< மத்தேயு 16 >

1 பரிசேயர்களும், சதுசேயர்களும் அவரைச் சோதிக்கும்படி அவரிடத்தில் வந்து: வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைத் தங்களுக்குக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள்.
তদানীং ফিরূশিনঃ সিদূকিনশ্চাগত্য তং পরীক্ষিতুং নভমীযং কিঞ্চন লক্ষ্ম দর্শযিতুং তস্মৈ নিৱেদযামাসুঃ|
2 அவர்களுக்கு அவர் மறுமொழியாக: மாலைநேரமாகிறபோது செவ்வானமிட்டிருக்கிறது, அதினால் அமைதியாக இருக்கும் என்று சொல்லுகிறீர்கள்.
ততঃ স উক্তৱান্, সন্ধ্যাযাং নভসো রক্তৎৱাদ্ যূযং ৱদথ, শ্ৱো নির্ম্মলং দিনং ভৱিষ্যতি;
3 உதயமாகிறபோது, செவ்வானமும் மந்தாரமுமாக இருக்கிறது, அதினால் இன்றைக்குக் காற்றும் மழையும் உண்டாகும் என்று சொல்லுகிறீர்கள். மாயக்காரர்களே, வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா?
প্রাতঃকালে চ নভসো রক্তৎৱাৎ মলিনৎৱাঞ্চ ৱদথ, ঝঞ্ভ্শদ্য ভৱিষ্যতি| হে কপটিনো যদি যূযম্ অন্তরীক্ষস্য লক্ষ্ম বোদ্ধুং শক্নুথ, তর্হি কালস্যৈতস্য লক্ষ্ম কথং বোদ্ধুং ন শক্নুথ?
4 இந்தப் பொல்லாத விபசார சந்ததியார் அடையாளம் தேடுகிறார்கள்; யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேதவிர வேறு அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, அவர்களைவிட்டுப் புறப்பட்டுப்போனார்.
এতৎকালস্য দুষ্টো ৱ্যভিচারী চ ৱংশো লক্ষ্ম গৱেষযতি, কিন্তু যূনসো ভৱিষ্যদ্ৱাদিনো লক্ষ্ম ৱিনান্যৎ কিমপি লক্ষ্ম তান্ ন দর্শযিয্যতে| তদানীং স তান্ ৱিহায প্রতস্থে|
5 அவருடைய சீடர்கள் அக்கரையைச் சேர்ந்தபோது, அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள்.
অনন্তরমন্যপারগমনকালে তস্য শিষ্যাঃ পূপমানেতুং ৱিস্মৃতৱন্তঃ|
6 இயேசு அவர்களைப் பார்த்து: பரிசேயர்கள் சதுசேயர்கள் என்பவர்களின் புளித்த மாவைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள் என்றார்.
যীশুস্তানৱাদীৎ, যূযং ফিরূশিনাং সিদূকিনাঞ্চ কিণ্ৱং প্রতি সাৱধানাঃ সতর্কাশ্চ ভৱত|
7 நாம் அப்பங்களைக் கொண்டுவராததினால் இப்படிச் சொல்லுகிறார் என்று அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள்.
তেন তে পরস্পরং ৱিৱিচ্য কথযিতুমারেভিরে, ৱযং পূপানানেতুং ৱিস্মৃতৱন্ত এতৎকারণাদ্ ইতি কথযতি|
8 இயேசு அதை அறிந்து: விசுவாசக்குறைவுள்ளவர்களே, அப்பங்களைக் கொண்டுவராததைக்குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே யோசனைபண்ணுகிறதென்ன?
কিন্তু যীশুস্তদ্ৱিজ্ঞায তানৱোচৎ, হে স্তোকৱিশ্ৱাসিনো যূযং পূপানানযনমধি কুতঃ পরস্পরমেতদ্ ৱিৱিংক্য?
9 இன்னும் நீங்கள் உணரவில்லையா? ஐந்து அப்பங்களை ஐயாயிரம்பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனைக் கூடைகள்நிறைய எடுத்தீர்கள் என்பதையும்;
যুষ্মাভিঃ কিমদ্যাপি ন জ্ঞাযতে? পঞ্চভিঃ পূপৈঃ পঞ্চসহস্রপুরুষেষু ভোজিতেষু ভক্ষ্যোচ্ছিষ্টপূর্ণান্ কতি ডলকান্ সমগৃহ্লীতং;
10 ௧0 ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனை கூடைகள்நிறைய எடுத்தீர்கள் என்பதையும் நீங்கள் நினைவுகூராமலிருக்கிறீர்களா?
১০তথা সপ্তভিঃ পূপৈশ্চতুঃসহস্রপুরুষেষু ভেজিতেষু কতি ডলকান্ সমগৃহ্লীত, তৎ কিং যুষ্মাভির্ন স্মর্য্যতে?
11 ௧௧ பரிசேயர்கள் சதுசேயர்கள் என்பவர்களின் புளித்த மாவிற்கு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று நான் சொன்னது அப்பத்தைக்குறித்துச் சொல்லவில்லை என்று நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார்.
১১তস্মাৎ ফিরূশিনাং সিদূকিনাঞ্চ কিণ্ৱং প্রতি সাৱধানাস্তিষ্ঠত, কথামিমাম্ অহং পূপানধি নাকথযং, এতদ্ যূযং কুতো ন বুধ্যধ্ৱে?
12 ௧௨ அப்பொழுது, அவர் அப்பத்தின் புளித்த மாவைக்குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென்று சொல்லாமல், பரிசேயர்கள் சதுசேயர்கள் என்பவர்களின் உபதேசத்தைக்குறித்தே அப்படிச் சொன்னார் என்று அறிந்துகொண்டார்கள்.
১২তদানীং পূপকিণ্ৱং প্রতি সাৱধানাস্তিষ্ঠতেতি নোক্ত্ৱা ফিরূশিনাং সিদূকিনাঞ্চ উপদেশং প্রতি সাৱধানাস্তিষ্ঠতেতি কথিতৱান্, ইতি তৈরবোধি|
13 ௧௩ பின்பு, இயேசு பிலிப்பு செசரியாவின் பட்டணத்திற்கு வந்தபோது, தம்முடைய சீடர்களைப் பார்த்து: மனிதகுமாரனாகிய என்னை மக்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.
১৩অপরঞ্চ যীশুঃ কৈসরিযা-ফিলিপিপ্রদেশমাগত্য শিষ্যান্ অপৃচ্ছৎ, যোঽহং মনুজসুতঃ সোঽহং কঃ? লোকৈরহং কিমুচ্যে?
14 ௧௪ அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும்; வேறுசிலர் எரேமியா அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.
১৪তদানীং তে কথিতৱন্তঃ, কেচিদ্ ৱদন্তি ৎৱং মজ্জযিতা যোহন্, কেচিদ্ৱদন্তি, ৎৱম্ এলিযঃ, কেচিচ্চ ৱদন্তি, ৎৱং যিরিমিযো ৱা কশ্চিদ্ ভৱিষ্যদ্ৱাদীতি|
15 ௧௫ அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்.
১৫পশ্চাৎ স তান্ পপ্রচ্ছ, যূযং মাং কং ৱদথ? ততঃ শিমোন্ পিতর উৱাচ,
16 ௧௬ சீமோன்பேதுரு மறுமொழியாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்.
১৬ৎৱমমরেশ্ৱরস্যাভিষিক্তপুত্রঃ|
17 ௧௭ இயேசு அவனைப் பார்த்து: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்.
১৭ততো যীশুঃ কথিতৱান্, হে যূনসঃ পুত্র শিমোন্ ৎৱং ধন্যঃ; যতঃ কোপি অনুজস্ত্ৱয্যেতজ্জ্ঞানং নোদপাদযৎ, কিন্তু মম স্ৱর্গস্যঃ পিতোদপাদযৎ|
18 ௧௮ மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. (Hadēs g86)
১৮অতোঽহং ৎৱাং ৱদামি, ৎৱং পিতরঃ (প্রস্তরঃ) অহঞ্চ তস্য প্রস্তরস্যোপরি স্ৱমণ্ডলীং নির্ম্মাস্যামি, তেন নিরযো বলাৎ তাং পরাজেতুং ন শক্ষ্যতি| (Hadēs g86)
19 ௧௯ பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார்.
১৯অহং তুভ্যং স্ৱর্গীযরাজ্যস্য কুঞ্জিকাং দাস্যামি, তেন যৎ কিঞ্চন ৎৱং পৃথিৱ্যাং ভংৎস্যসি তৎস্ৱর্গে ভংৎস্যতে, যচ্চ কিঞ্চন মহ্যাং মোক্ষ্যসি তৎ স্ৱর্গে মোক্ষ্যতে|
20 ௨0 அப்பொழுது, தாம் கிறிஸ்துவாகிய இயேசு என்று ஒருவருக்கும் சொல்லாதபடிக்குத் தம்முடைய சீடர்களுக்குக் கட்டளையிட்டார்.
২০পশ্চাৎ স শিষ্যানাদিশৎ, অহমভিষিক্তো যীশুরিতি কথাং কস্মৈচিদপি যূযং মা কথযত|
21 ௨௧ அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பர்களாலும் பிரதான ஆசாரியர்களாலும், வேதபண்டிதர்களாலும் பல பாடுகள்பட்டு, கொலையுண்டு, மூன்றாம்நாளில் உயிரோடு எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீடர்களுக்குச் சொல்லத்தொடங்கினார்.
২১অন্যঞ্চ যিরূশালম্নগরং গৎৱা প্রাচীনলোকেভ্যঃ প্রধানযাজকেভ্য উপাধ্যাযেভ্যশ্চ বহুদুঃখভোগস্তৈ র্হতৎৱং তৃতীযদিনে পুনরুত্থানঞ্চ মমাৱশ্যকম্ এতাঃ কথা যীশুস্তৎকালমারভ্য শিষ্যান্ জ্ঞাপযিতুম্ আরব্ধৱান্|
22 ௨௨ அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு சம்பவிக்கக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத்தொடங்கினான்.
২২তদানীং পিতরস্তস্য করং ঘৃৎৱা তর্জযিৎৱা কথযিতুমারব্ধৱান্, হে প্রভো, তৎ ৎৱত্তো দূরং যাতু, ৎৱাং প্রতি কদাপি ন ঘটিষ্যতে|
23 ௨௩ அவரோ திரும்பி, பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாக இருக்கிறாய்; தேவனுக்குரியவைகளைச் சிந்திக்காமல் மனிதர்களுக்குரியவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்.
২৩কিন্তু স ৱদনং পরাৱর্ত্য পিতরং জগাদ, হে ৱিঘ্নকারিন্, মৎসম্মুখাদ্ দূরীভৱ, ৎৱং মাং বাধসে, ঈশ্ৱরীযকার্য্যাৎ মানুষীযকার্য্যং তুভ্যং রোচতে|
24 ௨௪ அப்பொழுது, இயேசு தம்முடைய சீடர்களைப் பார்த்து: ஒருவன் என்னைப் பின்பற்றிவரவிரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றவேண்டும்.
২৪অনন্তরং যীশুঃ স্ৱীযশিষ্যান্ উক্তৱান্ যঃ কশ্চিৎ মম পশ্চাদ্গামী ভৱিতুম্ ইচ্ছতি, স স্ৱং দাম্যতু, তথা স্ৱক্রুশং গৃহ্লন্ মৎপশ্চাদাযাতু|
25 ௨௫ தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் கண்டடைவான்.
২৫যতো যঃ প্রাণান্ রক্ষিতুমিচ্ছতি, স তান্ হারযিষ্যতি, কিন্তু যো মদর্থং নিজপ্রাণান্ হারযতি, স তান্ প্রাপ্স্যতি|
26 ௨௬ மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனிதன் தன் ஜீவனுக்கு இணையாக என்னத்தைக் கொடுப்பான்?
২৬মানুষো যদি সর্ৱ্ৱং জগৎ লভতে নিজপ্রণান্ হারযতি, তর্হি তস্য কো লাভঃ? মনুজো নিজপ্রাণানাং ৱিনিমযেন ৱা কিং দাতুং শক্নোতি?
27 ௨௭ மனிதகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமை பொருந்தினவராகத் தம்முடைய தூதர்களோடு வருவார்; அப்பொழுது, அவனவன் செயல்களுக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.
২৭মনুজসুতঃ স্ৱদূতৈঃ সাকং পিতুঃ প্রভাৱেণাগমিষ্যতি; তদা প্রতিমনুজং স্ৱস্ৱকর্ম্মানুসারাৎ ফলং দাস্যতি|
28 ௨௮ இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனிதகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காண்பதற்குமுன், மரணத்தைக் காண்பதில்லை என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
২৮অহং যুষ্মান্ তথ্যং ৱচ্মি, সরাজ্যং মনুজসুতম্ আগতং ন পশ্যন্তো মৃত্যুং ন স্ৱাদিষ্যন্তি, এতাদৃশাঃ কতিপযজনা অত্রাপি দণ্ডাযমানাঃ সন্তি|

< மத்தேயு 16 >