< மாற்கு 1 >

1 தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நற்செய்தியின் ஆரம்பம்.
ⲁ̅ⲧⲁⲣⲭⲏ ⲙⲡⲉⲩⲁⲅⲅⲉⲗⲓⲟⲛ ⲛⲓⲏⲥ ⲡⲉⲭⲥ ⲡϣⲏⲣⲉ ⲙⲡⲛⲟⲩⲧⲉ
2 “இதோ, நான் என் தூதுவனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவன் உமக்கு முன்பேபோய், உமக்கு வழியை ஆயத்தம்பண்ணுவான் என்றும்;
ⲃ̅ⲕⲁⲧⲁ ⲡⲉⲧⲥⲏϩ ϩⲛ ⲏⲥⲁⲓⲁⲥ ⲡⲉⲡⲣⲟⲫⲏⲧⲏⲥ ϫⲉ ⲉⲓⲥ ϩⲏⲏⲧⲉ ϯⲛⲁϫⲉⲩ ⲡⲁⲁⲅⲅⲉⲗⲟⲥ ϩⲓϩⲏ ⲙⲙⲟⲕ ⲛϥⲥⲃⲧⲉ ⲧⲉⲕϩⲓⲏ
3 கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள்” என்று “வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும்” என்றும், தீர்க்கதரிசன புத்தகங்களில் எழுதியிருக்கிறபடி;
ⲅ̅ⲡⲉϩⲣⲟⲟⲩ ⲙⲡⲉⲧⲱϣ ⲉⲃⲟⲗ ϩⲛ ⲧⲉⲣⲏⲙⲟⲥ ϫⲉ ⲥⲟⲩⲧⲛ ⲧⲉϩⲓⲏ ⲙⲡϫⲟⲉⲓⲥ ⲛⲧⲉⲧⲛⲥⲟⲩⲧⲛⲛⲉϥⲙⲟⲓⲧ
4 யோவான் வனாந்திரத்தில் ஞானஸ்நானம் கொடுத்து, பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கான ஞானஸ்நானத்தைப்பற்றி பிரசங்கம்பண்ணிக்கொண்டிருந்தான்.
ⲇ̅ⲁϥϣⲱⲡⲉ ⲇⲉ ⲛϭⲓ ⲓⲱϩⲁⲛⲛⲏⲥ ⲉϥϯⲃⲁⲡⲧⲓⲥⲙⲁ ⲙⲡϫⲁⲓⲉ ⲉϥⲕⲏⲣⲩⲥⲥⲉ ⲛⲟⲩⲃⲁⲡⲧⲓⲥⲙⲁ ⲙⲙⲉⲧⲁⲛⲟⲓⲁ ⲉⲡⲕⲱ ⲉⲃⲟⲗ ⲛⲛⲛⲟⲃⲉ
5 அப்பொழுது யூதேயா தேசத்தார் மற்றும் எருசலேம் நகரத்தார் அனைவரும், யோவானிடம்போய், தங்களுடைய பாவங்களை அறிக்கைசெய்து, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.
ⲉ̅ⲁⲩⲱ ⲁⲥⲃⲱⲕ ⲛⲁϥ ⲉⲃⲟⲗ ⲛϭⲓ ⲧⲉⲭⲱⲣⲁ ⲧⲏⲣⲥ ⲛϯⲟⲩⲇⲁⲓⲁ ⲛⲙⲛⲁ ⲑⲓⲉⲣⲟⲥⲟⲗⲩⲙⲁ ⲧⲏⲣⲟⲩ ⲁⲩϫⲓ ⲃⲁⲡⲧⲓⲥⲙⲁ ⲛⲧⲟⲟⲧϥ ϩⲙ ⲡⲓⲟⲣⲇⲁⲛⲏⲥ ⲡⲓⲉⲣⲟ ⲉⲩⲉⲝⲟⲙⲟⲗⲟⲅⲓ ⲛⲛⲉⲩⲛⲟⲃⲉ
6 யோவான் ஒட்டகமயிர் ஆடையை அணிந்து, தன் இடுப்பில் தோல் கச்சையைக் கட்டிக்கொண்டு, வெட்டுக்கிளியையும் காட்டுத்தேனையும் சாப்பிடுகிறவனாகவும் இருந்தான்.
ⲋ̅ⲁⲩⲱ ⲓⲱϩⲁⲛⲛⲏⲥ ⲛⲉⲣⲉϩⲉⲛϥⲱ ⲛϭⲁⲙⲟⲩⲗ ⲧⲟ ϩⲓⲱⲱϥ ⲉⲣⲉⲟⲩⲙⲟϫ ⲛϣⲁⲁⲣ ⲙⲏⲣ ⲉⲧⲉϥϯⲡⲉ ⲉϥⲟⲩⲉⲙϣϫⲉ ϩⲓⲉⲃⲓⲱ ⲛϩⲟⲟⲩⲧ
7 அவன்: என்னைவிட வல்லவர் ஒருவர் எனக்குப்பின்பு வருகிறார், அவருடைய காலணிகளின் வாரைக் குனிந்து அவிழ்ப்பதற்குக்கூட நான் தகுதியானவன் இல்லை.
ⲍ̅ⲁⲩⲱ ⲛⲉϥⲧⲁϣⲉⲟⲓϣ ⲉϥϫⲱ ⲙⲙⲟⲥ ϫⲉ ϥⲛⲏⲩ ⲙⲛⲛⲥⲱⲉⲓ ⲛϭⲓ ⲡⲉⲧϫⲟⲟⲣ ⲉⲣⲟⲉⲓ ⲉⲁⲛⲅⲟⲩϩⲓⲕⲁⲛⲟⲥ ⲁⲛ ⲉⲡⲁϩⲧ ⲉⲃⲱⲗ ⲉⲃⲟⲗ ⲙⲡⲙⲟⲩⲥ ⲙⲡⲉϥⲧⲟⲟⲩⲉ
8 நான் தண்ணீரினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; அவரோ பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார் என்று பிரசங்கம்பண்ணினான்.
ⲏ̅ⲁⲛⲟⲕ ⲁⲉⲓϯⲃⲁⲡⲧⲓⲥⲙⲁ ⲛⲏⲧⲛ ϩⲛ ⲟⲩⲙⲟⲟⲩ ⲛⲧⲟϥ ⲇⲉ ⲉϥⲛⲁⲃⲁⲡⲧⲓⲍⲉ ⲙⲙⲱⲧⲛ ϩⲛ ⲟⲩⲡⲛⲁ ⲉϥⲟⲩⲁⲁⲃ
9 அந்த நாட்களில், இயேசு கலிலேயாவில் உள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்து வந்து, யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார்.
ⲑ̅ⲁⲩⲱ ⲁⲥϣⲱⲡⲉ ϩⲛ ⲛⲉϩⲟⲟⲩ ⲉⲧⲙⲙⲁⲩ ⲁϥⲉⲓ ⲛϭⲓ ⲓⲏⲥ ⲉⲃⲟⲗ ϩⲛ ⲛⲁⲍⲁⲣⲉⲑ ⲛⲧⲉⲧⲅⲁⲗⲓⲗⲁⲓⲁ ⲁⲩⲱ ⲁϥϫⲓ ⲃⲁⲡⲧⲓⲥⲙⲁ ϩⲙ ⲡⲓⲟⲣⲇⲁⲛⲏⲥ ⲛⲧⲛⲓⲱϩⲁⲛⲛⲏⲥ
10 ௧0 அவர் தண்ணீரில் இருந்து கரையேறின உடனே, வானம் திறக்கப்பட்டதையும், ஆவியானவர் புறாவைப்போல தம்மேல் இறங்குகிறதையும் பார்த்தார்.
ⲓ̅ⲛⲧⲉⲩⲛⲟⲩ ⲇⲉ ⲉϥⲛⲏⲩ ⲉϩⲣⲁⲓ ⲙⲡⲙⲟⲟⲩ ⲁϥⲛⲁⲩ ⲉⲙⲡⲏⲩⲉ ⲉⲁⲩⲟⲩⲱⲛ ⲁⲩⲱ ⲡⲉⲡⲛⲁ ⲉϥⲛⲏⲩ ⲉⲡⲉⲥⲏⲧ ⲉϫⲱϥ ⲛⲑⲉ ⲛⲟⲩϭⲣⲟⲟⲙⲡⲉ
11 ௧௧ அப்பொழுது, நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மிடம் பிரியமாக இருக்கிறேன் என்று, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானது.
ⲓ̅ⲁ̅ⲁⲩⲱ ⲟⲩⲥⲙⲏ ⲁⲥϣⲱⲡⲉ ⲉⲃⲟⲗ ϩⲛ ⲙⲡⲏⲩⲉ ϫⲉ ⲛⲧⲟⲕ ⲡⲉ ⲡⲁϣⲏⲣⲉ ⲡⲁⲙⲉⲣⲓⲧ ⲉⲛⲧⲁⲡⲁⲟⲩⲱϣ ϣⲱⲡⲉ ⲛϩⲏⲧⲕ
12 ௧௨ உடனே ஆவியானவர் அவரை வனாந்திரத்திற்குப் போகும்படி ஏவினார்.
ⲓ̅ⲃ̅ⲁⲩⲱ ⲧⲉⲩⲛⲟⲩ ⲡⲉⲡⲛⲁ ⲁϥϫⲓⲧϥ ⲉⲃⲟⲗ ⲉⲧⲉⲣⲏⲙⲟⲥ
13 ௧௩ அவர் வனாந்திரத்திலே நாற்பதுநாட்கள் இருந்து, சாத்தானால் சோதிக்கப்பட்டு, அங்கே காட்டுமிருகங்களின் நடுவிலே தங்கிக்கொண்டிருந்தார். தேவதூதர்கள் அவருக்குப் பணிவிடைசெய்தார்கள்.
ⲓ̅ⲅ̅ⲁⲩⲱ ⲛⲉϥϩⲛ ⲧⲉⲣⲏⲙⲟⲥ ⲛϩⲙⲉ ⲛϩⲟⲟⲩ ⲉⲣⲉⲡⲥⲁⲧⲁⲛⲁⲥ ⲡⲉⲓⲣⲁⲍⲉ ⲙⲙⲟϥ ⲉϥϣⲟⲟⲡ ⲙⲛ ⲛⲉⲑⲏⲣⲓⲟⲛ ⲁⲩⲱ ⲛⲁⲅⲅⲉⲗⲟⲥ ⲛⲉⲩⲇⲓⲁⲕⲟⲛⲓ ⲛⲁϥ
14 ௧௪ யோவான் சிறைக்காவலில் வைக்கப்பட்டபின்பு, இயேசு கலிலேயாவிற்கு வந்து, தேவனுடைய ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கம் செய்து:
ⲓ̅ⲇ̅ⲙⲛⲛⲥⲁⲛⲥⲉⲡⲁⲣⲁⲇⲓⲇⲟⲩ ⲛⲓⲱϩⲁⲛⲛⲏⲥ ⲁϥⲉⲓ ⲛϭⲓ ⲓⲏⲥ ⲉⲧⲅⲁⲗⲓⲗⲁⲓⲁ ⲉϥⲕⲏⲣⲩⲥⲥⲉ ⲙⲡⲉⲩⲁⲅⲅⲉⲗⲓⲟⲛ ⲙⲡⲛⲟⲩⲧⲉ
15 ௧௫ காலம் நிறைவேறியது, தேவனுடைய ராஜ்யம் அருகில் இருக்கிறது; மனந்திரும்பி, நற்செய்தியை விசுவாசியுங்கள் என்றார்.
ⲓ̅ⲉ̅ϫⲉ ⲁⲡⲉⲩⲟⲓϣ ϫⲱⲕ ⲉⲃⲟⲗ ⲁⲩⲱ ⲁⲥϩⲱⲛ ⲉϩⲟⲩⲛ ⲛϭⲓ ⲧⲙⲛⲧⲣⲣⲟ ⲙⲡⲛⲟⲩⲧⲉ ⲙⲉⲧⲁⲛⲟⲓ ⲛⲧⲉⲧⲛⲡⲓⲥⲧⲉⲩⲉ ϩⲙ ⲡⲉⲩⲁⲅⲅⲉⲗⲓⲟⲛ
16 ௧௬ அவர் கலிலேயா கடலின் ஓரமாக நடந்துபோகும்போது, மீனவர்களாக இருந்த சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும் கடலில் வலையைப் போட்டுக்கொண்டிருக்கிறதைப் பார்த்தார்.
ⲓ̅ⲋ̅ⲁⲩⲱ ⲉϥⲙⲟⲟϣⲉ ϩⲁⲧⲛⲧⲉⲑⲁⲗⲁⲥⲥⲁ ⲛⲧⲅⲁⲗⲓⲗⲁⲓⲁ ⲁϥⲛⲁⲩ ⲉⲥⲓⲙⲱⲛ ⲛⲙⲁⲛⲇⲣⲉⲁⲥ ⲡⲥⲟⲛ ⲛⲥⲓⲙⲱⲛ ⲉⲩⲛⲟⲩϫϣⲛⲉ ⲉⲧⲉⲑⲁⲗⲁⲥⲥⲁ ⲛⲉϩⲉⲛⲟⲩⲱϩⲉ ⲅⲁⲣ ⲛⲉ
17 ௧௭ இயேசு அவர்களைப் பார்த்து: என் பின்னே வாருங்கள், உங்களை மனிதர்களைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்.
ⲓ̅ⲍ̅ⲡⲉϫⲁϥ ⲛⲁⲩ ⲛϭⲓ ⲓⲏⲥ ϫⲉ ⲁⲙⲏⲉⲓⲛ ⲟⲩⲉϩⲧⲏⲩⲧⲛ ⲛⲥⲱⲉⲓ ⲁⲩⲱ ϯⲛⲁⲣⲧⲏⲩⲧⲛ ⲛⲟⲩⲱϩⲉ ⲛⲣⲉϥϭⲉⲡⲣⲱⲙⲉ
18 ௧௮ உடனே அவர்கள் தங்களுடைய வலைகளைவிட்டு, அவருக்குப் பின்னே சென்றார்கள்.
ⲓ̅ⲏ̅ⲛⲧⲉⲩⲛⲟⲩ ⲇⲉ ⲁⲩⲕⲁⲛⲉⲩϣⲛⲏⲩ ⲁⲩⲟⲩⲁϩⲟⲩ ⲛⲥⲱϥ
19 ௧௯ அவர் அந்த இடத்தைவிட்டுச் சற்றுதூரம் சென்றபோது, செபெதேயுவின் குமாரன் யாக்கோபும் அவனுடைய சகோதரன் யோவானும் படகிலே வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருந்ததைப் பார்த்து,
ⲓ̅ⲑ̅ⲁⲩⲱ ⲛⲧⲉⲣⲉϥⲙⲟⲟϣⲉ ⲉⲑⲏ ⲛⲟⲩⲕⲟⲩⲉⲓ ⲁϥⲛⲁⲩ ⲉⲓⲁⲕⲱⲃⲟⲥ ⲡϣⲏⲣⲉ ⲛⲍⲉⲃⲉⲇⲁⲓⲟⲥ ⲛⲙⲓⲱϩⲁⲛⲛⲏⲥ ⲡⲉϥⲥⲟⲛ ⲛⲧⲟⲟⲩ ϩⲱⲟⲩ ⲉⲩϩⲙⲡϫⲟⲉⲓ ⲉⲩⲥⲟⲃⲧⲉ ⲛⲛⲉⲩϣⲛⲏⲩ
20 ௨0 உடனே அவர்களையும் அழைத்தார்; அப்பொழுது அவர்கள் தங்களுடைய தகப்பனாகிய செபெதேயுவை படகிலே கூலியாட்களோடு விட்டுவிட்டு, அவருக்குப் பின்னே சென்றார்கள்.
ⲕ̅ⲛⲧⲉⲩⲛⲟⲩ ⲁϥⲙⲟⲩⲧⲉ ⲉⲣⲟⲟⲩ ⲁⲩⲱ ⲁⲩⲕⲁⲡⲉⲩⲓⲱⲧ ⲍⲉⲃⲉⲇⲁⲓⲟⲥ ϩⲙ ⲡϫⲟⲉⲓ ⲙⲛⲛϫⲁⲓⲃⲉⲕⲉ ⲁⲩⲃⲱⲕ ⲁⲩⲟⲩⲁϩⲟⲩ ⲛⲥⲱϥ
21 ௨௧ பின்பு அவர்கள் கப்பர்நகூமுக்குப் போனார்கள். உடனே அவர் ஓய்வுநாளிலே ஜெப ஆலயத்திற்குச் சென்று, போதனை பண்ணினார்.
ⲕ̅ⲁ̅ⲁⲩⲃⲱⲕ ⲇⲉ ⲉϩⲟⲩⲛ ⲉⲕⲁⲫⲁⲣⲛⲁⲟⲩⲙ ⲁⲩⲱ ⲛⲧⲉⲩⲛⲟⲩ ϩⲛ ⲛⲥⲁⲃⲃⲁⲧⲟⲛ ⲁϥϯ ⲥⲃⲱ ϩⲛ ⲧⲥⲩⲛⲁⲅⲱⲅⲏ
22 ௨௨ அவர் வேதபண்டிதர்களைப்போல போதிக்காமல், அதிகாரமுடையவராக அவர்களுக்குப் போதித்ததினால் அவருடைய போதனையைக்குறித்து மக்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
ⲕ̅ⲃ̅ⲁⲩⲱ ⲁⲩⲣϣⲡⲏⲣⲉ ⲉϫⲛ ⲧⲉϥⲥⲃⲱ ⲉϥϯ ⲥⲃⲱ ⲅⲁⲣ ⲛⲁⲩ ⲛⲑⲉ ⲁⲛ ⲉⲧⲟⲩϯ ⲥⲃⲱ ⲛϭⲓ ⲛⲉⲅⲣⲁⲙⲙⲁⲧⲉⲩⲥ ϩⲱⲥⲉⲩⲛⲧϥⲧⲉⲝⲟⲩⲥⲓⲁ ⲙⲙⲁⲩ
23 ௨௩ அவர்களுடைய ஜெப ஆலயத்திலே அசுத்தஆவி பிடித்திருந்த ஒரு மனிதன் இருந்தான்.
ⲕ̅ⲅ̅ⲁⲩⲱ ⲛⲧⲉⲩⲛⲟⲩ ⲛⲉⲩⲛⲟⲩⲣⲱⲙⲉ ϩⲛ ⲧⲥⲩⲛⲁⲅⲱⲅⲏ ⲉⲣⲉⲟⲩⲡⲛⲁ ⲛⲁⲕⲁⲑⲁⲣⲧⲟⲛ ⲛⲙⲙⲁϥ ⲁⲩⲱ ⲁϥϫⲓϣⲕⲁⲕ ⲉⲃⲟⲗ
24 ௨௪ அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா நீர் வந்தீர்? நீர் யார் என்று நான் அறிவேன், நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று சத்தமாகக் கத்தினான்.
ⲕ̅ⲇ̅ⲉϥϫⲱ ⲙⲙⲟⲥ ϫⲉ ⲁϩⲣⲟⲕ ⲛⲙⲙⲁⲛ ⲓⲏⲥ ⲡⲛⲁⲍⲱⲣⲁⲓⲟⲥ ⲛⲧⲁⲕⲉⲓ ⲉⲧⲁⲕⲟⲛ ϯⲥⲟⲟⲩⲛ ⲙⲙⲟⲕ ϫⲉ ⲛⲧⲕⲛⲓⲙ ⲛⲧⲕⲡⲉⲧⲟⲩⲁⲁⲃ ⲙⲡⲛⲟⲩⲧⲉ
25 ௨௫ அதற்கு இயேசு: நீ பேசாமல் இவனைவிட்டு வெளியே போ என்று அதை அதட்டினார்.
ⲕ̅ⲉ̅ⲁⲩⲱ ⲓⲏⲥ ⲁϥⲉⲡⲓⲧⲓⲙⲁ ⲛⲁϥ ⲉϥϫⲱ ⲙⲙⲟⲥ ϫⲉ ⲧⲙⲣⲱⲕ ⲛⲅⲉⲓ ⲉⲃⲟⲗ ⲙⲙⲟϥ
26 ௨௬ உடனே அந்த அசுத்தஆவி அவனை அலைக்கழித்து, அதிக சத்தம்போட்டு, அவனைவிட்டுப் போய்விட்டது.
ⲕ̅ⲋ̅ⲁⲩⲱ ⲛⲧⲉⲣⲉⲡⲉⲡⲛⲁ ⲛⲁⲕⲁⲑⲁⲣⲧⲟⲛ ⲣⲁϩⲧϥ ⲉⲡⲕⲁϩ ⲁⲩⲱ ⲁϥⲱϣ ⲉⲃⲟⲗ ϩⲛ ⲟⲩⲛⲟϭ ⲛϩⲣⲟⲟⲩ ⲁϥⲉⲓ ⲉⲃⲟⲗ ⲙⲙⲟϥ
27 ௨௭ எல்லோரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன? இந்தப் புதிய உபதேசம் எப்படிப்பட்டது? இவர் அதிகாரத்தோடு அசுத்தஆவிகளுக்குக் கட்டளைக் கொடுக்கிறார், அவைகள் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று தங்களுக்குள்ளே ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
ⲕ̅ⲍ̅ⲁⲩⲱ ⲁⲩⲣ ϩⲟⲧⲉ ⲧⲏⲣⲟⲩ ϩⲱⲥⲧⲉ ⲛⲥⲉϣⲁϫⲉ ⲙⲛ ⲛⲉⲩⲉⲣⲏⲩ ⲉⲩϫⲱ ⲙⲙⲟⲥ ϫⲉ ⲟⲩ ⲡⲉ ⲡⲁⲓ ⲉⲓⲥ ⲟⲩⲥⲃⲱ ⲃⲃⲣⲣⲉ ϩⲛ ⲟⲩⲉⲝⲟⲩⲥⲓⲁ ⲛⲕⲉⲡⲛⲁ ⲛⲁⲕⲁⲑⲁⲣⲧⲟⲛ ϥⲟⲩⲉϩⲥⲁϩⲛⲉ ⲛⲁⲩ ⲁⲩⲱ ⲥⲉⲥⲱⲧⲙ ⲛⲥⲱϥ
28 ௨௮ எனவே, அவரைப்பற்றின புகழ் கலிலேயா நாடு முழுவதும் பரவியது.
ⲕ̅ⲏ̅ⲁⲡⲉϥⲥⲟⲉⲓⲧ ⲃⲱⲕ ⲉⲃⲟⲗ ⲛⲧⲉⲩⲛⲟⲩ ϩⲙ ⲙⲁ ⲛⲓⲙ ⲙⲡⲕⲱⲧⲉ ⲧⲏⲣϥ ⲛⲧⲅⲁⲗⲓⲗⲁⲓⲁ
29 ௨௯ உடனே அவர்கள் ஜெப ஆலயத்தைவிட்டுப் புறப்பட்டு, யாக்கோபு மற்றும் யோவானோடு, சீமோன் அந்திரேயா என்பவர்களுடைய வீட்டிற்குப் போனார்கள்.
ⲕ̅ⲑ̅ⲛⲧⲉⲩⲛⲟⲩ ⲇⲉ ⲛⲧⲉⲣⲟⲩⲉⲓ ⲉⲃⲟⲗ ϩⲛ ⲧⲥⲩⲛⲁⲅⲱⲅⲏ ⲁϥⲃⲱⲕ ⲉϩⲟⲩⲛ ⲉⲡⲏⲉⲓ ⲛⲥⲓⲙⲱⲛ ⲙⲛⲁⲛⲇⲣⲉⲁⲥ ⲛⲙⲓⲁⲕⲱⲃⲟⲥ ⲛⲙⲓⲱϩⲁⲛⲛⲏⲥ
30 ௩0 அங்கே சீமோனுடைய மாமியார் ஜூரத்தோடு படுத்திருந்தாள்; உடனே அவர்கள் அவளைப்பற்றி அவருக்குச் சொன்னார்கள்.
ⲗ̅ⲧϣⲱⲙⲉ ⲇⲉ ⲛⲥⲓⲙⲱⲛ ⲛⲉⲥⲛⲏϫ ⲉⲥϩⲏⲙ ⲁⲩⲱ ⲛⲧⲉⲩⲛⲟⲩ ⲁⲩϣⲁϫⲉ ⲛⲙⲙⲁϥ ⲉⲧⲃⲏⲏⲧⲥ
31 ௩௧ அவர் அருகில் சென்று, அவள் கையைப் பிடித்து, அவளைத் தூக்கிவிட்டார்; உடனே ஜூரம் அவளைவிட்டு நீங்கியது; அப்பொழுது அவள் அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள்.
ⲗ̅ⲁ̅ⲁϥϯⲡⲉϥⲟⲩⲟⲉⲓ ⲇⲉ ⲉⲣⲟⲥ ⲁϥⲧⲟⲩⲛⲟⲥ ⲉⲁϥⲁⲙⲁϩⲧⲉ ⲛⲧⲉⲥϭⲓϫ ⲁⲩⲱ ⲡⲉϩⲙⲟⲙ ⲁϥⲗⲟ ϩⲓⲱⲱⲥ ⲁⲥⲇⲓⲁⲕⲟⲛⲓ ⲛⲁⲩ
32 ௩௨ மாலைநேரத்தில் சூரியன் மறையும்போது, எல்லா நோயாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும், இயேசுவிடம் கொண்டுவந்தார்கள்.
ⲗ̅ⲃ̅ⲣⲟⲩϩⲉ ⲇⲉ ⲛⲧⲉⲣⲉϥϣⲱⲡⲉ ⲡⲉ ⲉⲣⲉⲡⲣⲏ ⲛⲁϩⲱⲧⲡ ⲁⲩⲉⲓⲛⲉ ⲛⲁϥ ⲛⲛⲉⲧⲙⲟⲕϩ ⲧⲏⲣⲟⲩ ⲙⲛ ⲛⲉⲧⲉⲣⲉⲛⲇⲁⲓⲙⲱⲛⲓⲟⲛ ⲛⲙⲙⲁⲩ
33 ௩௩ பட்டணத்து மக்கள் எல்லோரும் வீட்டுவாசலுக்கு முன்பாகக் கூடிவந்தார்கள்.
ⲗ̅ⲅ̅ⲁⲩⲱ ⲧⲡⲟⲗⲓⲥ ⲧⲏⲣⲥ ⲁⲥⲥⲱⲟⲩϩ ϩⲓⲣⲙⲡⲣⲟ ⲙⲡⲏⲓ
34 ௩௪ பலவிதமான வியாதிகளினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அநேக மக்களை அவர் சுகமாக்கி, அநேக பிசாசுகளையும் துரத்திவிட்டார்; அந்தப் பிசாசுகளுக்கு, அவர் யார் என்று தெரிந்திருந்ததால், அவைகள் பேசுகிறதற்கு அவர் அனுமதிக்கவில்லை.
ⲗ̅ⲇ̅ⲁϥⲑⲉⲣⲁⲡⲟⲩ ⲛⲟⲩⲙⲏⲏϣⲉ ⲉⲩⲙⲟⲕϩ ⲛϣⲱⲛⲉ ⲉⲩϣⲟⲃⲉ ⲁⲩⲱ ⲟⲩⲙⲏⲏϣⲉ ⲛⲇⲁⲓⲙⲱⲛⲓⲟⲛ ⲁϥⲛⲟϫⲟⲩ ⲉⲃⲟⲗ ⲉⲙⲁϥⲕⲁⲛⲇⲁⲓⲙⲱⲛⲓⲟⲛ ⲉϣⲁϫⲉ ⲉⲃⲟⲗ ϫⲉ ⲉⲩⲥⲟⲟⲩⲛ ⲙⲙⲟϥ
35 ௩௫ அவர் அதிகாலையில், இருட்டோடு எழுந்து புறப்பட்டு, வனாந்திரமான ஒரு இடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார்.
ⲗ̅ⲉ̅ⲁⲩⲱ ϩⲧⲟⲟⲩ ⲉⲙⲁⲧⲉ ⲛⲧⲉⲣⲉϥⲧⲱⲟⲩⲛ ⲁϥⲃⲱⲕ ⲉⲃⲟⲗ ⲉⲩⲙⲁ ⲛϫⲁⲓⲉ ⲁϥϣⲗⲏⲗ ⲙⲡⲛⲁⲩ ⲉⲧⲙⲙⲁⲩ
36 ௩௬ சீமோனும் அவனோடுகூட இருந்தவர்களும் அவரைப் பின்தொடர்ந்துபோய்,
ⲗ̅ⲋ̅ⲁⲩⲱ ⲁⲩⲡⲱⲧ ⲉⲃⲟⲗ ⲛⲥⲱϥ ⲛϭⲓ ⲥⲓⲙⲱⲛ ⲙⲛ ⲛⲉⲧⲛⲙⲙⲁϥ ⲁⲩⲧⲁϩⲟϥ
37 ௩௭ அவரைப் பார்த்தபோது: எல்லோரும் உம்மைத் தேடுகிறார்கள் என்று சொன்னார்கள்.
ⲗ̅ⲍ̅ⲁⲩⲱ ⲡⲉϫⲁⲩ ⲛⲁϥ ϫⲉ ⲥⲉⲕⲱⲧⲉ ⲛⲥⲱⲕ ⲧⲏⲣⲟⲩ
38 ௩௮ அவர்களை அவர் பார்த்து: அடுத்த ஊர்களிலும் நான் பிரசங்கம் பண்ணவேண்டும், எனவே அந்த இடங்களுக்குப் போகலாம் வாருங்கள்; இதற்காகத்தான் புறப்பட்டுவந்தேன் என்று சொல்லி;
ⲗ̅ⲏ̅ⲡⲉϫⲁϥ ⲛⲁⲩ ϫⲉ ⲙⲁⲣⲟⲛ ⲉⲕⲉⲙⲁ ⲉⲛⲕⲉⲧⲙⲙⲟ ⲉⲧϩⲏⲛ ⲉϩⲟⲩⲛ ϫⲉⲕⲁⲥ ⲉⲓⲉⲕⲏⲣⲩⲥⲥⲉ ⲟⲛ ⲛϩⲏⲧⲟⲩ ⲛⲧⲁⲓⲉⲓ ⲅⲁⲣ ⲉⲃⲟⲗ ⲉⲡⲉⲓϩⲱⲃ
39 ௩௯ கலிலேயா நாடு முழுவதும் அவர்களுடைய ஜெப ஆலயங்களில் அவர் பிரசங்கம்பண்ணிக்கொண்டும், பிசாசுகளைத் துரத்திக்கொண்டும் இருந்தார்.
ⲗ̅ⲑ̅ⲁⲩⲱ ⲁϥⲃⲱⲕ ⲉϥⲕⲏⲣⲩⲥⲥⲉ ϩⲛ ⲛⲉⲩⲥⲩⲛⲁⲅⲱⲅⲏ ϩⲛ ⲧⲅⲁⲗⲓⲗⲁⲓⲁ ⲧⲏⲣⲥ ⲁⲩⲱ ⲛⲕⲉⲇⲁⲓⲙⲱⲛⲓⲟⲛ ⲉϥⲛⲟⲩϫⲉ ⲙⲙⲟⲟⲩ ⲉⲃⲟⲗ
40 ௪0 அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் அவரிடம் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு: உமக்கு விருப்பமானால் என்னைச் சுகப்படுத்த உம்மால் முடியும் என்று அவரை வேண்டிக்கொண்டான்.
ⲙ̅ⲁⲩⲱ ⲁϥⲉⲓ ϣⲁⲣⲟϥ ⲛϭⲓ ⲟⲩⲣⲱⲙⲉ ⲉϥⲥⲟⲃϩ ⲉϥⲡⲁⲣⲁⲕⲁⲗⲉⲓ ⲙⲙⲟϥ ⲉϥϫⲱ ⲙⲙⲟⲥ ⲛⲁϥ ϫⲉ ⲉⲕϣⲁⲛⲟⲩⲱϣ ⲕⲛⲁⲧⲃⲃⲟⲉⲓ
41 ௪௧ இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்கு விருப்பம் உண்டு, சுத்தமாகு என்றார்.
ⲙ̅ⲁ̅ⲁⲩⲱ ⲛⲧⲉⲣⲉϥϣⲛϩⲧⲏϥ ⲁϥⲥⲟⲩⲧⲛⲧⲟⲟⲧϥ ⲉⲃⲟⲗ ⲁⲩⲱ ⲁϥⲕⲱϩ ⲉⲣⲟϥ ⲉϥϫⲱ ⲙⲙⲟⲥ ⲛⲁϥ ϫⲉ ϯⲟⲩⲱϣ ⲧⲃⲃⲟ
42 ௪௨ இப்படி அவர் சொன்னவுடனே, குஷ்டரோகம் அவனைவிட்டு நீங்கியது, அவன் சுகம் பெற்றுக்கொண்டான்.
ⲙ̅ⲃ̅ⲁⲩⲱ ⲛⲧⲉⲩⲛⲟⲩ ⲁⲡⲉϥⲥⲱⲃⲁϩ ⲗⲟ ϩⲓⲱⲱϥ ⲁϥⲧⲃⲃⲟ
43 ௪௩ அப்பொழுது அவர் அவனைப் பார்த்து: நீ இதை யாருக்கும் சொல்லாமல் இருக்க எச்சரிக்கையாக இரு;
ⲙ̅ⲅ̅ⲁⲩⲱ ⲛⲧⲉⲣⲉϥϩⲱⲛ ⲉⲧⲟⲟⲧϥ ⲛⲧⲉⲩⲛⲟⲩ ⲁϥϫⲟⲟⲩϥ ⲉⲃⲟⲗ
44 ௪௪ ஆனாலும் நீ போய், ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, நீ சுத்தமானதினால், மோசே கட்டளையிட்டபடி அவர்களுக்கு நீ சுகம் பெற்றதின் சாட்சியாக காணிக்கை செலுத்து என்று உறுதியாகச் சொல்லி, உடனே அவனை அனுப்பிவிட்டார்.
ⲙ̅ⲇ̅ⲉϥϫⲱ ⲙⲙⲟⲥ ⲛⲁϥ ϫⲉ ϭⲱϣⲧ ⲙⲡⲣϫⲟⲟⲥ ⲛⲗⲁⲁⲩ ⲁⲗⲗⲁ ⲃⲱⲕ ⲛⲅⲧⲥⲁⲃⲟⲕ ⲉⲡⲟⲩⲏⲏⲃ ⲛⲅϫⲓ ⲉϩⲣⲁⲓ ⲉⲧⲃⲉ ⲡⲉⲕⲧⲃⲃⲟ ⲛⲛⲉⲛⲧⲁⲙⲱⲩⲥⲏⲥ ⲟⲩⲉϩⲥⲁϩⲛⲉ ⲙⲙⲟⲟⲩ ⲉⲩⲙⲛⲧⲙⲛⲧⲣⲉ ⲛⲁⲩ
45 ௪௫ ஆனால், அவனோ புறப்பட்டுப்போய்; இந்த விஷயங்களை எல்லோருக்கும் சொல்லிப் பிரசித்தப்படுத்தினான். எனவே, அவர் வெளிப்படையாகப் பட்டணத்திற்குள் செல்லமுடியாமல், வெளியே வனாந்திரமான இடங்களில் தங்கியிருந்தார்; எல்லாப் பகுதிகளிலும் இருந்து மக்கள் அவரிடம் வந்தார்கள்.
ⲙ̅ⲉ̅ⲛⲧⲉⲣⲉϥⲉⲓ ⲇⲉ ⲉⲃⲟⲗ ⲁϥⲁⲣⲭⲉⲥⲑⲁⲓ ⲛⲧⲁϣⲉⲟⲓϣ ⲛϩⲁϩ ⲁⲩⲱ ⲉⲥⲣⲡϣⲁϫⲉ ϩⲱⲥⲧⲉ ⲛϥⲧⲙϭⲙϭⲟⲙ ⲉⲃⲱⲕ ⲉϩⲟⲩⲛ ⲉⲧⲡⲟⲗⲓⲥ ⲛⲟⲩⲱⲛϩ ⲁⲗⲗⲁ ⲛⲉϥϩⲛ ϩⲉⲛⲙⲁ ⲛϫⲁⲓⲉ ⲁⲩⲱ ⲛⲉⲩⲛⲏⲩ ⲉⲣⲁⲧϥ ⲉⲃⲟⲗ ϩⲙ ⲙⲁ ⲛⲓⲙ

< மாற்கு 1 >