< மாற்கு 7 >
1 ௧ எருசலேமில் இருந்து வந்த பரிசேயர்களும், வேதபண்டிதர்களில் சிலரும் அவரிடம் கூடிவந்தார்கள்.
anantaraM yirUzAlama AgatAH phirUzinO'dhyApakAzca yIzOH samIpam AgatAH|
2 ௨ அப்பொழுது அவருடைய சீடர்களில் சிலர் கைகளைக் கழுவாமல் சாப்பிடுகிறதை அவர்கள் பார்த்து குற்றஞ்சாட்டினார்கள்.
tE tasya kiyataH ziSyAn azucikarairarthAda aprakSAlitahastai rbhunjjatO dRSTvA tAnadUSayan|
3 ௩ ஏனென்றால், யூதர்கள் அனைவரும் முக்கியமாக பரிசேயர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தைக் கடைபிடித்து, அடிக்கடி கைகளைக் கழுவினாலொழிய சாப்பிடமாட்டார்கள்;
yataH phirUzinaH sarvvayihUdIyAzca prAcAM paramparAgatavAkyaM sammanya pratalEna hastAn aprakSAlya na bhunjjatE|
4 ௪ கடைவீதிகளுக்குச் சென்று திரும்பி வரும்போதும் குளிக்காமல் சாப்பிடமாட்டார்கள். அப்படியே செம்புகளையும், கிண்ணங்களையும், செப்புக்குடங்களையும், இருக்கைகளையும் கழுவுகிறதோடு மட்டுமல்லாமல், வேறு அநேக சடங்குகளையும் கடைபிடித்துவருவார்கள்.
ApanAdAgatya majjanaM vinA na khAdanti; tathA pAnapAtrANAM jalapAtrANAM pittalapAtrANAm AsanAnAnjca jalE majjanam ityAdayOnyEpi bahavastESAmAcArAH santi|
5 ௫ அப்பொழுது, அந்தப் பரிசேயர்களும் வேதபண்டிதர்களும் அவரைப் பார்த்து: உம்முடைய சீடர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை மீறி, ஏன் கைகளைக் கழுவாமல் சாப்பிடுகிறார்கள் என்று கேட்டார்கள்.
tE phirUzinO'dhyApakAzca yIzuM papracchuH, tava ziSyAH prAcAM paramparAgatavAkyAnusArENa nAcarantO'prakSAlitakaraiH kutO bhujaMtE?
6 ௬ அவர்களுக்கு அவர் மறுமொழியாக: இந்த மக்கள் தங்களுடைய உதடுகளினால் என்னை கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாக விலகியிருக்கிறது என்றும்,
tataH sa pratyuvAca kapaTinO yuSmAn uddizya yizayiyabhaviSyadvAdI yuktamavAdIt| yathA svakIyairadharairEtE sammanyanatE sadaiva mAM| kintu mattO viprakarSE santi tESAM manAMsi ca|
7 ௭ மனிதர்களுடைய கட்டளைகளைப் போதனைகளாகப் போதித்து, வீணாக எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று எழுதியிருக்கிறபடி, மாயக்காரர்களாகிய உங்களைக்குறித்து, ஏசாயா நன்றாகத் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறான்.
zikSayantO bidhIn nnAjnjA bhajantE mAM mudhaiva tE|
8 ௮ நீங்கள் தேவனுடைய கட்டளைகளை ஒதுக்கிவிட்டு, மனிதர்களுடைய பாரம்பரியத்தைக் கடைபிடித்துவருகிறவர்களாக, கிண்ணங்களையும் செம்புகளையும் கழுவுகிறீர்கள்; மற்றும் இப்படிப்பட்ட அநேக சடங்குகளையும் கடைபிடித்துவருகிறீர்கள்” என்றார்.
yUyaM jalapAtrapAnapAtrAdIni majjayantO manujaparamparAgatavAkyaM rakSatha kintu IzvarAjnjAM laMghadhvE; aparA IdRzyOnEkAH kriyA api kurudhvE|
9 ௯ பின்னும் அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் உங்களுடைய பாரம்பரியத்தைக் கடைபிடிப்பதற்காக தேவனுடைய கட்டளைகளை நிராகரித்தது நன்றாக இருக்கிறது.
anyanjcAkathayat yUyaM svaparamparAgatavAkyasya rakSArthaM spaSTarUpENa IzvarAjnjAM lOpayatha|
10 ௧0 எப்படியென்றால், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும், தகப்பனையாவது தாயையாவது அவமதிக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், மோசே சொல்லியிருக்கிறாரே.
yatO mUsAdvArA prOktamasti svapitarau sammanyadhvaM yastu mAtaraM pitaraM vA durvvAkyaM vakti sa nitAntaM hanyatAM|
11 ௧௧ நீங்களோ, ஒருவன் தன் தகப்பனையாவது தாயையாவது பார்த்து: உனக்கு நான் செய்யவேண்டிய உதவி எதுவோ, அதைக் கொர்பான் என்னும் காணிக்கையாக தேவனுக்குக் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டால் அவனுடைய கடமை முடிந்தது என்று சொல்லி,
kintu madIyEna yEna dravyENa tavOpakArObhavat tat karbbANamarthAd IzvarAya nivEditam idaM vAkyaM yadi kOpi pitaraM mAtaraM vA vakti
12 ௧௨ அவனை இனி தன் தகப்பனுக்கோ தன் தாய்க்கோ எந்தவொரு உதவியும் செய்யவிடாமல்;
tarhi yUyaM mAtuH pitu rvOpakAraM karttAM taM vArayatha|
13 ௧௩ நீங்கள் போதித்த உங்களுடைய பாரம்பரியத்தினால் தேவவசனத்தை அவமதிக்கிறீர்கள். இதுபோலவே நீங்கள் மற்ற அநேக காரியங்களையும் செய்கிறீர்கள் என்று சொன்னார்.
itthaM svapracAritaparamparAgatavAkyEna yUyam IzvarAjnjAM mudhA vidhadvvE, IdRzAnyanyAnyanEkAni karmmANi kurudhvE|
14 ௧௪ பின்பு அவர் மக்கள் எல்லோரையும் வரவழைத்து அவர்களைப் பார்த்து: நீங்கள் எல்லோரும் நான் சொல்வதைக்கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள்.
atha sa lOkAnAhUya babhASE yUyaM sarvvE madvAkyaM zRNuta budhyadhvanjca|
15 ௧௫ மனிதனுக்கு வெளியிலிருந்து அவனுக்குள்ளே போகிறது அவனைத் தீட்டுப்படுத்தாது; அவன் மனதிலிருந்து புறப்படுகிறவைகளே அவனைத் தீட்டுப்படுத்தும்.
bAhyAdantaraM pravizya naramamEdhyaM karttAM zaknOti IdRzaM kimapi vastu nAsti, varam antarAd bahirgataM yadvastu tanmanujam amEdhyaM karOti|
16 ௧௬ கேட்கிறதற்கு ஒருவன் காதுள்ளவனாக இருந்தால் அவன் கேட்கட்டும் என்றார்.
yasya zrOtuM zrOtrE staH sa zRNOtu|
17 ௧௭ அவர் மக்களைவிட்டு வீட்டிற்குள் சென்றபோது, அவருடைய சீடர்கள் அவர் சொன்ன உவமையைக்குறித்து அவரிடத்தில் விசாரித்தார்கள்.
tataH sa lOkAn hitvA gRhamadhyaM praviSTastadA ziSyAstadRSTAntavAkyArthaM papracchuH|
18 ௧௮ அதற்கு அவர்: நீங்களும் இவ்வளவு புரிந்துகொள்ளாதவர்களா? வெளியிலிருந்து மனிதனுக்குள்ளே போகிற எதுவும் அவனைத் தீட்டுப்படுத்தாது என்று நீங்கள் அறிந்துகொள்ளவில்லையா?
tasmAt sa tAn jagAda yUyamapi kimEtAdRgabOdhAH? kimapi dravyaM bAhyAdantaraM pravizya naramamEdhyaM karttAM na zaknOti kathAmimAM kiM na budhyadhvE?
19 ௧௯ அது அவன் இருதயத்திற்குள் போகாமல் வயிற்றுக்குள்ளே போகிறது; அதிலிருந்து எல்லா அசுத்தங்களும் ஆசனவழியாக வெளியேபோகும்.
tat tadantarna pravizati kintu kukSimadhyaM pravizati zESE sarvvabhuktavastugrAhiNi bahirdEzE niryAti|
20 ௨0 மனிதனுக்குள்ளேயிருந்து புறப்படுகிறதே மனிதனைத் தீட்டுப்படுத்தும்.
aparamapyavAdId yannarAnnirEti tadEva naramamEdhyaM karOti|
21 ௨௧ எப்படியென்றால், மனிதனுடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும்,
yatO'ntarAd arthAn mAnavAnAM manObhyaH kucintA parastrIvEzyAgamanaM
22 ௨௨ திருட்டும், பொருளாசைகளும், துஷ்டகுணங்களும், கபடும், காமமும், வன்கண்ணும், அவதூறும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும்.
naravadhazcauryyaM lObhO duSTatA pravanjcanA kAmukatA kudRSTirIzvaranindA garvvastama ityAdIni nirgacchanti|
23 ௨௩ பொல்லாதவைகளாகிய இவைகள் எல்லாம் மனதிலிருந்து புறப்பட்டு மனிதனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.
EtAni sarvvANi duritAnyantarAdEtya naramamEdhyaM kurvvanti|
24 ௨௪ பின்பு, அவர் எழுந்து அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, தீரு சீதோன் பட்டணங்களின் எல்லைகளில்போய், ஒரு வீட்டிற்குள் சென்று, அவர் அங்கே இருப்பது ஒருவருக்கும் தெரியக்கூடாது என்று விரும்பியும், அவர் மறைவாக இருக்கமுடியாமல்போனது.
atha sa utthAya tatsthAnAt sOrasIdOnpurapradEzaM jagAma tatra kimapi nivEzanaM pravizya sarvvairajnjAtaH sthAtuM matinjcakrE kintu guptaH sthAtuM na zazAka|
25 ௨௫ அசுத்தஆவி பிடித்திருந்த ஒரு சிறுபெண்ணின் தாய், இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டு, வந்து அவர் பாதத்தில் விழுந்தாள்.
yataH suraphainikIdEzIyayUnAnIvaMzOdbhavastriyAH kanyA bhUtagrastAsIt| sA strI tadvArttAM prApya tatsamIpamAgatya taccaraNayOH patitvA
26 ௨௬ அந்தப் பெண் சீரோபேனிக்கியா தேசத்தைச் சேர்ந்த கிரேக்கப் பெண்ணாக இருந்தாள்; அவள் தன் மகளைப் பிடித்திருந்த பிசாசைத் துரத்திவிடவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டாள்.
svakanyAtO bhUtaM nirAkarttAM tasmin vinayaM kRtavatI|
27 ௨௭ இயேசு அவளைப் பார்த்து: முதலில் பிள்ளைகள் திருப்தியாகட்டும்; பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லது இல்லை என்றார்.
kintu yIzustAmavadat prathamaM bAlakAstRpyantu yatO bAlakAnAM khAdyaM gRhItvA kukkurEbhyO nikSEpO'nucitaH|
28 ௨௮ அதற்கு அவள்: உண்மைதான் ஆண்டவரே, ஆனாலும், மேஜையின்கீழே இருக்கும் நாய்க்குட்டிகள் பிள்ளைகள் சிந்துகிற துணிக்கைகளைத் தின்னுமே என்றாள்.
tadA sA strI tamavAdIt bhOH prabhO tat satyaM tathApi manjcAdhaHsthAH kukkurA bAlAnAM karapatitAni khAdyakhaNPAni khAdanti|
29 ௨௯ அப்பொழுது, அவர்: நீ சொன்ன அந்த வார்த்தையினிமித்தம் போகலாம், பிசாசு உன் மகளைவிட்டுப் போனது என்றார்.
tataH sO'kathayad EtatkathAhEtOH sakuzalA yAhi tava kanyAM tyaktvA bhUtO gataH|
30 ௩0 அவள் தன் வீட்டிற்கு வந்தபொழுது, பிசாசு போய்விட்டதையும், தன் மகள் கட்டிலில் படுத்திருக்கிறதையும் கண்டாள்.
atha sA strI gRhaM gatvA kanyAM bhUtatyaktAM zayyAsthitAM dadarza|
31 ௩௧ மறுபடியும், அவர் தீரு சீதோன் பட்டணங்களின் எல்லைகளைவிட்டுப் புறப்பட்டு, தெக்கப்போலியின் எல்லைகளின்வழியாகக் கலிலேயாக்கடலின் அருகே வந்தார்.
punazca sa sOrasIdOnpurapradEzAt prasthAya dikApalidEzasya prAntarabhAgEna gAlIljaladhEH samIpaM gatavAn|
32 ௩௨ அங்கே திக்குவாயுடைய ஒரு காதுகேளாதவனை அவரிடம் கொண்டுவந்து, அவர் தமது கையை அவன்மேல் வைக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டார்கள்.
tadA lOkairEkaM badhiraM kadvadanjca naraM tannikaTamAnIya tasya gAtrE hastamarpayituM vinayaH kRtaH|
33 ௩௩ அப்பொழுது, அவர் அவனை மக்கள் கூட்டத்தைவிட்டுத் தனியே அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய விரல்களை அவன் காதுகளில் வைத்து, உமிழ்ந்து, அவனுடைய நாக்கைத் தொட்டு;
tatO yIzu rlOkAraNyAt taM nirjanamAnIya tasya karNayOggulI rdadau niSThIvaM dattvA ca tajjihvAM pasparza|
34 ௩௪ வானத்தை அண்ணாந்துபார்த்து, பெருமூச்சுவிட்டு: எப்பத்தா என்றார்; அதற்குத் திறக்கப்படுவாயாக என்று அர்த்தம்.
anantaraM svargaM nirIkSya dIrghaM nizvasya tamavadat itaphataH arthAn muktO bhUyAt|
35 ௩௫ உடனே அவனுடைய காதுகள் திறக்கப்பட்டு, அவனுடைய நாக்கின் கட்டும் அவிழ்ந்து, அவன் தெளிவாகப் பேசினான்.
tatastatkSaNaM tasya karNau muktau jihvAyAzca jAPyApagamAt sa suspaSTavAkyamakathayat|
36 ௩௬ அதை யாருக்கும் சொல்லவேண்டாம் என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்; ஆனாலும் எவ்வளவு அதிகமாக அவர்களுக்குக் கட்டளையிட்டாரோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் அதைப் பிரசித்தப்படுத்தி,
atha sa tAn vAPhamityAdidEza yUyamimAM kathAM kasmaicidapi mA kathayata, kintu sa yati nyaSEdhat tE tati bAhulyEna prAcArayan;
37 ௩௭ எல்லாவற்றையும் நன்றாகச் செய்தார்; காதுகேட்காதவர்களைக் கேட்கவும், ஊமையர்களைப் பேசவும்பண்ணுகிறார் என்று சொல்லி, மேலும் ஆச்சரியப்பட்டார்கள்.
tE'ticamatkRtya parasparaM kathayAmAsuH sa badhirAya zravaNazaktiM mUkAya ca kathanazaktiM dattvA sarvvaM karmmOttamarUpENa cakAra|