< மத்தேயு 1 >
1 ௧ ஆபிரகாமின் மகனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவின் வம்சவரலாறு:
अब्राहमेरी औलादी मरां दाऊद राज़ो थियो, दाऊद राज़ेरे औलादी मरां यीशु मसीह थियो। यीशु मसीहेरे दादे-पड़दादां केरां नंव्वां इना आन।
2 ௨ ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு யூதாவையும் அவனுடைய சகோதரர்களையும் பெற்றான்;
अब्राहमेरू मट्ठू इसहाक थियूं, इसहाकेरू याकूब, याकूबेरां मट्ठां यहूदा ते तैसेरे ढ्ला थिये।
3 ௩ யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான்; பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்; எஸ்ரோம் ஆராமைப் பெற்றான்;
यहूदा ते तामारेरां मट्ठां पेरेस ते जेरह थियां, पेरेसेरू मट्ठू हेस्रोन, हेस्रोनेरू एराम,
4 ௪ ஆராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்;
ते एरामेरू अम्मीनादाब, अम्मीनादाबेरू नहशोन, नहशोनेरू सलमोन,
5 ௫ சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; போவாஸ் ஓபேத்தை ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்;
ते सलमोन ते तैसेरी कुआन्श राहाबेरू मट्ठू बोआज थियूं, ते बोआज ते तैसेरी कुआन्श रूतरू ओबेद, ओबेदेरू यिशै,
6 ௬ ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான்; தாவீது ராஜா உரியாவின் மனைவியாக இருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்;
ते यिशैरू मट्ठू दाऊद राज़ो थियो, दाऊद राज़ेरू मट्ठू सुलैमान तैस कुआन्शी सेइं पैदा भोव, ज़ै पेइली ऊरिय्याहरी कुआन्श थी।
7 ௭ சாலொமோன் ரெகொபெயாமைப் பெற்றான்; ரெகொபெயாம் அபியாவைப் பெற்றான்; அபியா ஆசாவைப் பெற்றான்;
सुलैमानेरू रहबाम, रहबामेरू अबिय्याह, अबिय्याहेरू आसा,
8 ௮ ஆசா யோசபாத்தைப் பெற்றான்; யோசபாத் யோராமைப் பெற்றான்; யோராம் உசியாவைப் பெற்றான்;
ते आसारू यहोशाफात, यहोशाफातेरू योराम, ते योरामेरे खानदानेरे मरां उज्जियाह पैदा भोव।
9 ௯ உசியா யோதாமைப் பெற்றான்; யோதாம் ஆகாஸைப் பெற்றான்; ஆகாஸ் எசேக்கியாவைப் பெற்றான்;
उज्जियाहरू योताम, योतामेरू आहाज, आहाजेरू हिजकिय्याह,
10 ௧0 எசேக்கியா மனாசேயைப் பெற்றான்; மனாசே ஆமோனைப் பெற்றான்; ஆமோன் யோசியாவைப் பெற்றான்;
ते हिजकिय्याहेरू मनश्शे, मनश्शेरू आमोन, आमोनेरू मट्ठू योशिय्याह थियूं
11 ௧௧ பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போகும்காலத்தில், யோசியா எகொனியாவையும் அவனுடைய சகோதரர்களையும் பெற்றான்.
ते योशिय्याहेरां पोट्लड़ां यकुन्याह ते तैसेरे ढ्ला थिये, ज़ैना गिरफ्तार भोइतां बाबेलेरी गुलैमी मां गानेरे वक्ते मां ज़र्मोरां थियां।
12 ௧௨ பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போனபின்பு, எகொனியா சலாத்தியேலைப் பெற்றான்; சலாத்தியேல் செருபாபேலைப் பெற்றான்;
गिरफ्तार भोइतां बाबेलेरी गुलैमी मां गानेरे पत्ती यकुन्याहेरू शालतियेल ते शालतियेलेरू जरुब्बाबेल,
13 ௧௩ செருபாபேல் அபியூதைப் பெற்றான்; அபியூத் எலியாக்கீமைப் பெற்றான்; எலியாக்கீம் ஆசோரைப் பெற்றான்;
ते जरुब्बाबेलेरू अबीहूद, अबीहूदेरू एलयाकीम, एलयाकीमेरू अजोर,
14 ௧௪ ஆசோர் சாதோக்கைப் பெற்றான்; சாதோக்கு ஆகீமைப் பெற்றான்; ஆகீம் எலியூதைப் பெற்றான்;
ते अजोरेरू सादोक, सादोकेरू अखीम, अखीमेरू एलीहूद
15 ௧௫ எலியூத் எலெயாசாரைப் பெற்றான்; எலெயாசார் மாத்தானைப் பெற்றான்; மாத்தான் யாக்கோபைப் பெற்றான்;
ते एलीहूदेरू एलीआजर, एलीआजारेरू मत्तान, मत्तानेरू याकूब,
16 ௧௬ யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான்; மரியாளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார்.
ते याकूबेरू यूसुफ, ते यूसुफ मरियमरो मुन्श थियो, ते मरियमरू मट्ठू यीशु आए, ज़ैस जो मसीह ज़ोतन।
17 ௧௭ இவ்விதமாக உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம்முதல் தாவீதுவரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; தாவீதுமுதல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம்வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம்முதல் கிறிஸ்துவரைக்கும் பதினான்கு தலைமுறைகளாகும்.
एन्च़रे अब्राहमे करां दाऊद राज़े तगर च़ेवधे पीड़ी भोइ, ते दाऊद राज़े करां यहूदी केरे गिरफ्तार भोइतां बाबेलेरी गुलैमी मां गाने तगर च़ेवधे पीड़ी भोइ, ते गिरफ्तार भोइतां बाबेले मां गाने करां देइतां यीशु मसीह तगर च़ेवधे पीड़ी भोइ।
18 ௧௮ இயேசு கிறிஸ்துவினுடைய பிறப்பின் விபரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கும்போது, அவர்கள் இணைவதற்குமுன்பே, அவள் பரிசுத்த ஆவியானவராலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.
यीशु मसीहेरू ज़र्म एन्च़रे सेइं भोवं, कि ज़ैखन तैसेरी अम्मा मरियमरी कुड़माइ यूसुफ नंव्वे एक्की मैन्हु सेइं भोरी थी, त तैन केरे ड्ला भोने करां पेइले मरियम पवित्र आत्मारे शेक्ति सेइं दोज़ींती भोइ।
19 ௧௯ அவள் கணவனாகிய யோசேப்பு நீதிமானாக இருந்து, அவளை அவமானப்படுத்த விருப்பமில்லாமல், இரகசியமாக அவளை விவாகரத்துசெய்ய யோசனையாக இருந்தான்.
तैसारो मुन्श यूसुफ ज़ै धर्मी मैन्हु थियो, तै तैस बदनाम केरनि न थियो चातो। तैनी च़ुपच़ारे इन सोचू, कि मीं एस सेइं ड्ला नईं बनानो।
20 ௨0 அவன் இப்படி நினைத்துக்கொண்டு இருக்கும்போது, கர்த்தருடைய தூதன் கனவில் அவனுக்குக் காணப்பட்டு: “தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள பயப்படாதே; அவளிடத்தில் கருவுற்றிருக்கிறது பரிசுத்த ஆவியானவரால் உண்டானது.
हेजू तै एन सोचने लोरो थियो, त प्रभुएरे एक्की स्वर्गदूते तैस सेइं सुपने मां एइतां ज़ोवं, “हे यूसुफ! तू ज़ै दाऊदेरे खानदाने मरां आस, तू मरियम अपनि कुआन्श बनाने करां न डर, किजोकि ज़ैन तैसारे पेटे मां आए तैन पवित्र आत्मारे तरफां आए।
21 ௨௧ அவள் ஒரு மகனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக; ஏனென்றால், அவர் தமது மக்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” என்றான்.
तैस मट्ठू भोनूए, ते तू तैसेरू नवं ‘यीशु’ रेखां, किजोकि तैए अपने लोकन तैन केरे पापन करां मुक्ति देलो।”
22 ௨௨ தீர்க்கதரிசியின் மூலமாகக் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.
एन सब किछ एल्हेरेलेइ भोवं, कि ज़ैना वचन प्रभुए यशायाह नेबेरे ज़िरिये ज़ोरे थिये पूरे भोए कि,
23 ௨௩ அவன்: “இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவார்கள்” என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தம்.
“हेरा, अक अड्लाई कुई पेटे भारी भोली, ते तैस अक मट्ठू भोलू, ते लोक तैस जो इम्मानुएल ज़ोले” ज़ेसेरो मतलब ई आए, परमेशर असन सेइं साथी आए।
24 ௨௪ யோசேப்பு தூக்கம் தெளிந்து எழுந்து, கர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு;
तैखन यूसुफ निड्लारां बींझ़ो त तैनी परमेशरेरे स्वर्गदूतेरू ज़ोनू मन्नू, ते मरियमी सेइं ड्ला बनाव ते अपने घरे आनी।
25 ௨௫ அவள் தன் முதற்பேறான மகனைப் பெற்றெடுக்கும் வரை அவளோடு இணையாமலிருந்து, அவருக்கு இயேசு என்று பெயரிட்டான்.
पन ज़ांतगर तैस मट्ठू न भोवं तांतगर तै तैस सेइं साथी न झ़ुल्लो ते ज़ैखन तैस मट्ठू भोवं त यूसुफे तैस मट्ठेरू नवं यीशु रख्खू।