< மத்தேயு 11 >
1 ௧ இயேசு தம்முடைய பன்னிரண்டு சீடர்களுக்கும் கட்டளைக் கொடுத்துமுடித்தபின்பு, அவர்களுடைய பட்டணங்களில் உபதேசிக்கவும் பிரசங்கிக்கவும் அந்த இடத்தைவிட்டுப் போனார்.
อิตฺถํ ยีศุ: สฺวทฺวาทศศิษฺยาณามาชฺญาปนํ สมาปฺย ปุเร ปุร อุปเทษฺฏุํ สุสํวาทํ ปฺรจารยิตุํ ตตฺสฺถานาตฺ ปฺรตเสฺถฯ
2 ௨ அந்தநேரத்தில் காவலிலிருந்த யோவான் கிறிஸ்துவின் செயல்களைக்குறித்துக் கேள்விப்பட்டு, தன் சீடர்களில் இரண்டுபேரை அழைத்து:
อนนฺตรํ โยหนฺ การายำ ติษฺฐนฺ ขฺริษฺฏสฺย กรฺมฺมณำ วารฺตฺตํ ปฺราปฺย ยสฺยาคมนวารฺตฺตาสีตฺ เสอว กึ ตฺวํ? วา วยมนฺยมฺ อเปกฺษิษฺยามเห?
3 ௩ வருகிறவர் நீர்தானா, அல்லது வேறொருவர் வருவதற்காக நாங்கள் காத்திருக்கவேண்டுமா? என்று அவரிடத்தில் கேட்கும்படி அனுப்பினான்.
เอตตฺ ปฺรษฺฏุํ นิเชา เทฺวา ศิเษฺยา ปฺราหิโณตฺฯ
4 ௪ இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நீங்கள் கேட்கிறதையும் காண்கிறதையும் யோவானிடம்போய் அறிவியுங்கள்;
ยีศุ: ปฺรตฺยโวจตฺ, อนฺธา เนตฺราณิ ลภนฺเต, ขญฺจา คจฺฉนฺติ, กุษฺฐิน: สฺวสฺถา ภวนฺติ, พธิรา: ศฺฤณฺวนฺติ, มฺฤตา ชีวนฺต อุตฺติษฺฐนฺติ, ทริทฺราณำ สมีเป สุสํวาท: ปฺรจารฺยฺยต,
5 ௫ குருடர்கள் பார்வையடைகிறார்கள், முடவர்கள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர்கள் கேட்கிறார்கள், மரித்தோர் உயிரோடு எழுந்திருக்கிறார்கள், தரித்திரர்களுக்கு நற்செய்தி பிரசங்கிக்கப்படுகிறது.
เอตานิ ยทฺยทฺ ยุวำ ศฺฤณุถ: ปศฺยถศฺจ คตฺวา ตทฺวารฺตฺตำ โยหนํ คทตํฯ
6 ௬ என்னிடத்தில் இடறலடையாமலிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார்.
ยสฺยาหํ น วิฆฺนีภวามิ, เสอว ธนฺย: ฯ
7 ௭ அவர்கள் போனபின்பு, இயேசு யோவானைக்குறித்து மக்களுக்குச் சொன்னது என்னவென்றால்: எதைப்பார்க்க வனாந்திரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ?
อนนฺตรํ ตโย: ปฺรสฺถิตโย รฺยีศุ โรฺยหนมฺ อุทฺทิศฺย ชนานฺ ชคาท, ยูยํ กึ ทฺรษฺฏุํ วหิรฺมเธฺยปฺรานฺตรมฺ อคจฺฉต? กึ วาเตน กมฺปิตํ นลํ?
8 ௮ இல்லையென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? மெல்லிய உடை அணிந்திருந்த மனிதனையோ? மெல்லிய உடை அணிந்திருக்கிறவர்கள் அரசர் மாளிகைகளில் இருக்கிறார்கள்.
วา กึ วีกฺษิตุํ วหิรฺคตวนฺต: ? กึ ปริหิตสูกฺษฺมวสนํ มนุชเมกํ? ปศฺยต, เย สูกฺษฺมวสนานิ ปริทธติ, เต ราชธานฺยำ ติษฺฐนฺติฯ
9 ௯ இல்லையென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியைவிட மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ตรฺหิ ยูยํ กึ ทฺรษฺฏุํ พหิรคมต, กิเมกํ ภวิษฺยทฺวาทินํ? ตเทว สตฺยํฯ ยุษฺมานหํ วทามิ, ส ภวิษฺยทฺวาทิโนปิ มหานฺ;
10 ௧0 அதெப்படியெனில்: இதோ, நான் என் தூதுவனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்குமுன்னேபோய், உமது வழியை ஆயத்தம் செய்வான்’ என்று வேதத்தில் எழுதப்பட்டவன் இவன்தான்.
ยต: , ปศฺย สฺวกียทูโตยํ ตฺวทเคฺร เปฺรษฺยเต มยาฯ ส คตฺวา ตว ปนฺถานํ สฺมยกฺ ปริษฺกริษฺยติ๚ เอตทฺวจนํ ยมธิ ลิขิตมาเสฺต โส'ยํ โยหนฺฯ
11 ௧௧ பெண்களிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைவிட பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை; ஆனாலும், பரலோகராஜ்யத்தில் சிறியவனாக இருக்கிறவன் அவனைவிட பெரியவனாக இருக்கிறானென்று உங்களுக்கு உண்மையாகவே சொல்லுகிறேன்.
อปรํ ยุษฺมานหํ ตถฺยํ พฺรวีมิ, มชฺชยิตุ โรฺยหน: เศฺรษฺฐ: โกปิ นารีโต นาชายต; ตถาปิ สฺวรฺคราชฺยมเธฺย สรฺเวฺวโภฺย ย: กฺษุทฺร: ส โยหน: เศฺรษฺฐ: ฯ
12 ௧௨ யோவான்ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் பரலோகராஜ்யம் பலவந்தம் செய்யப்படுகிறது; பலவந்தம் செய்கிறவர்கள் அதைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள்.
อปรญฺจ อา โยหโน'ทฺย ยาวตฺ สฺวรฺคราชฺยํ พลาทากฺรานฺตํ ภวติ อากฺรมินศฺจ ชนา พเลน ตทธิกุรฺวฺวนฺติฯ
13 ௧௩ நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகள் அனைவரும் யோவான்வரைக்கும் தீர்க்கதரிசனம் சொன்னதுண்டு.
ยโต โยหนํ ยาวตฺ สรฺวฺวภวิษฺยทฺวาทิภิ รฺวฺยวสฺถยา จ อุปเทศ: ปฺรากาศฺยตฯ
14 ௧௪ நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன்தான்.
ยทิ ยูยมิทํ วากฺยํ คฺรหีตุํ ศกฺนุถ, ตรฺหิ เศฺรย: , ยสฺยาคมนสฺย วจนมาเสฺต โส'ยมฺ เอลิย: ฯ
15 ௧௫ கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கவேண்டும்.
ยสฺย โศฺรตุํ กรฺเณา สฺต: ส ศฺฤโณตุฯ
16 ௧௬ இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்? சந்தைவெளிகளில் உட்கார்ந்து, தங்களுடைய தோழரைப் பார்த்து:
เอเต วิทฺยมานชนา: ไก รฺมโยปมียนฺเต? เย พาลกา หฏฺฏ อุปวิศฺย สฺวํ สฺวํ พนฺธุมาหูย วทนฺติ,
17 ௧௭ உங்களுக்காகக் குழல் ஊதினோம், நீங்கள் நடனமாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் மாரடிக்கவில்லை என்று குறைசொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாக இருக்கிறது.
วยํ ยุษฺมากํ สมีเป วํศีรวาทยาม, กินฺตุ ยูยํ นานฺฤตฺยต; ยุษฺมากํ สมีเป จ วยมโรทิม, กินฺตุ ยูยํ น วฺยลปต, ตาทฺฤไศ รฺพาลไกสฺต อุปมายิษฺยนฺเตฯ
18 ௧௮ எப்படியென்றால், யோவான் உபவாசிக்கிறவனாகவும் திராட்சைரசம் குடிக்காதவனாகவும் வந்தான்; அதற்கு அவர்கள்: அவன் பிசாசு பிடித்திருக்கிறவன்என்றார்கள்.
ยโต โยหนฺ อาคตฺย น ภุกฺตวานฺ น ปีตวำศฺจ, เตน โลกา วทนฺติ, ส ภูตคฺรสฺต อิติฯ
19 ௧௯ உண்கிறவராகவும் குடிக்கிறவராகவும் வந்தார்; அதற்கு அவர்கள்: இதோ, உணவுப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனிதன், வரி வசூலிப்பவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன் என்கிறார்கள். ஆனாலும், ஞானமானது அதன் பிள்ளைகளால் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் என்றார்.
มนุชสุต อาคตฺย ภุกฺตวานฺ ปีตวำศฺจ, เตน โลกา วทนฺติ, ปศฺยต เอษ โภกฺตา มทฺยปาตา จณฺฑาลปาปินำ พนฺธศฺจ, กินฺตุ ชฺญานิโน ชฺญานวฺยวหารํ นิรฺโทษํ ชานนฺติฯ
20 ௨0 அப்பொழுது, தமது பலத்த செய்கைகளில், அதிகமானவைகளைச் செய்யக்கண்ட பட்டணங்கள் மனந்திரும்பாமற்போனபடியினால் அவைகளை அவர் கடிந்துகொள்ளத் தொடங்கினார்:
ส ยตฺร ยตฺร ปุเร พหฺวาศฺจรฺยฺยํ กรฺมฺม กฺฤตวานฺ, ตนฺนิวาสินำ มน: ปราวฺฤตฺตฺยภาวาตฺ ตานิ นคราณิ ปฺรติ หนฺเตตฺยุกฺตา กถิตวานฺ,
21 ௨௧ கோராசீனே! உனக்கு ஐயோ, பெத்சாயிதாவே! உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால், அப்பொழுதே இரட்டுடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து மனந்திரும்பியிருப்பார்கள்.
หา โกราสีนฺ, หา ไพตฺไสเท, ยุษฺมนฺมเธฺย ยทฺยทาศฺจรฺยฺยํ กรฺมฺม กฺฤตํ ยทิ ตตฺ โสรสีโทนฺนคร อการิษฺยต, ตรฺหิ ปูรฺวฺวเมว ตนฺนิวาสิน: ศาณวสเน ภสฺมนิ โจปวิศนฺโต มนำสิ ปราวรฺตฺติษฺยนฺตฯ
22 ௨௨ நியாயத்தீர்ப்புநாளிலே உங்களுக்குச் சம்பவிப்பதைவிட, தீருவிற்கும் சீதோனுக்கும் சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ตสฺมาทหํ ยุษฺมานฺ วทามิ, วิจารทิเน ยุษฺมากํ ทศาต: โสรสีโทโน รฺทศา สหฺยตรา ภวิษฺยติฯ
23 ௨௩ வானம்வரை உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளம்வரை தாழ்த்தப்படுவாய்; உன்னில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமிலே செய்யப்பட்டிருந்ததானால், அது இந்தநாள்வரை நிலைத்திருக்கும். (Hadēs )
อปรญฺจ พต กผรฺนาหูมฺ, ตฺวํ สฺวรฺคํ ยาวทุนฺนโตสิ, กินฺตุ นรเก นิกฺเษปฺสฺยเส, ยสฺมาตฺ ตฺวยิ ยานฺยาศฺจรฺยฺยาณิ กรฺมฺมณฺยการิษต, ยทิ ตานิ สิโทมฺนคร อการิษฺยนฺต, ตรฺหิ ตททฺย ยาวทสฺถาสฺยตฺฯ (Hadēs )
24 ௨௪ நியாயத்தீர்ப்புநாளிலே உனக்குச் சம்பவிப்பதைவிட, சோதோம் நாட்டிற்குச் சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
กินฺตฺวหํ ยุษฺมานฺ วทามิ, วิจารทิเน ตว ทณฺฑต: สิโทโม ทณฺโฑ สหฺยตโร ภวิษฺยติฯ
25 ௨௫ அந்தச் சமயத்திலே இயேசு சொன்னது: பிதாவே! பரலோகத்திற்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, சிறுவர்களுக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.
เอตสฺมินฺเนว สมเย ยีศุ: ปุนรุวาจ, เห สฺวรฺคปฺฤถิโวฺยเรกาธิปเต ปิตสฺตฺวํ ชฺญานวโต วิทุษศฺจ โลกานฺ ปฺรเตฺยตานิ น ปฺรกาศฺย พาลกานฺ ปฺรติ ปฺรกาศิตวานฺ, อิติ เหโตสฺตฺวำ ธนฺยํ วทามิฯ
26 ௨௬ ஆம், பிதாவே! இப்படிச்செய்வது உம்முடைய உயர்ந்த உள்ளத்திற்குப் பிரியமாக இருந்தது.
เห ปิต: , อิตฺถํ ภเวตฺ ยต อิทํ ตฺวทฺฤษฺฏาวุตฺตมํฯ
27 ௨௭ எல்லாம் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதாவைத்தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்குப் பிதாவை வெளிப்படுத்த விருப்பமாக இருக்கிறாரோ அவனைத்தவிர, வேறொருவனும் பிதாவை அறியமாட்டான்.
ปิตฺรา มยิ สรฺวฺวาณิ สมรฺปิตานิ, ปิตรํ วินา โกปิ ปุตฺรํ น ชานาติ, ยานฺ ปฺรติ ปุเตฺรณ ปิตา ปฺรกาศฺยเต ตานฺ วินา ปุตฺราทฺ อนฺย: โกปิ ปิตรํ น ชานาติฯ
28 ௨௮ வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.
เห ปริศฺรานฺตา ภารากฺรานฺตาศฺจ โลกา ยูยํ มตฺสนฺนิธิมฺ อาคจฺฉต, อหํ ยุษฺมานฺ วิศฺรมยิษฺยามิฯ
29 ௨௯ நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாக இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்களுடைய ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.
อหํ กฺษมณศีโล นมฺรมนาศฺจ, ตสฺมาตฺ มม ยุคํ เสฺวษามุปริ ธารยต มตฺต: ศิกฺษธฺวญฺจ, เตน ยูยํ เสฺว เสฺว มนสิ วิศฺรามํ ลปฺสฺยทฺเหฺพฯ
30 ௩0 என் நுகம் எளிதாகவும், என் சுமை இலகுவாகவும் இருக்கிறது என்றார்.
ยโต มม ยุคมฺ อนายาสํ มม ภารศฺจ ลฆุ: ฯ