< மாற்கு 8 >

1 அந்த நாட்களிலே அநேக மக்கள் கூடிவந்திருக்கும்போது, அவர்கள் சாப்பிடுகிறதற்கு ஒன்றுமில்லாததினால், இயேசு தம்முடைய சீடர்களை அழைத்து:
ਤਦਾ ਤਤ੍ਸਮੀਪੰ ਬਹਵੋ ਲੋਕਾ ਆਯਾਤਾ ਅਤਸ੍ਤੇਸ਼਼ਾਂ ਭੋਜ੍ਯਦ੍ਰਵ੍ਯਾਭਾਵਾਦ੍ ਯੀਸ਼ੁਃ ਸ਼ਿਸ਼਼੍ਯਾਨਾਹੂਯ ਜਗਾਦ, |
2 மக்களுக்காகப் பரிதாபப்படுகிறேன், இவர்கள் இப்பொழுது என்னிடம் தங்கியிருந்த மூன்றுநாட்களாகச் சாப்பிட ஒன்றுமில்லாமல் இருக்கிறார்கள்.
ਲੋਕਨਿਵਹੇ ਮਮ ਕ੍ਰੁʼਪਾ ਜਾਯਤੇ ਤੇ ਦਿਨਤ੍ਰਯੰ ਮਯਾ ਸਾਰ੍ੱਧੰ ਸਨ੍ਤਿ ਤੇਸ਼਼ਾਂ ਭੋਜ੍ਯੰ ਕਿਮਪਿ ਨਾਸ੍ਤਿ|
3 இவர்களில் சிலர் தூரத்திலிருந்து வந்திருப்பதினால், நான் இவர்களைப் பட்டினியாக வீட்டிற்கு அனுப்பிவிட்டால், போகும் வழியில் சோர்ந்துபோவார்களே என்றார்.
ਤੇਸ਼਼ਾਂ ਮਧ੍ਯੇ(ਅ)ਨੇਕੇ ਦੂਰਾਦ੍ ਆਗਤਾਃ, ਅਭੁਕ੍ਤੇਸ਼਼ੁ ਤੇਸ਼਼ੁ ਮਯਾ ਸ੍ਵਗ੍ਰੁʼਹਮਭਿਪ੍ਰਹਿਤੇਸ਼਼ੁ ਤੇ ਪਥਿ ਕ੍ਲਮਿਸ਼਼੍ਯਨ੍ਤਿ|
4 அதற்கு அவருடைய சீடர்கள்: இந்த வனாந்திரத்திலே ஒருவன் எங்கே இருந்து அப்பங்களைக் கொண்டுவந்து இத்தனை மக்களுக்குக் கொடுத்து திருப்தியாக்கமுடியும் என்றார்கள்.
ਸ਼ਿਸ਼਼੍ਯਾ ਅਵਾਦਿਸ਼਼ੁਃ, ਏਤਾਵਤੋ ਲੋਕਾਨ੍ ਤਰ੍ਪਯਿਤੁਮ੍ ਅਤ੍ਰ ਪ੍ਰਨ੍ਤਰੇ ਪੂਪਾਨ੍ ਪ੍ਰਾਪ੍ਤੁੰ ਕੇਨ ਸ਼ਕ੍ਯਤੇ?
5 அதற்கு அவர்: உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கிறது என்று கேட்டார். அவர்கள்: ஏழு அப்பங்கள் இருக்கிறது என்றார்கள்.
ਤਤਃ ਸ ਤਾਨ੍ ਪਪ੍ਰੱਛ ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਕਤਿ ਪੂਪਾਃ ਸਨ੍ਤਿ? ਤੇ(ਅ)ਕਥਯਨ੍ ਸਪ੍ਤ|
6 அப்பொழுது அவர் மக்களைத் தரையிலே பந்தி உட்காரக் கட்டளையிட்டு, அந்த ஏழு அப்பங்களையும் எடுத்து, நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, அவர்களுக்குப் பரிமாற சீடர்களிடம் கொடுத்தார்; அவர்கள் மக்களுக்குப் பரிமாறினார்கள்.
ਤਤਃ ਸ ਤਾੱਲੋਕਾਨ੍ ਭੁਵਿ ਸਮੁਪਵੇਸ਼਼੍ਟੁਮ੍ ਆਦਿਸ਼੍ਯ ਤਾਨ੍ ਸਪ੍ਤ ਪੂਪਾਨ੍ ਧ੍ਰੁʼਤ੍ਵਾ ਈਸ਼੍ਵਰਗੁਣਾਨ੍ ਅਨੁਕੀਰ੍ੱਤਯਾਮਾਸ, ਭੰਕ੍ਤ੍ਵਾ ਪਰਿਵੇਸ਼਼ਯਿਤੁੰ ਸ਼ਿਸ਼਼੍ਯਾਨ੍ ਪ੍ਰਤਿ ਦਦੌ, ਤਤਸ੍ਤੇ ਲੋਕੇਭ੍ਯਃ ਪਰਿਵੇਸ਼਼ਯਾਮਾਸੁਃ|
7 சில சிறிய மீன்களும் அவர்களிடம் இருந்தது; அவர் அவைகளையும் ஆசீர்வதித்து அவர்களுக்குப் பரிமாறச் சொன்னார்.
ਤਥਾ ਤੇਸ਼਼ਾਂ ਸਮੀਪੇ ਯੇ ਕ੍ਸ਼਼ੁਦ੍ਰਮਤ੍ਸ੍ਯਾ ਆਸਨ੍ ਤਾਨਪ੍ਯਾਦਾਯ ਈਸ਼੍ਵਰਗੁਣਾਨ੍ ਸੰਕੀਰ੍ਤ੍ਯ ਪਰਿਵੇਸ਼਼ਯਿਤੁਮ੍ ਆਦਿਸ਼਼੍ਟਵਾਨ੍|
8 அவர்கள் சாப்பிட்டுத் திருப்தியானார்கள்; மீதியான அப்பங்களை ஏழுகூடை நிறைய எடுத்தார்கள்.
ਤਤੋ ਲੋਕਾ ਭੁਕ੍ਤ੍ਵਾ ਤ੍ਰੁʼਪ੍ਤਿੰ ਗਤਾ ਅਵਸ਼ਿਸ਼਼੍ਟਖਾਦ੍ਯੈਃ ਪੂਰ੍ਣਾਃ ਸਪ੍ਤਡੱਲਕਾ ਗ੍ਰੁʼਹੀਤਾਸ਼੍ਚ|
9 சாப்பிட்டவர்கள் ஏறக்குறைய நான்காயிரம்பேராக இருந்தார்கள். பின்பு அவர் அவர்களை அனுப்பிவிட்டார்.
ਏਤੇ ਭੋਕ੍ਤਾਰਃ ਪ੍ਰਾਯਸ਼੍ਚਤੁਃ ਸਹਸ੍ਰਪੁਰੁਸ਼਼ਾ ਆਸਨ੍ ਤਤਃ ਸ ਤਾਨ੍ ਵਿਸਸਰ੍ਜ|
10 ௧0 உடனே அவர் தம்முடைய சீடர்களோடு படகில் ஏறி, தல்மனூத்தாவின் எல்லைகளுக்கு வந்தார்.
ਅਥ ਸ ਸ਼ਿਸ਼਼੍ਯਃ ਸਹ ਨਾਵਮਾਰੁਹ੍ਯ ਦਲ੍ਮਾਨੂਥਾਸੀਮਾਮਾਗਤਃ|
11 ௧௧ அப்பொழுது பரிசேயர்கள் வந்து அவரோடு வாக்குவாதம் பண்ணத்தொடங்கி, அவரைச் சோதிப்பதற்காக, வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள்.
ਤਤਃ ਪਰੰ ਫਿਰੂਸ਼ਿਨ ਆਗਤ੍ਯ ਤੇਨ ਸਹ ਵਿਵਦਮਾਨਾਸ੍ਤਸ੍ਯ ਪਰੀਕ੍ਸ਼਼ਾਰ੍ਥਮ੍ ਆਕਾਸ਼ੀਯਚਿਹ੍ਨੰ ਦ੍ਰਸ਼਼੍ਟੁੰ ਯਾਚਿਤਵਨ੍ਤਃ|
12 ௧௨ அவர் தம்முடைய ஆவியில் பெருமூச்சுவிட்டு: இந்தச் சந்ததியார்கள் அடையாளம் தேடுகிறது ஏன்? இந்தச் சந்ததியார்களுக்கு ஒரு அடையாளமும் கொடுக்கப்படுவது இல்லை என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி,
ਤਦਾ ਸੋ(ਅ)ਨ੍ਤਰ੍ਦੀਰ੍ਘੰ ਨਿਸ਼੍ਵਸ੍ਯਾਕਥਯਤ੍, ਏਤੇ ਵਿਦ੍ਯਮਾਨਨਰਾਃ ਕੁਤਸ਼੍ਚਿਨ੍ਹੰ ਮ੍ਰੁʼਗਯਨ੍ਤੇ? ਯੁਸ਼਼੍ਮਾਨਹੰ ਯਥਾਰ੍ਥੰ ਬ੍ਰਵੀਮਿ ਲੋਕਾਨੇਤਾਨ੍ ਕਿਮਪਿ ਚਿਹ੍ਨੰ ਨ ਦਰ੍ਸ਼ਯਿਸ਼਼੍ਯਤੇ|
13 ௧௩ அவர்களைவிட்டு மறுபடியும் படகில் ஏறி, அக்கரைக்குப் போனார்.
ਅਥ ਤਾਨ੍ ਹਿਤ੍ਵਾ ਪੁਨ ਰ੍ਨਾਵਮ੍ ਆਰੁਹ੍ਯ ਪਾਰਮਗਾਤ੍|
14 ௧௪ சீடர்கள் அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள்; படகிலே அவர்களிடம் ஒரு அப்பம்மட்டுமே இருந்தது.
ਏਤਰ੍ਹਿ ਸ਼ਿਸ਼਼੍ਯੈਃ ਪੂਪੇਸ਼਼ੁ ਵਿਸ੍ਮ੍ਰੁʼਤੇਸ਼਼ੁ ਨਾਵਿ ਤੇਸ਼਼ਾਂ ਸੰਨਿਧੌ ਪੂਪ ਏਕਏਵ ਸ੍ਥਿਤਃ|
15 ௧௫ அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் பரிசேயர்களுடைய புளித்த மாவைக்குறித்தும் ஏரோதின் புளித்த மாவைக்குறித்தும் எச்சரிக்கையாக இருங்கள் என்று கற்பித்தார்.
ਤਦਾਨੀਂ ਯੀਸ਼ੁਸ੍ਤਾਨ੍ ਆਦਿਸ਼਼੍ਟਵਾਨ੍ ਫਿਰੂਸ਼ਿਨਾਂ ਹੇਰੋਦਸ਼੍ਚ ਕਿਣ੍ਵੰ ਪ੍ਰਤਿ ਸਤਰ੍ਕਾਃ ਸਾਵਧਾਨਾਸ਼੍ਚ ਭਵਤ|
16 ௧௬ அதற்கு அவர்கள்: நம்மிடம் அப்பங்கள் இல்லாததினால் இப்படிச் சொல்லுகிறார் என்று தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள்.
ਤਤਸ੍ਤੇ(ਅ)ਨ੍ਯੋਨ੍ਯੰ ਵਿਵੇਚਨੰ ਕਰ੍ਤੁਮ੍ ਆਰੇਭਿਰੇ, ਅਸ੍ਮਾਕੰ ਸੰਨਿਧੌ ਪੂਪੋ ਨਾਸ੍ਤੀਤਿ ਹੇਤੋਰਿਦੰ ਕਥਯਤਿ|
17 ௧௭ இயேசு அதை அறிந்து, அவர்களைப் பார்த்து: உங்களிடம் அப்பங்கள் இல்லாததினால் நீங்கள் யோசனைபண்ணுகிறது ஏன்? இன்னும் சிந்திக்காமலும் உணராமலும் இருக்கிறீர்களா? இன்னும் உங்களுடைய இருதயம் கடினமாக இருக்கிறதா?
ਤਦ੍ ਬੁਦ੍ੱਵਾ ਯੀਸ਼ੁਸ੍ਤੇਭ੍ਯੋ(ਅ)ਕਥਯਤ੍ ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਸ੍ਥਾਨੇ ਪੂਪਾਭਾਵਾਤ੍ ਕੁਤ ਇੱਥੰ ਵਿਤਰ੍ਕਯਥ? ਯੂਯੰ ਕਿਮਦ੍ਯਾਪਿ ਕਿਮਪਿ ਨ ਜਾਨੀਥ? ਬੋੱਧੁਞ੍ਚ ਨ ਸ਼ਕ੍ਨੁਥ? ਯਾਵਦਦ੍ਯ ਕਿੰ ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਮਨਾਂਸਿ ਕਠਿਨਾਨਿ ਸਨ੍ਤਿ?
18 ௧௮ உங்களுக்குக் கண்கள் இருந்தும் பார்க்காமல் இருக்கிறீர்களா? காதுகள் இருந்தும் கேட்காமல் இருக்கிறீர்களா? நினைத்துப்பார்க்காமல் இருக்கிறீர்களா?
ਸਤ੍ਸੁ ਨੇਤ੍ਰੇਸ਼਼ੁ ਕਿੰ ਨ ਪਸ਼੍ਯਥ? ਸਤ੍ਸੁ ਕਰ੍ਣੇਸ਼਼ੁ ਕਿੰ ਨ ਸ਼੍ਰੁʼਣੁਥ? ਨ ਸ੍ਮਰਥ ਚ?
19 ௧௯ நான் ஐந்து அப்பங்களை ஐயாயிரம்பேருக்குப் பங்கிட்டுக்கொடுத்தபோது, மீதியான அப்பங்களை எத்தனை கூடைகள்நிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார், பன்னிரண்டு என்றார்கள்.
ਯਦਾਹੰ ਪਞ੍ਚਪੂਪਾਨ੍ ਪਞ੍ਚਸਹਸ੍ਰਾਣਾਂ ਪੁਰੁਸ਼਼ਾਣਾਂ ਮਧ੍ਯੇ ਭੰਕ੍ਤ੍ਵਾ ਦੱਤਵਾਨ੍ ਤਦਾਨੀਂ ਯੂਯਮ੍ ਅਵਸ਼ਿਸ਼਼੍ਟਪੂਪੈਃ ਪੂਰ੍ਣਾਨ੍ ਕਤਿ ਡੱਲਕਾਨ੍ ਗ੍ਰੁʼਹੀਤਵਨ੍ਤਃ? ਤੇ(ਅ)ਕਥਯਨ੍ ਦ੍ਵਾਦਸ਼ਡੱਲਕਾਨ੍|
20 ௨0 நான் ஏழு அப்பங்களை நான்காயிரம்பேருக்குப் பங்கிட்டுக்கொடுத்தபோது, மீதியான அப்பங்களை எத்தனை கூடைகள்நிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார். ஏழு என்றார்கள்.
ਅਪਰਞ੍ਚ ਯਦਾ ਚਤੁਃਸਹਸ੍ਰਾਣਾਂ ਪੁਰੁਸ਼਼ਾਣਾਂ ਮਧ੍ਯੇ ਪੂਪਾਨ੍ ਭੰਕ੍ਤ੍ਵਾਦਦਾਂ ਤਦਾ ਯੂਯਮ੍ ਅਤਿਰਿਕ੍ਤਪੂਪਾਨਾਂ ਕਤਿ ਡੱਲਕਾਨ੍ ਗ੍ਰੁʼਹੀਤਵਨ੍ਤਃ? ਤੇ ਕਥਯਾਮਾਸੁਃ ਸਪ੍ਤਡੱਲਕਾਨ੍|
21 ௨௧ அப்படியானால், நீங்கள் புரிந்துகொள்ளாமல் இருப்பது எப்படி? என்றார்.
ਤਦਾ ਸ ਕਥਿਤਵਾਨ੍ ਤਰ੍ਹਿ ਯੂਯਮ੍ ਅਧੁਨਾਪਿ ਕੁਤੋ ਬੋਦ੍ੱਵੁੰ ਨ ਸ਼ਕ੍ਨੁਥ?
22 ௨௨ பின்பு அவர் பெத்சாயிதா ஊருக்கு வந்தார்; அப்பொழுது ஒரு குருடனை அவரிடம் கொண்டுவந்து, அவனைத் தொடவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்.
ਅਨਨ੍ਤਰੰ ਤਸ੍ਮਿਨ੍ ਬੈਤ੍ਸੈਦਾਨਗਰੇ ਪ੍ਰਾਪ੍ਤੇ ਲੋਕਾ ਅਨ੍ਧਮੇਕੰ ਨਰੰ ਤਤ੍ਸਮੀਪਮਾਨੀਯ ਤੰ ਸ੍ਪ੍ਰਸ਼਼੍ਟੁੰ ਤੰ ਪ੍ਰਾਰ੍ਥਯਾਞ੍ਚਕ੍ਰਿਰੇ|
23 ௨௩ அவர் குருடனுடைய கையைப் பிடித்து, அவனைக் கிராமத்திற்கு வெளியே அழைத்துக்கொண்டுபோய், அவன் கண்களில் உமிழ்ந்து, அவன்மேல் கரங்களை வைத்து: எதையாவது பார்க்கிறாயா? என்று கேட்டார்.
ਤਦਾ ਤਸ੍ਯਾਨ੍ਧਸ੍ਯ ਕਰੌ ਗ੍ਰੁʼਹੀਤ੍ਵਾ ਨਗਰਾਦ੍ ਬਹਿਰ੍ਦੇਸ਼ੰ ਤੰ ਨੀਤਵਾਨ੍; ਤੰਨੇਤ੍ਰੇ ਨਿਸ਼਼੍ਠੀਵੰ ਦੱਤ੍ਵਾ ਤਦ੍ਗਾਤ੍ਰੇ ਹਸ੍ਤਾਵਰ੍ਪਯਿਤ੍ਵਾ ਤੰ ਪਪ੍ਰੱਛ, ਕਿਮਪਿ ਪਸ਼੍ਯਸਿ?
24 ௨௪ அவன் பார்த்து: மனிதர்களை நடக்கிற மரங்களைப்போலப் பார்க்கிறேன் என்றான்.
ਸ ਨੇਤ੍ਰੇ ਉਨ੍ਮੀਲ੍ਯ ਜਗਾਦ, ਵ੍ਰੁʼਕ੍ਸ਼਼ਵਤ੍ ਮਨੁਜਾਨ੍ ਗੱਛਤੋ ਨਿਰੀਕ੍ਸ਼਼ੇ|
25 ௨௫ பின்பு அவர் மறுபடியும் அவன் கண்களின்மேல் கரங்களை வைத்து, அவனைப் பார்க்கும்படி செய்தார்; அப்பொழுது அவன் பார்வைப்பெற்று, எல்லோரையும் தெளிவாகப் பார்த்தான்.
ਤਤੋ ਯੀਸ਼ੁਃ ਪੁਨਸ੍ਤਸ੍ਯ ਨਯਨਯੋ ਰ੍ਹਸ੍ਤਾਵਰ੍ਪਯਿਤ੍ਵਾ ਤਸ੍ਯ ਨੇਤ੍ਰੇ ਉਨ੍ਮੀਲਯਾਮਾਸ; ਤਸ੍ਮਾਤ੍ ਸ ਸ੍ਵਸ੍ਥੋ ਭੂਤ੍ਵਾ ਸ੍ਪਸ਼਼੍ਟਰੂਪੰ ਸਰ੍ੱਵਲੋਕਾਨ੍ ਦਦਰ੍ਸ਼|
26 ௨௬ பின்பு அவர் அவனைப் பார்த்து: நீ கிராமத்திற்குள் செல்லாமலும், கிராமத்தில் இதை ஒருவருக்கும் சொல்லாமலும் இரு என்று சொல்லி, அவனை வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.
ਤਤਃ ਪਰੰ ਤ੍ਵੰ ਗ੍ਰਾਮੰ ਮਾ ਗੱਛ ਗ੍ਰਾਮਸ੍ਥੰ ਕਮਪਿ ਚ ਕਿਮਪ੍ਯਨੁਕ੍ਤ੍ਵਾ ਨਿਜਗ੍ਰੁʼਹੰ ਯਾਹੀਤ੍ਯਾਦਿਸ਼੍ਯ ਯੀਸ਼ੁਸ੍ਤੰ ਨਿਜਗ੍ਰੁʼਹੰ ਪ੍ਰਹਿਤਵਾਨ੍|
27 ௨௭ பின்பு, இயேசுவும் அவருடைய சீடர்களும் புறப்பட்டு, பிலிப்பு செசரியா நாட்டைச்சேர்ந்த கிராமங்களுக்குப் போனார்கள். வழியிலே அவர் தம்முடைய சீடர்களைப் பார்த்து: மக்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.
ਅਨਨ੍ਤਰੰ ਸ਼ਿਸ਼਼੍ਯੈਃ ਸਹਿਤੋ ਯੀਸ਼ੁਃ ਕੈਸਰੀਯਾਫਿਲਿਪਿਪੁਰੰ ਜਗਾਮ, ਪਥਿ ਗੱਛਨ੍ ਤਾਨਪ੍ਰੁʼੱਛਤ੍ ਕੋ(ਅ)ਹਮ੍ ਅਤ੍ਰ ਲੋਕਾਃ ਕਿੰ ਵਦਨ੍ਤਿ?
28 ௨௮ அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறுசிலர் தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.
ਤੇ ਪ੍ਰਤ੍ਯੂਚੁਃ ਤ੍ਵਾਂ ਯੋਹਨੰ ਮੱਜਕੰ ਵਦਨ੍ਤਿ ਕਿਨ੍ਤੁ ਕੇਪਿ ਕੇਪਿ ਏਲਿਯੰ ਵਦਨ੍ਤਿ; ਅਪਰੇ ਕੇਪਿ ਕੇਪਿ ਭਵਿਸ਼਼੍ਯਦ੍ਵਾਦਿਨਾਮ੍ ਏਕੋ ਜਨ ਇਤਿ ਵਦਨ੍ਤਿ|
29 ௨௯ அப்பொழுது, அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்; பேதுரு மறுமொழியாக: நீர் கிறிஸ்து என்றான்.
ਅਥ ਸ ਤਾਨਪ੍ਰੁʼੱਛਤ੍ ਕਿਨ੍ਤੁ ਕੋਹਮ੍? ਇਤ੍ਯਤ੍ਰ ਯੂਯੰ ਕਿੰ ਵਦਥ? ਤਦਾ ਪਿਤਰਃ ਪ੍ਰਤ੍ਯਵਦਤ੍ ਭਵਾਨ੍ ਅਭਿਸ਼਼ਿਕ੍ਤਸ੍ਤ੍ਰਾਤਾ|
30 ௩0 அப்பொழுது தம்மைக்குறித்து ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று அவர்களுக்கு உறுதியாகக் கட்டளையிட்டார்.
ਤਤਃ ਸ ਤਾਨ੍ ਗਾਢਮਾਦਿਸ਼ਦ੍ ਯੂਯੰ ਮਮ ਕਥਾ ਕਸ੍ਮੈਚਿਦਪਿ ਮਾ ਕਥਯਤ|
31 ௩௧ அவைகள் அல்லாமல், மனிதகுமாரன் பல பாடுகள்பட்டு, மூப்பர்களாலும் பிரதான ஆசாரியர்களாலும் வேதபண்டிதர்களாலும் ஆகாதவன் என்று தள்ளப்பட்டு, கொல்லப்பட்டு, மூன்று நாட்களுக்குப்பின்பு உயிரோடு எழுந்திருக்கவேண்டும் என்று அவர்களுக்குப் போதிக்கத்தொடங்கினார்.
ਮਨੁਸ਼਼੍ਯਪੁਤ੍ਰੇਣਾਵਸ਼੍ਯੰ ਬਹਵੋ ਯਾਤਨਾ ਭੋਕ੍ਤਵ੍ਯਾਃ ਪ੍ਰਾਚੀਨਲੋਕੈਃ ਪ੍ਰਧਾਨਯਾਜਕੈਰਧ੍ਯਾਪਕੈਸ਼੍ਚ ਸ ਨਿਨ੍ਦਿਤਃ ਸਨ੍ ਘਾਤਯਿਸ਼਼੍ਯਤੇ ਤ੍ਰੁʼਤੀਯਦਿਨੇ ਉੱਥਾਸ੍ਯਤਿ ਚ, ਯੀਸ਼ੁਃ ਸ਼ਿਸ਼਼੍ਯਾਨੁਪਦੇਸ਼਼੍ਟੁਮਾਰਭ੍ਯ ਕਥਾਮਿਮਾਂ ਸ੍ਪਸ਼਼੍ਟਮਾਚਸ਼਼੍ਟ|
32 ௩௨ இந்த வார்த்தையை அவர் தெளிவாகச் சொன்னார். அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய், அவரைக் கடிந்துபேசத் தொடங்கினான்.
ਤਸ੍ਮਾਤ੍ ਪਿਤਰਸ੍ਤਸ੍ਯ ਹਸ੍ਤੌ ਧ੍ਰੁʼਤ੍ਵਾ ਤੰ ਤਰ੍ੱਜਿਤਵਾਨ੍|
33 ௩௩ அவர் திரும்பித் தம்முடைய சீடர்களைப் பார்த்து, பின்பு பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ தேவனுக்குரிவைகளைச் சிந்திக்காமல் மனிதனுக்குரியவைகளைச் சிந்திக்கிறாய் என்று சொல்லி, அவனைக் கடிந்துபேசினார்.
ਕਿਨ੍ਤੁ ਸ ਮੁਖੰ ਪਰਾਵਰ੍ਤ੍ਯ ਸ਼ਿਸ਼਼੍ਯਗਣੰ ਨਿਰੀਕ੍ਸ਼਼੍ਯ ਪਿਤਰੰ ਤਰ੍ਜਯਿਤ੍ਵਾਵਾਦੀਦ੍ ਦੂਰੀਭਵ ਵਿਘ੍ਨਕਾਰਿਨ੍ ਈਸ਼੍ਵਰੀਯਕਾਰ੍ੱਯਾਦਪਿ ਮਨੁਸ਼਼੍ਯਕਾਰ੍ੱਯੰ ਤੁਭ੍ਯੰ ਰੋਚਤਤਰਾਂ|
34 ௩௪ பின்பு அவர் மக்களையும் தம்முடைய சீடர்களையும் தம்மிடம் அழைத்து: ஒருவன் என்னைப் பின்பற்றிவரவிரும்பினால், அவன் தன்னைத்தானே வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றி வரவேண்டும்.
ਅਥ ਸ ਲੋਕਾਨ੍ ਸ਼ਿਸ਼਼੍ਯਾਂਸ਼੍ਚਾਹੂਯ ਜਗਾਦ ਯਃ ਕਸ਼੍ਚਿਨ੍ ਮਾਮਨੁਗਨ੍ਤੁਮ੍ ਇੱਛਤਿ ਸ ਆਤ੍ਮਾਨੰ ਦਾਮ੍ਯਤੁ, ਸ੍ਵਕ੍ਰੁਸ਼ੰ ਗ੍ਰੁʼਹੀਤ੍ਵਾ ਮਤ੍ਪਸ਼੍ਚਾਦ੍ ਆਯਾਤੁ|
35 ௩௫ தன் வாழ்வைக் காப்பாற்றிக்கொள்ள விரும்புகிறவன் அதை இழந்துபோவான், எனக்காகவும், நற்செய்திக்காகவும் தன் வாழ்வை இழந்துபோகிறவன் அதைக் காப்பாற்றிக்கொள்ளுவான்.
ਯਤੋ ਯਃ ਕਸ਼੍ਚਿਤ੍ ਸ੍ਵਪ੍ਰਾਣੰ ਰਕ੍ਸ਼਼ਿਤੁਮਿੱਛਤਿ ਸ ਤੰ ਹਾਰਯਿਸ਼਼੍ਯਤਿ, ਕਿਨ੍ਤੁ ਯਃ ਕਸ਼੍ਚਿਨ੍ ਮਦਰ੍ਥੰ ਸੁਸੰਵਾਦਾਰ੍ਥਞ੍ਚ ਪ੍ਰਾਣੰ ਹਾਰਯਤਿ ਸ ਤੰ ਰਕ੍ਸ਼਼ਿਸ਼਼੍ਯਤਿ|
36 ௩௬ மனிதன் உலகம் முழுவதையும் சம்பாதித்துக்கொண்டாலும், தன் ஆத்துமாவை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?
ਅਪਰਞ੍ਚ ਮਨੁਜਃ ਸਰ੍ੱਵੰ ਜਗਤ੍ ਪ੍ਰਾਪ੍ਯ ਯਦਿ ਸ੍ਵਪ੍ਰਾਣੰ ਹਾਰਯਤਿ ਤਰ੍ਹਿ ਤਸ੍ਯ ਕੋ ਲਾਭਃ?
37 ௩௭ மனிதன் தன் ஆத்துமாவிற்கு பதிலாக எதைக் கொடுப்பான்?
ਨਰਃ ਸ੍ਵਪ੍ਰਾਣਵਿਨਿਮਯੇਨ ਕਿੰ ਦਾਤੁੰ ਸ਼ਕ੍ਨੋਤਿ?
38 ௩௮ எனவே விபசாரமும் பாவமும் உள்ள இந்தச் சந்ததியில் என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக்குறித்து மனிதகுமாரனும் தமது பிதாவின் மகிமையில் பரிசுத்த தூதர்களோடு வரும்போது வெட்கப்படுவார் என்றார்.
ਏਤੇਸ਼਼ਾਂ ਵ੍ਯਭਿਚਾਰਿਣਾਂ ਪਾਪਿਨਾਞ੍ਚ ਲੋਕਾਨਾਂ ਸਾਕ੍ਸ਼਼ਾਦ੍ ਯਦਿ ਕੋਪਿ ਮਾਂ ਮਤ੍ਕਥਾਞ੍ਚ ਲੱਜਾਸ੍ਪਦੰ ਜਾਨਾਤਿ ਤਰ੍ਹਿ ਮਨੁਜਪੁਤ੍ਰੋ ਯਦਾ ਧਰ੍ੰਮਦੂਤੈਃ ਸਹ ਪਿਤੁਃ ਪ੍ਰਭਾਵੇਣਾਗਮਿਸ਼਼੍ਯਤਿ ਤਦਾ ਸੋਪਿ ਤੰ ਲੱਜਾਸ੍ਪਦੰ ਜ੍ਞਾਸ੍ਯਤਿ|

< மாற்கு 8 >