< மாற்கு 6 >
1 ௧ இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, அவர் வளர்ந்த ஊருக்கு வந்தார்; அவருடைய சீடர்களும் அவரோடு வந்தார்கள்.
Исус а плекат де аколо ши С-а дус ын патрия Луй. Ученичий Луй ау мерс дупэ Ел.
2 ௨ ஓய்வுநாளானபோது, ஜெப ஆலயத்தில் போதகம்பண்ணினார். அதைக் கேட்ட அனைவரும் ஆச்சரியப்பட்டு, இவைகள் இவனுக்கு எங்கிருந்து வந்தது? இவன் கைகளினால் இப்படிப்பட்ட பலத்த செய்கைகளைச் செய்ய இவனுக்குக் கொடுக்கப்பட்ட ஞானம் எப்படிப்பட்டது?
Кынд а венит зиуа Сабатулуй, а ынчепут сэ ынвеце пе нород ын синагогэ. Мулць, кынд Ыл аузяу, се мирау ши зичяу: „Де унде аре Ел ачесте лукрурь? Че фел де ынцелепчуне есте ачаста каре Й-а фост датэ? Ши кум се фак астфел де минунь прин мыниле Луй?
3 ௩ இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் என்பவர்களுடைய சகோதரன் அல்லவா? இவன் சகோதரிகளும் இங்கே நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? என்று சொல்லி, அவரைக்குறித்து இடறல் அடைந்தார்கள்.
Ну есте Ачеста тымпларул, фечорул Марией, фрателе луй Иаков, ал луй Иосе, ал луй Иуда ши ал луй Симон? Ши ну сунт сурориле Луй аич, ынтре ной?” Ши гэсяу о причинэ де потикнире ын Ел.
4 ௪ இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் சொந்த ஊரிலும், தன் உறவினர்களிலும், தன் வீட்டிலும்தான் மதிக்கப்படமாட்டான். மற்ற எல்லா இடங்களிலும் மதிக்கப்படுவான் என்றார்.
Дар Исус ле-а зис: „Ун пророк нуесте диспрецуит декыт ын патрия Луй, ынтре руделе Луй ши ын каса Луй.”
5 ௫ அங்கே அவர் சில நோயாளிகள்மேல்மட்டும் கரங்களை வைத்து, அவர்களைக் குணமாக்கினார், வேறு அற்புதங்கள் எதுவும் செய்யமுடியாமல்.
Н-а путут сэ факэ ничо минуне аколо, чи доар Шь-а пус мыниле песте кыцьва болнавь ши й-а виндекат.
6 ௬ அவர்களுக்கு விசுவாசம் இல்லாததினால் அதைக்குறித்து ஆச்சரியப்பட்டு, மற்ற கிராமங்களுக்குச்சென்று, போதகம்பண்ணினார்.
Ши Се мира де некрединца лор. Исус стрэбэтя сателе де примпрежур ши ынвэца пе нород.
7 ௭ இயேசு பன்னிரண்டு சீடர்களையும் அழைத்து, அசுத்தஆவிகளைத் துரத்த அவர்களுக்கு அதிகாரம் கொடுத்து,
Атунч а кемат ла Сине пе чей дойспрезече ши а ынчепут сэ-й тримитэ дой кыте дой, дынду-ле путере асупра духурилор некурате.
8 ௮ வழிக்குப் பையையோ, அப்பத்தையோ, இடுப்புக் கச்சையில் பணத்தையோ, எடுத்துக்கொண்டுபோகாமல், ஒரு தடியைமட்டும் எடுத்துக்கொண்டுபோகவும்;
Ле-а порунчит сэ ну я нимик ку ей пе друм, декыт ун тояг; сэ н-айбэ нич пыне, нич трайстэ, нич бань де арамэ ла брыу;
9 ௯ காலணிகளைப் போட்டுக்கொண்டுபோகவும், இரண்டு அங்கிகளை அணிந்துகொள்ளாமலிருக்கவும் கட்டளையிட்டார்.
сэ се ынкалце ку сандале ши сэ ну се ымбраче ку доуэ хайне.
10 ௧0 பின்பு அவர்களைப் பார்த்து: நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டிற்குச் சென்றால், அந்த இடத்தைவிட்டுப் புறப்படும்வரை அங்கேயே தங்கியிருங்கள்.
Апой ле-а зис: „Ын орьче касэвець интра, сэ рэмынець аколо пынэ вець плека дин локул ачела.
11 ௧௧ யாராவது உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்களுடைய வசனங்களைக் கேட்காமலும் இருந்தால், நீங்கள் அந்த இடத்தைவிட்டுப் புறப்படும்போது, அவர்களுக்கு சாட்சியாக உங்களுடைய கால்களின் கீழே படிந்த தூசியை உதறிப்போடுங்கள். நியாயத்தீர்ப்புநாளிலே அந்தப் பட்டணத்திற்கு சம்பவிப்பதைவிட சோதோம் கொமோரா பட்டணத்திற்கு சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, அவர்களை இரண்டு இரண்டுபேராக அனுப்பினார்.
Ши, дакэ ын вреун лок ну вэ вор прими ши ну вэ вор аскулта, сэ плекаць де аколо ши сэ скутурацьындатэ прафул де суб пичоареле воастре, ка мэртурие пентру ей. Адевэрат вэ спун кэ, ын зиуа жудекэций, ва фи май ушор пентру пэмынтул Содомей ши Гоморей декыт пентру четатя ачея.”
12 ௧௨ அவர்கள் புறப்பட்டுப்போய்: மனந்திரும்புங்கள் என்று பிரசங்கித்து;
Ученичий ау плекат ши ау проповэдуит покэинца.
13 ௧௩ அநேக பிசாசுகளைத் துரத்தி, அநேக நோயாளிகளை எண்ணெய் பூசி சுகமாக்கினார்கள்.
Скотяу мулць драчь ши унӂяу ку унтделемн пе мулць болнавь ши-й виндекау.
14 ௧௪ இயேசுவினுடைய பெயர் பிரசித்தமானதினால், ஏரோதுராஜா அவரைக்குறித்துக் கேள்விப்பட்டு: மரித்துப்போன யோவான்ஸ்நானன் உயிரோடு எழுந்தான், எனவே அவனிடம் இப்படிப்பட்டப் பலத்த செய்கைகள் வெளிப்படுகிறது என்றான்.
Ымпэратул Ирод а аузит ворбинду-се деспре Исус, ал кэруй Нуме ажунсесе вестит, ши а зис: „Иоан Ботезэторул а ынвият дин морць, ши де ачея лукрязэ ачесте путерь прин Ел.”
15 ௧௫ சிலர்: அவர் எலியா என்றார்கள். வேறுசிலர்: அவர் ஒரு தீர்க்கதரிசி அல்லது பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவனைப்போல இருக்கிறார் என்று சொன்னார்கள்.
Алций зичяу: „Есте Илие.” Яр алций зичяу: „Есте ун пророк ка унул дин пророчь.”
16 ௧௬ ஏரோது அதைக் கேட்டபொழுது: அவன், நான் தலையை வெட்டிக்கொன்ற யோவான்தான்; அவன் உயிரோடு எழுந்தான் என்றான்.
Дар Ирод, кынд а аузит лукрул ачеста, зичя: „Иоан ачела, кэруя й-ам тэят капул, а ынвият дин морць.”
17 ௧௭ ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளைத் தனக்கு மனைவியாக்கி வைத்துக்கொண்டபோது,
Кэч Ирод ынсушь тримисесе сэ приндэ пе Иоан ши-л легасе ын темницэ дин причина Иродиадей, неваста фрателуй сэу Филип, пентру кэ о луасе де невастэ.
18 ௧௮ யோவான் ஏரோதைப் பார்த்து: நீர் உம்முடைய சகோதரன் மனைவியை வைத்துக்கொள்ளுவது நியாயம் இல்லை என்று சொன்னதினால், ஏரோது போர்வீரர்களை அனுப்பி, யோவானைப் பிடித்துக் கட்டிக் காவலில் வைத்திருந்தான்.
Ши Иоан зичя луй Ирод: „Ну-ць есте ынгэдуит сэ ций пе неваста фрателуй тэу!”
19 ௧௯ ஏரோதியாளும் அவனுக்குச் சதி நினைத்து, அவனைக் கொன்றுபோட மனதாயிருந்தாள்; ஆனாலும், அவளால் முடியாமல்போனது.
Иродиада авя неказ пе Иоан ши воя сэ-л омоаре. Дар ну путя,
20 ௨0 ஏனென்றால், யோவான் நீதியும் பரிசுத்தமும் உள்ளவன் என்று ஏரோது அறிந்து, அவனுக்குப் பயந்து, அவனைப் பாதுகாத்து, அவன் யோசனையின்படி அநேகக் காரியங்களைச் செய்து, விருப்பத்தோடு அவன் சொல்லைக் கேட்டுவந்தான்.
кэч Ирод се темя де Иоан, фииндкэ ыл штия ом неприхэнит ши сфынт; ыл окротя ши, кынд ыл аузя, де мулте орь стэтя ын кумпэнэ, нештиинд че сэ факэ, ши-л аскулта ку плэчере.
21 ௨௧ ஏரோது தன்னுடைய பிறந்தநாளிலே தன்னுடைய பிரபுக்களுக்கும், படைத்தளபதிகளுக்கும், கலிலேயா நாட்டின் பிரதான மனிதர்களுக்கும் ஒரு விருந்துபண்ணினபோது,
Тотушь а венит о зи ку бун прилеж, кынд Ирод ышь прэзнуя зиуа наштерий ши а дат ун оспэц боерилор сэй, май-марилор оастей ши фрунташилор Галилеий.
22 ௨௨ ஏரோதியாளின் மகள் சபை நடுவே வந்து நடனம்பண்ணி, ஏரோதுவையும் அவனோடுகூட பந்தியில் இருந்தவர்களையும் சந்தோஷப்படுத்தினாள். அப்பொழுது, ராஜா சிறுபெண்ணை நோக்கி: உனக்கு வேண்டியதை என்னிடம் கேள், அதை உனக்குத் தருவேன் என்று சொல்லி;
Фата Иродиадей а интрат ла оспэц, а жукат ши а плэкут луй Ирод ши оаспецилор луй. Ымпэратул а зис фетей: „Чере-мь орьче врей, ши-ць вой да.”
23 ௨௩ நீ என்னிடத்தில் எதைக்கேட்டாலும், அது என் ராஜ்யத்தில் பாதியானாலும், அதை உனக்குத் தருவேன் என்று அவளுக்கு வாக்குக்கொடுத்தான்.
Апой а адэугат ку журэмынт: „Орьче-мь вей чере, ыць вой да, фие ши жумэтате дин ымпэрэция мя.”
24 ௨௪ அப்பொழுது, அவள் வெளியேபோய், நான் என்ன கேட்கவேண்டும் என்று தன் தாயிடம் கேட்டாள். அதற்கு அவள்: யோவான்ஸ்நானனுடைய தலையைக் கேள் என்றாள்.
Фата а ешит афарэ ши а зис мамей сале: „Че сэ чер?” Ши мама са й-а рэспунс: „Капул луй Иоан Ботезэторул.”
25 ௨௫ உடனே அவள் ராஜாவிடம் சீக்கிரமாக வந்து: நீர் இப்பொழுதே ஒரு தட்டில் யோவான்ஸ்நானனுடைய தலையை வைத்து எனக்குத் தரவேண்டும் என்று கேட்டாள்.
Еа с-а грэбит сэ винэ ындатэ ла ымпэрат ши й-а фэкут урмэтоаря черере: „Вряу сэ-мь дай ындатэ, ынтр-о фарфурие, капул луй Иоан Ботезэторул.”
26 ௨௬ அப்பொழுது ராஜா அதிக துக்கமடைந்தான்; ஆனாலும், வாக்குக் கொடுத்ததினாலும், அவனோடுகூட பந்தியில் இருந்தவர்களுக்காகவும், அவள் கேட்டுக்கொண்டதை மறுக்க அவனுக்கு மனம் இல்லாமல்;
Ымпэратул с-а ынтристат фоарте мулт, дар, дин причина журэминтелор сале ши дин причина оаспецилор, н-а врут сэ зикэ ну.
27 ௨௭ உடனே யோவான்ஸ்நானனுடைய தலையைக் கொண்டுவரும்படி போர்வீரனுக்குக் கட்டளைக் கொடுத்து அனுப்பினான்.
А тримис ындатэ ун осташ де пазэ, ку порунка де а адуче капул луй Иоан Ботезэторул. Осташул де пазэ с-а дус ши а тэят капул луй Иоан ын темницэ,
28 ௨௮ அப்படியே அவன்போய், காவல்கூடத்திலே அவனுடைய தலையை வெட்டி, அவன் தலையை ஒரு தட்டிலே கொண்டுவந்து, அதை அந்தச் சிறு பெண்ணுக்குக் கொடுத்தான்; அந்தச் சிறுபெண் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள்.
л-а адус пе о фарфурие, л-а дат фетей, ши фата л-а дат мамей сале.
29 ௨௯ அவனுடைய சீடர்கள் அதைக் கேள்விப்பட்டு வந்து, அவன் சரீரத்தை எடுத்து, ஒரு கல்லறையில் வைத்தார்கள்.
Ученичий луй Иоан, кынд ау аузит ачест лукру, ау венит де й-ау ридикат трупул ши л-ау пус ынтр-ун мормынт.
30 ௩0 அப்பொழுது அப்போஸ்தலர்கள் இயேசுவிடம் கூடிவந்து, தாங்கள் செய்தவைகள் போதித்தவைகள் எல்லாவற்றையும் அவருக்கு அறிவித்தார்கள்.
Апостолий с-ау адунат ла Исус ши Й-ау спус тот че фэкусерэ ши тот че ынвэцасерэ пе оамень.
31 ௩௧ அவர் அவர்களைப் பார்த்து: வனாந்திரமான ஒரு இடத்திற்குச் சென்று தனிமையில் கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் வாருங்கள் என்றார்; ஏனென்றால், அநேக மக்கள் அவரிடம் வருகிறதும் போகிறதுமாக இருந்ததினால் அவர்களுக்கு சாப்பிட நேரமில்லாமல் இருந்தது.
Исус ле-а зис: „Вениць сингурь ла о парте, ынтр-ун лок пустиу, ши одихници-вэ пуцин.” Кэч ерау мулць каре веняу ши се дучяу ши ей н-авяу време нич сэ мэнынче.
32 ௩௨ அப்படியே அவர்கள் தனிமையாக ஒரு படகில் ஏறி வனாந்திரமான ஒரு இடத்திற்குப் போனார்கள்.
Ау плекат дар ку корабия, ка сэ се дукэ ынтр-ун лок пустиу, ла о парте.
33 ௩௩ அவர்கள் புறப்பட்டுப் போகிறதை மக்கள் பார்த்தார்கள். அவரை அறிந்த மக்கள் எல்லாப் பட்டணங்களிலுமிருந்து கால்நடையாகவே அந்த இடத்திற்கு ஓடி, அவர்களுக்கு முன்பே அங்கு சென்றுசேர்ந்து, அவரிடம் கூடிவந்தார்கள்.
Оамений й-ау вэзут плекынд ши й-ау куноскут; ау алергат пе жос дин тоате четэциле ши ау венит ынаинтя лор ын локул ын каре се дучяу ей.
34 ௩௪ இயேசு கரையில் வந்து, அங்கே கூடிவந்த மக்களைப் பார்த்து, அவர்கள் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல இருந்ததினால், அவர்கள்மேல் மனதுருகி, அநேகக் காரியங்களை அவர்களுக்குப் போதிக்கத்தொடங்கினார்.
Кынд а ешит дин корабие, Исус а вэзут мулт нород ши И с-а фэкут милэ де ей, пентру кэ ерау ка ниште ой каре н-авяу пэстор, ши а ынчепут сэ-й ынвеце мулте лукрурь.
35 ௩௫ அதிகநேரம் ஆனபின்பு, அவருடைய சீடர்கள் அவரிடம் வந்து: இது வனாந்திரமான இடம், அதிகநேரமும் ஆனது;
Фииндкэ зиуа ера пе сфыршите, ученичий с-ау апропият де Ел ши Й-ау зис: „Локул ачеста есте пустиу ши зиуа есте пе сфыршите.
36 ௩௬ சாப்பிடுகிறதற்கும் இவர்களிடம் ஒன்றும் இல்லை; எனவே இவர்கள் சுற்றிலும் இருக்கிற கிராமங்களுக்கும் ஊர்களுக்கும்போய், அப்பங்களை வாங்கிக்கொள்ள இவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள்.
Дэ-ле друмул сэ се дукэ ын кэтунеле ши сателе де примпрежур ка сэ-шь кумпере пыне, фииндкэ н-ау че мынка.”
37 ௩௭ அவர் அவர்களைப் பார்த்து: நீங்களே அவர்களுக்கு உணவுகொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள்போய், இருநூறு வெள்ளிக்காசுகளுக்கு அப்பங்களை வாங்கி இவர்களுக்குச் சாப்பிடக் கொடுக்கலாமா? என்றார்கள்.
„Даци-ле вой сэ мэнынче”, ле-а рэспунс Исус. Дар ей Й-ау зис: „Оаре сэ не дучем сэ кумпэрэм пынь де доуэ суте де лей ши сэ ле дэм сэ мэнынче?”
38 ௩௮ அதற்கு அவர்: உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கிறது என்று போய்ப் பாருங்கள் என்றார். அவர்கள் பார்த்துவந்து: ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் இருக்கிறது என்றார்கள்.
Ши Ел й-а ынтребат: „Кыте пынь авець? Дучеци-вэ де ведець.” С-ау дус де ау вэзут кыте пынь ау ши ау рэспунс: „Чинчь ши дой пешть.”
39 ௩௯ அப்பொழுது எல்லோரையும் பசும்புல்லின்மேல் பந்தி உட்காரவைக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
Атунч ле-а порунчит сэ-й ашезе пе тоць, чете-чете, пе ярба верде.
40 ௪0 அப்படியே வரிசை வரிசையாக, நூறுநூறுபேராகவும் ஐம்பதுஐம்பதுபேராகவும் உட்கார்ந்தார்கள்.
Ши ау шезут жос ын чете де кыте о сутэ ши де кыте чинчзечь.
41 ௪௧ அவர் அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டு, அவர்களுக்குப் பரிமாறத் தம்முடைய சீடர்களிடம் கொடுத்தார். அப்படியே இரண்டு மீன்களையும் எல்லோருக்கும் பங்கிட்டார்.
Ел а луат челе чинч пынь ши чей дой пешть. Шь-а ридикат окий спре чер ши а ростит бинекувынтаря. Апой а фрынт пыниле ши ле-а дат ученичилор, ка ей сэ ле ымпартэ нородулуй. Асеменя ши чей дой пешть, й-а ымпэрцит ла тоць.
42 ௪௨ எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தி அடைந்தார்கள்.
Ау мынкат тоць ши с-ау сэтурат;
43 ௪௩ மேலும் அப்பங்களிலும் மீன்களிலும் மீதியான துண்டுகளைப் பன்னிரண்டு கூடை நிறைய எடுத்தார்கள்.
ши ау ридикат доуэспрезече кошурь плине ку фиримитурь де пыне ши ку че май рэмэсесе дин пешть.
44 ௪௪ அப்பங்கள் சாப்பிட்ட ஆண்கள் ஏறக்குறைய ஐயாயிரம்பேராக இருந்தார்கள்.
Чей че мынкасерэ пыниле ерау чинч мий де бэрбаць.
45 ௪௫ அவர் மக்களை அனுப்பிவிடும்போது, தம்முடைய சீடர்கள் படகில் ஏறி அக்கரையில் பெத்சாயிதாவிற்கு, தமக்கு முன்பே போகச்சொல்லி, அவர்களை துரிதப்படுத்தினார்.
Ындатэ, Исус а силит пе ученичий Сэй сэ интре ын корабие ши сэ трякэ ынаинтя Луй де чялалтэ парте, спре Бетсаида. Ын тимпул ачеста, Ел авя сэ дя друмул нородулуй.
46 ௪௬ அவர் மக்களை அனுப்பிவிட்டப்பின்பு, ஜெபம்பண்ணுவதற்காக ஒரு மலையின்மேல் ஏறினார்.
Дупэ че Шь-а луат рэмас-бун де ла нород, С-а дус ын мунте ка сэ Се роаӂе.
47 ௪௭ மாலைநேரமானபோது படகு நடுக்கடலில் இருந்தது; அவரோ கரையிலே தனிமையாக இருந்தார்.
Кынд с-а ынсерат, корабия ера ын мижлокул мэрий, яр Исус ера сингур пе цэрм.
48 ௪௮ அப்பொழுது எதிர்க்காற்று வீசிக்கொண்டிருந்ததால், அவர்கள் கஷ்டப்பட்டு துடுப்பு போடுகிறதை அவர் பார்த்து, அதிகாலையில் கடலின்மேல் நடந்து அவர்களிடம் வந்து, அவர்களைக் கடந்துபோகிறவர்போல காணப்பட்டார்.
А вэзут пе ученичь кэ се некэжеск ку выслиря, кэч вынтул ле ера ымпотривэ. Ши, ынтр-а патра стражэ дин ноапте, а мерс ла ей умблынд пе маре ши воя сэ трякэ пе лынгэ ей.
49 ௪௯ அவர் கடலின்மேல் நடக்கிறதை அவர்கள் பார்த்து, அவரை பிசாசு என்று நினைத்து, சத்தமிட்டு அலறினார்கள்.
Кынд Л-ау вэзут ей умблынд пе маре, ли с-а пэрут кэ есте о нэлукэ ши ау ципат,
50 ௫0 அவர்கள் எல்லோரும் அவரைப் பார்த்து கலக்கம் அடைந்தார்கள். உடனே அவர் அவர்களோடு பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாமல் இருங்கள் என்று சொல்லி.
пентру кэ тоць Л-ау вэзут ши с-ау ынспэймынтат. Исус а ворбит ындатэ ку ей ши ле-а зис: „Ындрэзниць, Еу сунт, ну вэ темець!”
51 ௫௧ அவர்கள் இருந்த படகில் ஏறினார். அப்பொழுது காற்று அமைதியானது; எனவே அவர்கள் தங்களுக்குள்ளே மிகவும் பிரமித்து ஆச்சரியப்பட்டார்கள்.
Апой С-а суит ла ей ын корабие ши а стат вынтул. Ей ау рэмас уймиць ши ынмэрмуриць,
52 ௫௨ அவர்களுடைய இருதயம் கடினமுள்ளதாக இருந்ததினால் அப்பங்களைக்குறித்து அவர்கள் உணராமல் போனார்கள்.
кэч ну ынцелесесерэ минуня ку пыниле, фииндкэ ле ера инима ымпетритэ.
53 ௫௩ அவர்கள் கடலைக்கடந்து கெனேசரேத்து என்னும் நாட்டிற்கு வந்து, கரை ஏறினார்கள்.
Дупэ че ау трекут маря, ау венит ын цинутул Генезаретулуй ши ау трас ла мал.
54 ௫௪ அவர்கள் படகில் இருந்து இறங்கினவுடனே, மக்கள் அவரை அறிந்து,
Кынд ау ешит дин корабие, оамений ау куноскут ындатэ пе Исус,
55 ௫௫ அந்தச் சுற்றுபுறமெல்லாம் ஓடிச்சென்று, நோயாளிகளைப் படுக்கைகளில் படுக்கவைத்து, அவர் வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்ட இடங்களிலெல்லாம் சுமந்துகொண்டுவந்தார்கள்;
ау алергат прин тоате ымпрежуримиле ши ау ынчепут сэ адукэ пе болнавь ын патурь претутиндень пе унде се аузя кэ ера Ел.
56 ௫௬ இவைகள் இல்லாமல், அவர் சென்ற கிராமங்கள், பட்டணங்கள், நாடுகள் எல்லாவற்றிலும் சந்தைவெளிகளிலே நோயாளிகளைக் கொண்டுவந்து, அவருடைய ஆடையின் ஓரத்தையாவது அவர்கள் தொடுவதற்கு அனுமதிக்கவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவரைத் தொட்ட எல்லோரும் சுகம் பெற்றுக்கொண்டார்கள்.
Орьунде интра Ел, ын сате, ын четэць сау ын кэтуне, пуняу пе болнавь ын пеце ши-Л ругау сэ ле дя вое доар сэ се атингэ де поалеле хайней Луй. Ши тоць кыць се атинӂяу де Ел ерау тэмэдуиць.