< மாற்கு 14 >

1 இரண்டு நாட்களுக்குப்பின்பு புளிப்பில்லாத அப்பம் சாப்பிடுகிற பஸ்காபண்டிகை வந்தது. அப்பொழுது பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும், அவரைத் தந்திரமாகப் பிடித்துக் கொலைசெய்யும்படி வழிதேடினார்கள்.
ପାସ୍‌କା ପାରାବ୍‌ ଆଡଃ ସାବାଃ ହଲଙ୍ଗ୍‌ରାଃ ପାରାବ୍‌ ଏତେ ବାର୍‌ସିଙ୍ଗ୍‌ ସିଦା, ମୁଲ୍‌ ଯାଜାକ୍‌କ ଆଡଃ ଆଇନ୍‌ ଇତୁକ ଅକ ସେଣାଁଁତେ ୟୀଶୁକେକ ସାବିଆ ଆଡଃକ ଗଜିୟା ମେନ୍ତେ ହରାକ ଦାଣାଁଁତାନ୍ ତାଇକେନା ।
2 ஆனாலும் மக்களுக்குள்ளே கலவரம் உண்டாகாதபடி, பண்டிகையிலே அப்படிச் செய்யக்கூடாது என்றார்கள்.
“ପାରାବ୍‌ ହୁଲାଙ୍ଗ୍‌ଦ କାବୁଆଃ, କା'ରେଦ ହଡ଼କ ହାଲାଗୁଲାୟାକ” ମେନ୍‌କେଦା ।
3 அவர் பெத்தானியாவில் குஷ்டரோகியாக இருந்த சீமோன் வீட்டிலே சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, ஒரு பெண் விலையுயர்ந்த நளதம் என்னும் சுத்தமான தைலத்தை ஒரு வெள்ளைக்கல் ஜாடியில் கொண்டுவந்து, அதை உடைத்து, அந்தத் தைலத்தை அவர் தலையின்மேல் ஊற்றினாள்.
ୟୀଶୁ ବେଥ୍‌ନିଆ ହାତୁରେ, ଶିମୋନ୍‌ ନାଗେଘାଅନିଆଃ ଅଡ଼ାଃରେ ତାଇକେନାଏ । ଜଜମ୍ ନାଙ୍ଗ୍‌ ଦୁବାକାନ୍‌ ଦିପିଲିରେ, ମିଆଁଦ୍‌ କୁଡ଼ି ପୁରାଃ ଫାର୍‌ଚି ଗନଙ୍ଗ୍‌ଆଁନ୍‌ ଜଟାମାଂସି ବୁଗିନ୍‌ ସହାନ୍‌ ସୁନୁମ୍‌ତେ ପେରେଜାକାନ୍‌ ପୁଣ୍ଡିଦିରିରାଃ ଚୁକାଃ ସାବ୍‌କେଦ୍‌ତେ ବଲୟାନାଏ । ଇନିଃ ଏନ୍‌ ଚୁକାଃରାଃ ଠିପି ଅଡ଼େଃକ୍‌କେଦ୍‌ତେ ଏନ୍‌ ସୁନୁମ୍ ୟୀଶୁଆଃ ବହଃରେ ଦୁଲ୍‌କେଦାଏ ।
4 அப்பொழுது சிலர் தங்களுக்குள்ளே கோபப்பட்டு: இந்தத் தைலத்தை இப்படி வீணாகச் செலவழிப்பது ஏன்?
ମେନ୍‌ଦ ଏନ୍ତାଃରେ ତାଇକେନ୍‌ ଚିମିନ୍‌ ହଡ଼କ ଏସେଦ୍‌ୟାନ୍ତେ ମେପେନ୍‌ୟାନାକ, “ଚିନାଃମେନ୍ତେ ନେ ବୁଗିନ୍‌ ସହାନ୍‌ ସୁନୁମ୍‌ ସାମାରେ ଦୁଲ୍‌ଏଣ୍ଡାଗଃତାନା?
5 இதை முந்நூறு வெள்ளிக்காசுகளுக்கு அதிகமான விலைக்கு விற்று, ஏழைகளுக்குக் கொடுக்கலாமே என்று சொல்லி, அவளைப்பற்றி முறுமுறுத்தார்கள்.
ନେ ବୁଗିନ୍‌ ସହାନ୍‌ ସୁନୁମ୍‌କେଦ ମିଆଁଦ୍‌ ହଡ଼ରାଃ ମିଦ୍‌ବାରାଷ୍‌ କାମିକାଦ୍‌ ନାଲା ସିକାଏତେ ଆଦ୍‌କା ଗନଙ୍ଗ୍‌ରେ ଆଖ୍‌ରିଙ୍ଗ୍‌ ଦାଡ଼ିକାନ୍‌ତେୟାଃ ଆଡଃ ରେଙ୍ଗେଃ ରାବାଙ୍ଗ୍‌କକେ ଏମାକାନ୍‌ତେୟାଃ ।” ଆଡଃ ଇନ୍‌କୁ ଏନ୍‌ କୁଡ଼ିକେକ କୁରୁମ୍ ଡୁରୁମ୍‌କିୟାଃ ।
6 இயேசு அவர்களைப் பார்த்து: அவளை விட்டுவிடுங்கள்; ஏன் அவளைத் தொந்தரவு பண்ணுகிறீர்கள்? என்னிடம் நற்கிரியையைச் செய்திருக்கிறாள்.
ମେନ୍‌ଦ ୟୀଶୁ ଇନ୍‌କୁକେ ମେତାଦ୍‌କଆଏ, “ଇନିଃକେ ତାଇନ୍ ଚିକାଇପେ । ଚିନାଃ, ମେନ୍ତେପେ ଦୁକୁଇଚିତାନା? ଆଇଙ୍ଗ୍‌ ନାଗେନ୍ତେ ଇନିଃ ବୁଗିନ୍‌ କାମି ରିକାକାଦାଏ ।
7 ஏழைகள் எப்பொழுதும் உங்களிடம் இருக்கிறார்கள், உங்களுக்கு விருப்பம் உண்டாகும்போதெல்லாம் அவர்களுக்கு நன்மை செய்யலாம், நானோ எப்பொழுதும் உங்களிடம் இருக்கமாட்டேன்.
ରେଙ୍ଗେଃ ରାବାଙ୍ଗ୍‌କଦ ଜାନାଅ ଆପେଲଃକ ତାଇନା, ଆଡଃ ଆପେୟାଃ ସାନାଙ୍ଗ୍‌ ଲେକା ଜା'ଇମ୍‌ତାଗି ଇନ୍‌କୁକେ ଦେଙ୍ଗାପେ ଦାଡ଼ିୟାକଆ, ମେନ୍‌ଦ ଆଇଙ୍ଗ୍‌ ଆପେଲଃ ସବେନ୍‌ ଇମ୍‌ତା କାଇଙ୍ଗ୍‌ ତାଇନାଃ ।
8 இவள் தன்னால் முடிந்ததைச் செய்தாள்; நான் அடக்கம்பண்ணப்படுவதற்கு அடையாளமாக, என் சரீரத்தில் தைலம் பூச முந்திக்கொண்டாள்.
ନିଃ ଚିମିନାଙ୍ଗ୍‌ ଦାଡ଼ିୟାନାଏ ଇମିନାଙ୍ଗ୍‌ ରିକାକେଦାଏ, ଆଇଙ୍ଗ୍‌ ହାସାଗାଡ଼ାଅଃ ମେନ୍ତେ ସିଦାରେ ଆଇଁୟାଃ ହଡ଼୍‌ମରେ ନେ ସୁନୁମ୍‌କେ ଦୁଲ୍‌କେଦାଏ ।
9 இந்த நற்செய்தி உலகத்தில் எங்கெல்லாம் பிரசங்கிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
ସାର୍‌ତିଗିଙ୍ଗ୍‌ କାଜିୟାପେତାନା, ଅତେଦିଶୁମ୍‌ରେୟାଃ ଜାହାତାଃରେଗି ସୁକୁକାଜି ଉଦୁବଃତାନ୍‌ ଇମ୍‌ତା ଏନ୍‌ କୁଡ଼ି କାମିକାଦ୍‍ତେୟାଃ ପାହାମେ ନାଗେନ୍ତେ ଉଦୁବଃଆ ।”
10 ௧0 அப்பொழுது, பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் அவரைப் பிரதான ஆசாரியர்களுக்குக் காட்டிக்கொடுப்பதற்காக அவர்களிடம் போனான்.
୧୦ଏନ୍ତେ ଇଷ୍କାରିୟତ୍‌ ଯିହୁଦା, ଗେଲ୍‌ବାର୍‌ ଚେଲାକଏତେ ମିଆଁଦ୍‌ନିଃ, ୟୀଶୁକେ ସାବ୍‌ରିକାଇ ମେନ୍ତେ ମୁଲ୍‌ ଯାଜାକ୍‌କକେ ସେନ୍‌ନାମ୍ କେଦ୍‌କଆଏ ।
11 ௧௧ அவர்கள் அதைக்கேட்டு, சந்தோஷப்பட்டு, அவனுக்குப் பணம் கொடுக்கிறோம் என்று வாக்குக்கொடுத்தார்கள்; அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்கு ஏற்ற நேரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
୧୧ଇନ୍‌କୁଦ ନେଆଁଁ ଆୟୁମ୍‌କେଦ୍‌ତେକ ରାସ୍‌କାୟାନା, ଆଡଃ ଟାକାଲେ ଏମାମେୟା ମେନ୍ତେ ଇନିଃକେକ ବାନାର୍‌ସା ଏମ୍‌କିୟାକ । ଏନାମେନ୍ତେ ଯିହୁଦା ଇନ୍‌କୁଆଃ ତିଃଇରେ ୟୀଶୁକେ ସାବ୍‍ରିକାଇ ନାଗେନ୍ତେ ସୁଯୋଗ୍‌ ଦାଣାଁଁତାନାଏ ତାଇକେନା ।
12 ௧௨ பஸ்காவைப் பலியிடும் நாளாகிய புளிப்பில்லாத அப்பம் சாப்பிடுகிற முதலாம் நாளில், அவருடைய சீடர்கள் அவரிடம் வந்து: நீர் பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்குபோய் ஆயத்தம்பண்ண விருப்பமாக இருக்கிறீர் என்று கேட்டார்கள்.
୧୨ସାବାଃ ହଲଙ୍ଗ୍‌ ପାରାବ୍‌ରେୟାଃ ସିଦା ହୁଲାଙ୍ଗ୍‌ରେ, ପାସ୍‌କା ପାରାବ୍‌ରେ ମିଣ୍ଡିହନ୍‌ ଦାଣେଁଅଃ ତାଇକେନ୍‌ ହୁଲାଙ୍ଗ୍‌ ଚେଲାକ ୟୀଶୁକେକ କାଜିକିୟା, “ଆଲେ ଅକ୍‌ତାଃଲେ ସେନା ଆଡଃ ଆମାଃ ନାଗେନ୍ତେ ପାସ୍‌କା ପାରାବ୍‌ରେ ଜମେଆଃଲେ ବାଇୟା ମେନ୍ତେ ସାନାଙ୍ଗ୍‌ତାନାମ୍‌?”
13 ௧௩ அவர் தம்முடைய சீடர்களில் இரண்டுபேரைப் பார்த்து: நீங்கள் நகரத்திற்குள்ளே போங்கள், அங்கே தண்ணீர் குடம் சுமந்துகொண்டு வருகிற ஒரு மனிதன் உங்களுக்கு எதிராக வருவான், அவன் பின்னே போங்கள்;
୧୩ଏନ୍ତେ ୟୀଶୁ ବାର୍‌ହଡ଼୍‌ ଚେଲାକିନ୍‌କେ କୁଲ୍‌ତାନ୍‌ଲଃ ମେତାଦ୍‌କିନାଏ, “ନାଗାର୍‌ତେ ସେନଃବେନ୍ ଆଡଃ, ମିଆଁଦ୍‌ ହଡ଼ ଦାଆଃଚାଟୁ ତେଙ୍ଗଃକେଦ୍‌ତେ ଦାରମ୍‌ବେନାଏ, ଇନିଃକେ ଅତଙ୍ଗ୍‌ଇଁବେନ୍‌ ।
14 ௧௪ அவன் எந்த வீட்டிற்குள் செல்கிறானோ அந்த வீட்டு முதலாளியை நீங்கள் பார்த்து: நான் என் சீடர்களுடன் பஸ்காவைப் புசிக்கிறதற்குத் தகுதியான இடம் எங்கே என்று போதகர் கேட்கிறார் என்று சொல்லுங்கள்.
୧୪ଆଡଃ ଇନିଃ ବଲଃ ଅଡ଼ାଃରେନ୍‌ ଗମ୍‌କେ କେ ମେତାଇବେନ୍, ଇତୁନିଃ କୁଲିତାନାଏ, ଆଇଁୟାଃ ଚେଲାକଲଃ ପାସ୍‌କା ପାରାବ୍‌ରେ ଜମେ ନାଗେନ୍ତେ ବାଖ୍‌ରା ଅକ୍‌ତାଃରେୟା?
15 ௧௫ அவன் கம்பளம் விரித்து ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற வசதியான மேல்வீட்டறையை உங்களுக்குக் காட்டுவான்; அங்கே நமக்காக பஸ்காவை ஆயத்தம்பண்ணுங்கள் என்று சொல்லி அனுப்பினார்.
୧୫ଏନ୍ତେ ଇନିଃ ଚେତାନ୍ ଅଡ଼ାଃରେ ମିଆଁଦ୍‌ ବାଇସେକାଡ଼ାକାନ୍‌ ମାରାଙ୍ଗ୍‌ ବାଖ୍‌ରା ଉଦୁବାବେନାଏ, ଏନାରେଗି ଆବୁ ନାଗେନ୍ତେ ଜମେନାଙ୍ଗ୍‌ ବାଇୟେବେନ୍ ।”
16 ௧௬ அப்படியே, அவருடைய சீடர்கள் புறப்பட்டு நகரத்தில்போய், தங்களுக்கு அவர் சொன்னபடியே, பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள்.
୧୬ଚେଲାକିନ୍ ନାଗାର୍‌ତେକିନ୍ ସେନଃୟାନା, ଆଡଃ ୟୀଶୁ କାଜିୟାଦ୍‌କିନ୍‌ ଲେକାଗି ସବେନାଃକିନ୍ ନାମ୍‌କେଦାଃ ଆଡଃ ପାସ୍‌କା ପାରାବ୍‌ରେୟାଃ ଜମେୟାଃଁକିନ୍ ବାଇକେଦାଃ ।
17 ௧௭ மாலைநேரத்தில், அவர் பன்னிரண்டுபேரோடு சேர்ந்து அந்த இடத்திற்கு வந்தார்.
୧୭ଆୟୁବ୍‍ୟାନ୍‍ଚି ୟୀଶୁ ଗେଲ୍‌ବାର୍‌ ଚେଲାକଲଃ ତେବାଃୟାନାଏ ।
18 ௧௮ அவர்கள் பந்தி உட்கார்ந்து சாப்பிடும்போது, இயேசு அவர்களைப் பார்த்து: என்னோடு சாப்பிடுகிற உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
୧୮ଇନ୍‌କୁ ଜମ୍‌ ଦୁବାକାନ୍‌ ଦିପିଲିରେ, ୟୀଶୁ ମେତାଦ୍‌କଆଏ, “ସାର୍‌ତିଗିଙ୍ଗ୍‌ କାଜିୟାପେତାନା, ଆପେକଏତେ ମିଆଁଦ୍‌ନିଃ ଆଇଙ୍ଗ୍‌ଲଃ ଜମ୍‌ତାନ୍‌ନିଃଗି ବାଇରିକଆଃ ତିଃଇରେ ସାବ୍‍ରିକାଇଙ୍ଗ୍‌ୟାଁଏ ।”
19 ௧௯ அப்பொழுது அவர்கள் துக்கப்பட்டு: நானோ? நானோ? என்று ஒவ்வொருவரும், அவரிடம் கேட்கத்தொடங்கினார்கள்.
୧୯ଚେଲାକଦ ହୁଡିଙ୍ଗ୍‌ଜୀଉୟାନାକ, ଆଡଃ ମିହୁଡ଼୍‌ ମିହୁଡ଼୍‌ତେ କାଜିକିୟାକ, “ଇନିଃ ଆଇଙ୍ଗ୍‌ ତାନିଙ୍ଗ୍‌ଚି?”
20 ௨0 அவர் மறுமொழியாக: என்னோடு பாத்திரத்தில் கையைவிடுகிற பன்னிரண்டுபேர்களில் ஒருவனே என்று சொல்லி;
୨୦ୟୀଶୁ ମେତାଦ୍‌କଆଏ, “ବାରାଝାନ୍‌ କଏତେ ମିଆଁଦ୍‌ନିଃ, ଆଇଁୟାଃଲଃ ମିଆଁଦ୍‌ କାଟୋରାରେ ଆୟାଃ ତିଃଇ ସୁଉଃକାଦ୍‌ନିଃଗି ସାବ୍‌ରିକାଙ୍ଗ୍‌ଆଏ ।
21 ௨௧ மனிதகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆனாலும், எந்த மனிதனால் மனிதகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனிதனுக்கு ஐயோ! அந்த மனிதன் பிறக்காமல் இருந்திருந்தால் அவனுக்கு நல்லதாக இருக்கும் என்றார்.
୨୧ପାବିତାର୍‌ ଅନଲ୍‌କରେ ଅଲାକାନ୍‌ ଲେକା, ଆଇଙ୍ଗ୍‌ ମାନୱାହନ୍‌ ତାନିଙ୍ଗ୍‌, ଆଇଙ୍ଗ୍‌କେ ଗଜଃଲାଗାତିୟାଃଁ । ମେନ୍‌ଦ ଆଇଙ୍ଗ୍‌ ମାନୱାହନ୍‌ ତାନିଙ୍ଗ୍‌, ଆଇଙ୍ଗ୍‌କେ ବାଇରିକଆଃ ତିଃଇରେ ସାବ୍‌ରିକାନିଃ ହାୟ୍ ହାୟ୍ ଚିମିନ୍‌ ଦୁକୁନାମେୟାଏ । ଏନ୍‌ ହଡ଼ କାଏ ଜାନାମ୍‌କାନ୍‌ରେଦ ଇନିଃ ନାଗେନ୍ତେ ବୁଗିନ୍‌ ହବାକାନ୍‌ତେୟାଃ ।”
22 ௨௨ அவர்கள் சாப்பிடும்போது, இயேசு அப்பத்தை எடுத்து ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாக இருக்கிறது என்றார்.
୨୨ଇନ୍‌କୁ ଜମ୍‌ତାନ୍ ଦିପିଲିରେ, ୟୀଶୁ ମିଆଁଦ୍‌ ହଲଙ୍ଗ୍‌କେ ସାବ୍‌କେଦ୍‌ତେ ଧାନ୍ୟାବାଦ୍‌ ଏମ୍‌କେଦାଏ ଆଡଃ କେଚାଃକେଦ୍‌ତେ ଚେଲାକକେ ଏମ୍‌କେଦ୍‌ତେ ମେତାଦ୍‌କଆଏ, “ନେ ମାର୍‌ ତେଲାଏପେ, ନେଆଁଁ ଆଇଁୟାଃ ହଡ଼୍‌ମ ତାନାଃ ।”
23 ௨௩ பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதை அவர்களுக்குக் கொடுத்தார். அவர்களெல்லோரும் அதிலே பானம்பண்ணினார்கள்.
୨୩ଏନ୍ତେ ଇନିଃ କାଟୋରା ଇଦିକେଦ୍‌ତେ ବିନ୍ତିକେଦାଏ ଆଡଃ ଏମାଦ୍‌କଆଏ, ଆଡଃ ଇନ୍‌କୁ ଏନାଏତେକ ନୁଁକେଦାଃ ।
24 ௨௪ அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: இது அநேகருக்காகச் சிந்தப்படுகிற புதிய உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாக இருக்கிறது.
୨୪ଆଡଃ ୟୀଶୁ ମେତାଦ୍‌କଆଏ, “ନେଆଁଁ ଆଇଁୟାଃ ମାୟୋମ୍‌ ତାନାଃ, ମାନୱାରାଃ ପାପ୍‌ ଛାମା ନାଗେନ୍ତେ ଆଇଙ୍ଗ୍‌ ଆଇଁୟାଃ ଅକ ମାୟୋମ୍‌କେ ଲିଙ୍ଗି ନାଗେନ୍ତେ ସେନ୍‌ତାନାଇଙ୍ଗ୍‌, ଏନା ପାର୍‌ମେଶ୍ୱାର୍‌ଆଃ ରାଜିନାମାକେ ମୋହର୍‌କାଦା ।”
25 ௨௫ நான் தேவனுடைய ராஜ்யத்தில் புதிய இரசத்தைப் பானம்பண்ணும் நாள்வரை திராட்சைப்பழரசத்தை இனி நான் பானம்பண்ணுவதில்லை என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
୨୫ଆଇଙ୍ଗ୍‌ ସାର୍‌ତିଗିଙ୍ଗ୍‌ କାଜିୟାପେତାନା, “ପାର୍‌ମେଶ୍ୱାର୍‌ଆଃ ରାଇଜ୍‌ରେ ନାୱା ଦାଖ୍‌ରାସି ଆଉରିଙ୍ଗ୍‌ ନୁଁଇ ଜାକେଦ୍‌, ଦାଖ୍‌ଜ'ରାଃ ରାସି ଆଡଃ ଚିଉଲାଅ କାଇଙ୍ଗ୍‌ ନୁଁଇଆ ।”
26 ௨௬ அவர்கள் ஸ்தோத்திரப்பாட்டைப் பாடினபின்பு, ஒலிவமலைக்குப் புறப்பட்டுப்போனார்கள்.
୨୬ଏନ୍ତେ ଇନ୍‌କୁ ମାଇନାନ୍‌ ଦୁରାଙ୍ଗ୍‌ ଦୁରାଙ୍ଗ୍‌କେଦ୍‌ତେ ଜାଇତୁନ୍‌ ବୁରୁତେକ ସେନଃୟାନା ।
27 ௨௭ அப்பொழுது, இயேசு அவர்களைப் பார்த்து: மேய்ப்பனை வெட்டுவேன், ஆடுகள் சிதறடிக்கப்படும், என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்களெல்லோரும் என்னால் இடறல் அடைவீர்கள்.
୨୭ୟୀଶୁ ଇନ୍‌କୁକେ ମେତାଦ୍‌କଆଏ, “ଆପେ ସବେନ୍‌କ ନେ ନିଦାରେ ଆଇଙ୍ଗ୍‌କେ ବାଗିକେଦ୍‌ତେ ନିର୍‌କଆଃପେ, ନେଆଁଦ ଧାରାମ୍‌ପୁଥିରେ ଅଲାକାନା, ‘ପାର୍‌ମେଶ୍ୱାର୍‌ ଗୁପିନିଃକେ ଦାଲିୟାଏ ଆଡଃ ଗୋଟ୍‌ରେନ୍‍ ମିଣ୍ଡିକ ଛିତିବିତିୟଃଆ ।’
28 ௨௮ ஆனாலும் நான் உயிரோடு எழுந்தபின்பு, உங்களுக்கு முன்பாக கலிலேயாவிற்குப் போவேன் என்றார்.
୨୮ମେନ୍‌ଦ ଆଇଙ୍ଗ୍‌ ଜୀଉବିରିଦ୍‌କେଦ୍‌ତେ ଗାଲିଲ୍‌ତେ ଆପେଏତେ ଆୟାର୍‌ରେଇଙ୍ଗ୍‌ ସେନା ।”
29 ௨௯ அதற்கு பேதுரு: உமதுநிமித்தம் எல்லோரும் இடறல் அடைந்தாலும், நான் இடறல் அடையமாட்டேன் என்றான்.
୨୯ପାତ୍‌ରାସ୍‌ କାଜିରୁହାଡ଼୍‌କିୟାଏ “ଏଟାଃକ ବାଗିତାମ୍‌ରେହଁ, ଆଇଙ୍ଗ୍‌ କାଇଙ୍ଗ୍‌ ବାଗିମେଆ ।”
30 ௩0 இயேசு அவனைப் பார்த்து: இன்றைக்கு, இந்த இராத்திரியிலே, சேவல் இரண்டுமுறை கூவுகிறதற்கு முன்பு, நீ மூன்றுமுறை என்னை மறுதலிப்பாய் என்று உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
୩୦ୟୀଶୁଦ ପାତ୍‌ରାସ୍‌କେ ମେତାଇୟାଏ, “ସାର୍‌ତିଗିଙ୍ଗ୍‌ କାଜିୟାମ୍‌ତାନା, ତିସିଙ୍ଗ୍‌, ନେ ନିଦାରେ ସାଣ୍ଡିସିମ୍‌ ବାର୍‌ସା ରାଆଃଏ ସିଦାରେ ଆଇଙ୍ଗ୍‌କେ କାଇଙ୍ଗ୍‌ ସାରିୟା ମେନ୍ତେ ଆପିସାମ୍ କାଜିୟା ।”
31 ௩௧ அதற்கு அவன்: நான் உம்மோடு மரித்துப்போவதாக இருந்தாலும் உம்மை மறுதலிக்கமாட்டேன் என்று உறுதியாகச் சொன்னான்; எல்லோரும் அப்படியே சொன்னார்கள்.
୩୧ପାତ୍‌ରାସ୍‌ ଆଡଃଗି ପୁରାଃତେ କାଜିକିୟାଏ, “ଆମ୍‌ଲଃ ଗଜଃ ଲାଗାତିଙ୍ଗ୍‌ରେଅ ଆଇଙ୍ଗ୍‌ ଆମ୍‌କେ କାଇଙ୍ଗ୍‌ ସାରିଆଃ ମେନ୍ତେ କାଇଙ୍ଗ୍‌ଗି କାଜିୟା ।” ଆଡଃ ଏନ୍‌ଲେକା ସବେନ୍‌ ଏଟାଃ ଚେଲାକହଗି କାଜିକେଦାଃକ ।
32 ௩௨ பின்பு கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது அவர் தம்முடைய சீடர்களைப் பார்த்து: நான் ஜெபம்பண்ணும்வரை இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி;
୩୨ଗେଥ୍‌ସିମାନି ନୁତୁମ୍‌ ଠାୟାଦ୍‌ତେକ ତେବାଃକେଦ୍‌ଚି, ୟୀଶୁ ଆୟାଃ ଚେଲାକକେ ମେତାଦ୍‌କଆଏ, “ଆଇଙ୍ଗ୍‌ ବିନ୍ତି ଜାକେଦ୍‌ ନେତାଃରେ ଦୁବାକାନ୍‌ପେ ।”
33 ௩௩ பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் தம்மோடு கூட்டிக்கொண்டுபோய், கலக்கமடையவும், வியாகுலப்படவும் தொடங்கினார்.
୩୩ଇନିଃ ପାତ୍‌ରାସ୍‌, ଯାକୁବ୍‌, ଆଡଃ ଯୋହାନ୍‌କେ ଆୟାଃଲଃ ଇଦିକେଦ୍‌କଆଏ । ଆଡଃ ଇନିଃ ପୁରାଃଗି ଦୁକୁତେ ଆକୁଲ୍‌ବାକୁଲ୍‌ୟାନା ।
34 ௩௪ அப்பொழுது அவர்: என் ஆத்துமா மரணத்திற்கான துக்கத்தில் உள்ளது. நீங்கள் இங்கே தங்கி, விழித்திருங்கள் என்று சொல்லி,
୩୪ଆଡଃ ଇନିଃ ଇନ୍‌କୁକେ କାଜିୟାଦ୍‍କଆଏ, “ଜୀଉତାଇୟାଁଃ ଗଜଃଲେକା ଦୁକୁଃତାନା, ନେତାଃରେଗି ତାଇନ୍‌କାନ୍‌ପେ ଆଡଃ ଆଇଁୟାଃଲଃ ଏୟନାକାନ୍‌ ତାଇନ୍‌ପେ ।”
35 ௩௫ சற்று தள்ளிப்போய், தரையிலே விழுந்து, அந்த நேரம் தம்மைவிட்டுக் கடந்துபோகக்கூடுமானால் அது கடந்துபோகவேண்டும் என்று வேண்டிக்கொண்டு:
୩୫ୟୀଶୁ କାଟିଃ ସାଙ୍ଗିନ୍‌ ସେନ୍‌କେଦ୍‌ତେ ଅତେରେ ଇକ୍‌ଡ଼ୁମ୍‌ୟାନ୍‌ଲଃ ଅମ୍ବାଃୟାନାଏ ଆଡଃ ବିନ୍ତିକେଦାଏ, “ହବାଦାଡ଼ିୟଃରେଦ ନେ ଦୁକୁ ଦିପିଲି ଆଇଙ୍ଗ୍‌ତାଃଏତେ ପାରମଃକା ।”
36 ௩௬ அப்பா பிதாவே, எல்லாம் உம்மாலே முடியும்; இந்தப் பாத்திரத்தை என்னிடத்திலிருந்து எடுத்துப்போடும், ஆனாலும் என்னுடைய விருப்பத்தின்படி அல்ல, உம்முடைய விருப்பத்தின்படியே நடக்கட்டும் என்றார்.
୩୬ଇନିଃ ବିନ୍ତିରେ ମେନ୍‌କେଦା, “ହେ ଆବା, ହେ ଆପୁ, ଆମାଃତେ ସବେନାଃ ହବାଦାଡ଼ିଅଃଆ । ନେ ଦୁକୁ କାଟୋରାକେ ଆଇଙ୍ଗ୍‌ଏତେ ଆତମ୍‌ତାମ୍; ଇମିନ୍‌ରେଅ ଆଇଁୟାଃ ସାନାଙ୍ଗ୍‌ଲେକାଦ କାହାଗି, ମେନ୍‌ଦ ଆମାଃ ସାନାଙ୍ଗ୍‌ ଲେକାଗି ହବାଅଃକା ।”
37 ௩௭ பின்பு அவர் வந்து, அவர்கள் தூங்குகிறதைப் பார்த்து, பேதுருவைப் பார்த்து: சீமோனே, தூங்குகிறாயா? ஒருமணிநேரம் நீ விழித்திருக்கக்கூடாதா?
୩୭ଏନ୍ତେ ଇନିଃ ଆୟାଃ ଚେଲାକତାଃ ରୁହାଡ଼୍‌ୟାନ୍‌ଚି ଇନ୍‌କୁକେ ଦୁଡ଼ୁମାକାନ୍‌ ନାମ୍‍କେଦ୍‍କଆଏ । ଇନିଃ ପାତ୍‌ରାସ୍‌କେ କାଜିକିୟାଏ, “ଏ ଶିମୋନ୍‌, ଦୁଡ଼ୁମ୍ ତାନାମ୍ ଚି? ମିଦ୍‌ ଘାଣ୍ଟାଅଚି ଏୟନାକାନ୍ କାମ୍‌ତାଇନ୍‌ ଦାଡ଼ିୟାନା?”
38 ௩௮ நீங்கள் சோதனையில் விழாமலிருக்க விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள். ஆவி உற்சாகமுள்ளதுதான், சரீரமோ பலவீனமுள்ளது என்றார்.
୩୮ଆଡଃ ଇନିଃ କାଜିକେଦ୍‌କଆଏ, “ବିଡ଼ାଅରେ ଆଲ୍‌ପେ ଉୟୁଗଃକା ମେନ୍ତେ ଏୟନାକାନ୍ ତାଇନ୍‌ପେ ଆଡଃ ବିନ୍ତିପେ । ଆତ୍ମାଦ ସାନାଙ୍ଗ୍‌ତାନାଏ, ମେନ୍‌ଦ ହଡ଼୍‌ମ ନାରାଦୁରାଗିଆଃ ।”
39 ௩௯ அவர் மீண்டும்போய் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்பண்ணினார்.
୩୯ଇନିଃ ଆଡଃଗି ସେନଃୟାନାଏ, ଆଡଃ ସିଦାଲେକାଗି ବିନ୍ତିକେଦାଏ ।
40 ௪0 அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மீண்டும் தூங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தார்; அவர்களுடைய கண்கள் தூக்கமயக்கத்தில் இருந்ததால், தாங்கள் மறுமொழியாக அவருக்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல் இருந்தார்கள்.
୪୦ଏନ୍ତେ ଇନିଃ ହିଜୁଃରୁହାଡ଼୍‌ଲେନାଏ ଆଡଃ ଚେଲାକକେ ଆଡଃମିସା ଦୁଡ଼ୁମାକାନାଏ ନାମ୍‍କେଦ୍‍କଆ, ଚିୟାଃଚି ଇନ୍‌କୁ ଦୁଡ଼ୁମ୍‌ତେ ମେଦ୍‌ତାକଆଃ ଆରିଦ୍‌ କାକ ଦାଡ଼ିତାନ୍‌ତାଇକେନା । ଇନିଃକେ ଚିନାଃବୁ କାଜିରୁହାଡ଼୍‌କିୟା ମେନ୍ତେ ଇନ୍‌କୁ କାକ ସାରିକେଦା ।
41 ௪௧ அவர் மூன்றாம்முறை வந்து: இன்னும் நித்திரைசெய்து இளைப்பாறுகிறீர்களா? போதும், நேரம்வந்தது, இதோ, மனிதகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிறார்.
୪୧ଆଡଃ ଇନିଃ ଆପିସା ରୁହାଡ଼୍‌ୟାନ୍‌ଚି, ଇନ୍‌କୁକେ କାଜିୟାଦ୍‌କଆଏ, “ନାହାଁଃ ଜାକେଦ୍‌ଚିପେ ଦୁଡ଼ୁମ୍‌ତାନା ଆଡଃ ରୁଡୁନ୍‌ତାନା? ଇମ୍‌ନାଙ୍ଗ୍‌ଗି! ନେଡା ତେବାଃୟାନା, ନେଲେପେ, ଆଇଙ୍ଗ୍‌ ମାନୱାହନ୍‌ ପାପିକଆଃ ତିଃଇରେ ସାବ୍‌ରିକାଅଃତାନାଇଙ୍ଗ୍‌ ।
42 ௪௨ என்னைக் காட்டிக்கொடுக்கிறவன், இதோ, வந்துவிட்டான், எழுந்திருங்கள், போகலாம் என்றார்.
୪୨ବିରିଦ୍‌ପେ, ଦଲାବୁ ସେନଆଃ! ନେଲିପେ, ଆଇଙ୍ଗ୍‌କେ ସାବ୍‍ରିକାଇଙ୍ଗ୍‌ନିଃ ସେଟେରାକାନାଏ ।”
43 ௪௩ உடனே, அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது, பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான்; அவனுடன் பிரதான ஆசாரியர்களும், வேதபண்டிதர்களும் மூப்பர்களும் அனுப்பின மக்கள்கூட்டத்தினர், பட்டயங்களையும் தடிகளையும் பிடித்துக்கொண்டுவந்தார்கள்.
୪୩ୟୀଶୁ ଜାଗାର୍‌ତାନ୍‌ ତାଇକେନ୍‌ ଇମ୍‌ତାଗି ଯିହୁଦା, ବାରାଝାନ୍‌କଏତେ ମିଆଁଦ୍‌ନିଃ ତେବାଃୟାନାଏ । ଇନିଃଲଃ ମୁଲ୍‌ ଯାଜାକ୍‌କ, ଆଇନ୍‌ ଇତୁକ ଆଡଃ ପ୍ରାଚିନ୍‌କ ସାଃଏତେ କୁଲାକାନ୍‌ ଗାଦେଲ୍‌ ହଡ଼କ ତାରାଉଡ଼ିକ ଆଡଃ ଭଙ୍ଗାଟ୍‌କ ସାବ୍‌କେଦ୍‌ତେ ହିଜୁଃୟାନାକ ।
44 ௪௪ அவரைக் காட்டிக்கொடுக்கிறவன்: நான் யாரை முத்தம் செய்கிறேனோ அவன்தான், அவனைப் பிடித்துக் கொண்டுபோங்கள் என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான்.
୪୪ୟୀଶୁକେ ସାବ୍‌ରିକାନିଃ ଏନ୍‌ ଗାଦେଲ୍‌ ହଡ଼କକେ ମିଆଁଦ୍‌ ଚିହ୍ନାଁ ଏମାକାଦ୍‌କ ତାଇକେନାଏ, “ଆଇଙ୍ଗ୍‌ ଅକ୍‌ନିଃକେ ଚଅଃ'ଇଙ୍ଗ୍‌, ଇନିଃଗି ୟୀଶୁ ତାନିଃ । ଇନିଃକେ ସାବିପେ ଆଡଃ ଚିର୍ଗାଲ୍‌ତେ ଇଦିପେ” ମେନ୍ତେ ସିଦାରେ କାଜିକାଦ୍‌କ ତାଇକେନାଏ ।
45 ௪௫ அவன் வந்தவுடனே, இயேசுவின் அருகில் சென்று: ரபீ, ரபீ, என்று சொல்லி, அவரை முத்தம்செய்தான்.
୪୫ଯିହୁଦା ତେବାଃୟାନ୍‌ଚି, “ହେ ଗୁରୁ” ମେତାଇତାନ୍‌ଲଃ ଇନିଃକେ ଚଅଃ'କିୟାଏ ।
46 ௪௬ அப்பொழுது மக்கள்கூட்டத்தினர் அவர்மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள்.
୪୬ଆଡଃ ଇନ୍‌କୁ ୟୀଶୁକେ ସାବ୍‌କେଦ୍‌ତେ ତଲ୍‌କିୟାଃକ ।
47 ௪௭ அப்பொழுது அருகில் நின்ற சீடன் ஒருவன் கத்தியை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனின் காதை வெட்டினான்.
୪୭ଜାପାଃରେ ତିଙ୍ଗୁଆକାନ୍ଏତେ ମିଆଁଦ୍‌ନିଃ ତାରାଉଡ଼ି ଅଡଙ୍ଗ୍‌କେଦାଏ ଆଡଃ ମାରାଙ୍ଗ୍‌ ଯାଜାକ୍‌ରାଃ ଦାସିକେ ମାଆଃକିୟାଏ ଆଡଃ ଇନିୟାଃ ମିଆଁଦ୍‌ ଲୁତୁର୍‍ ହାଦ୍‍ତାଦାଏ ।
48 ௪௮ இயேசு அவர்களைப் பார்த்து: திருடனைப்பிடிக்கப் போகிறதைப்போல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்;
୪୮ଏନ୍ତେ ୟୀଶୁ ପୁରାଃ ହଡ଼କକେ କାଜିୟାଦ୍‍କଆଏ, “ଚିୟାଃ, ମିଆଁଦ୍‌ କୁମ୍ୱୁଡ଼ୁଲେକା ସାବିଙ୍ଗ୍‌ ନାଗେନ୍ତେ ତାରାଉଡ଼ିକ ଆଡଃ ଭଙ୍ଗାଟ୍‌କ ସାବ୍‌କେଦ୍‌ତେ ହିଜୁଃକାନାପେ?
49 ௪௯ நான் தினமும் உங்கள் நடுவிலே தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே; ஆனாலும் வேதவாக்கியங்கள் நிறைவேற வேண்டியதாக இருக்கிறது என்றார்.
୪୯ସବେନ୍‌ ହୁଲାଙ୍ଗ୍‌ ଆଇଙ୍ଗ୍‌ ମାନ୍ଦିର୍‌ ଅଡ଼ାଃରେ ଇତୁତାନ୍‌ଲଃ ଆପେଲଃ ତାଇକେନାଇଙ୍ଗ୍‌ ଆଡଃ ଆପେ କାପେ ସାବ୍‌କେଦିୟାଁଃ । ମେନ୍‌ଦ ଧାରାମ୍‌ପୁଥିରେ ଅଲାକାନ୍‌ତେୟାଃ ପୁରାଅଃକା ମେନ୍ତେ ନେ ସବେନାଃ ହବାଅଃତାନା ।”
50 ௫0 அப்பொழுது எல்லோரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள்.
୫୦ଏନ୍ତେଦ ଆୟାଃ ସବେନ୍‌ ଚେଲାକ ଇନିଃକେ ନିର୍‍ବାଗିକିୟାଃକ ।
51 ௫௧ ஒரு வாலிபன் ஒரு போர்வையைமட்டும் தன்மேல் போர்த்துக்கொண்டு அவர் பின்னால் போனான்; அவனைப் பிடித்தார்கள்.
୫୧ମିଆଁଦ୍‌ ଧାଙ୍ଗ୍‌ଡ଼ା ଇନିଃକେ ଅତଙ୍ଗ୍‌କିୟା, ଇନିଃ ସାମା ହଡ଼୍‌ମରେ ନିରାଲ୍‌ ଲିଜାଃଉୟୁକାନ୍ ତାଇକେନାଏ, ଚିମ୍‌ତା ସିପାଇକ ଧାଙ୍ଗ୍‌ଡ଼ାକେ ସାବ୍ ନାଗେନ୍ତେକ ହିଜୁଃୟାନା,
52 ௫௨ அவன் தன் போர்வையைப் போட்டுவிட்டு, நிர்வாணமாக அவர்களைவிட்டு ஓடிப்போனான்.
୫୨ଇନିଃ ଆୟାଃ ନିରାଲ୍‌ ଲିଜାଃ ବାଗିକେଦ୍‌ତେ, ଇନିଃ ସାମାହଡ଼୍‌ମ ନିର୍‍ୟାନାଏ ।
53 ௫௩ இயேசுவை அவர்கள் பிரதான ஆசாரியனிடத்தில் கொண்டுபோனார்கள்; அங்கே பிரதான ஆசாரியர்கள், மூப்பர்கள், வேதபண்டிதர்கள் எல்லோரும் கூடிவந்திருந்தார்கள்.
୫୩ଏନ୍ତେ ଇନ୍‌କୁ ୟୀଶୁକେ ମାରାଙ୍ଗ୍‌ ଯାଜାକ୍‌କତାଃ ଇଦିକିୟାଃକ । ଏନ୍ତାଃରେ ମୁଲ୍‌ ଯାଜାକ୍‌କ, ପ୍ରାଚିନ୍‌କ ଆଡଃ ଆଇନ୍‌ ଇତୁକ ହୁଣ୍ଡିୟାନା ।
54 ௫௪ பேதுரு தூரத்திலே அவருக்குப் பின்னேசென்று, பிரதான ஆசாரியனுடைய அரண்மனைக்குள் வந்து, காவலர்களுடன் உட்கார்ந்து, நெருப்பின் அருகில் குளிர்க்காய்ந்துகொண்டிருந்தான்.
୫୪ପାତ୍‌ରାସ୍‌ ସାଙ୍ଗିନ୍‌ଏତେ ମାରାଙ୍ଗ୍‌ ଯାଜାକ୍‌ଆଃ ଅଡ଼ାଃରାଚା ଜାକେଦ୍‌ ଅତଙ୍ଗ୍‌ ଇଦିକିୟାଏ । ଏନ୍ତାଃରେ ଇନିଃ ହରହଡ଼କଲଃ ଦୁବ୍‌କେଦ୍‌ତେ ସେଙ୍ଗେଲ୍‌ ଜୁରୁବ୍‌ତାନ୍‌ ତାଇକେନାଏ ।
55 ௫௫ அப்பொழுது பிரதான ஆசாரியர்களும் ஆலோசனை சங்கத்தினர்கள் அனைவரும் இயேசுவைக் கொலைசெய்கிறதற்கு அவருக்கு எதிராகச் சாட்சிகளைத் தேடினார்கள்; சாட்சிசொல்ல ஒருவரும் வரவில்லை.
୫୫ମୁଲ୍‌ ଯାଜାକ୍‌କ ଆଡଃ ପାଞ୍ଚେଟ୍‌ରେନ୍ ସବେନ୍‌କ ୟୀଶୁକେ ଗଜି ନାଗେନ୍ତେ ଗାୱାକ ଦାଣାଁଁବାଡ଼ା ତାଇକେନା, ମେନ୍‌ଦ ଏନା କାକ ନାମ୍‌ ଦାଡ଼ିକେଦା ।
56 ௫௬ அநேகர் அவருக்கு எதிராகப் பொய்சாட்சி சொல்லியும், அந்தச் சாட்சிகள் ஒத்துபோகவில்லை.
୫୬ପୁରାଃ ହଡ଼କ ଇନିୟାଃ ବିରୁଧ୍‌ରେ ହସଡ଼ ଗାୱାକ ଏମ୍‌କେଦାଃ, ମେନ୍‌ଦ ଇନ୍‌କୁଆଃ ଗାୱାକ ମିଦ୍‌ଲେକା କା ତାଇକେନା ।
57 ௫௭ அப்பொழுது சிலர் எழுந்து, கைகளால் கட்டப்பட்ட இந்த தேவாலயத்தை நான் இடித்துப்போட்டு, கைகளால் கட்டப்படாத வேறொன்றை மூன்று நாட்களுக்குள் கட்டுவேன் என்று இவன் சொன்னதை நாங்கள் கேட்டோம் என்று,
୫୭ଏନ୍ତେ ଚିମିନ୍‌ ହଡ଼କ ତିଙ୍ଗୁୟାନାକ, ଆଡଃ ୟୀଶୁଆଃ ବିରୁଧ୍‌ରେ ନେ ହସଡ଼ ଗାୱାକ ଏମ୍‌କେଦାଃ:
58 ௫௮ அவருக்கு எதிராகப் பொய்சாட்சி சொன்னார்கள்.
୫୮“ହଡ଼କଆଃ ତିଃଇତେ ବାଇୟାକାନ୍, ନେ ମାନ୍ଦିର୍‌କେ ହାଦୁଡ଼େଆଇଙ୍ଗ୍‌, ଆଡଃ ଆପିମାରେ, ହଡ଼କଆଃ ତିଃଇତେ କା ବାଇୟାକାନ୍‌ ମାନ୍ଦିର୍‌କେ ତିଙ୍ଗୁୟାଇଙ୍ଗ୍‌ ମେନ୍ତେ ନିଃକେ କାଜିତାନ୍‌ଲେ ଆୟୁମ୍‌କିୟା ।”
59 ௫௯ அப்படிச் சொல்லியும் அவர்களுடைய சாட்சிகள் ஒத்துபோகவில்லை.
୫୯ମେନ୍‌ଦ ଇନ୍‌କୁଆଃ ନେ କାଜିକରାଃ ଗାୱାକ କା ମିଦ୍‌ୟାନା ।
60 ௬0 அப்பொழுது பிரதான ஆசாரியன் எழுந்து நடுவே நின்று, இயேசுவைப் பார்த்து: இவர்கள் உனக்கு எதிராகச் சொல்லுகிறதைக்குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்று கேட்டான்.
୬୦ଏନ୍ତେ ମାରାଙ୍ଗ୍‌ ଯାଜାକ୍‌, ସବେନ୍‌କଆଃ ସାମ୍‌ନାଙ୍ଗ୍‌ରେ ତିଙ୍ଗୁକେଦ୍‌ତେ ୟୀଶୁକେ କୁଲିକିୟାଏ, “ନେ ହଡ଼କ ଆମାଃ ବିରୁଧ୍‌ରେ ଗାୱାକ ଏମ୍‌କେଦାଃ, ଚିୟାଃ ଆମ୍‌ ଜେତ୍‌ନାଃ କାମ୍‌କାଜି ରୁହାଡ଼େତାନା?”
61 ௬௧ அவரோ ஒரு பதிலும் சொல்லாமல் மவுனமாக இருந்தார். மீண்டும் பிரதான ஆசாரியன் அவரைப் பார்த்து: நீ ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? என்று கேட்டான்.
୬୧ମେନ୍‌ଦ ୟୀଶୁ ହାପାକାନ୍ ତାଇକେନାଏ ଆଡଃ ଜେତ୍‌ନାଃ କାଏ କାଜିରୁହାଡ଼୍‌କେଦା । ଆଡଃଗି ମାରାଙ୍ଗ୍‌ ଯାଜାକ୍‌ ଇନିଃକେ କୁଲିକିୟାଏ, “ଆମ୍‌ଗି ଚି ଖ୍ରୀଷ୍ଟ୍‌, ପାର୍‌ମେଶ୍ୱାର୍‌ରାଃ ହନ୍‌ ତାନ୍‌ମେ, ଅକଏୟାଃଚି ସବେନ୍‌ ମାଇନାନ୍‌ ତାନାଃ?”
62 ௬௨ அதற்கு இயேசு: நான் அவர்தான்; மனிதகுமாரன் சர்வவல்லவரின் வலதுபக்கத்தில் உட்கார்ந்து இருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் பார்ப்பீர்கள் என்றார்.
୬୨ୟୀଶୁ ମେତାଇୟାଏ, “ଆଇଙ୍ଗ୍‌ଗି ତାନିଙ୍ଗ୍‌ । ଆଇଙ୍ଗ୍‌ ମାନୱାହନ୍‌ ସବେନ୍‌ ପେଡ଼େୟାନ୍‌ନିୟାଃ ଜମ୍‌ତିସାଃରେ ଦୁବାକାନ୍‌ ଆଡଃ ସିର୍ମାରାଃ ରିମିଲ୍‌ରେ ଆଡ଼୍‌ଗୁନ୍‌ତାନ୍‌ପେ ନେଲିଙ୍ଗ୍‌ୟାଁ ।”
63 ௬௩ பிரதான ஆசாரியன் இதைக் கேட்டவுடனே, தன் உடைகளைக் கிழித்துக்கொண்டு: இதைவிட வேறுசாட்சிகள் நமக்கு வேண்டுமா?
୬୩ଏନ୍ତେ ମାରାଙ୍ଗ୍‌ ଯାଜାକ୍‌, ଆୟାଃ ଲିଜାଃ ଚାଗାଡ଼୍‌କେଦାଏ । “ଆବୁକେ ଆଡଃ ଚିକାନ୍‌ ଗାୱା ଲାଗାତିୟାଃଁ?” ମେନ୍ତେ ଇନିଃ କୁଲିକେଦ୍‌କଆଏ ।
64 ௬௪ தேவனை அவமதிப்பதைக் கேட்டீர்களே, இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்றுக் கேட்டான். அதற்கு அவர்கள் எல்லோரும்: இவன் மரணத்திற்குத் தகுதியானவன் என்று தீர்மானம்பண்ணினார்கள்.
୬୪“ଆପେଦ ପାର୍‌ମେଶ୍ୱାର୍‌ଆଃ ନିନ୍ଦାକାଜିପେ ଆୟୁମ୍‌କେଦା । ଚିନାଃପେ ବିଚାରେତାନା?” ସବେନ୍‌କ ଇନିୟାଃ ବିରୁଧ୍‌ରେ କାଜିକେଦାଃକ ଚି ଇନିଃକେ ଗନଏଃ ସାଜାଇ ଏମଃ ଲାଗାତିଙ୍ଗ୍‌ୟାଁଃ ।
65 ௬௫ அப்பொழுது சிலர் அவர்மேல் துப்பவும், அவருடைய முகத்தை மூடவும், அவரை அடிக்கவும், தீர்க்கதரிசனம் சொல் என்று சொல்லவும் தொடங்கினார்கள்; வேலைக்காரர்களும் அவரைக் கன்னத்தில் அறைந்தார்கள்.
୬୫ଏନ୍ତେ ଚିମିୟାଙ୍ଗ୍‌କ ୟୀଶୁକେ ବେଏକ୍‌କିୟାଃକ, ଆଡଃ ଇନିୟାଃ ମେଦ୍‌ ହାରୁବ୍‌କେଦ୍‌ତେ ଦାଲିତାନ୍‌ଲଃ କାଜିକିୟାଃକ, “ଆମ୍‌ ପରେ ନାବୀ ତାନ୍‌ମେ, ମାର୍‌ କାଜିଲେମେ, ଅକଏ ଦାଲ୍‌ମେତାନାଏ ।” ଆଡଃ ହରହଡ଼କ ଇନିଃକେ ସାବ୍‌କେଦ୍‌ତେ ଥାପ୍‌ଡ଼ିକିୟାଃକ ।
66 ௬௬ அந்தநேரத்தில் பேதுரு கீழே உள்ள அரண்மனை முற்றத்தில் இருக்கும்போது, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரிகளில் ஒரு பெண் வந்து,
୬୬ଚିମ୍‌ତା ପାତ୍‌ରାସ୍‌ ଲାତାର୍‌ ଅଡ଼ାଃରାଚାରେ ତାଇକେନ୍‌ରେ, ମାରାଙ୍ଗ୍‌ ଯାଜାକ୍‌ରାଃ ମିଆଁଦ୍‌ କାମ୍‌ଡ଼ିକୁଡ଼ି ହିଜୁଃୟାନାଏ ।
67 ௬௭ குளிர்க்காய்ந்துகொண்டிருந்த பேதுருவை உற்றுப்பார்த்து: நீயும் நசரேயனாகிய இயேசுவோடு இருந்தவன் என்றாள்.
୬୭ଆଡଃ ପାତ୍‌ରାସ୍‌କେ ଜୁରୁବ୍‌ତାନ୍‌ ନେଲ୍‌କିୟାଏ, ଇନିଃକେ ଆରିଦ୍‍ବାଇକେଦ୍‍ତେ ମେତାଇୟାଏ, “ଆମ୍‌ଅଗି ନାଜ୍‌ରେତ୍‌ରେନ୍‌, ୟୀଶୁଲଃ ତାଇକେନାମ୍‌ ।”
68 ௬௮ அதற்கு அவன்: எனக்கு ஒன்றும் புரியவில்லை; நீ சொல்வது எனக்குத் தெரியாது என்று மறுதலித்து, வாசல் மண்டபத்திற்கு வெளியேப் போனான்; அப்பொழுது சேவல் கூவியது.
୬୮ମେନ୍‌ଦ ଇନିଃ କାହାଗି ମେନ୍‍କେଦ୍‌ତେ, କାଜିରୁହାଡ଼୍‌କେଦାଏ, “ଆଇଙ୍ଗ୍‌ ଇନିଃକେ କାଇଙ୍ଗ୍‌ ସାରିୟା । ଆମ୍‌ ଚିନାଃମ୍‌ କାଜିତାନା ଆଇଙ୍ଗ୍‌ କାଇଙ୍ଗ୍‌ ମୁଣ୍ଡିଅଃତାନାଃ ।” ଏନ୍ତେ ଇନିଃ ବଲଃଦୁଆର୍‍ତେ ସେନଃୟାନାଏ, ଇମ୍‌ତାଗି ସାଣ୍ଡିସିମ୍‌ ରାଆଃକେଦାଏ ।
69 ௬௯ வேலைக்காரி அவனை மீண்டும் பார்த்து: இவன் அவர்களில் ஒருவன் என்று அருகே நின்றவர்களுக்குச் சொன்னாள்.
୬୯ଆଡଃମିସା କାମ୍‌ଡ଼ିକୁଡ଼ି ଇନିଃକେ ନେଲ୍‌କିଃତେ, ଜାପାଃକରେ ତିଙ୍ଗୁଆକାନ୍‌ ହଡ଼କକେ ମେତାଦ୍‌କଆଏ, “ନିଃଇହ ଇନ୍‌କୁଏତେ ମିଆଁଦ୍‌ନିଃ ତାନିଃ ।”
70 ௭0 அவன் மீண்டும் மறுதலித்தான். சிறிதுநேரத்திற்குப்பின்பு மீண்டும் அருகே நிற்கிறவர்கள் பேதுருவைப் பார்த்து: உண்மையாகவே நீ அவர்களில் ஒருவன், நீ கலிலேயன், உன் பேச்சு அதற்கு ஒத்திருக்கிறது என்றார்கள்.
୭୦ମେନ୍‌ଦ ପାତ୍‌ରାସ୍‌ ଆଡଃଗି “କାହାଗି” ମେନ୍‍କେଦାଏ । ଘାଡ଼ିକାଦ୍‌ ତାୟମ୍‌ତେ ଏନ୍ତାଃରେ ତିଙ୍ଗୁଆକାନ୍‍କ ପାତ୍‌ରାସ୍‌କେକ କାଜିକିୟା, “ସାର୍‌ତିଗି, ଆମ୍‌ ଇନ୍‌କୁଏତେ ମିଆଁଦ୍‌ନିଃ ତାନ୍‌ମେ, ଚିୟାଃଚି ଆମ୍‌ଅଗି ଗାଲିଲ୍‌ରେନ୍ ତାନ୍‌ମେ ।”
71 ௭௧ அதற்கு அவன்: நீங்கள் சொல்லுகிற மனிதனை எனக்குத் தெரியாது என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம் செய்யவும் தொடங்கினான்.
୭୧ଏନ୍ତେ ପାତ୍‌ରାସ୍‌ କିରିୟା ଜମ୍‍କେଦ୍‍ତେ କାଜିକେଦାଏ, “ଆପେ କାଜିତାନ୍ ନେ ହଡ଼କେ ଆଇଙ୍ଗ୍‌ କାଇଙ୍ଗ୍‌ ସାରିଆଃ ।”
72 ௭௨ உடனே சேவல் இரண்டாம்முறை கூவியது. சேவல் இரண்டுமுறை கூவுகிறதற்கு முன்பே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று இயேசு தனக்குச் சொன்ன வார்த்தையை பேதுரு நினைத்துப்பார்த்து, மிகவும் அழுதான்.
୭୨ଏନ୍ତେ ଇମ୍‌ତାଙ୍ଗ୍‌ଗି ସାଣ୍ଡିସିମ୍‌ ବାର୍‍ସାଏ ରାଆଃକେଦାଃ, ଆଡଃ “ସାଣ୍ଡିସିମ୍‌ ବାର୍‌ସା ଆଉରି ରାଆଃ ସିଦାରେ ଆପିସା ଆଇଙ୍ଗ୍‌କେ କାଇଙ୍ଗ୍‌ ସାରିଆ ମେନ୍ତେ କାଜିୟାମ୍‌,” ଏନା ୟୀଶୁ କାଜିଲେଦ୍‌କାଜି ପାତ୍‌ରାସ୍‌ ପାହାମ୍‍କେଦାଏ । ଆଡଃ ଇନିଃ କୁସୁଦ୍‌ କୁସୁଦ୍‍ତାନ୍ ରାଆଃକେଦାଏ ।

< மாற்கு 14 >