< மாற்கு 15 >

1 அதிகாலையிலே, பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் வேதபண்டிதர்களும் ஆலோசனைச் சங்கத்தினர்கள் அனைவரும் கூடி ஆலோசனைபண்ணி, காவலர்கள் இயேசுவின் கரங்களைக் கட்டிக் கொண்டுபோய், பிலாத்துவிடம் ஒப்புக்கொடுத்தார்கள்.
ⲁ̅ϩⲧⲟⲟⲩⲉ ⲇⲉ ⲛ̅ⲧⲉⲣⲉϥϣⲱⲡⲉ ⲁⲩϫⲓϣⲟϫⲛⲉ ⲛ̅ϭⲓⲛⲁⲣⲭⲓⲉⲣⲉⲩⲥ ⲙⲛ̅ⲛⲉⲡⲣⲉⲥⲃⲩⲧⲉⲣⲟⲥ ⲙⲛ̅ⲛⲉⲅⲣⲁⲙⲙⲁⲧⲉⲩⲥ ⲙⲛ̅ⲡⲥⲩⲛϩⲉⲇⲣⲓⲟⲛ ⲧⲏⲣϥ̅ ⲁⲩⲱ ⲁⲩⲥⲉⲛϩ̅ⲓ̅ⲥ̅ ⲁⲩϫⲓⲧϥ̅ ⲁⲩⲧⲁⲁϥ ⲉⲧⲟⲟⲧϥ̅ ⲙ̅ⲡⲉⲓⲗⲁⲧⲟⲥ.
2 பிலாத்து அவரைப் பார்த்து: நீ யூதர்களுடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு அவர்: நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.
ⲃ̅ⲁⲩⲱ ⲁⲡⲉⲓⲗⲁⲧⲟⲥ ϫⲛⲟⲩϥ ϫⲉ ⲛ̅ⲧⲟⲕ ⲡⲉ ⲡⲣ̅ⲣⲟ ⲛ̅ⲓ̈ⲟⲩⲇⲁⲓ̈. ⲛ̅ⲧⲟϥ ⲇⲉ ⲁϥⲟⲩⲱϣⲃ̅ ⲛⲁϥ ⲉϥϫⲱ ⲙ̅ⲙⲟⲥ ϫⲉ ⲛ̅ⲧⲟⲕ ⲡⲉⲧϫⲱ ⲙ̅ⲙⲟⲥ.
3 பிரதான ஆசாரியர்கள் இயேசுவின்மேல் அதிகமாகக் குற்றங்களைச் சுமத்தினார்கள். அவரோ அதற்கு பதில் ஒன்றும் சொல்லவில்லை.
ⲅ̅ⲁⲩⲱ ⲛⲁⲣⲭⲓⲉⲣⲉⲩⲥ ⲁⲩⲕⲁⲧⲏⲅⲟⲣⲓ ⲙ̅ⲙⲟϥ ⲉⲙⲁⲧⲉ.
4 அப்பொழுது பிலாத்து மீண்டும் அவரைப் பார்த்து: இதோ, இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சுமத்துகிறார்களே, அதற்கு நீ பதில் ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்று கேட்டான்.
ⲇ̅ⲡⲉⲓⲗⲁⲧⲟⲥ ⲇⲉ ⲟⲛ ⲁϥϫⲛⲟⲩϥ ϫⲉ ⲛⲅ̅ⲛⲁϣⲁϫⲉ ⲁⲛ ⲗⲁⲁⲩ. ⲁⲛⲁⲩ ϫⲉ ⲥⲉⲣ̅ⲙⲛ̅ⲧⲣⲉ ⲉⲣⲟⲕ ⲟⲩⲏⲣ.
5 இயேசுவோ அப்பொழுதும் பதில் ஒன்றும் சொல்லவில்லை; அதினால் பிலாத்து ஆச்சரியப்பட்டான்.
ⲉ̅ⲓ̅ⲥ̅ ⲇⲉ ⲙ̅ⲡϥ̅ϣⲁϫⲉ ⲗⲁⲁⲩ. ϩⲱⲥⲧⲉ ⲛ̅ⲧⲉⲡⲉⲓⲗⲁⲧⲟⲥ ⲣ̅ϣⲡⲏⲣⲉ.
6 பண்டிகைநாட்களில், காவலில் உள்ள யாரை விடுதலையாக்கவேண்டும் என்று மக்கள் கேட்டுக் கொள்கிறார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலைபண்ணுவது பிலாத்துவிற்கு வழக்கமாக இருந்தது.
ⲋ̅ⲕⲁⲧⲁϣⲁ ⲇⲉ ϣⲁϥⲕⲱ ⲛⲁⲩ ⲉⲃⲟⲗ ⲛ̅ⲟⲩⲁ ⲉϥϭⲏⲡ ⲡⲉⲧⲟⲩⲛⲁⲁⲓⲧⲓ ⲙ̅ⲙⲟϥ.
7 கலவரம்பண்ணி அந்தக் கலவரத்திலே கொலைசெய்து, அதற்காகக் காவலில் அடைக்கப்பட்டவர்களின் கூட்டத்தில் பரபாஸ் என்னப்பட்ட ஒருவன் இருந்தான்.
ⲍ̅ⲛⲉϥϭⲏⲡ ⲇⲉ ⲛ̅ϭⲓⲡⲉⲧⲉϣⲁⲩⲙⲟⲩⲧⲉ ⲉⲣⲟϥ ϫⲉ ⲃⲁⲣⲁⲃⲃⲁ. ⲙⲛⲛⲉⲛⲧⲁⲩⲥⲧⲁⲥⲓⲁⲍⲉ. ⲛⲁⲓ̈ ⲛ̅ⲧⲁⲩⲣ̅ⲫⲟⲛⲟⲥ ϩⲛ̅ⲧⲉⲥⲧⲁⲥⲓⲥ.
8 மக்கள், வழக்கத்தின்படியே தங்களுக்கு ஒருவனை விடுதலையாக்கவேண்டும் என்று சத்தமிட்டுக் கேட்கத்தொடங்கினார்கள்.
ⲏ̅ⲁⲩⲱ ⲡⲙⲏⲏϣⲉ ⲛ̅ⲧⲉⲣⲉϥⲃⲱⲕ ⲉϩⲣⲁⲓ̈ ⲁϥⲁⲣⲭⲓ ⲛ̅ⲁⲓⲧⲓ ⲕⲁⲧⲁⲑⲉ ⲛ̅ϣⲁϥⲁⲁⲥ ⲛⲁⲩ.
9 பொறாமையினாலே பிரதான ஆசாரியர்கள் அவரை ஒப்புக்கொடுத்தார்கள் என்று பிலாத்து அறிந்து.
ⲑ̅ⲡⲉⲓⲗⲁⲧⲟⲥ ⲇⲉ ⲁϥⲟⲩⲱϣⲃ̅ ⲉϥϫⲱ ⲙ̅ⲙⲟⲥ ⲛⲁⲩ ϫⲉ ⲧⲉⲧⲛ̅ⲟⲩⲱϣ ⲉⲧⲣⲁⲕⲱ ⲛⲏⲧⲛ̅ ⲉⲃⲟⲗ ⲙ̅ⲡⲉⲣⲟ ⲛ̅ⲓ̈ⲟⲩⲇⲁⲓ̈
10 ௧0 அவர்களைப் பார்த்து: நான் யூதர்களுடைய ராஜாவை உங்களுக்கு விடுதலை செய்யவேண்டுமா? என்று கேட்டான்.
ⲓ̅ⲛⲉϥⲥⲟⲟⲩⲛ ⲅⲁⲣ ϫⲉ ⲉⲧⲃⲉⲟⲩⲫⲑⲟⲛⲟⲥ ⲛ̅ⲧⲁⲩⲡⲁⲣⲁⲇⲓⲇⲟⲩ ⲙ̅ⲙⲟϥ ⲛ̅ϭⲓⲛⲁⲣⲭⲓⲉⲣⲉⲩⲥ
11 ௧௧ பரபாசைத் தங்களுக்காக விடுதலை செய்யவேண்டும் என்று கேட்கச்சொல்லி, பிரதான ஆசாரியர்கள் மக்களைத் தூண்டிவிட்டார்கள்.
ⲓ̅ⲁ̅ⲛⲁⲣⲭⲓⲉⲣⲉⲩⲥ ⲇⲉ ⲁⲩⲡⲓⲑⲉ ⲙ̅ⲡⲙⲏⲏϣⲉ ϫⲉⲕⲁⲁⲥ ⲉⲩⲉⲁⲓⲧⲓ ⲃ̅ⲃⲁⲣⲁⲃⲃⲁⲥ ⲉⲧⲣⲉϥⲕⲁⲁϥ ⲛⲁⲩ ⲉⲃⲟⲗ.
12 ௧௨ பிலாத்து மீண்டும் அவர்களைப் பார்த்து: அப்படியானால், யூதர்களுடைய ராஜாவென்று நீங்கள் சொல்லுகிறவனை நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான்.
ⲓ̅ⲃ̅ⲡⲉⲓⲗⲁⲧⲟⲥ ⲇⲉ ⲟⲛ ⲁϥⲟⲩⲱϣⲃ̅ ⲉϥϫⲱ ⲙ̅ⲙⲟⲥ ⲛⲁⲩ ϫⲉ ⲁϫⲓⲥ ⲛⲁⲓ̈ ϫⲉ ⲧⲁⲣⲟⲩ ϭⲉ ⲙ̅ⲡⲉⲣⲟ ⲛ̅ⲓ̈ⲟⲩⲇⲁⲓ̈
13 ௧௩ அவனைச் சிலுவையில் அறையும் என்று மீண்டும் சத்தமிட்டுச் சொன்னார்கள்.
ⲓ̅ⲅ̅ⲛ̅ⲧⲟⲟⲩ ⲇⲉ ⲟⲛ ⲁⲩϫⲓϣⲕⲁⲕ ⲉⲃⲟⲗ ϫⲉ ⲥxⲟⲩ ⲙ̅ⲙⲟϥ.
14 ௧௪ அதற்கு பிலாத்து: ஏன்? இவன் என்னக் குற்றம் செய்தான் என்றான். அவர்களோ: அவனைச் சிலுவையில் அறையும் என்று அதிகமாகக் கூக்குரலிட்டுச் சொன்னார்கள்.
ⲓ̅ⲇ̅
15 ௧௫ அப்பொழுது பிலாத்து மக்களைப் பிரியப்படுத்த மனதுள்ளவனாக, பரபாசை அவர்களுக்காக விடுதலைசெய்து, இயேசுவை சாட்டையினால் அடித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான்.
ⲓ̅ⲉ̅ⲡⲉⲓⲗⲁⲧⲟⲥ ⲇⲉ ⲉϥⲟⲩⲱϣ ⲉⲣⲡⲓⲑⲉ ⲙ̅ⲡⲙⲏⲏϣⲉ ⲁϥⲕⲁⲃⲁⲣⲁⲃⲃⲁⲥ ⲛⲁⲩ ⲉⲃⲟⲗ. ⲓ̅ⲥ̅ ⲇⲉ ⲁϥⲫⲣⲁⲅⲉⲗⲗⲟⲩ ⲙ̅ⲙⲟϥ ⲁϥⲡⲁⲣⲁⲇⲓⲇⲟⲩ ⲙ̅ⲙⲟϥ ⲉⲧⲣⲉⲩⲥxⲟⲩ ⲙ̅ⲙⲟϥ.
16 ௧௬ அப்பொழுது போர்வீரர்கள் அவரைத் தேசாதிபதியின் அரண்மனையாகிய மாளிகையில் கொண்டுபோய், அந்த இடத்தில் போர்வீரர்களைக் கூடிவரச்செய்து,
ⲓ̅ⲋ̅ⲙ̅ⲙⲁⲧⲟⲓ̈ ⲇⲉ ⲁⲩϫⲓⲧϥ̅ ⲉϩⲟⲩⲛ ⲉⲧⲁⲩⲗⲏ ⲉⲧⲉⲡⲉⲡⲣⲁⲓⲧⲱⲣⲓⲟⲛ ⲡⲉ ⲁⲩⲱ ⲁⲩⲥⲱⲟⲩϩ ⲉⲣⲟϥ ⲛ̅ⲧⲉⲥⲡⲓⲣⲁ ⲧⲏⲣⲥ̅
17 ௧௭ சிவப்பான மேல் அங்கியை அவருக்கு உடுத்தி, முள்முடியைப் பின்னி அவருக்கு அணிவித்து:
ⲓ̅ⲍ̅ⲁⲩⲱ ⲁⲩϯ ϩⲓⲱⲱϥ ⲛ̅ⲟⲩⲭⲗⲁⲙⲩⲥ ⲛ̅ϫⲏϭⲉ ⲁⲩⲱ ⲁⲩϣⲛ̅ⲧⲟⲩⲕⲗⲟⲙ ⲛ̅ϣⲟⲛⲧⲉ ⲁⲩⲕⲁⲁϥ ϩⲓϫⲱϥ
18 ௧௮ யூதர்களுடைய ராஜாவே, வாழ்க என்று அவரை வாழ்த்தி,
ⲓ̅ⲏ̅ⲁⲩⲱ ⲁⲩⲁⲣⲭⲓ ⲛ̅ⲁⲥⲡⲁⲍⲉ ⲙ̅ⲙⲟϥ. ϫⲉ ⲭⲁⲓⲣⲉ ⲡⲣ̅ⲣⲟ ⲛ̅ⲓ̈ⲟⲩⲇⲁⲓ̈.
19 ௧௯ அவர் தலையில் கோலால் அடித்து, அவர்மேல் துப்பி, முழங்கால்படியிட்டு அவரை வணங்கினார்கள்.
ⲓ̅ⲑ̅ⲁⲩⲱ ⲁⲩϩⲓⲟⲩⲉ ⲙ̅ⲡⲕⲁϣ ⲉϫⲛ̅ⲧⲉϥⲁⲡⲉ ⲁⲩⲛⲉϫⲧⲁϥ ⲉϩⲟⲩⲛ ⲉϩⲣⲁϥ. ⲁⲩⲱ ⲁⲩⲕⲗ̅ϫⲛⲉⲩⲡⲁⲧ ϩⲓϩⲏ ⲙ̅ⲙⲟϥ ⲁⲩⲟⲩⲱϣⲧ̅ ⲛⲁϥ.
20 ௨0 அவரைப் பரிகாசம்பண்ணினபின்பு, சிவப்பான அங்கியைக் கழற்றி, அவருடைய ஆடைகளை அவருக்கு உடுத்தி, அவரை சிலுவையில் அறையும்படி வெளியே கொண்டுபோனார்கள்.
ⲕ̅ⲛ̅ⲧⲉⲣⲟⲩⲱ ⲇⲉ ⲉⲩⲥⲱⲃⲉ ⲙ̅ⲙⲟϥ ⲁⲩⲕⲁⲁϥ ⲕⲁϩⲏⲩ ⲛ̅ⲧⲉⲭⲗⲁⲙⲩⲥ ⲛ̅ϫⲏϭⲉ. ⲁⲩϯⲛⲉϥϩⲟⲓ̈ⲧⲉ ϩⲓⲱⲱϥ ⲁⲩⲱ ⲁⲩⲛ̅ⲧϥ̅ ⲉⲃⲟⲗ ϫⲉ ⲉⲩⲉⲥxⲟⲩ ⲙ̅ⲙⲟϥ.
21 ௨௧ சிரேனே ஊரானும், அலெக்சந்தருக்கும் ரூப்புக்கும் தகப்பனுமாகிய சீமோன் என்னப்பட்ட ஒருவன் நாட்டிலிருந்து அந்த வழியே வரும்போது, இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவனைக் கட்டாயப்படுத்தினார்கள்.
ⲕ̅ⲁ̅ⲁⲩⲕⲉϥⲉⲟⲩⲁ ⲇⲉ ⲉϥⲙⲟⲟϣⲉ ⲉⲡⲉϥⲣⲁⲛ ⲡⲉ ⲥⲓⲙⲱⲛ ⲡⲕⲩⲣⲏⲛⲁⲓⲟⲥ ⲉϥⲛⲏⲩ ⲉϩⲣⲁⲓ̈ ϩⲛ̅ⲧⲥⲱϣⲉ ⲡⲓⲱⲧ ⲛ̅ⲁⲗⲉⲝⲁⲛⲇⲣⲟⲥ ⲙⲛ̅ϩⲣⲟⲩⲫⲟⲥ ϫⲉ ⲉϥⲉϥⲓⲡⲉϥⲥxⲟⲥ
22 ௨௨ கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்திற்கு அவரைக் கொண்டுபோய்,
ⲕ̅ⲃ̅ⲁⲩⲱ ⲁϥⲛ̅ⲧϥ̅ ⲉϩⲣⲁⲓ̈ ⲉⲡⲙⲁ ϫⲉ ⲅⲟⲗⲅⲟⲑⲁ ⲡⲁⲓ̈ ⲉϣⲁⲩϩⲉⲣⲙⲏⲛⲉⲩⲉ ⲙ̅ⲙⲟϥ ϫⲉ ⲡⲧⲟⲡⲟⲥ ⲙ̅ⲡⲉⲕⲣⲁⲛⲓⲟⲛ
23 ௨௩ வெள்ளைப்போளம் கலந்த திராட்சைரசத்தை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
ⲕ̅ⲅ̅ⲁⲩⲱ ⲁⲩϯ ⲛⲁϥ ⲛ̅ⲟⲩⲏⲣⲡ̅ ⲉϥⲙⲟϫⲧ̅ ϩⲓϣⲁⲗ. ⲛ̅ⲧⲟϥ ⲇⲉ ⲙ̅ⲡϥ̅ϫⲓⲧϥ̅
24 ௨௪ அப்பொழுது அவரை சிலுவையில் அறைந்தார்கள். அதற்குப்பின்பு அவருடைய ஆடைகளைப் பங்கு போட்டு, ஒவ்வொருவனும் ஒவ்வொரு பங்கை எடுத்துக்கொள்ளச் சீட்டுப்போட்டார்கள்.
ⲕ̅ⲇ̅ⲁⲩⲥxⲟⲩ ⲇⲉ ⲙ̅ⲙⲟϥ. ⲁⲩⲱ ⲁⲩⲡⲉϣⲛⲉϥϩⲟⲓ̈ⲧⲉ ⲉϩⲣⲁⲩ ⲁⲩⲛⲉϫⲕⲗⲏⲣⲟⲥ ⲉⲣⲟⲟⲩ ϫⲉ ⲛⲉⲣⲉⲡⲟⲩⲁ ⲡⲟⲩⲁ ⲛⲁϥⲓⲟⲩ
25 ௨௫ அவரைக் காலை ஒன்பது மணிக்குச் சிலுவையில் அறைந்தார்கள்.
ⲕ̅ⲉ̅ⲛⲉⲡⲛⲁⲩ ⲇⲉ ⲡⲉ ⲛ̅ϫⲡ̅ϣⲟⲙⲧⲉ ⲁⲩⲱ ⲁⲩⲥxⲟ̅ⲩ ⲙ̅ⲙⲟϥ
26 ௨௬ அவரை சிலுவையில் அறைந்ததின் காரணத்தைக் காண்பிப்பதற்காக, யூதர்களுடைய ராஜா என்று எழுதி, சிலுவையில் இயேசுவின் தலைக்குமேலே கட்டினார்கள்.
ⲕ̅ⲋ̅ⲛⲉⲣⲉⲧⲉϥⲁⲓⲧⲓⲁ ⲇⲉ ⲥⲏϩ ϩⲓϫⲱϥ ϫⲉ ⲡⲉⲣⲟ ⲛ̅ⲓ̈ⲟⲩⲇⲁⲓ̈
27 ௨௭ இயேசுவோடு, அவருடைய வலதுபக்கத்தில் ஒருவனும், இடதுபக்கத்தில் ஒருவனுமாக, இரண்டு திருடர்களைச் சிலுவைகளில் அறைந்தார்கள்.
ⲕ̅ⲍ̅ⲁⲩⲱ ⲁⲩⲥxⲟⲩ ⲛⲙ̅ⲙⲁϥ ⲛ̅ⲥⲟⲟⲛⲉ ⲥⲛⲁⲩ ⲟⲩⲁ ⲛ̅ⲥⲁⲟⲩⲛⲁⲙ ⲁⲩⲱ ⲟⲩⲁ ⲛ̅ⲥⲁϩⲃⲟⲩⲣ ⲙ̅ⲙⲟϥ.
28 ௨௮ அக்கிரமம் செய்கிறவர்களில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்கிற வேதவாக்கியம் அதினால் நிறைவேறியது.
ⲕ̅ⲏ̅
29 ௨௯ அந்தவழியாக நடந்துபோகிறவர்கள் தங்களுடைய தலைகளைத் துலுக்கி: ஆ! ஆ! தேவாலயத்தை இடித்து, மூன்று நாட்களுக்குள்ளே கட்டுகிறவனே.
ⲕ̅ⲑ̅ⲛⲉⲧⲙⲟⲟϣⲉ ⲇⲉ ⲛⲉⲩϫⲓⲟⲩⲁ ⲉⲣⲟϥ ⲉⲩⲕⲓⲙ ⲛ̅ⲛⲉⲩⲁⲡⲏⲩⲉ ⲛ̅ⲥⲱϥ ⲉⲩϫⲱ ⲙ̅ⲙⲟⲥ ϫⲉ ⲟⲩⲁ ⲡⲉⲧⲛⲁⲃⲗ̅ⲡⲉⲣⲡⲉ ⲉⲃⲟⲗ ⲛϥ̅ⲕⲟⲧϥ̅ ⲛ̅ϣⲟⲙⲛⲧ̅ ⲛ̅ϩⲟⲟⲩ
30 ௩0 உன்னை நீயே இரட்சித்துக்கொள்; சிலுவையிலிருந்து இறங்கிவா என்று அவரை அவமதித்தார்கள்.
ⲗ̅ⲁⲙⲟⲩ ⲉⲡⲉⲥⲏⲧ ϩⲓϫⲛ̅ⲡⲉⲥxⲟⲥ ⲛⲅ̅ⲛⲁϩⲙⲉⲕ
31 ௩௧ அப்படியே பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் தங்களுக்குள்ளே பரிகாசம்பண்ணி: இவன் மற்றவர்களை இரட்சித்தான், தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ள முடியவில்லை.
ⲗ̅ⲁ̅ϩⲓⲟⲙⲟⲓⲱⲥ ⲛ̅ⲕⲉⲁⲣⲭⲓⲉⲣⲉⲩⲥ ⲛⲉⲩⲥⲱⲃⲉ ⲛ̅ⲥⲱϥ ⲙⲛ̅ⲛⲉⲅⲣⲁⲙⲙⲁⲧⲉⲩⲥ ⲉⲩϫⲱ ⲙ̅ⲙⲟⲥ ⲛ̅ⲛⲉⲩⲉⲣⲏⲩ ϫⲉ ϩⲉⲛⲕⲟⲟⲩⲉ ⲛⲉ ⲛ̅ⲧⲁϥⲛⲁϩⲙⲟⲩ ⲛ̅ⲧⲟϥ ⲇⲉ ⲛϥ̅ⲛⲁϣⲛⲁϩⲙⲉϥ ⲁⲛ.
32 ௩௨ நாம் பார்த்து விசுவாசிக்க, இஸ்ரவேலுக்கு ராஜாவாகிய கிறிஸ்து இப்பொழுது சிலுவையில் இருந்து இறங்கிவரட்டும் என்று சொல்லிக்கொண்டார்கள். அவருடன் சிலுவைகளில் அறையப்பட்டவர்களும் அவரை அவமதித்தார்கள்.
ⲗ̅ⲃ̅ⲡⲉⲭ̅ⲥ̅ ⲡⲉⲣⲟ ⲙ̅ⲡⲓⲥⲣⲁⲏⲗ ⲙⲁⲣⲉϥⲉ͡ⲓ ⲉⲡⲉⲥⲏⲧ ⲧⲉⲛⲟⲩ ϩⲓϫⲛ̅ⲡⲉⲥxⲟⲥ ϫⲉ ⲉⲛⲉⲛⲁⲩ ⲛ̅ⲧⲛ̅ⲡⲓⲥⲧⲉⲩⲉ ⲉⲣⲟϥ. ⲁⲩⲱ ⲛ̅ⲕⲉⲥⲟⲟⲛⲉ ⲛ̅ⲧⲁⲩⲥxⲟⲩ ⲙ̅ⲙⲟⲟⲩ ⲛⲙ̅ⲙⲁϥ ⲁⲩⲛⲉϭⲛⲟⲩϭϥ̅.
33 ௩௩ நண்பகல் தொடங்கி மாலை மூன்று மணிவரைக்கும் பூமியெங்கும் இருள் உண்டாயிருந்தது.
ⲗ̅ⲅ̅ⲛ̅ⲧⲉⲣⲉⲡⲛⲁⲩ ⲇⲉ ⲛ̅ϫⲡ̅ⲥⲟ ϣⲱⲡⲉ ⲁⲩⲕⲁⲕⲉ ϣⲱⲡⲉ ϩⲓϫⲛ̅ⲡⲕⲁϩ ⲧⲏⲣϥ ϣⲁⲡⲛⲁⲩ ⲛ̅ϫⲡ̅ⲥⲓⲧⲉ.
34 ௩௪ மாலை மூன்று மணியளவில், இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி, என்று அதிகச் சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தம்.
ⲗ̅ⲇ̅ⲁⲩⲱ ⲙ̅ⲡⲛⲁⲩ ⲛ̅ϫⲡ̅ⲯⲓⲧⲉ ⲁϥⲱϣ ⲉⲃⲟⲗ ⲛ̅ϭⲓⲓ̅ⲥ̅ ϩⲛ̅ⲟⲩⲛⲟϭ ⲛ̅ϩⲣⲟⲟⲩ ϫⲉ ⲉⲗⲱⲉⲓ ⲉⲗⲱⲉ͡ⲓ ⲗⲁⲙⲁ ⲥⲁⲭⲑⲁⲛⲉⲓ. ⲉⲧⲉⲡⲁⲓ̈ ⲡⲉϣⲁⲩϩⲉⲣⲙⲉⲛⲉⲩⲉ ⲙ̅ⲙⲟϥ ϫⲉ ⲡⲁⲛⲟⲩⲧⲉ ⲡⲁⲛⲟⲩⲧⲉ ⲉⲧⲃⲉⲟⲩ ⲁⲕⲕⲁⲁⲧ ⲛ̅ⲥⲱⲕ.
35 ௩௫ அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது: இதோ, எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள்.
ⲗ̅ⲉ̅ⲁⲩⲱ ϩⲟⲓ̈ⲛⲉ ⲛ̅ⲛⲉⲧⲁϩⲉⲣⲁⲧⲟⲩ ⲙ̅ⲡⲙⲁ ⲉⲧⲙ̅ⲙⲁⲩ ⲛ̅ⲧⲉⲣⲟⲩⲥⲱⲧⲙ̅ ⲡⲉϫⲁⲩ ϫⲉ ⲉⲓⲥϩⲏⲏⲧⲉ ϥⲙⲟⲩⲧⲉ ⲉϩⲏⲗⲓⲁⲥ.
36 ௩௬ ஒருவன் ஓடி, கடல் காளானைக் காடியிலே தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக்கொடுத்து: பொறுங்கள், எலியா இவனைக் கீழே இறக்க வருவானோ பார்க்கலாம் என்றான்.
ⲗ̅ⲋ̅ⲁⲟⲩⲁ ⲇⲉ ⲡⲱⲧ ⲁϥⲙⲁϩⲟⲩⲥⲡⲟⲅⲅⲟⲥ ⲛ̅ϩⲙϫ ⲁϥⲕⲁⲁⲥ ϩⲓϫⲛ̅ⲟⲩⲕⲁϣ ⲁϥⲧⲥⲟϥ ⲉϥϫⲱ ⲙ̅ⲙⲟⲥ ϫⲉ ϭⲱ ⲛ̅ⲧⲛ̅ⲛⲁⲩ ϫⲉ ϩⲏⲗⲉⲓⲁⲥ ⲛⲁⲉ͡ⲓ ⲉⲛⲧϥ̅ ⲉⲡⲉⲥⲏⲧ.
37 ௩௭ இயேசு அதிக சத்தமாகக் கூப்பிட்டு ஜீவனை விட்டார்.
ⲗ̅ⲍ̅ⲓ̅ⲥ̅ ⲇⲉ ⲛ̅ⲧⲉⲣⲉϥⲛⲟⲩϫⲟⲩⲛⲟϭ ⲛ̅ϩⲣⲟⲟⲩ ⲁϥϯⲡⲉⲡ̅ⲛ̅ⲁ̅
38 ௩௮ அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேலே இருந்து கீழே வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது.
ⲗ̅ⲏ̅ⲁⲩⲱ ⲡⲕⲁⲧⲁⲡⲉⲧⲁⲥⲙⲁ ⲙ̅ⲡⲉⲣⲡⲉ ⲁϥⲡⲱϩ ⲁϥⲣ̅ⲥⲛⲁⲩ ϫⲓⲛⲧⲡⲉ ⲉⲡⲉⲥⲏⲧ
39 ௩௯ அவருக்கு எதிரே நின்ற நூற்றுக்கு அதிபதி அவர் இப்படிக் கூப்பிட்டு ஜீவனை விட்டதைப் பார்த்தபோது: உண்மையாகவே இந்த மனிதன் தேவனுடைய குமாரன் என்றான்.
ⲗ̅ⲑ̅ⲛ̅ⲧⲉⲣⲉϥⲛⲁⲩ ⲇⲉ ⲛ̅ϭⲓⲡⲕⲉⲛⲧⲩⲣⲓⲱⲛ ⲡⲉⲧⲁϩⲉⲣⲁⲧϥ̅ ⲙ̅ⲡⲉϥⲙ̅ⲧⲟ ⲉⲃⲟⲗ ϫⲉ ⲁϥⲕⲁⲡⲉⲧⲏⲩⲓ̈ ⲛⲁⲓ̈. ⲡⲉϫⲁϥ ϫⲉ ⲁⲗⲏⲑⲱⲥ ⲡⲉⲓ̈ⲣⲱⲙⲉ ⲟⲩϣⲏⲣⲉ ⲡⲉ ⲛ̅ⲛⲟⲩⲧⲉ
40 ௪0 சில பெண்களும் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர் கலிலேயாவில் இருந்தபோது அவரோடு சென்று, அவருக்கு ஊழியம் செய்த மகதலேனா மரியாளும், சின்ன யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும்,
ⲙ̅ⲛⲉⲩⲛ̅ϩⲉⲛϩⲓⲟⲙⲉ ⲇⲉ ⲁϩⲉⲣⲁⲧⲟⲩ ⲙ̅ⲡⲟⲩⲉ ⲉⲩϭⲱϣⲧ̅ ⲉⲥⲛ̅ϩⲏⲧⲟⲩ ⲛ̅ϭⲓⲙⲁⲣⲓⲁ ⲧⲙⲁⲅⲇⲁⲗⲏⲛⲏ ⲁⲩⲱ ⲙⲁⲣⲓⲁ ⲧⲁⲡⲕⲟⲩⲉ͡ⲓ ⲛ̅ⲓ̈ⲁⲕⲱⲃⲟⲥ. ⲁⲩⲱ ⲧⲙⲁⲁⲩ ⲛ̅ⲓ̈ⲱⲥⲏ ⲙⲛ̅ⲥⲁⲗⲱⲙⲏ.
41 ௪௧ அவரோடு எருசலேமுக்கு வந்திருந்த மற்ற பெண்களும் அவர்களோடு இருந்தார்கள்.
ⲙ̅ⲁ̅ⲛⲁⲓ̈ ⲛ̅ⲧⲁⲩⲁϩⲟⲩ ⲛ̅ⲥⲱϥ ϫⲓⲛⲧⲅⲁⲗⲓⲗⲁⲓⲁ ⲉⲩⲇⲓⲁⲕⲟⲛⲓ ⲛⲁϥ ⲁⲩⲱ ϩⲉⲛⲕⲉϩⲓⲟⲙⲉ ⲧⲏⲣⲟⲩ ⲉⲁⲩⲉ͡ⲓ ⲛⲙ̅ⲙⲁϥ ⲉϩⲣⲁⲓ̈ ⲉⲑⲓⲉⲣⲟⲥⲟⲗⲩⲙⲁ.
42 ௪௨ ஓய்வுநாளுக்கு முந்தினநாள் ஆயத்தநாளாக இருந்தபடியால், மாலைநேரத்தில்.
ⲙ̅ⲃ̅ⲁⲩⲱ ⲛ̅ⲧⲉⲣⲉⲣⲟⲩϩⲉ ϣⲱⲡⲉ ⲉⲃⲟⲗ ϫⲉ ⲧⲡⲁⲣⲁⲥⲕⲉⲩⲏ ⲧⲉ ⲉⲧⲉⲡⲁⲓ̈ ⲡⲉ ϩⲁⲧⲉϩⲏ ⲙ̅ⲡⲥⲁⲃⲃⲁⲧⲟⲛ
43 ௪௩ மதிப்புமிக்கஆலோசனைக்காரனும் அரிமத்தியா ஊரைச்சேர்ந்தவனும் தேவனுடைய ராஜ்யத்தின் வருகைக்காக காத்திருந்த யோசேப்பு என்பவன் வந்து, பிலாத்துவினிடத்தில் துணிந்துபோய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான்.
ⲙ̅ⲅ̅ⲁϥⲉ͡ⲓ ⲛ̅ϭⲓⲓ̈ⲱⲥⲏⲫ ⲡⲉⲃⲟⲗ ϩⲛ̅ⲁⲣⲓⲙⲁⲑⲁⲓⲟⲥ ⲉⲩⲣⲙ̅ⲙⲁⲟ ⲡⲉ ⲃ̅ⲃⲟⲩⲗⲉⲩⲧⲏⲥ. ⲛ̅ⲧⲟϥ ϩⲱⲱϥ ⲉϥϭⲱϣⲧ̅ ⲉⲃⲟⲗ ϩⲏⲧⲥ̅ ⲛ̅ⲧⲙⲛ̅ⲧⲉⲣⲟ ⲙ̅ⲡⲛⲟⲩⲧⲉ. ⲁϥⲧⲟⲗⲙⲁ ⲁϥⲃⲱⲕ ⲉϩⲟⲩⲛ ϣⲁⲡⲉⲓⲗⲁⲧⲟⲥ. ⲁϥⲁⲓⲧⲓ ⲙ̅ⲙⲟϥ ⲙ̅ⲡⲥⲱⲙⲁ ⲛ̅ⲓ̅ⲥ̅
44 ௪௪ அவர் இவ்வளவு சீக்கிரமாக மரித்துவிட்டார் என்று பிலாத்து ஆச்சரியப்பட்டு, நூற்றுக்கு அதிபதியை அழைத்து: அவர் இவ்வளவு சீக்கிரத்தில் மரித்தது உண்மையா என்று கேட்டான்.
ⲙ̅ⲇ̅ⲡⲉⲓⲗⲁⲧⲟⲥ ⲇⲉ ⲁϥⲣ̅ϣⲡⲏⲣⲉ ϫⲉ ⲉⲛⲉⲏⲇⲏ ⲁϥⲙⲟⲩ ⲁⲩⲱ ⲛ̅ⲧⲉⲣⲉϥⲙⲟⲩⲧⲉ ⲉⲡⲕⲉⲛⲧⲩⲣⲓⲱⲛ ⲁϥϫⲛⲟⲩϥ ϫⲉ ⲉⲛⲉⲁϥⲱⲥⲕ ϫⲓⲛⲧⲁϥⲙⲟⲩ.
45 ௪௫ நூற்றுக்கு அதிபதியின் மூலம் அதைத் தெரிந்துகொண்டபின்பு, சரீரத்தை யோசேப்பிடம் கொடுத்தான்.
ⲙ̅ⲉ̅ⲁⲩⲱ ⲛ̅ⲧⲉⲣⲉϥⲉⲓⲙⲉ ⲛ̅ⲧⲟⲟⲧϥ̅ ⲙ̅ⲡⲕⲉⲛⲧⲩⲣⲓⲱⲛ ⲁϥⲭⲁⲣⲓⲍⲉ ⲛ̅ⲓ̈ⲱⲥⲏⲫ ⲙ̅ⲡⲥⲱⲙⲁ ⲛ̅ⲓ̅ⲥ̅
46 ௪௬ அவன்போய், மெல்லிய போர்வையை வாங்கிக்கொண்டுவந்து, அவரை இறக்கி, அந்தத் போர்வையிலே சுற்றி, கன்மலையில் வெட்டியிருந்த கல்லறையிலே அவரை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு கல்லைப் புரட்டி வைத்தான்.
ⲙ̅ⲋ̅ⲁⲩⲱ ⲁϥϣⲉⲡⲟⲩⲥⲓⲛⲇⲱⲛ ⲁϥⲙ̅ⲡⲥⲱⲙⲁ ⲉⲡⲉⲥⲏⲧ ⲁϥϭⲗⲙ̅ⲗⲱⲙϥ̅ ϩⲛ̅ⲧⲥⲓⲛⲇⲱⲛ. ⲁϥⲕⲁⲁϥ ϩⲙ̅ⲡⲉϥⲙ̅ϩⲁⲁⲩ ⲉⲁⲩϣⲉⲧϣⲱⲧϥ̅ ⲉⲃⲟⲗ ϩⲛ̅ⲧⲡⲉⲧⲣⲁ ⲁⲩⲱ ⲁⲩⲥⲕⲣ̅ⲕⲣ̅ⲟⲩⲱⲛⲉ ⲉⲣⲙ̅ⲡⲉⲙϩⲁⲟⲩ.
47 ௪௭ அவரை வைத்த இடத்தை மகதலேனா மரியாளும் யோசேயின் தாயாகிய மரியாளும் பார்த்தார்கள்.
ⲙ̅ⲍ̅ⲙⲁⲣⲓⲁ ⲇⲉ ⲧⲙⲁⲅⲇⲁⲗⲏⲛⲏ ⲁⲩⲱ ⲙⲁⲣⲓⲁ ⲧⲁⲓ̈ⲱⲥⲏ ⲛⲉⲩⲛⲁⲩ ⲉⲡⲙⲁ ⲛ̅ⲧⲁⲩⲕⲁⲁϥ ⲛ̅ϩⲏⲧϥ̅.

< மாற்கு 15 >