< மாற்கு 12 >

1 பின்பு இயேசு உவமைகளாக அவர்களுக்குச் சொன்னது: ஒரு மனிதன் ஒரு திராட்சைத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலி அடைத்து, திராட்சை ஆலையை உண்டுபண்ணி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரர்களுக்கு அதைக் குத்தகைக்கு விட்டு, வேறு தேசத்திற்குச் சென்றிருந்தான்.
అనన్తరం యీశు ర్దృష్టాన్తేన తేభ్యః కథయితుమారేభే, కశ్చిదేకో ద్రాక్షాక్షేత్రం విధాయ తచ్చతుర్దిక్షు వారణీం కృత్వా తన్మధ్యే ద్రాక్షాపేషణకుణ్డమ్ అఖనత్, తథా తస్య గడమపి నిర్మ్మితవాన్ తతస్తత్క్షేత్రం కృషీవలేషు సమర్ప్య దూరదేశం జగామ|
2 தோட்டக்காரர்களிடம் திராட்சைத்தோட்டத்துக் கனிகளில் தன் பங்கை வாங்கிக்கொண்டுவரும்படி, பருவகாலத்திலே அவர்களிடம் ஒரு வேலைக்காரனை அனுப்பினான்.
తదనన్తరం ఫలకాలే కృషీవలేభ్యో ద్రాక్షాక్షేత్రఫలాని ప్రాప్తుం తేషాం సవిధే భృత్యమ్ ఏకం ప్రాహిణోత్|
3 அவர்கள் அவனைப் பிடித்து, அடித்து, வெறுமையாக அனுப்பிவிட்டார்கள்.
కిన్తు కృషీవలాస్తం ధృత్వా ప్రహృత్య రిక్తహస్తం విససృజుః|
4 பின்பு வேறொரு வேலைக்காரனை அவர்களிடம் அனுப்பினான்; அவர்கள் அவனைக் கல்லால் அடித்து, தலையைக் காயப்படுத்தி, அவமானப்படுத்தி, அனுப்பிவிட்டார்கள்.
తతః స పునరన్యమేకం భృత్యం ప్రషయామాస, కిన్తు తే కృషీవలాః పాషాణాఘాతైస్తస్య శిరో భఙ్క్త్వా సాపమానం తం వ్యసర్జన్|
5 மீண்டும் வேறொருவனை அனுப்பினான்; அவனை அவர்கள் கொலைசெய்தார்கள். வேறு அநேகரையும் அனுப்பினான்; அவர்களில் சிலரை அடித்து, சிலரைக் கொன்றுபோட்டார்கள்.
తతః పరం సోపరం దాసం ప్రాహిణోత్ తదా తే తం జఘ్నుః, ఏవమ్ అనేకేషాం కస్యచిత్ ప్రహారః కస్యచిద్ వధశ్చ తైః కృతః|
6 அவனுக்குப் பிரியமான ஒரே குமாரன் இருந்தான்; என் குமாரனை மதிப்பார்கள் என்று சொல்லி, அவனையும் கடைசியிலே அவர்களிடம் அனுப்பினான்.
తతః పరం మయా స్వపుత్రే ప్రహితే తే తమవశ్యం సమ్మంస్యన్తే, ఇత్యుక్త్వావశేషే తేషాం సన్నిధౌ నిజప్రియమ్ అద్వితీయం పుత్రం ప్రేషయామాస|
7 தோட்டக்காரர்களோ: இவனே சொத்திற்கு வாரிசு, இவனைக் கொலைசெய்வோம் வாருங்கள்; அப்பொழுது சொத்து நம்முடையதாகும் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு;
కిన్తు కృషీవలాః పరస్పరం జగదుః, ఏష ఉత్తరాధికారీ, ఆగచ్ఛత వయమేనం హన్మస్తథా కృతే ఽధికారోయమ్ అస్మాకం భవిష్యతి|
8 அவனைப் பிடித்துக் கொலைசெய்து, திராட்சைத்தோட்டத்திற்குப் வெளியே எறிந்துவிட்டார்கள்.
తతస్తం ధృత్వా హత్వా ద్రాక్షాక్షేత్రాద్ బహిః ప్రాక్షిపన్|
9 அப்படியிருக்க, திராட்சைத்தோட்டத்திற்கு எஜமான் என்ன செய்வான்? அவன் வந்து அந்தத் தோட்டக்காரர்களைக் கொன்று, திராட்சைத்தோட்டத்தை மற்றவர்களுக்கு ஒப்புக்கொடுப்பான் அல்லவா?
అనేనాసౌ ద్రాక్షాక్షేత్రపతిః కిం కరిష్యతి? స ఏత్య తాన్ కృషీవలాన్ సంహత్య తత్క్షేత్రమ్ అన్యేషు కృషీవలేషు సమర్పయిష్యతి|
10 ௧0 வீடுகட்டுகிறவர்கள் வேண்டாம் என்று ஒதுக்கிய கல்லே மூலைக்குத் தலைக்கல்லானது;
అపరఞ్చ, "స్థపతయః కరిష్యన్తి గ్రావాణం యన్తు తుచ్ఛకం| ప్రాధానప్రస్తరః కోణే స ఏవ సంభవిష్యతి|
11 ௧௧ அது கர்த்தராலே நடந்தது, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று எழுதியிருக்கிற வாக்கியத்தை நீங்கள் வாசிக்கவில்லையா!” என்றார்.
ఏతత్ కర్మ్మ పరేశస్యాంద్భుతం నో దృష్టితో భవేత్|| " ఇమాం శాస్త్రీయాం లిపిం యూయం కిం నాపాఠిష్ట?
12 ௧௨ இந்த உவமையைத் தங்களைக்குறித்துச் சொன்னார் என்று அவர்கள் அறிந்து, அவரைக் கைது செய்ய முயற்சிசெய்தார்கள்; ஆனாலும் மக்களுக்குப் பயந்து, அவரைவிட்டுப் போய்விட்டார்கள்.
తదానీం స తానుద్దిశ్య తాం దృష్టాన్తకథాం కథితవాన్, త ఇత్థం బుద్వ్వా తం ధర్త్తాముద్యతాః, కిన్తు లోకేభ్యో బిభ్యుః, తదనన్తరం తే తం విహాయ వవ్రజుః|
13 ௧௩ அவர்கள், இயேசுவை அவரது பேச்சிலே சிக்கவைக்கும்படி, பரிசேயர்களிலும் ஏரோதியர்களிலும் சிலரை அவரிடம் அனுப்பினார்கள்.
అపరఞ్చ తే తస్య వాక్యదోషం ధర్త్తాం కతిపయాన్ ఫిరూశినో హేరోదీయాంశ్చ లోకాన్ తదన్తికం ప్రేషయామాసుః|
14 ௧௪ அவர்கள் வந்து: போதகரே, நீர் சத்தியமுள்ளவர் என்றும், எவனைக்குறித்தும் உமக்குக் கவலையில்லை என்றும் அறிந்திருக்கிறோம், நீர் முகதாட்சிணியம் இல்லாதவராக தேவனுடைய வழிகளைச் சத்தியமாகப் போதிக்கிறீர், இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ, இல்லையோ? நாம் வரி கொடுக்கலாமா, வேண்டாமா? என்று கேட்டார்கள்.
త ఆగత్య తమవదన్, హే గురో భవాన్ తథ్యభాషీ కస్యాప్యనురోధం న మన్యతే, పక్షపాతఞ్చ న కరోతి, యథార్థత ఈశ్వరీయం మార్గం దర్శయతి వయమేతత్ ప్రజానీమః, కైసరాయ కరో దేయో న వాం? వయం దాస్యామో న వా?
15 ௧௫ அவர்களுடைய தந்திரத்தை அவர் அறிந்து: நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்? நான் பார்ப்பதற்கு ஒரு பணத்தை என்னிடம் கொண்டுவாருங்கள் என்றார்.
కిన్తు స తేషాం కపటం జ్ఞాత్వా జగాద, కుతో మాం పరీక్షధ్వే? ఏకం ముద్రాపాదం సమానీయ మాం దర్శయత|
16 ௧௬ அவர்கள் அதைக் கொண்டுவந்தார்கள். அப்பொழுது அவர்: இந்தப் படமும் மேலே உள்ள எழுத்தும் யாருடையது என்று கேட்டார்; ரோம அரசாங்கத்திற்கு உரியது என்றார்கள்.
తదా తైరేకస్మిన్ ముద్రాపాదే సమానీతే స తాన్ పప్రచ్ఛ, అత్ర లిఖితం నామ మూర్త్తి ర్వా కస్య? తే ప్రత్యూచుః, కైసరస్య|
17 ௧௭ அதற்கு இயேசு: அரசாங்கத்திற்குரியதை அரசாங்கத்திற்கும், தேவனுக்குரியதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார். அவர்கள் அவரைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
తదా యీశురవదత్ తర్హి కైసరస్య ద్రవ్యాణి కైసరాయ దత్త, ఈశ్వరస్య ద్రవ్యాణి తు ఈశ్వరాయ దత్త; తతస్తే విస్మయం మేనిరే|
18 ௧௮ உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிற சதுசேயர்கள் அவரிடம் வந்து:
అథ మృతానాముత్థానం యే న మన్యన్తే తే సిదూకినో యీశోః సమీపమాగత్య తం పప్రచ్ఛుః;
19 ௧௯ போதகரே, ஒருவனுடைய சகோதரன் வாரிசு இல்லாமல் தன் மனைவியைவிட்டு மரித்துப்போனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை திருமணம்செய்து, தன் சகோதரனுக்காக வாரிசை உண்டாக்கவேண்டும் என்று மோசே எங்களுக்கு எழுதிவைத்திருக்கிறாரே.
హే గురో కశ్చిజ్జనో యది నిఃసన్తతిః సన్ భార్య్యాయాం సత్యాం మ్రియతే తర్హి తస్య భ్రాతా తస్య భార్య్యాం గృహీత్వా భ్రాతు ర్వంశోత్పత్తిం కరిష్యతి, వ్యవస్థామిమాం మూసా అస్మాన్ ప్రతి వ్యలిఖత్|
20 ௨0 இப்படியிருக்க, ஏழு சகோதரர்கள் இருந்தார்கள்; மூத்தவன் ஒரு பெண்ணைத் திருமணம்செய்து, குழந்தை இல்லாமல் மரித்துப்போனான்.
కిన్తు కేచిత్ సప్త భ్రాతర ఆసన్, తతస్తేషాం జ్యేష్ఠభ్రాతా వివహ్య నిఃసన్తతిః సన్ అమ్రియత|
21 ௨௧ இரண்டாம் சகோதரன் அவளை திருமணம்செய்து, அவனும் குழந்தை இல்லாமல் மரித்துப்போனான். மூன்றாம் சகோதரனுக்கும் அப்படியே நடந்தது.
తతో ద్వితీయో భ్రాతా తాం స్త్రియమగృహణత్ కిన్తు సోపి నిఃసన్తతిః సన్ అమ్రియత; అథ తృతీయోపి భ్రాతా తాదృశోభవత్|
22 ௨௨ ஏழுபேரும் அவளைத் திருமணம்செய்து, குழந்தை இல்லாமல் மரித்துப்போனார்கள். எல்லோருக்கும்பின்பு அந்தப் பெண்ணும் மரித்துப்போனாள்.
ఇత్థం సప్తైవ భ్రాతరస్తాం స్త్రియం గృహీత్వా నిఃసన్తానాః సన్తోఽమ్రియన్త, సర్వ్వశేషే సాపి స్త్రీ మ్రియతే స్మ|
23 ௨௩ எனவே, உயிர்த்தெழுதலில், அவர்கள் எழுந்திருக்கும்போது, அவர்களில் யாருக்கு அவள் மனைவியாக இருப்பாள்? ஏழுபேரும் அவளைத் திருமணம் செய்திருந்தார்களே என்று கேட்டார்கள்.
అథ మృతానాముత్థానకాలే యదా త ఉత్థాస్యన్తి తదా తేషాం కస్య భార్య్యా సా భవిష్యతి? యతస్తే సప్తైవ తాం వ్యవహన్|
24 ௨௪ இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாததினாலே தவறான எண்ணங்கொள்ளுகிறீர்கள்.
తతో యీశుః ప్రత్యువాచ శాస్త్రమ్ ఈశ్వరశక్తిఞ్చ యూయమజ్ఞాత్వా కిమభ్రామ్యత న?
25 ௨௫ மரித்தவர்கள் உயிரோடு எழுந்திருக்கும்போது திருமணம் செய்வதும், திருமணம்செய்து கொடுப்பதும் இல்லை. அவர்கள் பரலோகத்தில் தேவதூதர்களைப்போல இருப்பார்கள்.
మృతలోకానాముత్థానం సతి తే న వివహన్తి వాగ్దత్తా అపి న భవన్తి, కిన్తు స్వర్గీయదూతానాం సదృశా భవన్తి|
26 ௨௬ மரித்தவர்கள் உயிரோடு எழுந்திருப்பதைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாக இருக்கிறேன் என்று, தேவன் முள்செடியைக்குறித்துச் சொல்லிய இடத்தில், மோசேயின் புத்தகத்தில் அவனுக்குச் சொன்னதை நீங்கள் வாசிக்கவில்லையா?
పునశ్చ "అహమ్ ఇబ్రాహీమ ఈశ్వర ఇస్హాక ఈశ్వరో యాకూబశ్చేశ్వరః" యామిమాం కథాం స్తమ్బమధ్యే తిష్ఠన్ ఈశ్వరో మూసామవాదీత్ మృతానాముత్థానార్థే సా కథా మూసాలిఖితే పుస్తకే కిం యుష్మాభి ర్నాపాఠి?
27 ௨௭ அவர் மரித்தவர்களுக்கு தேவனாக இல்லாமல், ஜீவனுள்ளவர்களுக்கு தேவனாக இருக்கிறார்; அதை நீங்கள் தவறாக புரிந்துகொள்ளுகிறீர்கள் என்றார்.
ఈశ్వరో జీవతాం ప్రభుః కిన్తు మృతానాం ప్రభు ర్న భవతి, తస్మాద్ధేతో ర్యూయం మహాభ్రమేణ తిష్ఠథ|
28 ௨௮ வேதபண்டிதர்களில் ஒருவன் அவர்கள் வாக்குவாதம்பண்ணுகிறதைக்கேட்டு, அவர்களுக்கு நன்றாக பதில் சொன்னார் என்று அறிந்து, அவரிடம் வந்து: கட்டளைகளிலெல்லாம் பிரதான கட்டளை எது என்று கேட்டான்.
ఏతర్హి ఏకోధ్యాపక ఏత్య తేషామిత్థం విచారం శుశ్రావ; యీశుస్తేషాం వాక్యస్య సదుత్తరం దత్తవాన్ ఇతి బుద్వ్వా తం పృష్టవాన్ సర్వ్వాసామ్ ఆజ్ఞానాం కా శ్రేష్ఠా? తతో యీశుః ప్రత్యువాచ,
29 ௨௯ இயேசு அவனுக்கு மறுமொழியாக: கட்டளைகளிலெல்லாம் பிரதான கட்டளை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
"హే ఇస్రాయేల్లోకా అవధత్త, అస్మాకం ప్రభుః పరమేశ్వర ఏక ఏవ,
30 ௩0 உன் தேவனாகிய கர்த்தரிடம் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழு பலத்தோடும் அன்புசெலுத்துவாயாக என்பதே பிரதான கட்டளை.
యూయం సర్వ్వన్తఃకరణైః సర్వ్వప్రాణైః సర్వ్వచిత్తైః సర్వ్వశక్తిభిశ్చ తస్మిన్ ప్రభౌ పరమేశ్వరే ప్రీయధ్వం," ఇత్యాజ్ఞా శ్రేష్ఠా|
31 ௩௧ இதற்கு ஒப்பாக இருக்கிற இரண்டாம் கட்டளை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புசெலுத்துவதுபோல மற்றவனிடத்திலும் அன்புசெலுத்துவாயாக என்பதே; இவைகளைவிட பெரிய கட்டளை வேறொன்றும் இல்லை என்றார்.
తథా "స్వప్రతివాసిని స్వవత్ ప్రేమ కురుధ్వం," ఏషా యా ద్వితీయాజ్ఞా సా తాదృశీ; ఏతాభ్యాం ద్వాభ్యామ్ ఆజ్ఞాభ్యామ్ అన్యా కాప్యాజ్ఞా శ్రేష్ఠా నాస్తి|
32 ௩௨ அதற்கு வேதபண்டிதன்: சரிதான் போதகரே, நீர் சொன்னது சத்தியம்; ஒரே தேவன் உண்டு, அவரைத்தவிர வேறொரு தேவன் இல்லை.
తదా సోధ్యాపకస్తమవదత్, హే గురో సత్యం భవాన్ యథార్థం ప్రోక్తవాన్ యత ఏకస్మాద్ ఈశ్వరాద్ అన్యో ద్వితీయ ఈశ్వరో నాస్తి;
33 ௩௩ முழு இருதயத்தோடும், முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழுப் பலத்தோடும் அவரிடத்தில் அன்பு செலுத்துகிறதும், தன்னிடத்தில் அன்பு செலுத்துகிறதுபோல மற்றவனிடத்தில் அன்பு செலுத்துகிறதுதான் தகனபலிகளையும் மற்ற எல்லா பலிகளையும்விட முக்கியமாக இருக்கிறது என்றான்.
అపరం సర్వ్వాన్తఃకరణైః సర్వ్వప్రాణైః సర్వ్వచిత్తైః సర్వ్వశక్తిభిశ్చ ఈశ్వరే ప్రేమకరణం తథా స్వమీపవాసిని స్వవత్ ప్రేమకరణఞ్చ సర్వ్వేభ్యో హోమబలిదానాదిభ్యః శ్రష్ఠం భవతి|
34 ௩௪ அவன் ஞானமாக பதில் சொன்னதை இயேசு பார்த்து: நீ தேவனுடைய ராஜ்யத்திற்குத் தூரமானவன் இல்லை என்றார். அதன்பின்பு ஒருவரும் அவரிடம் எந்தக் கேள்வியும் கேட்கத் துணியவில்லை.
తతో యీశుః సుబుద్ధేరివ తస్యేదమ్ ఉత్తరం శ్రుత్వా తం భాషితవాన్ త్వమీశ్వరస్య రాజ్యాన్న దూరోసి| ఇతః పరం తేన సహ కస్యాపి వాక్యస్య విచారం కర్త్తాం కస్యాపి ప్రగల్భతా న జాతా|
35 ௩௫ இயேசு தேவாலயத்தில் உபதேசம்பண்ணும்போது, அவர்: கிறிஸ்து தாவீதின் குமாரன் என்று வேதபண்டிதர்கள் எப்படிச் சொல்லுகிறார்கள்?
అనన్తరం మధ్యేమన్దిరమ్ ఉపదిశన్ యీశురిమం ప్రశ్నం చకార, అధ్యాపకా అభిషిక్తం (తారకం) కుతో దాయూదః సన్తానం వదన్తి?
36 ௩௬ நான் உம்முடைய எதிரிகளை உம்முடைய கால்களுக்குக் கீழே போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடு சொன்னார் என்று தாவீது பரிசுத்த ஆவியானவராலே சொல்லியிருக்கிறானே.
స్వయం దాయూద్ పవిత్రస్యాత్మన ఆవేశేనేదం కథయామాస| యథా| "మమ ప్రభుమిదం వాక్యవదత్ పరమేశ్వరః| తవ శత్రూనహం యావత్ పాదపీఠం కరోమి న| తావత్ కాలం మదీయే త్వం దక్షపార్శ్వ్ ఉపావిశ| "
37 ௩௭ தாவீதே, அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்கும்போது, அவனுக்கு அவர் குமாரனாக இருப்பது எப்படி என்றார். அநேக மக்கள் அவருடைய உபதேசத்தை விருப்பத்தோடு கேட்டார்கள்.
యది దాయూద్ తం ప్రభూం వదతి తర్హి కథం స తస్య సన్తానో భవితుమర్హతి? ఇతరే లోకాస్తత్కథాం శ్రుత్వాననన్దుః|
38 ௩௮ இயேசு உபதேசம்பண்ணும்போது அவர்களைப் பார்த்து: வேதபண்டிதர்கள் நீண்ட அங்கிகளை அணிந்துகொண்டு திரியவும், சந்தைவெளிகளில் வாழ்த்துக்களை விரும்பியும்,
తదానీం స తానుపదిశ్య కథితవాన్ యే నరా దీర్ఘపరిధేయాని హట్టే విపనౌ చ
39 ௩௯ ஜெப ஆலயங்களில் முதன்மையான இருக்கைகளில் உட்காரவும், விருந்துகளில் முதன்மையான இடங்களில் இருக்கவும் விரும்பி,
లోకకృతనమస్కారాన్ భజనగృహే ప్రధానాసనాని భోజనకాలే ప్రధానస్థానాని చ కాఙ్క్షన్తే;
40 ௪0 விதவைகளின் வீடுகளையும், சொத்துக்களையும் ஏமாற்றி, பார்வைக்கு நீண்ட ஜெபம்பண்ணுகிற வேதபண்டிதர்களைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள்; அவர்கள் அதிகத் தண்டனை அடைவார்கள் என்றார்.
విధవానాం సర్వ్వస్వం గ్రసిత్వా ఛలాద్ దీర్ఘకాలం ప్రార్థయన్తే తేభ్య ఉపాధ్యాయేభ్యః సావధానా భవత; తేఽధికతరాన్ దణ్డాన్ ప్రాప్స్యన్తి|
41 ௪௧ இயேசு காணிக்கைப்பெட்டிக்கு எதிராக உட்கார்ந்து, மக்கள் காணிக்கைப் பெட்டியில் பணம் போடுகிறதைப் பார்த்துக்கொண்டிருந்தார்; செல்வந்தர்கள் அநேகர் அதிகமாகப் போட்டார்கள்.
తదనన్తరం లోకా భాణ్డాగారే ముద్రా యథా నిక్షిపన్తి భాణ్డాగారస్య సమ్ముఖే సముపవిశ్య యీశుస్తదవలులోక; తదానీం బహవో ధనినస్తస్య మధ్యే బహూని ధనాని నిరక్షిపన్|
42 ௪௨ ஏழையான ஒரு விதவையும் வந்து, ஒரு நாணய மதிப்பிற்கு சரியான இரண்டு காசுகளைப் போட்டாள்.
పశ్చాద్ ఏకా దరిద్రా విధవా సమాగత్య ద్విపణమూల్యాం ముద్రైకాం తత్ర నిరక్షిపత్|
43 ௪௩ அப்பொழுது அவர் தம்முடைய சீடர்களை அழைத்து, காணிக்கைப் பெட்டியில் பணம் போட்ட மற்ற எல்லோரையும்விட இந்த ஏழை விதவை அதிகமாகப் போட்டாள் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்;
తదా యీశుః శిష్యాన్ ఆహూయ కథితవాన్ యుష్మానహం యథార్థం వదామి యే యే భాణ్డాగారేఽస్మిన ధనాని నిఃక్షిపన్తి స్మ తేభ్యః సర్వ్వేభ్య ఇయం విధవా దరిద్రాధికమ్ నిఃక్షిపతి స్మ|
44 ௪௪ அவர்களெல்லோரும் தங்களுடைய பரிபூரணத்திலிருந்து எடுத்துப்போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தான் வாழ்வதற்காக வைத்திருந்த எல்லாவற்றையும் போட்டுவிட்டாள் என்றார்.
యతస్తే ప్రభూతధనస్య కిఞ్చిత్ నిరక్షిపన్ కిన్తు దీనేయం స్వదినయాపనయోగ్యం కిఞ్చిదపి న స్థాపయిత్వా సర్వ్వస్వం నిరక్షిపత్|

< மாற்கு 12 >