< லூக்கா 1 >

1 மகா கனம்பொருந்திய தேயோப்பிலுவே, நாங்கள் முழுநிச்சயமாக நம்புகிற காரியங்களை,
ପ୍ରଥମତୋ ଯେ ସାକ୍ଷିଣୋ ୱାକ୍ୟପ୍ରଚାରକାଶ୍ଚାସନ୍ ତେଽସ୍ମାକଂ ମଧ୍ୟେ ଯଦ୍ୟତ୍ ସପ୍ରମାଣଂ ୱାକ୍ୟମର୍ପଯନ୍ତି ସ୍ମ
2 ஆரம்பமுதல் கண்கூடாகப் பார்த்து வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக்குறித்து சரித்திரம் எழுத அநேகம்பேர் முயற்சித்தனர்.
ତଦନୁସାରତୋଽନ୍ୟେପି ବହୱସ୍ତଦ୍ୱୃତ୍ତାନ୍ତଂ ରଚଯିତୁଂ ପ୍ରୱୃତ୍ତାଃ|
3 ஆகவே, ஆரம்பமுதல் எல்லாவற்றையும் திட்டமாக விசாரித்து அறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட காரியங்களின் நிச்சயத்தை நீர் அறியவேண்டும் என்று,
ଅତଏୱ ହେ ମହାମହିମଥିଯଫିଲ୍ ତ୍ୱଂ ଯା ଯାଃ କଥା ଅଶିକ୍ଷ୍ୟଥାସ୍ତାସାଂ ଦୃଢପ୍ରମାଣାନି ଯଥା ପ୍ରାପ୍ନୋଷି
4 அவைகளை சரியாக ஒழுங்குப்படுத்தி உமக்கு எழுதுவது எனக்கு நல்லதாகத் தோன்றியது.
ତଦର୍ଥଂ ପ୍ରଥମମାରଭ୍ୟ ତାନି ସର୍ୱ୍ୱାଣି ଜ୍ଞାତ୍ୱାହମପି ଅନୁକ୍ରମାତ୍ ସର୍ୱ୍ୱୱୃତ୍ତାନ୍ତାନ୍ ତୁଭ୍ୟଂ ଲେଖିତୁଂ ମତିମକାର୍ଷମ୍|
5 யூதேயாதேசத்தின் ராஜாவாகிய ஏரோதின் நாட்களில், அபியா என்னும் ஆசாரிய வம்சத்தைச் சேர்ந்த சகரியா என்னும் பெயர்கொண்ட ஆசாரியன் ஒருவன் இருந்தான். அவனுடைய மனைவி ஆரோனுடைய சந்ததியில் ஒருத்தி, அவளுடைய பெயர் எலிசபெத்து.
ଯିହୂଦାଦେଶୀଯହେରୋଦ୍ନାମକେ ରାଜତ୍ୱଂ କୁର୍ୱ୍ୱତି ଅବୀଯଯାଜକସ୍ୟ ପର୍ୟ୍ୟାଯାଧିକାରୀ ସିଖରିଯନାମକ ଏକୋ ଯାଜକୋ ହାରୋଣୱଂଶୋଦ୍ଭୱା ଇଲୀଶେୱାଖ୍ୟା
6 அவர்கள் இருவரும் கர்த்தர் கொடுத்த எல்லாக் கட்டளைகளின்படியும் நியமங்களின்படியும் குற்றமற்றவர்களாக நடந்து, தேவனுக்குமுன்பாக நீதியுள்ளவர்களாக இருந்தார்கள்.
ତସ୍ୟ ଜାଯା ଦ୍ୱାୱିମୌ ନିର୍ଦୋଷୌ ପ୍ରଭୋଃ ସର୍ୱ୍ୱାଜ୍ଞା ୱ୍ୟୱସ୍ଥାଶ୍ଚ ସଂମନ୍ୟ ଈଶ୍ୱରଦୃଷ୍ଟୌ ଧାର୍ମ୍ମିକାୱାସ୍ତାମ୍|
7 எலிசபெத்து மலடியாக இருந்தபடியால், அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது; இருவரும் முதிர்வயதானவர்களாகவும் இருந்தார்கள்.
ତଯୋଃ ସନ୍ତାନ ଏକୋପି ନାସୀତ୍, ଯତ ଇଲୀଶେୱା ବନ୍ଧ୍ୟା ତୌ ଦ୍ୱାୱେୱ ୱୃଦ୍ଧାୱଭୱତାମ୍|
8 அப்படியிருக்க, அவன் தன் ஆசாரிய முறைமைகளின்படி தேவசந்நிதியிலே ஆசாரிய ஊழியம் செய்துவருகிற காலத்தில்,
ଯଦା ସ୍ୱପର୍ୟ୍ୟାନୁକ୍ରମେଣ ସିଖରିଯ ଈଶ୍ୱାସ୍ୟ ସମକ୍ଷଂ ଯାଜକୀଯଂ କର୍ମ୍ମ କରୋତି
9 ஆசாரிய ஊழிய முறைகளின்படி அவன் தேவாலயத்திற்குச் சென்று தூபம் காட்டுகிறதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டான்.
ତଦା ଯଜ୍ଞସ୍ୟ ଦିନପରିପାଯ୍ୟା ପରମେଶ୍ୱରସ୍ୟ ମନ୍ଦିରେ ପ୍ରୱେଶକାଲେ ଧୂପଜ୍ୱାଲନଂ କର୍ମ୍ମ ତସ୍ୟ କରଣୀଯମାସୀତ୍|
10 ௧0 தூபம் காட்டுகிற நேரத்திலே மக்களெல்லோரும் கூட்டமாக வெளியே ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள்.
ତଦ୍ଧୂପଜ୍ୱାଲନକାଲେ ଲୋକନିୱହେ ପ୍ରାର୍ଥନାଂ କର୍ତୁଂ ବହିସ୍ତିଷ୍ଠତି
11 ௧௧ அப்பொழுது கர்த்தருடைய தூதன் ஒருவன் தூப பீடத்தின் வலதுபக்கத்திலே நின்று அவனுக்குத் தரிசனமானான்.
ସତି ସିଖରିଯୋ ଯସ୍ୟାଂ ୱେଦ୍ୟାଂ ଧୂପଂ ଜ୍ୱାଲଯତି ତଦ୍ଦକ୍ଷିଣପାର୍ଶ୍ୱେ ପରମେଶ୍ୱରସ୍ୟ ଦୂତ ଏକ ଉପସ୍ଥିତୋ ଦର୍ଶନଂ ଦଦୌ|
12 ௧௨ சகரியா அவனைப் பார்த்து கலங்கி, பயமடைந்தான்.
ତଂ ଦୃଷ୍ଟ୍ୱା ସିଖରିଯ ଉଦ୍ୱିୱିଜେ ଶଶଙ୍କେ ଚ|
13 ௧௩ கர்த்தருடைய தூதன் அவனைப் பார்த்து: சகரியாவே, பயப்படாதே, உன் விண்ணப்பம் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெற்றெடுப்பாள், அவனுக்கு யோவான் என்று பெயர் இடுவாயாக.
ତଦା ସ ଦୂତସ୍ତଂ ବଭାଷେ ହେ ସିଖରିଯ ମା ଭୈସ୍ତୱ ପ୍ରାର୍ଥନା ଗ୍ରାହ୍ୟା ଜାତା ତୱ ଭାର୍ୟ୍ୟା ଇଲୀଶେୱା ପୁତ୍ରଂ ପ୍ରସୋଷ୍ୟତେ ତସ୍ୟ ନାମ ଯୋହନ୍ ଇତି କରିଷ୍ୟସି|
14 ௧௪ உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பதினாலே அநேகர் சந்தோஷப்படுவார்கள்.
କିଞ୍ଚ ତ୍ୱଂ ସାନନ୍ଦଃ ସହର୍ଷଶ୍ଚ ଭୱିଷ୍ୟସି ତସ୍ୟ ଜନ୍ମନି ବହୱ ଆନନ୍ଦିଷ୍ୟନ୍ତି ଚ|
15 ௧௫ அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாக இருப்பான், திராட்சைரசமும் மதுபானமும் குடிக்கமாட்டான், அவன் எலிசபெத்தின் கர்ப்பத்தில் இருக்கும்போதே பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டிருப்பான்.
ଯତୋ ହେତୋଃ ସ ପରମେଶ୍ୱରସ୍ୟ ଗୋଚରେ ମହାନ୍ ଭୱିଷ୍ୟତି ତଥା ଦ୍ରାକ୍ଷାରସଂ ସୁରାଂ ୱା କିମପି ନ ପାସ୍ୟତି, ଅପରଂ ଜନ୍ମାରଭ୍ୟ ପୱିତ୍ରେଣାତ୍ମନା ପରିପୂର୍ଣଃ
16 ௧௬ அவன் இஸ்ரவேல் வம்சத்தாரில் அநேகரைப் பாவங்களைவிட்டு, அவர்களுடைய தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான்.
ସନ୍ ଇସ୍ରାଯେଲ୍ୱଂଶୀଯାନ୍ ଅନେକାନ୍ ପ୍ରଭୋଃ ପରମେଶ୍ୱରସ୍ୟ ମାର୍ଗମାନେଷ୍ୟତି|
17 ௧௭ பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான மக்களை கர்த்தருக்கு ஆயத்தப்படுத்த, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உள்ளவனாக கர்த்தருக்கு முன்னே நடப்பான் என்றான்.
ସନ୍ତାନାନ୍ ପ୍ରତି ପିତୃଣାଂ ମନାଂସି ଧର୍ମ୍ମଜ୍ଞାନଂ ପ୍ରତ୍ୟନାଜ୍ଞାଗ୍ରାହିଣଶ୍ଚ ପରାୱର୍ତ୍ତଯିତୁଂ, ପ୍ରଭୋଃ ପରମେଶ୍ୱରସ୍ୟ ସେୱାର୍ଥମ୍ ଏକାଂ ସଜ୍ଜିତଜାତିଂ ୱିଧାତୁଞ୍ଚ ସ ଏଲିଯରୂପାତ୍ମଶକ୍ତିପ୍ରାପ୍ତସ୍ତସ୍ୟାଗ୍ରେ ଗମିଷ୍ୟତି|
18 ௧௮ அப்பொழுது சகரியா தேவதூதனை நோக்கி: இதை நான் எப்படி அறிவேன்; நான் முதிர்வயதானவனாக இருக்கிறேன், என் மனைவியும் வயதானவளாக இருக்கிறாளே என்றான்.
ତଦା ସିଖରିଯୋ ଦୂତମୱାଦୀତ୍ କଥମେତଦ୍ ୱେତ୍ସ୍ୟାମି? ଯତୋହଂ ୱୃଦ୍ଧୋ ମମ ଭାର୍ୟ୍ୟା ଚ ୱୃଦ୍ଧା|
19 ௧௯ தேவதூதன் அவனுக்கு மறுமொழியாக: நான் தேவ சந்நிதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன்; உன்னுடனே பேசவும், உனக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கவும் அனுப்பப்பட்டு வந்தேன்;
ତତୋ ଦୂତଃ ପ୍ରତ୍ୟୁୱାଚ ପଶ୍ୟେଶ୍ୱରସ୍ୟ ସାକ୍ଷାଦ୍ୱର୍ତ୍ତୀ ଜିବ୍ରାଯେଲ୍ନାମା ଦୂତୋହଂ ତ୍ୱଯା ସହ କଥାଂ ଗଦିତୁଂ ତୁଭ୍ୟମିମାଂ ଶୁଭୱାର୍ତ୍ତାଂ ଦାତୁଞ୍ଚ ପ୍ରେଷିତଃ|
20 ௨0 இதோ, குறித்த காலத்திலே நிறைவேறப்போகிற என் வார்த்தைகளை நீ விசுவாசிக்காதபடியால் இவைகள் நிறைவேறும் நாள்வரை நீ பேசமுடியாமல் ஊமையாக இருப்பாய் என்றான்.
କିନ୍ତୁ ମଦୀଯଂ ୱାକ୍ୟଂ କାଲେ ଫଲିଷ୍ୟତି ତତ୍ ତ୍ୱଯା ନ ପ୍ରତୀତମ୍ ଅତଃ କାରଣାଦ୍ ଯାୱଦେୱ ତାନି ନ ସେତ୍ସ୍ୟନ୍ତି ତାୱତ୍ ତ୍ୱଂ ୱକ୍ତୁଂମଶକ୍ତୋ ମୂକୋ ଭୱ|
21 ௨௧ மக்கள் சகரியாவுக்காக நீண்டநேரம் காத்திருந்து, அவன் தேவாலயத்தில் இருந்து வெளியே வர தாமதம் செய்ததினால் ஆச்சரியப்பட்டார்கள்.
ତଦାନୀଂ ଯେ ଯେ ଲୋକାଃ ସିଖରିଯମପୈକ୍ଷନ୍ତ ତେ ମଧ୍ୟେମନ୍ଦିରଂ ତସ୍ୟ ବହୁୱିଲମ୍ବାଦ୍ ଆଶ୍ଚର୍ୟ୍ୟଂ ମେନିରେ|
22 ௨௨ அவன் வெளியே வந்தபோது மக்களிடத்தில் பேச முடியாமலிருந்தான்; எனவே தேவாலயத்தில் அவன் ஒரு தரிசனத்தைப் பார்த்தான் என்று அறிந்துகொண்டார்கள். அவன் ஊமையாக இருந்தபடியால் அவர்களுக்கு சைகைகாட்டினான்.
ସ ବହିରାଗତୋ ଯଦା କିମପି ୱାକ୍ୟଂ ୱକ୍ତୁମଶକ୍ତଃ ସଙ୍କେତଂ କୃତ୍ୱା ନିଃଶବ୍ଦସ୍ତସ୍ୟୌ ତଦା ମଧ୍ୟେମନ୍ଦିରଂ କସ୍ୟଚିଦ୍ ଦର୍ଶନଂ ତେନ ପ୍ରାପ୍ତମ୍ ଇତି ସର୍ୱ୍ୱେ ବୁବୁଧିରେ|
23 ௨௩ அவனுடைய ஊழியத்தின் நாட்கள் நிறைவேறினவுடனே தன் வீட்டிற்குப்போனான்.
ଅନନ୍ତରଂ ତସ୍ୟ ସେୱନପର୍ୟ୍ୟାଯେ ସମ୍ପୂର୍ଣେ ସତି ସ ନିଜଗେହଂ ଜଗାମ|
24 ௨௪ அதற்குப்பின்பு, அவன் மனைவியாகிய எலிசபெத்து கர்ப்பந்தரித்து: மக்கள் மத்தியில் எனக்கு உண்டாயிருந்த அவமானத்தை நீக்கும்படியாகக் கர்த்தர் இந்த நாட்களில் என்மேல் இரக்கம் வைத்து,
କତିପଯଦିନେଷୁ ଗତେଷୁ ତସ୍ୟ ଭାର୍ୟ୍ୟା ଇଲୀଶେୱା ଗର୍ବ୍ଭୱତୀ ବଭୂୱ
25 ௨௫ எனக்கு இப்படிச் செய்தார் என்று சொல்லி, ஐந்து மாதங்கள் வீட்டைவிட்டு வெளியே போகாமல் இருந்தாள்.
ପଶ୍ଚାତ୍ ସା ପଞ୍ଚମାସାନ୍ ସଂଗୋପ୍ୟାକଥଯତ୍ ଲୋକାନାଂ ସମକ୍ଷଂ ମମାପମାନଂ ଖଣ୍ଡଯିତୁଂ ପରମେଶ୍ୱରୋ ମଯି ଦୃଷ୍ଟିଂ ପାତଯିତ୍ୱା କର୍ମ୍ମେଦୃଶଂ କୃତୱାନ୍|
26 ௨௬ எலிசபெத்தின் ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரில்,
ଅପରଞ୍ଚ ତସ୍ୟା ଗର୍ବ୍ଭସ୍ୟ ଷଷ୍ଠେ ମାସେ ଜାତେ ଗାଲୀଲ୍ପ୍ରଦେଶୀଯନାସରତ୍ପୁରେ
27 ௨௭ தாவீதின் வம்சத்தை சேர்ந்த யோசேப்பு என்கிற பெயருள்ள மனிதனுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிப் பெண்ணிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான்; அந்தக் கன்னிப் பெண்ணின் பெயர் மரியாள்.
ଦାଯୂଦୋ ୱଂଶୀଯାଯ ଯୂଷଫ୍ନାମ୍ନେ ପୁରୁଷାଯ ଯା ମରିଯମ୍ନାମକୁମାରୀ ୱାଗ୍ଦତ୍ତାସୀତ୍ ତସ୍ୟାଃ ସମୀପଂ ଜିବ୍ରାଯେଲ୍ ଦୂତ ଈଶ୍ୱରେଣ ପ୍ରହିତଃ|
28 ௨௮ அவள் இருந்த வீட்டில் தேவதூதன் தோன்றி: கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், பெண்களுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான்.
ସ ଗତ୍ୱା ଜଗାଦ ହେ ଈଶ୍ୱରାନୁଗୃହୀତକନ୍ୟେ ତୱ ଶୁଭଂ ଭୂଯାତ୍ ପ୍ରଭୁଃ ପରମେଶ୍ୱରସ୍ତୱ ସହାଯୋସ୍ତି ନାରୀଣାଂ ମଧ୍ୟେ ତ୍ୱମେୱ ଧନ୍ୟା|
29 ௨௯ அவளோ அவனைப் பார்த்து, அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துக்கள் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள்.
ତଦାନୀଂ ସା ତଂ ଦୃଷ୍ଟ୍ୱା ତସ୍ୟ ୱାକ୍ୟତ ଉଦ୍ୱିଜ୍ୟ କୀଦୃଶଂ ଭାଷଣମିଦମ୍ ଇତି ମନସା ଚିନ୍ତଯାମାସ|
30 ௩0 தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடமிருந்து கிருபைபெற்றாய்.
ତତୋ ଦୂତୋଽୱଦତ୍ ହେ ମରିଯମ୍ ଭଯଂ ମାକାର୍ଷୀଃ, ତ୍ୱଯି ପରମେଶ୍ୱରସ୍ୟାନୁଗ୍ରହୋସ୍ତି|
31 ௩௧ இதோ, நீ கர்ப்பம் தரித்து ஒரு குமாரனைப் பெற்றெடுப்பாய், அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக.
ପଶ୍ୟ ତ୍ୱଂ ଗର୍ବ୍ଭଂ ଧୃତ୍ୱା ପୁତ୍ରଂ ପ୍ରସୋଷ୍ୟସେ ତସ୍ୟ ନାମ ଯୀଶୁରିତି କରିଷ୍ୟସି|
32 ௩௨ அவர் பெரியவராக இருப்பார், உன்னதமான தேவனுடைய குமாரன் எனப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்.
ସ ମହାନ୍ ଭୱିଷ୍ୟତି ତଥା ସର୍ୱ୍ୱେଭ୍ୟଃ ଶ୍ରେଷ୍ଠସ୍ୟ ପୁତ୍ର ଇତି ଖ୍ୟାସ୍ୟତି; ଅପରଂ ପ୍ରଭୁଃ ପରମେଶ୍ୱରସ୍ତସ୍ୟ ପିତୁର୍ଦାଯୂଦଃ ସିଂହାସନଂ ତସ୍ମୈ ଦାସ୍ୟତି;
33 ௩௩ அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய இராஜ்யத்திற்கு முடிவு இல்லை என்றான். (aiōn g165)
ତଥା ସ ଯାକୂବୋ ୱଂଶୋପରି ସର୍ୱ୍ୱଦା ରାଜତ୍ୱଂ କରିଷ୍ୟତି, ତସ୍ୟ ରାଜତ୍ୱସ୍ୟାନ୍ତୋ ନ ଭୱିଷ୍ୟତି| (aiōn g165)
34 ௩௪ அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: நான் கன்னிப்பெண்ணாய் இருக்கிறேனே, இது எப்படி நடக்கும்? என்றாள்.
ତଦା ମରିଯମ୍ ତଂ ଦୂତଂ ବଭାଷେ ନାହଂ ପୁରୁଷସଙ୍ଗଂ କରୋମି ତର୍ହି କଥମେତତ୍ ସମ୍ଭୱିଷ୍ୟତି?
35 ௩௫ தேவதூதன் அவளுக்கு மறுமொழியாக; பரிசுத்த ஆவியானவர் உன்மேல் வருவார்; உன்னதமான தேவனுடைய பலம் உன்னை மூடும்; எனவே உன் கர்ப்பத்தில் பிறக்கும் இந்தப் பரிசுத்தக் குழந்தை, தேவனுடைய குமாரன் என்று அழைக்கப்படும்.
ତତୋ ଦୂତୋଽକଥଯତ୍ ପୱିତ୍ର ଆତ୍ମା ତ୍ୱାମାଶ୍ରାଯିଷ୍ୟତି ତଥା ସର୍ୱ୍ୱଶ୍ରେଷ୍ଠସ୍ୟ ଶକ୍ତିସ୍ତୱୋପରି ଛାଯାଂ କରିଷ୍ୟତି ତତୋ ହେତୋସ୍ତୱ ଗର୍ବ୍ଭାଦ୍ ଯଃ ପୱିତ୍ରବାଲକୋ ଜନିଷ୍ୟତେ ସ ଈଶ୍ୱରପୁତ୍ର ଇତି ଖ୍ୟାତିଂ ପ୍ରାପ୍ସ୍ୟତି|
36 ௩௬ இதோ, உன் இனத்தைச் சேர்ந்த எலிசபெத்தும் தன்னுடைய முதிர்வயதிலே ஒரு குமாரனைக் கர்ப்பம் தரித்திருக்கிறாள்; குழந்தை இல்லாதவள் என்று சொல்லப்பட்ட அவளுக்கு இது ஆறாவது மாதம்.
ଅପରଞ୍ଚ ପଶ୍ୟ ତୱ ଜ୍ଞାତିରିଲୀଶେୱା ଯାଂ ସର୍ୱ୍ୱେ ବନ୍ଧ୍ୟାମୱଦନ୍ ଇଦାନୀଂ ସା ୱାର୍ଦ୍ଧକ୍ୟେ ସନ୍ତାନମେକଂ ଗର୍ବ୍ଭେଽଧାରଯତ୍ ତସ୍ୟ ଷଷ୍ଠମାସୋଭୂତ୍|
37 ௩௭ தேவனாலே செய்யமுடியாத காரியம் ஒன்றும் இல்லை என்றான்.
କିମପି କର୍ମ୍ମ ନାସାଧ୍ୟମ୍ ଈଶ୍ୱରସ୍ୟ|
38 ௩௮ அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு நடக்கட்டும் என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளைவிட்டுப் போய்விட்டான்.
ତଦା ମରିଯମ୍ ଜଗାଦ, ପଶ୍ୟ ପ୍ରଭେରହଂ ଦାସୀ ମହ୍ୟଂ ତୱ ୱାକ୍ୟାନୁସାରେଣ ସର୍ୱ୍ୱମେତଦ୍ ଘଟତାମ୍; ଅନନତରଂ ଦୂତସ୍ତସ୍ୟାଃ ସମୀପାତ୍ ପ୍ରତସ୍ଥେ|
39 ௩௯ அந்த நாளில் மரியாள் எழுந்து, மலைநாடாகிய யூதேயாவில் உள்ள ஒரு பட்டணத்திற்கு சீக்கிரமாகப்போய்,
ଅଥ କତିପଯଦିନାତ୍ ପରଂ ମରିଯମ୍ ତସ୍ମାତ୍ ପର୍ୱ୍ୱତମଯପ୍ରଦେଶୀଯଯିହୂଦାଯା ନଗରମେକଂ ଶୀଘ୍ରଂ ଗତ୍ୱା
40 ௪0 சகரியாவின் வீட்டிற்குச் சென்று, எலிசபெத்தை வாழ்த்தினாள்.
ସିଖରିଯଯାଜକସ୍ୟ ଗୃହଂ ପ୍ରୱିଶ୍ୟ ତସ୍ୟ ଜାଯାମ୍ ଇଲୀଶେୱାଂ ସମ୍ବୋଧ୍ୟାୱଦତ୍|
41 ௪௧ எலிசபெத்து மரியாளுடைய வாழ்த்துக்களைக் கேட்டபொழுது, அவளுடைய கர்ப்பத்தில் இருந்த குழந்தை துள்ளியது; எலிசபெத்து பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு,
ତତୋ ମରିଯମଃ ସମ୍ବୋଧନୱାକ୍ୟେ ଇଲୀଶେୱାଯାଃ କର୍ଣଯୋଃ ପ୍ରୱିଷ୍ଟମାତ୍ରେ ସତି ତସ୍ୟା ଗର୍ବ୍ଭସ୍ଥବାଲକୋ ନନର୍ତ୍ତ| ତତ ଇଲୀଶେୱା ପୱିତ୍ରେଣାତ୍ମନା ପରିପୂର୍ଣା ସତୀ
42 ௪௨ அதிக சத்தமாக: பெண்களுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது.
ପ୍ରୋଚ୍ଚୈର୍ଗଦିତୁମାରେଭେ, ଯୋଷିତାଂ ମଧ୍ୟେ ତ୍ୱମେୱ ଧନ୍ୟା, ତୱ ଗର୍ବ୍ଭସ୍ଥଃ ଶିଶୁଶ୍ଚ ଧନ୍ୟଃ|
43 ௪௩ என் ஆண்டவருடைய தாயார் என்னிடம் வர நான் என்ன பாக்கியம் செய்தேன்!
ତ୍ୱଂ ପ୍ରଭୋର୍ମାତା, ମମ ନିୱେଶନେ ତ୍ୱଯା ଚରଣାୱର୍ପିତୌ, ମମାଦ୍ୟ ସୌଭାଗ୍ୟମେତତ୍|
44 ௪௪ இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் கர்ப்பத்திலுள்ள குழந்தை மகிழ்ச்சியால் துள்ளியது.
ପଶ୍ୟ ତୱ ୱାକ୍ୟେ ମମ କର୍ଣଯୋଃ ପ୍ରୱିଷ୍ଟମାତ୍ରେ ସତି ମମୋଦରସ୍ଥଃ ଶିଶୁରାନନ୍ଦାନ୍ ନନର୍ତ୍ତ|
45 ௪௫ விசுவாசித்தவளே, நீ பாக்கியவதி, கர்த்தராலே உனக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும் என்றாள்.
ଯା ସ୍ତ୍ରୀ ୱ୍ୟଶ୍ୱସୀତ୍ ସା ଧନ୍ୟା, ଯତୋ ହେତୋସ୍ତାଂ ପ୍ରତି ପରମେଶ୍ୱରୋକ୍ତଂ ୱାକ୍ୟଂ ସର୍ୱ୍ୱଂ ସିଦ୍ଧଂ ଭୱିଷ୍ୟତି|
46 ௪௬ அப்பொழுது மரியாள்: “என் ஆத்துமா கர்த்த்தரை மகிமைப்படுத்துகிறது.
ତଦାନୀଂ ମରିଯମ୍ ଜଗାଦ| ଧନ୍ୟୱାଦଂ ପରେଶସ୍ୟ କରୋତି ମାମକଂ ମନଃ|
47 ௪௭ என் ஆவி என் இரட்சகராகிய தேவனிடம் மகிழ்ச்சியாக இருக்கிறது.
ମମାତ୍ମା ତାରକେଶେ ଚ ସମୁଲ୍ଲାସଂ ପ୍ରଗଚ୍ଛତି|
48 ௪௮ தேவன் அடிமையாகிய என்னுடைய தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இனி எல்லா வம்சங்களும் என்னை பாக்கியம் பெற்றவள் என்பார்கள்.
ଅକରୋତ୍ ସ ପ୍ରଭୁ ର୍ଦୁଷ୍ଟିଂ ସ୍ୱଦାସ୍ୟା ଦୁର୍ଗତିଂ ପ୍ରତି| ପଶ୍ୟାଦ୍ୟାରଭ୍ୟ ମାଂ ଧନ୍ୟାଂ ୱକ୍ଷ୍ୟନ୍ତି ପୁରୁଷାଃ ସଦା|
49 ௪௯ வல்லமையுடைய தேவன் மகிமையான காரியங்களை எனக்குச் செய்தார்; அவருடைய நாமம் பரிசுத்தமானது.
ଯଃ ସର୍ୱ୍ୱଶକ୍ତିମାନ୍ ଯସ୍ୟ ନାମାପି ଚ ପୱିତ୍ରକଂ| ସ ଏୱ ସୁମହତ୍କର୍ମ୍ମ କୃତୱାନ୍ ମନ୍ନିମିତ୍ତକଂ|
50 ௫0 அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்து நடக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்கும் இருக்கும்.
ଯେ ବିଭ୍ୟତି ଜନାସ୍ତସ୍ମାତ୍ ତେଷାଂ ସନ୍ତାନପଂକ୍ତିଷୁ| ଅନୁକମ୍ପା ତଦୀଯା ଚ ସର୍ୱ୍ୱଦୈୱ ସୁତିଷ୍ଠତି|
51 ௫௧ அவர் தம்முடைய கரங்களினாலே வல்லமையுள்ள காரியங்களைச் செய்தார்; இருதய சிந்தைகளில் பெருமையுள்ளவர்களைச் சிதறிப்போகப்பண்ணினார்.
ସ୍ୱବାହୁବଲତସ୍ତେନ ପ୍ରାକାଶ୍ୟତ ପରାକ୍ରମଃ| ମନଃକୁମନ୍ତ୍ରଣାସାର୍ଦ୍ଧଂ ୱିକୀର୍ୟ୍ୟନ୍ତେଽଭିମାନିନଃ|
52 ௫௨ ராஜாக்களை பதவிகளிலிருந்து நீக்கி, தாழ்மையானவர்களை உயர்த்தினார்.
ସିଂହାସନଗତାଲ୍ଲୋକାନ୍ ବଲିନଶ୍ଚାୱରୋହ୍ୟ ସଃ| ପଦେଷୂଚ୍ଚେଷୁ ଲୋକାଂସ୍ତୁ କ୍ଷୁଦ୍ରାନ୍ ସଂସ୍ଥାପଯତ୍ୟପି|
53 ௫௩ பசியுள்ளவர்களுக்கு நன்மையானதைக் கொடுத்து, செல்வந்தர்களுக்கு ஒன்றும் கொடுக்காமல் வெறுமையாக அனுப்பிவிட்டார்.
କ୍ଷୁଧିତାନ୍ ମାନୱାନ୍ ଦ୍ରୱ୍ୟୈରୁତ୍ତମୈଃ ପରିତର୍ପ୍ୟ ସଃ| ସକଲାନ୍ ଧନିନୋ ଲୋକାନ୍ ୱିସୃଜେଦ୍ ରିକ୍ତହସ୍ତକାନ୍|
54 ௫௪ நம்முடைய முற்பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவன் வம்சத்திற்கும் எப்பொழுதும் இரக்கம் செய்ய நினைத்து, (aiōn g165)
ଇବ୍ରାହୀମି ଚ ତଦ୍ୱଂଶେ ଯା ଦଯାସ୍ତି ସଦୈୱ ତାଂ| ସ୍ମୃତ୍ୱା ପୁରା ପିତୃଣାଂ ନୋ ଯଥା ସାକ୍ଷାତ୍ ପ୍ରତିଶ୍ରୁତଂ| (aiōn g165)
55 ௫௫ அவருடைய மக்களாகிய இஸ்ரவேல் தேசத்தினர்களுக்கு உதவி செய்தார்” என்றாள்.
ଇସ୍ରାଯେଲ୍ସେୱକସ୍ତେନ ତଥୋପକ୍ରିଯତେ ସ୍ୱଯଂ||
56 ௫௬ மரியாள் ஏறக்குறைய மூன்று மாதங்கள் எலிசெபெத்துடன் தங்கியிருந்து, பின்பு தன் வீட்டிற்குத் திரும்பிப்போனாள்.
ଅନନ୍ତରଂ ମରିଯମ୍ ପ୍ରାଯେଣ ମାସତ୍ରଯମ୍ ଇଲୀଶେୱଯା ସହୋଷିତ୍ୱା ୱ୍ୟାଘୁଯ୍ୟ ନିଜନିୱେଶନଂ ଯଯୌ|
57 ௫௭ எலிசபெத்திற்குப் பிரசவநேரம் வந்தபோது அவள் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.
ତଦନନ୍ତରମ୍ ଇଲୀଶେୱାଯାଃ ପ୍ରସୱକାଲ ଉପସ୍ଥିତେ ସତି ସା ପୁତ୍ରଂ ପ୍ରାସୋଷ୍ଟ|
58 ௫௮ கர்த்தர் அவள்மேல் எவ்வளவு இரக்கமாக இருந்தார் என்று அவள் அருகில் வசிப்பவர்களும் சொந்தங்களும் கேள்விப்பட்டு, அவளோடு சேர்ந்து சந்தோஷப்பட்டார்கள்.
ତତଃ ପରମେଶ୍ୱରସ୍ତସ୍ୟାଂ ମହାନୁଗ୍ରହଂ କୃତୱାନ୍ ଏତତ୍ ଶ୍ରୁତ୍ୱା ସମୀପୱାସିନଃ କୁଟୁମ୍ବାଶ୍ଚାଗତ୍ୟ ତଯା ସହ ମୁମୁଦିରେ|
59 ௫௯ எட்டாவது நாளிலே குழந்தைக்கு விருத்தசேதனம்பண்ண அவர்கள் எல்லோரும் கூடிவந்து, குழந்தையின் தகப்பனுடைய பெயராகிய சகரியா என்ற பெயரையே குழந்தைக்கும் வைக்க விரும்பினார்கள்.
ତଥାଷ୍ଟମେ ଦିନେ ତେ ବାଲକସ୍ୟ ତ୍ୱଚଂ ଛେତ୍ତୁମ୍ ଏତ୍ୟ ତସ୍ୟ ପିତୃନାମାନୁରୂପଂ ତନ୍ନାମ ସିଖରିଯ ଇତି କର୍ତ୍ତୁମୀଷୁଃ|
60 ௬0 அப்பொழுது எலிசெபெத்து: “அப்படி வேண்டாம், குழந்தைக்கு யோவான் என்று பெயர் வைக்கவேண்டும் என்றாள்.
କିନ୍ତୁ ତସ୍ୟ ମାତାକଥଯତ୍ ତନ୍ନ, ନାମାସ୍ୟ ଯୋହନ୍ ଇତି କର୍ତ୍ତୱ୍ୟମ୍|
61 ௬௧ அதற்கு அவர்கள்: உன் உறவினர்களில் இந்தப் பெயருள்ளவன் ஒருவனும் இல்லையே” என்று சொல்லி,
ତଦା ତେ ୱ୍ୟାହରନ୍ ତୱ ୱଂଶମଧ୍ୟେ ନାମେଦୃଶଂ କସ୍ୟାପି ନାସ୍ତି|
62 ௬௨ சகரியாவைப் பார்த்து: குழந்தைக்கு என்ன பெயர் வைக்க விரும்புகிறீர் என்று சைகையினால் கேட்டார்கள்.
ତତଃ ପରଂ ତସ୍ୟ ପିତରଂ ସିଖରିଯଂ ପ୍ରତି ସଙ୍କେତ୍ୟ ପପ୍ରଚ୍ଛୁଃ ଶିଶୋଃ କିଂ ନାମ କାରିଷ୍ୟତେ?
63 ௬௩ அவன் எழுத்துப் பலகையைக் கேட்டு வாங்கி,” இவன் பெயர் யோவான்,” என்று எழுதினான்; எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள்.
ତତଃ ସ ଫଲକମେକଂ ଯାଚିତ୍ୱା ଲିଲେଖ ତସ୍ୟ ନାମ ଯୋହନ୍ ଭୱିଷ୍ୟତି| ତସ୍ମାତ୍ ସର୍ୱ୍ୱେ ଆଶ୍ଚର୍ୟ୍ୟଂ ମେନିରେ|
64 ௬௪ உடனே அவனுடைய வாய் திறக்கப்பட்டது, அவன் பேசி, தேவனை ஸ்தோத்திரித்துப் புகழ்ந்தான்.
ତତ୍କ୍ଷଣଂ ସିଖରିଯସ୍ୟ ଜିହ୍ୱାଜାଡ୍ୟେଽପଗତେ ସ ମୁଖଂ ୱ୍ୟାଦାଯ ସ୍ପଷ୍ଟୱର୍ଣମୁଚ୍ଚାର୍ୟ୍ୟ ଈଶ୍ୱରସ୍ୟ ଗୁଣାନୁୱାଦଂ ଚକାର|
65 ௬௫ அதினால் அவர்களைச் சுற்றி வாழ்ந்த அனைவருக்கும் பயம் உண்டானது. மேலும் யூதேயா மலைநாடு முழுவதும் இந்தச் செய்தி பரவி, இதைக்குறித்து அதிகமாகப் பேசப்பட்டது.
ତସ୍ମାଚ୍ଚତୁର୍ଦିକ୍ସ୍ଥାଃ ସମୀପୱାସିଲୋକା ଭୀତା ଏୱମେତାଃ ସର୍ୱ୍ୱାଃ କଥା ଯିହୂଦାଯାଃ ପର୍ୱ୍ୱତମଯପ୍ରଦେଶସ୍ୟ ସର୍ୱ୍ୱତ୍ର ପ୍ରଚାରିତାଃ|
66 ௬௬ இதைக் கேள்விப்பட்டவர்கள் எல்லோரும் தங்களுடைய மனதிலே நடந்தவைகளை நினைத்து, இந்தக் குழந்தை வளர்ந்து எப்படிப்பட்ட காரியங்களைச் செய்யுமோ என்றார்கள். கர்த்தருடைய கரம் அந்தக் குழந்தையோடு இருந்தது.
ତସ୍ମାତ୍ ଶ୍ରୋତାରୋ ମନଃସୁ ସ୍ଥାପଯିତ୍ୱା କଥଯାମ୍ବଭୂୱୁଃ କୀଦୃଶୋଯଂ ବାଲୋ ଭୱିଷ୍ୟତି? ଅଥ ପରମେଶ୍ୱରସ୍ତସ୍ୟ ସହାଯୋଭୂତ୍|
67 ௬௭ அவனுடைய தகப்பனாகிய சகரியா பரிசுத்த ஆவியானவராலே நிரப்பப்பட்டு, தீர்க்கதரிசனமாக:
ତଦା ଯୋହନଃ ପିତା ସିଖରିଯଃ ପୱିତ୍ରେଣାତ୍ମନା ପରିପୂର୍ଣଃ ସନ୍ ଏତାଦୃଶଂ ଭୱିଷ୍ୟଦ୍ୱାକ୍ୟଂ କଥଯାମାସ|
68 ௬௮ “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.
ଇସ୍ରାଯେଲଃ ପ୍ରଭୁ ର୍ୟସ୍ତୁ ସ ଧନ୍ୟଃ ପରମେଶ୍ୱରଃ| ଅନୁଗୃହ୍ୟ ନିଜାଲ୍ଲୋକାନ୍ ସ ଏୱ ପରିମୋଚଯେତ୍|
69 ௬௯ அவர் நம்முடைய முற்பிதாக்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின இரக்கத்தைச் செய்வதற்கும்;
ୱିପକ୍ଷଜନହସ୍ତେଭ୍ୟୋ ଯଥା ମୋଚ୍ୟାମହେ ୱଯଂ| ଯାୱଜ୍ଜୀୱଞ୍ଚ ଧର୍ମ୍ମେଣ ସାରଲ୍ୟେନ ଚ ନିର୍ଭଯାଃ|
70 ௭0 தம்முடைய பரிசுத்த உடன்படிக்கையை நினைத்தருளி: (aiōn g165)
ସେୱାମହୈ ତମେୱୈକମ୍ ଏତତ୍କାରଣମେୱ ଚ| ସ୍ୱକୀଯଂ ସୁପୱିତ୍ରଞ୍ଚ ସଂସ୍ମୃତ୍ୟ ନିଯମଂ ସଦା|
71 ௭௧ உங்களுடைய சத்துருக்களின் கைகளில் இருந்து நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, உயிரோடிருக்கும் நாட்களெல்லாம் பயமில்லாமல் எனக்கு முன்பாகப் பரிசுத்தத்தோடும் நீதியோடும் எனக்கு ஊழியம் செய்யவும் கட்டளையிடுவேன் என்று,
କୃପଯା ପୁରୁଷାନ୍ ପୂର୍ୱ୍ୱାନ୍ ନିକଷାର୍ଥାତ୍ତୁ ନଃ ପିତୁଃ| ଇବ୍ରାହୀମଃ ସମୀପେ ଯଂ ଶପଥଂ କୃତୱାନ୍ ପୁରା|
72 ௭௨ அவர் நம்முடைய முற்பிதாவாகிய ஆபிரகாமுக்கு கொடுத்த ஆணையை நிறைவேற்றுவதற்கும்;
ତମେୱ ସଫଲଂ କର୍ତ୍ତଂ ତଥା ଶତ୍ରୁଗଣସ୍ୟ ଚ| ଋତୀଯାକାରିଣଶ୍ଚୈୱ କରେଭ୍ୟୋ ରକ୍ଷଣାଯ ନଃ|
73 ௭௩ ஆதிமுதல் கொண்டிருந்த தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளின் வாக்கினால் தேவன் சொன்னபடியே,
ସୃଷ୍ଟେଃ ପ୍ରଥମତଃ ସ୍ୱୀଯୈଃ ପୱିତ୍ରୈ ର୍ଭାୱିୱାଦିଭିଃ| (aiōn g165)
74 ௭௪ தமது மக்களைச் சந்தித்து மீட்டுக்கொண்டு, நம்முடைய சத்துருக்களிடம் இருந்தும், நம்மைப் பகைக்கிற எல்லோருடைய கைகளில் இருந்தும், நம்மை இரட்சிப்பதற்காக,
ଯଥୋକ୍ତୱାନ୍ ତଥା ସ୍ୱସ୍ୟ ଦାଯୂଦଃ ସେୱକସ୍ୟ ତୁ|
75 ௭௫ தம்முடைய தாசனாகிய தாவீதின் வம்சத்திலே நமக்கு ஒரு வல்லமையுள்ள இரட்சகரை அனுப்பினார்.
ୱଂଶେ ତ୍ରାତାରମେକଂ ସ ସମୁତ୍ପାଦିତୱାନ୍ ସ୍ୱଯମ୍|
76 ௭௬ என் மகனே, நீ உன்னதமான தேவனுடைய தீர்க்கதரிசி என்று அழைக்கப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம்பண்ணவும்,
ଅତୋ ହେ ବାଲକ ତ୍ୱନ୍ତୁ ସର୍ୱ୍ୱେଭ୍ୟଃ ଶ୍ରେଷ୍ଠ ଏୱ ଯଃ| ତସ୍ୟୈୱ ଭାୱିୱାଦୀତି ପ୍ରୱିଖ୍ୟାତୋ ଭୱିଷ୍ୟସି| ଅସ୍ମାକଂ ଚରଣାନ୍ କ୍ଷେମେ ମାର୍ଗେ ଚାଲଯିତୁଂ ସଦା| ଏୱଂ ଧ୍ୱାନ୍ତେଽର୍ଥତୋ ମୃତ୍ୟୋଶ୍ଛାଯାଯାଂ ଯେ ତୁ ମାନୱାଃ|
77 ௭௭ நமது தேவனுடைய உருக்கமான இரக்கத்தினாலே அவருடைய மக்களுக்குப் பாவமன்னிப்பாகிய இரட்சிப்பைத் தெரியப்படுத்தவும், அவருக்கு முன்னே நடந்துபோவாய்.
ଉପୱିଷ୍ଟାସ୍ତୁ ତାନେୱ ପ୍ରକାଶଯିତୁମେୱ ହି| କୃତ୍ୱା ମହାନୁକମ୍ପାଂ ହି ଯାମେୱ ପରମେଶ୍ୱରଃ|
78 ௭௮ இருளிலும், மரண பயத்திலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் கொடுக்கவும்,
ଊର୍ଦ୍ୱ୍ୱାତ୍ ସୂର୍ୟ୍ୟମୁଦାଯ୍ୟୈୱାସ୍ମଭ୍ୟଂ ପ୍ରାଦାତ୍ତୁ ଦର୍ଶନଂ| ତଯାନୁକମ୍ପଯା ସ୍ୱସ୍ୟ ଲୋକାନାଂ ପାପମୋଚନେ|
79 ௭௯ நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அந்த இரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய சூரியன் நம்மிடம் வந்திருக்கிறது” என்றான்.
ପରିତ୍ରାଣସ୍ୟ ତେଭ୍ୟୋ ହି ଜ୍ଞାନୱିଶ୍ରାଣନାଯ ଚ| ପ୍ରଭୋ ର୍ମାର୍ଗଂ ପରିଷ୍କର୍ତ୍ତୁଂ ତସ୍ୟାଗ୍ରାଯୀ ଭୱିଷ୍ୟସି||
80 ௮0 அந்தப் பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பெலனடைந்து, இஸ்ரவேல் மக்களுக்கு வெளிப்படையாக உபதேசிக்கும் நாள் வரும்வரைக்கும் வனாந்திரங்களிலே வாழ்ந்து வந்தான்.
ଅଥ ବାଲକଃ ଶରୀରେଣ ବୁଦ୍ଧ୍ୟା ଚ ୱର୍ଦ୍ଧିତୁମାରେଭେ; ଅପରଞ୍ଚ ସ ଇସ୍ରାଯେଲୋ ୱଂଶୀଯଲୋକାନାଂ ସମୀପେ ଯାୱନ୍ନ ପ୍ରକଟୀଭୂତସ୍ତାସ୍ତାୱତ୍ ପ୍ରାନ୍ତରେ ନ୍ୟୱସତ୍|

< லூக்கா 1 >