< மாற்கு 3 >
1 ௧ இயேசு மறுபடியும் ஜெப ஆலயத்திற்குச் சென்றார். அங்கே சூம்பின கையையுடைய ஒரு மனிதன் இருந்தான்.
彼は再び会堂に入った。すると,片手のなえた人がそこにいた。
2 ௨ அவர் ஓய்வுநாளில் அவனைச் சுகமாக்கினால் அவர்மேல் குற்றஞ்சாட்டலாம் என்று அவரைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
人々は,安息日にその人をいやすかどうか,彼の様子をうかがっていた。彼を訴えるためであった。
3 ௩ அப்பொழுது அவர் சூம்பின கையையுடைய மனிதனைப் பார்த்து: எழுந்து நடுவில் நில் என்று சொல்லி;
彼は片手のなえた人に,「立ちなさい」 と言った。
4 ௪ அவர்களைப் பார்த்து: ஓய்வுநாட்களில் நன்மை செய்வதோ அல்லது தீமை செய்வதோ, ஜீவனைக் காப்பாற்றுவதோ அல்லது அழிப்பதோ, எது நியாயம் என்றார். அதற்கு அவர்கள் மவுனமாக இருந்தார்கள்.
彼らに言った,「安息日に許されているのは,善を行なうことか,悪を行なうことか。命を救うことか,殺すことか」 。しかし彼らは黙っていた。
5 ௫ அவர்களுடைய இருதயத்தின் கடினத்தினால் அவர் விசனப்பட்டு, கோபத்துடன் சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்து, அந்த மனிதனைப் பார்த்து: உன் கையை நீட்டு என்றார்; அவன் நீட்டினான்; அவன் கை மற்றொரு கையைப்போல சுகமானது.
彼は怒りをもって彼らを見回し,彼らの心のかたくなさを悲しみながら,「あなたの手を伸ばしなさい」 とその人に言った。手を伸ばすと,その手はもう一方の手と同じようによくなった。
6 ௬ உடனே பரிசேயர்கள் புறப்பட்டுப்போய், அவரைக் கொலைசெய்யவேண்டும் என்று, அவருக்கு எதிராக ஏரோதியர்களோடு ஆலோசனைபண்ணினார்கள்.
ファリサイ人たちは出て行き,すぐにヘロデ党の者たちと,どのようにして彼を滅ぼそうかと,彼に対する陰謀を企てた。
7 ௭ இயேசு தம்முடைய சீடர்களோடு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு கடலோரத்திற்குப் போனார்.
イエスは弟子たちと共に海に退いた。すると大群衆が彼に従った。すなわち,ガリラヤから,ユダヤから,
8 ௮ கலிலேயாவிலும், யூதேயாவிலும், எருசலேமிலும், இதுமேயாவிலும், யோர்தானுக்கு அக்கரையிலுமிருந்து அநேக மக்கள் வந்து, அவருக்குப் பின்னே சென்றார்கள். அதோடு தீரு சீதோன் பட்டணங்களின் பகுதிகளிலும் இருந்து அநேக மக்கள் அவர் செய்த அற்புதங்களைப்பற்றிக் கேள்விப்பட்டு, அவரிடம் வந்தார்கள்.
エルサレムから,イドゥマヤから,ヨルダンの向こうから,テュロスやシドンの周辺から来た人々であった。大群衆が,彼の行なった大きな事柄を聞いて,彼のもとに来た。
9 ௯ அவர் அநேகரைச் சுகமாக்கினார். நோயாளிகளெல்லோரும் அதை அறிந்து அவரைத் தொடவேண்டும் என்று அவரை நெருங்கிவந்தார்கள்.
彼は弟子たちに,群衆が押し寄せて来ないように,小舟を近くに用意しておくようにと言った。
10 ௧0 மக்கள்கூட்டம் அதிகமாக இருந்தபடியால் அவர்கள் தம்மை நெருக்காமல் இருப்பதற்காக, தமக்கு ஒரு படகை ஆயத்தம் பண்ணவேண்டும் என்று, தம்முடைய சீடர்களுக்குச் சொன்னார்.
というのは,彼が多くの者をいやしたので,病気を持つ人たちが皆,彼に触れようとして押し寄せてきたからである。
11 ௧௧ அசுத்தஆவிகளும் இயேசுவைப் பார்த்தபோது, அவர் முன்பாக விழுந்து: நீர் தேவனுடைய குமாரன் என்று சத்தமிட்டன.
汚れた霊たちは,彼を見るたびに,その前にひれ伏して,「あなたは神の子だ!」と叫んだ。
12 ௧௨ தம்மைப் பிரசித்தம் பண்ணாமல் இருக்க அவைகளுக்கு உறுதியாகக் கட்டளையிட்டார்.
彼は,自分を知らせないようにと,彼らを厳しく戒めた。
13 ௧௩ பின்பு அவர் ஒரு மலையின்மேல் ஏறி, தமக்கு விருப்பமானவர்களைத் தம்மிடம் வரவழைத்தார்; அவர்கள் அவரிடம் வந்தார்கள்.
彼は山に上り,自分の望む者たちを呼び寄せた。すると彼らは彼のもとにやって来た。
14 ௧௪ அப்பொழுது அவர் பன்னிரண்டு நபர்களைத் தெரிந்துகொண்டு, அவர்கள் தம்மோடு இருக்கவும், பிரசங்கம்பண்ணுவதற்காகத் தாம் அவர்களை அனுப்பவும்,
彼は十二人を任命した。それは,彼らが自分と共にいるためであり,また,彼らを遣わして宣教させ,
15 ௧௫ வியாதிகளைக் குணமாக்கிப் பிசாசுகளைத் துரத்துவதற்கு அவர்கள் அதிகாரம் உள்ளவர்களாக இருக்கவும், அவர்களை ஏற்படுத்தினார்.
病気をいやして悪霊たちを追い出す権限を持たせるためであった。すなわち,
16 ௧௬ அவர்கள் யாரென்றால், சீமோன், இவனுக்குப் பேதுரு என்று பெயரிட்டார்.
彼がペトロという名を与えたシモン,
17 ௧௭ செபெதேயுவின் குமாரனாகிய யாக்கோபு, யாக்கோபின் சகோதரனாகிய யோவான், இந்த இவருக்கும் இடிமுழக்க மக்கள் என்று அர்த்தம்கொண்ட பொவனெர்கேஸ் என்கிற பெயரிட்டார்,
ゼベダイの子ヤコブとヤコブの兄弟ヨハネ(彼らにはボアネルゲスという異名を付けた。これは雷の子らという意味である),
18 ௧௮ அந்திரேயா, பிலிப்பு, பர்தொலொமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு, கானானியனாகிய சீமோன்,
アンデレ,フィリポ,バルトロマイ,マタイ,トマス,アルファイオスの子ヤコブ,タダイオス,熱心党のシモン,
19 ௧௯ அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவர்களே.
それに,ユダ・イスカリオト。このユダはまた,彼を売り渡した者でもある。 彼は家に入った。
20 ௨0 பின்பு வீட்டிற்குப் போனார்கள்; அங்கே அநேக மக்கள் மறுபடியும் கூடிவந்ததினால் அவர்கள் சாப்பிடுவதற்கும் நேரம் இல்லாமல்போனது.
群衆が再び集まって来たので,彼らはパンを食べることさえできなかった。
21 ௨௧ அவருடைய குடும்பத்தார் இதைக்கேட்டபோது, அவர் மதிமயங்கியிருக்கிறார் என்று சொல்லி, அவரைப் பிடித்துக்கொள்ளும்படி வந்தார்கள்.
彼の友人たちはこれを聞くと,彼を捕まえにやって来た。というのは,人々が「彼は気が狂っている」と言っていたからである。
22 ௨௨ எருசலேமிலிருந்து வந்த வேதபண்டிதர்கள்: இவன் பெயெல்செபூலை உடையவனாக இருக்கிறான், பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள்.
エルサレムから下って来た律法学者たちは,「彼はベエルゼブルに取りつかれている」とか,「悪霊たちの首領によって悪霊たちを追い出している」などと言っていた。
23 ௨௩ அவர்களை அவர் அழைத்து, உவமைகளாக அவர்களுக்குச் சொன்னது என்னவென்றால்: சாத்தானைச் சாத்தான் துரத்துவது எப்படி?
彼は彼らを呼び寄せ,たとえで彼らに語った,「どうしてサタンがサタンを追い出せるのか。
24 ௨௪ ஒரு ராஜ்யம் தனக்குத்தானே எதிராகப் பிரிந்து இருந்தால், அந்த ராஜ்யம் நிலைத்துநிற்காதே.
もし王国が自らに敵対して分裂するなら,その王国は立ち行けるはずがない。
25 ௨௫ ஒரு வீடு தனக்குத்தானே எதிராகப் பிரிந்து இருந்தால், அந்த வீடு நிலைத்துநிற்காதே.
もし家が自らに敵対して分裂するなら,その家は立ち行けるはずがない。
26 ௨௬ சாத்தான் தனக்குத்தானே எதிராக எழும்பிப் பிரிந்து இருந்தால், அவன் நிலைத்து நிற்கமுடியாமல், அழிந்துபோவானே.
もしサタンが自らに敵対して立ち上がって分裂するなら,彼は立ち行けるはずがなく,終わりを迎えてしまう。
27 ௨௭ பலசாலியை முதலில் கட்டிப்போடாமல், யாரும் பலசாலியுடைய வீட்டிற்குள் புகுந்து, அவன் பொருட்களைக் கொள்ளையடிக்கமுடியாது; கட்டிப்போட்டால்மட்டுமே, அவனுடைய வீட்டைக் கொள்ளையடிக்கமுடியும்.
さらに,まず強い者を縛ってからでなければ,だれも強い者の家に押し入って略奪することはできない。縛ってから,その家を略奪するだろう。
28 ௨௮ உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனிதர்கள் செய்யும் எல்லாப் பாவங்களும், அவர்கள் சொல்லும் எல்லாத் தூஷணமான வார்த்தைகளும், அவர்களுக்கு மன்னிக்கப்படும்;
本当にはっきりとあなた方に告げる。人の子らは,冒とくするとしても,その冒とくを含め,あらゆる罪が許されるだろう。
29 ௨௯ ஆனால் ஒருவன் பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைச் சொல்வானென்றால், அவன் எப்பொழுதும் மன்னிப்பு பெறாமல் நித்திய தண்டனைக்குரியவனாக இருப்பான் என்றார். (aiōn , aiōnios )
だが,だれでも聖霊に対して冒とくする者は決して許しを得ず,永遠の罪の責めを負う」 。 (aiōn , aiōnios )
30 ௩0 இயேசு அசுத்தஆவியை உடையவனாக இருக்கிறான் என்று அவர்கள் சொன்னதினாலே அவர் இப்படிச் சொன்னார்.
―これは,彼らが,「彼は汚れた霊に取りつかれている」と言っていたためである。
31 ௩௧ அப்பொழுது அவருடைய சகோதரர்களும் தாயாரும் வந்து, வெளியே நின்று, அவரை அழைக்கும்படி அவரிடத்திற்கு ஆள் அனுப்பினார்கள்.
彼の母と兄弟たちがやって来た。そして外に立ち,人を遣わして彼を呼ばせた。
32 ௩௨ அவரைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்த மக்கள் அவரைப் பார்த்து: இதோ, உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரர்களும் வெளியே நின்று உம்மைத் தேடுகிறார்கள் என்றார்கள்.
群衆が彼の周りに座っていて,彼に告げた,「ご覧なさい,あなたのお母さんと兄弟たちと姉妹たちが外であなたを探しています」。
33 ௩௩ அவர்களுக்கு அவர் மறுமொழியாக: என் தாயார் யார்? என் சகோதரர்கள் யார்? என்று சொல்லி;
彼は彼らに答えた,「わたしの母,またわたしの兄弟たちとはだれか」。
34 ௩௪ தம்மைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்தவர்களைப் பார்த்து: இதோ, என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே!
自分の周りに座っている人々を見回して言った,「見よ,わたしの母とわたしの兄弟たちだ!
35 ௩௫ தேவனுடைய விருப்பத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும், எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாக இருக்கிறான் என்றார்.
だれでも神のご意志を行なう者,その者がわたしの兄弟,また姉妹,また母なのだ」 。