< மாற்கு 11 >

1 இயேசுவும் அவருடைய சீடர்களும் எருசலேமுக்கு அருகில் வந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகே பெத்தானியா என்னும் ஊர்களுக்குச் சென்றபோது, அவர் தம்முடைய சீடர்களில் இரண்டுபேரைப் பார்த்து:
অনন্তরং তেষু যিরূশালমঃ সমীপস্থযো র্বৈৎফগীবৈথনীযপুরযোরন্তিকস্থং জৈতুননামাদ্রিমাগতেষু যীশুঃ প্রেষণকালে দ্ৱৌ শিষ্যাৱিদং ৱাক্যং জগাদ,
2 உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்திற்குப் போங்கள்; அங்கு சென்றவுடன், மனிதர்கள் ஒருவனும் ஒருநாளும் ஏறாத ஒரு கழுதைக்குட்டி கட்டியிருப்பதைப் பார்ப்பீர்கள், அதை அவிழ்த்துக்கொண்டுவாருங்கள்.
যুৱামমুং সম্মুখস্থং গ্রামং যাতং, তত্র প্রৱিশ্য যো নরং নাৱহৎ তং গর্দ্দভশাৱকং দ্রক্ষ্যথস্তং মোচযিৎৱানযতং|
3 ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று யாராவது உங்களிடம் கேட்டால்: இது ஆண்டவருக்கு வேண்டும் என்று சொல்லுங்கள்; உடனே அதை இந்த இடத்திற்கு அனுப்பிவிடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார்.
কিন্তু যুৱাং কর্ম্মেদং কুতঃ কুরুথঃ? কথামিমাং যদি কোপি পৃচ্ছতি তর্হি প্রভোরত্র প্রযোজনমস্তীতি কথিতে স শীঘ্রং তমত্র প্রেষযিষ্যতি|
4 அவர்கள்போய், வெளியே இருவழிச்சந்தியில் ஒரு வாசலருகே கட்டியிருந்த அந்தக் குட்டியைப் பார்த்து, அதை அவிழ்த்தார்கள்.
ততস্তৌ গৎৱা দ্ৱিমার্গমেলনে কস্যচিদ্ দ্ৱারস্য পার্শ্ৱে তং গর্দ্দভশাৱকং প্রাপ্য মোচযতঃ,
5 அப்பொழுது அங்கே நின்றவர்களில் சிலர்: நீங்கள் இந்தக் குட்டியை எதற்கு அவிழ்க்கிறீர்கள் என்றுக் கேட்டார்கள்.
এতর্হি তত্রোপস্থিতলোকানাং কশ্চিদ্ অপৃচ্ছৎ, গর্দ্দভশিশুং কুতো মোচযথঃ?
6 இயேசு சொன்னபடியே அவர்களுக்குப் பதில் சொன்னார்கள். அப்பொழுது, அவர்களைப் போகவிட்டார்கள்.
তদা যীশোরাজ্ঞানুসারেণ তেভ্যঃ প্রত্যুদিতে তৎক্ষণং তমাদাতুং তেঽনুজজ্ঞুঃ|
7 அவர்கள் அந்தக் குட்டியை இயேசுவிடம் கொண்டுவந்து, அதன்மேல் தங்களுடைய ஆடைகளைப் போட்டார்கள்; அவர் அதின்மேல் ஏறிப்போனார்.
অথ তৌ যীশোঃ সন্নিধিং গর্দ্দভশিশুম্ আনীয তদুপরি স্ৱৱস্ত্রাণি পাতযামাসতুঃ; ততঃ স তদুপরি সমুপৱিষ্টঃ|
8 அநேகர் தங்களுடைய ஆடைகளை வழியிலே விரித்தார்கள்; வேறுசிலர் மரக்கிளைகளை வெட்டி சாலைகளில் போட்டார்கள்.
তদানেকে পথি স্ৱৱাসাংসি পাতযামাসুঃ, পরৈশ্চ তরুশাখাশ্ছিতৱা মার্গে ৱিকীর্ণাঃ|
9 முன்னே நடப்பவர்களும் பின்னே நடப்பவர்களும்: ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் போற்றப்படத்தக்கவர்;
অপরঞ্চ পশ্চাদ্গামিনোঽগ্রগামিনশ্চ সর্ৱ্ৱে জনা উচৈঃস্ৱরেণ ৱক্তুমারেভিরে, জয জয যঃ পরমেশ্ৱরস্য নাম্নাগচ্ছতি স ধন্য ইতি|
10 ௧0 கர்த்தரின் நாமத்தினாலே வருகிற நம்முடைய பிதாவாகிய தாவீதின் ராஜ்யம் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.
১০তথাস্মাকমং পূর্ৱ্ৱপুরুষস্য দাযূদো যদ্রাজ্যং পরমেশ্ৱরনাম্নাযাতি তদপি ধন্যং, সর্ৱ্ৱস্মাদুচ্ছ্রাযে স্ৱর্গে ঈশ্ৱরস্য জযো ভৱেৎ|
11 ௧௧ அப்பொழுது, இயேசு எருசலேமுக்கு வந்து, தேவாலயத்திற்குச் சென்று, எல்லாவற்றையும் சுற்றிப்பார்த்து, மாலைநேரத்தில், பன்னிரண்டு சீடர்களுடன் பெத்தானியாவிற்குப் போனார்.
১১ইত্থং যীশু র্যিরূশালমি মন্দিরং প্রৱিশ্য চতুর্দিক্স্থানি সর্ৱ্ৱাণি ৱস্তূনি দৃষ্টৱান্; অথ সাযংকাল উপস্থিতে দ্ৱাদশশিষ্যসহিতো বৈথনিযং জগাম|
12 ௧௨ அடுத்தநாளில் அவர்கள் பெத்தானியாவிலிருந்து திரும்பிவரும்போது, அவருக்குப் பசியுண்டானது.
১২অপরেহনি বৈথনিযাদ্ আগমনসমযে ক্ষুধার্ত্তো বভূৱ|
13 ௧௩ அப்பொழுது இலைகள் உள்ள ஒரு அத்திமரத்தைத் தூரத்திலேப் பார்த்து, அதில் அத்திப்பழம் கிடைக்குமா? என்று பார்க்க வந்தார். அது அத்திப்பழக் காலமாக இல்லாததினால், அவர் மரத்தின் அருகில் வந்தபோது அதில் இலைகளைத்தவிர வேறொன்றையும் பார்க்கவில்லை.
১৩ততো দূরে সপত্রমুডুম্বরপাদপং ৱিলোক্য তত্র কিঞ্চিৎ ফলং প্রাপ্তুং তস্য সন্নিকৃষ্টং যযৌ, তদানীং ফলপাতনস্য সমযো নাগচ্ছতি| ততস্তত্রোপস্থিতঃ পত্রাণি ৱিনা কিমপ্যপরং ন প্রাপ্য স কথিতৱান্,
14 ௧௪ அப்பொழுது இயேசு அதைப் பார்த்து: இனி எப்போதும் ஒருவனும் உன்னிடமிருந்து கனியைப் புசிக்கமாட்டான் என்றார்; அதை அவருடைய சீடர்கள் கேட்டார்கள். (aiōn g165)
১৪অদ্যারভ্য কোপি মানৱস্ত্ৱত্তঃ ফলং ন ভুঞ্জীত; ইমাং কথাং তস্য শিষ্যাঃ শুশ্রুৱুঃ| (aiōn g165)
15 ௧௫ அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு தேவாலயத்திற்குச் சென்று, ஆலயத்தில் விற்கிறவர்களையும் வாங்குகிறவர்களையும் துரத்திவிட்டு, காசுக்காரர்களுடைய பலகைகளையும், புறா விற்கிறவர்களுடைய இருக்கைகளையும் கவிழ்த்து,
১৫তদনন্তরং তেষু যিরূশালমমাযাতেষু যীশু র্মন্দিরং গৎৱা তত্রস্থানাং বণিজাং মুদ্রাসনানি পারাৱতৱিক্রেতৃণাম্ আসনানি চ ন্যুব্জযাঞ্চকার সর্ৱ্ৱান্ ক্রেতৃন্ ৱিক্রেতৃংশ্চ বহিশ্চকার|
16 ௧௬ ஒருவனும் தேவாலயத்தின்வழியாக எந்தவொரு பொருளையும் கொண்டுபோகவிடாமல்:
১৬অপরং মন্দিরমধ্যেন কিমপি পাত্রং ৱোঢুং সর্ৱ্ৱজনং নিৱারযামাস|
17 ௧௭ என்னுடைய வீடு எல்லா மக்களுக்கும் ஜெபவீடு எனப்படும் என்று எழுதியிருக்கவில்லையா? நீங்களோ அதைக் கள்ளர்களின் குகையாக்கினீர்கள் என்று அவர்களுக்குச் சொல்லி உபதேசித்தார்.
১৭লোকানুপদিশন্ জগাদ, মম গৃহং সর্ৱ্ৱজাতীযানাং প্রার্থনাগৃহম্ ইতি নাম্না প্রথিতং ভৱিষ্যতি এতৎ কিং শাস্ত্রে লিখিতং নাস্তি? কিন্তু যূযং তদেৱ চোরাণাং গহ্ৱরং কুরুথ|
18 ௧௮ அதை வேதபண்டிதர்களும் பிரதான ஆசாரியர்களும் கேட்டு, அவரைக் கொலைசெய்ய வழிதேடினார்கள்; ஆனாலும் மக்களெல்லோரும் அவருடைய உபதேசத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டதினாலே அவருக்கு பயந்திருந்தார்கள்.
১৮ইমাং ৱাণীং শ্রুৎৱাধ্যাপকাঃ প্রধানযাজকাশ্চ তং যথা নাশযিতুং শক্নুৱন্তি তথোপাযং মৃগযামাসুঃ, কিন্তু তস্যোপদেশাৎ সর্ৱ্ৱে লোকা ৱিস্মযং গতা অতস্তে তস্মাদ্ বিভ্যুঃ|
19 ௧௯ மாலைநேரத்தில் இயேசுவும் அவருடைய சீடர்களும் நகரத்திலிருந்து புறப்பட்டு வெளியே போனார்கள்.
১৯অথ সাযংসময উপস্থিতে যীশুর্নগরাদ্ বহির্ৱৱ্রাজ|
20 ௨0 அடுத்தநாள் காலையிலே அவர்கள் அந்தவழியாக போகும்போது, அந்த அத்திமரம் வேரோடு பட்டுப்போயிருந்ததைப் பார்த்தார்கள்.
২০অনন্তরং প্রাতঃকালে তে তেন মার্গেণ গচ্ছন্তস্তমুডুম্বরমহীরুহং সমূলং শুষ্কং দদৃশুঃ|
21 ௨௧ பேதுரு நினைத்துப்பார்த்து, இயேசுவிடம்: ரபீ, இதோ, நீர் சபித்த அத்திமரம் பட்டுப்போனது என்றான்.
২১ততঃ পিতরঃ পূর্ৱ্ৱৱাক্যং স্মরন্ যীশুং বভাষং, হে গুরো পশ্যতু য উডুম্বরৱিটপী ভৱতা শপ্তঃ স শুষ্কো বভূৱ|
22 ௨௨ இயேசு அவர்களைப் பார்த்து: தேவனிடம் விசுவாசம் உள்ளவர்களாக இருங்கள்.
২২ততো যীশুঃ প্রত্যৱাদীৎ, যূযমীশ্ৱরে ৱিশ্ৱসিত|
23 ௨௩ யாராவது இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, கடலில் தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே நடக்கும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
২৩যুষ্মানহং যথার্থং ৱদামি কোপি যদ্যেতদ্গিরিং ৱদতি, ৎৱমুত্থায গৎৱা জলধৌ পত, প্রোক্তমিদং ৱাক্যমৱশ্যং ঘটিষ্যতে, মনসা কিমপি ন সন্দিহ্য চেদিদং ৱিশ্ৱসেৎ তর্হি তস্য ৱাক্যানুসারেণ তদ্ ঘটিষ্যতে|
24 ௨௪ எனவே, நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்ளுவீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்.
২৪অতো হেতোরহং যুষ্মান্ ৱচ্মি, প্রার্থনাকালে যদ্যদাকাংক্ষিষ্যধ্ৱে তত্তদৱশ্যং প্রাপ্স্যথ, ইত্থং ৱিশ্ৱসিত, ততঃ প্রাপ্স্যথ|
25 ௨௫ நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது, ஒருவன்மேல் உங்களுக்கு ஏதாவது குறை உண்டாயிருக்கும் என்றால், பரலோகத்தில் இருக்கிற உங்களுடைய பிதா உங்களுடைய தவறுகளை உங்களுக்கு மன்னிப்பதற்காக, அந்தக் குறையை நீங்கள் அவனுக்கு மன்னியுங்கள்.
২৫অপরঞ্চ যুষ্মাসু প্রার্থযিতুং সমুত্থিতেষু যদি কোপি যুষ্মাকম্ অপরাধী তিষ্ঠতি, তর্হি তং ক্ষমধ্ৱং, তথা কৃতে যুষ্মাকং স্ৱর্গস্থঃ পিতাপি যুষ্মাকমাগাংমি ক্ষমিষ্যতে|
26 ௨௬ நீங்கள் மன்னிக்காமலிருந்தால், பரலோகத்தில் இருக்கிற உங்களுடைய பிதாவும் உங்களுடைய தவறுகளை மன்னிக்கமாட்டார் என்றார்.
২৬কিন্তু যদি ন ক্ষমধ্ৱে তর্হি ৱঃ স্ৱর্গস্থঃ পিতাপি যুষ্মাকমাগাংসি ন ক্ষমিষ্যতে|
27 ௨௭ அவர்கள் மீண்டும் எருசலேமுக்கு வந்தார்கள். அவர் தேவாலயத்திலே உலாவிக்கொண்டிருக்கும்போது, பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் மூப்பர்களும் அவரிடம் வந்து:
২৭অনন্তরং তে পুন র্যিরূশালমং প্রৱিৱিশুঃ, যীশু র্যদা মধ্যেমন্দিরম্ ইতস্ততো গচ্ছতি, তদানীং প্রধানযাজকা উপাধ্যাযাঃ প্রাঞ্চশ্চ তদন্তিকমেত্য কথামিমাং পপ্রচ্ছুঃ,
28 ௨௮ நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இவைகளைச் செய்கிறதற்கு அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார் என்று கேட்டார்கள்.
২৮ৎৱং কেনাদেশেন কর্ম্মাণ্যেতানি করোষি? তথৈতানি কর্ম্মাণি কর্ত্তাং কেনাদিষ্টোসি?
29 ௨௯ இயேசு மறுமொழியாக: நானும் உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்கிறேன், நீங்கள் எனக்கு பதில் சொல்லுங்கள், அப்பொழுது நானும் எந்த அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேன் என்று உங்களுக்குச் சொல்லுவேன்.
২৯ততো যীশুঃ প্রতিগদিতৱান্ অহমপি যুষ্মান্ এককথাং পৃচ্ছামি, যদি যূযং তস্যা উত্তরং কুরুথ, তর্হি কযাজ্ঞযাহং কর্ম্মাণ্যেতানি করোমি তদ্ যুষ্মভ্যং কথযিষ্যামি|
30 ௩0 யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டானதா அல்லது மனிதர்களால் உண்டானாதா என்று எனக்கு பதில் சொல்லுங்கள் என்றார்.
৩০যোহনো মজ্জনম্ ঈশ্ৱরাৎ জাতং কিং মানৱাৎ? তন্মহ্যং কথযত|
31 ௩௧ அதற்கு அவர்கள்: தேவனால் உண்டானது என்று சொன்னால், பின்பு ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று கேட்பார்.
৩১তে পরস্পরং ৱিৱেক্তুং প্রারেভিরে, তদ্ ঈশ্ৱরাদ্ বভূৱেতি চেদ্ ৱদামস্তর্হি কুতস্তং ন প্রত্যৈত? কথমেতাং কথযিষ্যতি|
32 ௩௨ எல்லோரும் யோவானை உண்மையான தீர்க்கதரிசி என்று நினைக்கிறார்கள். எனவே மக்களுக்குப் பயப்பட்டதினால், மனிதர்களால் உண்டானது என்று சொல்லமுடியாமல், தங்களுக்குள் ஆலோசனைபண்ணி;
৩২মানৱাদ্ অভৱদিতি চেদ্ ৱদামস্তর্হি লোকেভ্যো ভযমস্তি যতো হেতোঃ সর্ৱ্ৱে যোহনং সত্যং ভৱিষ্যদ্ৱাদিনং মন্যন্তে|
33 ௩௩ இயேசுவிற்கு மறுமொழியாக: எங்களுக்குத் தெரியாது என்றார்கள். அப்பொழுது இயேசு: நானும் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறேன் என்று உங்களுக்குச் சொல்லமாட்டேன் என்றார்.
৩৩অতএৱ তে যীশুং প্রত্যৱাদিষু র্ৱযং তদ্ ৱক্তুং ন শক্নুমঃ| যীশুরুৱাচ, তর্হি যেনাদেশেন কর্ম্মাণ্যেতানি করোমি, অহমপি যুষ্মভ্যং তন্ন কথযিষ্যামি|

< மாற்கு 11 >