< மாற்கு 1 >

1 தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நற்செய்தியின் ஆரம்பம்.
ཨཱིཤྭརཔུཏྲསྱ ཡཱིཤུཁྲཱིཥྚསྱ སུསཾཝཱདཱརམྦྷཿ།
2 “இதோ, நான் என் தூதுவனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவன் உமக்கு முன்பேபோய், உமக்கு வழியை ஆயத்தம்பண்ணுவான் என்றும்;
བྷཝིཥྱདྭཱདིནཱཾ གྲནྠེཥུ ལིཔིརིཏྠམཱསྟེ, པཤྱ སྭཀཱིཡདཱུཏནྟུ ཏཝཱགྲེ པྲེཥཡཱམྱཧམ྄། གཏྭཱ ཏྭདཱིཡཔནྠཱནཾ ས ཧི པརིཥྐརིཥྱཏི།
3 கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள்” என்று “வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும்” என்றும், தீர்க்கதரிசன புத்தகங்களில் எழுதியிருக்கிறபடி;
"པརམེཤསྱ པནྠཱནཾ པརིཥྐུརུཏ སཪྻྭཏཿ། ཏསྱ རཱཛཔཐཉྩཻཝ སམཱནཾ ཀུརུཏཱདྷུནཱ། " ཨིཏྱེཏཏ྄ པྲཱནྟརེ ཝཱཀྱཾ ཝདཏཿ ཀསྱཙིདྲཝཿ༎
4 யோவான் வனாந்திரத்தில் ஞானஸ்நானம் கொடுத்து, பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கான ஞானஸ்நானத்தைப்பற்றி பிரசங்கம்பண்ணிக்கொண்டிருந்தான்.
སཨེཝ ཡོཧན྄ པྲཱནྟརེ མཛྫིཏཝཱན྄ ཏཐཱ པཱཔམཱརྫནནིམིཏྟཾ མནོཝྱཱཝརྟྟཀམཛྫནསྱ ཀཐཱཉྩ པྲཙཱརིཏཝཱན྄།
5 அப்பொழுது யூதேயா தேசத்தார் மற்றும் எருசலேம் நகரத்தார் அனைவரும், யோவானிடம்போய், தங்களுடைய பாவங்களை அறிக்கைசெய்து, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.
ཏཏོ ཡིཧཱུདཱདེཤཡིརཱུཤཱལམྣགརནིཝཱསིནཿ སཪྻྭེ ལོཀཱ བཧི རྦྷཱུཏྭཱ ཏསྱ སམཱིཔམཱགཏྱ སྭཱནི སྭཱནི པཱཔཱནྱངྒཱིཀྲྀཏྱ ཡརྡྡནནདྱཱཾ ཏེན མཛྫིཏཱ བབྷཱུཝུཿ།
6 யோவான் ஒட்டகமயிர் ஆடையை அணிந்து, தன் இடுப்பில் தோல் கச்சையைக் கட்டிக்கொண்டு, வெட்டுக்கிளியையும் காட்டுத்தேனையும் சாப்பிடுகிறவனாகவும் இருந்தான்.
ཨསྱ ཡོཧནཿ པརིདྷེཡཱནི ཀྲམེལཀལོམཛཱནི, ཏསྱ ཀཊིབནྡྷནཾ ཙརྨྨཛཱཏམ྄, ཏསྱ བྷཀྵྱཱཎི ཙ ཤཱུཀཀཱིཊཱ ཝནྱམདྷཱུནི ཙཱསན྄།
7 அவன்: என்னைவிட வல்லவர் ஒருவர் எனக்குப்பின்பு வருகிறார், அவருடைய காலணிகளின் வாரைக் குனிந்து அவிழ்ப்பதற்குக்கூட நான் தகுதியானவன் இல்லை.
ས པྲཙཱརཡན྄ ཀཐཡཱཉྩཀྲེ, ཨཧཾ ནམྲཱིབྷཱུཡ ཡསྱ པཱདུཀཱབནྡྷནཾ མོཙཡིཏུམཔི ན ཡོགྱོསྨི, ཏཱདྲྀཤོ མཏྟོ གུརུཏར ཨེཀཿ པུརུཥོ མཏྤཤྩཱདཱགཙྪཏི།
8 நான் தண்ணீரினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; அவரோ பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார் என்று பிரசங்கம்பண்ணினான்.
ཨཧཾ ཡུཥྨཱན྄ ཛལེ མཛྫིཏཝཱན྄ ཀིནྟུ ས པཝིཏྲ ཨཱཏྨཱནི སཾམཛྫཡིཥྱཏི།
9 அந்த நாட்களில், இயேசு கலிலேயாவில் உள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்து வந்து, யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார்.
ཨཔརཉྩ ཏསྨིནྣེཝ ཀཱལེ གཱལཱིལྤྲདེཤསྱ ནཱསརདྒྲཱམཱད྄ ཡཱིཤུརཱགཏྱ ཡོཧནཱ ཡརྡྡནནདྱཱཾ མཛྫིཏོ྅བྷཱུཏ྄།
10 ௧0 அவர் தண்ணீரில் இருந்து கரையேறின உடனே, வானம் திறக்கப்பட்டதையும், ஆவியானவர் புறாவைப்போல தம்மேல் இறங்குகிறதையும் பார்த்தார்.
ས ཛལཱདུཏྠིཏམཱཏྲོ མེགྷདྭཱརཾ མུཀྟཾ ཀཔོཏཝཏ྄ སྭསྱོཔརི ཨཝརོཧནྟམཱཏྨཱནཉྩ དྲྀཥྚཝཱན྄།
11 ௧௧ அப்பொழுது, நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மிடம் பிரியமாக இருக்கிறேன் என்று, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானது.
ཏྭཾ མམ པྲིཡཿ པུཏྲསྟྭཡྻེཝ མམམཧཱསནྟོཥ ཨིཡམཱཀཱཤཱིཡཱ ཝཱཎཱི བབྷཱུཝ།
12 ௧௨ உடனே ஆவியானவர் அவரை வனாந்திரத்திற்குப் போகும்படி ஏவினார்.
ཏསྨིན྄ ཀཱལེ ཨཱཏྨཱ ཏཾ པྲཱནྟརམདྷྱཾ ནིནཱཡ།
13 ௧௩ அவர் வனாந்திரத்திலே நாற்பதுநாட்கள் இருந்து, சாத்தானால் சோதிக்கப்பட்டு, அங்கே காட்டுமிருகங்களின் நடுவிலே தங்கிக்கொண்டிருந்தார். தேவதூதர்கள் அவருக்குப் பணிவிடைசெய்தார்கள்.
ཨཐ ས ཙཏྭཱརིཾཤདྡིནཱནི ཏསྨིན྄ སྠཱནེ ཝནྱཔཤུབྷིཿ སཧ ཏིཥྛན྄ ཤཻཏཱནཱ པརཱིཀྵིཏཿ; པཤྩཱཏ྄ སྭརྒཱིཡདཱུཏཱསྟཾ སིཥེཝིརེ།
14 ௧௪ யோவான் சிறைக்காவலில் வைக்கப்பட்டபின்பு, இயேசு கலிலேயாவிற்கு வந்து, தேவனுடைய ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கம் செய்து:
ཨནནྟརཾ ཡོཧནི བནྡྷནཱལཡེ བདྡྷེ སཏི ཡཱིཤུ རྒཱལཱིལྤྲདེཤམཱགཏྱ ཨཱིཤྭརརཱཛྱསྱ སུསཾཝཱདཾ པྲཙཱརཡན྄ ཀཐཡཱམཱས,
15 ௧௫ காலம் நிறைவேறியது, தேவனுடைய ராஜ்யம் அருகில் இருக்கிறது; மனந்திரும்பி, நற்செய்தியை விசுவாசியுங்கள் என்றார்.
ཀཱལཿ སམྤཱུརྞ ཨཱིཤྭརརཱཛྱཉྩ སམཱིཔམཱགཏཾ; ཨཏོཧེཏོ ཪྻཱུཡཾ མནཱཾསི ཝྱཱཝརྟྟཡདྷྭཾ སུསཾཝཱདེ ཙ ཝིཤྭཱསིཏ།
16 ௧௬ அவர் கலிலேயா கடலின் ஓரமாக நடந்துபோகும்போது, மீனவர்களாக இருந்த சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும் கடலில் வலையைப் போட்டுக்கொண்டிருக்கிறதைப் பார்த்தார்.
ཏདནནྟརཾ ས གཱལཱིལཱིཡསམུདྲསྱ ཏཱིརེ གཙྪན྄ ཤིམོན྄ ཏསྱ བྷྲཱཏཱ ཨནྡྲིཡནཱམཱ ཙ ཨིམཽ དྭཽ ཛནཽ མཏྶྱདྷཱརིཎཽ སཱགརམདྷྱེ ཛཱལཾ པྲཀྵིཔནྟཽ དྲྀཥྚྭཱ ཏཱཝཝདཏ྄,
17 ௧௭ இயேசு அவர்களைப் பார்த்து: என் பின்னே வாருங்கள், உங்களை மனிதர்களைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்.
ཡུཝཱཾ མམ པཤྩཱདཱགཙྪཏཾ, ཡུཝཱམཧཾ མནུཥྱདྷཱརིཎཽ ཀརིཥྱཱམི།
18 ௧௮ உடனே அவர்கள் தங்களுடைய வலைகளைவிட்டு, அவருக்குப் பின்னே சென்றார்கள்.
ཏཏསྟཽ ཏཏྐྵཎམེཝ ཛཱལཱནི པརིཏྱཛྱ ཏསྱ པཤྩཱཏ྄ ཛགྨཏུཿ།
19 ௧௯ அவர் அந்த இடத்தைவிட்டுச் சற்றுதூரம் சென்றபோது, செபெதேயுவின் குமாரன் யாக்கோபும் அவனுடைய சகோதரன் யோவானும் படகிலே வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருந்ததைப் பார்த்து,
ཏཏཿ པརཾ ཏཏྶྠཱནཱཏ྄ ཀིཉྩིད྄ དཱུརཾ གཏྭཱ ས སིཝདཱིཔུཏྲཡཱཀཱུབ྄ ཏདྦྷྲཱཏྲྀཡོཧན྄ ཙ ཨིམཽ ནཽཀཱཡཱཾ ཛཱལཱནཱཾ ཛཱིརྞམུདྡྷཱརཡནྟཽ དྲྀཥྚྭཱ ཏཱཝཱཧཱུཡཏ྄།
20 ௨0 உடனே அவர்களையும் அழைத்தார்; அப்பொழுது அவர்கள் தங்களுடைய தகப்பனாகிய செபெதேயுவை படகிலே கூலியாட்களோடு விட்டுவிட்டு, அவருக்குப் பின்னே சென்றார்கள்.
ཏཏསྟཽ ནཽཀཱཡཱཾ ཝེཏནབྷུགྦྷིཿ སཧིཏཾ སྭཔིཏརཾ ཝིཧཱཡ ཏཏྤཤྩཱདཱིཡཏུཿ།
21 ௨௧ பின்பு அவர்கள் கப்பர்நகூமுக்குப் போனார்கள். உடனே அவர் ஓய்வுநாளிலே ஜெப ஆலயத்திற்குச் சென்று, போதனை பண்ணினார்.
ཏཏཿ པརཾ ཀཕརྣཱཧཱུམྣཱམཀཾ ནགརམུཔསྠཱཡ ས ཝིཤྲཱམདིཝསེ བྷཛནགྲཧཾ པྲཝིཤྱ སམུཔདིདེཤ།
22 ௨௨ அவர் வேதபண்டிதர்களைப்போல போதிக்காமல், அதிகாரமுடையவராக அவர்களுக்குப் போதித்ததினால் அவருடைய போதனையைக்குறித்து மக்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
ཏསྱོཔདེཤཱལློཀཱ ཨཱཤྩཪྻྱཾ མེནིརེ ཡཏཿ སོདྷྱཱཔཀཱཨིཝ ནོཔདིཤན྄ པྲབྷཱཝཝཱནིཝ པྲོཔདིདེཤ།
23 ௨௩ அவர்களுடைய ஜெப ஆலயத்திலே அசுத்தஆவி பிடித்திருந்த ஒரு மனிதன் இருந்தான்.
ཨཔརཉྩ ཏསྨིན྄ བྷཛནགྲྀཧེ ཨཔཝིཏྲབྷཱུཏེན གྲསྟ ཨེཀོ མཱནུཥ ཨཱསཱིཏ྄། ས ཙཱིཏྴབྡཾ ཀྲྀཏྭཱ ཀཐཡཱཉྩཀེ
24 ௨௪ அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா நீர் வந்தீர்? நீர் யார் என்று நான் அறிவேன், நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று சத்தமாகக் கத்தினான்.
བྷོ ནཱསརཏཱིཡ ཡཱིཤོ ཏྭམསྨཱན྄ ཏྱཛ, ཏྭཡཱ སཧཱསྨཱཀཾ ཀཿ སམྦནྡྷཿ? ཏྭཾ ཀིམསྨཱན྄ ནཱཤཡིཏུཾ སམཱགཏཿ? ཏྭམཱིཤྭརསྱ པཝིཏྲལོཀ ཨིཏྱཧཾ ཛཱནཱམི།
25 ௨௫ அதற்கு இயேசு: நீ பேசாமல் இவனைவிட்டு வெளியே போ என்று அதை அதட்டினார்.
ཏདཱ ཡཱིཤུསྟཾ ཏརྫཡིཏྭཱ ཛགཱད ཏཱུཥྞཱིཾ བྷཝ ཨིཏོ བཧིརྦྷཝ ཙ།
26 ௨௬ உடனே அந்த அசுத்தஆவி அவனை அலைக்கழித்து, அதிக சத்தம்போட்டு, அவனைவிட்டுப் போய்விட்டது.
ཏཏཿ སོ྅པཝིཏྲབྷཱུཏསྟཾ སམྤཱིཌྱ ཨཏྱུཙཻཤྩཱིཏྐྲྀཏྱ ནིརྫགཱམ།
27 ௨௭ எல்லோரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன? இந்தப் புதிய உபதேசம் எப்படிப்பட்டது? இவர் அதிகாரத்தோடு அசுத்தஆவிகளுக்குக் கட்டளைக் கொடுக்கிறார், அவைகள் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று தங்களுக்குள்ளே ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
ཏེནཻཝ སཪྻྭེ ཙམཏྐྲྀཏྱ པརསྤརཾ ཀཐཡཱཉྩཀྲིརེ, ཨཧོ ཀིམིདཾ? ཀཱིདྲྀཤོ྅ཡཾ ནཝྱ ཨུཔདེཤཿ? ཨནེན པྲབྷཱཝེནཱཔཝིཏྲབྷཱུཏེཥྭཱཛྙཱཔིཏེཥུ ཏེ ཏདཱཛྙཱནུཝརྟྟིནོ བྷཝནྟི།
28 ௨௮ எனவே, அவரைப்பற்றின புகழ் கலிலேயா நாடு முழுவதும் பரவியது.
ཏདཱ ཏསྱ ཡཤོ གཱལཱིལཤྩཏུརྡིཀྶྠསཪྻྭདེཤཱན྄ ཝྱཱཔྣོཏ྄།
29 ௨௯ உடனே அவர்கள் ஜெப ஆலயத்தைவிட்டுப் புறப்பட்டு, யாக்கோபு மற்றும் யோவானோடு, சீமோன் அந்திரேயா என்பவர்களுடைய வீட்டிற்குப் போனார்கள்.
ཨཔརཉྩ ཏེ བྷཛནགྲྀཧཱད྄ བཧི རྦྷཱུཏྭཱ ཡཱཀཱུབྱོཧནྦྷྱཱཾ སཧ ཤིམོན ཨཱནྡྲིཡསྱ ཙ ནིཝེཤནཾ པྲཝིཝིཤུཿ།
30 ௩0 அங்கே சீமோனுடைய மாமியார் ஜூரத்தோடு படுத்திருந்தாள்; உடனே அவர்கள் அவளைப்பற்றி அவருக்குச் சொன்னார்கள்.
ཏདཱ པིཏརསྱ ཤྭཤྲཱུརྫྭརཔཱིཌིཏཱ ཤཡྻཱཡཱམཱསྟ ཨིཏི ཏེ ཏཾ ཛྷཊིཏི ཝིཛྙཱཔཡཱཉྩཀྲུཿ།
31 ௩௧ அவர் அருகில் சென்று, அவள் கையைப் பிடித்து, அவளைத் தூக்கிவிட்டார்; உடனே ஜூரம் அவளைவிட்டு நீங்கியது; அப்பொழுது அவள் அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள்.
ཏཏཿ ས ཨཱགཏྱ ཏསྱཱ ཧསྟཾ དྷྲྀཏྭཱ ཏཱམུདསྠཱཔཡཏ྄; ཏདཻཝ ཏཱཾ ཛྭརོ྅ཏྱཱཀྵཱིཏ྄ ཏཏཿ པརཾ སཱ ཏཱན྄ སིཥེཝེ།
32 ௩௨ மாலைநேரத்தில் சூரியன் மறையும்போது, எல்லா நோயாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும், இயேசுவிடம் கொண்டுவந்தார்கள்.
ཨཐཱསྟཾ གཏེ རཝཽ སནྡྷྱཱཀཱལེ སཏི ལོཀཱསྟཏྶམཱིཔཾ སཪྻྭཱན྄ རོགིཎོ བྷཱུཏདྷྲྀཏཱཾཤྩ སམཱནིནྱུཿ།
33 ௩௩ பட்டணத்து மக்கள் எல்லோரும் வீட்டுவாசலுக்கு முன்பாகக் கூடிவந்தார்கள்.
སཪྻྭེ ནཱགརིཀཱ ལོཀཱ དྭཱརི སཾམིལིཏཱཤྩ།
34 ௩௪ பலவிதமான வியாதிகளினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அநேக மக்களை அவர் சுகமாக்கி, அநேக பிசாசுகளையும் துரத்திவிட்டார்; அந்தப் பிசாசுகளுக்கு, அவர் யார் என்று தெரிந்திருந்ததால், அவைகள் பேசுகிறதற்கு அவர் அனுமதிக்கவில்லை.
ཏཏཿ ས ནཱནཱཝིདྷརོགིཎོ བཧཱུན྄ མནུཛཱནརོགིཎཤྩཀཱར ཏཐཱ བཧཱུན྄ བྷཱུཏཱན྄ ཏྱཱཛཡཱཉྩཀཱར ཏཱན྄ བྷཱུཏཱན྄ ཀིམཔི ཝཱཀྱཾ ཝཀྟུཾ ནིཥིཥེདྷ ཙ ཡཏོཧེཏོསྟེ ཏམཛཱནན྄།
35 ௩௫ அவர் அதிகாலையில், இருட்டோடு எழுந்து புறப்பட்டு, வனாந்திரமான ஒரு இடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார்.
ཨཔརཉྩ སོ྅ཏིཔྲཏྱཱུཥེ ཝསྟུཏསྟུ རཱཏྲིཤེཥེ སམུཏྠཱཡ བཧིརྦྷཱུཡ ནིརྫནཾ སྠཱནཾ གཏྭཱ ཏཏྲ པྲཱརྠཡཱཉྩཀྲེ།
36 ௩௬ சீமோனும் அவனோடுகூட இருந்தவர்களும் அவரைப் பின்தொடர்ந்துபோய்,
ཨནནྟརཾ ཤིམོན྄ ཏཏྶངྒིནཤྩ ཏསྱ པཤྩཱད྄ གཏཝནྟཿ།
37 ௩௭ அவரைப் பார்த்தபோது: எல்லோரும் உம்மைத் தேடுகிறார்கள் என்று சொன்னார்கள்.
ཏདུདྡེཤཾ པྲཱཔྱ ཏམཝདན྄ སཪྻྭེ ལོཀཱསྟྭཱཾ མྲྀགཡནྟེ།
38 ௩௮ அவர்களை அவர் பார்த்து: அடுத்த ஊர்களிலும் நான் பிரசங்கம் பண்ணவேண்டும், எனவே அந்த இடங்களுக்குப் போகலாம் வாருங்கள்; இதற்காகத்தான் புறப்பட்டுவந்தேன் என்று சொல்லி;
ཏདཱ སོ྅ཀཐཡཏ྄ ཨཱགཙྪཏ ཝཡཾ སམཱིཔསྠཱནི ནགརཱཎི ཡཱམཿ, ཡཏོ྅ཧཾ ཏཏྲ ཀཐཱཾ པྲཙཱརཡིཏུཾ བཧིརཱགམམ྄།
39 ௩௯ கலிலேயா நாடு முழுவதும் அவர்களுடைய ஜெப ஆலயங்களில் அவர் பிரசங்கம்பண்ணிக்கொண்டும், பிசாசுகளைத் துரத்திக்கொண்டும் இருந்தார்.
ཨཐ ས ཏེཥཱཾ གཱལཱིལྤྲདེཤསྱ སཪྻྭེཥུ བྷཛནགྲྀཧེཥུ ཀཐཱཿ པྲཙཱརཡཱཉྩཀྲེ བྷཱུཏཱནཏྱཱཛཡཉྩ།
40 ௪0 அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் அவரிடம் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு: உமக்கு விருப்பமானால் என்னைச் சுகப்படுத்த உம்மால் முடியும் என்று அவரை வேண்டிக்கொண்டான்.
ཨནནྟརམེཀཿ ཀུཥྛཱི སམཱགཏྱ ཏཏྶམྨུཁེ ཛཱནུཔཱཏཾ ཝིནཡཉྩ ཀྲྀཏྭཱ ཀཐིཏཝཱན྄ ཡདི བྷཝཱན྄ ཨིཙྪཏི ཏརྷི མཱཾ པརིཥྐརྟྟུཾ ཤཀྣོཏི།
41 ௪௧ இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்கு விருப்பம் உண்டு, சுத்தமாகு என்றார்.
ཏཏཿ ཀྲྀཔཱལུ ཪྻཱིཤུཿ ཀརཽ པྲསཱཪྻྱ ཏཾ སྤཥྚྭཱ ཀཐཡཱམཱས
42 ௪௨ இப்படி அவர் சொன்னவுடனே, குஷ்டரோகம் அவனைவிட்டு நீங்கியது, அவன் சுகம் பெற்றுக்கொண்டான்.
མམེཙྪཱ ཝིདྱཏེ ཏྭཾ པརིཥྐྲྀཏོ བྷཝ། ཨེཏཏྐཐཱཡཱཿ ཀཐནམཱཏྲཱཏ྄ ས ཀུཥྛཱི རོགཱནྨུཀྟཿ པརིཥྐྲྀཏོ྅བྷཝཏ྄།
43 ௪௩ அப்பொழுது அவர் அவனைப் பார்த்து: நீ இதை யாருக்கும் சொல்லாமல் இருக்க எச்சரிக்கையாக இரு;
ཏདཱ ས ཏཾ ཝིསྲྀཛན྄ གཱཌྷམཱདིཤྱ ཛགཱད
44 ௪௪ ஆனாலும் நீ போய், ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, நீ சுத்தமானதினால், மோசே கட்டளையிட்டபடி அவர்களுக்கு நீ சுகம் பெற்றதின் சாட்சியாக காணிக்கை செலுத்து என்று உறுதியாகச் சொல்லி, உடனே அவனை அனுப்பிவிட்டார்.
སཱཝདྷཱནོ བྷཝ ཀཐཱམིམཱཾ ཀམཔི མཱ ཝད; སྭཱཏྨཱནཾ ཡཱཛཀཾ དརྴཡ, ལོཀེབྷྱཿ སྭཔརིཥྐྲྀཏེཿ པྲམཱཎདཱནཱཡ མཱུསཱནིརྞཱིཏཾ ཡདྡཱནཾ ཏདུཏྶྲྀཛསྭ ཙ།
45 ௪௫ ஆனால், அவனோ புறப்பட்டுப்போய்; இந்த விஷயங்களை எல்லோருக்கும் சொல்லிப் பிரசித்தப்படுத்தினான். எனவே, அவர் வெளிப்படையாகப் பட்டணத்திற்குள் செல்லமுடியாமல், வெளியே வனாந்திரமான இடங்களில் தங்கியிருந்தார்; எல்லாப் பகுதிகளிலும் இருந்து மக்கள் அவரிடம் வந்தார்கள்.
ཀིནྟུ ས གཏྭཱ ཏཏ྄ ཀརྨྨ ཨིཏྠཾ ཝིསྟཱཪྻྱ པྲཙཱརཡིཏུཾ པྲཱརེབྷེ ཏེནཻཝ ཡཱིཤུཿ པུནཿ སཔྲཀཱཤཾ ནགརཾ པྲཝེཥྚུཾ ནཱཤཀྣོཏ྄ ཏཏོཧེཏོརྦཧིཿ ཀཱནནསྠཱནེ ཏསྱཽ; ཏཐཱཔི ཙཏུརྡྡིགྦྷྱོ ལོཀཱསྟསྱ སམཱིཔམཱཡཡུཿ།

< மாற்கு 1 >