< மத்தேயு 16 >
1 ௧ பரிசேயர்களும், சதுசேயர்களும் அவரைச் சோதிக்கும்படி அவரிடத்தில் வந்து: வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைத் தங்களுக்குக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள்.
І підійшли фарисеї та саддукеї, і, випробо́вуючи, просили Його показати ознаку їм із неба.
2 ௨ அவர்களுக்கு அவர் மறுமொழியாக: மாலைநேரமாகிறபோது செவ்வானமிட்டிருக்கிறது, அதினால் அமைதியாக இருக்கும் என்று சொல்லுகிறீர்கள்.
А Він відповів і промовив до них: „Ви зве́чора кажете: „Буде пого́да, — червоні́є бо небо“.
3 ௩ உதயமாகிறபோது, செவ்வானமும் மந்தாரமுமாக இருக்கிறது, அதினால் இன்றைக்குக் காற்றும் மழையும் உண்டாகும் என்று சொல்லுகிறீர்கள். மாயக்காரர்களே, வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா?
А ра́нком: „Сьогодні него́да, — червоніє бо небо похмуре“. Розпізна́ти небесне обличчя ви вмієте, ознак ча́су ж не можете!
4 ௪ இந்தப் பொல்லாத விபசார சந்ததியார் அடையாளம் தேடுகிறார்கள்; யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேதவிர வேறு அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, அவர்களைவிட்டுப் புறப்பட்டுப்போனார்.
Рід лукавий і перелю́бний шукає озна́ки, та ознаки йому не дадуть, окрім озна́ки пророка Йони“. І, їх полишивши, Він відійшов.
5 ௫ அவருடைய சீடர்கள் அக்கரையைச் சேர்ந்தபோது, அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள்.
А учні Його, перейшовши на то́й бік, забули взяти хліба.
6 ௬ இயேசு அவர்களைப் பார்த்து: பரிசேயர்கள் சதுசேயர்கள் என்பவர்களின் புளித்த மாவைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள் என்றார்.
Ісус же промовив до них: „Стережіться ува́жливо фарисе́йської та саддуке́йської ро́зчини“!
7 ௭ நாம் அப்பங்களைக் கொண்டுவராததினால் இப்படிச் சொல்லுகிறார் என்று அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள்.
Вони ж міркува́ли собі й говорили: „Ми ж хлібі́в не взяли́“.
8 ௮ இயேசு அதை அறிந்து: விசுவாசக்குறைவுள்ளவர்களே, அப்பங்களைக் கொண்டுவராததைக்குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே யோசனைபண்ணுகிறதென்ன?
А Ісус, знавши те, запита́в: „Чого між собою міркуєте ви, маловірні, що хлібі́в не взяли́?
9 ௯ இன்னும் நீங்கள் உணரவில்லையா? ஐந்து அப்பங்களை ஐயாயிரம்பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனைக் கூடைகள்நிறைய எடுத்தீர்கள் என்பதையும்;
Чи ж ви ще́ не розумієте й не пам'ятаєте про п'ять хлібів на п'ять тисяч, — і скільки коші́в ви зібрали?
10 ௧0 ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனை கூடைகள்நிறைய எடுத்தீர்கள் என்பதையும் நீங்கள் நினைவுகூராமலிருக்கிறீர்களா?
Ані про сім хлібів на чотири тисячі, — і скільки кошиків ви назбирали?
11 ௧௧ பரிசேயர்கள் சதுசேயர்கள் என்பவர்களின் புளித்த மாவிற்கு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று நான் சொன்னது அப்பத்தைக்குறித்துச் சொல்லவில்லை என்று நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார்.
Як ви не розумієте, що Я не про хліб вам сказав? Стережіться но ро́зчини фарисейської та саддукейської!“
12 ௧௨ அப்பொழுது, அவர் அப்பத்தின் புளித்த மாவைக்குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென்று சொல்லாமல், பரிசேயர்கள் சதுசேயர்கள் என்பவர்களின் உபதேசத்தைக்குறித்தே அப்படிச் சொன்னார் என்று அறிந்துகொண்டார்கள்.
Тоді зрозуміли вони, що Він не казав стерегтися їм ро́зчини хлібної, але фарисе́йської та саддуке́йської науки.
13 ௧௩ பின்பு, இயேசு பிலிப்பு செசரியாவின் பட்டணத்திற்கு வந்தபோது, தம்முடைய சீடர்களைப் பார்த்து: மனிதகுமாரனாகிய என்னை மக்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.
Прийшовши ж Ісус до землі Кесарі́ї Пили́пової, питав Своїх учнів і казав: „За ко́го наро́д уважає Мене́, Сина Лю́дського?“
14 ௧௪ அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும்; வேறுசிலர் எரேமியா அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.
Вони ж відповіли́: „Одні за Івана Христителя, одні за Іллю́, інші ж за Єремі́ю або за одного з пророків“.
15 ௧௫ அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்.
Він каже до них: „А ви за ко́го Мене маєте?“
16 ௧௬ சீமோன்பேதுரு மறுமொழியாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்.
А Си́мон Петро відповів і сказав: „Ти — Христос, Син Бога Живого!“
17 ௧௭ இயேசு அவனைப் பார்த்து: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்.
А Ісус відповів і до ньо́го промовив: „Блаженний ти, Си́моне, сину Йо́нин, бо не тіло і кров тобі оце ви́явили, але Мій Небесний Отець.
18 ௧௮ மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. (Hadēs )
I кажу Я тобі, що Петро ти, і на скелі оцій побудую Я Церкву Свою, — і сили а́дові не переможуть її. (Hadēs )
19 ௧௯ பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார்.
І ключі тобі дам від Царства Небесного, і що́ на землі ти зв'яжеш, те зв'язане буде на небі, а що́ на землі ти розв'яжеш, те розв'язане буде на небі“!
20 ௨0 அப்பொழுது, தாம் கிறிஸ்துவாகிய இயேசு என்று ஒருவருக்கும் சொல்லாதபடிக்குத் தம்முடைய சீடர்களுக்குக் கட்டளையிட்டார்.
Тоді наказав Своїм учням, щоб ніко́му не казали, що Він — Христо́с.
21 ௨௧ அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பர்களாலும் பிரதான ஆசாரியர்களாலும், வேதபண்டிதர்களாலும் பல பாடுகள்பட்டு, கொலையுண்டு, மூன்றாம்நாளில் உயிரோடு எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீடர்களுக்குச் சொல்லத்தொடங்கினார்.
Із того ча́су Ісус став виказувати Своїм у́чням, що Він мусить іти до Єрусалиму, і постраждати багато від старших, і первосвящеників, і книжників, і вбитому бути, — і воскреснути третього дня.
22 ௨௨ அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு சம்பவிக்கக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத்தொடங்கினான்.
І, на́бік відвівши Його, Петро став Йому́ докоря́ти й казати: „Змилуйся, Господи, — такого Тобі хай не бу́де!“
23 ௨௩ அவரோ திரும்பி, பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாக இருக்கிறாய்; தேவனுக்குரியவைகளைச் சிந்திக்காமல் மனிதர்களுக்குரியவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்.
А Він обернувся й промовив Петрові: „Відступися від Мене, сатано́, — ти спокуса Мені, бо ду́маєш не про Боже, а про лю́дське!“
24 ௨௪ அப்பொழுது, இயேசு தம்முடைய சீடர்களைப் பார்த்து: ஒருவன் என்னைப் பின்பற்றிவரவிரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றவேண்டும்.
Промовив тоді Ісус у́чням Своїм: „Коли хоче хто йти вслід за Мною, — хай зречеться самого себе, і хай ві́зьме свого хреста, та й іде вслід за Мною.
25 ௨௫ தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் கண்டடைவான்.
Бо хто хоче спасти́ свою душу, той погубить її, хто ж за Мене свою душу погубить, той зна́йде її.
26 ௨௬ மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனிதன் தன் ஜீவனுக்கு இணையாக என்னத்தைக் கொடுப்பான்?
Яка ж ко́ристь люди́ні, що здобуде ввесь світ, але душу свою занапа́стить? Або що́ дасть люди́на взамін за душу свою?
27 ௨௭ மனிதகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமை பொருந்தினவராகத் தம்முடைய தூதர்களோடு வருவார்; அப்பொழுது, அவனவன் செயல்களுக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.
Бо при́йде Син Лю́дський у славі Свого Отця з ангола́ми Своїми, і тоді „віддасть кожному згідно з діла́ми його“.
28 ௨௮ இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனிதகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காண்பதற்குமுன், மரணத்தைக் காண்பதில்லை என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
Поправді кажу́ вам, що деякі з тут-о прия́вних не скушту́ють смерти, аж поки не побачать Сина Лю́дського, що йде в Царстві Своїм“.