< மத்தேயு 2 >

1 ஏரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து,
ଏରୋଦ ରାଜାନ୍‌ ଆଡିଡ୍‌ ଜିଉଦା ଡେସାନ୍‌ ବେତଲିମ ଗଡ଼ାଲୋଙନ୍‌ ଜିସୁନ୍‌ କରୋକ୍କୋଡନ୍‌ ଆଡ୍ରେଏନ୍‌ ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌, ଗିୟ୍‌ବା, ଡରୁଙ୍‌ୟୋଙ୍‌ ଡେସାନ୍‌ ସିଲଡ୍‌ ପଣ୍ଡିତଞ୍ଜି ଜିରୁସାଲମନ୍‌ ଇୟ୍‌ଲାଜି,
2 “யூதர்களுக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைத் தொழுதுகொள்ள வந்தோம்” என்றார்கள்.
ଆନିଞ୍ଜି ଇୟ୍‌ଲାୟ୍‌ ଗାମେଜି, “ଜିଉଦିଞ୍ଜି ଆ ରାଜାନେନ୍‌ ଆସନ୍‌ କରୋକ୍କୋଡନ୍‌ ଆଡ୍ରେଏନ୍‌ ଆ ପସିୟ୍‌ ଅଡ଼େଙ୍ଗା? ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଇନ୍‌ଲେଞ୍ଜି ଡରୁଙ୍‌ୟୋଙ୍‌ ଡେସାଲୋଙନ୍‌ ଆ ତୁତୁଜନ୍‌ ଗିୟ୍‌ଲେ, ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ପୁର୍‌ପୁରନ୍‌ ଆସନ୍‌ ଏଇୟ୍‌ଲାୟ୍‌ ।”
3 ஏரோதுராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடுகூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள்.
କେନ୍‌ଆତେ ଅମ୍‌ଡଙ୍‌ଡାଲେ ଏରୋଦ ରାଜାନ୍‌ ଡ ଆନିନ୍‌ ସରିନ୍‌ ସମ୍ପରା ଜିରୁସାଲମବାଜି ବାଉଲ୍ଲି ଡେଏଞ୍ଜି;
4 அவன் பிரதான ஆசாரியர்கள், மக்களின் வேதபண்டிதர்கள் எல்லோரையும் கூடிவரச்செய்து: “கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பாரென்று” அவர்களிடத்தில் விசாரித்தான்.
ଆରି, ଆନିନ୍‌ ମନ୍‌ରାଞ୍ଜି ଆ ସୋଡ଼ା ରାଓଡ଼ାଜି ଅଡ଼୍‌କୋଞ୍ଜି ଡ ସାସ୍ତ୍ରିଞ୍ଜିଆଡଙ୍‌ ଅବ୍‌ରୁକ୍କୁଡାଲେ ବରେଞ୍ଜି, “କ୍ରିସ୍ଟନ୍‌ ଅଙ୍ଗାଲୋଙ୍‌ କରୋକ୍କୋଡନ୍‌ ଡେତେ?”
5 அதற்கு அவர்கள்: “யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார்; அது ஏனென்றால்:
ଆନିଞ୍ଜି ଏରୋଦନ୍‌ଆଡଙ୍‌ ଜାଲଙେଞ୍ଜି, “ଜିଉଦା ଡେସାନ୍‌ ବେତଲିମ ଗଡ଼ାଲୋଙନ୍‌, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ପୁର୍ବାଃତେ ବର୍ନେମରନ୍‌ ଏନ୍ନେଲେ ଇଡେନ୍‌;
6 யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல; என் மக்களாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார் என்று, தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது” என்றார்கள்.
‘ଆରି, ଏ ଜିଉଦା ଡେସାଲୋଙନ୍‌ ବେତଲିମ ଗଡ଼ାନ୍‌, ଆମନ୍‌ ଜିଉଦାଲୋଙନ୍‌ ସୋଡ଼ାରା ଗଡ଼ାଞ୍ଜି ଆମଙ୍‌ଲୋଙ୍‌ ଏଙ୍ଗାଲେ ଜନଙ୍‌ ସନ୍ନା ତଡ୍‌; ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଇସ୍ରାଏଲ୍‌ ମନ୍‌ରାଲେଞ୍ଜିଆଡଙ୍‌ ତୁର୍‌ତୁରନ୍‌ ଆସନ୍‌, ଅମଙ୍‌ନମ୍‌ ସିଲଡ୍‌ ଅବୟ୍‌ ରାଜାନ୍‌ ଡୁଙ୍‌ତନାୟ୍‌ ।’”
7 அப்பொழுது ஏரோது, சாஸ்திரிகளை இரகசியமாக அழைத்து, நட்சத்திரம் காணப்பட்ட காலத்தைக்குறித்து அவர்களிடத்தில் திட்டமாக விசாரித்து:
ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌ ଏରୋଦନ୍‌, ତି ତୁତୁଜନ୍‌ ଅଙ୍ଗା ବେଡ଼ା ଗିୟ୍‌ତାଏନ୍‌, ତିଆତେ ଜନନାନ୍‌ ଆସନ୍‌ ପଣ୍ଡିତଞ୍ଜିଆଡଙ୍‌ ଅଜନା ଓଡ୍ଡେଡାଲେ ବରେଞ୍ଜି ।
8 நீங்கள் போய், பிள்ளையைக்குறித்துத் திட்டமாக விசாரியுங்கள்; நீங்கள் பிள்ளையைக் கண்டபின்பு, நானும் வந்து பிள்ளையைப் பணிந்துகொள்ளும்படி எனக்கு அறிவியுங்கள் என்று சொல்லி, அவர்களை பெத்லகேமுக்கு அனுப்பினான்.
ଆରି, ଏରୋଦନ୍‌ ପଣ୍ଡିତଞ୍ଜିଆଡଙ୍‌ ବେତଲିମନ୍‌ ଆପ୍ପାୟ୍‌ଡାଲେ ବରେଞ୍ଜି, “ଆମ୍ୱେଞ୍ଜି ଜିର୍ରେ ତି ପସିଜନ୍‌ ଆ ବର୍ନେ ମନଙ୍‌ ଇୟ୍‌ ସେକ୍କୁବା, ଆରି ଇୟ୍‌ଲେ ଏରବାଙେ ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌ ଡେନ୍‌ ଅବ୍‌ତାଡ଼ନ୍‌ ଞେନ୍‌ଆଡଙ୍‌ ଆୟ୍‌ ବରିଁୟ୍‌ବା, ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଞେନ୍‌ ନିୟ୍‌ ଜିର୍ରେ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଇୟ୍‌ତେ ପୁର୍‌ନାୟ୍‌ ।”
9 ராஜா சொன்னதை அவர்கள் கேட்டுப் போகும்போது, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த இடத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது.
ସିଲତ୍ତେ ଆନିଞ୍ଜି ରାଜାନ୍‌ ଆ ବର୍ନେ ଅମ୍‌ଡଙ୍‌ଡାଲେ ଜିରେଞ୍ଜି; ଆରି ଗିୟ୍‌ବା, ଆନିଞ୍ଜି ଡରୁଙ୍‌ୟୋଙ୍‌ଗଡ୍‌ ଆଗ୍ରିଜେଞ୍ଜି ଆ ତୁତୁୟ୍‌, ଆ ମୁକ୍କାଗଡଞ୍ଜି ଆମ୍ମୁଙ୍‌ଡାଲନ୍‌ ଜିର୍ରେ ପାଙେନ୍‌, ଆରି ତି ପସିଜନ୍‌ ଅଙ୍ଗାଲୋଙ୍‌ ଡକୋଏନ୍‌, ତି ଆ ତୋଣ୍ଡୋ ଇୟ୍‌ଲେ ତନଙେ ।
10 ௧0 அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்.
ଆନିଞ୍ଜି ତୁତୁଜନ୍‌ ଗିୟ୍‌ଲେ ମାଡ୍ଡ ସର୍ଡାଲଞ୍ଜି ।
11 ௧௧ அவர்கள் அந்த வீட்டிற்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாக விழுந்து பிள்ளையைப் பணிந்துகொண்டு, தங்களுடைய பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் காணிக்கையாக வைத்தார்கள்.
ଆରି ଅମ୍ମସିଙନ୍‌ ଜିର୍ରେ ତି ପସିଜନ୍‌ଆଡଙ୍‌ ଆୟୋଙନ୍‌ ମରିଅମନ୍‌ ସରିନ୍‌ ଇୟ୍‌ଲେ ଗିଜେଜି, ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌ ତୁଡ଼ୁମ୍‌ଡାଲେ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଲୋମେଞ୍ଜି, ଆରି ରମ୍ମଙ୍‌ ରମ୍ମଙ୍‌ ଆ ପିଡ଼ି ରୋଲେ ସୁନାନ୍‌, କୁନ୍ଦୁରୁନ୍‌ ଡ ଲଙିଡ୍‌ମେନ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ତନିୟ୍‌ତିୟନ୍‌ ତିୟେଞ୍ଜି ।
12 ௧௨ பின்பு, அவர்கள் ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாம் என்று கனவில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, வேறுவழியாகத் தங்களுடைய நாட்டிற்குத் திரும்பிப்போனார்கள்.
ଆରି ଏରୋଦନ୍‌ ଆମଙ୍‌ ଏର୍‌ଜନିରନ୍‌ ଆସନ୍‌ ଗନୁମ୍‌ତେଲୋଙନ୍‌ ବର୍ନେନ୍‌ ଆରମ୍‌ଡଙେଞ୍ଜି ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌ ଆନିଞ୍ଜି ଆନ୍ନା ତଙର୍‌ ଗଡ୍‌ ଆ ଡେସାଡମଞ୍ଜି ୟର୍ରଞ୍ଜି ।
13 ௧௩ அவர்கள் போனபின்பு, கர்த்தருடைய தூதன் கனவில் யோசேப்புக்குத் தோன்றி: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான்; ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும், தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும்வரைக்கும் அங்கே இரு என்றான்.
ପଣ୍ଡିତଞ୍ଜି ଆଜିର୍ରେଞ୍ଜି ଆ ତିକ୍କି, ଗିୟ୍‌ବା ପ୍ରବୁନ୍‌ ଆ ପାଙ୍‌ଲଙ୍‌ବର୍‌ମର୍‌ ଅବୟ୍‌ନେ ଜୋସେପନ୍‌ ଆ ଗନୁମ୍‌ତେଲୋଙ୍‌ ଅବ୍‌ତୁୟ୍‌ଡାଲନ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ବରେନ୍‌, “ଡୋନା, ଆୟୋଙନ୍‌ ଡ ପସିଜନ୍‌ ଞମ୍‌ଲେ ମିସର୍‌ ଡେସାନ୍‌ ଜିର୍ବା, ଆରି ଞେନ୍‌ ଅଣ୍ଡ୍ରଙ୍‌ ବର୍ବେନ୍‌ ଜାୟ୍‌ ତେତ୍ତେ ଇୟ୍‌ ଡକୋନାବା, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ପସିଜନ୍‌ଆଡଙ୍‌ ରନବ୍ବୁନ୍‌ ଆସନ୍‌ ଏରୋଦନ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ସାୟ୍‌ତେ ।”
14 ௧௪ அவன் எழுந்து, இரவிலே பிள்ளையையும், தாயையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்குப் புறப்பட்டுப்போய்,
ସିଲତ୍ତେ ଜୋସେପନ୍‌ ଡୋଲନ୍‌ ଆୟୋଙନ୍‌ ଡ ପସିଜନ୍‌ ଞମ୍‌ଲେ ତଗଲ୍‌ମଡ ତଗଲ୍‌ ମିସର୍‌ ଡେସାନ୍‌ ଜିରେଞ୍ଜି ।
15 ௧௫ ஏரோது மரிக்கும்வரைக்கும் அங்கே இருந்தான். “எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன்” என்று தீர்க்கதரிசியின் மூலமாகக் கர்த்தரால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
ଆରି ଏରୋଦନ୍‌ ଆ ରନବୁ ଜାୟ୍‌ ଆନିଞ୍ଜି ତେତ୍ତେ ଇୟ୍‌ଲେ ଡକୋନେଜି, ତିଆସନ୍‌ ପୁର୍ବାଃତେ ବର୍ନେମରନ୍‌ ଆ ତଅଡ୍‌ ଗଡ୍‌ ପ୍ରବୁନ୍‌ ଆବର୍ରନେନ୍‌ ଆ ପୁର୍ବାଃତେବର୍‌ କେନ୍‌ଆତେ ଡେଡମେନ୍‌, “ଞେନ୍‌ ମିସର୍‌ ଡେସାନ୍‌ ସିଲଡ୍‌ ଡାଙ୍ଗଡ଼ାଅନ୍‌ଞେନ୍‌ଆଡଙ୍‌ ଓଡ୍ଡେଲାୟ୍‌ ।”
16 ௧௬ அப்பொழுது ஏரோது தான் சாஸ்திரிகளால் ஏமாற்றப்பட்டதைக் கண்டு, மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாக விசாரித்த காலத்தின்படியே, பெத்லகேமிலும் அதின் எல்லா எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண் பிள்ளைகளையும் கொலைசெய்தான்.
ତି ଆ ବନେଡ଼ା ପଣ୍ଡିତଞ୍ଜି ଆନିନ୍‌ଆଡଙ୍‌ କଣ୍ଡାୟ୍‌ଡାଲେ ଜିରେଞ୍ଜି ଗାମ୍‌ଲେ ଆଜ୍ରନାଏନ୍‌ ଏରୋଦନ୍‌ ବରାବେନ୍‌, ଆରି ତୁତୁଜନ୍‌ ଅଙ୍ଗା ବେଡ଼ା ଗିୟ୍‌ତାଏନ୍‌ ଗାମ୍‌ଲେ ପଣ୍ଡିତଞ୍ଜି ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଆମ୍ମୁଙ୍‌ ବରେଞ୍ଜି, ତିଅନ୍ତମ୍‌ ବେତଲିମ ଗଡ଼ାନ୍‌ ଡ ଆ ତନ୍ନଡ୍‌ଲୋଙନ୍‌ ବାଗୁ ବର୍ସେଙ୍‌ ଆରି ତି ସିଲଡ୍‌ ସନ୍ନା ଡିଅଙ୍ଗା ଓବ୍ବାସିଜଞ୍ଜି ଡକୋଏଞ୍ଜି, ମନ୍‌ରାଞ୍ଜିଆଡଙ୍‌ ଆପ୍ପାୟ୍‌ଡାଲେ ତି ଅଡ଼୍‌କୋନ୍‌ ଆ ପସିୟ୍‌ଜି ଅବ୍‌ରବ୍ବୁଆଜେନ୍‌ ।
17 ௧௭ “புலம்பலும் அழுகையும் மிகுந்த துக்கங்கொண்டாடலுமாகிய கூக்குரல் ராமாவிலே கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, அவைகள் இல்லாதபடியால் ஆறுதலடையாமல் இருக்கிறாள்” என்று,
ତିଆଡିଡ୍‌ ପୁର୍ବାଃତେ ବର୍ନେମର୍‌ ଜିରିମିଅନ୍‌ ଆ ତଅଡ୍‌ ଗଡ୍‌ ପ୍ରବୁନ୍‌ ଆବର୍ରନେନ୍‌ ଆ ପୁର୍ବାଃତେବର୍‌ କେନ୍‌ଆତେ ଡେଡମେନ୍‌,
18 ௧௮ எரேமியா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டது அப்பொழுது நிறைவேறியது.
“ରାମା ଗଡ଼ାଲୋଙନ୍‌ ସର୍ରଙନ୍‌ ସଡ୍ଡାଏନ୍‌, ତିଆତେ ୟନେନ୍‌, ଗୁନେନ୍‌ ଆ ସର୍ରଙ୍‌, ରାଏଲନ୍‌ ଆ ପସିଜଞ୍ଜି ଆସନ୍‌ ୟେୟେଡାଲନ୍‌; ଆନିନ୍‌ ବନବ୍‌ୟୋନ୍‌ ଅଃଲ୍ଲଡୟ୍‌ଲୋ, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଆ ପସିଜଞ୍ଜି ଅଡ଼୍‌କୋନ୍‌ ରବୁଆଜେଞ୍ଜି ।”
19 ௧௯ ஏரோது மரித்தபின்பு, கர்த்தருடைய தூதன் எகிப்திலே யோசேப்புக்குக் கனவில் தோன்றி:
ଏରୋଦ ରାଜାନ୍‌ ଆର୍ରବୁଏନ୍‌ ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌ ଗିୟ୍‌ବା, ପ୍ରବୁନ୍‌ ଆ ପାଙ୍‌ଲଙ୍‌ବର୍‌ମର୍‌ ଅବୟ୍‌ନେ ମିସର୍‌ ଡେସାଲୋଙନ୍‌ ଜୋସେପନ୍‌ ଆ ଗନୁମ୍‌ତେଲୋଙ୍‌ ଅବ୍‌ତୁୟ୍‌ଡାଲନ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ବରେନ୍‌,
20 ௨0 “நீ எழுந்து, பிள்ளையையும், தாயையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்திற்குப் போ; பிள்ளையின் உயிரையெடுக்கத் தேடினவர்கள் மரித்துப்போனார்கள்” என்றான்.
“ଡୋନା, ଆୟୋଙନ୍‌ ଡ ପସିଜନ୍‌ ଞମ୍‌ଲେ ଇସ୍ରାଏଲ୍‌ ଡେସାନ୍‌ ଜିରା, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଆନାଜି ପସିଜନ୍‌ଆଡଙ୍‌ ରନବ୍ବୁନ୍‌ ଆସନ୍‌ ଏରେଞ୍ଜି ଗୋଜେଞ୍ଜି, ଆନିଞ୍ଜି ରବୁଏଞ୍ଜି ।”
21 ௨௧ அவன் எழுந்து பிள்ளையையும், தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரவேல் தேசத்திற்கு வந்தான்.
ସିଲତ୍ତେ ଜୋସେପନ୍‌ ଡୋଲନ୍‌ ଆୟୋଙନ୍‌ ଡ ପସିଜନ୍‌ ଞମ୍‌ଲେ ଇସ୍ରାଏଲ୍‌ ଡେସାନ୍‌ ଜିର୍ରାଜି ।
22 ௨௨ ஆனாலும், அர்கெலாயு தன் தகப்பனாகிய ஏரோதின் பட்டத்திற்கு வந்து, யூதேயாவில் அரசாளுகிறான் என்று கேள்விப்பட்டு, அங்கே போகப் பயந்தான். அப்பொழுது, அவன் கனவில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, கலிலேயா நாட்டின் வெளிப்புறங்களிலே விலகிப்போய்,
ବନ୍‌ଡ ଆପେୟନ୍‌ ଏରୋଦନ୍‌ ଆ ପାଲ୍‌ତେଙ୍‌ ଆର୍କିଲାୟନ୍‌ ଜିଉଦା ଡେସାନ୍‌ ଆ ରାଜା ଡେଏନ୍‌ ଗାମ୍‌ଲେ ଜୋସେପନ୍‌ ଆରମ୍‌ଡଙେନ୍‌, ତେତ୍ତେ ଜିର୍‌ଜିରନ୍‌ ଆସନ୍‌ ଆନିନ୍‌ ବତଙେନ୍‌, ବନ୍‌ଡ ଆନିନ୍‌ ଗନୁମ୍‌ତେଲୋଙନ୍‌ ବର୍ନେନ୍‌ ଅମ୍‌ଡଙ୍‌ଡାଲେ ଗାଲିଲିରେଙନ୍‌ ଜିରେଞ୍ଜି,
23 ௨௩ நாசரேத்து என்னும் ஊரிலே வந்து குடியிருந்தான். “நசரேயன் எனப்படுவார்” என்று தீர்க்கதரிசிகளால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
କି ନାଜରିତ ଗାମ୍‌ଲେ ଅବୟ୍‌ ଗଡ଼ାଲୋଙନ୍‌ ଇୟ୍‌ଲେ ଡକୋନେଜି, ତିଆସନ୍‌ ପୁର୍ବାଃତେ ବର୍ନେମରନ୍‌ ଆବର୍ରନେନ୍‌ ଆ ପୁର୍ବାଃତେବର୍‌ କେନ୍‌ଆତେ ଡେଡମେନ୍‌, “ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ନାଜରିତବାୟ୍‌ ଗାମ୍‌ଲେ ଓଡ୍ଡେତଜି ।”

< மத்தேயு 2 >