< மாற்கு 6 >

1 இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, அவர் வளர்ந்த ஊருக்கு வந்தார்; அவருடைய சீடர்களும் அவரோடு வந்தார்கள்.
ଜିସୁ ସେ ଜାଗା ଚାଡି, ସାନ୍‌ବେଲେ ଅନି ବଡିଆଇଲା ନଅରେ ଆଇଲା, ଆରି ତାର୍‌ ସିସ୍‌ମନ୍‌ ମିସା ତାର୍‌ ସଙ୍ଗ୍‌ ଗାଲାଇ ।
2 ஓய்வுநாளானபோது, ஜெப ஆலயத்தில் போதகம்பண்ணினார். அதைக் கேட்ட அனைவரும் ஆச்சரியப்பட்டு, இவைகள் இவனுக்கு எங்கிருந்து வந்தது? இவன் கைகளினால் இப்படிப்பட்ட பலத்த செய்கைகளைச் செய்ய இவனுக்குக் கொடுக்கப்பட்ட ஞானம் எப்படிப்பட்டது?
ବିସ୍‌ରାମ୍‌ବାର୍‌ ଆଇଲାକେ, ସେ ଜିଉଦିମନର୍‌ ପାର୍‌ତନା ଗରେ ସିକିଆ ଦେବାର୍‌ ଦାର୍‌ଲା, ଆରି କେତେ କେତେ ଲକ୍‌ ତାର୍‌ କାତା ସୁନି କାବା ଅଇ କଇଲାଇ, “ଏ ଲକ୍‌ ଏ ସବୁଜାକ କନ୍ତି ଅନି ସିକ୍‌ଲା? ଆରି, ଆକେ ଏନ୍ତାରି ଗିଆନ୍‌ କେ ଦେଲା? ଆରି କେବେ ନ ଅଇବା କାମର୍‌ ବପୁ କନ୍ତିଅନି ପାଇଲା?
3 இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் என்பவர்களுடைய சகோதரன் அல்லவா? இவன் சகோதரிகளும் இங்கே நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? என்று சொல்லி, அவரைக்குறித்து இடறல் அடைந்தார்கள்.
ଏ ଲକ୍‌ତା ସେ ବାଡଇ । ସେ ମରିୟମର୍‌ ପଅ, ଜାକୁବ୍‌, ଜସି, ଜିଉଦା ଆରି ସିମନ୍‌ ତାର୍‌ ବାଇ ଅଇବାଇ । ଆର୍‌ ବଇନିମନ୍‌ ତା ଇତି ଆମର୍‌ ସଙ୍ଗ୍‌ ଆଚତ୍‌ ।” ଏନ୍ତାରି କ‍ଇକରି ସେମନ୍‌ ତାକେ ମାନତ୍‌ ନାଇ ।
4 இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் சொந்த ஊரிலும், தன் உறவினர்களிலும், தன் வீட்டிலும்தான் மதிக்கப்படமாட்டான். மற்ற எல்லா இடங்களிலும் மதிக்கப்படுவான் என்றார்.
ତେଇ ଜିସୁ ସେମନ୍‌କେ କଇଲା, “ନିଜର୍‌ ନଅରର୍‌ କୁଟୁମର୍‌ ଲକ୍‌ମନ୍‌କେ ଆରି ନିଜର୍‌ ଗରର୍‌ ଲକ୍‌କେ ଚାଡି ବାକି ସବୁ ଜାଗାଇ ବାବବାଦିମନ୍‌କେ ସନ୍‌ମାନ୍‌ ମିଲ୍‌ସି ।”
5 அங்கே அவர் சில நோயாளிகள்மேல்மட்டும் கரங்களை வைத்து, அவர்களைக் குணமாக்கினார், வேறு அற்புதங்கள் எதுவும் செய்யமுடியாமல்.
ସେଜାଗାଇ ଆରି କେତେଟା ରଗିମନ୍‌କେ ସେ ଆତ୍‌ ସଙ୍ଗ‍ଇକରି ନିକ କର୍‌ବାଟା ଚାଡି ଆରି କାଇ ନ ଅଇବା କାମ୍‌ କରିନାପାର୍‌ଲା । କାଇକେବଇଲେ ତେଇର୍‌ ଲକ୍‌ମନ୍‌ ତାକେ ବିସ୍‌ବାସ୍‌ କରତ୍‌ ନାଇ ।
6 அவர்களுக்கு விசுவாசம் இல்லாததினால் அதைக்குறித்து ஆச்சரியப்பட்டு, மற்ற கிராமங்களுக்குச்சென்று, போதகம்பண்ணினார்.
ଆରି ତେଇର୍‌ ଲକ୍‌ମନ୍‌ ତାକେ ବିସ୍‌ବାସ୍‌ ନ କର୍‌ବାଟା ଦେକି ଜିସୁ କାବାଅଇଗାଲା ।
7 இயேசு பன்னிரண்டு சீடர்களையும் அழைத்து, அசுத்தஆவிகளைத் துரத்த அவர்களுக்கு அதிகாரம் கொடுத்து,
ପଚେ ସେ ଚାରିବେଡ୍‌ତିର୍‌ ଗାଉଁ ମନ୍‌ ବୁଲି ବୁଲି ସିକିଆ ଦେବାର୍‌ ଦାର୍‌ଲା । ଏତ୍‌କି ବିତ୍‌ରେ ସେ ବାରଟା ସିସ୍‌ମନ୍‌କେ ଲଗେ ଡାକି, ଦୁଇ ଦୁଇ ଲକ୍‌କେ ପାଟାଇବାର୍‌ ଆରାମ୍‌ କଲା, ସେମନ୍‌କେ ଡୁମାମନ୍‌କେ ଚାଡାଇବାକେ ଅଦିକାର୍‌ ଦେଲା ।
8 வழிக்குப் பையையோ, அப்பத்தையோ, இடுப்புக் கச்சையில் பணத்தையோ, எடுத்துக்கொண்டுபோகாமல், ஒரு தடியைமட்டும் எடுத்துக்கொண்டுபோகவும்;
ଜିବାବେଲେ ଗଟେକ୍‌ ଡାଙ୍ଗ୍‌ ଚାଡି ବାଟ୍‌ କର୍‌ଚର୍‌ ପାଇ ରୁଟି କି ବେସ୍‌ନିଟାନେ ଡାବୁ ନ ନିଆ ବଲି ଆଦେସ୍‌ ଦେଲା ।
9 காலணிகளைப் போட்டுக்கொண்டுபோகவும், இரண்டு அங்கிகளை அணிந்துகொள்ளாமலிருக்கவும் கட்டளையிட்டார்.
ମାତର୍‌ ସେମନ୍‌କେ ପାଣ୍ଡଇ ପିନ୍ଦ୍‌ବାକେ କଇଲା, ପିନ୍ଦିରଇବା ଚକା ଚାଡି ଆରି ଗଟେକ୍‌ ଚକା ନିଆନାଇ ବଲି କଇଲା ।
10 ௧0 பின்பு அவர்களைப் பார்த்து: நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டிற்குச் சென்றால், அந்த இடத்தைவிட்டுப் புறப்படும்வரை அங்கேயே தங்கியிருங்கள்.
୧୦“ଜେଡେବେଲେ ତମ୍‌କେ ଜାର୍‌ ଗରେ ଡାକ୍‌ବାଇ ସେ ନଅର୍‌ ଚାଡିଜିବା ଜାକ ତେଇସେ ରୁଆ ।
11 ௧௧ யாராவது உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்களுடைய வசனங்களைக் கேட்காமலும் இருந்தால், நீங்கள் அந்த இடத்தைவிட்டுப் புறப்படும்போது, அவர்களுக்கு சாட்சியாக உங்களுடைய கால்களின் கீழே படிந்த தூசியை உதறிப்போடுங்கள். நியாயத்தீர்ப்புநாளிலே அந்தப் பட்டணத்திற்கு சம்பவிப்பதைவிட சோதோம் கொமோரா பட்டணத்திற்கு சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, அவர்களை இரண்டு இரண்டுபேராக அனுப்பினார்.
୧୧ଜଦି କନ୍‌ ନଅରର୍‌ ଲକ୍‌ମନ୍‌ ତମ୍‌କେ ନ ନାମତ୍‌, ଆରି ତମର୍‌ କାତା ନ ସୁନତ୍‌, ସେ ଜାଗାଇ ଅନି ଆଇବା ବେଲେ ସେମନର୍‌ ବିରଦେ ସାକି ଇସାବେ, ତମର୍‌ ପାଦର୍‌ ଦୁଲି ପାପ୍‌ଡିଦିଆସ୍‌ । ଏଟାର୍‌ଲାଗି ସେ ନଅରର୍‌ ଲକ୍‌ମନ୍‌ ଜାନ୍‌ବାଇ ଜେ, ପର୍‌ମେସର୍‌ ସେମନ୍‌କେ ଡଣ୍ଡ୍‌ ଦେଇସି ।”
12 ௧௨ அவர்கள் புறப்பட்டுப்போய்: மனந்திரும்புங்கள் என்று பிரசங்கித்து;
୧୨ସିସ୍‌ମନ୍‌ ବାରଇ ଜାଇ ଲକ୍‌ମନ୍‌କେ “ତମର୍‌ ପାପ୍‌ ଟାନେଅନି ବାଉଡା ।” ବଲି ଜାନାଇଲାଇ ।
13 ௧௩ அநேக பிசாசுகளைத் துரத்தி, அநேக நோயாளிகளை எண்ணெய் பூசி சுகமாக்கினார்கள்.
୧୩କେତେକ୍‌ କେତେକ୍‌ ଲକ୍‌ମନର୍‌ ଟାନେଅନି ଡୁମା ଚାଡାଇଲାଇ, ଆରି କେତେକ୍‌ ରଗି ଲକ୍‌ମନ୍‌କେ ଚିକନ୍‌ ଲାଗାଇ ନିମାନ୍‌ କଲାଇ ।
14 ௧௪ இயேசுவினுடைய பெயர் பிரசித்தமானதினால், ஏரோதுராஜா அவரைக்குறித்துக் கேள்விப்பட்டு: மரித்துப்போன யோவான்ஸ்நானன் உயிரோடு எழுந்தான், எனவே அவனிடம் இப்படிப்பட்டப் பலத்த செய்கைகள் வெளிப்படுகிறது என்றான்.
୧୪ଜିସୁର୍‌ ନାଉଁ ସବୁବାଟେ ଉଡ୍‌ରା ଅଇଗାଲାକେ, ଏରଦ୍‌ ରାଜା ଜିସୁର୍‌ ବିସଇ ସୁନ୍‌ଲା, ଆରି ଲକ୍‌ମନ୍‌ କଇତେରଇଲାଇ, ଡୁବନ୍‌ ଦେଉ ଜଅନ୍‌ ମରିକରି ଉଟି ଆଚେ, ତେବର୍‌ପାଇ ଏ ସବୁ ନ ଅଇବା କାମର୍‌ ସକ୍‌ତି ତାର୍‌ଟାନେ କାମ୍‌ କଲାନି ।
15 ௧௫ சிலர்: அவர் எலியா என்றார்கள். வேறுசிலர்: அவர் ஒரு தீர்க்கதரிசி அல்லது பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவனைப்போல இருக்கிறார் என்று சொன்னார்கள்.
୧୫ମାତର୍‌ ବିନ୍‌ ବିନ୍‌ ଲକ୍‌ମନ୍‌ କଇତେ ରଇଲାଇ, ଏ ଏଲିୟ, ଆରି କେ କେ କଇତେ ରଇଲାଇ, ଆଗର୍‌ ବାବବାଦି ମନର୍‌ପାରା ଗଟେକ୍‌ ଲକ୍‌ ।
16 ௧௬ ஏரோது அதைக் கேட்டபொழுது: அவன், நான் தலையை வெட்டிக்கொன்ற யோவான்தான்; அவன் உயிரோடு எழுந்தான் என்றான்.
୧୬ମାତର୍‌ ଏରଦ୍‌ ଏଟା ସୁନି କଇଲା, “ମୁଇ ଜନ୍‌ ଜଅନର୍‌ ମୁଣ୍ଡ୍‌ କାଟାଇଲି, ସେ ମଲାତେଇଅନି ଉଟିଆଚେ!”
17 ௧௭ ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளைத் தனக்கு மனைவியாக்கி வைத்துக்கொண்டபோது,
୧୭ତେବେ ଏରଦ୍‌ ନିଜର୍‌ ବାଇ ପିଲିପର୍‌ ମାଇଜି ଏରଦିଆକେ ବିବା ଅଇ ରଇଲା । ତାକେ ସାର୍‌ଦା କର୍‌ବାକେ ନିଜେ ଏରଦ୍‌ ଲକ୍‌ମନ୍‌କେ ପାଟାଇ ଡୁବନ୍‌ ଦେଉ ଜଅନ୍‌କେ ଦାରି, ବାନ୍ଦିକରି ବନ୍ଦି କର୍‌ବାକେ ଆଦେସ୍‌ ଦେଲା ।
18 ௧௮ யோவான் ஏரோதைப் பார்த்து: நீர் உம்முடைய சகோதரன் மனைவியை வைத்துக்கொள்ளுவது நியாயம் இல்லை என்று சொன்னதினால், ஏரோது போர்வீரர்களை அனுப்பி, யோவானைப் பிடித்துக் கட்டிக் காவலில் வைத்திருந்தான்.
୧୮କାଇକେବଇଲେ ଜଅନ୍‌ ଏରଦ୍‌କେ ତର୍‌କେତର୍‌ କଇତେରଇଲା “ମସାର୍‌ ନିୟମ୍‌ ଇସାବେ ନିଜର୍‌ ବାଇର୍‌ ମାଇଜିକେ ସଙ୍ଗଇବାର୍‌ ତର୍‌ ବିଦି ନାଇ ।”
19 ௧௯ ஏரோதியாளும் அவனுக்குச் சதி நினைத்து, அவனைக் கொன்றுபோட மனதாயிருந்தாள்; ஆனாலும், அவளால் முடியாமல்போனது.
୧୯ଏନ୍ତାରି କଇଲାକେ ଏରଦିଆ ଜଅନ୍‌କେ ରିସା ଅଇ ତାକେ ମରାଇବାକେ ମନ୍‌ କର୍‌ତେରଇଲା, ମାତର୍‌ ନାପାର୍‌ତେ ରଇଲା ।
20 ௨0 ஏனென்றால், யோவான் நீதியும் பரிசுத்தமும் உள்ளவன் என்று ஏரோது அறிந்து, அவனுக்குப் பயந்து, அவனைப் பாதுகாத்து, அவன் யோசனையின்படி அநேகக் காரியங்களைச் செய்து, விருப்பத்தோடு அவன் சொல்லைக் கேட்டுவந்தான்.
୨୦କାଇକେବଇଲେ ଏରଦ୍‌ ଜଅନ୍‌କେ ଗଟେକ୍‌ ଦରମ୍‌ ଆରି ସୁକଲ୍‌ ଲକ୍‌ ବଲି ଜାନି ଡର୍‌ତେ ରଇଲା, ଆରି ତାକେ ରକିଆ କର୍‌ବାକେ ଚେସ୍‌ଟା କର୍‌ତେରଇଲା । ଜେଡେବେଲେ ମିସା ତାର୍‌ କାତା ସୁନ୍‌ତେରଇଲା, ବେସି କିଲ୍‌ବିଲ୍‌ ଅଇତେରଇଲା । ଏଲେମିସା ସେଟା ସାର୍‌ଦା ସଙ୍ଗ୍‌ ସୁନ୍‌ତେରଇଲା ।
21 ௨௧ ஏரோது தன்னுடைய பிறந்தநாளிலே தன்னுடைய பிரபுக்களுக்கும், படைத்தளபதிகளுக்கும், கலிலேயா நாட்டின் பிரதான மனிதர்களுக்கும் ஒரு விருந்துபண்ணினபோது,
୨୧ପଚେ ଏରଦିଆର୍‌ ଜାଗ୍‌ତେ ର‍ଇବା ଦିନ୍‌ କେଟିଆଇଲା । ଏରଦର୍‌ ଜନମ୍‌ ଦିନେ, ନିଜର୍‌ ମନ୍ତ୍‍ରି ମନ୍‌କେ ଆରି ମୁକିଅ ମୁକିଅ ସେନାପତି ଆରି ଗାଲିଲିର୍‌ ବଡ୍‌ବଡ୍‌ ଲକ୍‌ମନ୍‌କେ ଡାକି, ରାତିଆ ଗଟେକ୍‌ ବଜିକଲା ।
22 ௨௨ ஏரோதியாளின் மகள் சபை நடுவே வந்து நடனம்பண்ணி, ஏரோதுவையும் அவனோடுகூட பந்தியில் இருந்தவர்களையும் சந்தோஷப்படுத்தினாள். அப்பொழுது, ராஜா சிறுபெண்ணை நோக்கி: உனக்கு வேண்டியதை என்னிடம் கேள், அதை உனக்குத் தருவேன் என்று சொல்லி;
୨୨ତେଇ ଏରଦିଆର୍‌ ଟକି ବିତ୍‌ରେ ପୁରି ଏରଦ୍‌ ଆରି ତାର୍‌ ସଙ୍ଗ୍‌ ବସି କାଇବା ଲକ୍‌ମନ୍‌କେ ନାଟ୍‌କରି ମନ୍‌ଚାଇ ଦେଲା । ରାଜା ଟକିକେ କଇଲା, “ତୁଇ ଜାଇଟା ମନ୍‌ କଲୁସ୍‌ନି ସେଟା ମାଙ୍ଗ୍‌, ମୁଇ ତକେ ଦେବି ।”
23 ௨௩ நீ என்னிடத்தில் எதைக்கேட்டாலும், அது என் ராஜ்யத்தில் பாதியானாலும், அதை உனக்குத் தருவேன் என்று அவளுக்கு வாக்குக்கொடுத்தான்.
୨୩ଆରି ଏରଦ୍‌ ତାର୍‌ ଲଗେ ପର୍‌ମାନ୍‌ କଲା, “ତୁଇ ଆମ୍‌କେ ଜାଇଟା ମାଙ୍ଗ୍‌ଲେ ମିସା, ମୁଇ ରାଇଜର୍‌ ଅଦ୍‌ ବାଗ୍‌ ଜାକ ତକେ ଦେଇ ଦେବି ।”
24 ௨௪ அப்பொழுது, அவள் வெளியேபோய், நான் என்ன கேட்கவேண்டும் என்று தன் தாயிடம் கேட்டாள். அதற்கு அவள்: யோவான்ஸ்நானனுடைய தலையைக் கேள் என்றாள்.
୨୪ତେଇଅନି ସେ ବାରଇଜାଇ ତାର୍‌ ମାଆକେ ପାଚାର୍‌ଲା, “ମୁଇ କାଇଟା ମାଙ୍ଗ୍‌ବି?” ତାର୍‌ ମାଆ କଇଲା, “ଡୁବନ୍‌ ଦେଉ ଜଅନର୍‌ ମୁଣ୍ଡ୍‌ ମାଙ୍ଗ୍‌ ।”
25 ௨௫ உடனே அவள் ராஜாவிடம் சீக்கிரமாக வந்து: நீர் இப்பொழுதே ஒரு தட்டில் யோவான்ஸ்நானனுடைய தலையை வைத்து எனக்குத் தரவேண்டும் என்று கேட்டாள்.
୨୫ସେଦାପ୍‌ରେ ଟକି ରାଜାର୍‌ ଲଗେ ଆସି ଏଟା କଇ ମାଙ୍ଗ୍‌ଲା, “ତୁଇ ମକେ ଏବେ ଡୁବନ୍‌ ଦେଉ ଜଅନର୍‌ ମୁଣ୍ଡ୍‌ ଗଟେକ୍‌ ତାଲାଇ କାଟି ଦେ ।”
26 ௨௬ அப்பொழுது ராஜா அதிக துக்கமடைந்தான்; ஆனாலும், வாக்குக் கொடுத்ததினாலும், அவனோடுகூட பந்தியில் இருந்தவர்களுக்காகவும், அவள் கேட்டுக்கொண்டதை மறுக்க அவனுக்கு மனம் இல்லாமல்;
୨୬ସେକାତା ସୁନି ରାଜା ବେସି ଦୁକ୍‌ କଲା ମାତର୍‌ ନିଜେ କାତା ଦେଇର‍ଇଲାଟା ଆରି କାଇବାକେ ବସି ରଇବା ଲକ୍‌ମନର୍‌ମୁଆଟେ ମାଙ୍ଗ୍‌ଲାଟା ନାଇ ବଲି କ‍ଇବାକେ ମନ୍‌ କରେନାଇ ।
27 ௨௭ உடனே யோவான்ஸ்நானனுடைய தலையைக் கொண்டுவரும்படி போர்வீரனுக்குக் கட்டளைக் கொடுத்து அனுப்பினான்.
୨୭ତେବେ ରାଜା ସେଦାପ୍‌ରେ ଗଟେକ୍‌ ସଇନକେ ପାଟାଇ ତାର୍‌ ମୁଣ୍ଡ୍‌ ଆନ୍‌ବାକେ ଆଦେସ୍‌ ଦେଲା, ତେଇ ସଇନ ବନ୍ଦି ଗରେ ଜାଇ, ଡୁବନ୍‌ ଦେଉ ଜଅନର୍‌ ମୁଣ୍ଡ୍‌ କାଟ୍‌ଲା ।
28 ௨௮ அப்படியே அவன்போய், காவல்கூடத்திலே அவனுடைய தலையை வெட்டி, அவன் தலையை ஒரு தட்டிலே கொண்டுவந்து, அதை அந்தச் சிறு பெண்ணுக்குக் கொடுத்தான்; அந்தச் சிறுபெண் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள்.
୨୮ଆରି ସେ ମୁଣ୍ଡ୍‌ ଗଟେକ୍‌ ତାଲାଇ ଆନି ଟକିକେ ଦେଲା, ଆରି ଟକି ଡୁବନ୍‌ ଦେଉ ଜଅନର୍‌ ମୁଣ୍ଡ୍‌ ନେଇ ତାର୍‌ ମାକେ ଦେଲା ।
29 ௨௯ அவனுடைய சீடர்கள் அதைக் கேள்விப்பட்டு வந்து, அவன் சரீரத்தை எடுத்து, ஒரு கல்லறையில் வைத்தார்கள்.
୨୯ଜଅନର୍‌ ସିସ୍‌ମନ୍‌ ତେଇର୍‌ କବର୍‌ ସୁନି ଆଇଲାଇ, ଆରି ମଲା ମଡ୍‌କେ ନେଇ ମସ୍‌ନେ ତପ୍‌ଲାଇ ।
30 ௩0 அப்பொழுது அப்போஸ்தலர்கள் இயேசுவிடம் கூடிவந்து, தாங்கள் செய்தவைகள் போதித்தவைகள் எல்லாவற்றையும் அவருக்கு அறிவித்தார்கள்.
୩୦ପଚେ ପେରିତ୍‌ମନ୍‌ ଜିସୁର୍‌ ଲଗେ ରୁଣ୍ଡ୍‌ଲାଇ, ଆରି ସେମନ୍‌ ଜନ୍‌ ଜନ୍‌ଟା କରି ରଇଲାଇ, ଆରି ଜାଇ ଜାଇଟା ସିକାଇ ଦେଇରଇଲାଇ, ସେସବୁ ତାକେ ଜାନାଇଲାଇ ।
31 ௩௧ அவர் அவர்களைப் பார்த்து: வனாந்திரமான ஒரு இடத்திற்குச் சென்று தனிமையில் கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் வாருங்கள் என்றார்; ஏனென்றால், அநேக மக்கள் அவரிடம் வருகிறதும் போகிறதுமாக இருந்ததினால் அவர்களுக்கு சாப்பிட நேரமில்லாமல் இருந்தது.
୩୧ସେଡ୍‌କି ବେଲେ ଜିସୁ ସେମନ୍‌କେ କଇଲା, “ତମେମନ୍‌ ମର୍‌ସଙ୍ଗ୍‌ ଆସା ଆମେ ଗଟେକ୍‌ କିନରା ଜାଗାଇ ଜାଇ ଚନେକ୍‌ ବିସ୍‌ରାମ୍‌ କରୁ ।” କାଇକେବଇଲେ କେତେକ୍‌ କେତେକ୍‌ ଲକ୍‌ ଆସ୍‌ ଜା ଅଇତେରଇଲାଇଜେ ସେମନ୍‌କେ କାଇବାକେ ମିସା ସୁଜଗ୍‌ ନ ମିଲ୍‌ତେ ରଇଲା ।
32 ௩௨ அப்படியே அவர்கள் தனிமையாக ஒரு படகில் ஏறி வனாந்திரமான ஒரு இடத்திற்குப் போனார்கள்.
୩୨ତେବେ ଜିସୁ ଆରି ତାର୍‌ ସିସ୍‌ମନ୍‌ ବାରଇ ବେଗ୍‌ଲି ଜାଇ ଡଙ୍ଗାଇ ବସି ଗଟେକ୍‌ କିନରା ଜାଗାଇ ଗାଲାଇ ।
33 ௩௩ அவர்கள் புறப்பட்டுப் போகிறதை மக்கள் பார்த்தார்கள். அவரை அறிந்த மக்கள் எல்லாப் பட்டணங்களிலுமிருந்து கால்நடையாகவே அந்த இடத்திற்கு ஓடி, அவர்களுக்கு முன்பே அங்கு சென்றுசேர்ந்து, அவரிடம் கூடிவந்தார்கள்.
୩୩ମାତର୍‌ ସେମନ୍‌ ବାରଇ ଜିବାଟା ବେସିଲକ୍‌ ଦେକି ଚିନ୍‌ଲାଇ, ଆରି ସବୁ ନଅରେ ଅନି ଲକ୍‌ମନ୍‌ ପାଲାଇ ପାଲାଇ ଜାଇ ସେମନର୍‌ ଆଗ୍‍ତୁ କେଟ୍‌ଲାଇ ।
34 ௩௪ இயேசு கரையில் வந்து, அங்கே கூடிவந்த மக்களைப் பார்த்து, அவர்கள் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல இருந்ததினால், அவர்கள்மேல் மனதுருகி, அநேகக் காரியங்களை அவர்களுக்குப் போதிக்கத்தொடங்கினார்.
୩୪ଜିସୁ ଡଙ୍ଗାଇଅନି ବାରଇ, ବେସି ଲକ୍‌ମନ୍‌କେ ଦେକି ତାର୍‍ ଜିବନ୍‌ ଦୁକାଇ ଦୟାକଲା । କାଇକେବଇଲେ ସେମନ୍‌ ଗଉଡ୍‌ ନ ରଇଲା ମେଣ୍ଡାରାସି ପାରା ରଇଲାଇ ଆରି ସେ ସେମନ୍‌କେ କେତେକ୍‌ ବିସଇ ସିକିଆ ଦେବାର୍‌ଦାର୍‌ଲା ।
35 ௩௫ அதிகநேரம் ஆனபின்பு, அவருடைய சீடர்கள் அவரிடம் வந்து: இது வனாந்திரமான இடம், அதிகநேரமும் ஆனது;
୩୫ଏତ୍‌କି ବିତ୍‌ରେ ବେଲ୍‌ ବସି ଆଇବାକେ ସିସ୍‌ମନ୍‌ ଆସି ଜିସୁକେ କଇଲାଇ, “ଏ ଜାଗା ତା ଚିମ୍‌ରା ଜାଗା ଆରି ବେଲ୍‌ ମିସା ବସିଆଇଲାନି,
36 ௩௬ சாப்பிடுகிறதற்கும் இவர்களிடம் ஒன்றும் இல்லை; எனவே இவர்கள் சுற்றிலும் இருக்கிற கிராமங்களுக்கும் ஊர்களுக்கும்போய், அப்பங்களை வாங்கிக்கொள்ள இவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள்.
୩୬ତେବର୍‌ପାଇ ଲକ୍‌ମନ୍‌କେ ପାଟାଇ ଦିଆସ୍‌ । ଜେନ୍ତି କି ସେମନ୍‌ ଚାରିବେଡ୍‌ତିର୍‌ ଗାଉଁ ମନ୍‌କେ ଜାଇ ନିଜର୍‌ ନିଜର୍‌ ପାଇ କାଇବାକେ କାଇଟା ମିସା ଗେନତ୍‌ ।”
37 ௩௭ அவர் அவர்களைப் பார்த்து: நீங்களே அவர்களுக்கு உணவுகொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள்போய், இருநூறு வெள்ளிக்காசுகளுக்கு அப்பங்களை வாங்கி இவர்களுக்குச் சாப்பிடக் கொடுக்கலாமா? என்றார்கள்.
୩୭ମାତର୍‌ ଜିସୁ ସେମନ୍‌କେ କ‍ଇଲା, “ତମେ ସେମନ୍‌କେ କାଇଟା ମିସା କାଇବାକେ ଦିଆସ୍‌ ।” ସେମନ୍‌ ତାକେ କଇଲାଇ, “ଆମେ ଜାଇ ଆଟ୍‌ ମାସର୍‌ କୁଲି ଡାବୁ ନେଇ ଏମନ୍‌କେ ରୁଟି ଗେନିଆନି କୁଆଇବୁ କି?”
38 ௩௮ அதற்கு அவர்: உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கிறது என்று போய்ப் பாருங்கள் என்றார். அவர்கள் பார்த்துவந்து: ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் இருக்கிறது என்றார்கள்.
୩୮ଜିସୁ ସେମନ୍‌କେ କଇଲା, “ତମର୍‌ ଲଗେ କେତେଟା ରୁଟି ଆଚେ? ଜାଇ ଦେକା ।” ସେମନ୍‌ ଦେକିଆସି ତାକେ କଇଲାଇ, “ପାଁଚ୍‌ଟା ରୁଟି ଆରି ଦୁଇଟା ମାଚ୍‌ ।”
39 ௩௯ அப்பொழுது எல்லோரையும் பசும்புல்லின்மேல் பந்தி உட்காரவைக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
୩୯ତେଇ ସବୁଲକ୍‌ ଜେନ୍ତି ଦଲ୍‌ଦଲ୍‌ ଅଇ କଅଁଲି ଗାଁସ୍‌ ଉପ୍‌ରେ ବସ୍‌ବାଇ, ଏଟାର୍‌ପାଇ ଜିସୁ ତାର୍‌ ସିସ୍‌ମନ୍‌କେ ତିଆର୍‌ଲା ।
40 ௪0 அப்படியே வரிசை வரிசையாக, நூறுநூறுபேராகவும் ஐம்பதுஐம்பதுபேராகவும் உட்கார்ந்தார்கள்.
୪୦ସେମନ୍‌ ସଏ ସଏ ଆରି ପଚାସ୍‌ ପଚାସ୍‌ ଲକ୍‌ ଦାଡି ଦାଡି ଅଇ ବସ୍‌ଲାଇ ।
41 ௪௧ அவர் அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டு, அவர்களுக்குப் பரிமாறத் தம்முடைய சீடர்களிடம் கொடுத்தார். அப்படியே இரண்டு மீன்களையும் எல்லோருக்கும் பங்கிட்டார்.
୪୧ପଚେ ଜିସୁ ପାଁଚ୍‌ଟା ରୁଟି ଆରି ଦୁଇଟା ମାଚ୍‌ ଦାରି ସରଗ୍‌ ବାଟେ ଦେକି ପର୍‌ମେସର୍‌କେ ଦନିଅବାଦ୍‌ ଦେଲା, ଆରି “ରୁଟି ବାଙ୍ଗାଇ ଲକ୍‌ମନ୍‌କେ ଦିଆସ୍‌ ।” ବଲି ସିସ୍‌ମନ୍‌କେ ଦେଲା । ଆରି, ସେ ଦୁଇଟା ମାଚ୍‌ ସବୁକେ ବାଟାକରି ଦେଲା ।
42 ௪௨ எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தி அடைந்தார்கள்.
୪୨ତେଇ ସବୁଲକ୍‌ କାଇକରି ପେଟ୍‌ ପୁରାଇଲାଇ,
43 ௪௩ மேலும் அப்பங்களிலும் மீன்களிலும் மீதியான துண்டுகளைப் பன்னிரண்டு கூடை நிறைய எடுத்தார்கள்.
୪୩ଆରି ସେମନ୍‌ ବାଙ୍ଗ୍‌ଲା ରୁଟି ଆରି ମାଚ୍‌ ରୁଣ୍ଡାଇ ବାର୍‌ଟା ଡାଲାଇ ପୁରୁନ୍‌ କଲାଇ ।
44 ௪௪ அப்பங்கள் சாப்பிட்ட ஆண்கள் ஏறக்குறைய ஐயாயிரம்பேராக இருந்தார்கள்.
୪୪ତେଇ କାଇଲା ଲକ୍‌ମନର୍‌ ବିତ୍‌ରେ ଅବ୍‌କା ମନସ୍‌ ପିଲାମନ୍‌ ପାଁଚ୍‌ ଅଜାର୍‌ ରଇଲାଇ ।
45 ௪௫ அவர் மக்களை அனுப்பிவிடும்போது, தம்முடைய சீடர்கள் படகில் ஏறி அக்கரையில் பெத்சாயிதாவிற்கு, தமக்கு முன்பே போகச்சொல்லி, அவர்களை துரிதப்படுத்தினார்.
୪୫ସେଦାପ୍‌ରେ ଜିସୁ ନିଜର୍‌ ସିସ୍‌ମନ୍‌କେ ଡଙ୍ଗାଇ ବସି ଗାଡ୍‌ ସେପାଟର୍‌ ବେତ୍‌ସାଇଦାଇ ତାର୍‌ ଆଗ୍‌ତୁ ଜିବାକେ କଇଲା, ଆରି ତେଇ ରଇଲା ଲକ୍‌ମନ୍‌କେ ନିଜର୍‌ ନିଜର୍‌ ଗର୍‌ମନ୍‌କେ ପାଟାଇ ଦେଲା ।
46 ௪௬ அவர் மக்களை அனுப்பிவிட்டப்பின்பு, ஜெபம்பண்ணுவதற்காக ஒரு மலையின்மேல் ஏறினார்.
୪୬ଜିସୁ ଲକ୍‌ମନ୍‌କେ ପାଟାଇଲା ପଚେ, ପାର୍‌ତନା କର୍‌ବାକେ କୁପ୍‌ଲିଉପ୍‌ରେ ଗାଲା ।
47 ௪௭ மாலைநேரமானபோது படகு நடுக்கடலில் இருந்தது; அவரோ கரையிலே தனிமையாக இருந்தார்.
୪୭ରାତି ଅଇଲାକେ ଡଙ୍ଗା ସମ୍‌ଦୁର୍‌ ମଜାଇ ରଇଲା, ଆରି ସମ୍‌ଦୁର୍‌ ପାଲି ଜିସୁ ଗଟେକ୍‌ ଲକ୍‌ସେ ରଇଲା ।
48 ௪௮ அப்பொழுது எதிர்க்காற்று வீசிக்கொண்டிருந்ததால், அவர்கள் கஷ்டப்பட்டு துடுப்பு போடுகிறதை அவர் பார்த்து, அதிகாலையில் கடலின்மேல் நடந்து அவர்களிடம் வந்து, அவர்களைக் கடந்துபோகிறவர்போல காணப்பட்டார்.
୪୮ମୁଆଟ୍‌ ବାଟେ ଅନି ପବନ୍‌ ଆଇତେ ରଇଲାଜେ ତାର୍‌ ସିସ୍‌ମନ୍‌ ଡଙ୍ଗା ଗାଟ୍‌ବାକେ କସ୍‌ଟ ଅଇବାଟା ଜିସୁ ଦେକ୍‌ଲା । କୁକ୍‌ଡା ଡାକେ ଜିସୁ ସମ୍‌ଦୁର୍‌ ଉପ୍‌ରେ ଇଣ୍ଡି ଇଣ୍ଡି ସେମନର୍‌ ଲଗେ ଗାଲା, ଆରି ସେମନ୍‌କେ ବାଟ୍‌ ଦେଇ ଜିବାଟା ସିସ୍‌ମନ୍‌ ଦେକ୍‌ଲାଇ ।
49 ௪௯ அவர் கடலின்மேல் நடக்கிறதை அவர்கள் பார்த்து, அவரை பிசாசு என்று நினைத்து, சத்தமிட்டு அலறினார்கள்.
୪୯ମାତର୍‌ ସେମନ୍‌ ଜିସୁ ପାନିତେଇ ଇଣ୍ଡ୍‌ବାଟା ଦେକି ଡୁମା ବଲି ବାବି କିର୍‌କିର୍‌ଲାଇ ।
50 ௫0 அவர்கள் எல்லோரும் அவரைப் பார்த்து கலக்கம் அடைந்தார்கள். உடனே அவர் அவர்களோடு பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாமல் இருங்கள் என்று சொல்லி.
୫୦କାଇକେବଇଲେ ସବୁଲକ୍‌ ତାକେ ଦେକି କିଲ୍‌ବିଲ୍‌ ଅଇଜାଇତେ ରଇଲାଇ । ସେଦାପ୍‌ରେ ଜିସୁ ସେମନର୍‌ ସଙ୍ଗ୍‌ କାତା ବାର୍‌ତା ଅଇ ସେମନ୍‌କେ କଇଲା, “ଡରାନାଇ ସାଆସ୍‌ ଦାରା, ଏଟାତା ମୁଇ ।”
51 ௫௧ அவர்கள் இருந்த படகில் ஏறினார். அப்பொழுது காற்று அமைதியானது; எனவே அவர்கள் தங்களுக்குள்ளே மிகவும் பிரமித்து ஆச்சரியப்பட்டார்கள்.
୫୧ଆରି, ସେ ସେମନର୍‌ ଲଗେ ଜାଇ ଡଙ୍ଗାଇ ଚଗ୍‌ଲା, ଆରି ପବନ୍‌ ବନ୍ଦ୍‌ ଅଇଲା । ତେଇ ସେମନ୍‌ ମନେ ମନେ କାବା ଅଇଗାଲାଇ,
52 ௫௨ அவர்களுடைய இருதயம் கடினமுள்ளதாக இருந்ததினால் அப்பங்களைக்குறித்து அவர்கள் உணராமல் போனார்கள்.
୫୨କାଇକେବଇଲେ ପାଁଚ୍‌ଟା ରୁଟିର୍‌ ଗଟ୍‍ନାଇଅନି ଜିସୁ କେ ବଲି ବୁଜି ନ ରଇଲାଇଜେ ସେମନର୍‌ ବୁଦି ଗୁପିଜାଇରଇଲା ।
53 ௫௩ அவர்கள் கடலைக்கடந்து கெனேசரேத்து என்னும் நாட்டிற்கு வந்து, கரை ஏறினார்கள்.
୫୩ଜିସୁ ଆରି ତାର୍‌ ସିସ୍‌ମନ୍‌ ଗାଡ୍‌ ଲଙ୍ଗି ଗିନେସରତ୍‌ ବାଟେ ଜାଇକରି କେଟ୍‌ଲାଇ ଆରି ଗାଡ୍‌ପାଲି ଡଙ୍ଗା ବାନ୍ଦ୍‌ଲାଇ ।
54 ௫௪ அவர்கள் படகில் இருந்து இறங்கினவுடனே, மக்கள் அவரை அறிந்து,
୫୪ଆରି, ଡଙ୍ଗାଇ ଅନି ଉତର୍‌ଲା ଦାପ୍‌ରେ, ଲକ୍‌ମନ୍‌ ଜିସୁକେ ଚିନ୍‌ଲାଇ ।
55 ௫௫ அந்தச் சுற்றுபுறமெல்லாம் ஓடிச்சென்று, நோயாளிகளைப் படுக்கைகளில் படுக்கவைத்து, அவர் வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்ட இடங்களிலெல்லாம் சுமந்துகொண்டுவந்தார்கள்;
୫୫ଆରି ସେମନ୍‌ ଜିସୁ ଆଇଲା କବର୍‌ ସୁନାଇବାକେ ସବୁ ଗାଏଁ ପାଲାଇଲାଇ । ସେ ଜନ୍‌ ଜନ୍‌ ଜାଗାଇ ଆଚେ ବଲି ସୁନ୍‌ଲାଇ, ସେ ଜାଗାଇ ଜରର୍‌ ଲକ୍‌ମନ୍‌କେ କଟ୍‌ ମିସ୍‌ତେ ବଇ ଆନ୍‌ବାର୍‌ ଦାର୍‌ଲାଇ ।
56 ௫௬ இவைகள் இல்லாமல், அவர் சென்ற கிராமங்கள், பட்டணங்கள், நாடுகள் எல்லாவற்றிலும் சந்தைவெளிகளிலே நோயாளிகளைக் கொண்டுவந்து, அவருடைய ஆடையின் ஓரத்தையாவது அவர்கள் தொடுவதற்கு அனுமதிக்கவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவரைத் தொட்ட எல்லோரும் சுகம் பெற்றுக்கொண்டார்கள்.
୫୬ଆରି ସେ ଜେତେକ୍‌ ଜେତେକ୍‌ ଗାଉଁ, ସଅର୍‌ ଆରି ପୁଟ୍‌ ମନ୍‌କେ କେଟ୍‌ଲା, ଲକ୍‌ମନ୍‌ ସେ ସବୁ ଜାଗାଇ ଆଟ୍‌ ବଜାର୍‌ମନ୍‌କେ ରଗିମନ୍‌କେ ସଙ୍ଗଇଦେଇ, ସେମନ୍‌ ତାର୍‌ ଲୁଗା ଅଁଟିଟାନେ ଚିଇବୁ ବଲି ଜୁଆର୍‌ବିଆର୍‌ କଲାଇ । ଜେତେକ୍‌ ଲକ୍‌ ତାକେ ଚିଇଲାଇ, ସବୁଲକ୍‌ ନିକ ଅଇଲାଇ ।

< மாற்கு 6 >