< மாற்கு 7 >

1 எருசலேமில் இருந்து வந்த பரிசேயர்களும், வேதபண்டிதர்களில் சிலரும் அவரிடம் கூடிவந்தார்கள்.
ਅਨਨ੍ਤਰੰ ਯਿਰੂਸ਼ਾਲਮ ਆਗਤਾਃ ਫਿਰੂਸ਼ਿਨੋ(ਅ)ਧ੍ਯਾਪਕਾਸ਼੍ਚ ਯੀਸ਼ੋਃ ਸਮੀਪਮ੍ ਆਗਤਾਃ|
2 அப்பொழுது அவருடைய சீடர்களில் சிலர் கைகளைக் கழுவாமல் சாப்பிடுகிறதை அவர்கள் பார்த்து குற்றஞ்சாட்டினார்கள்.
ਤੇ ਤਸ੍ਯ ਕਿਯਤਃ ਸ਼ਿਸ਼਼੍ਯਾਨ੍ ਅਸ਼ੁਚਿਕਰੈਰਰ੍ਥਾਦ ਅਪ੍ਰਕ੍ਸ਼਼ਾਲਿਤਹਸ੍ਤੈ ਰ੍ਭੁਞ੍ਜਤੋ ਦ੍ਰੁʼਸ਼਼੍ਟ੍ਵਾ ਤਾਨਦੂਸ਼਼ਯਨ੍|
3 ஏனென்றால், யூதர்கள் அனைவரும் முக்கியமாக பரிசேயர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தைக் கடைபிடித்து, அடிக்கடி கைகளைக் கழுவினாலொழிய சாப்பிடமாட்டார்கள்;
ਯਤਃ ਫਿਰੂਸ਼ਿਨਃ ਸਰ੍ੱਵਯਿਹੂਦੀਯਾਸ਼੍ਚ ਪ੍ਰਾਚਾਂ ਪਰਮ੍ਪਰਾਗਤਵਾਕ੍ਯੰ ਸੰਮਨ੍ਯ ਪ੍ਰਤਲੇਨ ਹਸ੍ਤਾਨ੍ ਅਪ੍ਰਕ੍ਸ਼਼ਾਲ੍ਯ ਨ ਭੁਞ੍ਜਤੇ|
4 கடைவீதிகளுக்குச் சென்று திரும்பி வரும்போதும் குளிக்காமல் சாப்பிடமாட்டார்கள். அப்படியே செம்புகளையும், கிண்ணங்களையும், செப்புக்குடங்களையும், இருக்கைகளையும் கழுவுகிறதோடு மட்டுமல்லாமல், வேறு அநேக சடங்குகளையும் கடைபிடித்துவருவார்கள்.
ਆਪਨਾਦਾਗਤ੍ਯ ਮੱਜਨੰ ਵਿਨਾ ਨ ਖਾਦਨ੍ਤਿ; ਤਥਾ ਪਾਨਪਾਤ੍ਰਾਣਾਂ ਜਲਪਾਤ੍ਰਾਣਾਂ ਪਿੱਤਲਪਾਤ੍ਰਾਣਾਮ੍ ਆਸਨਾਨਾਞ੍ਚ ਜਲੇ ਮੱਜਨਮ੍ ਇਤ੍ਯਾਦਯੋਨ੍ਯੇਪਿ ਬਹਵਸ੍ਤੇਸ਼਼ਾਮਾਚਾਰਾਃ ਸਨ੍ਤਿ|
5 அப்பொழுது, அந்தப் பரிசேயர்களும் வேதபண்டிதர்களும் அவரைப் பார்த்து: உம்முடைய சீடர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை மீறி, ஏன் கைகளைக் கழுவாமல் சாப்பிடுகிறார்கள் என்று கேட்டார்கள்.
ਤੇ ਫਿਰੂਸ਼ਿਨੋ(ਅ)ਧ੍ਯਾਪਕਾਸ਼੍ਚ ਯੀਸ਼ੁੰ ਪਪ੍ਰੱਛੁਃ, ਤਵ ਸ਼ਿਸ਼਼੍ਯਾਃ ਪ੍ਰਾਚਾਂ ਪਰਮ੍ਪਰਾਗਤਵਾਕ੍ਯਾਨੁਸਾਰੇਣ ਨਾਚਰਨ੍ਤੋ(ਅ)ਪ੍ਰਕ੍ਸ਼਼ਾਲਿਤਕਰੈਃ ਕੁਤੋ ਭੁਜੰਤੇ?
6 அவர்களுக்கு அவர் மறுமொழியாக: இந்த மக்கள் தங்களுடைய உதடுகளினால் என்னை கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாக விலகியிருக்கிறது என்றும்,
ਤਤਃ ਸ ਪ੍ਰਤ੍ਯੁਵਾਚ ਕਪਟਿਨੋ ਯੁਸ਼਼੍ਮਾਨ੍ ਉੱਦਿਸ਼੍ਯ ਯਿਸ਼ਯਿਯਭਵਿਸ਼਼੍ਯਦ੍ਵਾਦੀ ਯੁਕ੍ਤਮਵਾਦੀਤ੍| ਯਥਾ ਸ੍ਵਕੀਯੈਰਧਰੈਰੇਤੇ ਸੰਮਨ੍ਯਨਤੇ ਸਦੈਵ ਮਾਂ| ਕਿਨ੍ਤੁ ਮੱਤੋ ਵਿਪ੍ਰਕਰ੍ਸ਼਼ੇ ਸਨ੍ਤਿ ਤੇਸ਼਼ਾਂ ਮਨਾਂਸਿ ਚ|
7 மனிதர்களுடைய கட்டளைகளைப் போதனைகளாகப் போதித்து, வீணாக எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று எழுதியிருக்கிறபடி, மாயக்காரர்களாகிய உங்களைக்குறித்து, ஏசாயா நன்றாகத் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறான்.
ਸ਼ਿਕ੍ਸ਼਼ਯਨ੍ਤੋ ਬਿਧੀਨ੍ ੰਨਾਜ੍ਞਾ ਭਜਨ੍ਤੇ ਮਾਂ ਮੁਧੈਵ ਤੇ|
8 நீங்கள் தேவனுடைய கட்டளைகளை ஒதுக்கிவிட்டு, மனிதர்களுடைய பாரம்பரியத்தைக் கடைபிடித்துவருகிறவர்களாக, கிண்ணங்களையும் செம்புகளையும் கழுவுகிறீர்கள்; மற்றும் இப்படிப்பட்ட அநேக சடங்குகளையும் கடைபிடித்துவருகிறீர்கள்” என்றார்.
ਯੂਯੰ ਜਲਪਾਤ੍ਰਪਾਨਪਾਤ੍ਰਾਦੀਨਿ ਮੱਜਯਨ੍ਤੋ ਮਨੁਜਪਰਮ੍ਪਰਾਗਤਵਾਕ੍ਯੰ ਰਕ੍ਸ਼਼ਥ ਕਿਨ੍ਤੁ ਈਸ਼੍ਵਰਾਜ੍ਞਾਂ ਲੰਘਧ੍ਵੇ; ਅਪਰਾ ਈਦ੍ਰੁʼਸ਼੍ਯੋਨੇਕਾਃ ਕ੍ਰਿਯਾ ਅਪਿ ਕੁਰੁਧ੍ਵੇ|
9 பின்னும் அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் உங்களுடைய பாரம்பரியத்தைக் கடைபிடிப்பதற்காக தேவனுடைய கட்டளைகளை நிராகரித்தது நன்றாக இருக்கிறது.
ਅਨ੍ਯਞ੍ਚਾਕਥਯਤ੍ ਯੂਯੰ ਸ੍ਵਪਰਮ੍ਪਰਾਗਤਵਾਕ੍ਯਸ੍ਯ ਰਕ੍ਸ਼਼ਾਰ੍ਥੰ ਸ੍ਪਸ਼਼੍ਟਰੂਪੇਣ ਈਸ਼੍ਵਰਾਜ੍ਞਾਂ ਲੋਪਯਥ|
10 ௧0 எப்படியென்றால், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும், தகப்பனையாவது தாயையாவது அவமதிக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், மோசே சொல்லியிருக்கிறாரே.
ਯਤੋ ਮੂਸਾਦ੍ਵਾਰਾ ਪ੍ਰੋਕ੍ਤਮਸ੍ਤਿ ਸ੍ਵਪਿਤਰੌ ਸੰਮਨ੍ਯਧ੍ਵੰ ਯਸ੍ਤੁ ਮਾਤਰੰ ਪਿਤਰੰ ਵਾ ਦੁਰ੍ੱਵਾਕ੍ਯੰ ਵਕ੍ਤਿ ਸ ਨਿਤਾਨ੍ਤੰ ਹਨ੍ਯਤਾਂ|
11 ௧௧ நீங்களோ, ஒருவன் தன் தகப்பனையாவது தாயையாவது பார்த்து: உனக்கு நான் செய்யவேண்டிய உதவி எதுவோ, அதைக் கொர்பான் என்னும் காணிக்கையாக தேவனுக்குக் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டால் அவனுடைய கடமை முடிந்தது என்று சொல்லி,
ਕਿਨ੍ਤੁ ਮਦੀਯੇਨ ਯੇਨ ਦ੍ਰਵ੍ਯੇਣ ਤਵੋਪਕਾਰੋਭਵਤ੍ ਤਤ੍ ਕਰ੍ੱਬਾਣਮਰ੍ਥਾਦ੍ ਈਸ਼੍ਵਰਾਯ ਨਿਵੇਦਿਤਮ੍ ਇਦੰ ਵਾਕ੍ਯੰ ਯਦਿ ਕੋਪਿ ਪਿਤਰੰ ਮਾਤਰੰ ਵਾ ਵਕ੍ਤਿ
12 ௧௨ அவனை இனி தன் தகப்பனுக்கோ தன் தாய்க்கோ எந்தவொரு உதவியும் செய்யவிடாமல்;
ਤਰ੍ਹਿ ਯੂਯੰ ਮਾਤੁਃ ਪਿਤੁ ਰ੍ਵੋਪਕਾਰੰ ਕਰ੍ੱਤਾਂ ਤੰ ਵਾਰਯਥ|
13 ௧௩ நீங்கள் போதித்த உங்களுடைய பாரம்பரியத்தினால் தேவவசனத்தை அவமதிக்கிறீர்கள். இதுபோலவே நீங்கள் மற்ற அநேக காரியங்களையும் செய்கிறீர்கள் என்று சொன்னார்.
ਇੱਥੰ ਸ੍ਵਪ੍ਰਚਾਰਿਤਪਰਮ੍ਪਰਾਗਤਵਾਕ੍ਯੇਨ ਯੂਯਮ੍ ਈਸ਼੍ਵਰਾਜ੍ਞਾਂ ਮੁਧਾ ਵਿਧਦ੍ੱਵੇ, ਈਦ੍ਰੁʼਸ਼ਾਨ੍ਯਨ੍ਯਾਨ੍ਯਨੇਕਾਨਿ ਕਰ੍ੰਮਾਣਿ ਕੁਰੁਧ੍ਵੇ|
14 ௧௪ பின்பு அவர் மக்கள் எல்லோரையும் வரவழைத்து அவர்களைப் பார்த்து: நீங்கள் எல்லோரும் நான் சொல்வதைக்கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள்.
ਅਥ ਸ ਲੋਕਾਨਾਹੂਯ ਬਭਾਸ਼਼ੇ ਯੂਯੰ ਸਰ੍ੱਵੇ ਮਦ੍ਵਾਕ੍ਯੰ ਸ਼੍ਰੁʼਣੁਤ ਬੁਧ੍ਯਧ੍ਵਞ੍ਚ|
15 ௧௫ மனிதனுக்கு வெளியிலிருந்து அவனுக்குள்ளே போகிறது அவனைத் தீட்டுப்படுத்தாது; அவன் மனதிலிருந்து புறப்படுகிறவைகளே அவனைத் தீட்டுப்படுத்தும்.
ਬਾਹ੍ਯਾਦਨ੍ਤਰੰ ਪ੍ਰਵਿਸ਼੍ਯ ਨਰਮਮੇਧ੍ਯੰ ਕਰ੍ੱਤਾਂ ਸ਼ਕ੍ਨੋਤਿ ਈਦ੍ਰੁʼਸ਼ੰ ਕਿਮਪਿ ਵਸ੍ਤੁ ਨਾਸ੍ਤਿ, ਵਰਮ੍ ਅਨ੍ਤਰਾਦ੍ ਬਹਿਰ੍ਗਤੰ ਯਦ੍ਵਸ੍ਤੁ ਤਨ੍ਮਨੁਜਮ੍ ਅਮੇਧ੍ਯੰ ਕਰੋਤਿ|
16 ௧௬ கேட்கிறதற்கு ஒருவன் காதுள்ளவனாக இருந்தால் அவன் கேட்கட்டும் என்றார்.
ਯਸ੍ਯ ਸ਼੍ਰੋਤੁੰ ਸ਼੍ਰੋਤ੍ਰੇ ਸ੍ਤਃ ਸ ਸ਼੍ਰੁʼਣੋਤੁ|
17 ௧௭ அவர் மக்களைவிட்டு வீட்டிற்குள் சென்றபோது, அவருடைய சீடர்கள் அவர் சொன்ன உவமையைக்குறித்து அவரிடத்தில் விசாரித்தார்கள்.
ਤਤਃ ਸ ਲੋਕਾਨ੍ ਹਿਤ੍ਵਾ ਗ੍ਰੁʼਹਮਧ੍ਯੰ ਪ੍ਰਵਿਸ਼਼੍ਟਸ੍ਤਦਾ ਸ਼ਿਸ਼਼੍ਯਾਸ੍ਤਦ੍ਰੁʼਸ਼਼੍ਟਾਨ੍ਤਵਾਕ੍ਯਾਰ੍ਥੰ ਪਪ੍ਰੱਛੁਃ|
18 ௧௮ அதற்கு அவர்: நீங்களும் இவ்வளவு புரிந்துகொள்ளாதவர்களா? வெளியிலிருந்து மனிதனுக்குள்ளே போகிற எதுவும் அவனைத் தீட்டுப்படுத்தாது என்று நீங்கள் அறிந்துகொள்ளவில்லையா?
ਤਸ੍ਮਾਤ੍ ਸ ਤਾਨ੍ ਜਗਾਦ ਯੂਯਮਪਿ ਕਿਮੇਤਾਦ੍ਰੁʼਗਬੋਧਾਃ? ਕਿਮਪਿ ਦ੍ਰਵ੍ਯੰ ਬਾਹ੍ਯਾਦਨ੍ਤਰੰ ਪ੍ਰਵਿਸ਼੍ਯ ਨਰਮਮੇਧ੍ਯੰ ਕਰ੍ੱਤਾਂ ਨ ਸ਼ਕ੍ਨੋਤਿ ਕਥਾਮਿਮਾਂ ਕਿੰ ਨ ਬੁਧ੍ਯਧ੍ਵੇ?
19 ௧௯ அது அவன் இருதயத்திற்குள் போகாமல் வயிற்றுக்குள்ளே போகிறது; அதிலிருந்து எல்லா அசுத்தங்களும் ஆசனவழியாக வெளியேபோகும்.
ਤਤ੍ ਤਦਨ੍ਤਰ੍ਨ ਪ੍ਰਵਿਸ਼ਤਿ ਕਿਨ੍ਤੁ ਕੁਕ੍ਸ਼਼ਿਮਧ੍ਯੰ ਪ੍ਰਵਿਸ਼ਤਿ ਸ਼ੇਸ਼਼ੇ ਸਰ੍ੱਵਭੁਕ੍ਤਵਸ੍ਤੁਗ੍ਰਾਹਿਣਿ ਬਹਿਰ੍ਦੇਸ਼ੇ ਨਿਰ੍ਯਾਤਿ|
20 ௨0 மனிதனுக்குள்ளேயிருந்து புறப்படுகிறதே மனிதனைத் தீட்டுப்படுத்தும்.
ਅਪਰਮਪ੍ਯਵਾਦੀਦ੍ ਯੰਨਰਾੰਨਿਰੇਤਿ ਤਦੇਵ ਨਰਮਮੇਧ੍ਯੰ ਕਰੋਤਿ|
21 ௨௧ எப்படியென்றால், மனிதனுடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும்,
ਯਤੋ(ਅ)ਨ੍ਤਰਾਦ੍ ਅਰ੍ਥਾਨ੍ ਮਾਨਵਾਨਾਂ ਮਨੋਭ੍ਯਃ ਕੁਚਿਨ੍ਤਾ ਪਰਸ੍ਤ੍ਰੀਵੇਸ਼੍ਯਾਗਮਨੰ
22 ௨௨ திருட்டும், பொருளாசைகளும், துஷ்டகுணங்களும், கபடும், காமமும், வன்கண்ணும், அவதூறும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும்.
ਨਰਵਧਸ਼੍ਚੌਰ੍ੱਯੰ ਲੋਭੋ ਦੁਸ਼਼੍ਟਤਾ ਪ੍ਰਵਞ੍ਚਨਾ ਕਾਮੁਕਤਾ ਕੁਦ੍ਰੁʼਸ਼਼੍ਟਿਰੀਸ਼੍ਵਰਨਿਨ੍ਦਾ ਗਰ੍ੱਵਸ੍ਤਮ ਇਤ੍ਯਾਦੀਨਿ ਨਿਰ੍ਗੱਛਨ੍ਤਿ|
23 ௨௩ பொல்லாதவைகளாகிய இவைகள் எல்லாம் மனதிலிருந்து புறப்பட்டு மனிதனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.
ਏਤਾਨਿ ਸਰ੍ੱਵਾਣਿ ਦੁਰਿਤਾਨ੍ਯਨ੍ਤਰਾਦੇਤ੍ਯ ਨਰਮਮੇਧ੍ਯੰ ਕੁਰ੍ੱਵਨ੍ਤਿ|
24 ௨௪ பின்பு, அவர் எழுந்து அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, தீரு சீதோன் பட்டணங்களின் எல்லைகளில்போய், ஒரு வீட்டிற்குள் சென்று, அவர் அங்கே இருப்பது ஒருவருக்கும் தெரியக்கூடாது என்று விரும்பியும், அவர் மறைவாக இருக்கமுடியாமல்போனது.
ਅਥ ਸ ਉੱਥਾਯ ਤਤ੍ਸ੍ਥਾਨਾਤ੍ ਸੋਰਸੀਦੋਨ੍ਪੁਰਪ੍ਰਦੇਸ਼ੰ ਜਗਾਮ ਤਤ੍ਰ ਕਿਮਪਿ ਨਿਵੇਸ਼ਨੰ ਪ੍ਰਵਿਸ਼੍ਯ ਸਰ੍ੱਵੈਰਜ੍ਞਾਤਃ ਸ੍ਥਾਤੁੰ ਮਤਿਞ੍ਚਕ੍ਰੇ ਕਿਨ੍ਤੁ ਗੁਪ੍ਤਃ ਸ੍ਥਾਤੁੰ ਨ ਸ਼ਸ਼ਾਕ|
25 ௨௫ அசுத்தஆவி பிடித்திருந்த ஒரு சிறுபெண்ணின் தாய், இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டு, வந்து அவர் பாதத்தில் விழுந்தாள்.
ਯਤਃ ਸੁਰਫੈਨਿਕੀਦੇਸ਼ੀਯਯੂਨਾਨੀਵੰਸ਼ੋਦ੍ਭਵਸ੍ਤ੍ਰਿਯਾਃ ਕਨ੍ਯਾ ਭੂਤਗ੍ਰਸ੍ਤਾਸੀਤ੍| ਸਾ ਸ੍ਤ੍ਰੀ ਤਦ੍ਵਾਰ੍ੱਤਾਂ ਪ੍ਰਾਪ੍ਯ ਤਤ੍ਸਮੀਪਮਾਗਤ੍ਯ ਤੱਚਰਣਯੋਃ ਪਤਿਤ੍ਵਾ
26 ௨௬ அந்தப் பெண் சீரோபேனிக்கியா தேசத்தைச் சேர்ந்த கிரேக்கப் பெண்ணாக இருந்தாள்; அவள் தன் மகளைப் பிடித்திருந்த பிசாசைத் துரத்திவிடவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டாள்.
ਸ੍ਵਕਨ੍ਯਾਤੋ ਭੂਤੰ ਨਿਰਾਕਰ੍ੱਤਾਂ ਤਸ੍ਮਿਨ੍ ਵਿਨਯੰ ਕ੍ਰੁʼਤਵਤੀ|
27 ௨௭ இயேசு அவளைப் பார்த்து: முதலில் பிள்ளைகள் திருப்தியாகட்டும்; பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லது இல்லை என்றார்.
ਕਿਨ੍ਤੁ ਯੀਸ਼ੁਸ੍ਤਾਮਵਦਤ੍ ਪ੍ਰਥਮੰ ਬਾਲਕਾਸ੍ਤ੍ਰੁʼਪ੍ਯਨ੍ਤੁ ਯਤੋ ਬਾਲਕਾਨਾਂ ਖਾਦ੍ਯੰ ਗ੍ਰੁʼਹੀਤ੍ਵਾ ਕੁੱਕੁਰੇਭ੍ਯੋ ਨਿਕ੍ਸ਼਼ੇਪੋ(ਅ)ਨੁਚਿਤਃ|
28 ௨௮ அதற்கு அவள்: உண்மைதான் ஆண்டவரே, ஆனாலும், மேஜையின்கீழே இருக்கும் நாய்க்குட்டிகள் பிள்ளைகள் சிந்துகிற துணிக்கைகளைத் தின்னுமே என்றாள்.
ਤਦਾ ਸਾ ਸ੍ਤ੍ਰੀ ਤਮਵਾਦੀਤ੍ ਭੋਃ ਪ੍ਰਭੋ ਤਤ੍ ਸਤ੍ਯੰ ਤਥਾਪਿ ਮਞ੍ਚਾਧਃਸ੍ਥਾਃ ਕੁੱਕੁਰਾ ਬਾਲਾਨਾਂ ਕਰਪਤਿਤਾਨਿ ਖਾਦ੍ਯਖਣ੍ਡਾਨਿ ਖਾਦਨ੍ਤਿ|
29 ௨௯ அப்பொழுது, அவர்: நீ சொன்ன அந்த வார்த்தையினிமித்தம் போகலாம், பிசாசு உன் மகளைவிட்டுப் போனது என்றார்.
ਤਤਃ ਸੋ(ਅ)ਕਥਯਦ੍ ਏਤਤ੍ਕਥਾਹੇਤੋਃ ਸਕੁਸ਼ਲਾ ਯਾਹਿ ਤਵ ਕਨ੍ਯਾਂ ਤ੍ਯਕ੍ਤ੍ਵਾ ਭੂਤੋ ਗਤਃ|
30 ௩0 அவள் தன் வீட்டிற்கு வந்தபொழுது, பிசாசு போய்விட்டதையும், தன் மகள் கட்டிலில் படுத்திருக்கிறதையும் கண்டாள்.
ਅਥ ਸਾ ਸ੍ਤ੍ਰੀ ਗ੍ਰੁʼਹੰ ਗਤ੍ਵਾ ਕਨ੍ਯਾਂ ਭੂਤਤ੍ਯਕ੍ਤਾਂ ਸ਼ੱਯਾਸ੍ਥਿਤਾਂ ਦਦਰ੍ਸ਼|
31 ௩௧ மறுபடியும், அவர் தீரு சீதோன் பட்டணங்களின் எல்லைகளைவிட்டுப் புறப்பட்டு, தெக்கப்போலியின் எல்லைகளின்வழியாகக் கலிலேயாக்கடலின் அருகே வந்தார்.
ਪੁਨਸ਼੍ਚ ਸ ਸੋਰਸੀਦੋਨ੍ਪੁਰਪ੍ਰਦੇਸ਼ਾਤ੍ ਪ੍ਰਸ੍ਥਾਯ ਦਿਕਾਪਲਿਦੇਸ਼ਸ੍ਯ ਪ੍ਰਾਨ੍ਤਰਭਾਗੇਨ ਗਾਲੀਲ੍ਜਲਧੇਃ ਸਮੀਪੰ ਗਤਵਾਨ੍|
32 ௩௨ அங்கே திக்குவாயுடைய ஒரு காதுகேளாதவனை அவரிடம் கொண்டுவந்து, அவர் தமது கையை அவன்மேல் வைக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டார்கள்.
ਤਦਾ ਲੋਕੈਰੇਕੰ ਬਧਿਰੰ ਕਦ੍ਵਦਞ੍ਚ ਨਰੰ ਤੰਨਿਕਟਮਾਨੀਯ ਤਸ੍ਯ ਗਾਤ੍ਰੇ ਹਸ੍ਤਮਰ੍ਪਯਿਤੁੰ ਵਿਨਯਃ ਕ੍ਰੁʼਤਃ|
33 ௩௩ அப்பொழுது, அவர் அவனை மக்கள் கூட்டத்தைவிட்டுத் தனியே அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய விரல்களை அவன் காதுகளில் வைத்து, உமிழ்ந்து, அவனுடைய நாக்கைத் தொட்டு;
ਤਤੋ ਯੀਸ਼ੁ ਰ੍ਲੋਕਾਰਣ੍ਯਾਤ੍ ਤੰ ਨਿਰ੍ਜਨਮਾਨੀਯ ਤਸ੍ਯ ਕਰ੍ਣਯੋਙ੍ਗੁਲੀ ਰ੍ਦਦੌ ਨਿਸ਼਼੍ਠੀਵੰ ਦੱਤ੍ਵਾ ਚ ਤੱਜਿਹ੍ਵਾਂ ਪਸ੍ਪਰ੍ਸ਼|
34 ௩௪ வானத்தை அண்ணாந்துபார்த்து, பெருமூச்சுவிட்டு: எப்பத்தா என்றார்; அதற்குத் திறக்கப்படுவாயாக என்று அர்த்தம்.
ਅਨਨ੍ਤਰੰ ਸ੍ਵਰ੍ਗੰ ਨਿਰੀਕ੍ਸ਼਼੍ਯ ਦੀਰ੍ਘੰ ਨਿਸ਼੍ਵਸ੍ਯ ਤਮਵਦਤ੍ ਇਤਫਤਃ ਅਰ੍ਥਾਨ੍ ਮੁਕ੍ਤੋ ਭੂਯਾਤ੍|
35 ௩௫ உடனே அவனுடைய காதுகள் திறக்கப்பட்டு, அவனுடைய நாக்கின் கட்டும் அவிழ்ந்து, அவன் தெளிவாகப் பேசினான்.
ਤਤਸ੍ਤਤ੍ਕ੍ਸ਼਼ਣੰ ਤਸ੍ਯ ਕਰ੍ਣੌ ਮੁਕ੍ਤੌ ਜਿਹ੍ਵਾਯਾਸ਼੍ਚ ਜਾਡ੍ਯਾਪਗਮਾਤ੍ ਸ ਸੁਸ੍ਪਸ਼਼੍ਟਵਾਕ੍ਯਮਕਥਯਤ੍|
36 ௩௬ அதை யாருக்கும் சொல்லவேண்டாம் என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்; ஆனாலும் எவ்வளவு அதிகமாக அவர்களுக்குக் கட்டளையிட்டாரோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் அதைப் பிரசித்தப்படுத்தி,
ਅਥ ਸ ਤਾਨ੍ ਵਾਢਮਿਤ੍ਯਾਦਿਦੇਸ਼ ਯੂਯਮਿਮਾਂ ਕਥਾਂ ਕਸ੍ਮੈਚਿਦਪਿ ਮਾ ਕਥਯਤ, ਕਿਨ੍ਤੁ ਸ ਯਤਿ ਨ੍ਯਸ਼਼ੇਧਤ੍ ਤੇ ਤਤਿ ਬਾਹੁਲ੍ਯੇਨ ਪ੍ਰਾਚਾਰਯਨ੍;
37 ௩௭ எல்லாவற்றையும் நன்றாகச் செய்தார்; காதுகேட்காதவர்களைக் கேட்கவும், ஊமையர்களைப் பேசவும்பண்ணுகிறார் என்று சொல்லி, மேலும் ஆச்சரியப்பட்டார்கள்.
ਤੇ(ਅ)ਤਿਚਮਤ੍ਕ੍ਰੁʼਤ੍ਯ ਪਰਸ੍ਪਰੰ ਕਥਯਾਮਾਸੁਃ ਸ ਬਧਿਰਾਯ ਸ਼੍ਰਵਣਸ਼ਕ੍ਤਿੰ ਮੂਕਾਯ ਚ ਕਥਨਸ਼ਕ੍ਤਿੰ ਦੱਤ੍ਵਾ ਸਰ੍ੱਵੰ ਕਰ੍ੰਮੋੱਤਮਰੂਪੇਣ ਚਕਾਰ|

< மாற்கு 7 >