< லூக்கா 9 >

1 அவர் தம்முடைய பன்னிரண்டு சீடர்களையும் வரவழைத்து, எல்லாப் பிசாசுகளைத் துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும், அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து,
ତତଃ ପରଂ ସ ଦ୍ୱାଦଶଶିଷ୍ୟାନାହୂଯ ଭୂତାନ୍ ତ୍ୟାଜଯିତୁଂ ରୋଗାନ୍ ପ୍ରତିକର୍ତ୍ତୁଞ୍ଚ ତେଭ୍ୟଃ ଶକ୍ତିମାଧିପତ୍ୟଞ୍ଚ ଦଦୌ|
2 தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவும், நோயாளிகளை குணமாக்கவும் அவர்களை அனுப்பினார்.
ଅପରଞ୍ଚ ଈଶ୍ୱରୀଯରାଜ୍ୟସ୍ୟ ସୁସଂୱାଦଂ ପ୍ରକାଶଯିତୁମ୍ ରୋଗିଣାମାରୋଗ୍ୟଂ କର୍ତ୍ତୁଞ୍ଚ ପ୍ରେରଣକାଲେ ତାନ୍ ଜଗାଦ|
3 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: பயணத்தின்போது தடியையோ பையையோ அப்பத்தையோ பணத்தையோ எடுத்துக்கொண்டு போகவேண்டாம்; இரண்டு உடைகளைக் கொண்டுபோகவும் வேண்டாம் என்றார்.
ଯାତ୍ରାର୍ଥଂ ଯଷ୍ଟି ର୍ୱସ୍ତ୍ରପୁଟକଂ ଭକ୍ଷ୍ୟଂ ମୁଦ୍ରା ଦ୍ୱିତୀଯୱସ୍ତ୍ରମ୍, ଏଷାଂ କିମପି ମା ଗୃହ୍ଲୀତ|
4 எந்த வீட்டிற்கு சென்றாலும், அங்கிருந்து புறப்படும்வரை அங்கே தங்கியிருங்கள்.
ଯୂଯଞ୍ଚ ଯନ୍ନିୱେଶନଂ ପ୍ରୱିଶଥ ନଗରତ୍ୟାଗପର୍ୟ୍ୟନତଂ ତନ୍ନିୱେଶନେ ତିଷ୍ଠତ|
5 உங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களுடைய ஊரைவிட்டு நீங்கள் புறப்படும்போது, அவர்கள் உங்களை ஏற்றுக்கொள்ளாததற்கு சாட்சியாக உங்களுடைய கால்களில் படிந்துள்ள தூசியை உதறிப்போடுங்கள் என்றார்.
ତତ୍ର ଯଦି କସ୍ୟଚିତ୍ ପୁରସ୍ୟ ଲୋକା ଯୁଷ୍ମାକମାତିଥ୍ୟଂ ନ କୁର୍ୱ୍ୱନ୍ତି ତର୍ହି ତସ୍ମାନ୍ନଗରାଦ୍ ଗମନକାଲେ ତେଷାଂ ୱିରୁଦ୍ଧଂ ସାକ୍ଷ୍ୟାର୍ଥଂ ଯୁଷ୍ମାକଂ ପଦଧୂଲୀଃ ସମ୍ପାତଯତ|
6 புறப்பட்டுப்போய், கிராமம் கிராமமாகச் சென்று நற்செய்தியைப் பிரசங்கித்து, நோயாளிகளைக் குணமாக்கினார்கள்.
ଅଥ ତେ ପ୍ରସ୍ଥାଯ ସର୍ୱ୍ୱତ୍ର ସୁସଂୱାଦଂ ପ୍ରଚାରଯିତୁଂ ପୀଡିତାନ୍ ସ୍ୱସ୍ଥାନ୍ କର୍ତ୍ତୁଞ୍ଚ ଗ୍ରାମେଷୁ ଭ୍ରମିତୁଂ ପ୍ରାରେଭିରେ|
7 அப்பொழுது காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது அவரால் செய்யப்பட்ட எல்லாவற்றையும் கேள்விப்பட்டதுமட்டுமல்லாமல்; சிலர் யோவான் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தான் என்றும்,
ଏତର୍ହି ହେରୋଦ୍ ରାଜା ଯୀଶୋଃ ସର୍ୱ୍ୱକର୍ମ୍ମଣାଂ ୱାର୍ତ୍ତାଂ ଶ୍ରୁତ୍ୱା ଭୃଶମୁଦ୍ୱିୱିଜେ
8 சிலர் எலியா தோன்றினான் என்றும், வேறுசிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவன் உயிர்த்தெழுந்தான் என்றும் சொல்லிக்கொண்டபடியால், கலக்கமடைந்து:
ଯତଃ କେଚିଦୂଚୁର୍ୟୋହନ୍ ଶ୍ମଶାନାଦୁଦତିଷ୍ଠତ୍| କେଚିଦୂଚୁଃ, ଏଲିଯୋ ଦର୍ଶନଂ ଦତ୍ତୱାନ୍; ଏୱମନ୍ୟଲୋକା ଊଚୁଃ ପୂର୍ୱ୍ୱୀଯଃ କଶ୍ଚିଦ୍ ଭୱିଷ୍ୟଦ୍ୱାଦୀ ସମୁତ୍ଥିତଃ|
9 யோவானை நான் சிரச்சேதம்பண்ணினேன், இவன் இப்படிப்பட்டவைகளைச் செய்கிறான் என்று கேள்விப்படுகிறேனே! இவன் யார்? என்று ஏரோது சொல்லி, அவரைப் பார்க்க விரும்பினான்.
କିନ୍ତୁ ହେରୋଦୁୱାଚ ଯୋହନଃ ଶିରୋଽହମଛିନଦମ୍ ଇଦାନୀଂ ଯସ୍ୟେଦୃକ୍କର୍ମ୍ମଣାଂ ୱାର୍ତ୍ତାଂ ପ୍ରାପ୍ନୋମି ସ କଃ? ଅଥ ସ ତଂ ଦ୍ରଷ୍ଟୁମ୍ ଐଚ୍ଛତ୍|
10 ௧0 அப்போஸ்தலர்கள் திரும்பிவந்து, தாங்கள் செய்த எல்லாவற்றையும் அவருக்கு விளக்கிச் சொன்னார்கள். அப்பொழுது அவர் அவர்களைக் கூட்டிக்கொண்டு, தனிமையாக இருக்கும்படி பெத்சாயிதா என்னும் பட்டணத்தின் வனாந்திரமான ஒரு இடத்திற்குப் போனார்.
ଅନନ୍ତରଂ ପ୍ରେରିତାଃ ପ୍ରତ୍ୟାଗତ୍ୟ ଯାନି ଯାନି କର୍ମ୍ମାଣି ଚକ୍ରୁସ୍ତାନି ଯୀଶୱେ କଥଯାମାସୁଃ ତତଃ ସ ତାନ୍ ବୈତ୍ସୈଦାନାମକନଗରସ୍ୟ ୱିଜନଂ ସ୍ଥାନଂ ନୀତ୍ୱା ଗୁପ୍ତଂ ଜଗାମ|
11 ௧௧ மக்கள் அதை அறிந்து, அவர் பின்னால் போனார்கள்; அவர்களை அவர் ஏற்றுக்கொண்டு, தேவனுடைய இராஜ்யத்தைக்குறித்து அவர்களோடு பேசி, சுகமடையவேண்டும் என்றிருந்தவர்களைச் சுகப்படுத்தினார்.
ପଶ୍ଚାଲ୍ ଲୋକାସ୍ତଦ୍ ୱିଦିତ୍ୱା ତସ୍ୟ ପଶ୍ଚାଦ୍ ଯଯୁଃ; ତତଃ ସ ତାନ୍ ନଯନ୍ ଈଶ୍ୱରୀଯରାଜ୍ୟସ୍ୟ ପ୍ରସଙ୍ଗମୁକ୍ତୱାନ୍, ଯେଷାଂ ଚିକିତ୍ସଯା ପ୍ରଯୋଜନମ୍ ଆସୀତ୍ ତାନ୍ ସ୍ୱସ୍ଥାନ୍ ଚକାର ଚ|
12 ௧௨ மாலைநேரத்தில், பன்னிரண்டுபேரும், அவரை நோக்கி: நாம் இருக்கிற இடம் வனாந்திரமாக இருப்பதினால், மக்கள், சுற்றியிருக்கிற ஊர்களிலும் கிராமங்களிலும்போய்த் தங்குவதற்கும், உணவுப்பொருள்களை வாங்கிக்கொள்வதற்கும் அவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள்.
ଅପରଞ୍ଚ ଦିୱାୱସନ୍ନେ ସତି ଦ୍ୱାଦଶଶିଷ୍ୟା ଯୀଶୋରନ୍ତିକମ୍ ଏତ୍ୟ କଥଯାମାସୁଃ, ୱଯମତ୍ର ପ୍ରାନ୍ତରସ୍ଥାନେ ତିଷ୍ଠାମଃ, ତତୋ ନଗରାଣି ଗ୍ରାମାଣି ଗତ୍ୱା ୱାସସ୍ଥାନାନି ପ୍ରାପ୍ୟ ଭକ୍ଷ୍ୟଦ୍ରୱ୍ୟାଣି କ୍ରେତୁଂ ଜନନିୱହଂ ଭୱାନ୍ ୱିସୃଜତୁ|
13 ௧௩ இயேசு, அவர்களை நோக்கி: நீங்களே அவர்களுக்கு உணவைக் கொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்கள்மட்டுமே இருக்கிறது, இந்த மக்கள் எல்லோருக்கும் உணவு கொடுக்கவேண்டுமானால், நாங்கள்போய் வாங்கிக்கொண்டு வரவேண்டும் என்றார்கள்.
ତଦା ସ ଉୱାଚ, ଯୂଯମେୱ ତାନ୍ ଭେଜଯଧ୍ୱଂ; ତତସ୍ତେ ପ୍ରୋଚୁରସ୍ମାକଂ ନିକଟେ କେୱଲଂ ପଞ୍ଚ ପୂପା ଦ୍ୱୌ ମତ୍ସ୍ୟୌ ଚ ୱିଦ୍ୟନ୍ତେ, ଅତଏୱ ସ୍ଥାନାନ୍ତରମ୍ ଇତ୍ୱା ନିମିତ୍ତମେତେଷାଂ ଭକ୍ଷ୍ୟଦ୍ରୱ୍ୟେଷୁ ନ କ୍ରୀତେଷୁ ନ ଭୱତି|
14 ௧௪ அங்கு ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் இருந்தார்கள். அவர்களைப் பந்திக்கு ஐம்பது ஐம்பதுபேராக உட்காரும்படிச் சொல்லுங்கள் என்று தம்முடைய சீடர்களுக்குச் சொன்னார்.
ତତ୍ର ପ୍ରାଯେଣ ପଞ୍ଚସହସ୍ରାଣି ପୁରୁଷା ଆସନ୍|
15 ௧௫ அவர்கள் அப்படியே எல்லோரையும் உட்காரும்படிச் செய்தார்கள்.
ତଦା ସ ଶିଷ୍ୟାନ୍ ଜଗାଦ ପଞ୍ଚାଶତ୍ ପଞ୍ଚାଶଜ୍ଜନୈଃ ପଂକ୍ତୀକୃତ୍ୟ ତାନୁପୱେଶଯତ, ତସ୍ମାତ୍ ତେ ତଦନୁସାରେଣ ସର୍ୱ୍ୱଲୋକାନୁପୱେଶଯାପାସୁଃ|
16 ௧௬ அப்பொழுது அவர் அந்த ஐந்து அப்பங்களையும் அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, அவைகளை ஆசீர்வதித்து, பிட்டு, மக்களுக்கு பகிர்ந்துகொடுக்கும்படி சீடர்களிடத்தில் கொடுத்தார்.
ତତଃ ସ ତାନ୍ ପଞ୍ଚ ପୂପାନ୍ ମୀନଦ୍ୱଯଞ୍ଚ ଗୃହୀତ୍ୱା ସ୍ୱର୍ଗଂ ୱିଲୋକ୍ୟେଶ୍ୱରଗୁଣାନ୍ କୀର୍ତ୍ତଯାଞ୍ଚକ୍ରେ ଭଙ୍କ୍ତା ଚ ଲୋକେଭ୍ୟଃ ପରିୱେଷଣାର୍ଥଂ ଶିଷ୍ୟେଷୁ ସମର୍ପଯାମ୍ବଭୂୱ|
17 ௧௭ எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். மீதியான உணவுப்பொருட்கள் பன்னிரண்டு கூடைகள்நிறைய எடுக்கப்பட்டது.
ତତଃ ସର୍ୱ୍ୱେ ଭୁକ୍ତ୍ୱା ତୃପ୍ତିଂ ଗତା ଅୱଶିଷ୍ଟାନାଞ୍ଚ ଦ୍ୱାଦଶ ଡଲ୍ଲକାନ୍ ସଂଜଗୃହୁଃ|
18 ௧௮ பின்பு அவர் தமது சீடர்களோடு தனித்து ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கும்போது, அவர்களை நோக்கி: மக்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.
ଅଥୈକଦା ନିର୍ଜନେ ଶିଷ୍ୟୈଃ ସହ ପ୍ରାର୍ଥନାକାଲେ ତାନ୍ ପପ୍ରଚ୍ଛ, ଲୋକା ମାଂ କଂ ୱଦନ୍ତି?
19 ௧௯ அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறுசிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.
ତତସ୍ତେ ପ୍ରାଚୁଃ, ତ୍ୱାଂ ଯୋହନ୍ମଜ୍ଜକଂ ୱଦନ୍ତି; କେଚିତ୍ ତ୍ୱାମ୍ ଏଲିଯଂ ୱଦନ୍ତି, ପୂର୍ୱ୍ୱକାଲିକଃ କଶ୍ଚିଦ୍ ଭୱିଷ୍ୟଦ୍ୱାଦୀ ଶ୍ମଶାନାଦ୍ ଉଦତିଷ୍ଠଦ୍ ଇତ୍ୟପି କେଚିଦ୍ ୱଦନ୍ତି|
20 ௨0 அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்; பேதுரு மறுமொழியாக: நீர் தேவனுடைய கிறிஸ்து என்றான்.
ତଦା ସ ଉୱାଚ, ଯୂଯଂ ମାଂ କଂ ୱଦଥ? ତତଃ ପିତର ଉକ୍ତୱାନ୍ ତ୍ୱମ୍ ଈଶ୍ୱରାଭିଷିକ୍ତଃ ପୁରୁଷଃ|
21 ௨௧ அப்பொழுது அவர், நீங்கள் இதை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று உறுதியாகக் கட்டளையிட்டார்.
ତଦା ସ ତାନ୍ ଦୃଢମାଦିଦେଶ, କଥାମେତାଂ କସ୍ମୈଚିଦପି ମା କଥଯତ|
22 ௨௨ மேலும் மனிதகுமாரன் பல பாடுகள் படவும், மூப்பர்களாலும் பிரதான ஆசாரியர்களாலும் வேதபண்டிதர்களாலும் ஆகாதவன் என்று தள்ளப்படவும், கொல்லப்படவும், மூன்றாம்நாளில் உயிரோடு எழுந்திருக்கவும் வேண்டும் என்று சொன்னார்.
ସ ପୁନରୁୱାଚ, ମନୁଷ୍ୟପୁତ୍ରେଣ ୱହୁଯାତନା ଭୋକ୍ତୱ୍ୟାଃ ପ୍ରାଚୀନଲୋକୈଃ ପ୍ରଧାନଯାଜକୈରଧ୍ୟାପକୈଶ୍ଚ ସୋୱଜ୍ଞାଯ ହନ୍ତୱ୍ୟଃ କିନ୍ତୁ ତୃତୀଯଦିୱସେ ଶ୍ମଶାନାତ୍ ତେନୋତ୍ଥାତୱ୍ୟମ୍|
23 ௨௩ பின்பு அவர் எல்லோரையும் நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றிவரவிரும்பினால் அவன் தன்னைத்தானே வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றவேண்டும்.
ଅପରଂ ସ ସର୍ୱ୍ୱାନୁୱାଚ, କଶ୍ଚିଦ୍ ଯଦି ମମ ପଶ୍ଚାଦ୍ ଗନ୍ତୁଂ ୱାଞ୍ଛତି ତର୍ହି ସ ସ୍ୱଂ ଦାମ୍ୟତୁ, ଦିନେ ଦିନେ କ୍ରୁଶଂ ଗୃହୀତ୍ୱା ଚ ମମ ପଶ୍ଚାଦାଗଚ୍ଛତୁ|
24 ௨௪ தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; எனக்காகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்.
ଯତୋ ଯଃ କଶ୍ଚିତ୍ ସ୍ୱପ୍ରାଣାନ୍ ରିରକ୍ଷିଷତି ସ ତାନ୍ ହାରଯିଷ୍ୟତି, ଯଃ କଶ୍ଚିନ୍ ମଦର୍ଥଂ ପ୍ରାଣାନ୍ ହାରଯିଷ୍ୟତି ସ ତାନ୍ ରକ୍ଷିଷ୍ୟତି|
25 ௨௫ மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன்னைத்தானே கெடுத்து நஷ்டப்படுத்திக்கொண்டால் அவனுக்கு லாபம் என்ன?
କଶ୍ଚିଦ୍ ଯଦି ସର୍ୱ୍ୱଂ ଜଗତ୍ ପ୍ରାପ୍ନୋତି କିନ୍ତୁ ସ୍ୱପ୍ରାଣାନ୍ ହାରଯତି ସ୍ୱଯଂ ୱିନଶ୍ୟତି ଚ ତର୍ହି ତସ୍ୟ କୋ ଲାଭଃ?
26 ௨௬ என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக்குறித்து மனிதகுமாரனும் தம்முடைய மகிமையோடும் பிதாவின் மகிமையோடும் பரிசுத்த தூதர்களின் மகிமையோடும் வரும்போது வெட்கப்படுவார்.
ପୁନ ର୍ୟଃ କଶ୍ଚିନ୍ ମାଂ ମମ ୱାକ୍ୟଂ ୱା ଲଜ୍ଜାସ୍ପଦଂ ଜାନାତି ମନୁଷ୍ୟପୁତ୍ରୋ ଯଦା ସ୍ୱସ୍ୟ ପିତୁଶ୍ଚ ପୱିତ୍ରାଣାଂ ଦୂତାନାଞ୍ଚ ତେଜୋଭିଃ ପରିୱେଷ୍ଟିତ ଆଗମିଷ୍ୟତି ତଦା ସୋପି ତଂ ଲଜ୍ଜାସ୍ପଦଂ ଜ୍ଞାସ୍ୟତି|
27 ௨௭ இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யத்தைக் காணும் முன்னே, மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று நிச்சயமாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
କିନ୍ତୁ ଯୁଷ୍ମାନହଂ ଯଥାର୍ଥଂ ୱଦାମି, ଈଶ୍ୱରୀଯରାଜତ୍ୱଂ ନ ଦୃଷ୍ଟୱା ମୃତ୍ୟୁଂ ନାସ୍ୱାଦିଷ୍ୟନ୍ତେ, ଏତାଦୃଶାଃ କିଯନ୍ତୋ ଲୋକା ଅତ୍ର ସ୍ଥନେଽପି ଦଣ୍ଡାଯମାନାଃ ସନ୍ତି|
28 ௨௮ இந்த வார்த்தைகளை அவர் சொல்லி ஏறக்குறைய எட்டு நாட்களுக்குப்பின்பு, அவர் பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு, ஜெபம்பண்ணுகிறதற்கு ஒரு மலையின்மேல் ஏறினார்.
ଏତଦାଖ୍ୟାନକଥନାତ୍ ପରଂ ପ୍ରାଯେଣାଷ୍ଟସୁ ଦିନେଷୁ ଗତେଷୁ ସ ପିତରଂ ଯୋହନଂ ଯାକୂବଞ୍ଚ ଗୃହୀତ୍ୱା ପ୍ରାର୍ଥଯିତୁଂ ପର୍ୱ୍ୱତମେକଂ ସମାରୁରୋହ|
29 ௨௯ அவர் ஜெபம்பண்ணும்போது அவருடைய முகத்தின் ரூபம் மாறியது, அவருடைய ஆடை வெண்மையாகப் பிரகாசித்தது.
ଅଥ ତସ୍ୟ ପ୍ରାର୍ଥନକାଲେ ତସ୍ୟ ମୁଖାକୃତିରନ୍ୟରୂପା ଜାତା, ତଦୀଯଂ ୱସ୍ତ୍ରମୁଜ୍ଜ୍ୱଲଶୁକ୍ଲଂ ଜାତଂ|
30 ௩0 அன்றியும் மோசே எலியா ஆகிய இரண்டுபேரும் மகிமையோடு காணப்பட்டு, அவரோடு பேசிக்கொண்டிருந்தார்கள்,
ଅପରଞ୍ଚ ମୂସା ଏଲିଯଶ୍ଚୋଭୌ ତେଜସ୍ୱିନୌ ଦୃଷ୍ଟୌ
31 ௩௧ அவர்கள் எருசலேமில் நிறைவேற்றப்போகிற அவருடைய மரணத்தைக்குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
ତୌ ତେନ ଯିରୂଶାଲମ୍ପୁରେ ଯୋ ମୃତ୍ୟୁଃ ସାଧିଷ୍ୟତେ ତଦୀଯାଂ କଥାଂ ତେନ ସାର୍ଦ୍ଧଂ କଥଯିତୁମ୍ ଆରେଭାତେ|
32 ௩௨ பேதுருவும் அவனோடிருந்தவர்களும் தூக்கமயக்கமாக இருந்தார்கள். ஆனாலும் அவர்கள் விழித்து அவருடைய மகிமையையும் அவரோடு நின்ற அவ்விரண்டு பேரையும் கண்டார்கள்.
ତଦା ପିତରାଦଯଃ ସ୍ୱସ୍ୟ ସଙ୍ଗିନୋ ନିଦ୍ରଯାକୃଷ୍ଟା ଆସନ୍ କିନ୍ତୁ ଜାଗରିତ୍ୱା ତସ୍ୟ ତେଜସ୍ତେନ ସାର୍ଦ୍ଧମ୍ ଉତ୍ତିଷ୍ଠନ୍ତୌ ଜନୌ ଚ ଦଦୃଶୁଃ|
33 ௩௩ அவ்விருவரும் அவரைவிட்டுப் பிரிந்து போகும்போது, பேதுரு இயேசுவை நோக்கி: ஐயரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது, உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவிற்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்று, தான் சொல்லுகிறது என்னவென்று தெரியாமல் சொன்னான்.
ଅଥ ତଯୋରୁଭଯୋ ର୍ଗମନକାଲେ ପିତରୋ ଯୀଶୁଂ ବଭାଷେ, ହେ ଗୁରୋଽସ୍ମାକଂ ସ୍ଥାନେଽସ୍ମିନ୍ ସ୍ଥିତିଃ ଶୁଭା, ତତ ଏକା ତ୍ୱଦର୍ଥା, ଏକା ମୂସାର୍ଥା, ଏକା ଏଲିଯାର୍ଥା, ଇତି ତିସ୍ରଃ କୁଟ୍ୟୋସ୍ମାଭି ର୍ନିର୍ମ୍ମୀଯନ୍ତାଂ, ଇମାଂ କଥାଂ ସ ନ ୱିୱିଚ୍ୟ କଥଯାମାସ|
34 ௩௪ இப்படி அவன் பேசும்போது, ஒரு மேகம் வந்து அவர்களை மூடினது; எனவே அவருடைய சீடர்கள் பயந்தார்கள்.
ଅପରଞ୍ଚ ତଦ୍ୱାକ୍ୟୱଦନକାଲେ ପଯୋଦ ଏକ ଆଗତ୍ୟ ତେଷାମୁପରି ଛାଯାଂ ଚକାର, ତତସ୍ତନ୍ମଧ୍ୟେ ତଯୋଃ ପ୍ରୱେଶାତ୍ ତେ ଶଶଙ୍କିରେ|
35 ௩௫ அப்பொழுது: இவர் நான் தெரிந்துகொண்ட என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானது.
ତଦା ତସ୍ମାତ୍ ପଯୋଦାଦ୍ ଇଯମାକାଶୀଯା ୱାଣୀ ନିର୍ଜଗାମ, ମମାଯଂ ପ୍ରିଯଃ ପୁତ୍ର ଏତସ୍ୟ କଥାଯାଂ ମନୋ ନିଧତ୍ତ|
36 ௩௬ அந்தச் சத்தம் உண்டானபோது இயேசு ஒருவரே காணப்பட்டார். தாங்கள் கண்டவைகளில் ஒன்றையும் அவர்கள் ஒருவருக்கும் சொல்லாமல் இருந்தார்கள்.
ଇତି ଶବ୍ଦେ ଜାତେ ତେ ଯୀଶୁମେକାକିନଂ ଦଦୃଶୁଃ କିନ୍ତୁ ତେ ତଦାନୀଂ ତସ୍ୟ ଦର୍ଶନସ୍ୟ ୱାଚମେକାମପି ନୋକ୍ତ୍ୱା ମନଃସୁ ସ୍ଥାପଯାମାସୁଃ|
37 ௩௭ மறுநாளில் அவர்கள் மலையிலிருந்து இறங்கினபோது, மக்கள்கூட்டம் அவரை சந்திக்க அவரிடம் வந்தார்கள்.
ପରେଽହନି ତେଷୁ ତସ୍ମାଚ୍ଛୈଲାଦ୍ ଅୱରୂଢେଷୁ ତଂ ସାକ୍ଷାତ୍ କର୍ତ୍ତୁଂ ବହୱୋ ଲୋକା ଆଜଗ୍ମୁଃ|
38 ௩௮ அவர்களில் ஒருவன் சத்தமிட்டு: போதகரே, என் மகனுக்கு உதவி செய்யவேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன், அவன் எனக்கு ஒரே பிள்ளையாக இருக்கிறான்.
ତେଷାଂ ମଧ୍ୟାଦ୍ ଏକୋ ଜନ ଉଚ୍ଚୈରୁୱାଚ, ହେ ଗୁରୋ ଅହଂ ୱିନଯଂ କରୋମି ମମ ପୁତ୍ରଂ ପ୍ରତି କୃପାଦୃଷ୍ଟିଂ କରୋତୁ, ମମ ସ ଏୱୈକଃ ପୁତ୍ରଃ|
39 ௩௯ சில நேரங்களில், ஒரு அசுத்தஆவி அவனை அலைக்கழிப்பதினால், அவன் அலறி வாயில் நுரைதள்ளுகிறான். அது அவனைக் காயப்படுத்தி, அதிக போராட்டத்திற்குப்பின்பு அவனைவிட்டு நீங்குகிறது.
ଭୂତେନ ଧୃତଃ ସନ୍ ସଂ ପ୍ରସଭଂ ଚୀଚ୍ଛବ୍ଦଂ କରୋତି ତନ୍ମୁଖାତ୍ ଫେଣା ନିର୍ଗଚ୍ଛନ୍ତି ଚ, ଭୂତ ଇତ୍ଥଂ ୱିଦାର୍ୟ୍ୟ କ୍ଲିଷ୍ଟ୍ୱା ପ୍ରାଯଶସ୍ତଂ ନ ତ୍ୟଜତି|
40 ௪0 அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீடர்களை வேண்டிக்கொண்டேன், அவர்களால் முடியவில்லை என்றான்.
ତସ୍ମାତ୍ ତଂ ଭୂତଂ ତ୍ୟାଜଯିତୁଂ ତୱ ଶିଷ୍ୟସମୀପେ ନ୍ୟୱେଦଯଂ କିନ୍ତୁ ତେ ନ ଶେକୁଃ|
41 ௪௧ இயேசு மறுமொழியாக: விசுவாசமில்லாத மாறுபாடான வம்சமே, எதுவரைக்கும் நான் உங்களோடிருந்து, உங்களிடம் பொறுமையாக இருப்பேன்? உன் மகனை இங்கே கொண்டுவா என்றார்.
ତଦା ଯୀଶୁରୱାଦୀତ୍, ରେ ଆୱିଶ୍ୱାସିନ୍ ୱିପଥଗାମିନ୍ ୱଂଶ କତିକାଲାନ୍ ଯୁଷ୍ମାଭିଃ ସହ ସ୍ଥାସ୍ୟାମ୍ୟହଂ ଯୁଷ୍ମାକମ୍ ଆଚରଣାନି ଚ ସହିଷ୍ୟେ? ତୱ ପୁତ୍ରମିହାନଯ|
42 ௪௨ அவன் அருகில் வரும்போது, பிசாசு அவனைக் கீழேத் தள்ளி, அலைக்கழித்தது. இயேசு அந்த அசுத்தஆவியை அதட்டி, இளைஞனைக் குணமாக்கி, அவன் தகப்பனிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தார்.
ତତସ୍ତସ୍ମିନ୍ନାଗତମାତ୍ରେ ଭୂତସ୍ତଂ ଭୂମୌ ପାତଯିତ୍ୱା ୱିଦଦାର; ତଦା ଯୀଶୁସ୍ତମମେଧ୍ୟଂ ଭୂତଂ ତର୍ଜଯିତ୍ୱା ବାଲକଂ ସ୍ୱସ୍ଥଂ କୃତ୍ୱା ତସ୍ୟ ପିତରି ସମର୍ପଯାମାସ|
43 ௪௩ அப்பொழுது எல்லோரும் தேவனுடைய மகத்துவத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். இயேசு செய்த எல்லாவற்றையும்குறித்து அனைவரும் ஆச்சரியப்படும்போது அவர் தம்முடைய சீடர்களை நோக்கி:
ଈଶ୍ୱରସ୍ୟ ମହାଶକ୍ତିମ୍ ଇମାଂ ୱିଲୋକ୍ୟ ସର୍ୱ୍ୱେ ଚମଚ୍ଚକ୍ରୁଃ; ଇତ୍ଥଂ ଯୀଶୋଃ ସର୍ୱ୍ୱାଭିଃ କ୍ରିଯାଭିଃ ସର୍ୱ୍ୱୈର୍ଲୋକୈରାଶ୍ଚର୍ୟ୍ୟେ ମନ୍ୟମାନେ ସତି ସ ଶିଷ୍ୟାନ୍ ବଭାଷେ,
44 ௪௪ நீங்கள் இந்த வார்த்தைகளைக் கவனமாகக் கேளுங்கள்; மனிதகுமாரன் மனிதர்கள் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படப்போகிறார் என்றார்.
କଥେଯଂ ଯୁଷ୍ମାକଂ କର୍ଣେଷୁ ପ୍ରୱିଶତୁ, ମନୁଷ୍ୟପୁତ୍ରୋ ମନୁଷ୍ୟାଣାଂ କରେଷୁ ସମର୍ପଯିଷ୍ୟତେ|
45 ௪௫ அவர்கள் அந்த வார்த்தையின் கருத்தை புரிந்துகொள்ளவில்லை; அது அவர்களுக்கு மறைபொருளாக இருந்தது; அந்த வார்த்தையைக்குறித்து அவரிடத்தில் விசாரிக்கவும் அவர்கள் பயந்தார்கள்.
କିନ୍ତୁ ତେ ତାଂ କଥାଂ ନ ବୁବୁଧିରେ, ସ୍ପଷ୍ଟତ୍ୱାଭାୱାତ୍ ତସ୍ୟା ଅଭିପ୍ରାଯସ୍ତେଷାଂ ବୋଧଗମ୍ୟୋ ନ ବଭୂୱ; ତସ୍ୟା ଆଶଯଃ କ ଇତ୍ୟପି ତେ ଭଯାତ୍ ପ୍ରଷ୍ଟୁଂ ନ ଶେକୁଃ|
46 ௪௬ பின்பு தங்களுக்குள் யார் பெரியவனாக இருப்பான் என்கிற வாக்குவாதம் அவர்களுக்குள் உண்டானது.
ତଦନନ୍ତରଂ ତେଷାଂ ମଧ୍ୟେ କଃ ଶ୍ରେଷ୍ଠଃ କଥାମେତାଂ ଗୃହୀତ୍ୱା ତେ ମିଥୋ ୱିୱାଦଂ ଚକ୍ରୁଃ|
47 ௪௭ இயேசு அவர்கள் இருதயத்தின் யோசனையை அறிந்து, ஒரு சிறுபிள்ளையை எடுத்து, அதைத் தம் அருகில் நிறுத்தி,
ତତୋ ଯୀଶୁସ୍ତେଷାଂ ମନୋଭିପ୍ରାଯଂ ୱିଦିତ୍ୱା ବାଲକମେକଂ ଗୃହୀତ୍ୱା ସ୍ୱସ୍ୟ ନିକଟେ ସ୍ଥାପଯିତ୍ୱା ତାନ୍ ଜଗାଦ,
48 ௪௮ அவர்களை நோக்கி: இந்தச் சிறுபிள்ளையை என் நாமத்தினாலே ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்; உங்கள் எல்லோருக்குள்ளும் எவன் சிறியவனாக இருக்கிறானோ அவனே பெரியவனாக இருப்பான் என்றார்.
ଯୋ ଜନୋ ମମ ନାମ୍ନାସ୍ୟ ବାଲାସ୍ୟାତିଥ୍ୟଂ ୱିଦଧାତି ସ ମମାତିଥ୍ୟଂ ୱିଦଧାତି, ଯଶ୍ଚ ମମାତିଥ୍ୟଂ ୱିଦଧାତି ସ ମମ ପ୍ରେରକସ୍ୟାତିଥ୍ୟଂ ୱିଦଧାତି, ଯୁଷ୍ମାକଂ ମଧ୍ୟେଯଃ ସ୍ୱଂ ସର୍ୱ୍ୱସ୍ମାତ୍ କ୍ଷୁଦ୍ରଂ ଜାନୀତେ ସ ଏୱ ଶ୍ରେଷ୍ଠୋ ଭୱିଷ୍ୟତି|
49 ௪௯ அப்பொழுது யோவான் அவரை நோக்கி: ஐயரே, ஒருவன் உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதை நாங்கள் கண்டு, அவன் எங்களோடுகூட உம்மைப் பின்பற்றாததினால், அவனைத் தடுத்தோம் என்றான்.
ଅପରଞ୍ଚ ଯୋହନ୍ ୱ୍ୟାଜହାର ହେ ପ୍ରଭେ ତୱ ନାମ୍ନା ଭୂତାନ୍ ତ୍ୟାଜଯନ୍ତଂ ମାନୁଷମ୍ ଏକଂ ଦୃଷ୍ଟୱନ୍ତୋ ୱଯଂ, କିନ୍ତ୍ୱସ୍ମାକମ୍ ଅପଶ୍ଚାଦ୍ ଗାମିତ୍ୱାତ୍ ତଂ ନ୍ୟଷେଧାମ୍| ତଦାନୀଂ ଯୀଶୁରୁୱାଚ,
50 ௫0 அதற்கு இயேசு: தடுக்கவேண்டாம்; நமக்கு விரோதியாக இல்லாதவன் நமது பட்சத்தில் இருக்கிறான் என்றார்.
ତଂ ମା ନିଷେଧତ, ଯତୋ ଯୋ ଜନୋସ୍ମାକଂ ନ ୱିପକ୍ଷଃ ସ ଏୱାସ୍ମାକଂ ସପକ୍ଷୋ ଭୱତି|
51 ௫௧ பின்பு, அவர் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் நாட்கள் நெருங்கி வந்தபோது, அவர் எருசலேமுக்குப் போகப்பார்த்து,
ଅନନ୍ତରଂ ତସ୍ୟାରୋହଣସମଯ ଉପସ୍ଥିତେ ସ ସ୍ଥିରଚେତା ଯିରୂଶାଲମଂ ପ୍ରତି ଯାତ୍ରାଂ କର୍ତ୍ତୁଂ ନିଶ୍ଚିତ୍ୟାଗ୍ରେ ଦୂତାନ୍ ପ୍ରେଷଯାମାସ|
52 ௫௨ தமக்கு முன்னாகத் தூதுவர்களை அனுப்பினார். அவர்கள்போய், அவருக்கு இடத்தை ஆயத்தம்பண்ணும்படி சமாரியருடைய ஒரு கிராமத்திலே பிரவேசித்தார்கள்.
ତସ୍ମାତ୍ ତେ ଗତ୍ୱା ତସ୍ୟ ପ୍ରଯୋଜନୀଯଦ୍ରୱ୍ୟାଣି ସଂଗ୍ରହୀତୁଂ ଶୋମିରୋଣୀଯାନାଂ ଗ୍ରାମଂ ପ୍ରୱିୱିଶୁଃ|
53 ௫௩ அவர் எருசலேமுக்குப்போக விரும்பினபடியால் அந்த கிராமத்து மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
କିନ୍ତୁ ସ ଯିରୂଶାଲମଂ ନଗରଂ ଯାତି ତତୋ ହେତୋ ର୍ଲୋକାସ୍ତସ୍ୟାତିଥ୍ୟଂ ନ ଚକ୍ରୁଃ|
54 ௫௪ அவருடைய சீடர்களாகிய யாக்கோபும் யோவானும் அதைக் கண்டபோது: ஆண்டவரே, எலியா செய்ததுபோல, வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்கு விருப்பமா? என்று கேட்டார்கள்.
ଅତଏୱ ଯାକୂବ୍ୟୋହନୌ ତସ୍ୟ ଶିଷ୍ୟୌ ତଦ୍ ଦୃଷ୍ଟ୍ୱା ଜଗଦତୁଃ, ହେ ପ୍ରଭୋ ଏଲିଯୋ ଯଥା ଚକାର ତଥା ୱଯମପି କିଂ ଗଗଣାଦ୍ ଆଗନ୍ତୁମ୍ ଏତାନ୍ ଭସ୍ମୀକର୍ତ୍ତୁଞ୍ଚ ୱହ୍ନିମାଜ୍ଞାପଯାମଃ? ଭୱାନ୍ କିମିଚ୍ଛତି?
55 ௫௫ அவர் திரும்பிப்பார்த்து: அவர்களைக் கடிந்துகொண்டு,
କିନ୍ତୁ ସ ମୁଖଂ ପରାୱର୍ତ୍ୟ ତାନ୍ ତର୍ଜଯିତ୍ୱା ଗଦିତୱାନ୍ ଯୁଷ୍ମାକଂ ମନୋଭାୱଃ କଃ, ଇତି ଯୂଯଂ ନ ଜାନୀଥ|
56 ௫௬ மனிதகுமாரன் மனிதர்களுடைய ஜீவனை அழிப்பதற்காக அல்ல, இரட்சிப்பதற்காகவே வந்தார் என்றார். அதன்பின்பு அவர்கள் வேறொரு கிராமத்திற்குப் போனார்கள்.
ମନୁଜସୁତୋ ମନୁଜାନାଂ ପ୍ରାଣାନ୍ ନାଶଯିତୁଂ ନାଗଚ୍ଛତ୍, କିନ୍ତୁ ରକ୍ଷିତୁମ୍ ଆଗଚ୍ଛତ୍| ପଶ୍ଚାଦ୍ ଇତରଗ୍ରାମଂ ତେ ଯଯୁଃ|
57 ௫௭ அவர்கள் வழியிலே போகும்போது ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் எங்கே போனாலும் நான் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான்.
ତଦନନ୍ତରଂ ପଥି ଗମନକାଲେ ଜନ ଏକସ୍ତଂ ବଭାଷେ, ହେ ପ୍ରଭୋ ଭୱାନ୍ ଯତ୍ର ଯାତି ଭୱତା ସହାହମପି ତତ୍ର ଯାସ୍ୟାମି|
58 ௫௮ அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனிதகுமாரனுக்கோ தலை சாய்க்கவும் இடமில்லை என்றார்.
ତଦାନୀଂ ଯୀଶୁସ୍ତମୁୱାଚ, ଗୋମାଯୂନାଂ ଗର୍ତ୍ତା ଆସତେ, ୱିହାଯସୀଯୱିହଗାନାଂ ନୀଡାନି ଚ ସନ୍ତି, କିନ୍ତୁ ମାନୱତନଯସ୍ୟ ଶିରଃ ସ୍ଥାପଯିତୁଂ ସ୍ଥାନଂ ନାସ୍ତି|
59 ௫௯ வேறொருவனை அவர் நோக்கி: என்னைப் பின்பற்றிவா என்றார். அதற்கு அவன்: ஆண்டவரே, முதலில் நான் போய் என் தகப்பனை அடக்கம்பண்ண என்னை அனுப்பவேண்டும் என்றான்.
ତତଃ ପରଂ ସ ଇତରଜନଂ ଜଗାଦ, ତ୍ୱଂ ମମ ପଶ୍ଚାଦ୍ ଏହି; ତତଃ ସ ଉୱାଚ, ହେ ପ୍ରଭୋ ପୂର୍ୱ୍ୱଂ ପିତରଂ ଶ୍ମଶାନେ ସ୍ଥାପଯିତୁଂ ମାମାଦିଶତୁ|
60 ௬0 அதற்கு இயேசு: மரித்தோர் தங்களுடைய மரித்தோரை அடக்கம்பண்ணட்டும்; நீ போய், தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கம்பண்ணு என்றார்.
ତଦା ଯୀଶୁରୁୱାଚ, ମୃତା ମୃତାନ୍ ଶ୍ମଶାନେ ସ୍ଥାପଯନ୍ତୁ କିନ୍ତୁ ତ୍ୱଂ ଗତ୍ୱେଶ୍ୱରୀଯରାଜ୍ୟସ୍ୟ କଥାଂ ପ୍ରଚାରଯ|
61 ௬௧ பின்பு வேறு ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, உம்மைப் பின்பற்றுவேன், ஆனாலும் முதலில் நான் போய் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிவிட்டு வரும்படி என்னை அனுமதிக்கவேண்டும் என்றான்.
ତତୋନ୍ୟଃ କଥଯାମାସ, ହେ ପ୍ରଭୋ ମଯାପି ଭୱତଃ ପଶ୍ଚାଦ୍ ଗଂସ୍ୟତେ, କିନ୍ତୁ ପୂର୍ୱ୍ୱଂ ମମ ନିୱେଶନସ୍ୟ ପରିଜନାନାମ୍ ଅନୁମତିଂ ଗ୍ରହୀତୁମ୍ ଅହମାଦିଶ୍ୟୈ ଭୱତା|
62 ௬௨ அதற்கு இயேசு: கலப்பையின்மேல் தன் கையை வைத்துவிட்டு பின்னோக்கிப் பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்திற்குத் தகுதியுள்ளவன் இல்லை என்றார்.
ତଦାନୀଂ ଯୀଶୁସ୍ତଂ ପ୍ରୋକ୍ତୱାନ୍, ଯୋ ଜନୋ ଲାଙ୍ଗଲେ କରମର୍ପଯିତ୍ୱା ପଶ୍ଚାତ୍ ପଶ୍ୟତି ସ ଈଶ୍ୱରୀଯରାଜ୍ୟଂ ନାର୍ହତି|

< லூக்கா 9 >