< மாற்கு 6 >
1 ௧ இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, அவர் வளர்ந்த ஊருக்கு வந்தார்; அவருடைய சீடர்களும் அவரோடு வந்தார்கள்.
ଜିସୁନ୍ ତେତ୍ତେ ସିଲଡ୍ ଜିର୍ରେ ଆ ସାଇଡମନ୍ ନାଜରିତନ୍ ୟର୍ରନାୟ୍ ଆରି ଆ ଞଙ୍ନେମରଞ୍ଜି ଆନିନ୍ଆଡଙ୍ ସଣ୍ଡୋଙେଞ୍ଜି ।
2 ௨ ஓய்வுநாளானபோது, ஜெப ஆலயத்தில் போதகம்பண்ணினார். அதைக் கேட்ட அனைவரும் ஆச்சரியப்பட்டு, இவைகள் இவனுக்கு எங்கிருந்து வந்தது? இவன் கைகளினால் இப்படிப்பட்ட பலத்த செய்கைகளைச் செய்ய இவனுக்குக் கொடுக்கப்பட்ட ஞானம் எப்படிப்பட்டது?
ଲୋଲୋନେ ଡିନ୍ନାଇଙନ୍, ଆନିନ୍ ରନୁକ୍କୁସିଂଲୋଙନ୍ ଞନଙନ୍ ତନିୟନ୍ ଆସନ୍ ଉଲନେ, ଆରି, ଗୋଗୋୟ୍ନେଡମ୍ ମନ୍ରାଞ୍ଜି ଜିସୁନ୍ ଆ ବର୍ନେ ଅମ୍ଡଙ୍ଲେ ସାନ୍ନିଡାଲେ ବର୍ରଞ୍ଜି, “କେନ୍ ଆ ମନ୍ରା କେନ୍ ଅଡ଼୍କୋନ୍ ଅଡ଼େଙ୍ଗା ସିଲଡ୍ ଞାଙେନ୍? ଆରି, କେନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ଅଙ୍ଗା ଗିଆନ ତନିୟନ୍ ଡେଲୋ? ଆରି କେନ୍ ଆସିଲୋଙନ୍ ଆଡ୍ରେତେନ୍ ଆ ବୋର୍ସା କାବ୍ବାଡ଼ାଜି ଅଡ଼୍କୋନ୍ ଇନି?
3 ௩ இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் என்பவர்களுடைய சகோதரன் அல்லவா? இவன் சகோதரிகளும் இங்கே நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? என்று சொல்லி, அவரைக்குறித்து இடறல் அடைந்தார்கள்.
କେନ୍ ଆନିନ୍ ତି ବାଡ୍ଡୋଁୟ୍ମରନ୍ ତଡ୍ ପଙ୍? କେନ୍ ଆନିନ୍ ମରିଅମନ୍ ଆ ଡାଙ୍ଗଡ଼ାଅନ୍ ତଡ୍ ପଙ୍, ଆରି ଜାକୁବନ୍, ଜୋସିନ୍, ଜିଉଦାନ୍ ଡ ସିମନନ୍ ଆ ବୋଞାଙ୍ଜି ତଡ୍ ପଙ୍? ଆରି, କେନ୍ ଆ ତନାନଞ୍ଜି ଇନ୍ଲେଞ୍ଜି ସରିନ୍ ତେନ୍ନେଞ୍ଜି ତଡ୍ ପଙ୍?” ଆରି ଆନିଞ୍ଜି ଜିସୁନ୍ଆଡଙ୍ ଅଃଜ୍ଜାଲଜି ।
4 ௪ இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் சொந்த ஊரிலும், தன் உறவினர்களிலும், தன் வீட்டிலும்தான் மதிக்கப்படமாட்டான். மற்ற எல்லா இடங்களிலும் மதிக்கப்படுவான் என்றார்.
ସିଲତ୍ତେ ଜିସୁନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଗାମେନ୍, “ଆନ୍ନାରେଙନ୍ ପୁର୍ବାଃତେ ବର୍ନେମରନ୍ଆଡଙ୍ ଜାତଜି, ବନ୍ଡ ଆ ସାଇଡମନ୍, ଆ କୁଲମଞ୍ଜି, ଆସିଂଡମନ୍ ଆ ମନ୍ରାଜି ଆନିନ୍ଆଡଙ୍ ଅଃଜ୍ଜାଏଜି ।”
5 ௫ அங்கே அவர் சில நோயாளிகள்மேல்மட்டும் கரங்களை வைத்து, அவர்களைக் குணமாக்கினார், வேறு அற்புதங்கள் எதுவும் செய்யமுடியாமல்.
ଆରି, ତେତ୍ତେ ଇନ୍ନିଙ୍ ବୋର୍ସା କାବ୍ବାଡ଼ାନ୍ ଲୁମ୍ଲେ ଅଃର୍ରପ୍ତିଲୋ, ଅସୋୟ୍ ରୋଗମରଞ୍ଜି ଆ ଡଅଙ୍ଲୋଙ୍ ତୁମ୍ ଆସିନ୍ ଡକ୍କୋଡାଲେ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ମବ୍ନଙେଞ୍ଜି ।
6 ௬ அவர்களுக்கு விசுவாசம் இல்லாததினால் அதைக்குறித்து ஆச்சரியப்பட்டு, மற்ற கிராமங்களுக்குச்சென்று, போதகம்பண்ணினார்.
ଆରି, ଆନିଞ୍ଜି ଅଃଡ୍ଡର୍ରନେଞ୍ଜି ଆସନ୍ ଜିସୁନ୍ ସାନ୍ନି ଡେଏନ୍, ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ଜିସୁନ୍ ସମ୍ପରା ସାଇ ସାଇ ବୁଲ୍ଲେ ବୁଲ୍ଲେଲେ ଞନଙନ୍ ଇୟ୍ଲେ ତିଏ ।
7 ௭ இயேசு பன்னிரண்டு சீடர்களையும் அழைத்து, அசுத்தஆவிகளைத் துரத்த அவர்களுக்கு அதிகாரம் கொடுத்து,
ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ଜିସୁନ୍ ବାରଜଣଞ୍ଜିଆଡଙ୍ ଆମଙନ୍ ଓଡ୍ଡେଡାଲେ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ବାଗୁ ବାଗୁନେ ଅମ୍ମେଲେ ଅନାପ୍ପାୟନ୍ ଆସନ୍ ଉଲନେ, ଆରି ଏର୍ମଡ଼ିର୍ ପୁରାଡ଼ାଞ୍ଜି ଆ ଉପରେଙ୍ ଅବ୍ସୋଡ଼ାନେନ୍ ତିୟେଞ୍ଜି,
8 ௮ வழிக்குப் பையையோ, அப்பத்தையோ, இடுப்புக் கச்சையில் பணத்தையோ, எடுத்துக்கொண்டுபோகாமல், ஒரு தடியைமட்டும் எடுத்துக்கொண்டுபோகவும்;
ଆରି, “ଜିର୍ଜିରନ୍ ଆସନ୍ ଅବୟ୍ ତୁଡ଼େଡାଙ୍ ତୁମ୍ ପାଙ୍ବା, ଆରି ରୁଟି, ମୁନା କି ଗାଞ୍ଜିଆଲୋଙନ୍ ଡାବ୍ବୋନ୍ ଏପାଙ୍ଡଙ୍” ଗାମ୍ଲେ ଜିସୁନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ବରେଞ୍ଜି ।
9 ௯ காலணிகளைப் போட்டுக்கொண்டுபோகவும், இரண்டு அங்கிகளை அணிந்துகொள்ளாமலிருக்கவும் கட்டளையிட்டார்.
ବନ୍ଡ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ପାଣ୍ଡୋୟନ୍ ରନେନ୍ ଆସନ୍ ବରେଞ୍ଜି, “ବାଗୁ ଅଙ୍ଗିନ୍ ଏପାଙ୍ଡଙ୍” ଗାମେନ୍ ।
10 ௧0 பின்பு அவர்களைப் பார்த்து: நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டிற்குச் சென்றால், அந்த இடத்தைவிட்டுப் புறப்படும்வரை அங்கேயே தங்கியிருங்கள்.
ଆରି, ଜିସୁନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ବରେଞ୍ଜି, “ଅନ୍ନିଙ୍ ଆସିଂ ଆ ମନ୍ରାଜି ଆମ୍ବେଞ୍ଜିଆଡଙ୍ ଜାଲବେଞ୍ଜି ଡେନ୍, ତି ଆ ସାଇ ସିଲଡ୍ ଅଣ୍ଡ୍ରଙ୍ ଏଜିରେନ୍ ଜାୟ୍ ତି ଆସିଂ ଇୟ୍ ଡକୋନାବା ।
11 ௧௧ யாராவது உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்களுடைய வசனங்களைக் கேட்காமலும் இருந்தால், நீங்கள் அந்த இடத்தைவிட்டுப் புறப்படும்போது, அவர்களுக்கு சாட்சியாக உங்களுடைய கால்களின் கீழே படிந்த தூசியை உதறிப்போடுங்கள். நியாயத்தீர்ப்புநாளிலே அந்தப் பட்டணத்திற்கு சம்பவிப்பதைவிட சோதோம் கொமோரா பட்டணத்திற்கு சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, அவர்களை இரண்டு இரண்டுபேராக அனுப்பினார்.
ବନ୍ଡ ଅନ୍ନିଙ୍ ଆ ସାଇ ଆ ମନ୍ରାଜି ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ଅଃଜ୍ଜାଲବେଞ୍ଜି ଡେନ୍, ଅଡ଼େ ବର୍ନେବେଞ୍ଜି ଅଃନ୍ନମ୍ଡଙ୍ଲଜି ଡେନ୍, ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ତେତ୍ତେ ସିଲଡ୍ ଡୁଙ୍ଲନ୍ ଜିର୍ବା, ଆରି ଏଜିରେନ୍ ଆଡିଡ୍ ଆମଙଞ୍ଜି ସାକିନ୍ ତନିୟନ୍ ଆସନ୍ ତାଲ୍ଜଙ୍ବେନ୍ ଆ ଉମ୍ରିଲ ତୁୟ୍ତୁୟ୍ନାବା ।”
12 ௧௨ அவர்கள் புறப்பட்டுப்போய்: மனந்திரும்புங்கள் என்று பிரசங்கித்து;
ସିଲତ୍ତେ ଞଙ୍ନେମରଞ୍ଜି ଜିର୍ରେ, “ଆବ୍ୟର୍ବୁଡ୍ଡିନାବା,” ଗାମ୍ଲେ ମନ୍ରାଞ୍ଜିଆଡଙ୍ ଇୟ୍ଲେ ଅପ୍ପୁଙ୍ବରେଜି,
13 ௧௩ அநேக பிசாசுகளைத் துரத்தி, அநேக நோயாளிகளை எண்ணெய் பூசி சுகமாக்கினார்கள்.
ଆରି ଞଙ୍ନେମରଞ୍ଜି ଜବ୍ର ମନ୍ରାଜି ଆମଙ୍ ସିଲଡ୍ ବୁତନ୍ ଗଙେଞ୍ଜି ଆରି ଜବ୍ରଡମ୍ ରୋଗମରଞ୍ଜିଆଡଙ୍ ମିଞଲନ୍ ଜଡ୍ଲେ ମବ୍ନଙେଞ୍ଜି ।
14 ௧௪ இயேசுவினுடைய பெயர் பிரசித்தமானதினால், ஏரோதுராஜா அவரைக்குறித்துக் கேள்விப்பட்டு: மரித்துப்போன யோவான்ஸ்நானன் உயிரோடு எழுந்தான், எனவே அவனிடம் இப்படிப்பட்டப் பலத்த செய்கைகள் வெளிப்படுகிறது என்றான்.
ଜିସୁନ୍ ଆଞୁମ୍ ସମ୍ପରାନ୍ ଆଜ୍ରନାଏଞ୍ଜି ଏରୋଦ ରାଜାନ୍ ନିୟ୍ ଜିସୁନ୍ ଆ ବର୍ନେ ଅମ୍ଡଙେନ୍, ଆରି ମନ୍ରାଞ୍ଜି ବର୍ରଞ୍ଜି, “ତବ୍ବୁବ୍ଡାମର୍ ଜନନ୍ ଆରବୁମରଞ୍ଜି ଆମଙ୍ଲୋଙ୍ ସିଲଡ୍ ୟର୍ମେଙ୍ଲେ ଡୋଲନେ, ତିଆସନ୍ କେନ୍ ଅଡ଼୍କୋ ବୋର୍ସା କାବ୍ବାଡ଼ାନ୍ ଆମଙନ୍ ଗଡେଲ୍ତେ ।”
15 ௧௫ சிலர்: அவர் எலியா என்றார்கள். வேறுசிலர்: அவர் ஒரு தீர்க்கதரிசி அல்லது பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவனைப்போல இருக்கிறார் என்று சொன்னார்கள்.
ବନ୍ଡ ଆନ୍ନାମରଞ୍ଜି ବର୍ରଞ୍ଜି, “କେନ୍ ଆନିନ୍ ଏଲିଅନ୍,” ଆରି ଲାଙ୍ଲେନ୍ନେ ବର୍ରଞ୍ଜି, “ପୁର୍ବାନ୍ ପୁର୍ବାଃତେ ବର୍ନେମରଞ୍ଜି ଆମଙ୍ଲୋଙ୍ ସିଲଡ୍ ଆନ୍ନିଙ୍ ଅବୟ୍ନେ ଅନ୍ତମ୍ କେନ୍ ଆନିନ୍ ନିୟ୍ ଅବୟ୍ ପୁର୍ବାଃତେ ବର୍ନେମର୍ ।”
16 ௧௬ ஏரோது அதைக் கேட்டபொழுது: அவன், நான் தலையை வெட்டிக்கொன்ற யோவான்தான்; அவன் உயிரோடு எழுந்தான் என்றான்.
ବନ୍ଡ ଏରୋଦନ୍ କେନ୍ଆତେ ଅମ୍ଡଙ୍ଡାଲେ ବର୍ରନେ, “ଅଙ୍ଗା ତବ୍ବୁବ୍ଡାମର୍ ଜନନ୍ଆଡଙ୍ ଞେନ୍ ଗବ୍ବାଲାୟ୍, ଆନିନ୍ ଡୋଲନେ!”
17 ௧௭ ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளைத் தனக்கு மனைவியாக்கி வைத்துக்கொண்டபோது,
ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଏରୋଦନ୍, ଆ ବୋଞାଙନ୍ ପିଲିପନ୍ ଆ ଡୁକ୍ରି ଏରୋଦିଆନ୍ ଆଡ୍ରକ୍କୋଏନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ଅନବ୍ସର୍ଡାନ୍ ଆସନ୍ ଏରୋଦନ୍ ମନ୍ରାଞ୍ଜି ଆପ୍ପାୟ୍ଡାଲେ ତବ୍ବୁବ୍ଡାମର୍ ଜନନ୍ଆଡଙ୍ ଞମ୍ଲେ, ଜିଲେ ବଣ୍ଡିସିଂଲୋଙନ୍ ଡକ୍କୋଏନ୍ ।
18 ௧௮ யோவான் ஏரோதைப் பார்த்து: நீர் உம்முடைய சகோதரன் மனைவியை வைத்துக்கொள்ளுவது நியாயம் இல்லை என்று சொன்னதினால், ஏரோது போர்வீரர்களை அனுப்பி, யோவானைப் பிடித்துக் கட்டிக் காவலில் வைத்திருந்தான்.
ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ତବ୍ବୁବ୍ଡାମର୍ ଜନନ୍ ଏରୋଦନ୍ଆଡଙ୍ ବର୍ବର୍ରଏନ୍, “ବୋଞାଙ୍ନମ୍ ଆ ଡୁକ୍ରି ଆମନ୍ ଡରକ୍କୋଏନ୍ ଆମନ୍ ଆସନ୍ କେନ୍ଆତେ ଅନଗଡନ୍ ଇଜ୍ଜା ।”
19 ௧௯ ஏரோதியாளும் அவனுக்குச் சதி நினைத்து, அவனைக் கொன்றுபோட மனதாயிருந்தாள்; ஆனாலும், அவளால் முடியாமல்போனது.
ସିଲତ୍ତେ ଏରୋଦିଆନ୍ ତବ୍ବୁବ୍ଡାମର୍ ଜନନ୍ଆଡଙ୍ ଏଡ଼ୁର୍ମଡେନ୍ ଆରି ରନବ୍ବୁନ୍ ସାଜେନ୍, ବନ୍ଡ ଅଃର୍ରପ୍ତିଲୋ ।
20 ௨0 ஏனென்றால், யோவான் நீதியும் பரிசுத்தமும் உள்ளவன் என்று ஏரோது அறிந்து, அவனுக்குப் பயந்து, அவனைப் பாதுகாத்து, அவன் யோசனையின்படி அநேகக் காரியங்களைச் செய்து, விருப்பத்தோடு அவன் சொல்லைக் கேட்டுவந்தான்.
ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍, ତବ୍ବୁବ୍ଡାମର୍ ଜନନ୍ ଅବୟ୍ ଡରମ୍ମମର୍ ଆରି ମଡ଼ିର୍ମର୍ ଗାମ୍ଲେ ଏରୋଦନ୍ ଜନାଡାଲେ ବତଙେନ୍, ଆରି ଏରୋଦନ୍ ତବ୍ବୁବ୍ଡାମର୍ ଜନନ୍ଆଡଙ୍ ଡୋବ୍ଡୋବନ୍ ଆସନ୍ ଏରେନ୍ ଗୋଜେନ୍, ଆରି ଆ ବର୍ନେନ୍ ଅମ୍ଡଙ୍ଡାଲେ ଆକ୍ରାନ୍ ବତଙେନ୍, ଡେଲୋଜନଙ୍ଡେନ୍ ସର୍ଡାନ୍ ବାତ୍ତେ ତିଆତେ ଅମ୍ଡଙେନ୍ ।
21 ௨௧ ஏரோது தன்னுடைய பிறந்தநாளிலே தன்னுடைய பிரபுக்களுக்கும், படைத்தளபதிகளுக்கும், கலிலேயா நாட்டின் பிரதான மனிதர்களுக்கும் ஒரு விருந்துபண்ணினபோது,
ତିକ୍କି ଏରୋଦିଆନ୍ ଆସନ୍ ଅବୟ୍ ରୟଙ୍ ଡିନ୍ନାନ୍ ଅଡ଼ୋଲାୟ୍ । ଏରୋଦନ୍ ଆ କରୋକ୍କୋଡ୍ ଡିନ୍ନାଇଙନ୍ ମନ୍ତ୍ରିଞ୍ଜି, ସୋଡ଼ା ସିପ୍ପାୟଞ୍ଜି, ଡ ଗାଲିଲିନ୍ ଆ ସୋଡ଼ା ସୋଡ଼ା ମନ୍ରାଞ୍ଜି ଆସନ୍ ତଗଲନ୍ ଅବୟ୍ ବୁଜିନ୍ ତୁବେନ୍ ।
22 ௨௨ ஏரோதியாளின் மகள் சபை நடுவே வந்து நடனம்பண்ணி, ஏரோதுவையும் அவனோடுகூட பந்தியில் இருந்தவர்களையும் சந்தோஷப்படுத்தினாள். அப்பொழுது, ராஜா சிறுபெண்ணை நோக்கி: உனக்கு வேண்டியதை என்னிடம் கேள், அதை உனக்குத் தருவேன் என்று சொல்லி;
ଆରି, ଏରୋଦିଆନ୍ ଆ ଡାଙ୍ଗଡ଼ିଅନ୍ ଅମ୍ମନ୍ ଜିର୍ରେ ତଙ୍ସେଙ୍ଡାଲନ୍ ଏରୋଦନ୍ ରାଜାନ୍ ଡ ଆନିନ୍ ମାୟଲନ୍ ଆଗ୍ରାଗାଲଞ୍ଜି ଆ ମନ୍ରାଜିଆଡଙ୍ ଅବ୍ମଅଁଞେଞ୍ଜି । ତିଆସନ୍ ରାଜାନ୍ ଆଇସିଜନ୍ଆଡଙ୍ ଗାମେନ୍, “ଇନି ଲଡୟ୍ତମ୍, ବେଡିଁୟ୍, ଞେନ୍ ତିଆତେ ଆମନ୍ଆଡଙ୍ ତିୟ୍ତମ୍ ।”
23 ௨௩ நீ என்னிடத்தில் எதைக்கேட்டாலும், அது என் ராஜ்யத்தில் பாதியானாலும், அதை உனக்குத் தருவேன் என்று அவளுக்கு வாக்குக்கொடுத்தான்.
ଆରି, ଆନିନ୍ ଆମଙନ୍ ବାସାଡାଲନ୍ ବର୍ରନେ, “ଆମନ୍ ଞେନ୍ଆଡଙ୍ ଅଙ୍ଗାତେ ବେଡ୍ତିଁୟ୍, ବବନ୍ତା ରାଜ୍ୟନ୍ ନିୟ୍ ଞେନ୍ ଆମନ୍ଆଡଙ୍ ତିୟ୍ତମ୍ ।”
24 ௨௪ அப்பொழுது, அவள் வெளியேபோய், நான் என்ன கேட்கவேண்டும் என்று தன் தாயிடம் கேட்டாள். அதற்கு அவள்: யோவான்ஸ்நானனுடைய தலையைக் கேள் என்றாள்.
ତିଆସନ୍ ଆନିନ୍ ଡୁଙ୍ଲନ୍ ଜିର୍ରେ ଆୟୋଙନ୍ଆଡଙ୍ ଇୟ୍ଲେ ବରେ, “ଞେନ୍ ଇନି ବେଡାୟ୍?” ସିଲତ୍ତେ ଆୟୋଙନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ଗାମେନ୍, “ଆମନ୍ ତବ୍ବୁବ୍ଡାମର୍ ଜନନ୍ ଆବବ୍ ଇୟ୍ ବେଡା ।”
25 ௨௫ உடனே அவள் ராஜாவிடம் சீக்கிரமாக வந்து: நீர் இப்பொழுதே ஒரு தட்டில் யோவான்ஸ்நானனுடைய தலையை வைத்து எனக்குத் தரவேண்டும் என்று கேட்டாள்.
ସିଲତ୍ତେମା ଆନିନ୍ ରାଜାନ୍ ଆମଙ୍ ଲଜିର୍ରେ ଇୟ୍ଲେ ବର୍ନେ, “ଆମନ୍ ତବ୍ବୁବ୍ଡାମର୍ ଜନନ୍ ଆବବ୍, ଅବୟ୍ ସଡ଼ୁଆଲୋଙନ୍ ନମିଞେନ୍ମା ତିୟିଁୟ୍, କେନ୍ଆତେ ଲଡୟ୍ଞେନ୍ ।”
26 ௨௬ அப்பொழுது ராஜா அதிக துக்கமடைந்தான்; ஆனாலும், வாக்குக் கொடுத்ததினாலும், அவனோடுகூட பந்தியில் இருந்தவர்களுக்காகவும், அவள் கேட்டுக்கொண்டதை மறுக்க அவனுக்கு மனம் இல்லாமல்;
କେନ୍ ଆସନ୍ ରାଜାନ୍ ମାଡ୍ଡ ଡୁକ୍କଲନ୍, ଜନଙ୍ଡେନ୍ ଆନିନ୍ ବାସାଲନ୍ ଆରି ତେତ୍ତେ ଗାଗାନେନ୍ ଆତ୍ରଙ୍କୁମେଞ୍ଜି ଆ ମନ୍ରାଜି ଆସନ୍ ଇଜ୍ଜା ଅଃଗାମ୍ଲୋ ।
27 ௨௭ உடனே யோவான்ஸ்நானனுடைய தலையைக் கொண்டுவரும்படி போர்வீரனுக்குக் கட்டளைக் கொடுத்து அனுப்பினான்.
ତିଆସନ୍ ରାଜାନ୍ ସିଲତ୍ତେମା ଅବୟ୍ ସିପ୍ପାୟନ୍ ଆପ୍ପାୟ୍ଡାଲେ ତବ୍ବୁବ୍ଡାମର୍ ଜନନ୍ ଆବବ୍ ପନାଙନ୍ ଆସନ୍ ବରେନ୍ । ସିଲତ୍ତେ ଆନିନ୍ ଜିର୍ରେ ବଣ୍ଡିସିଂଲୋଙନ୍ ତବ୍ବୁବ୍ଡାମର୍ ଜନନ୍ଆଡଙ୍ ଇୟ୍ଲେ ଗବ୍ବାଏ,
28 ௨௮ அப்படியே அவன்போய், காவல்கூடத்திலே அவனுடைய தலையை வெட்டி, அவன் தலையை ஒரு தட்டிலே கொண்டுவந்து, அதை அந்தச் சிறு பெண்ணுக்குக் கொடுத்தான்; அந்தச் சிறுபெண் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள்.
ଆରି ତିଆତେ ଅବୟ୍ ସଡ଼ୁଆଲୋଙନ୍ ପାଙ୍ଲେ ରାଜାନ୍ ଆଇସିଜନ୍ଆଡଙ୍ ତିୟେ, ଆରି ଆଇସିଜନ୍ ତିଆତେ ପାଙ୍ଲେ ଆୟୋଙନ୍ଆଡଙ୍ ଇୟ୍ଲେ ତିୟେ ।
29 ௨௯ அவனுடைய சீடர்கள் அதைக் கேள்விப்பட்டு வந்து, அவன் சரீரத்தை எடுத்து, ஒரு கல்லறையில் வைத்தார்கள்.
ଜନନ୍ ଆ ଞଙ୍ନେମର୍ଜି ତି ଆ କବର ଅମ୍ଡଙ୍ଡାଲେ ଜିର୍ରାଜି କି ଆ ମରାନ୍ ପାଙ୍ଲେ ମସାନ୍ନିଲୋଙନ୍ ଇୟ୍ଲେ ତିଲେଜି ।
30 ௩0 அப்பொழுது அப்போஸ்தலர்கள் இயேசுவிடம் கூடிவந்து, தாங்கள் செய்தவைகள் போதித்தவைகள் எல்லாவற்றையும் அவருக்கு அறிவித்தார்கள்.
ତିକ୍କି ଅନାପ୍ପାୟଞ୍ଜି ଜିସୁନ୍ ଆମଙ୍ ଇୟ୍ଲାୟ୍ ରୁକ୍କୁନେଜି, ଆରି ଆନିଞ୍ଜି ଇନିଜି ଇନିଜି ଇୟ୍ଲେ ଲୁମେଞ୍ଜି ଆରି ଇନିଜି ଇନିଜି ଞନଙନ୍ ଇୟ୍ଲେ ତିଏଜି, ତିଆତେଜି ଅଡ଼୍କୋନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ଇୟ୍ଲାୟ୍ ଅବ୍ଜନାଏଜି ।
31 ௩௧ அவர் அவர்களைப் பார்த்து: வனாந்திரமான ஒரு இடத்திற்குச் சென்று தனிமையில் கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் வாருங்கள் என்றார்; ஏனென்றால், அநேக மக்கள் அவரிடம் வருகிறதும் போகிறதுமாக இருந்ததினால் அவர்களுக்கு சாப்பிட நேரமில்லாமல் இருந்தது.
ସିଲତ୍ତେ ଜିସୁନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ବରେଞ୍ଜି, “ମବା, ଆନ୍ନାଡାଲନ୍ ଇନ୍ଲେଞ୍ଜି ଅବୟ୍ ଆରିଙ୍ରିଙ୍ଲୋଙନ୍ ଜିର୍ରେ ବସନ୍ନେଃ ଏଲୋଲୋନାୟ୍ବା ।” ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଗୋଗୋୟ୍ନେଡମ୍ ମନ୍ରାଞ୍ଜି ଜିରେଞ୍ଜି ଜିର୍ରାଜି, ତିଆସନ୍ ଆନିଞ୍ଜି ଗାଗାନେନ୍ ଆସନ୍ ନିୟ୍ ଅଃର୍ରୟଙ୍ଲଜି ।
32 ௩௨ அப்படியே அவர்கள் தனிமையாக ஒரு படகில் ஏறி வனாந்திரமான ஒரு இடத்திற்குப் போனார்கள்.
ତିଆସନ୍ ଜିସୁନ୍ ଡ ଞଙ୍ନେମରଞ୍ଜି ଆନ୍ନାଡାଲନ୍ ଡୋଙ୍ଗାଲୋଙନ୍ ଡାୟ୍ଲେ ଅବୟ୍ ଆରିଙ୍ରିଙ୍ଲୋଙନ୍ ଡୁଙ୍ଲନ୍ ଜିରେଞ୍ଜି ।
33 ௩௩ அவர்கள் புறப்பட்டுப் போகிறதை மக்கள் பார்த்தார்கள். அவரை அறிந்த மக்கள் எல்லாப் பட்டணங்களிலுமிருந்து கால்நடையாகவே அந்த இடத்திற்கு ஓடி, அவர்களுக்கு முன்பே அங்கு சென்றுசேர்ந்து, அவரிடம் கூடிவந்தார்கள்.
ବନ୍ଡ ଆନିଞ୍ଜି ଡୁଙ୍ଲନ୍ ଆଜିର୍ରେଞ୍ଜି ଜବ୍ର ମନ୍ରାଜି ଗିଜେଞ୍ଜି ଆରି ଅମ୍ମଡେଞ୍ଜି, ତିଆସନ୍ ମନ୍ରାଞ୍ଜି ଅଡ଼୍କୋ ଗଡ଼ାନ୍ ସିଲଡ୍ ତଙିୟ୍ଡାଲନ୍ ଜିର୍ରେ ତେତ୍ତେ ଇରେଞ୍ଜି ଆରି ଜିସୁନ୍ ଡ ଆ ଞଙ୍ନେମରଞ୍ଜି ତେତ୍ତେ ଅଣ୍ଡ୍ରଙ୍ ତୁଙେଞ୍ଜି ମନ୍ରାଞ୍ଜି ଆମ୍ମୁଙ୍ ତେତ୍ତେ ତୁଙେଞ୍ଜି ।
34 ௩௪ இயேசு கரையில் வந்து, அங்கே கூடிவந்த மக்களைப் பார்த்து, அவர்கள் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல இருந்ததினால், அவர்கள்மேல் மனதுருகி, அநேகக் காரியங்களை அவர்களுக்குப் போதிக்கத்தொடங்கினார்.
ଜିସୁନ୍ ଡୋଙ୍ଗାଲୋଙନ୍ ସିଲଡ୍ ପଡ୍ଲନ୍ ଗୋଗୋୟ୍ନେଡମ୍ ମନ୍ରାଞ୍ଜିଆଡଙ୍ ଆଗ୍ରିଜେନ୍ ଆନିନ୍ ଇର୍ସୋୟମ୍ଡାଏନ୍, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଆନିଞ୍ଜି ତୁର୍ମେଡ୍ମର୍ତଡନ୍ ଆ ମେଣ୍ଡାଜି ଅନ୍ତମ୍ ଡକୋଏଞ୍ଜି, ଆରି ଆନିନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ବର୍ନେଞ୍ଜି ଞନଙନ୍ ତନିୟନ୍ ଆସନ୍ ଉଲନେ ।
35 ௩௫ அதிகநேரம் ஆனபின்பு, அவருடைய சீடர்கள் அவரிடம் வந்து: இது வனாந்திரமான இடம், அதிகநேரமும் ஆனது;
ଅରୁବ୍ଲେ ଆପ୍ରାଙେନ୍ ଆ ଞଙ୍ନେମରଞ୍ଜି ଜିସୁନ୍ ଆମଙ୍ ଜିର୍ରେ, ଆନିନ୍ଆଡଙ୍ ଇୟ୍ଲାୟ୍ ବରେଜି, “କେନ୍ ତେନ୍ନେ ତ ଆରିଙ୍ରିଙ୍, ଆରି ଅରୁବ୍ଲେ ପାଙ୍ତେ ।
36 ௩௬ சாப்பிடுகிறதற்கும் இவர்களிடம் ஒன்றும் இல்லை; எனவே இவர்கள் சுற்றிலும் இருக்கிற கிராமங்களுக்கும் ஊர்களுக்கும்போய், அப்பங்களை வாங்கிக்கொள்ள இவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள்.
ତିଆସନ୍ ମନ୍ରାଞ୍ଜି ଏଙ୍ଗାଲ୍ଡେନ୍ ସମ୍ପରା ସାଇରେଙନ୍ ଡ ଗଡ଼ାରେଙନ୍ ଜିର୍ରେ ରମ୍ମଙ୍ ରମ୍ମଙ୍ ଆସନ୍ ଇନ୍ନିଙ୍ ଜନୋମ୍ଜୋମନ୍ ଇୟେତୋ ଞିଏଜି, ତିଆସନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଆପ୍ପାୟାଜି ।”
37 ௩௭ அவர் அவர்களைப் பார்த்து: நீங்களே அவர்களுக்கு உணவுகொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள்போய், இருநூறு வெள்ளிக்காசுகளுக்கு அப்பங்களை வாங்கி இவர்களுக்குச் சாப்பிடக் கொடுக்கலாமா? என்றார்கள்.
ବନ୍ଡ ଜିସୁନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଗାମେନ୍, “ଆମ୍ୱେଞ୍ଜି, ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଗାଗାନେନ୍ ତିୟ୍ବାଜି,” ଞଙ୍ନେମରଞ୍ଜି ଜିସୁନ୍ଆଡଙ୍ ଜାଲଙେଞ୍ଜି, “ଇନ୍ଲେଞ୍ଜି ଇନି ଅବୟ୍ ମନ୍ରାନ୍ ବଡିଡାଲନ୍ ଆଟ ଆଙ୍ଗାୟ୍ଲୋଙ୍ ଡିଅଙ୍ଗା ତଙ୍କା ଅର୍ଜେତେ ଡିୟ୍ତେ ଆ ତଙ୍କା ବାତ୍ତେ ରୁଟିନ୍ ଞିଲେ କେନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଗାଗାନେନ୍ ତିୟ୍ବୋଜି ପଙ୍?”
38 ௩௮ அதற்கு அவர்: உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கிறது என்று போய்ப் பாருங்கள் என்றார். அவர்கள் பார்த்துவந்து: ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் இருக்கிறது என்றார்கள்.
ଜିସୁନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ବରେଞ୍ଜି, “ଅମଙ୍ବେନ୍ ଡିଅଙ୍ଗା ରୁଟିନ୍ ଡକୋ? ଜିର୍ରେ ଇୟ୍ ଗିୟ୍ବା ।” ଆନିଞ୍ଜି ଜିର୍ରେ ଇୟ୍ଲେ ଗିଜେଜି କି ଆନିନ୍ଆଡଙ୍ ଇୟ୍ଲାୟ୍ ବରେଜି, “ମନ୍ଲୟ୍ ରୁଟିନ୍ ଆରି ବାଗୁ ଅୟନ୍ ଡକୋ ।”
39 ௩௯ அப்பொழுது எல்லோரையும் பசும்புல்லின்மேல் பந்தி உட்காரவைக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
ସିଲତ୍ତେ ଅଡ଼୍କୋଞ୍ଜିଆଡଙ୍ ଆ ଲେଡେଙ୍ଗାବ୍ଲୋଙନ୍ ଡାଡ଼ିଜଙ୍ ଅବ୍ତଙ୍କୁମ୍ବାଜି ଗାମ୍ଲେ ଜିସୁନ୍ ଞଙ୍ନେମରଞ୍ଜିଆଡଙ୍ ବରେଞ୍ଜି ।
40 ௪0 அப்படியே வரிசை வரிசையாக, நூறுநூறுபேராகவும் ஐம்பதுஐம்பதுபேராகவும் உட்கார்ந்தார்கள்.
ତିଆସନ୍ ମନ୍ରାଞ୍ଜି ବସଅ ଲେକାଁୟ୍ ଆରି ପଚାସ ଲେକାଁୟ୍ ଡାଡ଼ିଜଙ୍ ତଙ୍କୁମେଞ୍ଜି ।
41 ௪௧ அவர் அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டு, அவர்களுக்குப் பரிமாறத் தம்முடைய சீடர்களிடம் கொடுத்தார். அப்படியே இரண்டு மீன்களையும் எல்லோருக்கும் பங்கிட்டார்.
ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ଜିସୁନ୍ ତି ମନ୍ଲୟ୍ ରୁଟିନ୍ ଡ ବାଗୁ ଅୟନ୍ ଞମ୍ଲେ ରୁଆଙ୍ଗଡ୍ ତୋଣ୍ଡୋନ୍ ଆଙାଙ୍ଡାଲେ ଆସିର୍ବାଦଏନ୍ କି ରୁଟିଞ୍ଜି ରେବ୍ଲେ ମନ୍ରାଞ୍ଜିଆଡଙ୍ ବନ୍ତାଲେ ତନିୟନ୍ ଆସନ୍ ଞଙ୍ନେମରଞ୍ଜିଆଡଙ୍ ତିୟେଞ୍ଜି । ଆରି, ତି ବାଗୁ ଅୟନ୍ ନିୟ୍ ଅଡ଼୍କୋଞ୍ଜିଆଡଙ୍ ବନ୍ତାଲେ ତିୟେଞ୍ଜି ।
42 ௪௨ எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தி அடைந்தார்கள்.
ସିଲତ୍ତେ ଅଡ଼୍କୋଞ୍ଜି ଜୋମ୍ଲେ ଅବୋଏଞ୍ଜି,
43 ௪௩ மேலும் அப்பங்களிலும் மீன்களிலும் மீதியான துண்டுகளைப் பன்னிரண்டு கூடை நிறைய எடுத்தார்கள்.
ଆରି ଆନିଞ୍ଜି ଆରେବ୍ରେବ୍ ରୁଟିନ୍ ଆର୍ଲାଗାଏନ୍ଆତେ ବାର ଗୁରୁଲ୍ଲି ବବ୍ରିଜେଞ୍ଜି ଆରି ଅୟନ୍ ନିୟ୍ ଡକ୍କୋଏଞ୍ଜି ।
44 ௪௪ அப்பங்கள் சாப்பிட்ட ஆண்கள் ஏறக்குறைய ஐயாயிரம்பேராக இருந்தார்கள்.
ଡିଅଙ୍ଗା ମନ୍ରା ରୁଟିନ୍ ଜୋମେଞ୍ଜି, ଓବ୍ବାମରଞ୍ଜି ତୁମ୍ ତେତ୍ତେ ମନ୍ଲୟ୍ ଅଜାର ଡକୋଏଞ୍ଜି ।
45 ௪௫ அவர் மக்களை அனுப்பிவிடும்போது, தம்முடைய சீடர்கள் படகில் ஏறி அக்கரையில் பெத்சாயிதாவிற்கு, தமக்கு முன்பே போகச்சொல்லி, அவர்களை துரிதப்படுத்தினார்.
ସିଲତ୍ତେମା ଜିସୁନ୍, ଆ ଞଙ୍ନେମରଞ୍ଜିଆଡଙ୍ ଡୋଙ୍ଗାଲୋଙନ୍ ଡାୟ୍ଲେ ବେତ୍ସାଇଦାନ୍ ଆ ଅଡିଗଡ୍ ଜନିରନ୍ ଆସନ୍ ବରେଞ୍ଜି, ଆରି ତି ଆ ବନେଡ଼ା ଜିସୁନ୍ ମନ୍ରାଞ୍ଜିଆଡଙ୍ ଆପ୍ପାୟେଞ୍ଜି ।
46 ௪௬ அவர் மக்களை அனுப்பிவிட்டப்பின்பு, ஜெபம்பண்ணுவதற்காக ஒரு மலையின்மேல் ஏறினார்.
ମନ୍ରାଞ୍ଜି ଡ ଞଙ୍ନେମରଞ୍ଜି ଜିସୁନ୍ ଆମଙ୍ ସିଲଡ୍ ଆଜିର୍ରେଞ୍ଜି ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ଆନିନ୍ ପାର୍ତନାନେନ୍ ଆସନ୍ ବରୁନ୍ ଜିରେନ୍ ।
47 ௪௭ மாலைநேரமானபோது படகு நடுக்கடலில் இருந்தது; அவரோ கரையிலே தனிமையாக இருந்தார்.
ସାଲ୍ଲୁମ୍ଲେ ଆପ୍ରାଙେନ୍ ଆଡିଡ୍ ଡୋଙ୍ଗାନ୍ ମଡ୍ଡି ସମେଁୟ୍ଣ୍ଡ୍ରାଲୋଙନ୍ ଡକୋଏନ୍ ଆରି ଜିସୁନ୍ ଆତିନ୍ସଜନ୍ ଅନେଙ୍ ସମେଁୟ୍ଣ୍ଡ୍ରାନ୍ ଡକୋଲନେ ।
48 ௪௮ அப்பொழுது எதிர்க்காற்று வீசிக்கொண்டிருந்ததால், அவர்கள் கஷ்டப்பட்டு துடுப்பு போடுகிறதை அவர் பார்த்து, அதிகாலையில் கடலின்மேல் நடந்து அவர்களிடம் வந்து, அவர்களைக் கடந்துபோகிறவர்போல காணப்பட்டார்.
ସରବ୍ଡିଡ୍ଗଡ୍ ସିଲଡ୍ ରିଙ୍ଗେନ୍ ଆଜିର୍ରାଞନ୍ ଞଙ୍ନେମରଞ୍ଜି ଡୋଙ୍ଗାନ୍ ଆ ସନଲ୍ଲାୟ୍ ଡଣ୍ଡଡମ୍ ଡେଏଞ୍ଜି, ତିଆସନ୍ ଜିସୁନ୍ ତିଆତେ ଗିୟ୍ଲେ ତଗଲନ୍ ଉଞ୍ଜି ଗଣ୍ଟା ଇଙନ୍ ତୋଣ୍ଡୋ ସମେଁୟ୍ଣ୍ଡ୍ରାଲୋଙନ୍ ତଙିୟ୍ଡାଲନ୍ ଆମଙଞ୍ଜି ଜିର୍ରାୟ୍, ଆରି ଆମଙ୍ଗଡଞ୍ଜି ପଡ୍ଲେ ଅଡି ଜିର୍ଜିରନ୍ ଆସନ୍ ସାଜେନ୍ ।
49 ௪௯ அவர் கடலின்மேல் நடக்கிறதை அவர்கள் பார்த்து, அவரை பிசாசு என்று நினைத்து, சத்தமிட்டு அலறினார்கள்.
ବନ୍ଡ ଆନିନ୍ ତୋଣ୍ଡୋ ସମେଁୟ୍ଣ୍ଡ୍ରାନ୍ ଆତ୍ରଙିୟ୍ଲନ୍, ଞଙ୍ନେମରଞ୍ଜି ଗିୟ୍ଲେ ବୁତ ଗାମ୍ଲେ ଅବ୍ଡିସୟେଞ୍ଜି କି ସଜିରେଞ୍ଜି ।
50 ௫0 அவர்கள் எல்லோரும் அவரைப் பார்த்து கலக்கம் அடைந்தார்கள். உடனே அவர் அவர்களோடு பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாமல் இருங்கள் என்று சொல்லி.
ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଅଡ଼୍କୋଞ୍ଜି ଆନିନ୍ଆଡଙ୍ ଗିୟ୍ଲେ ବତଙେଞ୍ଜି । ବନ୍ଡ ଆନିନ୍ ସିଲତ୍ତେମା ଆନିଞ୍ଜି ସରିନ୍ କଡାଡ଼ିଡାଲନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ବରେଞ୍ଜି, “ଅବ୍ବୋମଙ୍ନାବା, କେନ୍ ତ ଞେନ୍, ବତଙ୍ଡଙ୍ବେନ୍ ।”
51 ௫௧ அவர்கள் இருந்த படகில் ஏறினார். அப்பொழுது காற்று அமைதியானது; எனவே அவர்கள் தங்களுக்குள்ளே மிகவும் பிரமித்து ஆச்சரியப்பட்டார்கள்.
ଆରି ଆନିନ୍ ଆମଙଞ୍ଜି ଜିର୍ରେ ଡୋଙ୍ଗାଲୋଙନ୍ ଡାଜେନ୍, ଆରି ରିଙ୍ଗେନ୍ ତଡେନ୍ । ସିଲତ୍ତେ ଆନିଞ୍ଜି ଆ ମନ୍ନଲୋଙଞ୍ଜି ଆକ୍ରାନ୍ ସାନ୍ନି ଡେଏଞ୍ଜି,
52 ௫௨ அவர்களுடைய இருதயம் கடினமுள்ளதாக இருந்ததினால் அப்பங்களைக்குறித்து அவர்கள் உணராமல் போனார்கள்.
ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ମନ୍ଲୟ୍ ଅଜାର ମନ୍ରାଞ୍ଜି ରୁଟିନ୍ ଆଜ୍ରୋମେଞ୍ଜି ଆଡିଡ୍ ଆ ଉଗରଞ୍ଜି ଆ ରଡୋ ଡକୋଏନ୍, ତିଆସନ୍ ଆନିଞ୍ଜି ଅଃଗନ୍ଲୁଡ୍ଲଜି ।
53 ௫௩ அவர்கள் கடலைக்கடந்து கெனேசரேத்து என்னும் நாட்டிற்கு வந்து, கரை ஏறினார்கள்.
ଆନିଞ୍ଜି ପଡ୍ଲୋଙ୍ ପଡ୍ଲେ ଗିନ୍ନେସରତରେଙନ୍ ତୁଙ୍ଲେ ଅନେଙ୍ ସମେଁୟ୍ଣ୍ଡ୍ରାଲୋଙନ୍ ଡୋଙ୍ଗାନ୍ ଜିଏଞ୍ଜି ।
54 ௫௪ அவர்கள் படகில் இருந்து இறங்கினவுடனே, மக்கள் அவரை அறிந்து,
ଆରି ଆନିଞ୍ଜି ଡୋଙ୍ଗାଲୋଙନ୍ ସିଲଡ୍ ଆପ୍ରଡ୍ଲଞ୍ଜି, ମନ୍ରାଞ୍ଜି ସିଲତ୍ତେମା ଜିସୁନ୍ଆଡଙ୍ ଅମ୍ମଡେଞ୍ଜି,
55 ௫௫ அந்தச் சுற்றுபுறமெல்லாம் ஓடிச்சென்று, நோயாளிகளைப் படுக்கைகளில் படுக்கவைத்து, அவர் வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்ட இடங்களிலெல்லாம் சுமந்துகொண்டுவந்தார்கள்;
ତିଆସନ୍ ଗିନ୍ନେସରତନ୍ ଆ ତୁୟାୟ୍ ସମ୍ପରା ସାଇରେଙନ୍ ଇରେଞ୍ଜି, ଆରି ଆନିନ୍ ଅଙ୍ଗାଲୋଙ୍ ଡକୋ ଗାମ୍ଲେ ଅମ୍ଡଙେଞ୍ଜି, ତିସେଙ୍ ରୋଗମରଞ୍ଜିଆଡଙ୍ କଟଲୋଙନ୍ ବୋୟ୍ଲେ ଓରୋଙ୍ଲାଜି ।
56 ௫௬ இவைகள் இல்லாமல், அவர் சென்ற கிராமங்கள், பட்டணங்கள், நாடுகள் எல்லாவற்றிலும் சந்தைவெளிகளிலே நோயாளிகளைக் கொண்டுவந்து, அவருடைய ஆடையின் ஓரத்தையாவது அவர்கள் தொடுவதற்கு அனுமதிக்கவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவரைத் தொட்ட எல்லோரும் சுகம் பெற்றுக்கொண்டார்கள்.
ଆରି, ଆନିନ୍ ଅଙ୍ଗା ଅଙ୍ଗା ଆ ସାଇ, ଆ ଗଡ଼ା ଆରି ସନ୍ନା ସାଇରେଙନ୍ ଇୟେନ୍, ମନ୍ରାଞ୍ଜି ତିସେଙ୍ ଅଡ଼୍କୋନ୍ ଆ ସୟ୍ତାରେଙ୍ ରୋଗମରଞ୍ଜିଆଡଙ୍ ଓରୋଙ୍ଡାଲେ ଇୟ୍ଲାୟ୍ ତମ୍ମିଜେଞ୍ଜି, ଆରି ଆ ସିନ୍ରିନ୍ ଆଲୁଡ୍କାବ୍ ସନୁଙେନ୍ ଆସନ୍ ଆନିଞ୍ଜି ଆମଙନ୍ କାକୁର୍ତିଲଞ୍ଜି, ଡିଅଙ୍ଗା ମନ୍ରା ଆନିନ୍ଆଡଙ୍ ସୁଙେଏଞ୍ଜି, ଅଡ଼୍କୋଞ୍ଜି ମନଙାଜେଞ୍ଜି ।