< மத்தேயு 19 >

1 இயேசு இந்த வசனங்களைச் சொல்லிமுடித்தபின்பு, அவர் கலிலேயாவைவிட்டு யோர்தானுக்கு அக்கரையான யூதேயாவிற்கு வந்தார்.
नंतर अस व्हयनं की, हाई बोलनं समाप्त करावर येशु गालीलमाईन निंघीन यार्देन नदीना पलीकडला यहूदीया प्रदेशमा गया.
2 திரளான மக்கள் அவருக்குப் பின்னே சென்றார்கள்; அந்த இடத்தில் அவர்களை குணமாக்கினார்.
तवय लोकसनी गर्दी त्यानामांगे गयी; तठे त्यानी त्यासले बरं करं.
3 அப்பொழுது, பரிசேயர்கள் அவரைச் சோதிக்கவேண்டுமென்று அவரிடத்தில் வந்து: கணவனானவன் தன் மனைவியை எந்தக்காரணத்தினாலாவது விவாகரத்து செய்வது நியாயமா என்று கேட்டார்கள்.
नंतर परूशी त्यानाकडे ईसन त्यानी परिक्षा दखाकरता बोलणात, बायकोले कोणतं बी कारण वरतीन सोडी देवाणं हाई योग्य शे का?
4 அவர்களுக்கு அவர் மறுமொழியாக: ஆரம்பத்திலே மனிதர்களை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும்,
येशुनी त्यासले उत्तर दिधं, हाई तुमना वाचामा वनं नही का, की ज्यानी त्यासले निर्माण करं, “त्यानी सुरवातलेच पुरूष अनी स्त्रीले बनाडं.”
5 இதினிமித்தம் கணவனானவன் தன் தகப்பனையும் தாயையும்விட்டுத் தன் மனைவியோடு இணைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே சரீரமாக இருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா?
अनं सांगं, “यामुये पोऱ्या माय बापले सोडीसन बायकोसंगे कायम राही अनी त्या एकदेह व्हतीन”
6 இப்படி இருக்கிறபடியினால், அவர்கள் இருவர்களாக இல்லாமல், ஒரே சரீரமாக இருக்கிறார்கள்; ஆகவே, தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கவேண்டும் என்றார்.
यामुये पुढे त्या दोन नहीत एकदेह असा शेतस म्हणीन “देवनी जे जोडेल शे ते मनुष्यनी तोडाना प्रयत्न करानं नही”
7 அதற்கு அவர்கள்: அப்படியானால், விடுதலைப்பத்திரம் கொடுத்து, அவளை விவாகரத்து செய்யலாம் என்று மோசே ஏன் கட்டளையிட்டார் என்றார்கள்.
त्या त्याले बोलणात, तर “बायकोले सुटपत्र दिसन तिले सोडानं” अशी आज्ञा मोशेनी का बर दिधी?
8 அதற்கு அவர்: உங்களுடைய மனைவிகளை விவாகரத்து செய்யலாம் என்று உங்களுடைய இருதயக்கடினத்தினிமித்தம் மோசே உங்களுக்கு இடங்கொடுத்தார்; ஆரம்பமுதலாய் அப்படியிருக்கவில்லை.
येशुनी त्यासले सांगं, तुमना निर्दय मनमुये मोशेनी तुमले तुमन्या बायका सोडु दिध्यात पण सुरवात पाईन अस नव्हतं.
9 ஆதலால், எவனாவது தன் மனைவி வேசித்தனம் செய்ததினிமித்தமேயன்றி, அவளை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு பெண்ணைத் திருமணம்செய்தால், அவன் விபசாரம் செய்கிறவனாக இருப்பான்; விவாகரத்து செய்யப்பட்டவளைத் திருமணம் செய்கிறவனும் விபசாரம் செய்கிறவனாக இருப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
मी तुमले सत्य सांगस की, जो कोणी आपली बायकोले व्यभिचारना कारणतीन सोडीन दुसरी करस तो व्यभिचार करस; अनी जो कोणी अशी सोडेल बाईसंगे लगीन करस तो बी व्यभिचार करस.
10 ௧0 அவருடைய சீடர்கள் அவரைப் பார்த்து: மனைவியைப்பற்றி கணவனுடைய காரியம் இப்படியிருந்தால், திருமணம்செய்கிறது நல்லதல்ல என்றார்கள்.
शिष्य त्याले बोलणात, जर माणुसना आपली बायकोसंगे असाच संबंध ऱ्हास तर लगीन न करेलच बरं.
11 ௧௧ அதற்கு அவர்: வரம்பெற்றவர்களேதவிர மற்றவர்கள் இந்த வார்த்தையை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
त्यानी त्यासले सांगं, हाई वचन सर्वासघाई पाळाई जास नही; ज्यासले हाई दान देयल शे, त्यासनाघाईच हाई पाळाई जास.
12 ௧௨ தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாகப் பிறந்தவர்களும் உண்டு; மனிதர்களால் அண்ணகர்களாக்கப்பட்டவர்களும் உண்டு; பரலோக ராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக்கொண்டவர்களும் உண்டு; இதை ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றார்.
कारण काहीजण मायना कोखपाईन नपुंसक जन्मले येल शेतस, माणससनी बनाडेल असा बी नपुंसक शेतस, अनी स्वर्गना राज्यकरता स्वतःले नपुंसक करी लिधं असा बी शेतस. ज्याले हाई स्विकारता येस तोच स्विकारस.
13 ௧௩ அப்பொழுது, சிறு பிள்ளைகளின்மேல் அவர் கரங்களை வைத்து ஜெபம்செய்யும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீடர்கள் அதட்டினார்கள்.
नंतर येशुनी लेकरसवर हात ठिसन प्रार्थना कराले पाहिजे म्हणीन त्यानाजोडे त्यासले आणं; पण शिष्यसनी आणनारासले धमकाडं.
14 ௧௪ இயேசுவோ: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைசெய்யாமலிருங்கள்; பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது என்று சொல்லி,
येशु बोलणा, बालकसले मनाकडे येऊ द्या त्यासले मना करू नका, कारण स्वर्गनं राज्य यासना मायकसनंच शे.
15 ௧௫ அவர்கள்மேல் கரங்களை வைத்து, பின்பு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டுப்போனார்.
मंग त्यासनावर हात ठेईन आशिर्वाद दिसन तो तठेन निंघी गया,
16 ௧௬ அப்பொழுது ஒருவன் வந்து, அவரைப் பார்த்து: நல்ல போதகரே, நித்தியஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான். (aiōnios g166)
नंतर दखा, एकजण ईसन येशुले बोलना, गुरजी, माले सार्वकालिक जिवन मिळावं म्हणीन मी कोणतं चांगलं काम करू? (aiōnios g166)
17 ௧௭ அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே; நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கட்டளைகளைக் கைக்கொள் என்றார்.
त्यानी त्याले सांगं, माले चांगलंपणबद्दल का बर ईचारस? चांगलं अस एकच शे, जर तु सार्वकालिक जिवनमा प्रवेश कराले दखस तर देवनी आज्ञा पाळ.
18 ௧௮ அவன் அவரைப் பார்த்து: எவைகளை என்று கேட்டான். அதற்கு இயேசு: கொலை செய்யாதிருப்பாயாக, விபசாரம் செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக;
त्यानी त्याले ईचारं, कोणत्या? येशुनी सांगं, “मनुष्यहत्या करू नको, चोरी करू नको, खोटी साक्ष देऊ नको.
19 ௧௯ உன் தகப்பனையும் உன் தாயையும் மதிப்பாயாக; உன்னிடத்தில் நீ அன்புசெலுத்துவதுபோல மற்றவனிடத்திலும் அன்புசெலுத்துவாயாக என்பவைகளையே என்றார்.
आपला बाप अनी आपली माय यासना मान राख” अनी जशी स्वतःवर तशी आपला शेजारीसवर प्रिती कर.
20 ௨0 அந்த வாலிபன் அவரைப் பார்த்து: இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன்; இன்னும் என்னிடத்தில் குறைவு என்ன என்றான்.
तो तरूण त्याले बोलना, मी हाई सर्व पाळेल शे; मनामा अजुन काय कमी शे?
21 ௨௧ அதற்கு இயேசு: நீ தேவனுக்கு பூரண சற்குணனாக இருக்கவிரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரர்களுக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குச் செல்வம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.
येशुनी त्याले सांगं, तुले परीपुर्ण होणं शे, तर जाय, तुनी धनदौलत इकीसन गरीबसले दे म्हणजे तुले स्वर्गमा धन भेटी; अनी चल, मनामांगे ये.
22 ௨௨ அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாக இருந்தபடியால், இயேசு சொன்னவைகளைக் கேட்டபொழுது, துக்கமடைந்தவனாகப் போய்விட்டான்.
पण हाई ऐकीसन तो दुःखी व्हईन निंघी गया, कारण त्यानाकडे भरपुर धनदौलत व्हती.
23 ௨௩ அப்பொழுது, இயேசு தம்முடைய சீடர்களைப் பார்த்து: செல்வந்தன் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பது சுலபமல்லவென்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
तवय येशुनी आपला शिष्यसले सांगं, मी तुमले सत्य सांगस की, स्वर्गना राज्यमा धनवानसना प्रवेश व्हणं कठीण शे.
24 ௨௪ மேலும் செல்வந்தன் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைவிட, ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது சுலபமாக இருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
आखो तुमले सांगस, देवना राज्यमा धनवानसना प्रवेश व्हणं यानापेक्षा उंटले सुईना नाकमातीन जाणं सोपं शे.
25 ௨௫ அவருடைய சீடர்கள் அதைக்கேட்டு மிகவும் ஆச்சரியப்பட்டு: அப்படியானால், யார் இரட்சிக்கப்படமுடியும் என்றார்கள்.
हाई ऐकीन शिष्य भलताच थक्क व्हईसन बोलणात, तर मंग कोणं तारण व्हई?
26 ௨௬ இயேசு, அவர்களைப் பார்த்து: மனிதர்களால் இது முடியாததுதான்; தேவனாலே எல்லாம் முடியும் என்றார்.
येशुनी त्यासनाकडे दखीन सांगं, हाई मनुष्यले अशक्य शे, “देवले तर सर्व शक्य शे”
27 ௨௭ அப்பொழுது, பேதுரு அவரைப் பார்த்து: இதோ, நாங்கள் எல்லாவற்றையும்விட்டு, உம்மைப் பின்பற்றினோமே; எங்களுக்கு என்ன கிடைக்கும் என்றான்.
तवय पेत्र त्याले बोलना, आम्हीन सर्व सोडीसन तुमना मांगे येल शेतस, तर आमले काय भेटी?
28 ௨௮ அதற்கு இயேசு: மறுபிறப்பின் காலத்திலே மனிதகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்திருக்கும்போது, என்னைப் பின்பற்றின நீங்களும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களின்மேல் உட்கார்ந்திருப்பீர்கள் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
येशुनी त्यासले सांगं, मी तुमले सत्य सांगस की, जवय सर्वकाही परत नवं व्हई जाई, तवय मनुष्यना पोऱ्या आपला गौरवी राजासनवर बठी, तवय मनामांगे चालणारा तुम्हीन बारा राजासनसवर बठीन इस्त्राएलसना बारा वंशसना न्यायनिवाडा करशात.
29 ௨௯ என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரர்களையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது இழந்தவன் எவனோ, அவன் நூறுமடங்காகப் பெற்று, நித்தியஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; (aiōnios g166)
आखो ज्यानी कोणी मना नावतीन घरदार, भाऊ, बहिणी, माय, बाप, पोऱ्या किंवा वावर सोडेल शेतस, त्याले हाई शंभरपट भेटीन सार्वकालिक जिवन हाई वतन भेटी. (aiōnios g166)
30 ௩0 ஆனாலும், முந்தினோர் அநேகர் பிந்தினோராகவும், பிந்தினோர் அநேகர் முந்தினோராகவும் இருப்பார்கள் என்றார்.
तरी बराच जणससंगे अस व्हई की, ज्या पहिला शेतस त्या शेवटला व्हतीन अनं ज्या शेवटला शेतस त्या पहिला व्हतीन.

< மத்தேயு 19 >