< மாற்கு 10 >
1 ௧ இயேசு அந்த இடத்திலிருந்து, யோர்தான் நதிக்கு அக்கரையில் உள்ள தேசத்தின்வழியாக யூதேயாவின் எல்லைகளில் வந்தார். மக்கள் மீண்டும் அவரிடம் கூடிவந்தார்கள். அவர் தம்முடைய வழக்கத்தின்படியே மீண்டும் அவர்களுக்குப் போதகம்பண்ணினார்.
১অনন্তরং স তৎস্থানাৎ প্রস্থায যর্দ্দননদ্যাঃ পারে যিহূদাপ্রদেশ উপস্থিতৱান্, তত্র তদন্তিকে লোকানাং সমাগমে জাতে স নিজরীত্যনুসারেণ পুনস্তান্ উপদিদেশ|
2 ௨ அப்பொழுது பரிசேயர்கள், அவரைச் சோதிக்கவேண்டும் என்று, அவரிடம் வந்து: கணவன் தன் மனைவியை விவாகரத்து செய்வது நியாயமா? என்று கேட்டார்கள்.
২তদা ফিরূশিনস্তৎসমীপম্ এত্য তং পরীক্ষিতুং পপ্রচ্ছঃ স্ৱজাযা মনুজানাং ত্যজ্যা ন ৱেতি?
3 ௩ அவர் மறுமொழியாக: மோசே உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறது என்ன என்று கேட்டார்.
৩ততঃ স প্রত্যৱাদীৎ, অত্র কার্য্যে মূসা যুষ্মান্ প্রতি কিমাজ্ঞাপযৎ?
4 ௪ அதற்கு அவர்கள் விவாகரத்திற்குரிய விடுதலைப்பத்திரத்தை எழுதிக்கொடுத்து, அவளை விவாகரத்து செய்யலாம் என்று மோசே அனுமதி கொடுத்திருக்கிறார் என்றார்கள்.
৪ত ঊচুঃ ত্যাগপত্রং লেখিতুং স্ৱপত্নীং ত্যক্তুঞ্চ মূসাঽনুমন্যতে|
5 ௫ இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: உங்களுடைய இருதயக் கடினத்தினாலே இந்தக் கட்டளையை உங்களுக்கு எழுதிக்கொடுத்தான்.
৫তদা যীশুঃ প্রত্যুৱাচ, যুষ্মাকং মনসাং কাঠিন্যাদ্ধেতো র্মূসা নিদেশমিমম্ অলিখৎ|
6 ௬ ஆனாலும், ஆரம்பத்திலே மனிதர்களைப் படைத்த தேவன் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார்.
৬কিন্তু সৃষ্টেরাদৌ ঈশ্ৱরো নরান্ পুংরূপেণ স্ত্রীরূপেণ চ সসর্জ|
7 ௭ இதனால் கணவன் தன் தகப்பனையும் தாயையும்விட்டுத் தன் மனைவியோடு இணைந்திருப்பான்;
৭"ততঃ কারণাৎ পুমান্ পিতরং মাতরঞ্চ ত্যক্ত্ৱা স্ৱজাযাযাম্ আসক্তো ভৱিষ্যতি,
8 ௮ அவர்கள் இருவர்களும் ஒரே மாம்சமாக இருப்பார்கள்; இவ்விதமாக அவர்கள் இருவர்களாக இல்லாமல் ஒரே மாம்சமாக இருக்கிறார்கள்.
৮তৌ দ্ৱাৱ্ একাঙ্গৌ ভৱিষ্যতঃ| " তস্মাৎ তৎকালমারভ্য তৌ ন দ্ৱাৱ্ একাঙ্গৌ|
9 ௯ எனவே, தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கவேண்டும் என்றார்.
৯অতঃ কারণাদ্ ঈশ্ৱরো যদযোজযৎ কোপি নরস্তন্ন ৱিযেজযেৎ|
10 ௧0 பின்பு வீட்டில் இருக்கும்போது அவருடைய சீடர்கள் அந்தக் காரியத்தைக்குறித்து மீண்டும் அவரிடம் விசாரித்தார்கள்.
১০অথ যীশু র্গৃহং প্রৱিষ্টস্তদা শিষ্যাঃ পুনস্তৎকথাং তং পপ্রচ্ছুঃ|
11 ௧௧ அப்பொழுது அவர்: யாராவது தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, வேறொரு பெண்ணைத் திருமணம்செய்தால், அவன் அவளுக்கு விரோதமாக விபசாரம் செய்கிறவனாக இருப்பான்.
১১ততঃ সোৱদৎ কশ্চিদ্ যদি স্ৱভার্য্যাং ত্যক্তৱান্যাম্ উদ্ৱহতি তর্হি স স্ৱভার্য্যাযাঃ প্রাতিকূল্যেন ৱ্যভিচারী ভৱতি|
12 ௧௨ மனைவியும் தன் கணவனை விவாகரத்து செய்துவிட்டு, வேறொருவனை திருமணம்செய்தால், விபசாரம் செய்கிறவளாக இருப்பாள் என்றார்.
১২কাচিন্নারী যদি স্ৱপতিং হিৎৱান্যপুংসা ৱিৱাহিতা ভৱতি তর্হি সাপি ৱ্যভিচারিণী ভৱতি|
13 ௧௩ அப்பொழுது, சிறு பிள்ளைகளை அவர் தொடுவதற்காக அவர்களை அவரிடம் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீடர்கள் அதட்டினார்கள்.
১৩অথ স যথা শিশূন্ স্পৃশেৎ, তদর্থং লোকৈস্তদন্তিকং শিশৱ আনীযন্ত, কিন্তু শিষ্যাস্তানানীতৱতস্তর্জযামাসুঃ|
14 ௧௪ இயேசு அதைப் பார்த்து கோபப்பட்டு: சிறு பிள்ளைகள் என்னிடம் வருகிறதற்கு இடம்கொடுங்கள்; அவர்களைத் தடைப்பண்ணவேண்டாம்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது.
১৪যীশুস্তদ্ দৃষ্ট্ৱা ক্রুধ্যন্ জগাদ, মন্নিকটম্ আগন্তুং শিশূন্ মা ৱারযত, যত এতাদৃশা ঈশ্ৱররাজ্যাধিকারিণঃ|
15 ௧௫ யாராவது சிறு பிள்ளையைப்போல தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அவன் அதில் பிரவேசிப்பதில்லை என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி,
১৫যুষ্মানহং যথার্থং ৱচ্মি, যঃ কশ্চিৎ শিশুৱদ্ ভূৎৱা রাজ্যমীশ্ৱরস্য ন গৃহ্লীযাৎ স কদাপি তদ্রাজ্যং প্রৱেষ্টুং ন শক্নোতি|
16 ௧௬ அவர்களை அணைத்துக்கொண்டு, அவர்கள்மேல் கரங்களை வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார்.
১৬অননতরং স শিশূনঙ্কে নিধায তেষাং গাত্রেষু হস্তৌ দত্ত্ৱাশিষং বভাষে|
17 ௧௭ பின்பு அவர் புறப்பட்டுப் போய்க்கொண்டிருக்கும்போது, ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ள நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். (aiōnios )
১৭অথ স ৱর্ত্মনা যাতি, এতর্হি জন একো ধাৱন্ আগত্য তৎসম্মুখে জানুনী পাতযিৎৱা পৃষ্টৱান্, ভোঃ পরমগুরো, অনন্তাযুঃ প্রাপ্তযে মযা কিং কর্ত্তৱ্যং? (aiōnios )
18 ௧௮ அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வது எதினால்? தேவன் ஒருவர்தவிர நல்லவன் ஒருவனும் இல்லை.
১৮তদা যীশুরুৱাচ, মাং পরমং কুতো ৱদসি? ৱিনেশ্ৱরং কোপি পরমো ন ভৱতি|
19 ௧௯ விபசாரம் செய்யாதே, கொலை செய்யாதே, திருடாதே, பொய்ச்சாட்சி சொல்லாதே, ஏமாற்றாதே, உன் தகப்பனையும், தாயையும் கனம்பண்ணு என்கிற கட்டளைகளைப்பற்றி தெரிந்திருக்கிறாயே என்றார்.
১৯পরস্ত্রীং নাভিগচ্ছ; নরং মা ঘাতয; স্তেযং মা কুরু; মৃষাসাক্ষ্যং মা দেহি; হিংসাঞ্চ মা কুরু; পিতরৌ সম্মন্যস্ৱ; নিদেশা এতে ৎৱযা জ্ঞাতাঃ|
20 ௨0 அதற்கு அவன்: போதகரே, இவைகளையெல்லாம் என் சிறிய வயதிலிருந்து கடைபிடித்து வருகிறேன் என்றான்.
২০ততস্তন প্রত্যুক্তং, হে গুরো বাল্যকালাদহং সর্ৱ্ৱানেতান্ আচরামি|
21 ௨௧ இயேசு அவனைப் பார்த்து, அவனிடம் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; நீ போய், உனக்கு உண்டானவைகளை எல்லாவற்றையும் விற்று, ஏழைகளுக்குக் கொடு; அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றிவா என்றார்.
২১তদা যীশুস্তং ৱিলোক্য স্নেহেন বভাষে, তৱৈকস্যাভাৱ আস্তে; ৎৱং গৎৱা সর্ৱ্ৱস্ৱং ৱিক্রীয দরিদ্রেভ্যো ৱিশ্রাণয, ততঃ স্ৱর্গে ধনং প্রাপ্স্যসি; ততঃ পরম্ এত্য ক্রুশং ৱহন্ মদনুৱর্ত্তী ভৱ|
22 ௨௨ அவனுக்கு அதிக சொத்துக்கள் இருந்ததால், இந்த வார்த்தையைக் கேட்டு, சோர்ந்து, துக்கத்தோடு போய்விட்டான்.
২২কিন্তু তস্য বহুসম্পদ্ৱিদ্যমানৎৱাৎ স ইমাং কথামাকর্ণ্য ৱিষণো দুঃখিতশ্চ সন্ জগাম|
23 ௨௩ அப்பொழுது இயேசு சுற்றிலும்பார்த்து, தம்முடைய சீடர்களைப் பார்த்து: செல்வந்தர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு கடினமாக இருக்கிறது என்றார்.
২৩অথ যীশুশ্চতুর্দিশো নিরীক্ষ্য শিষ্যান্ অৱাদীৎ, ধনিলোকানাম্ ঈশ্ৱররাজ্যপ্রৱেশঃ কীদৃগ্ দুষ্করঃ|
24 ௨௪ சீடர்கள் அவருடைய வார்த்தைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். இயேசு மீண்டும் அவர்களைப் பார்த்து: பிள்ளைகளே, செல்வத்தின்மேல் நம்பிக்கையாக இருக்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு கடினமாக இருக்கிறது!
২৪তস্য কথাতঃ শিষ্যাশ্চমচ্চক্রুঃ, কিন্তু স পুনরৱদৎ, হে বালকা যে ধনে ৱিশ্ৱসন্তি তেষাম্ ঈশ্ৱররাজ্যপ্রৱেশঃ কীদৃগ্ দুষ্করঃ|
25 ௨௫ செல்வந்தர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைவிட, ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது சுலபமாக இருக்கும் என்றார்.
২৫ঈশ্ৱররাজ্যে ধনিনাং প্রৱেশাৎ সূচিরন্ধ্রেণ মহাঙ্গস্য গমনাগমনং সুকরং|
26 ௨௬ அவர்கள் அதிகமாக ஆச்சரியப்பட்டு: அப்படியானால் யார் இரட்சிக்கப்படமுடியும் என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
২৬তদা শিষ্যা অতীৱ ৱিস্মিতাঃ পরস্পরং প্রোচুঃ, তর্হি কঃ পরিত্রাণং প্রাপ্তুং শক্নোতি?
27 ௨௭ இயேசு அவர்களைப் பார்த்து: மனிதர்களால் இது முடியாது, தேவனால் இது முடியும்; தேவனாலே எல்லாம் முடியும் என்றார்.
২৭ততো যীশুস্তান্ ৱিলোক্য বভাষে, তন্ নরস্যাসাধ্যং কিন্তু নেশ্ৱরস্য, যতো হেতোরীশ্ৱরস্য সর্ৱ্ৱং সাধ্যম্|
28 ௨௮ அப்பொழுது பேதுரு அவரைப் பார்த்து: இதோ, நாங்கள் எல்லாவற்றையும்விட்டு, உம்மைப் பின்பற்றிவந்தோமே, என்று சொல்லத்தொடங்கினான்.
২৮তদা পিতর উৱাচ, পশ্য ৱযং সর্ৱ্ৱং পরিত্যজ্য ভৱতোনুগামিনো জাতাঃ|
29 ௨௯ அதற்கு இயேசு மறுமொழியாக: எனக்காகவும், நற்செய்திப் பணிக்காகவும், வீட்டையாவது, சகோதரர்களையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, குழந்தைகளையாவது, நிலங்களையாவது விட்டு வந்தவன் எவனும்,
২৯ততো যীশুঃ প্রত্যৱদৎ, যুষ্মানহং যথার্থং ৱদামি, মদর্থং সুসংৱাদার্থং ৱা যো জনঃ সদনং ভ্রাতরং ভগিনীং পিতরং মাতরং জাযাং সন্তানান্ ভূমি ৱা ত্যক্ত্ৱা
30 ௩0 இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடு நூறுமடங்காக வீடுகளையும், சகோதரர்களையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடைவான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (aiōn , aiōnios )
৩০গৃহভ্রাতৃভগিনীপিতৃমাতৃপত্নীসন্তানভূমীনামিহ শতগুণান্ প্রেত্যানন্তাযুশ্চ ন প্রাপ্নোতি তাদৃশঃ কোপি নাস্তি| (aiōn , aiōnios )
31 ௩௧ ஆனாலும் முந்தினவர்கள் அநேகர் பிந்தினவர்களாகவும், பிந்தினவர்கள் அநேகர் முந்தினவர்களாகவும் இருப்பார்கள் என்றார்.
৩১কিন্ত্ৱগ্রীযা অনেকে লোকাঃ শেষাঃ, শেষীযা অনেকে লোকাশ্চাগ্রা ভৱিষ্যন্তি|
32 ௩௨ பின்பு அவர்கள் எருசலேமுக்குப் பயணமாகப் போகும்பொழுது, இயேசு அவர்களுக்கு முன்பே நடந்துபோனார்; அவர்கள் ஆச்சரியப்பட்டு, அவருக்குப் பின்னால் பயத்தோடு போனார்கள். அப்பொழுது அவர் பன்னிரண்டு சீடர்களையும் அழைத்து, தமக்கு நடக்கப்போகிறவைகளை அவர்களுக்கு மீண்டும் சொல்லத்தொடங்கினார்:
৩২অথ যিরূশালম্যানকালে যীশুস্তেষাম্ অগ্রগামী বভূৱ, তস্মাত্তে চিত্রং জ্ঞাৎৱা পশ্চাদ্গামিনো ভূৎৱা বিভ্যুঃ| তদা স পুন র্দ্ৱাদশশিষ্যান্ গৃহীৎৱা স্ৱীযং যদ্যদ্ ঘটিষ্যতে তত্তৎ তেভ্যঃ কথযিতুং প্রারেভে;
33 ௩௩ இதோ, எருசலேமுக்குப் போகிறோம்; அங்கே மனிதகுமாரன் பிரதான ஆசாரியர்களிடத்திலும் வேதபண்டிதரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரணதண்டனைக்குள்ளாகத் தீர்த்து, யூதரல்லாதோர்களிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள்.
৩৩পশ্যত ৱযং যিরূশালম্পুরং যামঃ, তত্র মনুষ্যপুত্রঃ প্রধানযাজকানাম্ উপাধ্যাযানাঞ্চ করেষু সমর্পযিষ্যতে; তে চ ৱধদণ্ডাজ্ঞাং দাপযিৎৱা পরদেশীযানাং করেষু তং সমর্পযিষ্যন্তি|
34 ௩௪ அவர்கள் அவரைப் பரிகாசம்பண்ணி, அவரை சாட்டையினால் அடித்து, அவர்மேல் துப்பி, அவரைக் கொலைசெய்வார்கள்; ஆனாலும் மூன்றாம்நாளிலே அவர் உயிரோடு எழுந்திருப்பார் என்றார்.
৩৪তে তমুপহস্য কশযা প্রহৃত্য তদ্ৱপুষি নিষ্ঠীৱং নিক্ষিপ্য তং হনিষ্যন্তি, ততঃ স তৃতীযদিনে প্রোত্থাস্যতি|
35 ௩௫ அப்பொழுது செபெதேயுவின் குமாரர்களாகிய யாக்கோபும் யோவானும் அவரிடம் வந்து: போதகரே, நாங்கள் எதைக்கேட்டாலும் அதை நீர் எங்களுக்குச் செய்யவேண்டும் என்று விரும்புகிறோம் என்றார்கள்.
৩৫ততঃ সিৱদেঃ পুত্রৌ যাকূব্যোহনৌ তদন্তিকম্ এত্য প্রোচতুঃ, হে গুরো যদ্ আৱাভ্যাং যাচিষ্যতে তদস্মদর্থং ভৱান্ করোতু নিৱেদনমিদমাৱযোঃ|
36 ௩௬ அவர் அவர்களைப் பார்த்து: நான் உங்களுக்கு என்னசெய்யவேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்று கேட்டார்.
৩৬ততঃ স কথিতৱান্, যুৱাং কিমিচ্ছথঃ? কিং মযা যুষ্মদর্থং করণীযং?
37 ௩௭ அதற்கு அவர்கள்: உமது மகிமையிலே, எங்களில் ஒருவன் உமது வலதுபக்கத்திலும், ஒருவன் உமது இடதுபக்கத்திலும் உட்கார்ந்திருக்கும்படி எங்களுக்கு அருள்செய்யவேண்டும் என்றார்கள்.
৩৭তদা তৌ প্রোচতুঃ, আৱযোরেকং দক্ষিণপার্শ্ৱে ৱামপার্শ্ৱে চৈকং তৱৈশ্ৱর্য্যপদে সমুপৱেষ্টুম্ আজ্ঞাপয|
38 ௩௮ இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் கேட்பது என்ன என்று உங்களுக்கே தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும் உங்களால் முடியுமா என்றார்.
৩৮কিন্তু যীশুঃ প্রত্যুৱাচ যুৱামজ্ঞাৎৱেদং প্রার্থযেথে, যেন কংসেনাহং পাস্যামি তেন যুৱাভ্যাং কিং পাতুং শক্ষ্যতে? যস্মিন্ মজ্জনেনাহং মজ্জিষ্যে তন্মজ্জনে মজ্জযিতুং কিং যুৱাভ্যাং শক্ষ্যতে? তৌ প্রত্যূচতুঃ শক্ষ্যতে|
39 ௩௯ அதற்கு அவர்கள்: முடியும் என்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள்.
৩৯তদা যীশুরৱদৎ যেন কংসেনাহং পাস্যামি তেনাৱশ্যং যুৱামপি পাস্যথঃ, যেন মজ্জনেন চাহং মজ্জিয্যে তত্র যুৱামপি মজ্জিষ্যেথে|
40 ௪0 ஆனாலும் என் வலதுபக்கத்திலும் என் இடதுபக்கத்திலும் உட்கார்ந்திருக்கும்படி யாருக்கு ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களைத்தவிர, மற்றவர்களுக்கு அதை அருளுவது என் காரியமல்ல என்றார்.
৪০কিন্তু যেষামর্থম্ ইদং নিরূপিতং, তান্ ৱিহাযান্যং কমপি মম দক্ষিণপার্শ্ৱে ৱামপার্শ্ৱে ৱা সমুপৱেশযিতুং মমাধিকারো নাস্তি|
41 ௪௧ மற்ற பத்துப்பேரும் அதைக்கேட்டு, யாக்கோபின்மேலும் யோவானின் மேலும் எரிச்சலானார்கள்.
৪১অথান্যদশশিষ্যা ইমাং কথাং শ্রুৎৱা যাকূব্যোহন্ভ্যাং চুকুপুঃ|
42 ௪௨ அப்பொழுது, இயேசு அவர்களை அருகில் வரச்சொல்லி: யூதரல்லாதவர்களுக்கு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டவர்கள் அவர்களை ஆணவத்தோடு ஆளுகிறார்கள் என்றும், அவர்களில் பெரியவர்கள் அவர்கள்மேல் கடினமாக அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
৪২কিন্তু যীশুস্তান্ সমাহূয বভাষে, অন্যদেশীযানাং রাজৎৱং যে কুর্ৱ্ৱন্তি তে তেষামেৱ প্রভুৎৱং কুর্ৱ্ৱন্তি, তথা যে মহালোকাস্তে তেষাম্ অধিপতিৎৱং কুর্ৱ্ৱন্তীতি যূযং জানীথ|
43 ௪௩ உங்களுக்குள்ளே அப்படி இருக்கக்கூடாது; உங்களில் யாராவது பெரியவனாக இருக்கவிரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாக இருக்கவேண்டும்.
৪৩কিন্তু যুষ্মাকং মধ্যে ন তথা ভৱিষ্যতি, যুষ্মাকং মধ্যে যঃ প্রাধান্যং ৱাঞ্ছতি স যুষ্মাকং সেৱকো ভৱিষ্যতি,
44 ௪௪ உங்களில் யாராவது முதன்மையானவனாக இருக்கவிரும்பினால், அவன் எல்லோருக்கும் ஊழியக்காரனாக இருக்கவேண்டும்.
৪৪যুষ্মাকং যো মহান্ ভৱিতুমিচ্ছতি স সর্ৱ্ৱেষাং কিঙ্করো ভৱিষ্যতি|
45 ௪௫ அப்படியே, மனிதகுமாரனும் மற்றவர்களிடம் ஊழியம் பெற வராமல், ஊழியம் செய்யவும், அநேகரை மீட்கத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்.
৪৫যতো মনুষ্যপুত্রঃ সেৱ্যো ভৱিতুং নাগতঃ সেৱাং কর্ত্তাং তথানেকেষাং পরিত্রাণস্য মূল্যরূপস্ৱপ্রাণং দাতুঞ্চাগতঃ|
46 ௪௬ பின்பு அவர்கள் எரிகோவிற்கு வந்தார்கள். அவரும் அவருடைய சீடர்களும் மக்கள் கூட்டமும் எரிகோவைவிட்டுப் புறப்படுகிறபோது, திமேயுவின் பார்வையற்ற மகனாகிய பர்திமேயு, வழியருகில் உட்கார்ந்து, பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான்.
৪৬অথ তে যিরীহোনগরং প্রাপ্তাস্তস্মাৎ শিষ্যৈ র্লোকৈশ্চ সহ যীশো র্গমনকালে টীমযস্য পুত্রো বর্টীমযনামা অন্ধস্তন্মার্গপার্শ্ৱে ভিক্ষার্থম্ উপৱিষ্টঃ|
47 ௪௭ அவன் நசரேயனாகிய இயேசு வருகிறார் என்று கேள்விப்பட்டு: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று சத்தமிட்டு கூப்பிடத் தொடங்கினான்.
৪৭স নাসরতীযস্য যীশোরাগমনৱার্ত্তাং প্রাপ্য প্রোচৈ র্ৱক্তুমারেভে, হে যীশো দাযূদঃ সন্তান মাং দযস্ৱ|
48 ௪௮ அவனை அமைதியாக இருக்கச்சொல்லி மக்கள் அவனை அதட்டினார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று முன்பைவிட அதிகமாக சத்தமிட்டு கூப்பிட்டான்.
৪৮ততোনেকে লোকা মৌনীভৱেতি তং তর্জযামাসুঃ, কিন্তু স পুনরধিকমুচ্চৈ র্জগাদ, হে যীশো দাযূদঃ সন্তান মাং দযস্ৱ|
49 ௪௯ இயேசு நின்று, அவனை அழைத்துவரச் சொன்னார். அவர்கள் அந்தப் பார்வையற்றவனை அழைத்து: திடன்கொள், எழுந்திரு, உன்னை அழைக்கிறார் என்றார்கள்.
৪৯তদা যীশুঃ স্থিৎৱা তমাহ্ৱাতুং সমাদিদেশ, ততো লোকাস্তমন্ধমাহূয বভাষিরে, হে নর, স্থিরো ভৱ, উত্তিষ্ঠ, স ৎৱামাহ্ৱযতি|
50 ௫0 உடனே அவன் தன் மேலாடையை கழற்றிவிட்டு, எழுந்து, இயேசுவிடம் வந்தான்.
৫০তদা স উত্তরীযৱস্ত্রং নিক্ষিপ্য প্রোত্থায যীশোঃ সমীপং গতঃ|
51 ௫௧ இயேசு அவனைப் பார்த்து: நான் உனக்கு என்னசெய்யவேண்டும் என்று விரும்புகிறாய் என்றார். அதற்கு அந்தப் பார்வையற்றவன்: ஆண்டவரே, நான் பார்வைபெறவேண்டும் என்றான்.
৫১ততো যীশুস্তমৱদৎ ৎৱযা কিং প্রার্থ্যতে? তুভ্যমহং কিং করিষ্যামী? তদা সোন্ধস্তমুৱাচ, হে গুরো মদীযা দৃষ্টির্ভৱেৎ|
52 ௫௨ இயேசு அவனைப் பார்த்து: நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். உடனே அவன் பார்வைபெற்று, வழியிலே இயேசுவைப் பின்பற்றி அவர்பின்னே சென்றான்.
৫২ততো যীশুস্তমুৱাচ যাহি তৱ ৱিশ্ৱাসস্ত্ৱাং স্ৱস্থমকার্ষীৎ, তস্মাৎ তৎক্ষণং স দৃষ্টিং প্রাপ্য পথা যীশোঃ পশ্চাদ্ যযৌ|