< மாற்கு 6 >

1 இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, அவர் வளர்ந்த ஊருக்கு வந்தார்; அவருடைய சீடர்களும் அவரோடு வந்தார்கள்.
तालू यीशु कफरनहूम शेहरे ला चली गिया, सै अपणे ग्रां नासरत जो आया, कने उदे चेले भी उदे सोगी आये।
2 ஓய்வுநாளானபோது, ஜெப ஆலயத்தில் போதகம்பண்ணினார். அதைக் கேட்ட அனைவரும் ஆச்சரியப்பட்டு, இவைகள் இவனுக்கு எங்கிருந்து வந்தது? இவன் கைகளினால் இப்படிப்பட்ட பலத்த செய்கைகளைச் செய்ய இவனுக்குக் கொடுக்கப்பட்ட ஞானம் எப்படிப்பட்டது?
यीशु सब्ते बाले रोजे यहूदी जंज घर च परमेश्वरे दे बचना दा उपदेश देणा लग्गा, कने मते लोक सुणीकरी हेरान होई गे कने बोलणा लग्गे, “इनी माणुऐ ऐ गल्लां कुथु ला सिखियां न? कने इसयो ऐ सारा ज्ञान कने चमत्कार करणे दी शक्तियां कुनी दितियां? कने सामर्थ्य दे कम्म कियां इदे ला होंदे न?
3 இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் என்பவர்களுடைய சகோதரன் அல்லவா? இவன் சகோதரிகளும் இங்கே நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? என்று சொல்லி, அவரைக்குறித்து இடறல் அடைந்தார்கள்.
ऐ सिर्फ तरखाणे दा पुत्र है, जड़ा मरियम दा पुत्र, कने याकूब, योसेस, यहूदा कने शमौन दा भाई है। कने इदिया बेंहणा भी ऐथू साड़े सोगी न” कने उना यीशुऐ पर भरोसा करणे जो मना करी दिता।
4 இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் சொந்த ஊரிலும், தன் உறவினர்களிலும், தன் வீட்டிலும்தான் மதிக்கப்படமாட்டான். மற்ற எல்லா இடங்களிலும் மதிக்கப்படுவான் என்றார்.
यीशुऐ उना जो बोलया, की परमेश्वरे दे संदेश देणेबालयां दा अपणे ग्रां कने अपणे रिशतेदारां अपणे घरे छडी करी, हर कुथी उदी इज्जत मान होंदा है।
5 அங்கே அவர் சில நோயாளிகள்மேல்மட்டும் கரங்களை வைத்து, அவர்களைக் குணமாக்கினார், வேறு அற்புதங்கள் எதுவும் செய்யமுடியாமல்.
कने ओथु उसी पर कुनी भरोसा नी किता, इसा बजा ला उनी ओथु थोड़े बिमारां पर हथ रखीकरी खरा किता उदे अलावा ओथु होर कोई चमत्कार नी करी सकया।
6 அவர்களுக்கு விசுவாசம் இல்லாததினால் அதைக்குறித்து ஆச்சரியப்பட்டு, மற்ற கிராமங்களுக்குச்சென்று, போதகம்பண்ணினார்.
कने यीशु उना दे अविश्वास ने बड़ा हेरान होया कने उदे बाद यीशु अखे बखे दे ग्रांऐ च गिया कने परमेश्वर दे बचना दा उपदेश दिता।
7 இயேசு பன்னிரண்டு சீடர்களையும் அழைத்து, அசுத்தஆவிகளைத் துரத்த அவர்களுக்கு அதிகாரம் கொடுத்து,
थोड़े बकते बाद यीशुऐ बाहरां चेलयां जो अपणे बाल सदया कने उना जो बुरी आत्मा कडणे दा हक दिता। उना जो दो-दो करिके लग-लग ग्रांऐ भेजणा लग्गा, कने उना जो बुरियां आत्मा जो लोकां चे कडणे दा हक दिता।
8 வழிக்குப் பையையோ, அப்பத்தையோ, இடுப்புக் கச்சையில் பணத்தையோ, எடுத்துக்கொண்டுபோகாமல், ஒரு தடியைமட்டும் எடுத்துக்கொண்டுபோகவும்;
कने यीशुऐ उना जो हुकम दिता, की अपणे रस्ते तांई सिर्फ इक सोठी लेनयो। ना तां खाणे तांई रोटी लेणी, ना तां झोला, ना ही बटुए च पेसे,
9 காலணிகளைப் போட்டுக்கொண்டுபோகவும், இரண்டு அங்கிகளை அணிந்துகொள்ளாமலிருக்கவும் கட்டளையிட்டார்.
पर जुते पाई लेनयो कने होर कोई कपड़े पाणे तांई मत लेंदे।
10 ௧0 பின்பு அவர்களைப் பார்த்து: நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டிற்குச் சென்றால், அந்த இடத்தைவிட்டுப் புறப்படும்வரை அங்கேயே தங்கியிருங்கள்.
यीशुऐ उना जो बोलया, “की कोई तुहांजो अपणे घरे रेहणे तांई सदगा, जालू दीकर तुसां उसी ग्रांऐ च रेंगे, तालू दीकर उसी दे घरे च परोणे बणी करी रिया।
11 ௧௧ யாராவது உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்களுடைய வசனங்களைக் கேட்காமலும் இருந்தால், நீங்கள் அந்த இடத்தைவிட்டுப் புறப்படும்போது, அவர்களுக்கு சாட்சியாக உங்களுடைய கால்களின் கீழே படிந்த தூசியை உதறிப்போடுங்கள். நியாயத்தீர்ப்புநாளிலே அந்தப் பட்டணத்திற்கு சம்பவிப்பதைவிட சோதோம் கொமோரா பட்டணத்திற்கு சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, அவர்களை இரண்டு இரண்டுபேராக அனுப்பினார்.
जिसा जगा दे लोक तुहांजो अपनांगे नी कने तुहाड़ी सुणगे नी, ओथु ला जांदे बेले अपणे पैरां दी धुड़ जाड़ी दिनयो, ताकि उना लोकां जो पता लग्गे की परमेश्वरे दिया तरफा ला मिलणे बाली सजा दे सै अपु ही जिम्मेबार न।”
12 ௧௨ அவர்கள் புறப்பட்டுப்போய்: மனந்திரும்புங்கள் என்று பிரசங்கித்து;
तालू चेलयां जाई करी घोषणा किती की अपणा मन बदला कने अपणे पापां दा पश्चाताप करा, कने परमेश्वरे दे शुभसमाचार पर भरोसा करा, कने परमेश्वरे पासे मुड़ा।
13 ௧௩ அநேக பிசாசுகளைத் துரத்தி, அநேக நோயாளிகளை எண்ணெய் பூசி சுகமாக்கினார்கள்.
कने उना मतियां बुरियां आत्मा जो कडया, कने मतयां बिमारां जो जैतुन दा तेल मली करी खरा किता।
14 ௧௪ இயேசுவினுடைய பெயர் பிரசித்தமானதினால், ஏரோதுராஜா அவரைக்குறித்துக் கேள்விப்பட்டு: மரித்துப்போன யோவான்ஸ்நானன் உயிரோடு எழுந்தான், எனவே அவனிடம் இப்படிப்பட்டப் பலத்த செய்கைகள் வெளிப்படுகிறது என்றான்.
कने हुण राजा हेरोदेसे यीशु दे कम्मा दी चर्चा सुणी जड़े यीशु करा दा था, क्योंकि मते सारे लोक यीशुऐ जो जाणदे थे कने उदे बारे च चर्चा करा दे थे। कने बोला दे थे की ऐ सेई यूहन्ना बपतिस्मा देंणे वाला है, सै मरयां चे जिन्दा होई गिया है, ऐई बजा है कि उदे बाल ऐ चमत्कार करणे तांई परमेश्वरे दी शक्ति है।
15 ௧௫ சிலர்: அவர் எலியா என்றார்கள். வேறுசிலர்: அவர் ஒரு தீர்க்கதரிசி அல்லது பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவனைப்போல இருக்கிறார் என்று சொன்னார்கள்.
कने होरनी लोकां बोलया है, “परमेश्वरे दा संदेश दे बाला एलिय्याह है। कने बाकियां बोलया, ऐ सै परमेश्वरे दा संदेश देणेबाला है, जड़े बड़े जमाने पेहले रेंदे थे।”
16 ௧௬ ஏரோது அதைக் கேட்டபொழுது: அவன், நான் தலையை வெட்டிக்கொன்ற யோவான்தான்; அவன் உயிரோடு எழுந்தான் என்றான்.
हेरोदेसे ऐ सुणीकरी बोलया, “ऐ यूहन्ना बपतिस्मा देणेबाला है, मैं अपु उदा मुंड बडबाया था, पर सै मरी करी फिरी जिन्दा होई गिया है।”
17 ௧௭ ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளைத் தனக்கு மனைவியாக்கி வைத்துக்கொண்டபோது,
हेरोदेस थोड़े बकते पेहले अपणे भाई फिलिप्पुस दी घरे बाली हेरोदियास ने बियाह करी लिया था।
18 ௧௮ யோவான் ஏரோதைப் பார்த்து: நீர் உம்முடைய சகோதரன் மனைவியை வைத்துக்கொள்ளுவது நியாயம் இல்லை என்று சொன்னதினால், ஏரோது போர்வீரர்களை அனுப்பி, யோவானைப் பிடித்துக் கட்டிக் காவலில் வைத்திருந்தான்.
तालू यूहन्ना उसयो बोलया, “ऐ तु खरा नी किता तु अपणे भाईये दी लाड़ी लेई ली!” तांई तां हेरोदियास जो खुश करणे तांई, हेरोदेसे यूहन्ना जो पकड़ी करी उसयो जेला च पाई दिता।
19 ௧௯ ஏரோதியாளும் அவனுக்குச் சதி நினைத்து, அவனைக் கொன்றுபோட மனதாயிருந்தாள்; ஆனாலும், அவளால் முடியாமல்போனது.
तांई तां हेरोदियास यूहन्ना ने दुशमणी रखदी थी कने सै चांहदी थी, की उसयो मरवाई दे, पर ऐसा होई नी सकया,
20 ௨0 ஏனென்றால், யோவான் நீதியும் பரிசுத்தமும் உள்ளவன் என்று ஏரோது அறிந்து, அவனுக்குப் பயந்து, அவனைப் பாதுகாத்து, அவன் யோசனையின்படி அநேகக் காரியங்களைச் செய்து, விருப்பத்தோடு அவன் சொல்லைக் கேட்டுவந்தான்.
हरबरी जालू हेरोदेस यूहन्ना जो बोलदे सुणदा था, तां सै डरदा था, क्योंकि युहन्ना इक पबित्र कने धर्मी माणु था, पर तमी सै उसयो सुणना पसंद करदा था। कने सिपाहियां जो उदी रखाबाली करणे तांई रखया, हेरोदेस उदियां गल्लां सुणीकरी डरी जांदा था, पर सै खुशिया ने सुणदा था।
21 ௨௧ ஏரோது தன்னுடைய பிறந்தநாளிலே தன்னுடைய பிரபுக்களுக்கும், படைத்தளபதிகளுக்கும், கலிலேயா நாட்டின் பிரதான மனிதர்களுக்கும் ஒரு விருந்துபண்ணினபோது,
थोड़े बकते बाद, हेरोदेसे अपणा जन्म दिन मनाया। उनी अपणे बड्डे प्रधान अधिकारियां, सेना दे बड्डे खास अगुवां कने गलील प्रदेशे दे अगुवां जो धामा च सदया। इसा धामा च हेरोदियास जो यूहन्ना जो मरवाणे दा मोका मिली गया।
22 ௨௨ ஏரோதியாளின் மகள் சபை நடுவே வந்து நடனம்பண்ணி, ஏரோதுவையும் அவனோடுகூட பந்தியில் இருந்தவர்களையும் சந்தோஷப்படுத்தினாள். அப்பொழுது, ராஜா சிறுபெண்ணை நோக்கி: உனக்கு வேண்டியதை என்னிடம் கேள், அதை உனக்குத் தருவேன் என்று சொல்லி;
कने हेरोदियास दी कुड़ी अंदर आई, कने नची करी हेरोदेस कने उदे सोगी धाम खाणा आये परोणयां जो खुश किता, तालू राजे कुड़िया जो बोलया, “तू जड़ा मर्जी मिंजो ला मंग, मैं तिजो दिंगा।”
23 ௨௩ நீ என்னிடத்தில் எதைக்கேட்டாலும், அது என் ராஜ்யத்தில் பாதியானாலும், அதை உனக்குத் தருவேன் என்று அவளுக்கு வாக்குக்கொடுத்தான்.
कने हेरोदेसे उसा ला ऐ बायदा किता, “की मेरे अधे राज्य दीकर जड़ा कुछ तू मिंजो ला मंगगी सै मैं तिजो दिंगा।”
24 ௨௪ அப்பொழுது, அவள் வெளியேபோய், நான் என்ன கேட்கவேண்டும் என்று தன் தாயிடம் கேட்டாள். அதற்கு அவள்: யோவான்ஸ்நானனுடைய தலையைக் கேள் என்றாள்.
उना बाहर जाई करी अपणिया माता ला पुछया, की मैं क्या मंगे? माता बोलया की, “उसयो बोल की सै यूहन्ना बपतिस्मा देणेबाले दा मुडं बड्डी करी मिंजो दे।”
25 ௨௫ உடனே அவள் ராஜாவிடம் சீக்கிரமாக வந்து: நீர் இப்பொழுதே ஒரு தட்டில் யோவான்ஸ்நானனுடைய தலையை வைத்து எனக்குத் தரவேண்டும் என்று கேட்டாள்.
कने सै झट अंदर राजे बाल आई, कने उसने बिनती किती की, “मैं चांहदी है, की तू हुणी यूहन्ना बपतिस्मा देणेबाले दा मुंड बड्डी करी मिंजो इक थालिया च दे।”
26 ௨௬ அப்பொழுது ராஜா அதிக துக்கமடைந்தான்; ஆனாலும், வாக்குக் கொடுத்ததினாலும், அவனோடுகூட பந்தியில் இருந்தவர்களுக்காகவும், அவள் கேட்டுக்கொண்டதை மறுக்க அவனுக்கு மனம் இல்லாமல்;
ऐ सुणीकरी राजा बड़ा उदास होया, पर अपणिया कसमां, कने सोगी बोणे बालयां दिया बजा ला उसा दिया गल्ला जो टालना नी चांदा था।
27 ௨௭ உடனே யோவான்ஸ்நானனுடைய தலையைக் கொண்டுவரும்படி போர்வீரனுக்குக் கட்டளைக் கொடுத்து அனுப்பினான்.
राजे इक सिपाइऐ जो हुकम दिता, कि जेला च जा, कने यूहन्ना दा मुंड बड्डी करी उदे बाल लेईकर आ।
28 ௨௮ அப்படியே அவன்போய், காவல்கூடத்திலே அவனுடைய தலையை வெட்டி, அவன் தலையை ஒரு தட்டிலே கொண்டுவந்து, அதை அந்தச் சிறு பெண்ணுக்குக் கொடுத்தான்; அந்தச் சிறுபெண் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள்.
सिपाईऐ जेला च जाई करी उदा सिर कटया, कने इक थालिया च रखीकरी लेई आया कने उसा कुड़िया जो देई दिता, कने कुड़िया अपणिया माता जो देई दिता।
29 ௨௯ அவனுடைய சீடர்கள் அதைக் கேள்விப்பட்டு வந்து, அவன் சரீரத்தை எடுத்து, ஒரு கல்லறையில் வைத்தார்கள்.
जालू यूहन्ना दे चेलयां जो पता चला की उसयो मारी दितया है, यूहन्ना दे चेले आये, कने उना उदिया लाशा जो चुकी करी कबरा च रखी आये।
30 ௩0 அப்பொழுது அப்போஸ்தலர்கள் இயேசுவிடம் கூடிவந்து, தாங்கள் செய்தவைகள் போதித்தவைகள் எல்லாவற்றையும் அவருக்கு அறிவித்தார்கள்.
जालू सै प्रेरित जिना जो यीशुऐ भेजया था, सै यीशु बाल बापस आये कने उदे चारों बखे खड़ोइ गे, कने जड़ा कुछ उना किता, कने सिखया था, सारा कुछ उसयो दसया।
31 ௩௧ அவர் அவர்களைப் பார்த்து: வனாந்திரமான ஒரு இடத்திற்குச் சென்று தனிமையில் கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் வாருங்கள் என்றார்; ஏனென்றால், அநேக மக்கள் அவரிடம் வருகிறதும் போகிறதுமாக இருந்ததினால் அவர்களுக்கு சாப்பிட நேரமில்லாமல் இருந்தது.
मते सारे लोक ओंदे जांदे थे कने इसा बजा ला यीशु कने उदे चेलयां जो रोटियां खाणे दा बकत नी मिलदा था। तालू यीशुऐ चेलयां जो बोलया, “असां कुथी सुनसान जगा चलदे जिथू किल्ले रेई सकन कने थोड़ा बकत अराम करी सकन।”
32 ௩௨ அப்படியே அவர்கள் தனிமையாக ஒரு படகில் ஏறி வனாந்திரமான ஒரு இடத்திற்குப் போனார்கள்.
इस तांई सै किस्तिया च बेईकरी सुनसान जगा च चली गे।
33 ௩௩ அவர்கள் புறப்பட்டுப் போகிறதை மக்கள் பார்த்தார்கள். அவரை அறிந்த மக்கள் எல்லாப் பட்டணங்களிலுமிருந்து கால்நடையாகவே அந்த இடத்திற்கு ஓடி, அவர்களுக்கு முன்பே அங்கு சென்றுசேர்ந்து, அவரிடம் கூடிவந்தார்கள்.
कने मतयां लोकां उना जो जांदे दिखया कने पछेणी लिया की सै कुथु जाणा लगयो न। कने अखे बखे दे नगरां दे लोक गिठे होईकरी यीशु कने उदे चेलयां ला पेहले ओथु पैदल दौड़ी करी पुज्जी गे।
34 ௩௪ இயேசு கரையில் வந்து, அங்கே கூடிவந்த மக்களைப் பார்த்து, அவர்கள் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல இருந்ததினால், அவர்கள்மேல் மனதுருகி, அநேகக் காரியங்களை அவர்களுக்குப் போதிக்கத்தொடங்கினார்.
यीशु किस्तिया ला उतरया कने उनी मती भरी भीड़ दिखी, कने उना पर तरस खादा, क्योंकि उना दा कोई अगुवा नी था, जड़ा उना दी रखबाली करी सके, जियां बिना गवाले भेडां होंदियां न, “फिरी सै उना जो परमेश्वर दे राज्य दियां मतियां गल्लां सिखाणा लग्गा।”
35 ௩௫ அதிகநேரம் ஆனபின்பு, அவருடைய சீடர்கள் அவரிடம் வந்து: இது வனாந்திரமான இடம், அதிகநேரமும் ஆனது;
जालू संज होंणा लग्गी, तां उदे चेले उदे बखे आई करी बोलणा लग्गे, “ऐ सुनसान जगा है, कने दिन बड़ा ढली गिया है।
36 ௩௬ சாப்பிடுகிறதற்கும் இவர்களிடம் ஒன்றும் இல்லை; எனவே இவர்கள் சுற்றிலும் இருக்கிற கிராமங்களுக்கும் ஊர்களுக்கும்போய், அப்பங்களை வாங்கிக்கொள்ள இவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள்.
इना जो भेजी दे, ताकि ऐ अखे बखे दे ग्रां कने बासियां च जाई करी, अपणे तांई कुछ खाणे जो खरीदी लेन।”
37 ௩௭ அவர் அவர்களைப் பார்த்து: நீங்களே அவர்களுக்கு உணவுகொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள்போய், இருநூறு வெள்ளிக்காசுகளுக்கு அப்பங்களை வாங்கி இவர்களுக்குச் சாப்பிடக் கொடுக்கலாமா? என்றார்கள்.
यीशुऐ उना जो जबाब दिता, “तुसां ही इना जो खाणे जो दिया।” उना यीशुऐ जो बोलया, “की तु चांदा है की असां जान कने दो सौ दिना दी मजदुरिया बराबर दियां रोटीयां खरदी करी इना जो खुआन?”
38 ௩௮ அதற்கு அவர்: உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கிறது என்று போய்ப் பாருங்கள் என்றார். அவர்கள் பார்த்துவந்து: ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் இருக்கிறது என்றார்கள்.
यीशुऐ उना जो बोलया, “जाई करी दिखा तुहाड़े बाल कितणियां रोटियां न?” उना पता करी के बोलया, “पंज रोटियां कने दो मछियां भी हेन।”
39 ௩௯ அப்பொழுது எல்லோரையும் பசும்புல்லின்மேல் பந்தி உட்காரவைக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
तालू यीशुऐ उना जो हुकम दिता की, सबना जो सेले घाऐ पर बैठाई दिया।
40 ௪0 அப்படியே வரிசை வரிசையாக, நூறுநூறுபேராகவும் ஐம்பதுஐம்பதுபேராகவும் உட்கார்ந்தார்கள்.
सै सौ-सौ करिके कने पंजा-पंजा करिके झुण्डा च बेई गे।
41 ௪௧ அவர் அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டு, அவர்களுக்குப் பரிமாறத் தம்முடைய சீடர்களிடம் கொடுத்தார். அப்படியே இரண்டு மீன்களையும் எல்லோருக்கும் பங்கிட்டார்.
कने यीशुऐ सै पंज रोटियां कने दो मछियां लियां, कने स्वर्गे पासे दिखीकरी परमेश्वर दा धन्यबाद किता, कने रोटियां तोड़ी करी दो टोटे किते कने चेलयां जो दिन्दा गिया, ताकि सै लोकां जो परोसन, कने सै दो मछियां भी उना च बंडी दितियां।
42 ௪௨ எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தி அடைந்தார்கள்.
सारे खाई करी रजी गे।
43 ௪௩ மேலும் அப்பங்களிலும் மீன்களிலும் மீதியான துண்டுகளைப் பன்னிரண்டு கூடை நிறைய எடுத்தார்கள்.
कने जालू रोटी खायी बैठे तालू चेलयां बाकी बचियाँ रोटियां कने मछियां गिठेरेइयां कने उसला बाहरा टोकरियाँ भरुई गियां।
44 ௪௪ அப்பங்கள் சாப்பிட்ட ஆண்கள் ஏறக்குறைய ஐயாயிரம்பேராக இருந்தார்கள்.
जिना रोटियां खादियां सै पंज हजार सिर्फ मर्द थे, उना बच्चे कने जणासा जो गिणया नी था।
45 ௪௫ அவர் மக்களை அனுப்பிவிடும்போது, தம்முடைய சீடர்கள் படகில் ஏறி அக்கரையில் பெத்சாயிதாவிற்கு, தமக்கு முன்பே போகச்சொல்லி, அவர்களை துரிதப்படுத்தினார்.
तालू यीशुऐ झट पट अपणे चेलयां जो बोलया की सै किस्तिया पर चढ़ी जा कने झिला दे पारले पासे बैतसैदा शेहरे जो चली जा, जालू दीकर की सै सारे लोकां जो भेजी नी ले।
46 ௪௬ அவர் மக்களை அனுப்பிவிட்டப்பின்பு, ஜெபம்பண்ணுவதற்காக ஒரு மலையின்மேல் ஏறினார்.
सारे लोका जो भेजणे बाद, यीशु पहाड़े पर प्राथना करणे तांई गिया।
47 ௪௭ மாலைநேரமானபோது படகு நடுக்கடலில் இருந்தது; அவரோ கரையிலே தனிமையாக இருந்தார்.
कने जालू संज होई, तालू किस्ति गलील झिला दे बिच थी, कने यीशु किला झिला बखे था।
48 ௪௮ அப்பொழுது எதிர்க்காற்று வீசிக்கொண்டிருந்ததால், அவர்கள் கஷ்டப்பட்டு துடுப்பு போடுகிறதை அவர் பார்த்து, அதிகாலையில் கடலின்மேல் நடந்து அவர்களிடம் வந்து, அவர்களைக் கடந்துபோகிறவர்போல காணப்பட்டார்.
जालू उनी दिखया की सै बड़े घबराई गियो न, क्योंकि हवा उना दे खिलाफ चलियो थी, तां ब्यागा तड़के यीशु झिला पर चली करी उना बाल आया, कने सै उना ला बखे ला निकलना चांदा था।
49 ௪௯ அவர் கடலின்மேல் நடக்கிறதை அவர்கள் பார்த்து, அவரை பிசாசு என்று நினைத்து, சத்தமிட்டு அலறினார்கள்.
पर जालू उना उसयो झिला पर चलदे दिखया, तां से डडणा लग्गी पै, उना जो लगया की सै भुत है, तां सै दिखीकरी डरी गे,
50 ௫0 அவர்கள் எல்லோரும் அவரைப் பார்த்து கலக்கம் அடைந்தார்கள். உடனே அவர் அவர்களோடு பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாமல் இருங்கள் என்று சொல்லி.
क्योंकि सारे उसयो दिखीकरी घबराई गियो थे। पर यीशुऐ उना ने झट गल्लां कितियां कने बोलया, “हिम्मत रखा, डरा मत, मैं यीशु है।”
51 ௫௧ அவர்கள் இருந்த படகில் ஏறினார். அப்பொழுது காற்று அமைதியானது; எனவே அவர்கள் தங்களுக்குள்ளே மிகவும் பிரமித்து ஆச்சரியப்பட்டார்கள்.
तालू सै उना बाल आया कने किस्तिया पर चढ़ी गिया, कने हवा रुकी गेई, कने सै बड़े हेरान होणा लग्गे।
52 ௫௨ அவர்களுடைய இருதயம் கடினமுள்ளதாக இருந்ததினால் அப்பங்களைக்குறித்து அவர்கள் உணராமல் போனார்கள்.
हाली उना दिखया भी था की पिछलिया धियाड़िया यीशुऐ पंज रोटीयां ने पंज हजार ला जादा लोकां जो खाणा खुआया था, सै हाली भी उसयो नी समझयो थे, की यीशु कुण है। क्योंकि उना दे मन कठोर थे।
53 ௫௩ அவர்கள் கடலைக்கடந்து கெனேசரேத்து என்னும் நாட்டிற்கு வந்து, கரை ஏறினார்கள்.
जालू यीशु कने उदे चेले इक किस्तिया च गलील दिया झिल्ला च गन्नेसरत प्रदेशे दे बखे पुज्जे, कने किस्ति घाटे पर बन्नी दिती।
54 ௫௪ அவர்கள் படகில் இருந்து இறங்கினவுடனே, மக்கள் அவரை அறிந்து,
कने जालू सै किस्तिया ला उतरे, तां लोकां उसयो झट पछेणी लिया,
55 ௫௫ அந்தச் சுற்றுபுறமெல்லாம் ஓடிச்சென்று, நோயாளிகளைப் படுக்கைகளில் படுக்கவைத்து, அவர் வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்ட இடங்களிலெல்லாம் சுமந்துகொண்டுவந்தார்கள்;
सै झट पट ही सारे इलाके च गे, कने बिमारां जो मंझयां पर चुकी करी लेई गे जिथू उना जो खबर मिली की यीशु ओथु है।
56 ௫௬ இவைகள் இல்லாமல், அவர் சென்ற கிராமங்கள், பட்டணங்கள், நாடுகள் எல்லாவற்றிலும் சந்தைவெளிகளிலே நோயாளிகளைக் கொண்டுவந்து, அவருடைய ஆடையின் ஓரத்தையாவது அவர்கள் தொடுவதற்கு அனுமதிக்கவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவரைத் தொட்ட எல்லோரும் சுகம் பெற்றுக்கொண்டார்கள்.
कने जिथू कुथी सै ग्रां, शेहरां या बस्तियां च जांदा था, तां लोक बिमारां जो बजारां च रखीकरी उसला बिनती करदे थे, की सै सिर्फ अपणे कपड़यां जो छुणा दे, कने जितणे भी छुंदे थे, सै सारे ठीक होई जांदे थे।

< மாற்கு 6 >