< மாற்கு 12 >
1 ௧ பின்பு இயேசு உவமைகளாக அவர்களுக்குச் சொன்னது: ஒரு மனிதன் ஒரு திராட்சைத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலி அடைத்து, திராட்சை ஆலையை உண்டுபண்ணி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரர்களுக்கு அதைக் குத்தகைக்கு விட்டு, வேறு தேசத்திற்குச் சென்றிருந்தான்.
ଇଦାଂ ପାଚେ ହେୱାନ୍ ହେୱାରିଂ ଉତର୍ମୁଡ଼୍ ଇଞ୍ଜେଙ୍ଗ୍ ଲାଗାତାନ୍ । “ରକାନ୍ ର ଅଙ୍ଗୁର୍ ବାଡ଼୍ କିଜ଼ି ତା ଚାରିବେଣ୍ତାଂ ବାଡ଼୍ ଡ଼ଚ୍ଚାନ୍ ଆରି ଅଙ୍ଗୁର୍କୁଣ୍ଡି କାର୍ଚି କାନାକାର୍ ମାଚା ରଚ୍ଚାନ୍, ଆରେ କାମାୟ୍ କିନାକାରିଂ ହେ ବାଡ଼୍ ବାଗ୍ରେ ହିଜ଼ି ରାଜି ହତାନ୍ ।
2 ௨ தோட்டக்காரர்களிடம் திராட்சைத்தோட்டத்துக் கனிகளில் தன் பங்கை வாங்கிக்கொண்டுவரும்படி, பருவகாலத்திலே அவர்களிடம் ஒரு வேலைக்காரனை அனுப்பினான்.
ପାଚେ କାମାୟ୍ କିନାକାର୍ତାଂ ଅଙ୍ଗୁର୍ ବାଡ଼୍ନି ପାଡ଼୍ ପାୟା ଆଦେଂ ଇଞ୍ଜି ହେୱାନ୍ ର ଆଡ଼ିଏନିଂ ସମାନ୍ ୱେଡ଼ାଲିଂ ହେୱାର୍ ତାକେ ପକ୍ତାନ୍ ।
3 ௩ அவர்கள் அவனைப் பிடித்து, அடித்து, வெறுமையாக அனுப்பிவிட்டார்கள்.
ମାତର୍ ହେୱାର୍ ହେୱାନିଂ ଆଜ଼ି ଟ୍ରାକ୍ତାର୍ ଆରି ୱାରା କେଇଦାଂ ପକ୍ତାର୍ ।
4 ௪ பின்பு வேறொரு வேலைக்காரனை அவர்களிடம் அனுப்பினான்; அவர்கள் அவனைக் கல்லால் அடித்து, தலையைக் காயப்படுத்தி, அவமானப்படுத்தி, அனுப்பிவிட்டார்கள்.
ହେୱାନ୍ ଆରି ରକାନିଂ ଆଡ଼ିୟାଂ ପକ୍ତାନ୍; ହେୱାର୍ ହେୱାନ୍ତି ପା କାପ୍ଡ଼ା ପାଟ୍ତାର୍ ଆରି ହେୱାନିଂ ହିନସ୍ତା କିତାର୍ ।
5 ௫ மீண்டும் வேறொருவனை அனுப்பினான்; அவனை அவர்கள் கொலைசெய்தார்கள். வேறு அநேகரையும் அனுப்பினான்; அவர்களில் சிலரை அடித்து, சிலரைக் கொன்றுபோட்டார்கள்.
ହେୱାନ୍ ଆରେ ରକାନିଂ ପକ୍ତାନ୍; ହେୱାର୍ ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ପା ଟୁଟାର୍ । ହେବେ ହେୱାନ୍ ଆରେ ହେନିତିଂ ପକ୍ତାନ୍; ହେୱାର୍ ତାଙ୍ଗ୍ ପା କେତେକ୍ ଜାଣ୍ତିଂ ହେୱାର୍ ଟ୍ରାକ୍ତାର୍ ଆରେ କେତେକ୍ ଜାଣ୍ତିଂ ଟୁଟାର୍ ।
6 ௬ அவனுக்குப் பிரியமான ஒரே குமாரன் இருந்தான்; என் குமாரனை மதிப்பார்கள் என்று சொல்லி, அவனையும் கடைசியிலே அவர்களிடம் அனுப்பினான்.
ତା କଚଣ୍ତ ରକାନ୍ ମାତର୍ ମାଚାନ୍, ହେୱାନ୍ ତା ୱାରିନି ମାଜ଼ି । ନା ମାଜ଼ିଂ ହେୱାର୍ ମାନିିକିନାର୍, ଇଦାଂ ଇଞ୍ଜି ହେୱାନ୍ ହାରିହାରା ହେୱାନିଂ ହେୱାର୍ ତାକେ ପକ୍ତାନ୍ ।”
7 ௭ தோட்டக்காரர்களோ: இவனே சொத்திற்கு வாரிசு, இவனைக் கொலைசெய்வோம் வாருங்கள்; அப்பொழுது சொத்து நம்முடையதாகும் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு;
ମାତର୍ ହେ କୁଲିୟାର୍ ହେୱାର୍ ହେୱାର୍ ବେଣ୍କିବା ଆତାର୍ ଇୱାନ୍ତ ମୁଣିକା କାଡ଼୍ଦେ, ୱାଡୁ, ଇୱାନିଂ ଅହ୍ନାସ୍; ତା ଆତିସ୍ ମାଦାଂ ଆଦିକାର୍ ଆନାତ୍!
8 ௮ அவனைப் பிடித்துக் கொலைசெய்து, திராட்சைத்தோட்டத்திற்குப் வெளியே எறிந்துவிட்டார்கள்.
ହେବେଣ୍ଡାଂ ହେୱାର୍ ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ଆସ୍ତି ଅସ୍ତାର୍ ଆରି ଅଙ୍ଗୁର୍ ବାଡ଼୍ ବାର୍ତ ତୁହିତାର୍ ।
9 ௯ அப்படியிருக்க, திராட்சைத்தோட்டத்திற்கு எஜமான் என்ன செய்வான்? அவன் வந்து அந்தத் தோட்டக்காரர்களைக் கொன்று, திராட்சைத்தோட்டத்தை மற்றவர்களுக்கு ஒப்புக்கொடுப்பான் அல்லவா?
“ହେବେ ଅଙ୍ଗୁର୍ ବାଡ଼୍ନି ହାଉକାର୍ ଇନାକା ଇନାନ୍?” ହେୱାନ୍ ୱାଜ଼ି କୁଲିୟାରିଂ ଟାଣ୍ତେ ଅହ୍ନାନ୍ ଆରି ବିନ୍ ଲଗାଂ ଅଙ୍ଗୁର୍ ବାଡ଼୍ ହିନାନ୍ ।
10 ௧0 வீடுகட்டுகிறவர்கள் வேண்டாம் என்று ஒதுக்கிய கல்லே மூலைக்குத் தலைக்கல்லானது;
ଏପେଙ୍ଗ୍କି ଦରମ୍ ସାସ୍ତର୍ “ଇ ବଚନ୍ ପା ପଡ଼ି କିୱାତାଦେର୍ଣ୍ଣା, ଇଲ୍ ରଚ୍ନାକାର୍ ଇମ୍ଣି କାଲ୍ଦିଂ ମୁନା କିତାର୍, ହେଦାଂ କନାନି ମୁଡ଼୍କାଲ୍ ଆତାତ୍ ।
11 ௧௧ அது கர்த்தராலே நடந்தது, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று எழுதியிருக்கிற வாக்கியத்தை நீங்கள் வாசிக்கவில்லையா!” என்றார்.
ମାପ୍ରୁତାଂ ଇଦାଂ ଆତାତ୍, ଆରି ହେଦାଂ ମା କାଣ୍କୁକାଂ କାବା ଆନାକା?”
12 ௧௨ இந்த உவமையைத் தங்களைக்குறித்துச் சொன்னார் என்று அவர்கள் அறிந்து, அவரைக் கைது செய்ய முயற்சிசெய்தார்கள்; ஆனாலும் மக்களுக்குப் பயந்து, அவரைவிட்டுப் போய்விட்டார்கள்.
ଇବେଣ୍ଡାଂ ଜିହୁଦିର୍ ଜିସୁଙ୍ଗ୍ ଆସ୍ତେଙ୍ଗ୍ ହାତୁର୍ କିତାର୍, ମାତର୍ ହେୱାର୍ ମାନାୟ୍ତିଂ ପାଣ୍ଡ୍ରା ଆତାର୍; ଇନାକିଦେଂକି ହେୱାନ୍ ହେ ଉତର୍ମୁଡ଼୍ ହେୱାରିଂ ଇଟ୍କାଡ଼୍ କିଜ଼ି ଇଞ୍ଜି ମାଚାନ୍ ଇଞ୍ଜି ହେୱାର୍ ବୁଜାଆତାର୍, ଆରେ ହେୱାର୍ ହେୱାନିଂ ପିସ୍ସି ହାଚାର୍ ।
13 ௧௩ அவர்கள், இயேசுவை அவரது பேச்சிலே சிக்கவைக்கும்படி, பரிசேயர்களிலும் ஏரோதியர்களிலும் சிலரை அவரிடம் அனுப்பினார்கள்.
ପାଚେ ହେୱାନ୍ କାତାନି ଗାଣ୍ଜୁ ୱେନ୍ଞ୍ଜି ଆସ୍ତେଙ୍ଗ୍ ଇଞ୍ଜି ହେୱାର୍ ପାରୁସିର୍ ଆରେ ହେରଦିୟା ଦାଡ଼୍ନି ମାନାୟାର୍ ବିତ୍ରେ କେତେକ୍ ଜାଣ୍ତିଂ ହେୱାନ୍ ଲାଗାଂ ପକ୍ତାର୍ ।
14 ௧௪ அவர்கள் வந்து: போதகரே, நீர் சத்தியமுள்ளவர் என்றும், எவனைக்குறித்தும் உமக்குக் கவலையில்லை என்றும் அறிந்திருக்கிறோம், நீர் முகதாட்சிணியம் இல்லாதவராக தேவனுடைய வழிகளைச் சத்தியமாகப் போதிக்கிறீர், இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ, இல்லையோ? நாம் வரி கொடுக்கலாமா, வேண்டாமா? என்று கேட்டார்கள்.
ହେୱାର୍ ୱାଜ଼ି ହେୱାନିଂ ଇଚାର୍, “ଏ ଗୁରୁ ଆପେଂ ପୁନାପ୍, ଏନ୍ ହାତ୍ପା ସତ୍ ଆରି ଇନେରିଂ ପାଣ୍ଡ୍ରା ଆଉୟ୍, ଇନାକିଦେଂକି ଏନ୍ ମାନାୟ୍ତି ମୁକ୍ମେଟ୍ ହୁଡ଼ୁୟ୍ ମାତର୍ ହାତ୍ପା ରଚେ ଇସ୍ୱର୍ତିଂ ହାଜ଼ି ହିକ୍ୟାହିନାୟ୍ । ମାଙ୍ଗେଙ୍ଗ୍ ୱେଚ୍ଚା କାଇସର୍ ରାଜାଙ୍ଗ୍ ସିସ୍ତୁ ହିନି ବିଦି କି ଆକାୟ୍?”
15 ௧௫ அவர்களுடைய தந்திரத்தை அவர் அறிந்து: நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்? நான் பார்ப்பதற்கு ஒரு பணத்தை என்னிடம் கொண்டுவாருங்கள் என்றார்.
ଆସେଙ୍ଗ୍ ହିନାସ୍ କି ଆକାୟ୍? “ମାତର୍ ହେୱାନ୍ ହେୱାର୍ତି କୁଟ୍ ପୁଞ୍ଜି ହେୱାରିଂ ଇଚାନ୍, ଇନେକିଦେଂ ନାଙ୍ଗେଙ୍ଗ୍ ପରିକ୍ୟା କିଦ୍ନାଦେରା? ର ଟାକା ନା ଲାଗାୟ୍ ତାଡୁ, ଆନ୍ ହେଦାଂ ହୁଡ଼୍ନାଂ ।”
16 ௧௬ அவர்கள் அதைக் கொண்டுவந்தார்கள். அப்பொழுது அவர்: இந்தப் படமும் மேலே உள்ள எழுத்தும் யாருடையது என்று கேட்டார்; ரோம அரசாங்கத்திற்கு உரியது என்றார்கள்.
ହେବେ ହେୱାର୍ ଅଦ୍ନି ତାହିୱାତାର୍ । ଜିସୁ ହେୱାରିଂ ୱେନ୍ବାତାନ୍, “ଇ ପୁତ୍ଡ଼ା ଆରି ତର୍ ଇନେର୍ତି?” ହେୱାର୍ ହେୱାନିଂ ଇଚାର୍, “କାଇସର୍ତି ।”
17 ௧௭ அதற்கு இயேசு: அரசாங்கத்திற்குரியதை அரசாங்கத்திற்கும், தேவனுக்குரியதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார். அவர்கள் அவரைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
ହେବେ ଜିସୁ ହେୱାରିଂ ଇଚାନ୍, “କାଇସର୍ତି ଇନାକା, ହେଦାଂ ରମିୟ ରାଜାଙ୍ଗ୍ ହିୟାଟ୍ ଆରେ ଇସ୍ୱର୍ତିଂ ଇନାକା ହେଦାଂ ଇସ୍ୱର୍ତିଂ ହିୟାଟ୍ ।” ହେବେ ହେୱାର୍ ହେୱାନ୍ କାତାତ କାବା ଆତାର୍ ।
18 ௧௮ உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிற சதுசேயர்கள் அவரிடம் வந்து:
ଇଦାଂ ପାଚେ ଆରେ ନିଙ୍ଗ୍ନାକା ମୁନା କିତାର୍ ସାଦୁକିର୍ ହେୱାନ୍ ଲାଗାଂ ୱାଜ଼ି ୱେନ୍ବେଦେଂ ଲାଗାତାର୍,
19 ௧௯ போதகரே, ஒருவனுடைய சகோதரன் வாரிசு இல்லாமல் தன் மனைவியைவிட்டு மரித்துப்போனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை திருமணம்செய்து, தன் சகோதரனுக்காக வாரிசை உண்டாக்கவேண்டும் என்று மோசே எங்களுக்கு எழுதிவைத்திருக்கிறாரே.
“ଏ ଗୁରୁ, ମସା ମାକାଜିଂ ଲେକିକିତାନ୍ନା ଜେ, ଜଦି ଇନେର୍ ଲକୁ ନି ଟଣ୍ଡେନ୍ ହାତିସ୍, ଆରି ତା ଡକ୍ରୁହି ଜିବୁନ୍ତ ମାଚିସ୍, ଆରେ ତାଦାଙ୍ଗ୍ ଇନାକାପା ହିମ୍ଣାୱାକ୍ଡ଼ା ହିଲ୍ୱିତିସ୍, ତା ଆତିସ୍ ତା ଟଣ୍ଡେନ୍ ତା ଡକ୍ରୁହିଙ୍ଗ୍ ଇଡ୍ଜ଼ି ତା ଟଣ୍ଡେନ୍ କାଜିଂ ହିମ୍ଣାୱାକ୍ଡା ଉବ୍ଜାଣ୍ କିନାନ୍ ।”
20 ௨0 இப்படியிருக்க, ஏழு சகோதரர்கள் இருந்தார்கள்; மூத்தவன் ஒரு பெண்ணைத் திருமணம்செய்து, குழந்தை இல்லாமல் மரித்துப்போனான்.
ହୁଡ଼ାଟ୍, ସାତ୍ ବାୟ୍ ଟଣ୍ଡାର୍ ମାଚାର୍; ଗାଜାକାନ୍ ର ଡକ୍ରି ଇଟ୍ତାନ୍ ଆରି ହିମ୍ଣାୱାକ୍ଡ଼ା ଆୱାଦାଂ ହାତାନ୍;
21 ௨௧ இரண்டாம் சகோதரன் அவளை திருமணம்செய்து, அவனும் குழந்தை இல்லாமல் மரித்துப்போனான். மூன்றாம் சகோதரனுக்கும் அப்படியே நடந்தது.
ପାଚେ ଆରେ ରକାନ୍ ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ଇଡ଼୍ଜିପା ହିମ୍ଣାୱାକ୍ଡ଼ା ଆୱାଦାଂ ହାତାନ୍ । ଆରେ ରକାନ୍ପା ହେ ଲାକେନେ ଆଜ଼ି ହାତାନ୍,
22 ௨௨ ஏழுபேரும் அவளைத் திருமணம்செய்து, குழந்தை இல்லாமல் மரித்துப்போனார்கள். எல்லோருக்கும்பின்பு அந்தப் பெண்ணும் மரித்துப்போனாள்.
ଆରେ, ସାତ୍ଜାଣ୍ ଜାକ ହିମ୍ଣାୱାକ୍ଡ଼ା ଆୱାଦାଂ ହାତାର୍; ହାରିହାରା ହେ କଗ୍ଲେ ପା ହାତାତ୍ ।
23 ௨௩ எனவே, உயிர்த்தெழுதலில், அவர்கள் எழுந்திருக்கும்போது, அவர்களில் யாருக்கு அவள் மனைவியாக இருப்பாள்? ஏழுபேரும் அவளைத் திருமணம் செய்திருந்தார்களே என்று கேட்டார்கள்.
ହାଜ଼ି ଆରେ ନିଂନି ୱେଡ଼ାଲିଂ ଏଚେକାଡ଼୍ଦ ହେୱାର୍ ନିଙ୍ଗ୍ନାର୍, ହେ ଏଚେକାଡ଼୍ଦ ହେୱାର୍ ବିତ୍ରେ ହେଦେଲ୍ ଇନେର୍ ଡକ୍ରି ଆନାତ୍? ସାତ୍ ଜାଣ୍ ଜାକ୍ ହେଦେଲିଂ ବିବା କିଜ଼ି ମାଚାର୍ ।
24 ௨௪ இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாததினாலே தவறான எண்ணங்கொள்ளுகிறீர்கள்.
ଜିସୁ ହେୱାରିଂ ଇଚାନ୍, “ଏପେଙ୍ଗ୍ ଦରମ୍ ସାସ୍ତର୍, ଆରେ ଇସ୍ୱର୍ ସାକ୍ତି ପୁନ୍ୱାଦାଂ କି ବାନ୍ୟା ହାଜ଼ିଦିଂ ହାନାଦେରା ।
25 ௨௫ மரித்தவர்கள் உயிரோடு எழுந்திருக்கும்போது திருமணம் செய்வதும், திருமணம்செய்து கொடுப்பதும் இல்லை. அவர்கள் பரலோகத்தில் தேவதூதர்களைப்போல இருப்பார்கள்.
ଜିସୁ ହାତାକାର୍ ବିତ୍ରେ ଆରେ ନିଙ୍ଗ୍ତି ପାଚେ ମାନାୟ୍ ବିବା କିଉର୍ କି ଇନେରିଂ ବିବାଆଦେଂ ହିଉର୍ । ମାତର୍ ସାର୍ଗେନି ଦୁତ୍ ଲାକେ ମାନ୍ଗାନାର୍ ।
26 ௨௬ மரித்தவர்கள் உயிரோடு எழுந்திருப்பதைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாக இருக்கிறேன் என்று, தேவன் முள்செடியைக்குறித்துச் சொல்லிய இடத்தில், மோசேயின் புத்தகத்தில் அவனுக்குச் சொன்னதை நீங்கள் வாசிக்கவில்லையா?
ମାତର୍ ହାତାକାର୍ ଜେ ନିଙ୍ଗ୍ନାର୍, ହେ ବିସ୍ରେ ଏପେଙ୍ଗ୍ କି ମସାତି ସାସ୍ତର୍ତ ବୁଟାନି ବୁଜାଆନି କାତା ପଡ଼ି କିୱାତାଦେର୍ଣ୍ଣା ଜେ, ଇସ୍ୱର୍ ଇନେସ୍ ହେୱାନିଂ ଇଚାନ୍ ଆପେଂ ଅବ୍ରାହାମ୍ତି ଇସ୍ୱର୍, ଇସ୍ହାକ୍ତି ଇସ୍ୱର୍ ଆରି ଜାକୁବ୍ତି ଇସ୍ୱର୍?
27 ௨௭ அவர் மரித்தவர்களுக்கு தேவனாக இல்லாமல், ஜீவனுள்ளவர்களுக்கு தேவனாக இருக்கிறார்; அதை நீங்கள் தவறாக புரிந்துகொள்ளுகிறீர்கள் என்றார்.
ହେୱାନ୍ ହାତି ଲଗାର୍ତି ଇସ୍ୱର୍ ଆକାୟ୍ ମାତର୍, ଜିତାକାର୍ତି । ଏପେଙ୍ଗ୍ ବେସିବୁଜା ଆଉଦେରା!”
28 ௨௮ வேதபண்டிதர்களில் ஒருவன் அவர்கள் வாக்குவாதம்பண்ணுகிறதைக்கேட்டு, அவர்களுக்கு நன்றாக பதில் சொன்னார் என்று அறிந்து, அவரிடம் வந்து: கட்டளைகளிலெல்லாம் பிரதான கட்டளை எது என்று கேட்டான்.
ହେ ଏଚେକାଡ଼୍ଦ ଦରମ୍ ଗୁରୁର୍ ବିତ୍ରେ ରକାନ୍ ଲାଗେ ୱାଜ଼ି ହେୱାର୍ କାତାବାର୍ତା ୱେନ୍ଞ୍ଜି ଜିସୁ ଆରି ସାଦୁକିରିଂ ହାର୍ଦି ଉତର୍ ହିତାନ୍ନା, ଇଦାଂ ପୁଞ୍ଜି ହେୱାନିଂ ୱେନ୍ବାତାନ୍, “ୱିଜ଼ୁ ବଲ୍ ବିତ୍ରେ ଇନାବାନି ବଲ୍ ମୁଡ଼୍?”
29 ௨௯ இயேசு அவனுக்கு மறுமொழியாக: கட்டளைகளிலெல்லாம் பிரதான கட்டளை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
ଜିସୁ ଉତର୍ ହିତାନ୍, ମୁଡ଼୍ବଲ୍ ଇଦାଂ, “ଏ ଇସ୍ରାଏଲ୍, ୱେନା, ମାପ୍ରୁ ମାଙ୍ଗେଙ୍ଗ୍ ଇସ୍ୱର୍ ରକାନ୍ ମାତର୍ ଇସ୍ୱର୍ ଆନାନ୍;
30 ௩0 உன் தேவனாகிய கர்த்தரிடம் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழு பலத்தோடும் அன்புசெலுத்துவாயாக என்பதே பிரதான கட்டளை.
ଆରେ, ଏପେଙ୍ଗ୍ ମି ୱିଜ଼ୁ ୱାସ୍କି, ୱିଜ଼ୁ ପାରାଣ୍, ୱିଜ଼ୁ ମାନ୍, ଆରି ମାନ୍ ୱିଜ଼ୁ ସାକ୍ତି ହିଜ଼ି ମାପ୍ରୁ ଜାର୍ ଇସ୍ୱର୍ତିଂ ଜିଉ ନୱାଟ୍ ।
31 ௩௧ இதற்கு ஒப்பாக இருக்கிற இரண்டாம் கட்டளை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புசெலுத்துவதுபோல மற்றவனிடத்திலும் அன்புசெலுத்துவாயாக என்பதே; இவைகளைவிட பெரிய கட்டளை வேறொன்றும் இல்லை என்றார்.
ଆରେ ରଞ୍ଜାଙ୍ଗ୍ ଇଦାଂ, ଏନ୍ ନି ପାଡ଼୍ହା ଇଞ୍ଜି ଲଗାଂ ନି ୱାସ୍କିଲାକେ ଜିଉ ନୱାଟ୍ । ଇ ବଲ୍ତିଂ ଆଦିକ୍ ଆରି ଇନାକାପା ସିଗ୍ ବଲ୍ ହିଲୁତ୍ ।”
32 ௩௨ அதற்கு வேதபண்டிதன்: சரிதான் போதகரே, நீர் சொன்னது சத்தியம்; ஒரே தேவன் உண்டு, அவரைத்தவிர வேறொரு தேவன் இல்லை.
ହେବେ ହେ ଦରମ୍ ଗୁରୁର୍ ହେୱାନିଂ ଇଚାନ୍, “ଏ ଗୁରୁ, ହେଦାଂ ହାତ୍ପା, ହେୱାନ୍ ଜେ ରଞ୍ଜାଙ୍ଗ୍ ଆରି ହେୱାନ୍ ୱାତିସ୍ ଆରି ଇନେର୍ ଆକାୟ୍, ଇଦାଂ ଏନ୍ ହାତ୍ପା ରଚେ ଇଚାଇନା ।
33 ௩௩ முழு இருதயத்தோடும், முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழுப் பலத்தோடும் அவரிடத்தில் அன்பு செலுத்துகிறதும், தன்னிடத்தில் அன்பு செலுத்துகிறதுபோல மற்றவனிடத்தில் அன்பு செலுத்துகிறதுதான் தகனபலிகளையும் மற்ற எல்லா பலிகளையும்விட முக்கியமாக இருக்கிறது என்றான்.
ଆରେ, ୱିଜ଼ୁ ୱାସ୍କି, ୱିଜ଼ୁ ବୁଦି ଆରି ୱିଜ଼ୁ ସାକ୍ତି ହିଜ଼ି ହେୱାନିଂ ଜିଉ ନୱାଟ୍, ଆରି ପାଡ଼୍ହା ଇଞ୍ଜି ଲଗାଂ ଜାର୍ ଜିବୁନ୍ ଲାକେ ଜିଉନନାକା ୱିଜ଼ୁ ଗାର୍ଣି ଆରି ପୁଜାତିଙ୍ଗ୍ ଗାଜାଟି ।”
34 ௩௪ அவன் ஞானமாக பதில் சொன்னதை இயேசு பார்த்து: நீ தேவனுடைய ராஜ்யத்திற்குத் தூரமானவன் இல்லை என்றார். அதன்பின்பு ஒருவரும் அவரிடம் எந்தக் கேள்வியும் கேட்கத் துணியவில்லை.
ହେୱାନ୍ ବୁଦି ଲାହାଙ୍ଗ୍ ଉତର୍ ହିଜ଼ି ମାନାକା ପୁଞ୍ଜି ଜିସୁ ହେୱାନିଂ ଇଚାନ୍, “ଇସ୍ୱର୍ ରାଜିତାଂ ଏନ୍ ଦେହା ଆକାୟ୍ । ଇଦାଂ ପାଚେ ଇନେନ୍ ହେୱାନିଂ ଆରେ ଇମ୍ଣି ପର୍ସନ୍ ୱେନ୍ବେଦେଂ ସାସ୍ କିୱାତାର୍ ।”
35 ௩௫ இயேசு தேவாலயத்தில் உபதேசம்பண்ணும்போது, அவர்: கிறிஸ்து தாவீதின் குமாரன் என்று வேதபண்டிதர்கள் எப்படிச் சொல்லுகிறார்கள்?
ମାତର୍ ଜିସୁ ମନ୍ଦିର୍ତ ହିକ୍ୟା କିଜ଼ି ମାନି ସମୁତ ୱେନ୍ବାତାର୍, “କ୍ରିସ୍ଟ ଜେ, ଦାଉଦ୍ ମାଜ଼ି, ଇଦାଂ ଦରମ୍ ଗୁରୁର୍ ଇନେସ୍ ଇନାର୍?
36 ௩௬ நான் உம்முடைய எதிரிகளை உம்முடைய கால்களுக்குக் கீழே போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடு சொன்னார் என்று தாவீது பரிசுத்த ஆவியானவராலே சொல்லியிருக்கிறானே.
ନିଜେ ନେ ଦାଉଦ୍ ପୁଇପୁୟା ଜିବୁନ୍ତାଂ ବାର୍ତି ଆଜ଼ି ଇଞ୍ଜି ମାଚାନ୍, ମାପ୍ରୁ ନା ମାପ୍ରୁତିଂ ଇଚାନ୍, ଆପେଂ ଜେ ନି ସାତ୍ରୁରିଂ ନି ପାନା ତାରେନ୍ ଇଡ୍ୱାତାପ୍ନା, ହେ ପାତେକ୍ ନା ବୁଜ୍ଣିପାଡ଼୍କା କୁଚ୍ଚି ମାନାଟ୍ ।”
37 ௩௭ தாவீதே, அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்கும்போது, அவனுக்கு அவர் குமாரனாக இருப்பது எப்படி என்றார். அநேக மக்கள் அவருடைய உபதேசத்தை விருப்பத்தோடு கேட்டார்கள்.
ନିଜେନେ ଦାଉଦ୍ କ୍ରିସ୍ଟଙ୍ଗ୍ ମାପ୍ରୁ ଇଞ୍ଜି ଇନାନ୍; “ଲାଗିଂ ଇସ୍ୱର୍ ବାଚିକିତି ରାକ୍ୟାକାରିୟା କ୍ରିସ୍ଟ ଇନେସ୍ ବାର୍ତି ମାଜ଼ି ଆନାନ୍?”
38 ௩௮ இயேசு உபதேசம்பண்ணும்போது அவர்களைப் பார்த்து: வேதபண்டிதர்கள் நீண்ட அங்கிகளை அணிந்துகொண்டு திரியவும், சந்தைவெளிகளில் வாழ்த்துக்களை விரும்பியும்,
ୱିଜ଼ାକାର୍ ମାନାୟାର୍ ୱାରିତାଂ ହେୱାନ୍ ବେରଣ୍ ୱେନ୍ଞ୍ଜି ମାଚାର୍ । ଆରେ, ହେୱାନ୍ ଜାର୍ତି ହିକ୍ୟା ବିତ୍ରେ ଇଚାନ୍, “ଦରମ୍ ସାସ୍ତର୍ତାଂ ଜାଗ୍ରତ୍!” ହେୱାର୍ ଡେଙ୍ଗା ଆଙ୍ଗି ଆର୍ପିସ୍ ବୁଲା ଆନି କାଜିଂ, ଆରେ ଆଟ୍ ବାଜାର୍ତ, ଜୱାର୍ ପାୟା ଆଦେଂ ।
39 ௩௯ ஜெப ஆலயங்களில் முதன்மையான இருக்கைகளில் உட்காரவும், விருந்துகளில் முதன்மையான இடங்களில் இருக்கவும் விரும்பி,
“କୁଟୁମ୍ ଇଞ୍ଜ ଗାଜା ବାହା ଆରି ବଜିତ ଗାଜା ବାହା ପାୟା ଆଦେଂ ୱାର୍ୟା ଆନାର୍;
40 ௪0 விதவைகளின் வீடுகளையும், சொத்துக்களையும் ஏமாற்றி, பார்வைக்கு நீண்ட ஜெபம்பண்ணுகிற வேதபண்டிதர்களைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள்; அவர்கள் அதிகத் தண்டனை அடைவார்கள் என்றார்.
ହେୱାର୍ ରାଣ୍ଡିକାଂ ଇଲ୍ ୱିଜ଼େ ନସ୍ଟ କିତାର୍ ଆରି ଟକାୟ୍ କିଜ଼ି ଲାମା ପାର୍ତାନା କିନାର୍; ହେୱାର୍ ଡାଣ୍ଡ୍ ପାୟା ଆନାର୍!”
41 ௪௧ இயேசு காணிக்கைப்பெட்டிக்கு எதிராக உட்கார்ந்து, மக்கள் காணிக்கைப் பெட்டியில் பணம் போடுகிறதைப் பார்த்துக்கொண்டிருந்தார்; செல்வந்தர்கள் அநேகர் அதிகமாகப் போட்டார்கள்.
ପାଚେ ହେ ଗାଦ୍ୟା ଇଲ୍ ମୁମ୍ଦ କୁଚ୍ଚି ଲକାର୍ ଇନେସ୍ ଟାକାଂ ରୁଣ୍ଡାଇକିତାର୍, ହେଦାଂ ହୁଡ଼୍ଜି ମାଚାନ୍ । ଏଚେକାଡ଼୍ଦ ହେନି ମାନାୟାର୍ ମାଜାନିଂ ହେବେ ବେସି ଇଡ୍ତାର୍;
42 ௪௨ ஏழையான ஒரு விதவையும் வந்து, ஒரு நாணய மதிப்பிற்கு சரியான இரண்டு காசுகளைப் போட்டாள்.
ଆରି, ରଞ୍ଜେଲ୍ ଅର୍କିତ୍ ରାଣ୍ଡି ରି ଟାକା ଡାବୁଙ୍ଗ୍ ହେବେ ରାତ୍ତାତ୍ ।
43 ௪௩ அப்பொழுது அவர் தம்முடைய சீடர்களை அழைத்து, காணிக்கைப் பெட்டியில் பணம் போட்ட மற்ற எல்லோரையும்விட இந்த ஏழை விதவை அதிகமாகப் போட்டாள் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்;
ହେବେଣ୍ଡାଂ ଜିସୁ ନିଜ୍ତି ଚେଲାରିଂ ଲାଗେ କୁକ୍ଚି ଇଚାନ୍, “ଆନ୍ ମିଙ୍ଗେଙ୍ଗ୍ ହାତ୍ପା ଇଞ୍ଜ୍ନାଙ୍ଗା, ଟାକାଂ ପେଡ଼ି ଇଡ଼୍ଜିମାନି ୱିଜ଼ାକାର୍ ତାକେଣ୍ଡାଂ, ଇ ଅର୍କିତ୍ ରାଣ୍ଡି ବେସି ଇଡ଼ିତାତ୍ ନା ।
44 ௪௪ அவர்களெல்லோரும் தங்களுடைய பரிபூரணத்திலிருந்து எடுத்துப்போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தான் வாழ்வதற்காக வைத்திருந்த எல்லாவற்றையும் போட்டுவிட்டாள் என்றார்.
ଇନାକିଦେଂକି ୱିଜ଼ାକାର୍ ନିଜେ ନିଜେତି ବେସି ଦାନ୍ତ ଅଲପ୍ ଅଲପ୍ ଦାନ୍ ଇଡ଼ିତାର୍, ମାତର୍ ଇଦେଲ୍ ନିଜେତି ଇନାକା ହିଲ୍ୱାଦାଂ ନିଜେତି ଜିବୁନ୍ ବାଚାୟ୍ କିଦେଙ୍ଗ୍ ହେଦେଲ୍ତି ଇନାକା ମାଚାତ୍, ହେ ୱିଜ଼େ ରାତ୍ତାତ୍ ।”