೇಶಂ ಪಲಾಯಸ್ವ, ಅಪರಂ ಯಾವದಹಂ ತುಭ್ಯಂ ವಾರ್ತ್ತಾಂ ನ ಕಥಯಿಷ್ಯಾಮಿ, ತಾವತ್ ತತ್ರೈವ ನಿವಸ, ಯತೋ ರಾಜಾ ಹೇರೋದ್ ಶಿಶುಂ ನಾಶಯಿತುಂ ಮೃಗಯಿಷ್ಯತೇ|
14 ௧௪ அவன் எழுந்து, இரவிலே பிள்ளையையும், தாயையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்குப் புறப்பட்டுப்போய்,
ತದಾನೀಂ ಯೂಷಫ್ ಉತ್ಥಾಯ ರಜನ್ಯಾಂ ಶಿಶುಂ ತನ್ಮಾತರಞ್ಚ ಗೃಹೀತ್ವಾ ಮಿಸರ್ದೇಶಂ ಪ್ರತಿ ಪ್ರತಸ್ಥೇ,
15 ௧௫ ஏரோது மரிக்கும்வரைக்கும் அங்கே இருந்தான். “எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன்” என்று தீர்க்கதரிசியின் மூலமாகக் கர்த்தரால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
ಗತ್ವಾ ಚ ಹೇರೋದೋ ನೃಪತೇ ರ್ಮರಣಪರ್ಯ್ಯನ್ತಂ ತತ್ರ ದೇಶೇ ನ್ಯುವಾಸ, ತೇನ ಮಿಸರ್ದೇಶಾದಹಂ ಪುತ್ರಂ ಸ್ವಕೀಯಂ ಸಮುಪಾಹೂಯಮ್| ಯದೇತದ್ವಚನಮ್ ಈಶ್ವರೇಣ ಭವಿಷ್ಯದ್ವಾದಿನಾ ಕಥಿತಂ ತತ್ ಸಫಲಮಭೂತ್|
16 ௧௬ அப்பொழுது ஏரோது தான் சாஸ்திரிகளால் ஏமாற்றப்பட்டதைக் கண்டு, மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாக விசாரித்த காலத்தின்படியே, பெத்லகேமிலும் அதின் எல்லா எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண் பிள்ளைகளையும் கொலைசெய்தான்.
ಅನನ್ತರಂ ಹೇರೋದ್ ಜ್ಯೋತಿರ್ವಿದ್ಭಿರಾತ್ಮಾನಂ ಪ್ರವಞ್ಚಿತಂ ವಿಜ್ಞಾಯ ಭೃಶಂ ಚುಕೋಪ; ಅಪರಂ ಜ್ಯೋತಿರ್ವ್ವಿದ್ಭ್ಯಸ್ತೇನ ವಿನಿಶ್ಚಿತಂ ಯದ್ ದಿನಂ ತದ್ದಿನಾದ್ ಗಣಯಿತ್ವಾ ದ್ವಿತೀಯವತ್ಸರಂ ಪ್ರವಿಷ್ಟಾ ಯಾವನ್ತೋ ಬಾಲಕಾ ಅಸ್ಮಿನ್ ಬೈತ್ಲೇಹಮ್ನಗರೇ ತತ್ಸೀಮಮಧ್ಯೇ ಚಾಸನ್, ಲೋಕಾನ್ ಪ್ರಹಿತ್ಯ ತಾನ್ ಸರ್ವ್ವಾನ್ ಘಾತಯಾಮಾಸ|
17 ௧௭ “புலம்பலும் அழுகையும் மிகுந்த துக்கங்கொண்டாடலுமாகிய கூக்குரல் ராமாவிலே கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, அவைகள் இல்லாதபடியால் ஆறுதலடையாமல் இருக்கிறாள்” என்று,
ಅತಃ ಅನೇಕಸ್ಯ ವಿಲಾಪಸ್ಯ ನಿನಾದ: ಕ್ರನ್ದನಸ್ಯ ಚ| ಶೋಕೇನ ಕೃತಶಬ್ದಶ್ಚ ರಾಮಾಯಾಂ ಸಂನಿಶಮ್ಯತೇ| ಸ್ವಬಾಲಗಣಹೇತೋರ್ವೈ ರಾಹೇಲ್ ನಾರೀ ತು ರೋದಿನೀ| ನ ಮನ್ಯತೇ ಪ್ರಬೋಧನ್ತು ಯತಸ್ತೇ ನೈವ ಮನ್ತಿ ಹಿ||
18 ௧௮ எரேமியா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டது அப்பொழுது நிறைவேறியது.
ಯದೇತದ್ ವಚನಂ ಯಿರೀಮಿಯನಾಮಕಭವಿಷ್ಯದ್ವಾದಿನಾ ಕಥಿತಂ ತತ್ ತದಾನೀಂ ಸಫಲಮ್ ಅಭೂತ್|
19 ௧௯ ஏரோது மரித்தபின்பு, கர்த்தருடைய தூதன் எகிப்திலே யோசேப்புக்குக் கனவில் தோன்றி:
ತದನನ್ತರಂ ಹೇರೇದಿ ರಾಜನಿ ಮೃತೇ ಪರಮೇಶ್ವರಸ್ಯ ದೂತೋ ಮಿಸರ್ದೇಶೇ ಸ್ವಪ್ನೇ ದರ್ಶನಂ ದತ್ತ್ವಾ ಯೂಷಫೇ ಕಥಿತವಾನ್
20 ௨0 “நீ எழுந்து, பிள்ளையையும், தாயையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்திற்குப் போ; பிள்ளையின் உயிரையெடுக்கத் தேடினவர்கள் மரித்துப்போனார்கள்” என்றான்.
ತ್ವಮ್ ಉತ್ಥಾಯ ಶಿಶುಂ ತನ್ಮಾತರಞ್ಚ ಗೃಹೀತ್ವಾ ಪುನರಪೀಸ್ರಾಯೇಲೋ ದೇಶಂ ಯಾಹೀ, ಯೇ ಜನಾಃ ಶಿಶುಂ ನಾಶಯಿತುಮ್ ಅಮೃಗಯನ್ತ, ತೇ ಮೃತವನ್ತಃ|
21 ௨௧ அவன் எழுந்து பிள்ளையையும், தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரவேல் தேசத்திற்கு வந்தான்.
ತದಾನೀಂ ಸ ಉತ್ಥಾಯ ಶಿಶುಂ ತನ್ಮಾತರಞ್ಚ ಗೃಹ್ಲನ್ ಇಸ್ರಾಯೇಲ್ದೇಶಮ್ ಆಜಗಾಮ|
22 ௨௨ ஆனாலும், அர்கெலாயு தன் தகப்பனாகிய ஏரோதின் பட்டத்திற்கு வந்து, யூதேயாவில் அரசாளுகிறான் என்று கேள்விப்பட்டு, அங்கே போகப் பயந்தான். அப்பொழுது, அவன் கனவில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, கலிலேயா நாட்டின் வெளிப்புறங்களிலே விலகிப்போய்,
ಕಿನ್ತು ಯಿಹೂದೀಯದೇಶೇ ಅರ್ಖಿಲಾಯನಾಮ ರಾಜಕುಮಾರೋ ನಿಜಪಿತು ರ್ಹೇರೋದಃ ಪದಂ ಪ್ರಾಪ್ಯ ರಾಜತ್ವಂ ಕರೋತೀತಿ ನಿಶಮ್ಯ ತತ್ ಸ್ಥಾನಂ ಯಾತುಂ ಶಙ್ಕಿತವಾನ್, ಪಶ್ಚಾತ್ ಸ್ವಪ್ನ ಈಶ್ವರಾತ್ ಪ್ರಬೋಧಂ ಪ್ರಾಪ್ಯ ಗಾಲೀಲ್ದೇಶಸ್ಯ ಪ್ರದೇಶೈಕಂ ಪ್ರಸ್ಥಾಯ ನಾಸರನ್ನಾಮ ನಗರಂ ಗತ್ವಾ ತತ್ರ ನ್ಯುಷಿತವಾನ್,
23 ௨௩ நாசரேத்து என்னும் ஊரிலே வந்து குடியிருந்தான். “நசரேயன் எனப்படுவார்” என்று தீர்க்கதரிசிகளால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
ತೇನ ತಂ ನಾಸರತೀಯಂ ಕಥಯಿಷ್ಯನ್ತಿ, ಯದೇತದ್ವಾಕ್ಯಂ ಭವಿಷ್ಯದ್ವಾದಿಭಿರುಕ್ತ್ತಂ ತತ್ ಸಫಲಮಭವತ್|

< மத்தேயு 2 >