< மத்தேயு 13 >

1 இயேசு அன்றைய தினமே வீட்டிலிருந்து புறப்பட்டுப்போய், கடலோரத்திலே உட்கார்ந்தார்.
तेस दिने यीशु कअरो ते निकल़ी की समुद्रो रे कनारे बैठीगे।
2 திரளான மக்கள் அவரிடத்தில் கூடிவந்தபடியால், அவர் படகில் ஏறி உட்கார்ந்தார்; மக்களெல்லோரும் கரையிலே நின்றார்கள்.
तेबे तिना गे बऊत बड़ी पीड़ कट्ठी ऊईगी। तेबे सेयो किस्तिया पाँदे चढ़ी गे और सारी पीड़ कनारे पाँदे खड़ी री रई।
3 அவர் அநேக காரியங்களை உவமைகளாக அவர்களுக்குச் சொன்னார்: கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான்.
तेबे यीशुए तिना खे बऊत गल्ला उदारणा रे बोलिया, “एक बार बाणे वाल़ा, बेजा बाणे निकल़ेया।
4 அவன் விதைக்கும்போது, சில விதைகள் வழியருகே விழுந்தன; பறவைகள் வந்து அவைகளைச் சாப்பிட்டன.
बांदे ऊए कुछ बिऊ बाटा रे कनारे छूटी गे और पंछी आए और तिने बीज चूगी ले।
5 சில விதைகள் அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தன; மண் ஆழமாக இல்லாததினாலே அவைகள் சீக்கிரமாக முளைத்தன.
कुछ बिऊ सापड़ी वाल़ी जगा रे छूटी गे, जेती तिना खे जादा माट्टी नि मिली और जादा गईरी माट्टी ना मिलणे री बजअ ते सेयो चट-चट जम्मी गे।
6 வெயில் ஏறினபோதோ, கருகிப்போய், வேரில்லாமையால் உலர்ந்துபோயின.
पर सूरज निकल़दे ई सेयो फूकी गे और जड़ ना पकड़ने री बजअ ते सेयो सूकी गे।
7 சில விதைகள் முள்ளுள்ள இடங்களில் விழுந்தன; முள் வளர்ந்து அவைகளை நெருக்கிப்போட்டது.
कुछ बिऊ जाड़ो रे छूटे, तेबे जाड़ बड़ा ऊईगा और तिने सेयो दबाई ते।
8 சில விதைகளோ நல்ல நிலத்தில் விழுந்தன, சில விதைகள் நூறாகவும், சில விதைகள் அறுபதாகவும், சில விதைகள் முப்பதாகவும் பலன் தந்தன.
पर कुछ बिऊ अच्छी जमीना पाँदे छूटे और फल ल्याए, कोई सौ गुणा, कोई साठ गुणा और कोई तीइ गुणा।
9 கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கவேண்டும் என்றார்.
जो समजी सकोआ से तिजी खे त्यानो साथे सुणो और मानी बी लओ।”
10 ௧0 அப்பொழுது, சீடர்கள் அவரிடத்தில் வந்து: ஏன் அவர்களோடு உவமைகளாக பேசுகிறீர் என்று கேட்டார்கள்.
चेलेया नेड़े आयी की तिना खे बोलेया, “तुसे उदारणा रे लोका साथे गल्ला कऊँ करोए?”
11 ௧௧ அவர்களுக்கு அவர் மறுமொழியாக: பரலோகராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, அவர்களுக்கோ அருளப்படவில்லை.
यीशुए तिना खे जवाब दित्तेया, “तुसा खे तो स्वर्गो रे राज्य रे पेतो री समज दित्ती रिये, पर तिना खे निए।
12 ௧௨ உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவன் எவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.
कऊँकि जेसगे आए तेसखे ओर बी देणा, तेबे तेसगे बऊत ऊई जाणा। पर जेसगे कुछ पनिए, तेसगे जो कुछ बी आए से बी लई लया जाणा।
13 ௧௩ அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் கேளாதவர்களாகவும், உணர்ந்துகொள்ளாதவர்களாகவும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடு பேசுகிறேன்.
आऊँ तिना साथे उदारणा रे इजी री खातर गल्ला करूँआ, कऊँकि सेयो, देखदे ऊए पनि देखदे, सुणदे ऊए पनि सुणदे और ना समजदे।
14 ௧௪ ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது; அதாவது: காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்; கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள்.
तिना रे बारे रे यशायाह भविष्यबक्ते री ये भविष्यबाणी पूरी ओई, “‘तुसा कानो ते तो सुणना, पर समजणा नि और आखी ते तो देखणा, पर दिशणा नि।
15 ௧௫ இந்த மக்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாகக் கேட்டு, தங்களுடைய கண்களை மூடிக்கொண்டார்கள்’ என்பதே.
कऊँकि इना लोका रा मन मोटा ऊईगा रा और सेयो कानो ते ऊच्चा सुणोए, तिने आपणी आखी बन्द करी ती रिया। केथी एड़ा नि ओ कि सेयो, आखी ते देखणे लगो, कानो ते सुणने लगो, मनो ते समजणे लगो, और फिरी जाओ और आऊँ तिना खे ठीक करी देऊँ।’
16 ௧௬ உங்களுடைய கண்கள் காண்கிறதினாலும், உங்களுடைய காதுகள் கேட்கிறதினாலும், அவைகள் பாக்கியமுள்ளவைகள்.
“पर धन्य ए तुसा री आखी जो देखोईया और तुसा रे कान, जो सुणोए।
17 ௧௭ அநேக தீர்க்கதரிசிகளும் நீதிமான்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்களென்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
कऊँकि आऊँ तुसा खे सच बोलूँआ कि बऊत सारे भविष्यबक्ते और तर्मी लोके चाया कि जो गल्ला तुसे देखोए, तिना देखो, पर देखी नि सके, और जो गल्ला तुसे सुणोए, सुणो, पर सुणी नि सके।
18 ௧௮ ஆகவே, விதைக்கிறவனைப்பற்றிய உவமையைக் கேளுங்கள்.
“एबे तुसे बाणे वाल़े रे उदारणो रा मतलब सुणो।
19 ௧௯ ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது, சாத்தான் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்; அவனே வழியருகே விதைக்கப்பட்டவன்.
जो कोई परमेशरो रा वचन सुणी की नि समजदा, तेसरे मनो रे जो कुछ बाई राखेया था, तेसखे से दुष्ट आयी की छुड़ाई की लई जाओआ। ये सेईए जो बाटा रे कनारे बाई राखेया था।
20 ௨0 கற்பாறை இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக்கேட்டு, உடனே அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளுகிறவன்;
जो सापड़ी पाँदली जमीना पाँदे बाई राखेया था, ये से ए, जो वचन सुणी की फटाफट खुशिया साथे मानी लओआ।
21 ௨௧ ஆனாலும் தனக்குள்ளே வேரில்லாதவனாக, கொஞ்சக்காலம்மட்டும் நிலைத்திருப்பான்; வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைவான்.
पर आपू रे जड़ ना राखणे री बजअ ते से, थोड़े ई दिनो खे ए और जेबे वचनो री बजअ ते क्ल़ेश या बुरा ओआ, तो चट ई ठोकर खाई लओआ।
22 ௨௨ முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாக இருந்து, உலகத்தின் கவலையும் செல்வத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப்போடுகிறதினால், அவனும் பலனற்றுப்போவான். (aiōn g165)
जो जाड़ो रे बाया, से ये ए, जो वचनो खे तो सुणोआ, पर दुनिया री चिन्ता, धनो रा तोखा, वचनो खे दबाई देओआ और से फल नि ल्याऊँदा। (aiōn g165)
23 ௨௩ நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாக இருந்து, நூறுமடங்காகவும் அறுபதுமடங்காகவும் முப்பதுமடங்காகவும் பலன் தருவான் என்றார்.
जो अच्छी जमीना रे बाया, से ये जो वचनो खे सुणी की समजोआ और फल ल्याओआ, कोई सौ गुणा, कोई साठ गुणा और कोई तीइ गुणा।”
24 ௨௪ வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் தன் நிலத்தில் நல்ல விதையை விதைத்த மனிதனுக்கு ஒப்பாக இருக்கிறது.
यीशुए तिना खे एक और उदारण दित्तेया, “स्वर्गो रा राज्य, तेस जिम्मीदारो जेड़ा ए, जिने आपणे डोरूआ रे अच्छा बीज बाया।
25 ௨௫ மனிதர்கள் தூங்கும்போது அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப்போனான்.
पर जेबे लोक सऊणे लगी रे थे, तेबे तेसरा दुश्मण आया और कणका बीचे जंगल़ी बीज बाई की चली गा।
26 ௨௬ பயிரானது வளர்ந்து கதிர்விட்டபோது, களைகளும் காணப்பட்டது.
जेबे लूंग आयी और सिल्ले लगे, तेबे जंगल़ी दाणेया री डाल़ी बी दिशणे लगे।
27 ௨௭ வீட்டெஜமானுடைய வேலைக்காரர்கள் அவனிடத்தில் வந்து: ஆண்டவனே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? பின்னே அதில் களைகள் எப்படி உண்டானது என்றார்கள்.
तेबे कअरो रे दासे आयी की तेसखे बोलया, ‘ओ मालक! क्या तुसे आपणे डोरूआ रे टंगो रा बीज नि था बाए रा? तेबे जंगल़ी दाणे रिया डाल़िया तेते बीचे केथा ते आईया?’
28 ௨௮ அதற்கு அவன்: சத்துரு அதைச் செய்தான் என்றான். அப்பொழுது வேலைக்காரர்கள்: நாங்கள்போய் அவைகளைப் பிடுங்கிப்போட உமக்கு விருப்பமா? என்று கேட்டார்கள்.
तिने तिना खे बोलेया, ‘ये तो केसी दुश्मणो रा काम ए।’ तेबे जो दास थे, तिने तेसखे बोलेया, ‘क्या तेरी इच्छा ए कि आसे जाई की तिना खे कट्ठा करी देऊँ?’
29 ௨௯ அதற்கு அவன்: வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையும்சேர்த்து வேரோடு பிடுங்காதபடிக்கு, இரண்டையும் அறுப்புமட்டும் வளரவிடுங்கள்.
तिने बोलेया, ‘ना, एड़ा नि ओ कि जंगल़ी दाणेया री डाल़िया खे कट्ठे करदे-करदे, कणका खे बी पटी देयो।
30 ௩0 அறுப்புக்காலத்தில் நான் அறுக்கிறவர்களைப் பார்த்து: முதலாவது, களைகளைப் பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்பேன் என்று சொன்னான் என்றார்.
बाडणे रे बखतो तक तिना दूँईं खे साथे-साथे बड़ने देयो और जेबे बाडणे रा बखत आऊणा तेबे मां बाडणे वाल़े खे बोलणा कि जंगल़ी दाणे कट्ठे करी की फूकणे खे, तिना रे बिंडे बानी देयो, और कणका खे मेरे पण्डारो रे कट्ठा करी देयो।’”
31 ௩௧ வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் கடுகுவிதைக்கு ஒப்பாக இருக்கிறது; அதை ஒரு மனிதன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான்.
यीशुए तिना खे एक और उदारण दित्तेया, “स्वर्गो रा राज्य अऊरिया रे एक दाणे जेड़ा ए, जो एकी मांणूए लया और आपणे डोरूआ रे बीजी ता।
32 ௩௨ அது எல்லாவிதைகளிலும் சிறியதாயிருந்தும், வளரும்போது, எல்லாச் செடிகளிலும் பெரியதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாகும் என்றார்.
से सबी बीजो ते तो छोटा ए, पर जेबे से बढ़ोआ, तेबे सबी सागो-पातो ते बड़ा ओआ और एड़ा डाल़ ऊई जाओआ कि सर्गो रे पंछी आयी की तेतेरी डाल़िया रे आपणा बसेरा करोए।”
33 ௩௩ வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் புளித்த மாவிற்கு ஒப்பாக இருக்கிறது; அதை ஒரு பெண் எடுத்து, முழுவதும் புளிக்கும்வரைக்கும், மூன்றுபடி மாவிலே பிசைந்துவைத்தாள் என்றார்.
तिने एक ओर उदारण सुणाया, “स्वर्गो रा राज्य, सजेड़े जेड़ा ए, जो एकी जवाणसे लया और बीइ किलो ते जादा आटे रे गूँदी ता और ऊँदे-ऊँदे सारा आटा सजेड़ा ऊईगा।”
34 ௩௪ இவைகளையெல்லாம் இயேசு மக்களோடு உவமைகளாகப் பேசினார்; உவமைகளில்லாமல், அவர்களோடு பேசவில்லை.
ये सब गल्ला यीशुए लोका खे उदारणा रे बोलिया और बिना उदारणो ते सेयो तिना खे कुछ नि बोलो थे।
35 ௩௫ என் வாயை உவமைகளினால் திறப்பேன்; உலகத்தோற்றமுதல் மறைபொருளானவைகளை வெளிப்படுத்துவேன் என்று தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
ताकि जो वचन भविष्यबक्ते बोलेया था, से पूरा ओ कि “मां उदारण बोलणे खे आपणा मूँ खोलणा; मां सेयो गल्ला बोलणिया, जो दुनिया री शुरूआता ते गुप्त ए।”
36 ௩௬ அப்பொழுது இயேசு மக்களை அனுப்பிவிட்டு வீட்டிற்குப் போனார். அவருடைய சீடர்கள் அவரிடத்தில் வந்து: நிலத்தின் களைகளைப்பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிச்சொல்லவேண்டுமென்று கேட்டார்கள்.
तेबे यीशु पीड़ा खे छाडी की कअरे आए, तेबे तिना रे चेलेया तिना गे आयी की बोलेया, “डोरूआ रे जंगल़ी दाणे रा उदारण आसा खे समजयाई देओ।”
37 ௩௭ அவர் மறுமொழியாக: நல்ல விதையை விதைக்கிறவன் மனிதகுமாரன்;
यीशुए तिना खे जवाब दित्तेया, “अच्छे बीज बाणे वाल़ा माणूं रा पुत्र ए।
38 ௩௮ நிலம் உலகம்; நல்ல விதை ராஜ்யத்தின் பிள்ளைகள்; களைகள் சாத்தானுடைய பிள்ளைகள்;
डोरू दुनिया रे लोक ए, अच्छा बीज राज्य रे से लोक ए जिना पाँदे परमेशर राज करने ते खुश ए और जंगल़ी बीज, दुष्टो री से ल्वाद ए जो शैतानो री आज्ञा मानी की काम करोए।
39 ௩௯ அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு; அறுவடை உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள். (aiōn g165)
जिने दुश्मणे सेयो बीजे, से शैतान ए; बडाई दुनिया रा अंत ए और बाडणे वाल़े स्वर्गदूत ए। (aiōn g165)
40 ௪0 ஆதலால், களைகளைச்சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இந்த உலகத்தின் முடிவிலே நடக்கும். (aiōn g165)
तेबे जिंयाँ जंगल़ी दाणे कट्ठे करोए और फूकी देओए, तेड़ा ई दुनिया रे अंतो रे ऊणा। (aiōn g165)
41 ௪௧ மனிதகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற எல்லா இடறல்களையும் அக்கிரமம் செய்கிறவர்களையும் சேர்த்து,
मां माणूं रे पुत्रो आपणे स्वर्गदूत पेजणे, तिना तेसरे राज्य रे, सब, जो ठोकरा री बजअ ओ ए और पाप करने वाल़े, कट्ठे करने
42 ௪௨ அவர்களை அக்கினிச்சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.
और सेयो आगी रे कुण्डो रे सेटी देणे, जेती रोणा और दाँद किरड़ना ई ऊणा।
43 ௪௩ அப்பொழுது, நீதிமான்கள் தங்களுடைய பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கவேண்டும்.
तेस बखते तर्मी आपणे पिते रे राज्य रे सूरजो जेड़े चमकणे, जो समजी सकोआ से तिजी खे त्यानो साथे सुणो और मानी बी लओ।
44 ௪௪ அன்றியும், பரலோகராஜ்யம் நிலத்தில் புதைத்திருக்கிற புதையலுக்கு ஒப்பாக இருக்கிறது; அதை ஒரு மனிதன் பார்த்து, மறைத்து, அதைப்பற்றிய மகிழ்ச்சியினாலேபோய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தை வாங்குகிறான்.
“स्वर्गो रा राज्य डोरूआ रे लूके रे खजाने जेड़ा ए, जो केसी मांणूए खे मिलेया और तिने लकोईता, तेबे तिने खुश ई की आपणा सब कुछ बेची ता और से डोरू खरीदी ला।
45 ௪௫ மேலும், பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத்தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாக இருக்கிறது.
“स्वर्गो रा राज्य एक बपारिए जेड़ा ए, जो खरे मोतिए री टोल़ा रे था।
46 ௪௬ அவன் விலையுயர்ந்த ஒரு முத்தைப் பார்த்து, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதை வாங்குகிறான்.
जेबे तेसखे एक किमती मोती मिली गा, तेबे तिने जाई की आपणा सब कुछ बेची ता और से मोती खरीदी ला।
47 ௪௭ அன்றியும், பரலோகராஜ்யம் கடலிலே போடப்பட்டு, எல்லாவிதமான மீன்களையும் சேர்த்து வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பாக இருக்கிறது.
“फेर, स्वर्गो रा राज्य तेस बड़े जाल़ो जेड़ा ए, जो समुद्रो रे पाया और हर प्रकारा रिया मछलिया तिदे आयी गिया
48 ௪௮ அது நிறைந்தபோது, மீனவர்கள் அதைக் கரைக்கு இழுத்து, உட்கார்ந்து, நல்லவைகளைக் கூடைகளில் சேர்த்து, ஆகாதவைகளை எறிந்துவிடுவார்கள்.
और जेबे जाल़ फरी गा, तेबे मछली पकड़ने वाल़े तिजी खे कनारे पाँदे खिंजी की ली आए और जो अच्छी-अच्छी मछलिया थिया सेयो पांडे रे राखी तिया और जो नकम्मिया थिया सेयो सेटी तिया।
49 ௪௯ இப்படியே உலகத்தின் முடிவிலே நடக்கும். தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து, (aiōn g165)
दुनिया रे अंतो रे एड़ा ई ऊणा, तेबे स्वर्गदूता आयी की दुष्ट तर्मिया ते लग करने, (aiōn g165)
50 ௫0 அவர்களை அக்கினிச்சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றார்.
और सेयो आगी रे कुण्डो रे सेटी देणे। तेती रोणा और दाँद किरड़ना ई ऊणा।
51 ௫௧ பின்பு, இயேசு அவர்களைப் பார்த்து: இவைகளையெல்லாம் அறிந்துகொண்டீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம், அறிந்துகொண்டோம் ஆண்டவரே, என்றார்கள்.
“क्या तुसे यो सब गल्ला समजिया?” तिने यीशुए खे बोलेया, “आ।”
52 ௫௨ அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: இப்படி இருக்கிறபடியால், பரலோகராஜ்யத்திற்கு அடுத்தவைகளில் உபதேசிக்கப்பட்டுத் தேறின வேதபண்டிதன் எவனும் தன் பொக்கிஷத்திலிருந்து புதியவைகளையும் பழையவைகளையும் எடுத்துக்கொடுக்கிற வீட்டெஜமானாகிய மனிதனுக்கு ஒப்பாக இருக்கிறான் என்றார்.
तेबे यीशुए तिना खे बोलेया, “हर एक शास्त्री, जो स्वर्गो रे राज्य रा चेला बणी रा, तेस करेलू मांणूए जेड़ा ए, जो आपणे पण्डारो ते नईया और पुराणिया चीजा निकयाल़ोआ।”
53 ௫௩ இயேசு இந்த உவமைகளைச் சொல்லிமுடித்தபின்பு, அந்த இடத்தைவிட்டு,
जेबे यीशु इना सारे उदारणा बोली चुके, तेबे सेयो तेथा ते चली गे।
54 ௫௪ தாம் வளர்ந்த ஊருக்கு வந்து, அவர்களுடைய ஜெப ஆலயத்திலே அவர்களுக்கு உபதேசம் செய்தார். அவர்கள் ஆச்சரியப்பட்டு: இவனுக்கு இந்த ஞானமும் பலத்த செய்கைகளும் எப்படி வந்தது?
तेबे आपणे नगरो रे आयी की तिना रे प्रार्थना रे कअरो रे तिना खे एड़ा उपदेश लगे देणे कि सेयो हैरान ऊई की तिना खे बोलणे लगे, “इना खे इतणा ज्ञान और सामर्थो रे काम केथा ते मिले?
55 ௫௫ இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு, யோசே, சீமோன், யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர்கள் அல்லவா?
क्या ये मिस्त्रियो रा पाऊ निए? क्या इना री आम्मा रा नाओं मरियम निए और पाईयो रा नाओं याकूब, यूसुफ, शमोन और यहूदा निए?
56 ௫௬ இவன் சகோதரிகளெல்லோரும் நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? இப்படியிருக்க, இதெல்லாம் இவனுக்கு எப்படி வந்தது? என்று சொல்லி,
क्या इना रिया सारिया बईणा आसा बीचे नि रंदिया? तेबे इना खे ये सब कुछ केथा ते मिलेया?”
57 ௫௭ அவரைக்குறித்து இடறலடைந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் அவமதிக்கப்படமாட்டான் என்றார்.
यीशुए तिना री बजअ ते ठोकर खाई पर तिने तिना खे बोलेया, “भविष्यबक्ते रा आपणे देश और आपणे कअरो खे छाडी की ओरथी केथी बी नरादर नि ऊँदा।”
58 ௫௮ அவர்களுக்கு விசுவாசம் இல்லாததினால், அவர் அங்கே அதிக அற்புதங்களைச் செய்யவில்லை.
तेबे यीशुए तिना रे अविश्वासो री बजअ ते जादा सामर्था रे काम नि कित्ते।

< மத்தேயு 13 >