< மத்தேயு 15 >
1 ௧ அப்பொழுது, எருசலேமிலிருந்து வந்த வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் இயேசுவினிடத்தில் வந்து:
Na rĩrĩ, thuutha ũcio Afarisai amwe na arutani a watho magĩũka kũrĩ Jesũ moimĩte Jerusalemu, makĩmũũria atĩrĩ,
2 ௨ உம்முடைய சீடர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை ஏன் மீறி நடக்கிறார்கள்? கைகழுவாமல் சாப்பிடுகிறார்களே! என்றார்கள்.
“Nĩ kĩĩ gĩtũmaga arutwo aku mathũkie kĩrĩra gĩa athuuri? Matiĩthambaga moko rĩrĩa mekũrĩa irio!”
3 ௩ அவர்களுக்கு அவர் மறுமொழியாக: நீங்கள் உங்களுடைய பாரம்பரியத்தினாலே தேவனுடைய கட்டளையை ஏன் மீறி நடக்கிறீர்கள்?
Nake Jesũ akĩmooria atĩrĩ, “Na inyuĩ mũthũkagia watho wa Ngai nĩ ũndũ wa irĩra cianyu nĩkĩ?
4 ௪ உன் தகப்பனையும் உன் தாயையும் மதித்து நடப்பாயாக என்றும்; தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், தேவன் கட்டளை கொடுத்திருக்கிறாரே.
Nĩgũkorwo Ngai oigire atĩrĩ, ‘Tĩĩa thoguo na nyũkwa’ na ‘Mũndũ wa kũruma ithe kana nyina no nginya ooragwo.’
5 ௫ நீங்களோ, எவனாவது தகப்பனையாவது தாயையாவது பார்த்து உனக்கு நான் செய்யவேண்டிய உதவி எதுவோ, அதை தேவனுக்குக் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லி, தன் தகப்பனையாவது தன் தாயையாவது மதிக்காமற்போனாலும், அவனுடைய கடமை முடிந்ததென்று போதித்து,
No inyuĩ muugaga atĩ mũndũ angĩĩra ithe kana nyina atĩrĩ, ‘Ũteithio ũrĩa ingĩagũteithia naguo, nĩ kĩheo kĩamũrĩre Ngai,’
6 ௬ உங்களுடைய பாரம்பரியத்தினாலே தேவனுடைய கட்டளையை அவமாக்கிவருகிறீர்கள்.
mũndũ ũcio ndarĩ bata wa ‘gũtĩĩa ithe’ naguo. Nĩ ũndũ ũcio mũgagĩtua kiugo kĩa Ngai gĩa tũhũ nĩ ũndũ wa kĩrĩra kĩanyu.
7 ௭ மாயக்காரர்களே, உங்களைக்குறித்து:
Inyuĩ hinga ici! Isaia nĩamenyete wega hĩndĩ ĩrĩa aarathire ũhoro wanyu, akiuga atĩrĩ:
8 ௮ இந்த மக்கள் தங்களுடைய உதட்டளவில் என்னிடத்தில் சேர்ந்து, தங்களுடைய உதடுகளினால் என்னை மதிக்கிறார்கள்; அவர்கள் இருதயமோ என்னைவிட்டு தூரமாக விலகியிருக்கிறது;
“‘Andũ aya maaheaga gĩtĩĩo na mĩromo, no ngoro ciao irĩ kũraya na niĩ.
9 ௯ மனிதர்களுடைய கட்டளைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாக எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி நன்றாகச் சொல்லியிருக்கிறான் என்றார்.”
Nao maahooyaga o tũhũ; morutani marĩa marutanaga no mawatho ma andũ.’”
10 ௧0 பின்பு அவர் மக்களை வரவழைத்து, அவர்களைப் பார்த்து: நீங்கள் கேட்டு உணருங்கள்.
Nake Jesũ agĩĩta kĩrĩndĩ kĩu gĩũke harĩ we, agĩkĩĩra atĩrĩ, “Thikĩrĩriai na mũtaũkĩrwo.
11 ௧௧ வாய்க்குள்ளே போகிறது மனிதனைத் தீட்டுப்படுத்தாது, வாயிலிருந்து புறப்படுகிறதே மனிதனைத் தீட்டுப்படுத்தும்என்றார்.
Kĩrĩa gĩtoonyaga na kanua ka mũndũ ti kĩo ‘kĩmũthaahagia’, no kĩrĩa kiumaga kanua gake nĩkĩo ‘kĩmũthaahagia.’”
12 ௧௨ அப்பொழுது, அவருடைய சீடர்கள் அவரிடத்தில் வந்து: பரிசேயர்கள் இந்த வசனத்தைக்கேட்டு இடறலடைந்தார்கள் என்று அறிவீரா என்றார்கள்.
Na hĩndĩ ĩyo arutwo ake magĩthiĩ harĩ we, makĩmũũria atĩrĩ, “Nĩũĩ atĩ Afarisai nĩmararakarire rĩrĩa maraiguire ũhoro ũcio?”
13 ௧௩ அவர் மறுமொழியாக: என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடு பிடுங்கப்படும்.
Nake akĩmacookeria atĩrĩ, “Mũmera o wothe ũtaahandĩtwo nĩ Baba ũrĩa ũrĩ igũrũ nĩũkamunywo na mĩri.
14 ௧௪ அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் குருடர்களுக்கு வழிகாட்டுகிற குருடர்களாக இருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்றார்.
Tiganai nao; acio nĩ atongoria atumumu. Mũtumumu angĩtongoria mũtumumu ũngĩ, eerĩ no kũgũa mangĩgũa irima.”
15 ௧௫ அப்பொழுது, பேதுரு அவரைப் பார்த்து: இந்த உவமையை எங்களுக்கு விளக்கிச்சொல்லவேண்டும் என்றான்.
Nake Petero akiuga atĩrĩ, “Tũtaũrĩre ngerekano ĩyo.”
16 ௧௬ அதற்கு இயேசு: நீங்களும் இன்னும் உணர்வில்லாதவர்களாக இருக்கிறீர்களா?
Nake Jesũ akĩmooria atĩrĩ, “O na inyuĩ mũtirĩ mũrataũkĩrwo o na rĩu?
17 ௧௭ வாய்க்குள்ளே போகிறதெல்லாம் வயிற்றுக்குள் சென்று ஆசனவழியாகக் கழிந்துபோகும் என்பதை நீங்கள் இன்னும் அறியவில்லையா?
Kaĩ mũtooĩ atĩ kĩndũ kĩrĩa gĩtoonyaga na kanua gĩthiiaga nda, gĩgacooka gĩkoima mwĩrĩ?
18 ௧௮ வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும்; அவைகளே மனிதனைத் தீட்டுப்படுத்தும்.
No maũndũ marĩa moimaga kanua moimaga ngoro-inĩ, na nĩmo ‘mathaahagia’ mũndũ.
19 ௧௯ எப்படியென்றால், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், அவதூறுகளும் புறப்பட்டுவரும்.
Nĩ ũndũ ngoro-inĩ nĩkuo kuumaga meciiria mooru, na ũragani, na ũtharia, na ũhũũri maraya, na ũici, na kũiganĩrĩra igenyo, na njambanio.
20 ௨0 இவைகளே மனிதனைத் தீட்டுப்படுத்தும்; கைகளைக் கழுவாமல் சாப்பிடுகிறது மனிதனைத் தீட்டுப்படுத்தாது என்றார்.
Macio nĩmo maũndũ marĩa ‘mathaahagia’ mũndũ; no kũrĩa irio na moko matarĩ mathambie matingĩtũma mũndũ agĩe na ‘thaahu’.”
21 ௨௧ பின்பு, இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, தீரு சீதோன் பட்டணங்களின் திசைகளுக்குப் போனார்.
Ningĩ Jesũ akiuma kũu, agĩthiĩ ndeere-inĩ cia Turo na Sidoni.
22 ௨௨ அப்பொழுது, அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானியப் பெண் ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள்.
Mũndũ-wa-nja Mũkaanani woimĩte gũkuhĩ na kũu agĩũka kũrĩ we, akĩmũkayagĩra, akiugaga atĩrĩ, “Mwathani, Mũrũ wa Daudi, njiguĩra tha! Mũirĩtu wakwa nĩarathĩĩnio mũno nĩ ndaimono.”
23 ௨௩ அவளுக்கு மறுமொழியாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அப்பொழுது அவருடைய சீடர்கள் வந்து: இவள் நம்மைப் பின்தொடர்ந்து கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்.
No Jesũ ndarĩ ũndũ o na ũmwe oigire. Nĩ ũndũ ũcio arutwo ake magĩthiĩ kũrĩ we makĩmũringĩrĩria, makĩmwĩra atĩrĩ, “Mwĩre athiĩ, tondũ nĩaratũrũmĩrĩra agĩkayaga.”
24 ௨௪ அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் குடும்பத்தாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேதவிர, மற்றவர்களுக்கல்ல என்றார்.
Nake Jesũ agĩcookia atĩrĩ, “Ndaatũmirwo o kũrĩ ngʼondu cia nyũmba ya Isiraeli iria ciũrĩte tu.”
25 ௨௫ அவள் வந்து: ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும் என்று அவரைப் பணிந்துகொண்டாள்.
Nake mũndũ-wa-nja ũcio agĩũka, akĩmũturĩria ndu, akĩmwĩra atĩrĩ, “Mwathani, ndeithia!”
26 ௨௬ அவர் அவளைப் பார்த்து: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார்.
Nake Jesũ agĩcookia atĩrĩ, “Gũtiagĩrĩire kuoya mũgate wa ciana ũikĩrie ngui.”
27 ௨௭ அதற்கு அவள்: உண்மைதான் ஆண்டவரே, ஆனாலும் நாய்க்குட்டிகள் தங்களுடைய எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் அப்பத்துணிக்கைகளைச் சாப்பிடுமே என்றாள்.
Nake mũndũ-wa-nja ũcio akiuga atĩrĩ, “Ĩĩ nĩguo Mwathani; no o na ngui nĩirĩĩaga rũitĩki rũrĩa rũgũaga kuuma metha-inĩ ya mwene cio.”
28 ௨௮ இயேசு அவளுக்கு மறுமொழியாக: பெண்ணே, உன் விசுவாசம் பெரியது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்த நேரமே அவளுடைய மகள் ஆரோக்கியமானாள்.
Nake Jesũ akĩmũcookeria atĩrĩ, “Mũtumia ũyũ, wĩtĩkio waku nĩ mũnene! Ihooya rĩaku nĩrĩahingio.” Nake mwarĩ akĩhonio ithaa o rĩu.
29 ௨௯ இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, கலிலேயாக் கடலருகே வந்து, ஒரு மலையின்மேல் ஏறி, அங்கே உட்கார்ந்தார்.
Jesũ akiuma kũu, agĩthiĩ agereire hũgũrũrũ-inĩ cia iria rĩa Galili, agĩcooka akĩambata kĩrĩma-inĩ, agĩikara thĩ.
30 ௩0 அப்பொழுது, முடவர்கள், குருடர்கள், ஊமையர்கள், ஊனர்கள் முதலிய அநேகரை திரளான மக்கள் இயேசுவினிடத்தில் அழைத்துவந்து, அவர்களை அவர் பாதத்திலே வைத்தார்கள்; அவர்களை அவர் குணப்படுத்தினார்.
Nakĩo kĩrĩndĩ kĩnene gĩgĩũka kũrĩ we, gĩkĩmũrehera andũ arĩa maathuaga, na atumumu, na arĩa maarĩ onju na arĩa mataaragia, na angĩ aingĩ, makĩmaiga magũrũ-inĩ make; nake akĩmahonia.
31 ௩௧ ஊமையர் பேசுகிறதையும், ஊனர்கள் குணமடைகிறதையும், கைகால்கள் முடங்கியவர்கள் நடக்கிறதையும், குருடர்கள் பார்க்கிறதையும் மக்கள் கண்டு, ஆச்சரியப்பட்டு, இஸ்ரவேலின் தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
Nao andũ makĩgega rĩrĩa moonire arĩa mataaragia makĩaria, na arĩa onju mahonetio, na arĩa maathuaga magĩĩtwara, na atumumu makĩona. Nao makĩgooca Ngai wa Isiraeli.
32 ௩௨ பின்பு, இயேசு தம்முடைய சீடர்களை அழைத்து: மக்களுக்காக மனதுருகுகிறேன், இவர்கள் என்னிடத்தில் மூன்று நாட்கள் தங்கியிருந்து சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள்; இவர்களைப் பட்டினியாக அனுப்பிவிட எனக்கு மனதில்லை, வழியிலே சோர்ந்துபோவார்களே என்றார்.
Nake Jesũ agĩĩta arutwo ake moke harĩ we, akĩmeera atĩrĩ, “Nĩndĩraiguĩra andũ aya tha tondũ makoretwo hamwe na niĩ mĩthenya ĩtatũ, na matirĩ na kĩndũ gĩa kũrĩa. Ndikwenda mathiĩ marĩ ahũtu, tondũ maahota kũringĩkĩra njĩra.”
33 ௩௩ அதற்கு அவருடைய சீடர்கள்: இவ்வளவு திரளான மக்களுக்குத் திருப்தியுண்டாகும்படி தேவையான அப்பங்கள் இந்த வனாந்திரத்திலே நமக்கு எப்படி கிடைக்கும் என்றார்கள்.
Nao arutwo ake magĩcookia atĩrĩ, “Tũngĩruta kũ mĩgate ya kũhũũnia kĩrĩndĩ ta gĩkĩ, gũkũ werũ-inĩ?”
34 ௩௪ அதற்கு இயேசு: உங்களிடம் எத்தனை அப்பங்கள் உண்டு என்று கேட்டார். அவர்கள்: ஏழு அப்பங்களும் சில சிறு மீன்களும் உண்டு என்றார்கள்.
Nake Jesũ akĩmooria, atĩrĩ, “Mũrĩ na mĩgate ĩigana?” Nao makĩmũcookeria atĩrĩ, “Tũrĩ na mĩgate mũgwanja, na tũthamaki tũnini tũtarĩ tũingĩ.”
35 ௩௫ அப்பொழுது அவர் மக்களைத் தரையில் பந்தியிருக்கக் கட்டளையிட்டு,
Nake akĩĩra kĩrĩndĩ kĩu gĩikare thĩ.
36 ௩௬ அந்த ஏழு அப்பங்களையும் அந்த மீன்களையும் எடுத்து, நன்றிசெலுத்தி, பிட்டுத் தம்முடைய சீடர்களிடத்தில் கொடுத்தார்; சீடர்கள் மக்களுக்குப் பரிமாறினார்கள்.
Agĩcooka akĩoya mĩgate ĩyo mũgwanja na tũthamaki tũu, na aarĩkia gũcookia ngaatho-rĩ, akĩmĩenyũranga, akĩmĩnengera arutwo nao makĩhe andũ.
37 ௩௭ எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான அப்பத்துணிக்கைகளை ஏழு கூடைகள்நிறைய எடுத்தார்கள்.
Othe makĩrĩa makĩhũũna. Thuutha ũcio arutwo makĩũngania cienyũ iria ciatigarĩte makĩiyũria ciondo mũgwanja.
38 ௩௮ பெண்களும் பிள்ளைகளும்தவிர, சாப்பிட்ட ஆண்கள் நான்காயிரம்பேராக இருந்தார்கள்.
Mũigana wa andũ arĩa maarĩire maarĩ andũ ngiri inya, andũ-a-nja na ciana matatarĩtwo.
39 ௩௯ அவர் மக்களை அனுப்பிவிட்டு படகில் ஏறி, மக்தலாவின் எல்லைகளுக்கு வந்தார்.
Jesũ aarĩkia kuugĩra kĩrĩndĩ ũhoro, agĩtoonya gatarũ, agĩthiĩ mwena wa Magadani.