< மாற்கு 10 >
1 ௧ இயேசு அந்த இடத்திலிருந்து, யோர்தான் நதிக்கு அக்கரையில் உள்ள தேசத்தின்வழியாக யூதேயாவின் எல்லைகளில் வந்தார். மக்கள் மீண்டும் அவரிடம் கூடிவந்தார்கள். அவர் தம்முடைய வழக்கத்தின்படியே மீண்டும் அவர்களுக்குப் போதகம்பண்ணினார்.
ਅਨਨ੍ਤਰੰ ਸ ਤਤ੍ਸ੍ਥਾਨਾਤ੍ ਪ੍ਰਸ੍ਥਾਯ ਯਰ੍ੱਦਨਨਦ੍ਯਾਃ ਪਾਰੇ ਯਿਹੂਦਾਪ੍ਰਦੇਸ਼ ਉਪਸ੍ਥਿਤਵਾਨ੍, ਤਤ੍ਰ ਤਦਨ੍ਤਿਕੇ ਲੋਕਾਨਾਂ ਸਮਾਗਮੇ ਜਾਤੇ ਸ ਨਿਜਰੀਤ੍ਯਨੁਸਾਰੇਣ ਪੁਨਸ੍ਤਾਨ੍ ਉਪਦਿਦੇਸ਼|
2 ௨ அப்பொழுது பரிசேயர்கள், அவரைச் சோதிக்கவேண்டும் என்று, அவரிடம் வந்து: கணவன் தன் மனைவியை விவாகரத்து செய்வது நியாயமா? என்று கேட்டார்கள்.
ਤਦਾ ਫਿਰੂਸ਼ਿਨਸ੍ਤਤ੍ਸਮੀਪਮ੍ ਏਤ੍ਯ ਤੰ ਪਰੀਕ੍ਸ਼਼ਿਤੁੰ ਪਪ੍ਰੱਛਃ ਸ੍ਵਜਾਯਾ ਮਨੁਜਾਨਾਂ ਤ੍ਯਜ੍ਯਾ ਨ ਵੇਤਿ?
3 ௩ அவர் மறுமொழியாக: மோசே உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறது என்ன என்று கேட்டார்.
ਤਤਃ ਸ ਪ੍ਰਤ੍ਯਵਾਦੀਤ੍, ਅਤ੍ਰ ਕਾਰ੍ੱਯੇ ਮੂਸਾ ਯੁਸ਼਼੍ਮਾਨ੍ ਪ੍ਰਤਿ ਕਿਮਾਜ੍ਞਾਪਯਤ੍?
4 ௪ அதற்கு அவர்கள் விவாகரத்திற்குரிய விடுதலைப்பத்திரத்தை எழுதிக்கொடுத்து, அவளை விவாகரத்து செய்யலாம் என்று மோசே அனுமதி கொடுத்திருக்கிறார் என்றார்கள்.
ਤ ਊਚੁਃ ਤ੍ਯਾਗਪਤ੍ਰੰ ਲੇਖਿਤੁੰ ਸ੍ਵਪਤ੍ਨੀਂ ਤ੍ਯਕ੍ਤੁਞ੍ਚ ਮੂਸਾ(ਅ)ਨੁਮਨ੍ਯਤੇ|
5 ௫ இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: உங்களுடைய இருதயக் கடினத்தினாலே இந்தக் கட்டளையை உங்களுக்கு எழுதிக்கொடுத்தான்.
ਤਦਾ ਯੀਸ਼ੁਃ ਪ੍ਰਤ੍ਯੁਵਾਚ, ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਮਨਸਾਂ ਕਾਠਿਨ੍ਯਾੱਧੇਤੋ ਰ੍ਮੂਸਾ ਨਿਦੇਸ਼ਮਿਮਮ੍ ਅਲਿਖਤ੍|
6 ௬ ஆனாலும், ஆரம்பத்திலே மனிதர்களைப் படைத்த தேவன் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார்.
ਕਿਨ੍ਤੁ ਸ੍ਰੁʼਸ਼਼੍ਟੇਰਾਦੌ ਈਸ਼੍ਵਰੋ ਨਰਾਨ੍ ਪੁੰਰੂਪੇਣ ਸ੍ਤ੍ਰੀਰੂਪੇਣ ਚ ਸਸਰ੍ਜ|
7 ௭ இதனால் கணவன் தன் தகப்பனையும் தாயையும்விட்டுத் தன் மனைவியோடு இணைந்திருப்பான்;
"ਤਤਃ ਕਾਰਣਾਤ੍ ਪੁਮਾਨ੍ ਪਿਤਰੰ ਮਾਤਰਞ੍ਚ ਤ੍ਯਕ੍ਤ੍ਵਾ ਸ੍ਵਜਾਯਾਯਾਮ੍ ਆਸਕ੍ਤੋ ਭਵਿਸ਼਼੍ਯਤਿ,
8 ௮ அவர்கள் இருவர்களும் ஒரே மாம்சமாக இருப்பார்கள்; இவ்விதமாக அவர்கள் இருவர்களாக இல்லாமல் ஒரே மாம்சமாக இருக்கிறார்கள்.
ਤੌ ਦ੍ਵਾਵ੍ ਏਕਾਙ੍ਗੌ ਭਵਿਸ਼਼੍ਯਤਃ| " ਤਸ੍ਮਾਤ੍ ਤਤ੍ਕਾਲਮਾਰਭ੍ਯ ਤੌ ਨ ਦ੍ਵਾਵ੍ ਏਕਾਙ੍ਗੌ|
9 ௯ எனவே, தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கவேண்டும் என்றார்.
ਅਤਃ ਕਾਰਣਾਦ੍ ਈਸ਼੍ਵਰੋ ਯਦਯੋਜਯਤ੍ ਕੋਪਿ ਨਰਸ੍ਤੰਨ ਵਿਯੇਜਯੇਤ੍|
10 ௧0 பின்பு வீட்டில் இருக்கும்போது அவருடைய சீடர்கள் அந்தக் காரியத்தைக்குறித்து மீண்டும் அவரிடம் விசாரித்தார்கள்.
ਅਥ ਯੀਸ਼ੁ ਰ੍ਗ੍ਰੁʼਹੰ ਪ੍ਰਵਿਸ਼਼੍ਟਸ੍ਤਦਾ ਸ਼ਿਸ਼਼੍ਯਾਃ ਪੁਨਸ੍ਤਤ੍ਕਥਾਂ ਤੰ ਪਪ੍ਰੱਛੁਃ|
11 ௧௧ அப்பொழுது அவர்: யாராவது தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, வேறொரு பெண்ணைத் திருமணம்செய்தால், அவன் அவளுக்கு விரோதமாக விபசாரம் செய்கிறவனாக இருப்பான்.
ਤਤਃ ਸੋਵਦਤ੍ ਕਸ਼੍ਚਿਦ੍ ਯਦਿ ਸ੍ਵਭਾਰ੍ੱਯਾਂ ਤ੍ਯਕ੍ਤਵਾਨ੍ਯਾਮ੍ ਉਦ੍ਵਹਤਿ ਤਰ੍ਹਿ ਸ ਸ੍ਵਭਾਰ੍ੱਯਾਯਾਃ ਪ੍ਰਾਤਿਕੂਲ੍ਯੇਨ ਵ੍ਯਭਿਚਾਰੀ ਭਵਤਿ|
12 ௧௨ மனைவியும் தன் கணவனை விவாகரத்து செய்துவிட்டு, வேறொருவனை திருமணம்செய்தால், விபசாரம் செய்கிறவளாக இருப்பாள் என்றார்.
ਕਾਚਿੰਨਾਰੀ ਯਦਿ ਸ੍ਵਪਤਿੰ ਹਿਤ੍ਵਾਨ੍ਯਪੁੰਸਾ ਵਿਵਾਹਿਤਾ ਭਵਤਿ ਤਰ੍ਹਿ ਸਾਪਿ ਵ੍ਯਭਿਚਾਰਿਣੀ ਭਵਤਿ|
13 ௧௩ அப்பொழுது, சிறு பிள்ளைகளை அவர் தொடுவதற்காக அவர்களை அவரிடம் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீடர்கள் அதட்டினார்கள்.
ਅਥ ਸ ਯਥਾ ਸ਼ਿਸ਼ੂਨ੍ ਸ੍ਪ੍ਰੁʼਸ਼ੇਤ੍, ਤਦਰ੍ਥੰ ਲੋਕੈਸ੍ਤਦਨ੍ਤਿਕੰ ਸ਼ਿਸ਼ਵ ਆਨੀਯਨ੍ਤ, ਕਿਨ੍ਤੁ ਸ਼ਿਸ਼਼੍ਯਾਸ੍ਤਾਨਾਨੀਤਵਤਸ੍ਤਰ੍ਜਯਾਮਾਸੁਃ|
14 ௧௪ இயேசு அதைப் பார்த்து கோபப்பட்டு: சிறு பிள்ளைகள் என்னிடம் வருகிறதற்கு இடம்கொடுங்கள்; அவர்களைத் தடைப்பண்ணவேண்டாம்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது.
ਯੀਸ਼ੁਸ੍ਤਦ੍ ਦ੍ਰੁʼਸ਼਼੍ਟ੍ਵਾ ਕ੍ਰੁਧ੍ਯਨ੍ ਜਗਾਦ, ਮੰਨਿਕਟਮ੍ ਆਗਨ੍ਤੁੰ ਸ਼ਿਸ਼ੂਨ੍ ਮਾ ਵਾਰਯਤ, ਯਤ ਏਤਾਦ੍ਰੁʼਸ਼ਾ ਈਸ਼੍ਵਰਰਾਜ੍ਯਾਧਿਕਾਰਿਣਃ|
15 ௧௫ யாராவது சிறு பிள்ளையைப்போல தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அவன் அதில் பிரவேசிப்பதில்லை என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி,
ਯੁਸ਼਼੍ਮਾਨਹੰ ਯਥਾਰ੍ਥੰ ਵਚ੍ਮਿ, ਯਃ ਕਸ਼੍ਚਿਤ੍ ਸ਼ਿਸ਼ੁਵਦ੍ ਭੂਤ੍ਵਾ ਰਾਜ੍ਯਮੀਸ਼੍ਵਰਸ੍ਯ ਨ ਗ੍ਰੁʼਹ੍ਲੀਯਾਤ੍ ਸ ਕਦਾਪਿ ਤਦ੍ਰਾਜ੍ਯੰ ਪ੍ਰਵੇਸ਼਼੍ਟੁੰ ਨ ਸ਼ਕ੍ਨੋਤਿ|
16 ௧௬ அவர்களை அணைத்துக்கொண்டு, அவர்கள்மேல் கரங்களை வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார்.
ਅਨਨਤਰੰ ਸ ਸ਼ਿਸ਼ੂਨਙ੍ਕੇ ਨਿਧਾਯ ਤੇਸ਼਼ਾਂ ਗਾਤ੍ਰੇਸ਼਼ੁ ਹਸ੍ਤੌ ਦੱਤ੍ਵਾਸ਼ਿਸ਼਼ੰ ਬਭਾਸ਼਼ੇ|
17 ௧௭ பின்பு அவர் புறப்பட்டுப் போய்க்கொண்டிருக்கும்போது, ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ள நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். (aiōnios )
ਅਥ ਸ ਵਰ੍ਤ੍ਮਨਾ ਯਾਤਿ, ਏਤਰ੍ਹਿ ਜਨ ਏਕੋ ਧਾਵਨ੍ ਆਗਤ੍ਯ ਤਤ੍ਸੰਮੁਖੇ ਜਾਨੁਨੀ ਪਾਤਯਿਤ੍ਵਾ ਪ੍ਰੁʼਸ਼਼੍ਟਵਾਨ੍, ਭੋਃ ਪਰਮਗੁਰੋ, ਅਨਨ੍ਤਾਯੁਃ ਪ੍ਰਾਪ੍ਤਯੇ ਮਯਾ ਕਿੰ ਕਰ੍ੱਤਵ੍ਯੰ? (aiōnios )
18 ௧௮ அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வது எதினால்? தேவன் ஒருவர்தவிர நல்லவன் ஒருவனும் இல்லை.
ਤਦਾ ਯੀਸ਼ੁਰੁਵਾਚ, ਮਾਂ ਪਰਮੰ ਕੁਤੋ ਵਦਸਿ? ਵਿਨੇਸ਼੍ਵਰੰ ਕੋਪਿ ਪਰਮੋ ਨ ਭਵਤਿ|
19 ௧௯ விபசாரம் செய்யாதே, கொலை செய்யாதே, திருடாதே, பொய்ச்சாட்சி சொல்லாதே, ஏமாற்றாதே, உன் தகப்பனையும், தாயையும் கனம்பண்ணு என்கிற கட்டளைகளைப்பற்றி தெரிந்திருக்கிறாயே என்றார்.
ਪਰਸ੍ਤ੍ਰੀਂ ਨਾਭਿਗੱਛ; ਨਰੰ ਮਾ ਘਾਤਯ; ਸ੍ਤੇਯੰ ਮਾ ਕੁਰੁ; ਮ੍ਰੁʼਸ਼਼ਾਸਾਕ੍ਸ਼਼੍ਯੰ ਮਾ ਦੇਹਿ; ਹਿੰਸਾਞ੍ਚ ਮਾ ਕੁਰੁ; ਪਿਤਰੌ ਸੰਮਨ੍ਯਸ੍ਵ; ਨਿਦੇਸ਼ਾ ਏਤੇ ਤ੍ਵਯਾ ਜ੍ਞਾਤਾਃ|
20 ௨0 அதற்கு அவன்: போதகரே, இவைகளையெல்லாம் என் சிறிய வயதிலிருந்து கடைபிடித்து வருகிறேன் என்றான்.
ਤਤਸ੍ਤਨ ਪ੍ਰਤ੍ਯੁਕ੍ਤੰ, ਹੇ ਗੁਰੋ ਬਾਲ੍ਯਕਾਲਾਦਹੰ ਸਰ੍ੱਵਾਨੇਤਾਨ੍ ਆਚਰਾਮਿ|
21 ௨௧ இயேசு அவனைப் பார்த்து, அவனிடம் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; நீ போய், உனக்கு உண்டானவைகளை எல்லாவற்றையும் விற்று, ஏழைகளுக்குக் கொடு; அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றிவா என்றார்.
ਤਦਾ ਯੀਸ਼ੁਸ੍ਤੰ ਵਿਲੋਕ੍ਯ ਸ੍ਨੇਹੇਨ ਬਭਾਸ਼਼ੇ, ਤਵੈਕਸ੍ਯਾਭਾਵ ਆਸ੍ਤੇ; ਤ੍ਵੰ ਗਤ੍ਵਾ ਸਰ੍ੱਵਸ੍ਵੰ ਵਿਕ੍ਰੀਯ ਦਰਿਦ੍ਰੇਭ੍ਯੋ ਵਿਸ਼੍ਰਾਣਯ, ਤਤਃ ਸ੍ਵਰ੍ਗੇ ਧਨੰ ਪ੍ਰਾਪ੍ਸ੍ਯਸਿ; ਤਤਃ ਪਰਮ੍ ਏਤ੍ਯ ਕ੍ਰੁਸ਼ੰ ਵਹਨ੍ ਮਦਨੁਵਰ੍ੱਤੀ ਭਵ|
22 ௨௨ அவனுக்கு அதிக சொத்துக்கள் இருந்ததால், இந்த வார்த்தையைக் கேட்டு, சோர்ந்து, துக்கத்தோடு போய்விட்டான்.
ਕਿਨ੍ਤੁ ਤਸ੍ਯ ਬਹੁਸਮ੍ਪਦ੍ਵਿਦ੍ਯਮਾਨਤ੍ਵਾਤ੍ ਸ ਇਮਾਂ ਕਥਾਮਾਕਰ੍ਣ੍ਯ ਵਿਸ਼਼ਣੋ ਦੁਃਖਿਤਸ਼੍ਚ ਸਨ੍ ਜਗਾਮ|
23 ௨௩ அப்பொழுது இயேசு சுற்றிலும்பார்த்து, தம்முடைய சீடர்களைப் பார்த்து: செல்வந்தர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு கடினமாக இருக்கிறது என்றார்.
ਅਥ ਯੀਸ਼ੁਸ਼੍ਚਤੁਰ੍ਦਿਸ਼ੋ ਨਿਰੀਕ੍ਸ਼਼੍ਯ ਸ਼ਿਸ਼਼੍ਯਾਨ੍ ਅਵਾਦੀਤ੍, ਧਨਿਲੋਕਾਨਾਮ੍ ਈਸ਼੍ਵਰਰਾਜ੍ਯਪ੍ਰਵੇਸ਼ਃ ਕੀਦ੍ਰੁʼਗ੍ ਦੁਸ਼਼੍ਕਰਃ|
24 ௨௪ சீடர்கள் அவருடைய வார்த்தைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். இயேசு மீண்டும் அவர்களைப் பார்த்து: பிள்ளைகளே, செல்வத்தின்மேல் நம்பிக்கையாக இருக்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு கடினமாக இருக்கிறது!
ਤਸ੍ਯ ਕਥਾਤਃ ਸ਼ਿਸ਼਼੍ਯਾਸ਼੍ਚਮੱਚਕ੍ਰੁਃ, ਕਿਨ੍ਤੁ ਸ ਪੁਨਰਵਦਤ੍, ਹੇ ਬਾਲਕਾ ਯੇ ਧਨੇ ਵਿਸ਼੍ਵਸਨ੍ਤਿ ਤੇਸ਼਼ਾਮ੍ ਈਸ਼੍ਵਰਰਾਜ੍ਯਪ੍ਰਵੇਸ਼ਃ ਕੀਦ੍ਰੁʼਗ੍ ਦੁਸ਼਼੍ਕਰਃ|
25 ௨௫ செல்வந்தர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைவிட, ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது சுலபமாக இருக்கும் என்றார்.
ਈਸ਼੍ਵਰਰਾਜ੍ਯੇ ਧਨਿਨਾਂ ਪ੍ਰਵੇਸ਼ਾਤ੍ ਸੂਚਿਰਨ੍ਧ੍ਰੇਣ ਮਹਾਙ੍ਗਸ੍ਯ ਗਮਨਾਗਮਨੰ ਸੁਕਰੰ|
26 ௨௬ அவர்கள் அதிகமாக ஆச்சரியப்பட்டு: அப்படியானால் யார் இரட்சிக்கப்படமுடியும் என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
ਤਦਾ ਸ਼ਿਸ਼਼੍ਯਾ ਅਤੀਵ ਵਿਸ੍ਮਿਤਾਃ ਪਰਸ੍ਪਰੰ ਪ੍ਰੋਚੁਃ, ਤਰ੍ਹਿ ਕਃ ਪਰਿਤ੍ਰਾਣੰ ਪ੍ਰਾਪ੍ਤੁੰ ਸ਼ਕ੍ਨੋਤਿ?
27 ௨௭ இயேசு அவர்களைப் பார்த்து: மனிதர்களால் இது முடியாது, தேவனால் இது முடியும்; தேவனாலே எல்லாம் முடியும் என்றார்.
ਤਤੋ ਯੀਸ਼ੁਸ੍ਤਾਨ੍ ਵਿਲੋਕ੍ਯ ਬਭਾਸ਼਼ੇ, ਤਨ੍ ਨਰਸ੍ਯਾਸਾਧ੍ਯੰ ਕਿਨ੍ਤੁ ਨੇਸ਼੍ਵਰਸ੍ਯ, ਯਤੋ ਹੇਤੋਰੀਸ਼੍ਵਰਸ੍ਯ ਸਰ੍ੱਵੰ ਸਾਧ੍ਯਮ੍|
28 ௨௮ அப்பொழுது பேதுரு அவரைப் பார்த்து: இதோ, நாங்கள் எல்லாவற்றையும்விட்டு, உம்மைப் பின்பற்றிவந்தோமே, என்று சொல்லத்தொடங்கினான்.
ਤਦਾ ਪਿਤਰ ਉਵਾਚ, ਪਸ਼੍ਯ ਵਯੰ ਸਰ੍ੱਵੰ ਪਰਿਤ੍ਯਜ੍ਯ ਭਵਤੋਨੁਗਾਮਿਨੋ ਜਾਤਾਃ|
29 ௨௯ அதற்கு இயேசு மறுமொழியாக: எனக்காகவும், நற்செய்திப் பணிக்காகவும், வீட்டையாவது, சகோதரர்களையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, குழந்தைகளையாவது, நிலங்களையாவது விட்டு வந்தவன் எவனும்,
ਤਤੋ ਯੀਸ਼ੁਃ ਪ੍ਰਤ੍ਯਵਦਤ੍, ਯੁਸ਼਼੍ਮਾਨਹੰ ਯਥਾਰ੍ਥੰ ਵਦਾਮਿ, ਮਦਰ੍ਥੰ ਸੁਸੰਵਾਦਾਰ੍ਥੰ ਵਾ ਯੋ ਜਨਃ ਸਦਨੰ ਭ੍ਰਾਤਰੰ ਭਗਿਨੀਂ ਪਿਤਰੰ ਮਾਤਰੰ ਜਾਯਾਂ ਸਨ੍ਤਾਨਾਨ੍ ਭੂਮਿ ਵਾ ਤ੍ਯਕ੍ਤ੍ਵਾ
30 ௩0 இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடு நூறுமடங்காக வீடுகளையும், சகோதரர்களையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடைவான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (aiōn , aiōnios )
ਗ੍ਰੁʼਹਭ੍ਰਾਤ੍ਰੁʼਭਗਿਨੀਪਿਤ੍ਰੁʼਮਾਤ੍ਰੁʼਪਤ੍ਨੀਸਨ੍ਤਾਨਭੂਮੀਨਾਮਿਹ ਸ਼ਤਗੁਣਾਨ੍ ਪ੍ਰੇਤ੍ਯਾਨਨ੍ਤਾਯੁਸ਼੍ਚ ਨ ਪ੍ਰਾਪ੍ਨੋਤਿ ਤਾਦ੍ਰੁʼਸ਼ਃ ਕੋਪਿ ਨਾਸ੍ਤਿ| (aiōn , aiōnios )
31 ௩௧ ஆனாலும் முந்தினவர்கள் அநேகர் பிந்தினவர்களாகவும், பிந்தினவர்கள் அநேகர் முந்தினவர்களாகவும் இருப்பார்கள் என்றார்.
ਕਿਨ੍ਤ੍ਵਗ੍ਰੀਯਾ ਅਨੇਕੇ ਲੋਕਾਃ ਸ਼ੇਸ਼਼ਾਃ, ਸ਼ੇਸ਼਼ੀਯਾ ਅਨੇਕੇ ਲੋਕਾਸ਼੍ਚਾਗ੍ਰਾ ਭਵਿਸ਼਼੍ਯਨ੍ਤਿ|
32 ௩௨ பின்பு அவர்கள் எருசலேமுக்குப் பயணமாகப் போகும்பொழுது, இயேசு அவர்களுக்கு முன்பே நடந்துபோனார்; அவர்கள் ஆச்சரியப்பட்டு, அவருக்குப் பின்னால் பயத்தோடு போனார்கள். அப்பொழுது அவர் பன்னிரண்டு சீடர்களையும் அழைத்து, தமக்கு நடக்கப்போகிறவைகளை அவர்களுக்கு மீண்டும் சொல்லத்தொடங்கினார்:
ਅਥ ਯਿਰੂਸ਼ਾਲਮ੍ਯਾਨਕਾਲੇ ਯੀਸ਼ੁਸ੍ਤੇਸ਼਼ਾਮ੍ ਅਗ੍ਰਗਾਮੀ ਬਭੂਵ, ਤਸ੍ਮਾੱਤੇ ਚਿਤ੍ਰੰ ਜ੍ਞਾਤ੍ਵਾ ਪਸ਼੍ਚਾਦ੍ਗਾਮਿਨੋ ਭੂਤ੍ਵਾ ਬਿਭ੍ਯੁਃ| ਤਦਾ ਸ ਪੁਨ ਰ੍ਦ੍ਵਾਦਸ਼ਸ਼ਿਸ਼਼੍ਯਾਨ੍ ਗ੍ਰੁʼਹੀਤ੍ਵਾ ਸ੍ਵੀਯੰ ਯਦ੍ਯਦ੍ ਘਟਿਸ਼਼੍ਯਤੇ ਤੱਤਤ੍ ਤੇਭ੍ਯਃ ਕਥਯਿਤੁੰ ਪ੍ਰਾਰੇਭੇ;
33 ௩௩ இதோ, எருசலேமுக்குப் போகிறோம்; அங்கே மனிதகுமாரன் பிரதான ஆசாரியர்களிடத்திலும் வேதபண்டிதரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரணதண்டனைக்குள்ளாகத் தீர்த்து, யூதரல்லாதோர்களிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள்.
ਪਸ਼੍ਯਤ ਵਯੰ ਯਿਰੂਸ਼ਾਲਮ੍ਪੁਰੰ ਯਾਮਃ, ਤਤ੍ਰ ਮਨੁਸ਼਼੍ਯਪੁਤ੍ਰਃ ਪ੍ਰਧਾਨਯਾਜਕਾਨਾਮ੍ ਉਪਾਧ੍ਯਾਯਾਨਾਞ੍ਚ ਕਰੇਸ਼਼ੁ ਸਮਰ੍ਪਯਿਸ਼਼੍ਯਤੇ; ਤੇ ਚ ਵਧਦਣ੍ਡਾਜ੍ਞਾਂ ਦਾਪਯਿਤ੍ਵਾ ਪਰਦੇਸ਼ੀਯਾਨਾਂ ਕਰੇਸ਼਼ੁ ਤੰ ਸਮਰ੍ਪਯਿਸ਼਼੍ਯਨ੍ਤਿ|
34 ௩௪ அவர்கள் அவரைப் பரிகாசம்பண்ணி, அவரை சாட்டையினால் அடித்து, அவர்மேல் துப்பி, அவரைக் கொலைசெய்வார்கள்; ஆனாலும் மூன்றாம்நாளிலே அவர் உயிரோடு எழுந்திருப்பார் என்றார்.
ਤੇ ਤਮੁਪਹਸ੍ਯ ਕਸ਼ਯਾ ਪ੍ਰਹ੍ਰੁʼਤ੍ਯ ਤਦ੍ਵਪੁਸ਼਼ਿ ਨਿਸ਼਼੍ਠੀਵੰ ਨਿਕ੍ਸ਼਼ਿਪ੍ਯ ਤੰ ਹਨਿਸ਼਼੍ਯਨ੍ਤਿ, ਤਤਃ ਸ ਤ੍ਰੁʼਤੀਯਦਿਨੇ ਪ੍ਰੋੱਥਾਸ੍ਯਤਿ|
35 ௩௫ அப்பொழுது செபெதேயுவின் குமாரர்களாகிய யாக்கோபும் யோவானும் அவரிடம் வந்து: போதகரே, நாங்கள் எதைக்கேட்டாலும் அதை நீர் எங்களுக்குச் செய்யவேண்டும் என்று விரும்புகிறோம் என்றார்கள்.
ਤਤਃ ਸਿਵਦੇਃ ਪੁਤ੍ਰੌ ਯਾਕੂਬ੍ਯੋਹਨੌ ਤਦਨ੍ਤਿਕਮ੍ ਏਤ੍ਯ ਪ੍ਰੋਚਤੁਃ, ਹੇ ਗੁਰੋ ਯਦ੍ ਆਵਾਭ੍ਯਾਂ ਯਾਚਿਸ਼਼੍ਯਤੇ ਤਦਸ੍ਮਦਰ੍ਥੰ ਭਵਾਨ੍ ਕਰੋਤੁ ਨਿਵੇਦਨਮਿਦਮਾਵਯੋਃ|
36 ௩௬ அவர் அவர்களைப் பார்த்து: நான் உங்களுக்கு என்னசெய்யவேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்று கேட்டார்.
ਤਤਃ ਸ ਕਥਿਤਵਾਨ੍, ਯੁਵਾਂ ਕਿਮਿੱਛਥਃ? ਕਿੰ ਮਯਾ ਯੁਸ਼਼੍ਮਦਰ੍ਥੰ ਕਰਣੀਯੰ?
37 ௩௭ அதற்கு அவர்கள்: உமது மகிமையிலே, எங்களில் ஒருவன் உமது வலதுபக்கத்திலும், ஒருவன் உமது இடதுபக்கத்திலும் உட்கார்ந்திருக்கும்படி எங்களுக்கு அருள்செய்யவேண்டும் என்றார்கள்.
ਤਦਾ ਤੌ ਪ੍ਰੋਚਤੁਃ, ਆਵਯੋਰੇਕੰ ਦਕ੍ਸ਼਼ਿਣਪਾਰ੍ਸ਼੍ਵੇ ਵਾਮਪਾਰ੍ਸ਼੍ਵੇ ਚੈਕੰ ਤਵੈਸ਼੍ਵਰ੍ੱਯਪਦੇ ਸਮੁਪਵੇਸ਼਼੍ਟੁਮ੍ ਆਜ੍ਞਾਪਯ|
38 ௩௮ இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் கேட்பது என்ன என்று உங்களுக்கே தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும் உங்களால் முடியுமா என்றார்.
ਕਿਨ੍ਤੁ ਯੀਸ਼ੁਃ ਪ੍ਰਤ੍ਯੁਵਾਚ ਯੁਵਾਮਜ੍ਞਾਤ੍ਵੇਦੰ ਪ੍ਰਾਰ੍ਥਯੇਥੇ, ਯੇਨ ਕੰਸੇਨਾਹੰ ਪਾਸ੍ਯਾਮਿ ਤੇਨ ਯੁਵਾਭ੍ਯਾਂ ਕਿੰ ਪਾਤੁੰ ਸ਼ਕ੍ਸ਼਼੍ਯਤੇ? ਯਸ੍ਮਿਨ੍ ਮੱਜਨੇਨਾਹੰ ਮੱਜਿਸ਼਼੍ਯੇ ਤਨ੍ਮੱਜਨੇ ਮੱਜਯਿਤੁੰ ਕਿੰ ਯੁਵਾਭ੍ਯਾਂ ਸ਼ਕ੍ਸ਼਼੍ਯਤੇ? ਤੌ ਪ੍ਰਤ੍ਯੂਚਤੁਃ ਸ਼ਕ੍ਸ਼਼੍ਯਤੇ|
39 ௩௯ அதற்கு அவர்கள்: முடியும் என்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள்.
ਤਦਾ ਯੀਸ਼ੁਰਵਦਤ੍ ਯੇਨ ਕੰਸੇਨਾਹੰ ਪਾਸ੍ਯਾਮਿ ਤੇਨਾਵਸ਼੍ਯੰ ਯੁਵਾਮਪਿ ਪਾਸ੍ਯਥਃ, ਯੇਨ ਮੱਜਨੇਨ ਚਾਹੰ ਮੱਜਿੱਯੇ ਤਤ੍ਰ ਯੁਵਾਮਪਿ ਮੱਜਿਸ਼਼੍ਯੇਥੇ|
40 ௪0 ஆனாலும் என் வலதுபக்கத்திலும் என் இடதுபக்கத்திலும் உட்கார்ந்திருக்கும்படி யாருக்கு ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களைத்தவிர, மற்றவர்களுக்கு அதை அருளுவது என் காரியமல்ல என்றார்.
ਕਿਨ੍ਤੁ ਯੇਸ਼਼ਾਮਰ੍ਥਮ੍ ਇਦੰ ਨਿਰੂਪਿਤੰ, ਤਾਨ੍ ਵਿਹਾਯਾਨ੍ਯੰ ਕਮਪਿ ਮਮ ਦਕ੍ਸ਼਼ਿਣਪਾਰ੍ਸ਼੍ਵੇ ਵਾਮਪਾਰ੍ਸ਼੍ਵੇ ਵਾ ਸਮੁਪਵੇਸ਼ਯਿਤੁੰ ਮਮਾਧਿਕਾਰੋ ਨਾਸ੍ਤਿ|
41 ௪௧ மற்ற பத்துப்பேரும் அதைக்கேட்டு, யாக்கோபின்மேலும் யோவானின் மேலும் எரிச்சலானார்கள்.
ਅਥਾਨ੍ਯਦਸ਼ਸ਼ਿਸ਼਼੍ਯਾ ਇਮਾਂ ਕਥਾਂ ਸ਼੍ਰੁਤ੍ਵਾ ਯਾਕੂਬ੍ਯੋਹਨ੍ਭ੍ਯਾਂ ਚੁਕੁਪੁਃ|
42 ௪௨ அப்பொழுது, இயேசு அவர்களை அருகில் வரச்சொல்லி: யூதரல்லாதவர்களுக்கு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டவர்கள் அவர்களை ஆணவத்தோடு ஆளுகிறார்கள் என்றும், அவர்களில் பெரியவர்கள் அவர்கள்மேல் கடினமாக அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
ਕਿਨ੍ਤੁ ਯੀਸ਼ੁਸ੍ਤਾਨ੍ ਸਮਾਹੂਯ ਬਭਾਸ਼਼ੇ, ਅਨ੍ਯਦੇਸ਼ੀਯਾਨਾਂ ਰਾਜਤ੍ਵੰ ਯੇ ਕੁਰ੍ੱਵਨ੍ਤਿ ਤੇ ਤੇਸ਼਼ਾਮੇਵ ਪ੍ਰਭੁਤ੍ਵੰ ਕੁਰ੍ੱਵਨ੍ਤਿ, ਤਥਾ ਯੇ ਮਹਾਲੋਕਾਸ੍ਤੇ ਤੇਸ਼਼ਾਮ੍ ਅਧਿਪਤਿਤ੍ਵੰ ਕੁਰ੍ੱਵਨ੍ਤੀਤਿ ਯੂਯੰ ਜਾਨੀਥ|
43 ௪௩ உங்களுக்குள்ளே அப்படி இருக்கக்கூடாது; உங்களில் யாராவது பெரியவனாக இருக்கவிரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாக இருக்கவேண்டும்.
ਕਿਨ੍ਤੁ ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਮਧ੍ਯੇ ਨ ਤਥਾ ਭਵਿਸ਼਼੍ਯਤਿ, ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਮਧ੍ਯੇ ਯਃ ਪ੍ਰਾਧਾਨ੍ਯੰ ਵਾਞ੍ਛਤਿ ਸ ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਸੇਵਕੋ ਭਵਿਸ਼਼੍ਯਤਿ,
44 ௪௪ உங்களில் யாராவது முதன்மையானவனாக இருக்கவிரும்பினால், அவன் எல்லோருக்கும் ஊழியக்காரனாக இருக்கவேண்டும்.
ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਯੋ ਮਹਾਨ੍ ਭਵਿਤੁਮਿੱਛਤਿ ਸ ਸਰ੍ੱਵੇਸ਼਼ਾਂ ਕਿਙ੍ਕਰੋ ਭਵਿਸ਼਼੍ਯਤਿ|
45 ௪௫ அப்படியே, மனிதகுமாரனும் மற்றவர்களிடம் ஊழியம் பெற வராமல், ஊழியம் செய்யவும், அநேகரை மீட்கத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்.
ਯਤੋ ਮਨੁਸ਼਼੍ਯਪੁਤ੍ਰਃ ਸੇਵ੍ਯੋ ਭਵਿਤੁੰ ਨਾਗਤਃ ਸੇਵਾਂ ਕਰ੍ੱਤਾਂ ਤਥਾਨੇਕੇਸ਼਼ਾਂ ਪਰਿਤ੍ਰਾਣਸ੍ਯ ਮੂਲ੍ਯਰੂਪਸ੍ਵਪ੍ਰਾਣੰ ਦਾਤੁਞ੍ਚਾਗਤਃ|
46 ௪௬ பின்பு அவர்கள் எரிகோவிற்கு வந்தார்கள். அவரும் அவருடைய சீடர்களும் மக்கள் கூட்டமும் எரிகோவைவிட்டுப் புறப்படுகிறபோது, திமேயுவின் பார்வையற்ற மகனாகிய பர்திமேயு, வழியருகில் உட்கார்ந்து, பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான்.
ਅਥ ਤੇ ਯਿਰੀਹੋਨਗਰੰ ਪ੍ਰਾਪ੍ਤਾਸ੍ਤਸ੍ਮਾਤ੍ ਸ਼ਿਸ਼਼੍ਯੈ ਰ੍ਲੋਕੈਸ਼੍ਚ ਸਹ ਯੀਸ਼ੋ ਰ੍ਗਮਨਕਾਲੇ ਟੀਮਯਸ੍ਯ ਪੁਤ੍ਰੋ ਬਰ੍ਟੀਮਯਨਾਮਾ ਅਨ੍ਧਸ੍ਤਨ੍ਮਾਰ੍ਗਪਾਰ੍ਸ਼੍ਵੇ ਭਿਕ੍ਸ਼਼ਾਰ੍ਥਮ੍ ਉਪਵਿਸ਼਼੍ਟਃ|
47 ௪௭ அவன் நசரேயனாகிய இயேசு வருகிறார் என்று கேள்விப்பட்டு: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று சத்தமிட்டு கூப்பிடத் தொடங்கினான்.
ਸ ਨਾਸਰਤੀਯਸ੍ਯ ਯੀਸ਼ੋਰਾਗਮਨਵਾਰ੍ੱਤਾਂ ਪ੍ਰਾਪ੍ਯ ਪ੍ਰੋਚੈ ਰ੍ਵਕ੍ਤੁਮਾਰੇਭੇ, ਹੇ ਯੀਸ਼ੋ ਦਾਯੂਦਃ ਸਨ੍ਤਾਨ ਮਾਂ ਦਯਸ੍ਵ|
48 ௪௮ அவனை அமைதியாக இருக்கச்சொல்லி மக்கள் அவனை அதட்டினார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று முன்பைவிட அதிகமாக சத்தமிட்டு கூப்பிட்டான்.
ਤਤੋਨੇਕੇ ਲੋਕਾ ਮੌਨੀਭਵੇਤਿ ਤੰ ਤਰ੍ਜਯਾਮਾਸੁਃ, ਕਿਨ੍ਤੁ ਸ ਪੁਨਰਧਿਕਮੁੱਚੈ ਰ੍ਜਗਾਦ, ਹੇ ਯੀਸ਼ੋ ਦਾਯੂਦਃ ਸਨ੍ਤਾਨ ਮਾਂ ਦਯਸ੍ਵ|
49 ௪௯ இயேசு நின்று, அவனை அழைத்துவரச் சொன்னார். அவர்கள் அந்தப் பார்வையற்றவனை அழைத்து: திடன்கொள், எழுந்திரு, உன்னை அழைக்கிறார் என்றார்கள்.
ਤਦਾ ਯੀਸ਼ੁਃ ਸ੍ਥਿਤ੍ਵਾ ਤਮਾਹ੍ਵਾਤੁੰ ਸਮਾਦਿਦੇਸ਼, ਤਤੋ ਲੋਕਾਸ੍ਤਮਨ੍ਧਮਾਹੂਯ ਬਭਾਸ਼਼ਿਰੇ, ਹੇ ਨਰ, ਸ੍ਥਿਰੋ ਭਵ, ਉੱਤਿਸ਼਼੍ਠ, ਸ ਤ੍ਵਾਮਾਹ੍ਵਯਤਿ|
50 ௫0 உடனே அவன் தன் மேலாடையை கழற்றிவிட்டு, எழுந்து, இயேசுவிடம் வந்தான்.
ਤਦਾ ਸ ਉੱਤਰੀਯਵਸ੍ਤ੍ਰੰ ਨਿਕ੍ਸ਼਼ਿਪ੍ਯ ਪ੍ਰੋੱਥਾਯ ਯੀਸ਼ੋਃ ਸਮੀਪੰ ਗਤਃ|
51 ௫௧ இயேசு அவனைப் பார்த்து: நான் உனக்கு என்னசெய்யவேண்டும் என்று விரும்புகிறாய் என்றார். அதற்கு அந்தப் பார்வையற்றவன்: ஆண்டவரே, நான் பார்வைபெறவேண்டும் என்றான்.
ਤਤੋ ਯੀਸ਼ੁਸ੍ਤਮਵਦਤ੍ ਤ੍ਵਯਾ ਕਿੰ ਪ੍ਰਾਰ੍ਥ੍ਯਤੇ? ਤੁਭ੍ਯਮਹੰ ਕਿੰ ਕਰਿਸ਼਼੍ਯਾਮੀ? ਤਦਾ ਸੋਨ੍ਧਸ੍ਤਮੁਵਾਚ, ਹੇ ਗੁਰੋ ਮਦੀਯਾ ਦ੍ਰੁʼਸ਼਼੍ਟਿਰ੍ਭਵੇਤ੍|
52 ௫௨ இயேசு அவனைப் பார்த்து: நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். உடனே அவன் பார்வைபெற்று, வழியிலே இயேசுவைப் பின்பற்றி அவர்பின்னே சென்றான்.
ਤਤੋ ਯੀਸ਼ੁਸ੍ਤਮੁਵਾਚ ਯਾਹਿ ਤਵ ਵਿਸ਼੍ਵਾਸਸ੍ਤ੍ਵਾਂ ਸ੍ਵਸ੍ਥਮਕਾਰ੍ਸ਼਼ੀਤ੍, ਤਸ੍ਮਾਤ੍ ਤਤ੍ਕ੍ਸ਼਼ਣੰ ਸ ਦ੍ਰੁʼਸ਼਼੍ਟਿੰ ਪ੍ਰਾਪ੍ਯ ਪਥਾ ਯੀਸ਼ੋਃ ਪਸ਼੍ਚਾਦ੍ ਯਯੌ|