< மத்தேயு 11 >

1 இயேசு தம்முடைய பன்னிரண்டு சீடர்களுக்கும் கட்டளைக் கொடுத்துமுடித்தபின்பு, அவர்களுடைய பட்டணங்களில் உபதேசிக்கவும் பிரசங்கிக்கவும் அந்த இடத்தைவிட்டுப் போனார்.
ਇੱਥੰ ਯੀਸ਼ੁਃ ਸ੍ਵਦ੍ਵਾਦਸ਼ਸ਼ਿਸ਼਼੍ਯਾਣਾਮਾਜ੍ਞਾਪਨੰ ਸਮਾਪ੍ਯ ਪੁਰੇ ਪੁਰ ਉਪਦੇਸ਼਼੍ਟੁੰ ਸੁਸੰਵਾਦੰ ਪ੍ਰਚਾਰਯਿਤੁੰ ਤਤ੍ਸ੍ਥਾਨਾਤ੍ ਪ੍ਰਤਸ੍ਥੇ|
2 அந்தநேரத்தில் காவலிலிருந்த யோவான் கிறிஸ்துவின் செயல்களைக்குறித்துக் கேள்விப்பட்டு, தன் சீடர்களில் இரண்டுபேரை அழைத்து:
ਅਨਨ੍ਤਰੰ ਯੋਹਨ੍ ਕਾਰਾਯਾਂ ਤਿਸ਼਼੍ਠਨ੍ ਖ੍ਰਿਸ਼਼੍ਟਸ੍ਯ ਕਰ੍ੰਮਣਾਂ ਵਾਰ੍ੱਤੰ ਪ੍ਰਾਪ੍ਯ ਯਸ੍ਯਾਗਮਨਵਾਰ੍ੱਤਾਸੀਤ੍ ਸਏਵ ਕਿੰ ਤ੍ਵੰ? ਵਾ ਵਯਮਨ੍ਯਮ੍ ਅਪੇਕ੍ਸ਼਼ਿਸ਼਼੍ਯਾਮਹੇ?
3 வருகிறவர் நீர்தானா, அல்லது வேறொருவர் வருவதற்காக நாங்கள் காத்திருக்கவேண்டுமா? என்று அவரிடத்தில் கேட்கும்படி அனுப்பினான்.
ਏਤਤ੍ ਪ੍ਰਸ਼਼੍ਟੁੰ ਨਿਜੌ ਦ੍ਵੌ ਸ਼ਿਸ਼਼੍ਯੌ ਪ੍ਰਾਹਿਣੋਤ੍|
4 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நீங்கள் கேட்கிறதையும் காண்கிறதையும் யோவானிடம்போய் அறிவியுங்கள்;
ਯੀਸ਼ੁਃ ਪ੍ਰਤ੍ਯਵੋਚਤ੍, ਅਨ੍ਧਾ ਨੇਤ੍ਰਾਣਿ ਲਭਨ੍ਤੇ, ਖਞ੍ਚਾ ਗੱਛਨ੍ਤਿ, ਕੁਸ਼਼੍ਠਿਨਃ ਸ੍ਵਸ੍ਥਾ ਭਵਨ੍ਤਿ, ਬਧਿਰਾਃ ਸ਼੍ਰੁʼਣ੍ਵਨ੍ਤਿ, ਮ੍ਰੁʼਤਾ ਜੀਵਨ੍ਤ ਉੱਤਿਸ਼਼੍ਠਨ੍ਤਿ, ਦਰਿਦ੍ਰਾਣਾਂ ਸਮੀਪੇ ਸੁਸੰਵਾਦਃ ਪ੍ਰਚਾਰ੍ੱਯਤ,
5 குருடர்கள் பார்வையடைகிறார்கள், முடவர்கள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர்கள் கேட்கிறார்கள், மரித்தோர் உயிரோடு எழுந்திருக்கிறார்கள், தரித்திரர்களுக்கு நற்செய்தி பிரசங்கிக்கப்படுகிறது.
ਏਤਾਨਿ ਯਦ੍ਯਦ੍ ਯੁਵਾਂ ਸ਼੍ਰੁʼਣੁਥਃ ਪਸ਼੍ਯਥਸ਼੍ਚ ਗਤ੍ਵਾ ਤਦ੍ਵਾਰ੍ੱਤਾਂ ਯੋਹਨੰ ਗਦਤੰ|
6 என்னிடத்தில் இடறலடையாமலிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார்.
ਯਸ੍ਯਾਹੰ ਨ ਵਿਘ੍ਨੀਭਵਾਮਿ, ਸਏਵ ਧਨ੍ਯਃ|
7 அவர்கள் போனபின்பு, இயேசு யோவானைக்குறித்து மக்களுக்குச் சொன்னது என்னவென்றால்: எதைப்பார்க்க வனாந்திரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ?
ਅਨਨ੍ਤਰੰ ਤਯੋਃ ਪ੍ਰਸ੍ਥਿਤਯੋ ਰ੍ਯੀਸ਼ੁ ਰ੍ਯੋਹਨਮ੍ ਉੱਦਿਸ਼੍ਯ ਜਨਾਨ੍ ਜਗਾਦ, ਯੂਯੰ ਕਿੰ ਦ੍ਰਸ਼਼੍ਟੁੰ ਵਹਿਰ੍ਮਧ੍ਯੇਪ੍ਰਾਨ੍ਤਰਮ੍ ਅਗੱਛਤ? ਕਿੰ ਵਾਤੇਨ ਕਮ੍ਪਿਤੰ ਨਲੰ?
8 இல்லையென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? மெல்லிய உடை அணிந்திருந்த மனிதனையோ? மெல்லிய உடை அணிந்திருக்கிறவர்கள் அரசர் மாளிகைகளில் இருக்கிறார்கள்.
ਵਾ ਕਿੰ ਵੀਕ੍ਸ਼਼ਿਤੁੰ ਵਹਿਰ੍ਗਤਵਨ੍ਤਃ? ਕਿੰ ਪਰਿਹਿਤਸੂਕ੍ਸ਼਼੍ਮਵਸਨੰ ਮਨੁਜਮੇਕੰ? ਪਸ਼੍ਯਤ, ਯੇ ਸੂਕ੍ਸ਼਼੍ਮਵਸਨਾਨਿ ਪਰਿਦਧਤਿ, ਤੇ ਰਾਜਧਾਨ੍ਯਾਂ ਤਿਸ਼਼੍ਠਨ੍ਤਿ|
9 இல்லையென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியைவிட மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ਤਰ੍ਹਿ ਯੂਯੰ ਕਿੰ ਦ੍ਰਸ਼਼੍ਟੁੰ ਬਹਿਰਗਮਤ, ਕਿਮੇਕੰ ਭਵਿਸ਼਼੍ਯਦ੍ਵਾਦਿਨੰ? ਤਦੇਵ ਸਤ੍ਯੰ| ਯੁਸ਼਼੍ਮਾਨਹੰ ਵਦਾਮਿ, ਸ ਭਵਿਸ਼਼੍ਯਦ੍ਵਾਦਿਨੋਪਿ ਮਹਾਨ੍;
10 ௧0 அதெப்படியெனில்: இதோ, நான் என் தூதுவனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்குமுன்னேபோய், உமது வழியை ஆயத்தம் செய்வான்’ என்று வேதத்தில் எழுதப்பட்டவன் இவன்தான்.
ਯਤਃ, ਪਸ਼੍ਯ ਸ੍ਵਕੀਯਦੂਤੋਯੰ ਤ੍ਵਦਗ੍ਰੇ ਪ੍ਰੇਸ਼਼੍ਯਤੇ ਮਯਾ| ਸ ਗਤ੍ਵਾ ਤਵ ਪਨ੍ਥਾਨੰ ਸ੍ਮਯਕ੍ ਪਰਿਸ਼਼੍ਕਰਿਸ਼਼੍ਯਤਿ|| ਏਤਦ੍ਵਚਨੰ ਯਮਧਿ ਲਿਖਿਤਮਾਸ੍ਤੇ ਸੋ(ਅ)ਯੰ ਯੋਹਨ੍|
11 ௧௧ பெண்களிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைவிட பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை; ஆனாலும், பரலோகராஜ்யத்தில் சிறியவனாக இருக்கிறவன் அவனைவிட பெரியவனாக இருக்கிறானென்று உங்களுக்கு உண்மையாகவே சொல்லுகிறேன்.
ਅਪਰੰ ਯੁਸ਼਼੍ਮਾਨਹੰ ਤਥ੍ਯੰ ਬ੍ਰਵੀਮਿ, ਮੱਜਯਿਤੁ ਰ੍ਯੋਹਨਃ ਸ਼੍ਰੇਸ਼਼੍ਠਃ ਕੋਪਿ ਨਾਰੀਤੋ ਨਾਜਾਯਤ; ਤਥਾਪਿ ਸ੍ਵਰ੍ਗਰਾਜ੍ਯਮਧ੍ਯੇ ਸਰ੍ੱਵੇਭ੍ਯੋ ਯਃ ਕ੍ਸ਼਼ੁਦ੍ਰਃ ਸ ਯੋਹਨਃ ਸ਼੍ਰੇਸ਼਼੍ਠਃ|
12 ௧௨ யோவான்ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் பரலோகராஜ்யம் பலவந்தம் செய்யப்படுகிறது; பலவந்தம் செய்கிறவர்கள் அதைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள்.
ਅਪਰਞ੍ਚ ਆ ਯੋਹਨੋ(ਅ)ਦ੍ਯ ਯਾਵਤ੍ ਸ੍ਵਰ੍ਗਰਾਜ੍ਯੰ ਬਲਾਦਾਕ੍ਰਾਨ੍ਤੰ ਭਵਤਿ ਆਕ੍ਰਮਿਨਸ਼੍ਚ ਜਨਾ ਬਲੇਨ ਤਦਧਿਕੁਰ੍ੱਵਨ੍ਤਿ|
13 ௧௩ நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகள் அனைவரும் யோவான்வரைக்கும் தீர்க்கதரிசனம் சொன்னதுண்டு.
ਯਤੋ ਯੋਹਨੰ ਯਾਵਤ੍ ਸਰ੍ੱਵਭਵਿਸ਼਼੍ਯਦ੍ਵਾਦਿਭਿ ਰ੍ਵ੍ਯਵਸ੍ਥਯਾ ਚ ਉਪਦੇਸ਼ਃ ਪ੍ਰਾਕਾਸ਼੍ਯਤ|
14 ௧௪ நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன்தான்.
ਯਦਿ ਯੂਯਮਿਦੰ ਵਾਕ੍ਯੰ ਗ੍ਰਹੀਤੁੰ ਸ਼ਕ੍ਨੁਥ, ਤਰ੍ਹਿ ਸ਼੍ਰੇਯਃ, ਯਸ੍ਯਾਗਮਨਸ੍ਯ ਵਚਨਮਾਸ੍ਤੇ ਸੋ(ਅ)ਯਮ੍ ਏਲਿਯਃ|
15 ௧௫ கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கவேண்டும்.
ਯਸ੍ਯ ਸ਼੍ਰੋਤੁੰ ਕਰ੍ਣੌ ਸ੍ਤਃ ਸ ਸ਼੍ਰੁʼਣੋਤੁ|
16 ௧௬ இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்? சந்தைவெளிகளில் உட்கார்ந்து, தங்களுடைய தோழரைப் பார்த்து:
ਏਤੇ ਵਿਦ੍ਯਮਾਨਜਨਾਃ ਕੈ ਰ੍ਮਯੋਪਮੀਯਨ੍ਤੇ? ਯੇ ਬਾਲਕਾ ਹੱਟ ਉਪਵਿਸ਼੍ਯ ਸ੍ਵੰ ਸ੍ਵੰ ਬਨ੍ਧੁਮਾਹੂਯ ਵਦਨ੍ਤਿ,
17 ௧௭ உங்களுக்காகக் குழல் ஊதினோம், நீங்கள் நடனமாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் மாரடிக்கவில்லை என்று குறைசொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாக இருக்கிறது.
ਵਯੰ ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਸਮੀਪੇ ਵੰਸ਼ੀਰਵਾਦਯਾਮ, ਕਿਨ੍ਤੁ ਯੂਯੰ ਨਾਨ੍ਰੁʼਤ੍ਯਤ; ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਸਮੀਪੇ ਚ ਵਯਮਰੋਦਿਮ, ਕਿਨ੍ਤੁ ਯੂਯੰ ਨ ਵ੍ਯਲਪਤ, ਤਾਦ੍ਰੁʼਸ਼ੈ ਰ੍ਬਾਲਕੈਸ੍ਤ ਉਪਮਾਯਿਸ਼਼੍ਯਨ੍ਤੇ|
18 ௧௮ எப்படியென்றால், யோவான் உபவாசிக்கிறவனாகவும் திராட்சைரசம் குடிக்காதவனாகவும் வந்தான்; அதற்கு அவர்கள்: அவன் பிசாசு பிடித்திருக்கிறவன்என்றார்கள்.
ਯਤੋ ਯੋਹਨ੍ ਆਗਤ੍ਯ ਨ ਭੁਕ੍ਤਵਾਨ੍ ਨ ਪੀਤਵਾਂਸ਼੍ਚ, ਤੇਨ ਲੋਕਾ ਵਦਨ੍ਤਿ, ਸ ਭੂਤਗ੍ਰਸ੍ਤ ਇਤਿ|
19 ௧௯ உண்கிறவராகவும் குடிக்கிறவராகவும் வந்தார்; அதற்கு அவர்கள்: இதோ, உணவுப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனிதன், வரி வசூலிப்பவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன் என்கிறார்கள். ஆனாலும், ஞானமானது அதன் பிள்ளைகளால் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் என்றார்.
ਮਨੁਜਸੁਤ ਆਗਤ੍ਯ ਭੁਕ੍ਤਵਾਨ੍ ਪੀਤਵਾਂਸ਼੍ਚ, ਤੇਨ ਲੋਕਾ ਵਦਨ੍ਤਿ, ਪਸ਼੍ਯਤ ਏਸ਼਼ ਭੋਕ੍ਤਾ ਮਦ੍ਯਪਾਤਾ ਚਣ੍ਡਾਲਪਾਪਿਨਾਂ ਬਨ੍ਧਸ਼੍ਚ, ਕਿਨ੍ਤੁ ਜ੍ਞਾਨਿਨੋ ਜ੍ਞਾਨਵ੍ਯਵਹਾਰੰ ਨਿਰ੍ਦੋਸ਼਼ੰ ਜਾਨਨ੍ਤਿ|
20 ௨0 அப்பொழுது, தமது பலத்த செய்கைகளில், அதிகமானவைகளைச் செய்யக்கண்ட பட்டணங்கள் மனந்திரும்பாமற்போனபடியினால் அவைகளை அவர் கடிந்துகொள்ளத் தொடங்கினார்:
ਸ ਯਤ੍ਰ ਯਤ੍ਰ ਪੁਰੇ ਬਹ੍ਵਾਸ਼੍ਚਰ੍ੱਯੰ ਕਰ੍ੰਮ ਕ੍ਰੁʼਤਵਾਨ੍, ਤੰਨਿਵਾਸਿਨਾਂ ਮਨਃਪਰਾਵ੍ਰੁʼੱਤ੍ਯਭਾਵਾਤ੍ ਤਾਨਿ ਨਗਰਾਣਿ ਪ੍ਰਤਿ ਹਨ੍ਤੇਤ੍ਯੁਕ੍ਤਾ ਕਥਿਤਵਾਨ੍,
21 ௨௧ கோராசீனே! உனக்கு ஐயோ, பெத்சாயிதாவே! உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால், அப்பொழுதே இரட்டுடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து மனந்திரும்பியிருப்பார்கள்.
ਹਾ ਕੋਰਾਸੀਨ੍, ਹਾ ਬੈਤ੍ਸੈਦੇ, ਯੁਸ਼਼੍ਮਨ੍ਮਧ੍ਯੇ ਯਦ੍ਯਦਾਸ਼੍ਚਰ੍ੱਯੰ ਕਰ੍ੰਮ ਕ੍ਰੁʼਤੰ ਯਦਿ ਤਤ੍ ਸੋਰਸੀਦੋੰਨਗਰ ਅਕਾਰਿਸ਼਼੍ਯਤ, ਤਰ੍ਹਿ ਪੂਰ੍ੱਵਮੇਵ ਤੰਨਿਵਾਸਿਨਃ ਸ਼ਾਣਵਸਨੇ ਭਸ੍ਮਨਿ ਚੋਪਵਿਸ਼ਨ੍ਤੋ ਮਨਾਂਸਿ ਪਰਾਵਰ੍ੱਤਿਸ਼਼੍ਯਨ੍ਤ|
22 ௨௨ நியாயத்தீர்ப்புநாளிலே உங்களுக்குச் சம்பவிப்பதைவிட, தீருவிற்கும் சீதோனுக்கும் சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ਤਸ੍ਮਾਦਹੰ ਯੁਸ਼਼੍ਮਾਨ੍ ਵਦਾਮਿ, ਵਿਚਾਰਦਿਨੇ ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਦਸ਼ਾਤਃ ਸੋਰਸੀਦੋਨੋ ਰ੍ਦਸ਼ਾ ਸਹ੍ਯਤਰਾ ਭਵਿਸ਼਼੍ਯਤਿ|
23 ௨௩ வானம்வரை உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளம்வரை தாழ்த்தப்படுவாய்; உன்னில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமிலே செய்யப்பட்டிருந்ததானால், அது இந்தநாள்வரை நிலைத்திருக்கும். (Hadēs g86)
ਅਪਰਞ੍ਚ ਬਤ ਕਫਰ੍ਨਾਹੂਮ੍, ਤ੍ਵੰ ਸ੍ਵਰ੍ਗੰ ਯਾਵਦੁੰਨਤੋਸਿ, ਕਿਨ੍ਤੁ ਨਰਕੇ ਨਿਕ੍ਸ਼਼ੇਪ੍ਸ੍ਯਸੇ, ਯਸ੍ਮਾਤ੍ ਤ੍ਵਯਿ ਯਾਨ੍ਯਾਸ਼੍ਚਰ੍ੱਯਾਣਿ ਕਰ੍ੰਮਣ੍ਯਕਾਰਿਸ਼਼ਤ, ਯਦਿ ਤਾਨਿ ਸਿਦੋਮ੍ਨਗਰ ਅਕਾਰਿਸ਼਼੍ਯਨ੍ਤ, ਤਰ੍ਹਿ ਤਦਦ੍ਯ ਯਾਵਦਸ੍ਥਾਸ੍ਯਤ੍| (Hadēs g86)
24 ௨௪ நியாயத்தீர்ப்புநாளிலே உனக்குச் சம்பவிப்பதைவிட, சோதோம் நாட்டிற்குச் சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
ਕਿਨ੍ਤ੍ਵਹੰ ਯੁਸ਼਼੍ਮਾਨ੍ ਵਦਾਮਿ, ਵਿਚਾਰਦਿਨੇ ਤਵ ਦਣ੍ਡਤਃ ਸਿਦੋਮੋ ਦਣ੍ਡੋ ਸਹ੍ਯਤਰੋ ਭਵਿਸ਼਼੍ਯਤਿ|
25 ௨௫ அந்தச் சமயத்திலே இயேசு சொன்னது: பிதாவே! பரலோகத்திற்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, சிறுவர்களுக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.
ਏਤਸ੍ਮਿੰਨੇਵ ਸਮਯੇ ਯੀਸ਼ੁਃ ਪੁਨਰੁਵਾਚ, ਹੇ ਸ੍ਵਰ੍ਗਪ੍ਰੁʼਥਿਵ੍ਯੋਰੇਕਾਧਿਪਤੇ ਪਿਤਸ੍ਤ੍ਵੰ ਜ੍ਞਾਨਵਤੋ ਵਿਦੁਸ਼਼ਸ਼੍ਚ ਲੋਕਾਨ੍ ਪ੍ਰਤ੍ਯੇਤਾਨਿ ਨ ਪ੍ਰਕਾਸ਼੍ਯ ਬਾਲਕਾਨ੍ ਪ੍ਰਤਿ ਪ੍ਰਕਾਸ਼ਿਤਵਾਨ੍, ਇਤਿ ਹੇਤੋਸ੍ਤ੍ਵਾਂ ਧਨ੍ਯੰ ਵਦਾਮਿ|
26 ௨௬ ஆம், பிதாவே! இப்படிச்செய்வது உம்முடைய உயர்ந்த உள்ளத்திற்குப் பிரியமாக இருந்தது.
ਹੇ ਪਿਤਃ, ਇੱਥੰ ਭਵੇਤ੍ ਯਤ ਇਦੰ ਤ੍ਵਦ੍ਰੁʼਸ਼਼੍ਟਾਵੁੱਤਮੰ|
27 ௨௭ எல்லாம் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதாவைத்தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்குப் பிதாவை வெளிப்படுத்த விருப்பமாக இருக்கிறாரோ அவனைத்தவிர, வேறொருவனும் பிதாவை அறியமாட்டான்.
ਪਿਤ੍ਰਾ ਮਯਿ ਸਰ੍ੱਵਾਣਿ ਸਮਰ੍ਪਿਤਾਨਿ, ਪਿਤਰੰ ਵਿਨਾ ਕੋਪਿ ਪੁਤ੍ਰੰ ਨ ਜਾਨਾਤਿ, ਯਾਨ੍ ਪ੍ਰਤਿ ਪੁਤ੍ਰੇਣ ਪਿਤਾ ਪ੍ਰਕਾਸ਼੍ਯਤੇ ਤਾਨ੍ ਵਿਨਾ ਪੁਤ੍ਰਾਦ੍ ਅਨ੍ਯਃ ਕੋਪਿ ਪਿਤਰੰ ਨ ਜਾਨਾਤਿ|
28 ௨௮ வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.
ਹੇ ਪਰਿਸ਼੍ਰਾਨ੍ਤਾ ਭਾਰਾਕ੍ਰਾਨ੍ਤਾਸ਼੍ਚ ਲੋਕਾ ਯੂਯੰ ਮਤ੍ਸੰਨਿਧਿਮ੍ ਆਗੱਛਤ, ਅਹੰ ਯੁਸ਼਼੍ਮਾਨ੍ ਵਿਸ਼੍ਰਮਯਿਸ਼਼੍ਯਾਮਿ|
29 ௨௯ நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாக இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்களுடைய ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.
ਅਹੰ ਕ੍ਸ਼਼ਮਣਸ਼ੀਲੋ ਨਮ੍ਰਮਨਾਸ਼੍ਚ, ਤਸ੍ਮਾਤ੍ ਮਮ ਯੁਗੰ ਸ੍ਵੇਸ਼਼ਾਮੁਪਰਿ ਧਾਰਯਤ ਮੱਤਃ ਸ਼ਿਕ੍ਸ਼਼ਧ੍ਵਞ੍ਚ, ਤੇਨ ਯੂਯੰ ਸ੍ਵੇ ਸ੍ਵੇ ਮਨਸਿ ਵਿਸ਼੍ਰਾਮੰ ਲਪ੍ਸ੍ਯਧ੍ਬੇ|
30 ௩0 என் நுகம் எளிதாகவும், என் சுமை இலகுவாகவும் இருக்கிறது என்றார்.
ਯਤੋ ਮਮ ਯੁਗਮ੍ ਅਨਾਯਾਸੰ ਮਮ ਭਾਰਸ਼੍ਚ ਲਘੁਃ|

< மத்தேயு 11 >