< மாற்கு 1 >

1 தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நற்செய்தியின் ஆரம்பம்.
ဤၑွရပုတြသျ ယီၑုခြီၐ္ဋသျ သုသံဝါဒါရမ္ဘး၊
2 “இதோ, நான் என் தூதுவனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவன் உமக்கு முன்பேபோய், உமக்கு வழியை ஆயத்தம்பண்ணுவான் என்றும்;
ဘဝိၐျဒွါဒိနာံ ဂြန္ထေၐု လိပိရိတ္ထမာသ္တေ, ပၑျ သွကီယဒူတန္တု တဝါဂြေ ပြေၐယာမျဟမ်၊ ဂတွာ တွဒီယပန္ထာနံ သ ဟိ ပရိၐ္ကရိၐျတိ၊
3 கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள்” என்று “வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும்” என்றும், தீர்க்கதரிசன புத்தகங்களில் எழுதியிருக்கிறபடி;
"ပရမေၑသျ ပန္ထာနံ ပရိၐ္ကုရုတ သရွွတး၊ တသျ ရာဇပထဉ္စဲဝ သမာနံ ကုရုတာဓုနာ၊ " ဣတျေတတ် ပြာန္တရေ ဝါကျံ ဝဒတး ကသျစိဒြဝး။
4 யோவான் வனாந்திரத்தில் ஞானஸ்நானம் கொடுத்து, பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கான ஞானஸ்நானத்தைப்பற்றி பிரசங்கம்பண்ணிக்கொண்டிருந்தான்.
သဧဝ ယောဟန် ပြာန္တရေ မဇ္ဇိတဝါန် တထာ ပါပမာရ္ဇနနိမိတ္တံ မနောဝျာဝရ္တ္တကမဇ္ဇနသျ ကထာဉ္စ ပြစာရိတဝါန်၊
5 அப்பொழுது யூதேயா தேசத்தார் மற்றும் எருசலேம் நகரத்தார் அனைவரும், யோவானிடம்போய், தங்களுடைய பாவங்களை அறிக்கைசெய்து, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.
တတော ယိဟူဒါဒေၑယိရူၑာလမ္နဂရနိဝါသိနး သရွွေ လောကာ ဗဟိ ရ္ဘူတွာ တသျ သမီပမာဂတျ သွာနိ သွာနိ ပါပါနျင်္ဂီကၖတျ ယရ္ဒ္ဒနနဒျာံ တေန မဇ္ဇိတာ ဗဘူဝုး၊
6 யோவான் ஒட்டகமயிர் ஆடையை அணிந்து, தன் இடுப்பில் தோல் கச்சையைக் கட்டிக்கொண்டு, வெட்டுக்கிளியையும் காட்டுத்தேனையும் சாப்பிடுகிறவனாகவும் இருந்தான்.
အသျ ယောဟနး ပရိဓေယာနိ ကြမေလကလောမဇာနိ, တသျ ကဋိဗန္ဓနံ စရ္မ္မဇာတမ်, တသျ ဘက္ၐျာဏိ စ ၑူကကီဋာ ဝနျမဓူနိ စာသန်၊
7 அவன்: என்னைவிட வல்லவர் ஒருவர் எனக்குப்பின்பு வருகிறார், அவருடைய காலணிகளின் வாரைக் குனிந்து அவிழ்ப்பதற்குக்கூட நான் தகுதியானவன் இல்லை.
သ ပြစာရယန် ကထယာဉ္စကြေ, အဟံ နမြီဘူယ ယသျ ပါဒုကာဗန္ဓနံ မောစယိတုမပိ န ယောဂျောသ္မိ, တာဒၖၑော မတ္တော ဂုရုတရ ဧကး ပုရုၐော မတ္ပၑ္စာဒါဂစ္ဆတိ၊
8 நான் தண்ணீரினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; அவரோ பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார் என்று பிரசங்கம்பண்ணினான்.
အဟံ ယုၐ္မာန် ဇလေ မဇ္ဇိတဝါန် ကိန္တု သ ပဝိတြ အာတ္မာနိ သံမဇ္ဇယိၐျတိ၊
9 அந்த நாட்களில், இயேசு கலிலேயாவில் உள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்து வந்து, யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார்.
အပရဉ္စ တသ္မိန္နေဝ ကာလေ ဂါလီလ္ပြဒေၑသျ နာသရဒ္ဂြာမာဒ် ယီၑုရာဂတျ ယောဟနာ ယရ္ဒ္ဒနနဒျာံ မဇ္ဇိတော'ဘူတ်၊
10 ௧0 அவர் தண்ணீரில் இருந்து கரையேறின உடனே, வானம் திறக்கப்பட்டதையும், ஆவியானவர் புறாவைப்போல தம்மேல் இறங்குகிறதையும் பார்த்தார்.
သ ဇလာဒုတ္ထိတမာတြော မေဃဒွါရံ မုက္တံ ကပေါတဝတ် သွသျောပရိ အဝရောဟန္တမာတ္မာနဉ္စ ဒၖၐ္ဋဝါန်၊
11 ௧௧ அப்பொழுது, நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மிடம் பிரியமாக இருக்கிறேன் என்று, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானது.
တွံ မမ ပြိယး ပုတြသ္တွယျေဝ မမမဟာသန္တောၐ ဣယမာကာၑီယာ ဝါဏီ ဗဘူဝ၊
12 ௧௨ உடனே ஆவியானவர் அவரை வனாந்திரத்திற்குப் போகும்படி ஏவினார்.
တသ္မိန် ကာလေ အာတ္မာ တံ ပြာန္တရမဓျံ နိနာယ၊
13 ௧௩ அவர் வனாந்திரத்திலே நாற்பதுநாட்கள் இருந்து, சாத்தானால் சோதிக்கப்பட்டு, அங்கே காட்டுமிருகங்களின் நடுவிலே தங்கிக்கொண்டிருந்தார். தேவதூதர்கள் அவருக்குப் பணிவிடைசெய்தார்கள்.
အထ သ စတွာရိံၑဒ္ဒိနာနိ တသ္မိန် သ္ထာနေ ဝနျပၑုဘိး သဟ တိၐ္ဌန် ၑဲတာနာ ပရီက္ၐိတး; ပၑ္စာတ် သွရ္ဂီယဒူတာသ္တံ သိၐေဝိရေ၊
14 ௧௪ யோவான் சிறைக்காவலில் வைக்கப்பட்டபின்பு, இயேசு கலிலேயாவிற்கு வந்து, தேவனுடைய ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கம் செய்து:
အနန္တရံ ယောဟနိ ဗန္ဓနာလယေ ဗဒ္ဓေ သတိ ယီၑု ရ္ဂာလီလ္ပြဒေၑမာဂတျ ဤၑွရရာဇျသျ သုသံဝါဒံ ပြစာရယန် ကထယာမာသ,
15 ௧௫ காலம் நிறைவேறியது, தேவனுடைய ராஜ்யம் அருகில் இருக்கிறது; மனந்திரும்பி, நற்செய்தியை விசுவாசியுங்கள் என்றார்.
ကာလး သမ္ပူရ္ဏ ဤၑွရရာဇျဉ္စ သမီပမာဂတံ; အတောဟေတော ရျူယံ မနာံသိ ဝျာဝရ္တ္တယဓွံ သုသံဝါဒေ စ ဝိၑွာသိတ၊
16 ௧௬ அவர் கலிலேயா கடலின் ஓரமாக நடந்துபோகும்போது, மீனவர்களாக இருந்த சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும் கடலில் வலையைப் போட்டுக்கொண்டிருக்கிறதைப் பார்த்தார்.
တဒနန္တရံ သ ဂါလီလီယသမုဒြသျ တီရေ ဂစ္ဆန် ၑိမောန် တသျ ဘြာတာ အန္ဒြိယနာမာ စ ဣမော် ဒွေါ် ဇနော် မတ္သျဓာရိဏော် သာဂရမဓျေ ဇာလံ ပြက္ၐိပန္တော် ဒၖၐ္ဋွာ တာဝဝဒတ်,
17 ௧௭ இயேசு அவர்களைப் பார்த்து: என் பின்னே வாருங்கள், உங்களை மனிதர்களைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்.
ယုဝါံ မမ ပၑ္စာဒါဂစ္ဆတံ, ယုဝါမဟံ မနုၐျဓာရိဏော် ကရိၐျာမိ၊
18 ௧௮ உடனே அவர்கள் தங்களுடைய வலைகளைவிட்டு, அவருக்குப் பின்னே சென்றார்கள்.
တတသ္တော် တတ္က္ၐဏမေဝ ဇာလာနိ ပရိတျဇျ တသျ ပၑ္စာတ် ဇဂ္မတုး၊
19 ௧௯ அவர் அந்த இடத்தைவிட்டுச் சற்றுதூரம் சென்றபோது, செபெதேயுவின் குமாரன் யாக்கோபும் அவனுடைய சகோதரன் யோவானும் படகிலே வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருந்ததைப் பார்த்து,
တတး ပရံ တတ္သ္ထာနာတ် ကိဉ္စိဒ် ဒူရံ ဂတွာ သ သိဝဒီပုတြယာကူဗ် တဒ္ဘြာတၖယောဟန် စ ဣမော် နော်ကာယာံ ဇာလာနာံ ဇီရ္ဏမုဒ္ဓါရယန္တော် ဒၖၐ္ဋွာ တာဝါဟူယတ်၊
20 ௨0 உடனே அவர்களையும் அழைத்தார்; அப்பொழுது அவர்கள் தங்களுடைய தகப்பனாகிய செபெதேயுவை படகிலே கூலியாட்களோடு விட்டுவிட்டு, அவருக்குப் பின்னே சென்றார்கள்.
တတသ္တော် နော်ကာယာံ ဝေတနဘုဂ္ဘိး သဟိတံ သွပိတရံ ဝိဟာယ တတ္ပၑ္စာဒီယတုး၊
21 ௨௧ பின்பு அவர்கள் கப்பர்நகூமுக்குப் போனார்கள். உடனே அவர் ஓய்வுநாளிலே ஜெப ஆலயத்திற்குச் சென்று, போதனை பண்ணினார்.
တတး ပရံ ကဖရ္နာဟူမ္နာမကံ နဂရမုပသ္ထာယ သ ဝိၑြာမဒိဝသေ ဘဇနဂြဟံ ပြဝိၑျ သမုပဒိဒေၑ၊
22 ௨௨ அவர் வேதபண்டிதர்களைப்போல போதிக்காமல், அதிகாரமுடையவராக அவர்களுக்குப் போதித்ததினால் அவருடைய போதனையைக்குறித்து மக்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
တသျောပဒေၑာလ္လောကာ အာၑ္စရျျံ မေနိရေ ယတး သောဓျာပကာဣဝ နောပဒိၑန် ပြဘာဝဝါနိဝ ပြောပဒိဒေၑ၊
23 ௨௩ அவர்களுடைய ஜெப ஆலயத்திலே அசுத்தஆவி பிடித்திருந்த ஒரு மனிதன் இருந்தான்.
အပရဉ္စ တသ္မိန် ဘဇနဂၖဟေ အပဝိတြဘူတေန ဂြသ္တ ဧကော မာနုၐ အာသီတ်၊ သ စီတ္ၑဗ္ဒံ ကၖတွာ ကထယာဉ္စကေ
24 ௨௪ அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா நீர் வந்தீர்? நீர் யார் என்று நான் அறிவேன், நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று சத்தமாகக் கத்தினான்.
ဘော နာသရတီယ ယီၑော တွမသ္မာန် တျဇ, တွယာ သဟာသ္မာကံ ကး သမ္ဗန္ဓး? တွံ ကိမသ္မာန် နာၑယိတုံ သမာဂတး? တွမီၑွရသျ ပဝိတြလောက ဣတျဟံ ဇာနာမိ၊
25 ௨௫ அதற்கு இயேசு: நீ பேசாமல் இவனைவிட்டு வெளியே போ என்று அதை அதட்டினார்.
တဒါ ယီၑုသ္တံ တရ္ဇယိတွာ ဇဂါဒ တူၐ္ဏီံ ဘဝ ဣတော ဗဟိရ္ဘဝ စ၊
26 ௨௬ உடனே அந்த அசுத்தஆவி அவனை அலைக்கழித்து, அதிக சத்தம்போட்டு, அவனைவிட்டுப் போய்விட்டது.
တတး သော'ပဝိတြဘူတသ္တံ သမ္ပီဍျ အတျုစဲၑ္စီတ္ကၖတျ နိရ္ဇဂါမ၊
27 ௨௭ எல்லோரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன? இந்தப் புதிய உபதேசம் எப்படிப்பட்டது? இவர் அதிகாரத்தோடு அசுத்தஆவிகளுக்குக் கட்டளைக் கொடுக்கிறார், அவைகள் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று தங்களுக்குள்ளே ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
တေနဲဝ သရွွေ စမတ္ကၖတျ ပရသ္ပရံ ကထယာဉ္စကြိရေ, အဟော ကိမိဒံ? ကီဒၖၑော'ယံ နဝျ ဥပဒေၑး? အနေန ပြဘာဝေနာပဝိတြဘူတေၐွာဇ္ဉာပိတေၐု တေ တဒါဇ္ဉာနုဝရ္တ္တိနော ဘဝန္တိ၊
28 ௨௮ எனவே, அவரைப்பற்றின புகழ் கலிலேயா நாடு முழுவதும் பரவியது.
တဒါ တသျ ယၑော ဂါလီလၑ္စတုရ္ဒိက္သ္ထသရွွဒေၑာန် ဝျာပ္နောတ်၊
29 ௨௯ உடனே அவர்கள் ஜெப ஆலயத்தைவிட்டுப் புறப்பட்டு, யாக்கோபு மற்றும் யோவானோடு, சீமோன் அந்திரேயா என்பவர்களுடைய வீட்டிற்குப் போனார்கள்.
အပရဉ္စ တေ ဘဇနဂၖဟာဒ် ဗဟိ ရ္ဘူတွာ ယာကူဗျောဟန္ဘျာံ သဟ ၑိမောန အာန္ဒြိယသျ စ နိဝေၑနံ ပြဝိဝိၑုး၊
30 ௩0 அங்கே சீமோனுடைய மாமியார் ஜூரத்தோடு படுத்திருந்தாள்; உடனே அவர்கள் அவளைப்பற்றி அவருக்குச் சொன்னார்கள்.
တဒါ ပိတရသျ ၑွၑြူရ္ဇွရပီဍိတာ ၑယျာယာမာသ္တ ဣတိ တေ တံ ဈဋိတိ ဝိဇ္ဉာပယာဉ္စကြုး၊
31 ௩௧ அவர் அருகில் சென்று, அவள் கையைப் பிடித்து, அவளைத் தூக்கிவிட்டார்; உடனே ஜூரம் அவளைவிட்டு நீங்கியது; அப்பொழுது அவள் அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள்.
တတး သ အာဂတျ တသျာ ဟသ္တံ ဓၖတွာ တာမုဒသ္ထာပယတ်; တဒဲဝ တာံ ဇွရော'တျာက္ၐီတ် တတး ပရံ သာ တာန် သိၐေဝေ၊
32 ௩௨ மாலைநேரத்தில் சூரியன் மறையும்போது, எல்லா நோயாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும், இயேசுவிடம் கொண்டுவந்தார்கள்.
အထာသ္တံ ဂတေ ရဝေါ် သန္ဓျာကာလေ သတိ လောကာသ္တတ္သမီပံ သရွွာန် ရောဂိဏော ဘူတဓၖတာံၑ္စ သမာနိနျုး၊
33 ௩௩ பட்டணத்து மக்கள் எல்லோரும் வீட்டுவாசலுக்கு முன்பாகக் கூடிவந்தார்கள்.
သရွွေ နာဂရိကာ လောကာ ဒွါရိ သံမိလိတာၑ္စ၊
34 ௩௪ பலவிதமான வியாதிகளினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அநேக மக்களை அவர் சுகமாக்கி, அநேக பிசாசுகளையும் துரத்திவிட்டார்; அந்தப் பிசாசுகளுக்கு, அவர் யார் என்று தெரிந்திருந்ததால், அவைகள் பேசுகிறதற்கு அவர் அனுமதிக்கவில்லை.
တတး သ နာနာဝိဓရောဂိဏော ဗဟူန် မနုဇာနရောဂိဏၑ္စကာရ တထာ ဗဟူန် ဘူတာန် တျာဇယာဉ္စကာရ တာန် ဘူတာန် ကိမပိ ဝါကျံ ဝက္တုံ နိၐိၐေဓ စ ယတောဟေတောသ္တေ တမဇာနန်၊
35 ௩௫ அவர் அதிகாலையில், இருட்டோடு எழுந்து புறப்பட்டு, வனாந்திரமான ஒரு இடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார்.
အပရဉ္စ သော'တိပြတျူၐေ ဝသ္တုတသ္တု ရာတြိၑေၐေ သမုတ္ထာယ ဗဟိရ္ဘူယ နိရ္ဇနံ သ္ထာနံ ဂတွာ တတြ ပြာရ္ထယာဉ္စကြေ၊
36 ௩௬ சீமோனும் அவனோடுகூட இருந்தவர்களும் அவரைப் பின்தொடர்ந்துபோய்,
အနန္တရံ ၑိမောန် တတ္သင်္ဂိနၑ္စ တသျ ပၑ္စာဒ် ဂတဝန္တး၊
37 ௩௭ அவரைப் பார்த்தபோது: எல்லோரும் உம்மைத் தேடுகிறார்கள் என்று சொன்னார்கள்.
တဒုဒ္ဒေၑံ ပြာပျ တမဝဒန် သရွွေ လောကာသ္တွာံ မၖဂယန္တေ၊
38 ௩௮ அவர்களை அவர் பார்த்து: அடுத்த ஊர்களிலும் நான் பிரசங்கம் பண்ணவேண்டும், எனவே அந்த இடங்களுக்குப் போகலாம் வாருங்கள்; இதற்காகத்தான் புறப்பட்டுவந்தேன் என்று சொல்லி;
တဒါ သော'ကထယတ် အာဂစ္ဆတ ဝယံ သမီပသ္ထာနိ နဂရာဏိ ယာမး, ယတော'ဟံ တတြ ကထာံ ပြစာရယိတုံ ဗဟိရာဂမမ်၊
39 ௩௯ கலிலேயா நாடு முழுவதும் அவர்களுடைய ஜெப ஆலயங்களில் அவர் பிரசங்கம்பண்ணிக்கொண்டும், பிசாசுகளைத் துரத்திக்கொண்டும் இருந்தார்.
အထ သ တေၐာံ ဂါလီလ္ပြဒေၑသျ သရွွေၐု ဘဇနဂၖဟေၐု ကထား ပြစာရယာဉ္စကြေ ဘူတာနတျာဇယဉ္စ၊
40 ௪0 அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் அவரிடம் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு: உமக்கு விருப்பமானால் என்னைச் சுகப்படுத்த உம்மால் முடியும் என்று அவரை வேண்டிக்கொண்டான்.
အနန္တရမေကး ကုၐ္ဌီ သမာဂတျ တတ္သမ္မုခေ ဇာနုပါတံ ဝိနယဉ္စ ကၖတွာ ကထိတဝါန် ယဒိ ဘဝါန် ဣစ္ဆတိ တရှိ မာံ ပရိၐ္ကရ္တ္တုံ ၑက္နောတိ၊
41 ௪௧ இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்கு விருப்பம் உண்டு, சுத்தமாகு என்றார்.
တတး ကၖပါလု ရျီၑုး ကရော် ပြသာရျျ တံ သ္ပၐ္ဋွာ ကထယာမာသ
42 ௪௨ இப்படி அவர் சொன்னவுடனே, குஷ்டரோகம் அவனைவிட்டு நீங்கியது, அவன் சுகம் பெற்றுக்கொண்டான்.
မမေစ္ဆာ ဝိဒျတေ တွံ ပရိၐ္ကၖတော ဘဝ၊ ဧတတ္ကထာယား ကထနမာတြာတ် သ ကုၐ္ဌီ ရောဂါန္မုက္တး ပရိၐ္ကၖတော'ဘဝတ်၊
43 ௪௩ அப்பொழுது அவர் அவனைப் பார்த்து: நீ இதை யாருக்கும் சொல்லாமல் இருக்க எச்சரிக்கையாக இரு;
တဒါ သ တံ ဝိသၖဇန် ဂါဎမာဒိၑျ ဇဂါဒ
44 ௪௪ ஆனாலும் நீ போய், ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, நீ சுத்தமானதினால், மோசே கட்டளையிட்டபடி அவர்களுக்கு நீ சுகம் பெற்றதின் சாட்சியாக காணிக்கை செலுத்து என்று உறுதியாகச் சொல்லி, உடனே அவனை அனுப்பிவிட்டார்.
သာဝဓာနော ဘဝ ကထာမိမာံ ကမပိ မာ ဝဒ; သွာတ္မာနံ ယာဇကံ ဒရ္ၑယ, လောကေဘျး သွပရိၐ္ကၖတေး ပြမာဏဒါနာယ မူသာနိရ္ဏီတံ ယဒ္ဒါနံ တဒုတ္သၖဇသွ စ၊
45 ௪௫ ஆனால், அவனோ புறப்பட்டுப்போய்; இந்த விஷயங்களை எல்லோருக்கும் சொல்லிப் பிரசித்தப்படுத்தினான். எனவே, அவர் வெளிப்படையாகப் பட்டணத்திற்குள் செல்லமுடியாமல், வெளியே வனாந்திரமான இடங்களில் தங்கியிருந்தார்; எல்லாப் பகுதிகளிலும் இருந்து மக்கள் அவரிடம் வந்தார்கள்.
ကိန္တု သ ဂတွာ တတ် ကရ္မ္မ ဣတ္ထံ ဝိသ္တာရျျ ပြစာရယိတုံ ပြာရေဘေ တေနဲဝ ယီၑုး ပုနး သပြကာၑံ နဂရံ ပြဝေၐ္ဋုံ နာၑက္နောတ် တတောဟေတောရ္ဗဟိး ကာနနသ္ထာနေ တသျော်; တထာပိ စတုရ္ဒ္ဒိဂ္ဘျော လောကာသ္တသျ သမီပမာယယုး၊

< மாற்கு 1 >