< மாற்கு 4 >

1 இயேசு மறுபடியும் கடலோரத்திலே போதகம்பண்ணத் தொடங்கினார். அநேக மக்கள் அவரிடம் கூடிவந்ததினால், அவர் கடலிலே நின்ற ஒரு படகில் ஏறி உட்கார்ந்தார்; மக்களெல்லோரும் கடற்கரையில் நின்றார்கள்.
ⲁ̅ⲟⲩⲟϩ ⲡⲁⲗⲓⲛ ⲁϥⲉⲣϩⲏⲧⲥ ⳿ⲛϯ⳿ⲥⲃⲱ ⳿ⲉ⳿ⲥⲕⲉⲛ ⳿ⲫⲓⲟⲙ ⲟⲩⲟϩ ⲁⲩⲑⲱⲟⲩϯ ⳿ⲉⲣⲟϥ ⳿ⲛϫⲉ ⲟⲩⲙⲏϣ ⲉϥⲟϣ ϩⲱⲥⲧⲉ ⳿ⲛⲧⲉϥ⳿ⲁⲗⲏⲓ ⳿ⲉ⳿ⲡϫⲟⲓ ⳿ⲛⲧⲉϥϩⲉⲙⲥⲓ ϧⲉⲛ ⳿ⲫⲓⲟⲙ ⲟⲩⲟϩ ⲛⲁⲣⲉ ⲡⲓⲙⲏϣ ⲧⲏⲣϥ ϧⲁⲧⲉⲛ ⳿ⲫⲓⲟⲙ ϩⲓ ⲡⲓ⳿ⲭⲣⲟ.
2 அவர் அநேக காரியங்களை உவமைகளாக அவர்களுக்குப் போதித்தார்; போதிக்கிறபொழுது அவர்களுக்குச் சொன்னது என்னவென்றால்:
ⲃ̅ⲟⲩⲟϩ ⲛⲁϥϯ⳿ⲥⲃⲱ ⲛⲱⲟⲩ ⳿ⲛϩⲁⲛⲙⲏϣ ϧⲉⲛ ϩⲁⲛⲡⲁⲣⲁⲃⲟⲗⲏ ⲟⲩⲟϩ ⲛⲁϥϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ⲛⲱⲟⲩ ϧⲉⲛ ⲧⲉϥ⳿ⲥⲃⲱ.
3 கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதை விதைக்கப் புறப்பட்டான்.
ⲅ̅ϫⲉ ⲥⲱⲧⲉⲙ ϩⲏⲡⲡⲉ ⲁϥ⳿ⲓ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲛϫⲉ ⲡⲓⲣⲉϥⲥⲓϯ ⳿ⲉⲥⲓϯ.
4 அவன் விதைக்கும்போது, சில விதைகள் வழியருகே விழுந்தன; வானத்துப் பறவைகள் வந்து அந்த விதைகளைத் தின்றுபோட்டது.
ⲇ̅ⲟⲩⲟϩ ⲁⲥϣⲱⲡⲓ ϧⲉⲛ ⳿ⲡϫⲓⲛ⳿ⲑⲣⲉϥⲥⲓϯ ⲟⲩⲁⲓ ⲙⲉⲛ ⲁϥϩⲉⲓ ⳿ⲉ⳿ⲥⲕⲉⲛ ⲡⲓⲙⲱⲓⲧ ⲟⲩⲟϩ ⲁⲩ⳿ⲓ ⳿ⲛϫⲉ ⲛⲓϩⲁⲗⲁϯ ⲁⲩⲟⲩⲟⲙϥ.
5 சில விதைகள் அதிக மண் இல்லாத கற்பாறை நிலத்தில் விழுந்தன; அதற்கு ஆழமான மண் இல்லாததினாலே சீக்கிரத்தில் முளைத்தது;
ⲉ̅ⲟⲩⲟϩ ⲕⲉⲟⲩⲁⲓ ⲁϥϩⲉⲓ ⳿ⲉϫⲉⲛ ⲡⲓⲙⲁ⳿ⲙⲡⲉⲧⲣⲁ ⲡⲓⲙⲁ ⳿ⲉⲧⲉ ⳿ⲙⲙⲟⲛ ⲟⲩⲙⲏϣ ⳿ⲛⲕⲁϩⲓ ⳿ⲙⲙⲟϥ ⲟⲩⲟϩ ⲥⲁⲧⲟⲧϥ ⲁϥⲣⲱⲧ ⲉⲑⲃⲉ ϫⲉ ⳿ⲙⲙⲟⲛⲧⲉϥ ϣⲱⲕ ⳿ⲛⲕⲁϩⲓ.
6 வெயில் ஏறினபோதோ, கருகிப்போய், வேர் இல்லாததினால் உலர்ந்துபோனது.
ⲋ̅ⲟⲩⲟϩ ϩⲟⲧⲉ ⳿ⲉⲧⲁϥϣⲁⲓ ⳿ⲛϫⲉ ⳿ⲫⲣⲏ ⲁϥⲉⲣⲕⲁⲩⲙⲁ ⲟⲩⲟϩ ⲉⲑⲃⲉ ϫⲉ ⳿ⲙⲙⲟⲛⲧⲉϥ ⲛⲟⲩⲛⲓ ⲁϥϣⲱⲟⲩ⳿ⲓ.
7 சில விதைகள் முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து, விதை பலன் கொடுக்காதபடி, அதை நெருக்கிப்போட்டது.
ⲍ̅ⲟⲩⲟϩ ⲕⲉⲟⲩⲁⲓ ⲁϥϩⲉⲓ ⳿ⲉϫⲉⲛ ⲛⲓⲥⲟⲩⲣⲓ ⲟⲩⲟϩ ⳿ⲉⲧⲁⲩ⳿ⲓ ⳿ⲉ⳿ϩⲣⲏⲓ ⳿ⲛϫⲉ ⲛⲓⲥⲟⲩⲣⲓ ⲁⲩⲟϫϩϥ ⲟⲩⲟϩ ⳿ⲙⲡⲉϥϯⲟⲩⲧⲁϩ.
8 சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்து, உயர்ந்து வளருகிற பயிராகி, ஒன்று முப்பதுமடங்காகவும், ஒன்று அறுபதுமடங்காகவும், ஒன்று நூறுமடங்காகவும் பலன் தந்தது.
ⲏ̅ⲟⲩⲟϩ ϩⲁⲛⲕⲉ ⲟⲩⲟⲛ ⲁⲩϩⲉⲓ ⳿ⲉϫⲉⲛ ⲟⲩⲕⲁϩⲓ ⲉⲑⲛⲁⲛⲉϥ ⲟⲩⲟϩ ⲁⲩϯ ⲟⲩⲧⲁϩ ⲉϥⲛⲏⲟⲩ ⳿ⲉ⳿ϩⲣⲏⲓ ⲁϥⲉⲣⲉⲩⲑⲉⲛⲓⲛ ⲟⲩⲟϩ ⲟⲩⲁⲓ ⲁϥⲉⲛ ⲗ̅ ⲕⲉⲟⲩⲁⲓ ⲝ̅ ⲕⲉⲟⲩⲁⲓ ⲣ̅.
9 கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கட்டும் என்று அவர்களுக்குச் சொன்னார்.
ⲑ̅ⲟⲩⲟϩ ⲛⲁϥϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ ⲫⲏ⳿ⲉⲧⲉ ⲟⲩⲟⲛ ⲙⲁϣϫ ⳿ⲙⲙⲟϥ ⳿ⲉⲥⲱⲧⲉⲙ ⲙⲁⲣⲉϥⲥⲱⲧⲉⲙ.
10 ௧0 அவர் தனிமையாக இருக்கிறபோது, பன்னிரண்டுபேரும், அவருக்கு நெருக்கமாக இருந்தவர்களும் இந்த உவமையைக்குறித்து அவரிடம் கேட்டார்கள்.
ⲓ̅ⲟⲩⲟϩ ⳿ⲉⲧⲁϥϣⲱⲡⲓ ⳿ⲙⲙⲁⲩⲁⲧϥ ⲛⲁⲩϯϩⲟ ⳿ⲉⲣⲟϥ ⳿ⲛϫⲉ ⲛⲏⲉⲧⲕⲱϯ ⳿ⲉⲣⲟϥ ⲛⲉⲙ ⲡⲓ ⲓ̅ⲃ̅ ⲉⲑⲃⲉ ⲛⲓⲡⲁⲣⲁⲃⲟⲗⲏ.
11 ௧௧ அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தைத் தெரிந்துகொள்ளும்படி உங்களுக்கு அருளப்பட்டது; வெளியே இருக்கிறவர்களுக்கோ இவைகள் எல்லாம் உவமைகளாகச் சொல்லப்படுகிறது.
ⲓ̅ⲁ̅ⲟⲩⲟϩ ⲡⲉϥϫⲁϥ ⲛⲱⲟⲩ ϫⲉ ⳿ⲛⲑⲱⲧⲉⲛ ⳿ⲉⲧⲉ ⲥⲧⲟⲓ ⲛⲱⲧⲉⲛ ⳿ⲉ⳿ⲉⲙⲓ ⳿ⲛⲛⲓⲙⲩⲥⲧⲏⲣⲓⲟⲛ ⳿ⲛⲧⲉ ϯⲙⲉⲧⲟⲩⲣⲟ ⳿ⲛⲧⲉ Ⲫϯ ⲛⲏⲇⲉ ⳿ⲛⲑⲱⲟⲩ ⲉⲧⲥⲁⲃⲟⲗ ϣⲁⲣⲉ ⳿ⲡⲧⲏⲣϥ ϣⲱⲡⲓ ⲛⲱⲟⲩ ϧⲉⲛ ϩⲁⲛⲡⲁⲣⲁⲃⲟⲗⲏ.
12 ௧௨ “அவர்கள் குணமாகாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது” என்றார்.
ⲓ̅ⲃ̅ϩⲓⲛⲁ ⲉⲩⲛⲁⲩ ⳿ⲛⲧⲟⲩⲛⲁⲩ ⲟⲩⲟϩ ⳿ⲛⲧⲟⲩ⳿ϣⲧⲉⲙⲛⲁⲩ ⲟⲩⲟϩ ⲉⲩⲥⲱⲧⲉⲙ ⳿ⲛⲧⲟⲩⲥⲱⲧⲉⲙ ⲟⲩⲟϩ ⳿ⲛⲧⲟⲩ⳿ϣⲧⲉⲙⲕⲁϯ ⲙⲏ ⲡⲟⲧⲉ ⳿ⲛⲧⲟⲩⲕⲟⲧⲟⲩ ⲟⲩⲟϩ ⳿ⲛⲧⲟⲩⲭⲱ ⲛⲱⲟⲩ ⳿ⲉⲃⲟⲗ.
13 ௧௩ பின்பு அவர் அவர்களைப் பார்த்து: “இந்த உவமையை நீங்கள் புரிந்துகொள்ளவில்லையா? புரியாவிட்டால் மற்ற உவமைகளையெல்லாம் எப்படிப் புரிந்துகொள்வீர்கள்?
ⲓ̅ⲅ̅ⲟⲩⲟϩ ⲡⲉϫⲁϥ ⲛⲱⲟⲩ ϫⲉ ⲧⲉⲧⲉⲛ⳿ⲉⲙⲓ ⲁⲛ ⳿ⲉⲧⲁⲓⲡⲁⲣⲁⲃⲟⲗⲏ ⲟⲩⲟϩ ⲡⲱⲥ ⲛⲓⲕⲉⲡⲁⲣⲁⲃⲟⲗⲏ ⲧⲏⲣⲟⲩ ⲧⲉⲧⲉⲛⲛⲁⲥⲟⲩ⳿ⲱⲛⲟⲩ.
14 ௧௪ விதைக்கிறவன் வசனத்தை விதைக்கிறான்.
ⲓ̅ⲇ̅ⲫⲏⲉⲧⲥⲓϯ ⲁϥⲥⲓϯ ⳿ⲙⲡⲓⲥⲁϫⲓ.
15 ௧௫ வசனத்தைக் கேட்டவுடனே சாத்தான் வந்து, அவர்கள் இருதயங்களில் விதைக்கப்பட்ட வசனத்தை எடுத்துப்போடுகிறான்; இவர்களே வழியருகே விதைக்கப்பட்டவர்கள்.
ⲓ̅ⲉ̅ⲛⲁⲓ ⲇⲉ ⲛⲉ ⲛⲏⲉⲧϩⲓ ⳿ⲉ⳿ⲥⲕⲉⲛ ⲡⲓⲙⲱⲓⲧ ⲡⲓⲙⲁ ⳿ⲉⲧⲁⲩⲥⲓϯ ⳿ⲙⲡⲓⲥⲁϫⲓ ⳿ⲙⲙⲟϥ ⲟⲩⲟϩ ⳿ⲉϣⲱⲡ ⳿ⲛⲧⲟⲩⲥⲱⲧⲉⲙ ⲥⲁⲧⲟⲧϥ ⲇⲉ ϣⲁϥ⳿ⲓ ⳿ⲛϫⲉ ⳿ⲡⲥⲁⲧⲁⲛⲁⲥ ⲟⲩⲟϩ ⳿ⲛⲧⲉϥ⳿ⲱⲗⲓ ⳿ⲙⲡⲓⲥⲁϫⲓ ⳿ⲉⲧⲁⲩⲥⲁⲧϥ ⳿ⲛϧⲣⲏⲓ ϧⲉⲛ ⲡⲟⲩϩⲏⲧ.
16 ௧௬ அப்படியே, வசனத்தைக் கேட்டவுடனே அதைச் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டும்,
ⲓ̅ⲋ̅ⲟⲩⲟϩ ⲛⲁⲓ ⲟⲛ ⳿ⲙⲡⲁⲓⲣⲏϯ ⲡⲉ ⲛⲏ⳿ⲉⲧⲁⲩⲥⲁⲧⲟⲩ ϩⲓϫⲉⲛ ⲛⲓⲙⲁ⳿ⲙⲡⲉⲧⲣⲁ ⲛⲏ⳿ⲉⲧⲉ ⲁⲩϣⲁⲛⲥⲱⲧⲉⲙ ⳿ⲉⲡⲓⲥⲁϫⲓ ϣⲁⲩϭⲓⲧϥ ϧⲉⲛ ⲟⲩⲣⲁϣⲓ.
17 ௧௭ தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியால், கொஞ்சக்காலம்மட்டும் நிலைத்திருக்கிறார்கள், வசனத்தினால் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைகிறார்கள்; இவர்களே கற்பாறை நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள்.
ⲓ̅ⲍ̅ⲟⲩⲟϩ ⳿ⲙⲙⲟⲛ ⲛⲟⲩⲛⲓ ⳿ⲛϧⲏⲧⲟⲩ ⲁⲗⲗⲁ ϩⲁⲛ⳿ⲡⲣⲟⲥ ⲟⲩⲥⲏⲟⲩ ⲛⲉ ⳿ⲓⲧⲁ ⳿ⲁⲣⲉϣⲁⲛ ⲟⲩϩⲟϫϩⲉϫ ϣⲱⲡⲓ ⲓⲉ ⲟⲩⲇⲓⲱⲅⲙⲟⲥ ⲉⲑⲃⲉ ⲡⲓⲥⲁϫⲓ ⲥⲁⲧⲟⲧⲟⲩ ϣⲁⲩⲉⲣ⳿ⲥⲕⲁⲛⲇⲁⲗⲓⲍⲉⲥⲑⲉ.
18 ௧௮ வசனத்தைக் கேட்டும், உலகக் கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப்பற்றி உண்டாகிற ஆசைகளும் உள்ளே புகுந்து, வசனத்தை நெருக்கிப்போட, அதினால் பலன் இல்லாமல் போகிறார்கள். (aiōn g165)
ⲓ̅ⲏ̅ⲟⲩⲟϩ ϩⲁⲛⲕⲉⲟⲩⲟⲛ ⲛⲉ ⲛⲏ⳿ⲉⲧⲁⲩⲥⲁⲧⲟⲩ ϩⲓϫⲉⲛ ⲛⲓⲥⲟⲩⲣⲓ ⲛⲁⲓ ⲛⲉ ⲛⲏ⳿ⲉⲧⲁⲩⲥⲱⲧⲉⲙ ⳿ⲉⲡⲓⲥⲁϫⲓ.
19 ௧௯ இவர்களே முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள்.
ⲓ̅ⲑ̅ⲟⲩⲟϩ ⲛⲓⲣⲱⲟⲩϣ ⳿ⲛⲧⲉ ⲡⲁⲓ⳿⳿ⲉⲛⲉϩ ⲛⲉⲙ ϯ⳿ⲁⲡⲁⲧⲏ ⳿ⲛⲧⲉ ϯⲙⲉⲧⲣⲁⲙⲁ⳿ⲟ ⲛⲉⲙ ⲛⲓ⳿ⲉⲡⲓⲑⲩⲙⲓ⳿ⲁ ⳿ⲛⲧⲉ ⲛⲓⲕⲉⲥⲱϫⲡ ⲉⲩⲙⲟϣⲓ ⳿ⲛϧⲏⲧⲟⲩ ⲥⲉⲱϫϩ ⳿ⲙⲡⲓⲥⲁϫⲓ ⲟⲩⲟϩ ϣⲁϥⲉⲣⲁⲧⲟⲩⲧⲁϩ. (aiōn g165)
20 ௨0 வசனத்தைக்கேட்டு, ஏற்றுக்கொண்டு, ஒன்று முப்பதுமடங்கும், ஒன்று அறுபதுமடங்கும், ஒன்று நூறுமடங்காகவும் பலன்கொடுக்கிறார்கள்; இவர்களே நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள்” என்றார்.
ⲕ̅ⲟⲩⲟϩ ⲛⲏ ϩⲱⲟⲩ ⳿ⲉⲧⲁⲩⲥⲁⲧⲟⲩ ⳿ⲉϫⲉⲛ ⲡⲓⲕⲁϩⲓ ⲉⲑⲛⲁⲛⲉϥ ⲛⲏ⳿ⲉⲧⲉ ⲁⲩϣⲁⲛⲥⲱⲧⲉⲙ ⳿ⲉⲡⲓⲥⲁϫⲓ ϣⲁⲩϣⲟⲡϥ ⳿ⲉⲣⲱⲟⲩ ⲟⲩⲟϩ ϣⲁⲩϯ ⲟⲩⲧⲁϩ ⲟⲩⲁⲓ ⳿ⲛⲗ̅ ⲟⲩⲁⲓ ⳿ⲛⲝ̅ ⲟⲩⲁⲓ ⳿ⲛⲣ̅.
21 ௨௧ பின்னும் அவர் அவர்களைப் பார்த்து: விளக்கு விளக்குத்தண்டின்மேல் வைக்கிறதற்குத்தானேதவிர, பாத்திரத்தின் கீழோ, கட்டிலின் கீழோ, வைக்கிறதற்குக் கொண்டுவருவார்களா?
ⲕ̅ⲁ̅ⲟⲩⲟϩ ⲛⲁϥϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ⲛⲱⲟⲩ ϫⲉ ⲙⲏⲧⲓ ϣⲁⲩϭⲉⲣⲉ ⲟⲩϧⲏⲃⲥ ϩⲓⲛⲁ ⳿ⲛⲥⲉⲭⲁϥ ϧⲁ ⲡⲓⲙⲉⲛⲧ ⲓⲉ ϧⲁ ⲡⲓϭⲗⲟϫ ⲟⲩⲭⲓ ϩⲓⲛⲁ ⳿ⲛⲥⲉⲭⲁϥ ϩⲓϫⲉⲛ ϯⲗⲩⲭⲛⲓ⳿ⲁ.
22 ௨௨ வெளியரங்கமாகாத அந்தரங்கமும் இல்லை, வெளிக்குவராத மறைபொருளும் இல்லை.
ⲕ̅ⲃ̅ⲟⲩ ⲅⲁⲣ ⳿ⲙⲙⲟⲛ ⲡⲉⲧϩⲏⲡ ⲁϥ⳿ϣⲧⲉⲙⲟⲩⲱⲛϩ ⳿ⲉⲃⲟⲗ ⲟⲩⲇⲉ ⳿ⲙⲡⲁϥϣⲱⲡⲓ ⲉϥϩⲏⲡ ⳿ⲉⲃⲏⲗ ϫⲉ ⳿ⲛⲧⲉϥ⳿ⲓ ⲉϥⲟⲩⲱⲛϩ.
23 ௨௩ கேட்கிறதற்கு ஒருவன் காதுள்ளவனாக இருந்தால் அவன் கேட்கட்டும் என்றார்.
ⲕ̅ⲅ̅ⲫⲏ⳿ⲉⲧⲉ ⲟⲩⲟⲛ ⲙⲁϣϫ ⳿ⲙⲙⲟϥ ⳿ⲉⲥⲱⲧⲉⲙ ⲙⲁⲣⲉϥⲥⲱⲧⲉⲙ.
24 ௨௪ பின்னும் அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் கேட்கிறதைக் கவனியுங்கள். எந்த அளவினால் அளக்கிறீர்களோ, அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்; கேட்கிற உங்களுக்கு அதிகம் கொடுக்கப்படும்.
ⲕ̅ⲇ̅ⲟⲩⲟϩ ⲛⲁϥϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ⲛⲱⲟⲩ ⲟⲛ ϫⲉ ⳿ⲁⲛⲁⲩ ϫⲉ ⲟⲩ ⲡⲉ ⲧⲉⲧⲉⲛⲥⲱⲧⲉⲙ ⳿ⲉⲣⲟϥ ϧⲉⲛ ⲡⲓϣⲓ ⳿ⲉⲧⲉⲧⲉⲛⲛⲁϣⲓ ⳿ⲙⲙⲟϥ ⲉⲩⲛⲁϣⲓ ⲛⲱⲧⲉⲛ ⳿ⲙⲙⲟϥ ⲟⲩⲟϩ ⳿ⲛⲧⲟⲩⲧⲟⲩϩⲟ ⲛⲱⲧⲉⲛ ϧⲁ ⲛⲏⲉⲧⲥⲱⲧⲉⲙ.
25 ௨௫ உள்ளவன் எவனோ, அவனுக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவன் எவனோ, அவனிடம் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்றார்.
ⲕ̅ⲉ̅ⲫⲏ ⲅⲁⲣ ⳿ⲉⲧⲉ ⲟⲩⲟⲛⲧⲁϥ ⲉⲩ⳿ⲉϯ ⲛⲁϥ ⲟⲩⲟϩ ⲫⲏ⳿ⲉⲧⲉ ⳿ⲙⲙⲟⲛⲧⲁϥ ⲟⲩⲟϩ ⲫⲏ⳿ⲉⲧⲉ ⳿ⲛⲧⲟⲧϥ ϣⲁⲩⲟⲗϥ ⳿ⲛⲧⲟⲧϥ.
26 ௨௬ பின்னும் அவர் அவர்களைப் பார்த்து: தேவனுடைய ராஜ்யமானது, ஒரு மனிதன் நிலத்தில் விதையை விதைத்து;
ⲕ̅ⲋ̅ⲟⲩⲟϩ ⲛⲁϥϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ ⲡⲁⲓⲣⲏϯ ⲡⲉ ϯⲙⲉⲧⲟⲩⲣⲟ ⳿ⲛⲧⲉ Ⲫϯ ⳿ⲙ⳿ⲫⲣⲏϯ ⳿ⲛⲟⲩⲣⲱⲙⲓ ⲉϥϩⲓⲟⲩ⳿ⲓ ⳿ⲙⲡⲉϥ⳿ϫⲣⲟϫ ϩⲓϫⲉⲛ ⲡⲓⲕⲁϩⲓ.
27 ௨௭ இரவில் தூங்கி, பகலில் விழிக்க, அவனுக்குத் தெரியாமலேயே, விதை முளைத்துப் பயிராவதற்கு ஒப்பாக இருக்கிறது.
ⲕ̅ⲍ̅ⲟⲩⲟϩ ⳿ⲛⲧⲉϥⲉⲛⲕⲟⲧ ⲟⲩⲟϩ ⳿ⲛⲧⲉϥⲧⲱⲛϥ ⳿ⲙⲡⲓ⳿ⲉϫⲱⲣϩ ⲛⲉⲙ ⲡⲓ⳿ⲉϩⲟⲟⲩ ⲟⲩⲟϩ ϣⲁⲣⲉ ⲡⲓ⳿ϫⲣⲟϫ ⲑⲏⲛⲓ ⲟⲩⲟϩ ϣⲁϥϣⲓ⳿ⲏ ϩⲱⲥ ⳿ⲛ⳿ϥ⳿ⲉⲙⲓ ⲁⲛ ⳿ⲛⲑⲟϥ.
28 ௨௮ எப்படியென்றால், நிலமானது முதலில் முளையையும், பின்பு கதிரையும், கதிரிலே நிறைந்த தானியத்தையும் பலனாகத் தானாகக் கொடுக்கும்.
ⲕ̅ⲏ̅ϣⲁⲣⲉ ⲡⲓⲕⲁϩⲓ ⳿ⲙⲙⲁⲩⲁⲧϥ ϯⲟⲩⲧⲁϩ ⳿ⲛϣⲟⲣⲡ ⳿ⲛⲟⲩⲥⲓⲙ ⳿ⲓⲧⲁ ⲟⲩϧⲉⲙⲥ ⳿ⲓⲧⲁ ϣⲁϥⲙⲟϩ ⳿ⲛϫⲉ ⲫⲏⲉⲧ ϧⲉⲛ ⲡⲓϧⲉⲙⲥ.
29 ௨௯ பயிர் விளைந்து அறுவடைக்காலம் வந்தவுடனே, அறுக்கிறதற்கு ஆட்களை அனுப்புகிறான் என்றார்.
ⲕ̅ⲑ̅⳿ⲉϣⲱⲡ ⲇⲉ ⲁϥϣⲁⲛⲫⲟϩ ⳿ⲛϫⲉ ⲡⲓⲟⲩⲧⲁϩ ⲥⲁⲧⲟⲧϥ ϣⲁϥⲟⲩⲱⲣⲡ ⳿ⲙⲡⲓⲟⲥϧ ϫⲉ ⲟⲩⲏⲓ ⲅⲁⲣ ⲁϥ⳿ⲓ ⳿ⲛϫⲉ ⲡⲓⲱⲥϧ.
30 ௩0 பின்னும் அவர் அவர்களைப் பார்த்து: தேவனுடைய ராஜ்யத்தை எதற்கு ஒப்பிடுவோம்? அல்லது எந்த உவமையினாலே அதை விளக்கிச் சொல்லமுடியும்?
ⲗ̅ⲟⲩⲟϩ ⲛⲁϥϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ ⲁⲛⲛⲁⲧⲉⲛⲑⲱⲛ ϯⲙⲉⲧⲟⲩⲣⲟ ⳿ⲛⲧⲉ Ⲫϯ ⳿ⲉⲟⲩ ⲓⲉ ⲁⲛⲛⲁⲭⲁⲥ ϧⲉⲛ ⲁϣ ⳿ⲙⲡⲁⲣⲁⲃⲟⲗⲏ.
31 ௩௧ அது ஒரு கடுகுவிதைக்கு ஒப்பாக இருக்கிறது; அது பூமியில் விதைக்கப்படும்போது பூமியில் உள்ள எல்லாவிதைகளையும்விட மிக சிறியதாக இருக்கிறது;
ⲗ̅ⲁ̅ⲁⲥ ⳿ⲙ⳿ⲫⲣⲏϯ ⳿ⲛⲟⲩⲛⲁⲫⲣⲓ ⳿ⲛϣⲉⲗⲧⲁⲙ ⲑⲏ⳿ⲉⲧⲉ ⲁⲩϣⲁⲛⲥⲁⲧⲥ ϩⲓϫⲉⲛ ⲡⲓⲕⲁϩⲓ ⳿ⲉⲟⲩⲕⲟⲩϫⲓ ⲧⲉ ⳿ⲉⲛⲓ⳿ϫⲣⲟϫ ⲧⲏⲣⲟⲩ ⲛⲏⲉⲧ ϩⲓϫⲉⲛ ⲡⲓⲕⲁϩⲓ.
32 ௩௨ விதைக்கப்பட்டப் பின்போ, அது வளர்ந்து, எல்லாப் பூண்டுகளையும்விட மிக பெரிதாக வளர்ந்து, ஆகாயத்துப் பறவைகள் அதின் நிழலின்கீழ் வந்து கூடுகளைக்கட்டத்தக்க பெரிய கிளைகளை விடும் என்றார்.
ⲗ̅ⲃ̅ⲟⲩⲟϩ ⳿ⲉϣⲱⲡ ⳿ⲛⲧⲟⲩⲥⲁⲧⲥ ϣⲁⲥ⳿ⲓ ⳿ⲉ⳿ϩⲣⲏⲓ ⲟⲩⲟϩ ϣⲁⲥϣⲱⲡⲓ ⲉⲥⲟⲓ ⳿ⲛⲛⲓϣϯ ⳿ⲉⲛⲓⲟⲩ⳿ⲟϯ ⲧⲏⲣⲟⲩ ⲟⲩⲟϩ ϣⲁⲥ⳿⳿ⲓⲣⲓ ⳿ⲛϩⲁⲛⲛⲓϣϯ ⳿ⲛϫⲁⲗ ϩⲱⲥⲧⲉ ⳿ⲛⲧⲟⲩϫⲉⲙϫⲟⲙ ⳿ⲛϫⲉ ⲛⲓϩⲁⲗⲁϯ ⳿ⲛⲧⲉ ⳿ⲧⲫⲉ ⳿ⲉⲟⲩⲱϩ ϧⲁ ⲧⲉⲥϧⲏⲓⲃⲓ.
33 ௩௩ அவர்கள் கேட்டுப் புரிந்துகொள்வதற்கு ஏற்றபடி, அவர் இப்படிப்பட்ட அநேக உவமைகளினாலே அவர்களுக்கு வசனத்தைச் சொன்னார்.
ⲗ̅ⲅ̅ⲟⲩⲟϩ ϧⲉⲛ ⲟⲩⲙⲏϣ ⳿ⲙⲡⲁⲣⲁⲃⲟⲗⲏ ⲡⲁⲓⲣⲏϯ ⲛⲁϥⲥⲁϫⲓ ⲛⲉⲙⲱⲟⲩ ⲡⲉ ⳿ⲙⲡⲓⲥⲁϫⲓ ⲕⲁⲧⲁ⳿ⲫⲣⲏϯ ⳿ⲉⲛⲁⲩ⳿ϣϫⲉⲙϫⲟⲙ ⳿ⲛⲥⲱⲧⲉⲙ.
34 ௩௪ உவமைகள் இல்லாமல் அவர்களுக்கு அவர் ஒன்றும் சொல்லவில்லை; அவர் தம்முடைய சீடர்களோடு தனிமையாக இருக்கும்போது, அவர்களுக்கு எல்லாவற்றையும் விளக்கிச்சொன்னார்.
ⲗ̅ⲇ̅ⲟⲩⲟϩ ⲭⲱⲣⲓⲥ ⲡⲁⲣⲁⲃⲟⲗⲏ ⲛⲁϥⲥⲁϫⲓ ⲛⲉⲙⲱⲟⲩ ⲁⲛ ⲡⲉ ⲥⲁ⳿ⲡⲥⲁ ⲇⲉ ⲛⲁϥⲃⲱⲗ ⳿ⲙ⳿ⲡⲧⲏⲣϥ ⳿⳿ⲉⲛⲉϥⲙⲁⲑⲏⲧⲏⲥ.
35 ௩௫ அன்று மாலைநேரத்தில், அவர் அவர்களைப் பார்த்து: அக்கரைக்குப் போகலாம் வாருங்கள் என்றார்.
ⲗ̅ⲉ̅ⲟⲩⲟϩ ⲡⲉϫⲁϥ ⲛⲱⲟⲩ ϧⲉⲛ ⲡⲓ⳿ⲉϩⲟⲟⲩ ⳿ⲉⲧⲉ⳿ⲙⲙⲁⲩ ⳿ⲉⲧⲁ ⲣⲟⲩϩⲓ ϣⲱⲡⲓ ϫⲉ ⲙⲁⲣⲉⲛⲥⲓⲛⲓ ⳿ⲉⲙⲏⲣ.
36 ௩௬ அவர்கள் மக்களை அனுப்பிவிட்டு, அவர் படகில் இருந்தபடியே அவரைக்கொண்டுபோனார்கள். வேறு படகுகளும் அவரோடு இருந்தது.
ⲗ̅ⲋ̅ⲟⲩⲟϩ ⳿ⲉⲧⲁⲩⲭⲁ ⲡⲓⲙⲏϣ ⳿ⲛⲥⲱⲟⲩ ⲁⲩⲟⲗϥ ⲛⲉⲙⲱⲟⲩ ϩⲱϥ ϩⲓ ⲡⲓϫⲟⲓ ⲟⲩⲟϩ ⲛⲁⲣⲉ ϩⲁⲛⲕⲉ⳿ⲉϫⲏⲟⲩ ⲛⲉⲙⲁϥ.
37 ௩௭ அப்பொழுது பலத்த சுழல்காற்று உண்டாகி, படகு நிரம்பும் அளவிற்கு, அலைகள் படகின்மேல் மோதியது.
ⲗ̅ⲍ̅ⲟⲩⲟϩ ⳿ⲁ ⲟⲩⲛⲓϣϯ ⳿ⲛⲑⲏⲟⲩ ϣⲱⲡⲓ ⲟⲩⲟϩ ⲛⲓϫⲟⲗ ⲛⲁⲩϩⲓ ⳿ⲙⲙⲱⲟⲩ ⳿ⲉⲡⲓϫⲟⲓ ϩⲱⲥⲧⲉ ϩⲏⲇⲏ ⳿ⲛⲧⲉϥⲙⲟϩ ⳿ⲛϫⲉ ⲡⲓϫⲟⲓ.
38 ௩௮ இயேசு, கப்பலின் பின்பக்கத்தில் தலையணையை வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தார். அவர்கள் அவரை எழுப்பி: போதகரே, நாங்கள் மரித்துப்போவதைப்பற்றி உமக்குக் கவலை இல்லையா? என்றார்கள்.
ⲗ̅ⲏ̅ⲟⲩⲟϩ ⳿ⲛⲑⲟϥ ⲛⲁϥⲉⲛⲕⲟⲧ ϩⲓⲫⲁϩⲟⲩ ϩⲓϫⲉⲛ ⲡⲓ⳿ϣϣⲟⲧ ⲟⲩⲟϩ ⲁⲩⲛⲉϩⲥⲓ ⳿ⲙⲙⲟϥ ⲟⲩⲟϩ ⲡⲉϫⲱⲟⲩ ⲛⲁϥ ϫⲉ ⳿ⲫⲣⲉϥϯ⳿ⲥⲃⲱ ⳿ⲥⲉⲣⲙⲉⲗⲓⲛ ⲛⲁⲕ ⲁⲛ ϫⲉ ⲧⲉⲛⲛⲁⲧⲁⲕⲟ.
39 ௩௯ அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: சீராதே, அமைதியாக இரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதி உண்டானது.
ⲗ̅ⲑ̅ⲟⲩⲟϩ ⳿ⲉⲧⲁϥⲧⲱⲛϥ ⲁϥⲉⲣ⳿ⲉⲡⲓⲧⲓⲙⲁⲛ ⳿ⲙⲡⲓⲑⲏⲟⲩ ⲟⲩⲟϩ ⲡⲉϫⲁϥ ⳿ⲙ⳿ⲫⲓⲟⲙ ϫⲉ ⲭⲁⲣⲱⲕ ⲟⲩⲟϩ ⲑⲱⲙ ⳿ⲛⲣⲱⲕ ⲟⲩⲟϩ ⲁϥⲕⲏⲛ ⳿ⲛϫⲉ ⲡⲓⲑⲏⲟⲩ ⲟⲩⲟϩ ⲁⲥϣⲱⲡⲓ ⳿ⲛϫⲉ ⲟⲩⲛⲓϣϯ ⳿ⲛϫⲁⲙⲏ.
40 ௪0 அவர் அவர்களைப் பார்த்து: ஏன் இப்படிப் பயப்பட்டீர்கள்? ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போனது என்றார்.
ⲙ̅ⲟⲩⲟϩ ⲡⲉϫⲁϥ ⲛⲱⲟⲩ ϫⲉ ⳿ⲁϧⲱⲧⲉⲛ ⲧⲉⲧⲉⲛⲉⲣϩⲟϯ ⳿ⲙⲡⲁⲧⲉ ⲛⲁϩϯ ϣⲱⲡⲓ ϧⲉⲛ ⲑⲏⲛⲟⲩ.
41 ௪௧ அவர்கள் மிகவும் பயந்து: இவர் யாரோ? காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
ⲙ̅ⲁ̅ⲟⲩⲟϩ ⲁⲩⲉⲣϩⲟϯ ϧⲉⲛ ⲟⲩⲛⲓϣϯ ⳿ⲛϩⲟϯ ⲟⲩⲟϩ ⲛⲁⲩϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ⳿ⲛⲛⲟⲩ⳿ⲉⲣⲏⲟⲩ ϫⲉ ⲛⲓⲙ ϩⲁⲣⲁ ⲡⲉ ⲫⲁⲓ ϫⲉ ⲛⲓⲑⲏⲟⲩ ⲛⲉⲙ ⳿ⲫⲓⲟⲙ ⲥⲉⲥⲱⲧⲉⲙ ⲛⲁϥ

< மாற்கு 4 >